செவ்வாய், 8 நவம்பர், 2011

திருமந்திரம் | மூன்றாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்


ராதே கிருஷ்ணா 08 - 11 - 2011 

12 திருமுறைகள்


பத்தாம் திருமறை
திருமந்திரம் | மூன்றாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்




விளக்கங்கள் அறிய தினமலர் இணைப்பிற்கு செல்க     
http://temple.dinamalar.com/


பத்தாம் திருமறை
திருமந்திரம் | மூன்றாம் தந்திரம் | பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்

1. அட்டாங்க யோகம் (வீர ஆகமம்)
(அட்டாங்க யோகம் என்பது இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று எட்டுவகை உறுப்புக்களைக் கொண்ட யோகம் என்றபடி, அறவாழ்வைக் கூறிப் பின் இறையுண்மை கூறிய ஆசிரியப் பெருந்தகை அவ் இறைவனை அடைதற்குரிய நெறிவகைகளைக் கூறத் தொடங்குகிறார்.)
549. உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமம் செய்தானே.
பொருள் : பலவாறாகப் பேசப்பெற்று வந்த பிராணன் என்ற ஒன்று இழுக்கப் பெற்றும், அது பன்னிரண்டு விரற்கடை கண்டத்துக்குக் கீழும் கண்டத்துக்கு மேலும் இயங்குமாறும் நினைந்து, அட்டாங்க யோகத்தை எடுத்துரைத்தே குருநாதன் முறையாகத் தீமையைப் போக்குவதற்கும் நன்மையைப் பற்றுவதற்கும் வழிவகை செய்தருளினான்.
550. செய்த இமயம் நியமம் சமாதிசென்று
உய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த உரைசெய்வன் இந்நிலை தானே.
பொருள் : முற்கூறியவாறு உரைசெய்த இயம நியம ஒழுக்கங்களில் நின்று சமாதி பொருந்தி உய்தி பெறவும், முன்னின்று வழிகாட்டிப் பின்னின்று தூங்கிக் கொண்டிருக்கும் பராசக்தியின் துணையை அடையவும் கவச நியாசங்கள் முத்திரைகளை அறிந்து ஒழுகவும் ஆகிய இம்முறையில் யான் கூறிச செல்வேன். (இயமம் - புலனடக்கல்; நியமம் - ஒழுக்க நெறி நிற்றல், சமாதி - தன்னை மறந்திருத்தல்)
551. அந்நெறி இந்நெறி என்னாதுஅட் டாங்கத்து
அந்நெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி  யாகத்தில் போர்க்கில்லை யாகுமே.
பொருள் : இறைவனை அடைவதற்கு அதுநெறி இது நெறி என்று தடுமாறாமல் அட்டாங்க யோக நெறியிலே நின்று சமாதி கூடுமின். அவ்வாறு அந்நெறி சென்று பொருந்தினவர்க்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு எய்தலாம். அவ்வாறு ஞானம் கூடாவிட்டாலும் பிறவிக்கு வரும் நெறியில் வந்து உடம்பில் பொருந்துவது இல்லையாகும். அட்டாங்க யோகநெறி நின்று சமாதி கூடினவர்க்குப் பிறவியில்லை.
552. இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே.
பொருள் : இயமம் நியமம் பலவகைப்பட்ட ஆசனம், நன்மையைத்தரும், பிராணாயமம், பிரத்தியாகாரம் வெற்றி மிக்க தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினையுடையோர்க்குக் கிட்டும் எண்வகை உறுப்புக்களைக் கொண்ட யோக நெறியாகும். (பிராணாயாமம் - பேச்சினை அடக்குதல். தாரணை - தரித்தல் அயம் - நல்வினை.)
2. இயமம்
(இயமமாவது தீயனவற்றைச் செய்யாமல் ஒழுகுதல், இயமத்தை முதலில் கூறி எஞ்சிய உறுப்புக்களை முறையே அடுத்துக்கூறுவார் ஆசிரியர்.)
553. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்ம்மின்என் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந் தானே.
பொருள் : எட்டுத் திக்குகளிலும் சூழ்ந்தெழுந்து பெருமழை பெய்தாலும் குளிர்ச்சியைத் தருகின்ற இயமங்களைத் தவறாது செய்யுங்கள் என்று சிவபெருமான் கொழுமை மிக்க பவளம் போன்ற குளிர்ந்த தன் சடையோடே பொருந்திய சனகாதி நால்வருக்கும் அருளிச் செய்தான். (நால்வர், சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்.)
554. கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடைநின்றானே.
பொருள் : ஓருயிரைக் கொல்லாதவனும், பொய் கூறாதவனும், திருடாதவனும், ஆராய்ச்சியுடையவனும், நல்லவனும், பணிவுடையவனும், நீதி வழுவாதவனும், பகிர்ந்து கொடுத்து உண்பவனும், குற்றமில்லாதவனும், கள்ளும் காமமும் இல்லாதவனுமாகிய தன்மை உடையவனே இயமஒழுக்கங்களில் நிற்பவன் ஆவான்.
3. நியமம் (நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுகுதல்)
555. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.
பொருள் : ஆதியானவனை, நாத வடிவானவனை, ஒளி வடிவானவனை, மூலாதாரத்தில் அக்கினி மயமாகவுள்ளவனை, சித்தினிடம் பிரிப்பின்றி யிருக்கும் பராசக்தியோடு உயிரோடு  உடனாய் உறையும் தர்மத்தை உணர்ந்து ஒழுகுபவனே நியமத்தன் ஆவான். (பாதியுள்-திருமேனிக் கண் ஒரு பதியிதல் எனினுமாய்)
556. தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமிஈர் ஐந்தும் நியமத்த னாமே.
பொருள் : தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, உறுதியுடைமை யாகியவற்றை வளர்த்தலும், ஏனைய காமம், களவு கொலை யாகியவற்றைத் தீமையெனக் காண்டலுமாக நியமநெறியில் நிற்பவன் பத்துக் குணங்களைக் கொண்டவனாவான். (நேமி-நியமத்தை உடையவன், காதல் உயிரின் மாட்டும் காமம் உடம்பின் மாட்டும் செல்வன.)
557. தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்தன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகம்சிவ பூசைஒண் மதிசொல்ஈர் ஐந்தும்
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.
பொருள் : தவம், செபம், மகிழ்வு, தெய்வ நம்பிக்கை, கொடை, சிவவிரதம், முப்பொருள் உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, சோதி தரிசனம், என்று சொல்லப்பெற்றபத்தையும் உயர்வாகக் கடைப்பிடிப்பவன் நியம நெறியில் உள்ளவனாவான்.
4. ஆதனம்
(ஆதனம் - இருக்கை யோகம் புரிவதற்கு முன் இருக்க வேண்டிய ஆசன முறையைப் பற்றியும் அவற்றால் உண்டாகும் பயனைப் பற்றியும் இங்குக் கூறப்பெறும்)
558. பங்கயம் ஆதி பரந்தபல ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.
பொருள் : பத்மாசனம் முதலாகப் பரந்துபட்ட ஆசனங்கள் பல அங்கு உள்ளன. அவ்ஆசன வகைகளுள் எட்டு முக்கியமாகும். சோர்வு இல்லாமல் சுவத்திகம் என்ற சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தலைவனாவான். சாதாரணமாக உட்காருவதுதான் சுகாசனமாகும்.
559. ஓரணை அப்பதம் ஊருவின் மேல்ஏறிட்டு
ஆர வலித்துஅதன் மேல்வைத்து அழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமெனல் ஆகுமே.
பொருள் : ஒருபக்கம் அணைந்த காலைத் தொடையின்மேல் ஏறும்படி செய்து மிக இழுத்து வலப்பக்கத் தொடையின் மேல் இடக்காலையும், இடப்பக்கத் தொடையின்மேல் வலக்காலையும் வைத்து, அழகாகக் கைகளை மலர்த்தித் தொடையின்மேல் வைக்க உலகம் புகழ் பத்மாசனம் ஆகும், (ஊரு - தொடை)
560. துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
உரிய இடும்உடல் செவ்வே இருத்தி
பரிசு பெறுமது பத்திரா சனமே.
பொருள் : குற்றமில்லாத வலக்காலை இடப்பக்கம் தொடையின் மேல் விளங்கும்படி வைத்து அருமையான முழங்கால்களின் மேல் அழகிய கைகளை நீட்டி, தளர்கின்ற உடம்பைச் செம்மையாக இருத்தி நன்மையைப் பெறுவது பத்திராசனமாம்.
561. ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.
பொருள் : பத்மாசனத்தில் கூறியதுபோல் பாதங்கள் இரண்டையும் தொடையின்மேல் மாறி ஏற்றி, முக்கி உடம்பை முழங்கைவரை தூக்கி நிறுத்தி, உடம்பின் பாரம் கைகளில் தங்குவதற்கான சமநிலை தெரிந்து அசையாதபடி இருந்தால் குக்குட ஆசனம் செய்தலும் கூடும். (குக்குடம் - கோழி, குக்குட - ஆசனம் - கோழி இருக்கை)
562. பாத முழந்தாளில் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந்து அழகுறக்
கோதில் நயனம் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
பொருள் : பாத நுணிகளைப் பூமியில் ஊன்றி முழங்காலில் நீட்டி, அன்போது வாயைப் பிளந்து கொண்டு, அழகு பொருந்தக் குற்றமற்ற கண்களை நாசி, காக்கிரம் என்னும் புருவ நடுவில் வைத்திருப்பது புகழ் அமைந்த சிம்மாசனம் என்று சொல்லப்படும். (கொடிமூக்கு-மூக்கு நுனி.)
563. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
செத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம், எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.
பொருள் : பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம் சுகாதனம் என்று ஓரேழும் மேலானவையாம். பழமையான ஆசனங்கள் இவற்றோடு நூற்று இருபத்தாறும் அவற்றின் மேலும் பல ஆசனங்களாம். தத்துவப் பிரகாசம் என்ற நூலில் ஆசனங்களில் பெயரும் அமைக்கும் முறையும் கூறப்பட்டுள்ளன. திருமூலநாயனார் ஓதி யருளிய இருக்கை எட்டேயாம். எனினும் பிறர் கொள்கைகளைக் கூறும் முறையில் பிறவும் கொள்ளப்பட்டன.
5. பிராணாயாமம்
(பிரணாயாமமாவது பிராணனைக் கட்டுப்படுத்தல். மேலே கூறிய ஆசனவகையில் ஏதாவது ஒன்றில் இருந்து பிராணாயமப் பயிற்சி செய்யவேண்டும். பிராணாயாமம் ஆசனம் போன்று பல்வேறு வகைத்து)
564. ஐவர்க்கு நாயகன் ஆவ்வூர்த் தலைமகன்
உய்யக் கொண்டேறும் குதிரைமற்று ஒன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.
பொருள் : ஐம்பொறிகளுக்கு நாயகனும் அவ்உடம்புக்குத் தலைவனுமாகிய ஆன்மா, உய்திபெற்று மேல் செல்லுவதற்கு மனத்தோடு பிராணனாகிய குதிரை ஒன்றுள்ளது. அது தேகத்தை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றோர்க்கு வசப்பட்டு நிற்கும். மெய்யுணர்வில்லாது கண்டத்தைப்பற்றி நின்றோர்க்குப் பிராணன் வசப்படாமல் கீழே தள்ளிவிடும் (குதிரை - பிராணவாயு)
565. சூரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்குஇல்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
பொருள் : மனமாகிய ஆரியன் மிகவும் நல்லவன். அவன் ஓட்டுகின்ற பிராணன், அபானன் ஆகிய குதிரைகள் இரண்டு உள்ளன. அவற்றை வெளியே விட்டு உள்ளே நிறுத்தும் திறமையை அறிபவர் இல்லை. பிராண செயம் பெற்ற குருநாதனின் அருள் கிட்டினால் பிராணன் அபானன் ஆகிய குதிரையைச் சேர்த்துப் பிடிக்கப் பிராண செயம் அமையும். (குதிரை இரண்டு - இடைகலை, பிங்கலை, ஆரியன் - பெருமை மிக்க மனம்.)
566. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே
பொருள் : பறவையை விட வேகத்துடன் கூடிய பிராணனின் வழி சிரசை நோக்கிச் சென்றால் கள்ளுண்ணாமலேயே மகிழ்ச்சியுண்டாகும். உடலில் சோர்வு நீங்கும். சுறுசுறுப்புடனும் இருக்கும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனமுடையோர்க்கு இவ்வுண்மையைச் சொன்னோம். (புரவி - பிராணவாயு.)
567. பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்
பிராணன் நடைபேறு பெற்றுண்டீர் நீரே
பொருள் : நாமரூப பேதமான பிரபஞ்சத்தை எண்ணாதவற்கு மனமும் பிராணனும் அடங்கி, பிராணன் ஒடுங்கின் பிறப்பு இறப்பு இல்லை. சிவன் தனி வியக்தியில் வைகி வாக்கு உதித்துப் பிராணனும் நிலை மாறி, பிராணன் ஒடுங்காத போது பிறப்பு இறப்பில் படுவீர்.
568. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்து இரண்டது ரோசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
பொருள் : பதினாறு மாத்திரை காலஅளவு இடப்பக்கமுள்ள நாசித் துவாரத்தில் காற்றை உள்ளுக்கு இழுத்தால் பூரகமாம். அறுபத்து நான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்தல் கும்பகமாம் முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு வலப்பக்கம் நாசித்துவாரத்தில் காற்றை மெல்லன விடுதல் ரேசகமாம். முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்கம் நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனையாம்.
569. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு அளியனும் ஆமே.
பொருள் : சாதகர் காற்றை இழுத்துத் தன் வசப்படுத்தி அடக்கியிருந்தால், உடம்பு பளிங்கு போன்று மாசின்றித் தூயதாய் அது முதுமை எய்தினும் இளமைத் தன்மை உண்டாகும். இதனைத் தெளிய குருவின் அருளையும் பெற்றுவிட்டால் அவர் உடம்பானது காற்றைவிட மென்மை யுடையதாகி, எங்கும் செல்லும் ஆற்றல் பெற்று மேன்மையடைவர்.
570. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்துஅது விட்டன வும்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.
பொருள் : நீ எங்கே இருந்தாலும் இடப்பாக நாசியாகிய இடைகலை வழியாகவே பூரகம் செய்வாயாக அங்கே அவ்வாறு பூரிக்க உடம்புக்கு அழிவில்லை . அங்கே கும்பகம் செய்து அப்பிராணன், சொல்லும் அளவு மேற் சொல்ல சங்கநாதம் உண்டாகி மேன்மை அடையலாம்.
571. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வார்இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே.
பொருள் : இடைகலை பிங்கலை வழியாக இழுத்துப் பூரித்து, காற்றை உள்ளே கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் இல்லை. அவ்வாறு காற்றைக் கும்பகம் செய்யும் முறையைத் தெரிந்தவர் காலனைக் கடக்கும் இலட்சியத்தை உடையவராவர்.
572. மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தால்உட் பதிவித்து
மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கலே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
பொருள் : முறையான காற்று தொண்டை மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும்படி செய்து, மறு பகுதியான இரசேகத்தால் (விடுதலால்) அவயவங்களை ஒன்றோடு ஒன்று பதியும்படி செய்து, விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்.
573. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டும்
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.
பொருள் : இடைகலை வழியாகப் பதினாறு மாதிரை பூரகம் செய்து, விரும்பத்தக்க பிங்கலையின்கண் பாதுகாப்புற்ற முப்பத்து இரண்டு மாத்திரை இரேசகம் செய்து, பூரித்தலும் இரேசித்தலுமாகிய வேள்வியால் அறுபத்துநான்கு மாத்திரை சூம்பகம் செய்ய உண்மை விளையும்
574. இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.
பொருள் : ஆக்கப்பட்டதாகிய இவ்வுடம்பு தளர்ச்சியடையாமல் இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு காற்றினை உள்ளே இழுந்து நிரப்பி, பிராணனும் அபானனும் சேரப்பெற்று நேராக நிமிர்ந்திருக்க எம பயம் இல்லையாம். (நட்டம் இருக்க - நிலை நிறுத்த எனினுமாம்)
575. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
பொருள் : உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்குத்திரிகின்ற வாயுவை முறையான கும்பகத்தினாலே உள்ளே தூய்மை செய்தால் உறுப்புக்களில் இரத்த ஓட்டம் பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர்கறுத்து விளங்கும். கிரணங்களால் சூழப்பெற்ற ஆத்மன் உடலில் நிலைபெற்று நிற்பான், உடலும் அழியாது என்றபடி.
576. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளின்கோல அஞ்செழுத்து ஆமே.
பொருள் : உடம்பை இடமாகக் கொண்ட பிராண சத்தி, குழந்தையாக இருந்தபோது பன்னிரண்டு விரற்கடை நீளம் சென்றும் புகுந்தும் இருந்தனர். வயதான போது தொண்டைக்கு மேலே சிரசில் செல்லும் நான்கு விரற்கடையைத் துண்டித்துவிட்டு எட்டு விரற்கடை அளவே தொழிற்படுகின்றனர். மேலே தடை செய்யப்பட்ட நான்கு விரற்கடையும் தொழிற்படுமாறு செய்துகொண்டால் சாதகர் பஞ்சாக்கர சொரூபமாவர்.
577. பன்னிரண் டானைக்குப் பகல்இரவு உள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இரவு இல்லையே.
பொருள் : பன்னிரண்டு விரற்கடை செயற்படும் பிராணனாகிய சூரியனுக்குப் பகல் என்று இரவு என்றும் காலங்கள் உள்ளன. மூக்கிலிருந்து தொண்டை வழியாகக் கீழ் நோக்கிப் பாய்வதால் சிரசிலுள்ள ஆன்மா அறியவில்லை. கீழ்முகம் செல்லாது மேல்முகம் கொண்ட பிராணனை ஆன்மா அறிந்தபின், பிராணனாகிய சூரியனுக்குப் பகல் இரவு என்ற காலங்கள் இன்றி எப்போதும் பிரகாசிக்கும். (பாகன் - ஆன்மா).
6. பிரத்தியாகாரம்
(புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம். இது அடயோகம், இலயயோகம், இலம்பிகாயோகம், மந்திரயோகம், இராஜ யோகம், சிவயோகம் என்ற பிரிவுகளுக்கு ஏற்ப வேறுபடும் அட்டாங்கயோகத்தில், இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் என்பன பூர்வபட்சம் என்றும், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்பன உத்தரபட்சம் என்றும் கொள்ள வேண்டும். பூர்வம் முன்நிகழ்வது; உத்தரம்-பின் நிகழ்வது.)
578. கண்டுகண்டு கருத்துற வாங்கிடின்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.
பொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக  இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.
579. நாபிக்கும் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்தரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந் தானே
பொருள் : உந்திக்குக் கீயே பன்னிரண்டு அங்குலத்தில் மூலதாரத்தில் உள்ள குண்டலியை மேல்எழுப்பும் மந்திரமாகிய பிராசாத மந்திரத்தை ஒருவரும் அறியவில்லை. அவ்வாறு எழுப்பும் மந்திரத்தை அறிந்த பின்னர் சிவன் நாத மயமாகச் சிரசின் மேல் விளங்கி நிற்பான். இது ஓம் என்ற மந்திரத்தைக் குறிக்கிறது.
580. மூலத்து இருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்எழும் செஞ்சுடர்
ஞாத்து நாபிக்கு நால்விரல் கீழதே.
பொருள் : மூலதாரத்துக்கு இருவிரல் அளவு மேலுள்ளதும் முன்பக்கம் பார்வையுடையதும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குறிக்கு இரண்டு விரல் அளவு கீழே உள்ளதுமான இடத்தில் வட்டமிட்டுக் கொண்டுள்ள குண்டலினியுள் எழுகின்ற செஞ்சுடர், உடம்பில் உந்திக் கமலத்துக்கு நான்கு விரல் அளவு கீழே யுள்ளது. (செஞ்சுடர் - உச்சித்துளைவழி, பிரமரந்தி மார்க்கம்)
581. நாசிக்கு அதோமுகம்  பன்னிரண்டு அங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாகுமே.
பொருள் : நாசிக்குக் கீழ் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ள இதயத்து நீ மனத்தை இழுத்து வைத்துச் செஞ்சுடரை நினைப்பாய் ஆயின் அட்டமா சித்திகளும் ராஜயோகமும் வந்து கூடும். இத்தியானம் தேகத்துக்கு எப்பொழுதும் தீமை செய்யாததாகும். இதை அநாகதம் என்பர். (அகவழிபாடு - மானத பூசை.)
582. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடின்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்டுமின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதிய தன்னுடல் உன்மத்தம் ஆமே.
பொருள் : இரு மின்னற் கொடி பின்னி ஓடுவது போன்ற ஒளி தோன்றினால் குற்றமில்லாத  மேலான ஆனந்தம் என்றே எண்ணுங்கள். நேர்மை விளங்கும் கண்டத் தானத்தில் (கழுத்துப் பிரதேசத்தில்) நிலவொளி தோன்றிடின் பிரத்தியாகாரப் பயிற்சி செய்த சாதகனது உடலில் ஆனந்தப் பரவசம் உண்டாகும். (இரேகைச் சுடரொளி - கீற்றுப் போன்ற ஒளி என்பாரும் உளர்)
583. மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்து இதுதானே.
பொருள் : மூலாதாரத்தை ஆகுஞ்சனம் என்ற முத்திரையால் அடைத்துக் கொண்டிரு பிரமரத்தின் மேல் மனத்தைப் புறம் விழித்தபடி இரு இதுதான் காலத்தை வெல்லும் உபாயமாகும். (ஆகுஞ்சனம் - குதத்தை மேலெழும்படி அடைத்திருத்தல்.)
584. எருவிடும் வாசற்கு இருவிரல் மேலே
கருவிடும் வாசற்கு இருவிரல் கீழே
உருவிடும் சோதியைஉள்கவல் லார்க்குக்
கருவிடும் சோதி கலந்துநின் றானே.
பொருள் : மலங்கழிக்கும் வாயிலாகிய குதத்துக்கு மேலே இருவிரலும், கருவுண்டாகும் வாயிலாகிய கோசத்துக்கு இருவிரல் கீழுள்ள இடத்தில் உருப்பெறும் குண்டலினியை நினைக்க வல்லார்க்கு கருவிடும் மகேசுரன் சோதிவடிவில் கலந்துள்ளான்.
585. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துஉணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துஉணர் உன்னல் கரைதல் உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.
பொருள் : சுழுமுனையில் மலத்தின் காரியமாகிய இருளால் உண்டாகும் அவத்தையை (நிலை வேறுபாட்டை)யும் புருவ நடுவில் விளங்கும் சோதியினின்றும் பிரித்துள்ள நிலை வேறுபாட்டினையும ஒழித்து உணர்வு மயமான ஒளியை நினைத்து உருகி மனத்தை  ஒருமைப் படுத்தல் பிரத்தியாகாரப் பெருமையாம். (ஒருக்கால் - சுழுமுனை)
586. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.
பொருள் : வெளியே சென்ற வாயுவை மீளவும் புக முடியாதபடி திறமையாக உள்ளொளியில் பொருத்தி நின்றால் உள்ளம் வலுவடைந் துள்ளதாம், அப்போது பெருந் தகுதியுடைய இறைவனும் அவ்வொளியில் நிலைபெற்றுப் புறப்பட்டுப் போகாதவனாய் விளங்குவான்.
587. குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென்று உணரில்
அறிப்புற காட்சி அமரரும் ஆமே.
பொருள் : குறித்து நிறுத்தலாகிய பிரத்தியாகரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையிலிருந்து அறியப்படும். வெறுக்கத் தக்க அறியாமையாகிய இருளை நீங்கி வேறுபாட்டினைச் செய்யும் சிவனை நாடுங்கள். சிவத்தை விரும்புகின்ற சிறப்புற்ற சிந்தையில் உறுதியாக உணர்ந்தால் சிவஞானம் பொருந்திய தேவருமாவர்.
7. தாரணை
(தாரணையாவது, தரிக்கச் செய்தல், பிரத்தியாகாரப் பயிற்ச்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல் என்க.)
588. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்காட்டி
வீணாத்தண்டு ஊடே வெளியுறத்  தானோக்கிக்
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு
வாணான் அடைக்கும் வழிஅது வாமே.
பொருள் : கோணுதல் இல்லாத மனத்தை ஐõலந்திர பந்தம் முதலியவற்றால் கீழ் நோக்காது தடுத்து நடு நாடியின் வழியாகச் செல்லும் பிராணனுடன் மனத்தையும் பொருத்தி ஆகாயத்தின் இடை பார்வையைச் செலுத்தி, காணாத கண்ணுகம் கேளாத செவியுமாக இருப்பார்க்கு வாழ்நாளாகிய ஆயுள் அழியாமல் அடைக்கும் உபாயமாகும்.
589. மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.
பொருள் : மலைபோன்ற சிரசினிடை ஆகாயகங்கை எப்போதும் பாய்ந்து கொண்டேயிருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று, பரநாத ஒலிகூடிய சிற்சபையில் ஆனந்தக் கூத்தாடும் அகலாத ஆனந்தத்தை  நல்கும் சோதியைத் தரிசித்தேன்.
590. மேலை நிலத்தினாள் வேத்துப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.
பொருள் : சிரசின்மேல் எழுந்தருளியுள்ள சிற்சத்தி மாற்றத்தைச் செய்யும் தேவியாவாள், மூலாதாரத்தில் குண்டலினியாகிய கிரியா சத்தியோடு பொருந்திய மூர்த்தியைத்தாரணைப் பயிற்சியால் அம்மூர்த்தியைச் சிரசின்மேல் எழுந்தருளப் பண்ணிச் சிற்சக்தியுடன் சேரும்படி செய்தால் வயதில் முதிர்ந்தவனும் வாலிபன் ஆவான் பார்த்தறிக. இது நந்தியின் ஆணையாகும்.
591. கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்ட இனிதுள் நிறுத்தி
மடைவாயில் கொக்குப்போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.
பொருள் : மூலாதாரத்தை அடைத்து அங்குள்ள காம வாயு அல்லத அபானனை மேலே செல்லும்படி செய்து நடுவழியான சுழுமுனையின் மேல் மனத்தைப் பொருத்தி நீரோடும் மடைவாயிலில் காத்திருக்கும் கொக்குப் போல நாட்டத்தை விடாமல் இருப்போர்க்கு, தேகம் சிதையாமல் ஊழிக்காலம் வரை இருக்கலாம்.
592. கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டின்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
பொருள் : உடலில் உயிர் கலந்துள்ள கால எல்லையை அறியின் அக்கால எல்லை பிராணன் இயக்கத்தால் அமைந்துள்ளது. அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி நிறுத்திவிட்டால் உயிருடன் பொருந்திய காலமும் அழிவின்றுட நிற்கும். ஆயுள் நிலைத்து நிற்கும் என்றபடி.
593. வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்நிற வாவிடின் கோழையும் ஆமே.
பொருள் : வாய்திறவாமல் மௌனமாக இருப்பவரது மன மண்டலத்தில் பிராணனாகிய செல்வம் ஒன்றுள்ளது. அங்ஙனமின்றி வாய்திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியிட்டு வீணாக்குபவர். பேசாத மௌனியர் மதிமண்டலத்தில் பிராணனைச் செலுத்திச் சோதியை அறிகின்றனர். சகஸ்ரதளமாகிய செப்பினைத் திறந்து பார்க்க வல்லமையற்றவர்கள் கோழைத்தனம் உள்ளவராவர். (கோய்-நகை வைக்கும் செப்பு)
594. வாழலும் ஆம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி  பெரியதோர் பள்ளி அறையிலே.
பொருள் : உள்ளத்தினின்றும் இறங்கி ஊடறுத்துச் செல்லுகின்ற வாயுவை வெளியே போகாதபடி நடு நாடியின்கண் செலுத்தின்ஏழு சாளரங்களையும் இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயில் பெரிய வாயில்களையும் கொண்ட தேவர் கோயிலில் பெரிய பள்ளி அறையிலே பலகாலம் வாழலாம். (ஏழு சாலேகம் - கண்இரண்டு, காதுஇரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று; ஆக ஏழு துவாரங்கள். இரண்டு பெருவாய்-எருவாய், கருவாய். பாழி- உடல்; பள்ளி அறை - சகஸ்ரதளம், ஓய்வுபெறும் இடம்)
595. நிரம்பிய ஈரைந்தில் ஐந்தவை போனால்
இரங்கி விழித்திருந்து என்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.
பொருள் : புலன்களைத் துய்த்து நிரம்பிய ஞானேந்திரிய கன்மேந்திரியமாகிய பத்தில் ஞானேந்திரியங்கள் ஐந்தும் நீங்கினால் அறிவிலியே ! நீ வருந்தி இருந்தும் என்ன பயனைப் பெறமுடியும்? ஆனால் இந்திரியங்களின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு, மனமாகிய குரங்கை உடம்பினில் சேட்டையின்றி இருக்கச் செய்ய முடியும். (ஈரைந்து - தசவாயு என்று சிலர் கொள்வர். கொட்டை கோட்டை என்றும் பாடம்.)
596. முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னூறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயும் இடிகரை நிற்குமே.
பொருள் : முன்னமே வந்து பிறந்தார் அனைவரும் தாரனைப் பயிற்சி இன்மையால் அழிந்து ஒழிந்தனர். பின்னே வந்தவர் அழியமாட்டார் என்பதற்கு என்ன பிரமாணம் ? அவ்வாறு அழிகின்றவர் அடையும் நிலைகளைப் பேசினால் அவை அளவற்றனவாகும். என்ன வியப்பு ! ஆற்றில் இடிந்து கரைகின்ற கரை போன்று நாளும் அழிகின்ற உடம்பு அழியாது நிற்குமோ ? (இடிகரை - அழியும் தேகம்)
597. அரித்த உடலைஐம் பூதத்தில் வைத்து
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.
பொருள் : ஐம்பொறிகளால் அரிப்புண்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து, அப்படிப்பட்ட ஐம்பூதங்களில் சத்தம் முதலான தன் மாத்திரைகளில் போகும்படியாக ஆராயப் பெற்ற மனம் முதலிய அந்தக் கரணங்கள் நாதத்தில் ஒடுங்க ஆன்மா தற்பர மாகிய சிவனோடு பொருந்தியிருப்பதே தாரணையாகும்.
8. தியானம்
(தியானம் என்பது இடைவிடாது நினைந்திருத்தல். இடையீடுபட்டு எண்ணுவது தாரணை. இடையீடுபடாது எண்ணுவது தியானம். தியானம் எத்தனை வகையென்றும், அதனை எவ்வாறு செய்து பழக வேண்டும் என்றும் இங்கு ஆசிரியர் கூறுகிறார்.)
598. வரும்ஆதி  ஈர்எட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.
பொருள் : முன்னே தாரணைப் பகுதியில் பத்தாவது மந்திரத்தில் கூறியபடி அமைந்த தியானமாவது, ஒப்பற்ற புத்தியும் புலனும் நீங்கியிருத்தலாம். அது உருவோடுகூடிய சத்தியை மேலாக எண்ணுதலாகிய பரத்தியானம் என்றும் ஒளி பொருந்திய சிவனை எண்ணுதலாகிய சிவத்தியானம் என்றும் இருகூறாக யோகத்தில் கூறப்பெறும்.
599. கண்நாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துள்
பண்ஆக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.
பொருள் : கண், நாக்கு, மூக்கு, செவியாகிய ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில், நாதத்தை உதிக்கச் செய்யும் பழமையான பொருள் ஒன்றுள்ளது அது அண்ணாக்குப் பிரதேசத்தில் எல்லையற்ற பேரொளியைக் காட்டி, மனம் புறவழிச் செல்லாமல் தடுத்து நம்மைப் பிழைக்கச் செய்தது இவ்வண்ணமாம்.
600. ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்õரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும ஆமே.
பொருள் : ஒன்றாகிய ஞானக்கண்ணில் பொருந்திய சோதியை இருகண்களையும் பொருந்திப் பார்த்து அங்கே சலனமில்லாமல் பொருந்தியிருந்தால் ஆகாய கங்கை நன்கு புலப்படும். முறையில் சிதாகாயப் பெருவெளியில் பொருந்தி நிற்கப் பண்ணாமல் நின்ற சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலுமாகும்.
601. ஒருபொழுத உன்னார் உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை
ஒருபொழுது உன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழுது உன்னார் சந்திரப் பூவையே.
பொருள் : உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினையார்கள்; உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை ஒரு போதும் எண்ணார்கள்; சிவன் எழுந்தருளியிருக்கின்ற சிந்தையையும் ஒருபொழுதும் எண்ணமாட்டார்கள். என்னே இவர்கள் அறியாமை. (சந்திரப்பூ-ஆஞ்ஞையுள்ள சந்திரன்  போன்ற வெண்ணிறஒளி)
602. மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினந்து விளக்கினைச் செல்ல நெருங்கி
அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.
பொருள் : மனத்தில் விளங்கும் ஒளியை மாட்சியைப் பெறும்படி மேலே செலுத்திச் சினமாகிய அக்கினியைப் போகும்படி செய்து, யாவற்றையும் விளக்கி நிற்கும் சிவ ஒளியைச் சுழுமுனை என்ற திரியைத் தூண்டி நடத்த மனத்துள் விளங்கும் சிவம் என்றும் மங்காத விளக்காகும்.
603. எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறி வார்இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
பொருள் : எண்ணாயிரம் ஆண்டுகள் யோகம் பயின்றாலும் கண்ணில் சோதியாக இருந்து விளங்குபவனைக் கண்டு அறிபவர்கள் யாரும் இல்லை. மன மண்டலமாகிய உள்ளத்தில் ஒளி பொருந்தும்படி பார்ப்பவர்க்கு, கண்ணாடியில் உருவத்தைக் காண்பது போல உள்ளத்தில் கலந்திருப்பதைக் காணலாம்.
604. நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.
பொருள் : இரண்டு கண்பார்வையையும் நடுமூக்கில் பொருத்தி வைத்திடில் சோர்வும் இல்லை. உடம்புக்கும் அழிவில்லை, மனத்தின் ஓட்டம் இராது. அறியும் தன்மை இராது. தான்  என்ற முனைப்பும் இராது புறத்தே செல்லும் அறிவுத் திறனும் இராது. அவன் சிவனாகலாம். (மனை - உடல்.)
605. நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயர்அற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.
பொருள் : இரண்டுகண் பார்வையையும் நாசி காக்கிரம் என்ற பருவ நடுவில் வைத்து, உயர்தலினின்றும் தாழாத பிராணனை உள்ளே அடக்க, துன்பத்தைத் தரும் மனமாதியை நீக்கி யோக நித்திரை செய்வார்க்கு எடுத்த இவ்வுடல் பயனைத் தருவதாகும். பிரபஞ்சம் பிணிக்கும் என்ற பயமும் இல்லையாம். நாசியில் உயர்ந்த இடம் புருவ மேடு சாதகர் தியானம் செய்யும் போது கண்பார்வையைப் புருவநடுவில் செலுத்தியிருக்க வேண்டும்.
606. மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க்கு அல்லது பார்க்கஒண் ணாதே.
பொருள் : மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், அழகியவண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியவற்றின் நுண்ணொலிகள் பத்தும் தியானத்தில் அடங்கியிருப்பவர்க்கன்றி வேறுயாராலும் அறிய ஒண்ணாது. இதுவே திருச்சிலம்போசை என்ப.
607. கடலொடு மேகம் களிறுஒடும் ஓசை
அடஎழும் வீணை அண்டர்அண் டத்துச்
சுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடம்அறி யோகிக்குஅல் லால்தெரி யாதே.
பொருள் : கடல், மேகம், யானை, ஆகியவற்றின் ஓசையும் கம்பி இறுக்கத்தால் வீணையில் எழும் நாதமும், ஆகாயத்தில் அமைந்துள்ள வேத கோஷம், புல்லாங்குழல், சுருங்கிய வாயினையுடைய சங்கு ஆகியவற்றின் ஓசையும் திடமாக அறியவல்ல யோகியர்க்கன்றி ஏனையோரால் அறியமுடியாது. கடலோசை முதலியன வன்மையான ஓசை என்றும் வீணைஓசை முதலியன மென்மையான ஓசை என்று அறிக.
608. ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.
பொருள் : இறைவனது இயல்பும், தேவர் குழாச் சேர்க்கையும், பாசத்தின் இயக்கமும், பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமாகும். அதனை உணர வல்லார்க்கு பூவினில் வெளிவரும் கந்தம் போல ஈசன் நாதத்தில் விளங்குகிறான் என்பது புலப்படும்.
609. நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.
பொருள் : நாத தத்துவம் முடிந்த இடத்திலே பராசக்தி யுள்ளான். அங்கு நல்ல யோகத்தின் முடிவு உள்ளது. நாத முடிவில் நம் மனத்தில் பதிவது அவ்விடத்தில் நீலகண்டப்பெருமான் விளங்குவான். ஓசை முடிந்த இடமே திருவருள் வெளிப்படும் இடம்.
610. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.
பொருள் : ஆறு ஆதாரங்களில் தோன்றுகின்ற ஐவகை அக்கினியும் வணங்குகின்ற பிரகாசத்தோடு கூடிய நீல ஒளியை அகன்று, இயக்குகின்ற பஞ்ச தன்மாத்திரைகளில் ஒன்றாகிய சததம் ஒடுங்க, பொன்னொளியில் விளங்கும் இறைவனது திருவடியை அடையலாம், ஆறு ஆதாரங்களாவன; மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பனவாம்.
611. பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவுஇல்லை தானே.
பொருள் : இந்திரியங்கள் ஓய்வு பெறுகின்ற பள்ளி அறை என்ற பரஅவத்தையில் (பரை நிலையில்) ஒளியேயன்றி இருளில்லை ஒளியேயுள்ள அறையான படியால் வேறு அக்கினி கொளுத்தாமல் காக்கலாம். ஒளியை உடையதாகிய இந்நிலையை அறியில் இது தியானத்தில் எய்தப் பெறுவது ஆகும். இருளே இல்லாதபடியால் விடிவே இல்லை. (பள்ளி அறை - உள்ளம் கொள்ளி அறை - சுடுகாடு எனினும் ஆம்)
612. கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் மாறி பிரியாது இருக்குமே.
பொருள் : சந்திரமண்டலமும் அமைக்க வேண்டுமென்று மேற் கொண்ட குறிக்கோளுக்குக் குறைவு வராமல் தான் ஒன்றுபட்டு, முதுகு தண்டிலுள்ள சுழுமுனை நாடி வழியாக மேல் நோக்கி ஏறிச்சென்ற யோகிக்கு அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம் ஆகிய மூன்றும் பொருந்தும் வகையில் வளர்ந்தபின் எடுத்த தேகம் உலகம் உள்ளவரை சீவனை விட்டு அகலாது. (மண்டலம் மூன்று - வாத, பித்த, சிலேத்துமமுமாம்)
613. அவ்வவர் மண்டலம் ஆம்பரிசு ஒன்றுண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே.
பொருள் : அவ்வவர் மண்டலத்தினால் ஆகின்ற தன்மை ஒன்றுள்ளது. அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்களுக்குப் பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோர் தலைவராம். அவ்வவரது ஆட்சி அவ் வம்மண்டலத்தில் இருப்பின் அவ்வவரது மண்டலம் மற்றவர்க்கு உதவி செய்யும் கூட்டமாகும்.
614. இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றிலும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.
பொருள் : உலகப் பொருளில் மயங்கித் தவிக்கின்ற உள்ளமாகிய இருட்டறையில்தான் உதயமாகின்ற மூன்று மண்டலங்களுள் பொருந்திப் பிரமரந்திரத்துளை வழியாகச் சிவத்தினிடம் பெருங்காதல் கொண்டு ஆராய்ந்து மேற்சென்றால் துன்பம் நீங்கிச் சிரசின் மேல் விடியற்காலம் போல வெளிச்சத்தைக் காணலாம். (துருவிடுதல் - ஆராய்தல். மார்கழி ஏற்றம் - அருணோதயம், மார்கழித்திங்கள் திருவாதிரைத் திருநாளாகும். திருவாதிரை சிவபிரானுக்குச் சிறப்புடையது.)
615. முக்குணம் மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலம்இடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே
பொருள் : தாமத இராசத சாத்துவிகம் என்ற முக்குணங்களாகிய இருள்நீங்க மூலாதாரத்திலுள்ள அபானனை மேலெழும்படி செய்து, வலப்புற சூரிய கலையை இடப்புறமுள்ள சந்திர கலையோடு பொருந்தும்படி அதிகாரையில் ஒரு நாழிகை பயின்றால் உயிரை உடம்பில் அழியாது சிவன் வைப்பான். (உயிர்நிலை- உடல்)
616. நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக்கு இருவிரல் உள்ளே
கடலித்து இருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.
பொருள் : அசைவினை உண்டாக்கிக் கொண்டிருக்கும் உந்திச் சக்கரத்துக்கு நான்கு விரல் மேலே ஊர்த்துவ முகமாய் மேலே செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைச் சக்கரத்துக்கு இரண்டு விரற்கடை கீழேயுள்ள அநாகதச் சக்கரத்தில் கடல்முழக்கம் போன்று பொங்கி எழுகின்ற ஒலியினைத் தியானிக்க வல்லவர்கள் உடம்புக்கு உரியவனாகிய ஆன்மாவை அறிந்தவராவார்.
617. அறிவாய்அசத் தென்னும் ஆறாறு அகன்று
செறிவான் மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.
பொருள் : அறிவான் ஆன்மா, அறிவில்லாத முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கி, செறிந்துள்ள மாயையை அருளாலே கெடுத்து, சிவனோடு நீங்காதிருக்கும் அருள் சத்தியாகிவிடும் பேற்றைச் சிவநெறியில் முறைப்பட்ட அன்பரே அவ்வுண்மையை உணர்ந்தோராவர்.
9. சமாதி (சமாதியாவது, உயிரும் இறைவனும் ஒன்றி நிற்றல்)
618. சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.
பொருள் : இயமம் முதலியவைகளைக் கடைப்பிடித்து சமாதிவரை செல்லும் முறைமையைச் சொல்லக் கேட்டால், இயமம் முதல் சமாதிக்கு முன்னுள்ள அங்கங்கள் கடைப்பிடிக்கப்படின், எட்டாவதான சமாதி கைகூடும். இவ்எட்டு உறுப்புக்களையும் நியமமாகச் செய்து வருபவர்க்கு அட்டாங்க யோகத்தின் இறுதி உறுப்பான சமாதி கைகூடும்.
619. விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான் சமாதியில் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே.
பொருள் : ஒளியும் ஒலியும் சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் மிகுந்து விளங்கினால், யோகமான சமாதியில் சீவன் பொருந்தி யிருக்கும். அப்போது இறுதியில் ஞான சொரூப மானசிவம் அழகிய சோதியாக வெளிப்படும். (விந்து - உடல் உரஅமிழ்து. நாதம் - உயிர்ப்பு ஓசை மேரு - புருவமத்தி)
620. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலயம் ஆமே.
பொருள் : நினைத்தலைச் செய்யும் மனம் எங்கே உள்ளதோ அங்கே பிராண வாயுவும் உண்டு. மனம் நினைக்கவில்லை யானால் பிராணவாயுவின் அசைவும் உண்டாகாது. அம்மனத்துள்ளே நினைப்பதைவிட்டு மகிழ்ந் திருப்பார்க்கு நினைக்கும் மனமே நினையாத மனமாகி அடங்கிவிடும். (மன் - நினைத்தல்)
621. விண்டலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்
கெண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.
பொருள் : பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர்ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக் காட்டையும், தரிசித்து உணர்வு மயமாக எண்ணியிருப்பவர்கள் செழுமையான சிரசாகிய மாலையில் பிராணனாகிய குதிரையைச் செலுத்தி மனமாகிய கயிற்றைக் கொண்டு கட்டிவிடுவார்கள். (செழுங்கிரி - புருவநடுமுனை; ஆக்கினையின் உச்சி.)
622. மூல நாடி முகட்டலகு உச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்கள்
மேலை வாசல் வெளியிறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லை
பொருள் : சிவத்தை நாடிச் சிரசின் உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் கண்ணறிவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு ஆகிய நான்கு அறிவும் பொருந்தும் வண்ணம் இருப்பவர்களே ! விரிந்த சகஸ்ர தளத்துக்கு மேலே அகண்டத்தைத் தரிசித்தபின் உங்களுக்குக் காலன் என்ற சொல்லுங்கூடக் கனவிலும் இல்லை.
623. மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.
பொருள் : பிருதிவி முதலிய ஐந்து மண்டலங்களும் அகரமுதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகள் பன்னிரண்டும் ஆதாரச் சக்கரங்களிலுள்ள அட்சரங்களை இடமாகக் கொண்டுள்ள தேவதைகள் நாற்பத்தெட்டும் கருத்து மாத்திரமாக நிராதாரத்தில் (சாந்தியதீத கலையில்) கண்டு, எங்கும் வியாபகமாயுள்ள திருவடியைப் பொருந்தி அனுபவிப்பான் சிவயோகி.
624. பூட்டொத்து மெய்யில் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலம் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே.
பொருள் : பூட்டைக் கருவியைப் போல உடம்பில் கீழும் மேலுமாகச் செல்லும் வாயுவை தேடுதலுற்ற பிரமரந்திரத்தால் பொருந்தச் சேர்த்து, தேடியலைதலை விட்டு விழித்தபடி இருப்பார்க்கு, சிவக் கனியோடு அசைவற்றிருக்கலாம். (பூட்டை - கிணற்றுராட்டினம் நயனத்திருப்பார்க்கு இடையறாது எண்ணி இருப்பார்க்கு.)
625. உருஅறி யும்பரிசு ஒன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமுது உண்டார்
அருவரை ஏறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாம்மனம் தீர்ந்துஅற்ற வாறே.
பொருள் : எங்கள் ஆன்ம சொரூபத்தை அறியும் சிறப்பான முறை ஒன்று உள்ளது. (அதனை யான் சொல்லுவேன்). தேவர்கள் கருவுண்டாகும் இடத்தில் பொருந்தி இன்பத்தைப் பெற்றனர். அதனால் சிரசின் உச்சியில் சென்று அமுத பானம் செய்யாதவர். ஆகவே மனம் அடங்கச் சிரசின் மேலிடத்தில் பொருந்துவதே சொரூபத்தை அறிதலாம். திருப்பாற்கடலைக் கடைந்த செய்தியைக் கூறுவாரும் உளர்.
626. நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை ஆக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.
பொருள் : நம்பத் தகுந்தவனும் முதல் பொருளானவனும், நான்கு வேதங்களை ஓதியவனும் செம்பொன்னின் உள்ளே விளங்கும் சோதி போன்றவனுமாகிய சிவனிடம் அன்பினைப் பெருக்கி ஆசையை அடக்கிப் போய் சகஸ்ர தளத்தில் பொருந்தி நின்று சாதகர் நிட்டைகூடியிருந்தார்.
627. மூலத்து மேலது முச்சது ரத்தது
கால் அத்து இசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே
பொருள் : குண்டலினி நான்கு இதழ்களோடு கூடிய மூலாதாரத்திலுள்ள முக்கோணவடிவமானது. அது அபானன் சத்திகெட்டுப் பிராணனோடு சேர்கின்ற இடத்தில் பெருமைமிக்க அர்த்த சந்திரனில் நெற்றிக்கு நடுவேயுள்ள வடிவத்தில் அர்த்தசந்திரன் முதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகளாக விளங்கும்.
628. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே
பொருள் : சீவ சங்கற்பங்களைவிட்டு மூலக் கனலோடு மேற்சென்று சிற்பத் திறம் நிறைந்த இப்புவனங்களை யெல்லாம் படைத்துக் கொடுத்த பேரொளி அழகனாகிய பரமசிவத்தை, தேடி மதி மண்டலத்தோடு பொருந்தி, தான் என்றும் சிவமென்றும் பேதமாகாதது, சாந்தம் பொருந்திய சமாதியாகும். (தற்பரமாதல் என்பது ஆன்வா பேதமற்றுச் சிவத்தோடு நிற்றல்)
629. தலைப்பட்டு இருந்திடுத் தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்கவல் லார்க்கே.
பொருள் : மேற்கூரிய வண்ணம் வாழ்க்கையை மாற்றியவரிடம் ஆன்மா நன்கு விளங்கும் ஆன்மா சிவத்தைச் சார்ந்திருத்தலால் திருவருட் சத்தியும் அங்கே பிணைந்து நிற்கும். அருட்சத்திக்கு எதிரமான் காமக் குரோதத்தின் அகன்று விடும் சமாதி கூடினவர்க்கு நடுமை நிலைமை தானே வந்துவிடும். (துவைப்பட்டிருத்தல் - நடுவு நிற்றல்)
630. சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகுமாம்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந்து அன்புறு வாரே.
பொருள் : ஒளியோடு கூடிய ஒப்பற்ற சுடர்வடிவமாக நின்ற சிவமும், ஆதியாகிய சத்தியும் உள்ளே விளங்குகின்ற மலமற்ற ஆன்மாவும் சமாதியில் ஒன்றேயாகும். படைப்புக்கு முதல்வனாகிய பிரமனும் நீல மேனியையுடைய திருமாலும் ஆதிமுதல்வனாகிய சிவத்திடம் அடி பணிந்து அவனிடம் என்றும் நீங்கா அன்பு எய்துவர்.
631. சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில்
சமாதிதான் இல்லைதான் அவன் ஆகில்
சமாதியின் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.
பொருள் : சமாதியில் இருப்பவர்க்குப் பல யோகங்கள் சித்திக்கும் எப்போதும் இறைவனோடு ஒன்றியிருக்கின் சமாதிகள் வேண்டாம். ஆன்மாவாகிய தான் சிவமேயானால் சமாதி தேவை யில்லாததாகும். சமாதியினால் அறுபத்து நான்கு கலை ஞானங்களும் வந்து பொருந்தும். (சமாதி - நிஷ்டை)
இயமம் (தீது அகற்றல்)
(அஃதாவது அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்பு என்பதாம்)
632. போதுஉகந் தேறும் புரிசடை யான்அடி
யாதுஉகந் தார்அம ராபதிக் கேசெல்வர்
ஏதுஉகந் தான்இவன் என்றருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால்விடை யோனே.
பொருள் : சகஸ்ரதளத்தை விரும்பி எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியை, எல்லாவற்றாலும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமை காண நடனம் புரியும் இடப வாகன மூர்த்தி இச் சாதகன் எதை விரும்பி வந்தான் என்று அதனை அருள் புரியும்.
நியமம் (நன்றாற்றல்)
633. பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந்து ஆங்கே கருதும் அடர்கட்கு
முற்றெழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.
பொருள் : திருவடியைப் பற்றிநின்று அதனிடம் அன்புகொண்டு சிவத்தின் புகழையே கற்றுக் கேட்டிருந்து அங்கு அவ்வண்ணமே சிந்தித்து இருப்பார்க்கு முனிவர்கள் அனைவரும் எழுந்து எதிர்கொண்டு அழைக்கத்தெளிந்த சிவபதம் சேர்தலும் கூடும். (சிவபதம் - சிவன் திருவடி)
ஆதனம் - இருக்கை
634. வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்துஅம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவம் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.
பொருள் : சிவபெருமானை நோக்கி வருந்தித் தவம் செய்து தேவஉலகுக்கு அரசனாய், தேவ உலகம் செல்லக்கூடிய தகுதியுடையவன் இவன் என்று சொல்லும்படி குளிர்ச்சியைத் தரும் முரசம் வேய்ங்குழலும் ஒலிக்க இறைவன் அருளால் இவ்வுலகிலிருந்து இன்பம் அடைவர். (தண்முழவம் - தண்ணுமை - மத்தளம்)
பிராணாயாமம் (வளிநிலை)
635.செம்பொன் சிவகதி சென்றுஎய்தும் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம்வந்து எதிர்கொள்ள
எம்பொன் தலைவன் இவனாம் எனச்சொல்ல
இன்பக் கல்வ இருக்கலும் ஆமே.
பொருள் : செம்பொன்னின் ஒளியையுடைய சிகதியை அடைகின்ற காலத்தில் பூரண கும்பத்துடன் கூடியதேவர் கூட்டம் வந்து எதிர் கொண்டழைக்க எங்களுடைய பொன் மண்டலம் என்று புத்தி மண்டலத் தலைவன் இவனாம் என்று அனைவரும் பாராட்ட இன்பச் சேர்க்கையுள் இருக்கலாம்.
பிரத்தியாகாரம் (தொகைநிலை)
636. சேருறு காலம் திசைநின்ற தேவர்கள்
ஆர்இவன் என்ன அரனாம் இவன்என்ன
ஏர்உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
கார்உறு கண்டணை மெய்கண்ட வாறே.
பொருள் : சிவகதியைப் பெறுங்காலத்துத் திக்குப் பாலர்களாகிய தேவர்கள் இவன் யார் என்று கேட்க, சிவபெருமான் நாமே இவன் என்று சொல்ல அழகுமிக்க தேவர்கள் அனைவரும் எதிர்கொண்டு அழைக்க கருமைநிறம் பொருந்திய கண்டத்தையுடைய சிவபெருமானைச் சாதகர் நேரில் தரிசித்தவராவர்.
தாரணை (பொறைநிலை)
637. நல்வழி நாடி நமன்வழி மாற்றிடும்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இவ்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.
பொருள் : நாத சம்மியத்தை நாடி எமனிடம் செல்கின்ற வழியை மாற்றுகின்ற பிரணவ உபாசகரும் குறையாத கொடையில் வழிவழி வந்தவரும் ஆகிய இவ் யோகியர்களுக்குத் தேவலோகத்திலுள்ள எட்டுத்திக்குகளுக்குச் சென்றாலும் தேவலோகம் பூலோகம் போன்று தெரிந்த வழியாக இருக்கும்.
தியானம் (நினைதல்)
638. தூங்கவல் லார்க்கும் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்கவல் லார்க்கும் தன்னிடம் ஆமே.
பொருள் : அறிதுயில் கொள்ளும் திருமாலுக்கு ஏழ் உலகங்களை மீண்டும் படைக்க வல்ல பிரமனுக்கும் வலிமையால் அழித்து அசையாது நிற்கும் உருத்திரனுக்கு அமுதம் உண்டு திளைத்துத் தாங்கிக் கொண்டிருக்கும் தேவர்களுக்கும் சிவகதியைப் பெற்றவரே இடமாகும்.
சமாதி (நொசிப்பு)
639. காரிய மான உபாதியைத் தான்கடந்து
ஆரிய காரணம் எழுந்துதன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தார்இயல் தற்பரம் சேர்தல் சமாதியே.
பொருள் : ஆன்மாக்களுக்கு ஆணவ மல மறைப்பால் விளைந்த உபாதி ஏழையும் கடந்து, ஆரியனான சிவத்தினது உபாதி ஏழையும் பொருந்தி, பரம்பரையாக வரும் சுத்தமாயை, கெட, தவத்தில் இயக்கும் தன்மையதான பொருளைச் சேர்தலே சமாதியின் பயனாம்.
11. அட்டமாசித்தி
பரகாயப் பிரவேசம்
(அட்டமாசித்தி - எட்டுப் பெரிய சித்திகள் யோகப்பயனாலும் ஈசன் அருளாலும் கிட்டுவன. அவையாவன: அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன.
அணிமா - அணுப்போன்று சூக்குமமாதல். மகிமா - மலை போன்று பெரிதாதல்; கரிமா - கனமாதல்; இலகிமா - பஞ்சைப்போல் இலேசாதல். பிராப்தி எல்லாப் பொருளை யும் தன்பால் தருவித்தல்; பிராகாமியம் - விருப்பம் போல் தடையின்றி எல்லா இன்பங்களையும் பெற்றிருத்தல்; ஈசத்துவம் - தத்துவங்களை விருப்பப்படி நடத்தல்; வசித்துவம் - தத்துவங்களில் கலந்திருத்தல்.
பரகாயப் பிரவேசமாவது பிராகாமியம். அஃதாவது வேண்டும். உடம்பை எடுத்துக் கொண்டு சுகம் அனுபவித்தல். இனி, மேலான உடம்பில் புகல் என்ற பொருளும் கண்டுகொள்க.)
640. பணிந்துஎண் திசையும் பரமனை நாடித்
துணிந்துஎண் திசையும் தொழுதுஎம் பிரானை
அணிந்துஎண் திசையிலும் அட்டமா சித்தி
தணிந்துஎண் திசைசென்று தாபித்தவாறே.
பொருள் : மனம் ஒருமைப்பட்டு எட்டுத் திக்குகளிலும் மேலான பொருளாகிய பரமனை, அவனே பரம்பொருள் என்று ஆராய்ந்து துணிந்து, அவ்எட் டுத்திசைகளிலும் எம்பெருமானை வணங்கி, எண்திசையினும் அட்டமாசித்திகள் தாமே அடையுமாறு பெற்று எங்கும் அட்டமாசித்திகள் நிலை பெறுவித்தவாறாகும்.
641. பரிசறி வானவர் பண்பன் அடியென
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தேனே.
பொருள் : ஒளி மண்டல வாசிகளின் பக்குவத்துக்கு ஏற்ப வழங்கும் பண்பாளன் திருவடியே சரண் என்ன குற்றமற நாடி மிகத் தூய்மையான பரவெளியைக் கண்டேன். ஆதலால் அடியேனுக்கு அருமையான பொருள் பிறிதொன்றில்லை; அட்டமா சித்திகளை அடியேனுக்கு விரும்பி யருளி அப்பெரு மான் பிறவியை நீக்கியருள் செய்தான். (துரிசறகாமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றம் நீங்க.)
642. குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறொட்டாஞ் சித்தியே.
பொருள் : குருவின் அருளினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சத்தி சீவசத்தியுடன் பொருந்திக் குறிவழி பாய்வதைத் தடுத்து நல்ல தருணத்தை உண்டாக்கி, தியான முறையில் சாம்பவி, கேசரியாகிய இரு நாட்டத்தில் ஏதேனும் ஒன்று சேர, பெரிய சிவகதியைப் பெற்று அதன் பேறாகிய அட்டமா சித்திகளையும் அடையலாம்.
641. பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரியது எனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தேனே.
பொருள் : ஒளி மண்டல வாசிகளின் பக்குவத்துக்கு ஏற்ப வழங்கும் பண்பாளன் திருவடியே சரண் என்ன குற்றமற நாடி சிகத் தூய்மையான பரவெளியைக் கண்டேன். ஆதலால் அடியேனுக்கு அருமையான பொருள் பிறிதொன்றில்லை. அட்டமா சித்திகளை அடியேனுக்கு விரும்பி யருளி அப்பெருமான் பிறவியை நீக்கியருள் செய்தான். (துரிசறகாமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றம் நீங்க.)
642. குரவன் அருளிற் குறிவழி மூலப்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.
பொருள் : குருவின் அருளினால் மூலாதாரத்திலுள்ள குண்டலினி சத்தி சீவசத்தியுடன் பொருந்திக் குறிவழி பாய்வதைத் தடுத்து, நல்ல தருணத்தை உண்டாக்கி, தியான முறையில் சாம்பவி, கேசரியாகிய இரு நாட்டத்தில் ஏதேனும் ஒன்று சேர, பெரிய சிவகதியைப் பெற்று அதன் பேறாகிய அட்டமா சித்திகளையும் அடையலாம்.
643.  காயாதி பூதம் கனல்கால மாயையில்
ஆயாது அகல அறிவொன்று அனாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.
பொருள் : ஆகாயம் முதலான பூதங்களும் கலை காலம் மாயையாகிய தத்துவங்களும் ஆகிய இவற்றில், ஆய்ந்து தோயாது அகல, ஆன்ம அறிவானது பொருந்தி அனாதியே நீங்காத சத்தினைக் கூடினால் அழியாமல் மேன்மையான சரீரத்தைப் பொருந்தலாம்.
644. இருபதி னாயிரத்து எண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாம்அந்த யோகம்
தரும்இவை காய உழைப்பாகும் தானே
அரும்இரு நான்காய் அட்டமா சித்திக்கே.
பொருள் : பொருந்திய கன்ம யோகம், இருபதினாயிரத்து எண்ணூறு பேதங்களை யுடையது. இவ்வாறு வந்தவை உடல் உழைப்பு ஆகும். அருமையான இவை அட்டாங்க யோகத்துள் அடங்கி எண் சித்திகளை அளிக்க வல்லனவாம்.
645. மதிதனில் ஈராறாய் மன்னும் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியும் ஈராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.
பொருள் : சந்திர நாடியாகிய இடைகலையில் பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் பிராணனில் பிங்கலை வழியாக வெளிப்படுதல் நாலங்குல அளவு போக எட்டங்குல அளவு உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியான அட்டமா சித்திகளை அடையலாம். (ஈராறு-இரண்டும் ஆறும்; எட்டு - உம்மைத் தொகை)
646. நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடுஒன்றி னால்வாயாச் சித்தியே தத்தின்
நீடும் துரம்கேட்டல் நீண்முடிவு ஈராறே.
பொருள் : நம்முடைய உறவினர் சூழ இருப்பின் நம்மை நாடுவது பந்தமாகும். மிக்க கலை ஞானம், நுண்ணறிவு, நிறையறிவு ஆகிய இவற்றால் அட்டமாசித்திகள் அடையா. பேதமாகப் பெருகிய ஒலியினைப் பன்னிரண்டு கேட்டாலே சித்தியைத் தருமாம். (நீண்முடிவுஈராறு - யோகாப்பியாச காலம் பன்னிரண்டு வருடங்கள்.)
647. ஏழா னதில்கண்டு வாயுவின் வேகியாம்
தாழா நடைபல யோசனை சார்ந்திடும்
குழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதில் தான்பர காயமே.
பொருள் : நாத தரிசனம் கிட்டியவர் ஏழாண்டில் சண்டமாருதம் போல் செல்லும் வேகத்தை உடையோராவர். நடைதளராமல் பல யோசனை செல்லும் வன்மை கிட்டும். சூழ்ந்த எட்டாம் ஆண்டில் நரை என்றும் மூப்பு என்றும் தோன்றா. தங்குதலையுடைய ஒன்பதாம். ஆண்டில் பரகாயப் பிரவேசமாம்; (அஃதாவது அழியாத உடல் உண்டாகும்) ஏழு, எட்டு, ஒன்பது ஆண்டுகளில் அமையும் பயன் கூறியவாறு.
648. ஈரைந்தில் பூரித்துத் தியான உருத்திரன்
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீர்ஒன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஏர்ஒன்று வியாபியாய் நிற்றல ஈராறே.
பொருள் : பத்தாண்டு தியான சத்தியால் கீழே போகும் சத்திகளை மேலே நிரப்பிக் கொண்டு உருத்திரன் போன்று சாதகர் விளங்குவார். பதினோராண்டில் எட்டு என்று எண்ணப்பட்ட சித்தி உண்டாம். சிறப்புப் பொருந்திய மேலேழ் உலகங்களிலும் கீழேழ் உலகங்களிலும் சென்று பன்னிரண்டு ஆண்டில் எங்கும் சென்று அழகுடன் நிறைந்து நிற்கும் தகுதி சாதகர்க்கு உண்டாகும்.
649. தானே அணுவும் சகத்துதன் நோன்மையும்
தானாக் கனமும் பரகாயத் தேகமும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத உண்மையும் வியாபியு மாம்எட்டே.
பொருள் :  தானே அணிமாவும் உலகம் போன்று பெருமையுடைய மகிமாவும், அளவிடமுடியாத கனம் உடைமையான கரிமாவும் எல்லாவற்றையும் அடக்கியும் அமையாத ஆகாயம் போன்று இலேசான இலகிமாவும், அழியாத உடலை அடைதலாகிய பிராத்தியும், பரகாயத்தை அடையும் ஆற்றலாகிய பிராகாமியமும் அமையாத உண்மையாகிய ஈசத்துமும் வியாப்பியமாகிய வசித்துவமும் ஆகிய எட்டுச் சித்திகளும் அடையலாம்.
650. தாங்கிய தன்மையும் தான்அணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
ஆங்கே எழுந்துஓம் அவற்றுள் எழுந்துமிக்கு
ஓங்கி வரமுத்தி முந்திய வாறே.
பொருள் : சிவயோகியாகிய தான் அணுத்தன்மை எய்திப் பல உயிர்களையும் தாங்கிய காலத்தும், அவற்றை வாங்கி ஒடுக்கிய காலத்தும் ஓர் மாற்றமும் இல்லை, சித்தி பெற்ற உயிர்களாகிய அவற்றுள் அப்போதே மேலெழுந்த ஓம் என்னும் நாதம் ஊர்த்துவ சகஸ்ர தளத்தை அடைந்து எழுந்து சென்ற விதமே முத்தி முற்பட்டவாறாம்.
651. முந்திய முந்நூற்று அறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முதல் ஆயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்
உந்தியுள் நின்று உதித்தெழும் ஆறே.
பொருள் : சூரிய உதயம் முதல் முன்னூற்று அறுபது விநாடியும் அமைய வந்ததாகிய நாழிகை காலத்தை ஆகாயம் முதலாகக் கொண்டு இடமும் எண்ணப்படுகின்ற இரவுக் காலத்தை மண் முதலாகக் கொண்டு அறியவும் வல்லவர் உந்திக்காலத்தில் நிற்கும் சூரியன் உதித்து மேல் எழுதலை அறிவார். ஒருநாழிகைக்கு 60 விநாடி பகல் 30 நாழிகை. 6030 = 1800 வினாடி, ஒவ்வொரு பூதத்திற்கும் 1800/5 = 360 விநாடி என்க. இதேபோல் இரவுக்கும் கொள்க, இது பழையமுறை இப்போது நாழிகை என்பது 24 நிமிஷம் அதாவது ஒருமணிக்கு 2 1/2 நாழிகை.
652. சித்தம் திரிந்து சிவமய மாகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.
பொருள் : சித்தம் புறத்தே செல்லாமல் மாறுபட்டுச் சிவமாகி, வீடு பேற்றை ஆராய்ந்து அடைந்த பிரணவ உபாசகர் சிவத் தோடு கூடிய முத்தர்கள் ஆவார்கள். அவர் பஞ்சேந்திரியங்களின் தொடர்பில்லாதவர்கள். ஆகையால் அகத் தூய்மை பெறலாம். அவர்கள் அறிவு ஆகாயத்தில் தத்துவங்களை விட்டுச் சிவத்துடன் பொருந்திநிற்பர்.
653. ஒத்தஇவ் ஒன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன்
ஒத்தஇவ் ஒன்பதில் மிக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்ததே.
பொருள் : தம்முள் மிகாமலும் குறையாமலும் ஒன்பது வாயுக்களும் ஒத்து இயங்குவன இவ்ஒன்பது அல்லாத பத்தாவதாக உள்ள தனஞ்சயன் என்னும் வாயு ஒத்து இயங்கும் இவ்ஒன்பதிலும் கூடியிருக்கவே உடலோடு உயிரும் நீங்காதிருக்கும்.
654. இருக்கும் தனஞ்சயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
பொருள் : தனஞ்சயன் என்னும் வாயு ஏனைய வாயுக்கள் இயங்கும் நாடிகளிலும் பொருந்தியிருக்கும், அஃது இருநூற்று இருபத்து மூன்றாவது புவனமாகிய அநந்தை என்ற மண்டலத்தில் பொருந்தியிருக்கும். இந்தக் காற்று பொருந்தியில்லாவிடில் இவ்வுடல் வீங்கி வெடித்துப் போகும். 224 என்ப புவனங்களின் தொகை.
655. வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமும் கூனும் முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.
பொருள் : வீங்கும் வயிற்றுக்கட்டி, சிரங்கு, குட்டம், வீக்கவியாதிகள், சோகை, காலில் வாதம், கூனமுடம், கண்ணில் பொருந்தி வீங்கும் வியாதிகள் பலவும் தனஞ்சயன் திரிபால் உண்டாவன.
656. கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன்
கண்ணில்இவ் ஆணிகள் காசம் அவனல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.
பொருள் : ஆராயுமிடத்தில் தனஞ்சயன் என்னும் வாயு திரிபு அடையின் வியாதியாம், கண்களில் உண்டாகும் ஆணிகள் காசம் முதலிய நோய்கள் தனஞ்சயன் திரிபால் வருவன அல்ல. கண்ணினிடம் கூர்மன் என்ற வாயு பொருந்தாவிடில் கண்ணில்நோய் உண்டாகி ஒளியும் இல்லையாம். (கண்ணுதல் - ஆராய்தல், ஆணி - பூ; காசம் - படலம்)
657. நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி அளவும் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங்கு உணர்ந்திருந் தாரே.
பொருள் : கண்கள் இருதயம் ஆகிய இவற்றில் நாடியின் ஓசையுள்ளது. சிறுதுடியால் அமையும் ஒலி உண்டாக்குகின்ற சுடருடைய சோதியை தேவர்கள் தலைவர்களாகிய உருத்திரன், விஷ்ணு, பிரமனும் இடைவிடாது அங்குப் பொருந்தி உணர்ந்திருந்தனர். (துடி என்றது தூடி என்று நீண்டு நின்றது.)
658. ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோர் ஓரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது வாசல் உலைநல மாமே.
பொருள் : கண்முதலிய ஒன்பது துவாரங்களையுடைய உடம்பில் இடை முதலிய ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்குரிய சுழுமுனையாகிய இடம் ஒன்றுள்ளது. அவ்விடத்தில் அவை ஒடுங்கியிருக்கத் தவம் செய்ய வல்லார்க்கு ஒன்பது வாயில் களையுடைய உலைக்களமாகிய உடல் நன்மை எய்தும். ஈற்றடியை ஒன்பது காட்சி இலை பலவாமே என்று படைபேதமாகக் கொண்டு உணர்வுகள் அளவிறந்து தோன்றும் என்று பொருள் கூறுவாரும் உளர்.
659. ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே.
பொருள் : சிறந்த குண்டலினியாகிய அங்கியின் கீழே சுழுமுனை நாடியைச் செல்வச் செய்து, வாங்கிச் சூரிய கலையில் இயங்கும் பிராணனைச் சந்திர கலையில் ஓடும்படி செய்து ஏழ் உலகங்களையும் தாங்கிட  யோக நெறி நிற்போர்க்குச் சொன்னோம்.
660. தலைப்பட்ட வாறுஅண்ணல் தையயை நாடி
வலைப்படட் பாசத்து வன்பிணை மானபோல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செயதால்ய
விலைக்கண்ண வைத்தோர் வித்தது வாமே.
பொருள் : பிரமரந்திரத்தால் விளங்கும் சிவசத்தியை நாடி, வலையில் அகப்பட்டு எங்கும் செல்லாமல் நிற்கும் மானைப் போல சந்திரகலை சூரிய கலையில் செல்லாமல் பிராணனைச் சூழு நிறுத்தினால் விளைவிக்கு  உண்ணுவதற்கும் சேமித்து வைத்த வித்துப் போலப் பயனாகும்.
661. ஓடிச்சென்று அங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென்று அங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.
பொருள் : மூலாதாரத்திலிருந்து சகஸ்ரதளத்தை விரைந்து அடைந்து சிவமாகிய ஒரு பொருளைத் தரிசித்தோர் அங்குள்ள நாடியின் உள்ளே நாதத்தை வெளிப்படுத்துவர். மேலும் ஆராய்ந்து அங்கே உண்டாகின்ற அமுதத்தையும் பருகி உடலாகிய பாசறையிலுள்ள காமாதி அறுபகைவர்களைச் சிறைப்படுத்துவர்.
662. கட்டிட்ட தாமரை ஞானத்தின் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்
பொட்டிட்டு நின்று பூரண மானதே.
பொருள் : சகஸ்ர தளத்தோடு பிணிக்கப்பட்ட சுழுமுனை நாடியில் சீவர்களை உலகமுகப்படுத்திக் கொண்டிருந் தவாமை முதலான ஒன்பது சத்திகள் சீவர்கள் பக்குவப்பட்ட பின்னர் தம் செயலாற்றுப் பராசக்தியுடன் பொருத்தி அமைந்தனர். அப்போது மூலாதாரத்தில் செயற்படுத்திக் கொண்டிருந்த குண்டலினி தொண்டைச் சக்கரத்தின் வழியாகச் சென்று அஞ்øஞ்ச் சக்கரத்தை அடைந்து பூரண சத்தியாக விளங்கியது.
663. பூரண சத்தி எழுமூன்று அறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றுஅஞ்சு ஆயினர்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.
பொருள் : பராசத்தியே ஏழ கன்னிகளாக இச்சை ஞானம் கிரியையாகிய பேதத்தால் இருபத்தொன்றாக அழகு மிக்க அக்கன்னியர் ஐம் பெருந் தொழிலுக்கும் நூற்றைந்து கன்னியராயினர். நாராயணன், பிரமன், உரத்திரன் , மகேஸ்வரன், சதாசிவனாகிய ஐவருக்கும் காரணமாகிய அவர்களோடு கலந்து விரிந்து நின்றனன்.
664. விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை
கரந்துள் எழுந்து கரந்துஅங்கு இருக்கில்
பரந்து குவிந்தது பார்முதல் பூதம்
இரைந்தெழு வாயு இடத்தினில் ஓங்கே.
பொருள் : இவ்வாறாக விரிந்து பின்னர் ஒடுங்கிப் பலவகை போகங்களையும்  விளையச் செய்த இப்பராசக்தி  மறைந்து சிவத்தினுள் சிறந்து தோனறிப் பின் ஒடுங்கியிருப்பின் பூமி முதலிய பூதங்களும் பரந்து பின் ஒடுங்கிவிடும். ஆதலால நீ மேல் எழுகின்ற நாதத்தில் ஓங்கி விளங்குவாயா. (இரைந் தெழு வாயு (ஓசையுடன் மேலெழும் உயிர்ப்பு உயிர்ப்பு பிராணவாயு.)
665. இடையொடு பிங்கலை என்னும் இரண்டும்
அடைபடும் வாயுவும் ஆறியே நிற்கும்
தடையவை ஆறேழும் தண்சுடர் உள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.
பொருள் : நாதத்தில் ஒடுங்கியவர்க்கு இடைபிங்கலை அடைபட்டுச் சுழுமுனை திறக்கும். சுவாசம் அவர்க்கு மெத்தென இயங்கும். ஆறு ஆதாரங்களும் ஏழு சத்திகளும் நீங்கிச் சந்திரமண்டலத்தில் புருவ நடுவில் விந்துத்தானத்தில் நீ ஒடுங்குவாயாக.
666. ஒடுங்கி ஒடுங்கி உணர்ந்துஅங்கு இருக்கில்
அடங்கி அடங்கிடும் வாயு அதனுள்
மடங்கி மட்ங்கிடும் மன்னுயிர் உள்ளே
நடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.
பொருள் : மனம் ஒருமைப்பட்டுப் புருவ நடுவில் இருப்பின் பிராணன் அப்போது கட்டுப்பட்டு நின்றுவிடும். புறநோக்கின்றி அகமுகமாக நோக்கும் உயிரினுள்ளே நடனம் புரியப் பெருமானும் தன்னை அறியச் செய்வான்.
667. நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி உடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிடு
மாடி ஒருகை மணிவிளக்கு ஆனதே.
பொருள் : சுழுமுனை பாயும் இடத்தில் விளங்கும் நாத ஒலியுடன் சென்று அங்கு நிøபெற்றுள்ள சிவசத்தியைப் பொருந்தி பாசறையிலுள்ள இருளாகிய பகைவரைக் கட்டுகின்ற பெருமை பொருந்திய சுழுமுனையே தூண்டாவிளக்காயிற்று.
668. அணிமாதி சித்திகள் ஆனவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாயம் மேவல்
அணுத் தன்ஐ எங்கும் தானாதல் என்றுஎட்டே.
பொருள் : அணிமா முதலான சித்திகளைச் சொல்லுமிடத்து அணுவில் அணுவாதலும், பெரியதில் பெரிதாதலும் அசைக்க இயலாத கனமுடையதாதலும் புகைபோல இலே சாதலும் மேலுள்ள ஆகாயத்தைத் தொடுதலும், எல்லாப் பூதங்களிலும் வியாபித்து எழுதலும் உயிர்கட்கு எல்லாம் கருத்து ஆதலும், எல்லாவற்றையும் வசியம் செய்து எங்கும் தானாக இருத்தலும் ஆகிய எட்டாகும்.
669. எட்டாகியசித்தி ஓரெட்டு யோகத்தால்
கிட்டாப் பிராணனே செய்தால் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்துஅனல் பானு
விட்டான் மதியுண்ண வும்வரும் மேலதே.
பொருள் : அட்டமா சித்திகளும் அட்டாங்க யோகத்தால், அடக்கி ஆளமுடியாத பிராண வாயுவை அடக்கி யாண்டால் அடையப் பெறும். மூலாதாரத்திலுள்ள குண்டலினியானது சுழுமுனை நாடி வழியாகச் சென்று அக்கினி மண்டலம் சூரிய மண்டலம் ஆகியவற்றைக் கடந்தால் மேலுள்ள சந்திரமண்டல அமுதம் புசிக்கக் கூடும்.
670. சித்திகள் எட்டன்றிச் சேர்எட்டு யோகத்தால்
புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும்
சித்திகள் எண்சித்தி தானாம் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தான்உள வாகுமே.
பொருள் : பயிலப் பெறுகின்ற அட்டாங்க யோகத்தால் முற்கூறப் பட்ட அட்டமா சித்திகள் அன்றி, ஞானங்களாக உள்ளவை எல்லாம் வெளிப்படும். எண்வகைச் சித்திகளும்  தானே யாகிய திரிபுரைச் சத்தி கருணையின் தரத்தால் சித்தியும் புத்தியும் உண்டாம்.
அணிமா (நுண்மை)
671. எட்டுஇவை தன்னோடு எழிற்பரம் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால்
இட்டமது உள்ளே இறுக்கல்பர காட்சி
எட்டு வரப்பும் இடந்தான்நின்று எட்டுமே.
பொருள் : இந்த எட்டுச் சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானமும் கைவரப் பெற்றவர்களே சித்தராவர். இவர்கள் சிவலோகத்தை அடைதலால் இவர்கள் இஷ்டப் பொருளான சிவத்தைக் கண்டு அழுந்தி யிருப்பார்கள். எட்டினை வரம் பாகவுடைய சித்திகள் இவர்களிடம் தாமே வந்தடையும். (இறுக்கல் - ஒடுங்குதல்)
672. மந்தரம் ஏறும் மதிபானுவை மாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்காமிய லோகம் சார்வாகும்
அந்த உலகம் அணிமாதி யாமே.
பொருள் : மலை என்கிற சிரசில் சந்திர சூரிய கனல்களை மாற்றி அடித்த மூளை போலச் சுழுமுனையை யாக்கி விந்து (சுக்கிலம்) நீக்கமின்றி இருக்க வல்லார்க்கு நரம்பின்றிய பிரணவதேகம் பெற்று விரும்பிய நல்ல உலகத்தை அடைவர். அவ்வுலகம் அணிமாதி சித்திகளை அளிக்கவல்லதாம். கந்து - அடித்த முளை.
673. முடிந்துஇட்டு வைத்து முயங்கில் ஓராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனும்
தணிந்த அப்பஞ்சினும் தான்நொய்ய தாகி
மெலிந்துஅங்கு இருந்திடும் வெல்லஒண் ணாதே.
பொருள் : விந்து நீக்கமின்றிச் சேமித்து வைத்து ஓர்யாண்டு யோக முயற்சியில் ஈடுபட்டால் நூல்களால் புகழ்ந்து கூறப்பட்ட அணிமா சித்த கைவசமாகும். கைவரப் பெற்ற சித்தனும் மெலிந்த நுட்பமான பஞ்சைக் காட்டிலும் நுண்மையாய் மெலிந்து இருப்பான். அவனை வெல்லமுடியாது. ஓர் ஆண்டு என்பது சூரிய வட்டமான சௌரமான வருடம் அன்று. வியாழவட்டமான பன்னிரண்டு ஆண்டு என்ற படி (இந்நிலை ஓராண்டில் கைகூடும் என்பாரும் உளர்.)
இலகிமா (மென்மை)
674. ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற ஐயாண்டின் மாலகு வாகுமே.
பொருள் : ஆக்கத்தை அளிக்கின்ற பராசத்தியுடன் மூலாதாரத்தினின்றும் மேலே தான் சொல்லுகின்ற எல்லாத் தத்துவங்களிலும் அச்சத்தியே ஆதாரமாய், செல்ல வேண்டிய காலங்கள் தன் வழிப்பட்டு நிற்பின் செல்லுகின்ற ஐந்து ஆண்டுகளில் மேன்மையான இலகிமா சித்திக்கும்.
675. மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தான்ஒளி யாகித் தழைத்தங்கு இருந்திடும்
பால்ஒளி யாகிப் பரந்துஎங்கும் நின்றது
மேல்ஒளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
பொருள் : இலகிமா சித்தி பெற்று அழகிய தலைவனைத் தரிசித்த பிறகு தான் ஒளியாய் விளங்கி அந்தப் பரஞ்சோதியில் திளைத்திருப்பான். இவ் வண்ணம் பால் போன்ற ஒளிப்பொருளாய் எங்கும் பரந்து நின்ற ஆன்மா எல்லாவற்றுக்கும் மேலாகிய ஒளிப் பொருளான சிவபரம்பொருளைத் தரிசிக்கும். (மாலகுவாகிய - பெருமையுள்ள மென்மை வடிவினனான். மயானை - முழுமுதற் சிவனை.)
மகிமா (பருமை)
676. மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாள்உடன்
தத்பொரு ளாகிய தத்துவம் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடும் ஓராண்டின்
மைப்பொருளாகும் மகிமாவ தாகுமே.
பொருள் : உண்மை ஞானத்தை உணர்த்தியருளிய அருட்சத்தியுடன் தத் என்று குறிக்கப்படும் சிவம் கூட, மறைந்த பொருளான மகிமாவானது ஒரு வருடத்தில் உள்ளங் கையிலுள்ள பொருள்போலக் கலந்திடும்.
677. ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவதும் இல்லையாம்
மேல்நின்ற காலம் வெளியுற நின்றபின்
தான்நின்ற காலங்கள் தன்வழி யாகுமே.
பொருள் : இடை பிங்கலை என்னும் இரு நாடிகளைப் பொருந்தி அமையும் சுழுமுனை சிரசின் மேலே சென்று விளங்கும் போதுள்ள ஒளியைக் கண்டபின், அழிகின்ற ஆயுட்காலங்கள் அழிவதும் இல்லையாம். இனிவரக் கூடிய ஆயுட்காலத்திற்கு வெளியே தான் நின்றபின் எஞ்சியுள்ள காலதத்துவம் அனைத்தும் தன் வழியாம்.
678. தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்
தன்வழி யாகத் தழைத்திடு வையகம்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்
தன் வழி தன்னருள் ஆகிநின் றானே.
பொருள் : மகிமாசித்தி பெற்றவன் வாயிலாக ஞானம் செழித்தோங்கும். அவன் வாயிலாக உலகம் துயர் தீர்ந்து செழுமை பெறும். அங்ஙனம் தன் வாயிலாகச் செழுமையுற்ற பொருள் எல்லாம் தன் வசப்பட்டு நிற்கத் தான் சிவனருள் வசப்பட்டு நின்றான்.
பிராத்தி (விரும்பியது எய்தல்)
679. நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்தியது ஆகுமே.
பொருள் : பராசத்தியுடன் தூலமாய்க் காணப்பட்ட உலகப்பொருள்கள் எல்லாம் சூக்குமமாய் ஒடுங்கி நின்றன. அத்தகைய சூக்குமமான ஒளிப் பொருள்களைக் கண்டு ஓராண்டு தாரணை செய்யின் தாரணையில் வெளிப்பட்ட சித்தியே வேண்டுவன அடையச் செய்யும். (பூதப்படை உலகப் பொருட்கள்.)
கரிமா (விண் தன்மை)
680. ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின் பூவில் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவதும் இல்லையே
பொருள் : அத்தகைய மின்னொளியைக் கண்ட பின்னர் விரிந்த சகஸ்ரதளக் கமலத்தில் உலகப் பொருளின் விரிவைக் காணலாம். அப்போது மேவுகின்ற கால தத்துவம் புறம்பாக நின்றது. கழிகின்ற காலங்கள் அதனால் கழியமாட்டா.
681. போவது ஒன்று இல்லை வருவது தானில்லை
சாவது ஒன்று இல்லை தழைப்பது தானில்லை
தாமதம் இல்லை தமரகத் தின்ஒளி
யாவதும் இல்லை அறிந்துகொள் வார்க்கே.
பொருள் : மின்னொளி கண்டவர் பிற இடத்துக்குச் செல்ல வேண்டியதில்லை போவது இன்மையால் வருவதும் இல்லை. இறப்பதும் இல்லை. இறப்பு இன்மையால் பிறப்பும் இல்லையாகும். தாமதம் ஆதிமுக்குணங்கள் இல்லை. உண்மை உணர்வார்க்குப் பிரமரந்திரத்தின் உள் தொளையாகிய சுழுமுனையில் விளங்கும் பலவேறுபட்ட ஒளிகளும் இல்லையாகும்.
682. அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையவை எல்லாம்
குவிந்தவை ஓராண்டு கூட இருக்கில்
விரிந்த பரகாயம் மேவலும் ஆமே.
பொருள் : அத்தகைய பராசக்தியுடன் ஆன்மா பொருந்தியிருந்தால் தத்துவக் கூட்டங்களை அமைக்கும் பூதப்படைகள் எல்லாம் நீங்கிவிடும். மனம் குவிந்து  பராசக்தியுடன் ஓராண்டு இருந்தால் விரிந்த பரகாயப் பிரவேசம் செய்தலுமாம் (பிரகாயப்பிரவேசம் - கூவிட்டுக் கூடுபாய்தல்)
பிராகாமியம் (நிறைவுண்மை)
683. ஆன விளக்கொளி யாவது அறிகிலர்
மூல விளக்கொள் முன்னே உடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடுஎளி தாநின்றே.
பொருள் : ஆன்மாவிடம் தன்னை விளக்கிக் காட்டும் ஒளி அடைந்திருத்தலை அறியமாட்டார். அவர்கள் மூலாதாரத்தில் மூலக்கனலை உடையவர்கள் அதனை எங்கும் விளங்கும் ஒலி ஒளியாகத் தரிசித்திருப்பார்க்கு சிரசுக்கு மேல் விளங்கும் சிவ ஒளியும் அதனால் வீடும் எளிதாம் (பிராகாமியம் - வியாபகம்பெறு விருப்பம்.)
ஈசத்துவம் (ஆட்சியன் ஆதல்)
684. நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூடி இருந்திடில்
பண்டைய ஈசன் தத்துவம் ஆகுமே.
பொருள் : சீவர்களிடம் என்றும் நிலை பெற்றுள்ள சிவ சத்தியுடன் சூக்கும, திருஷ்டிக்குப் புலப்படும் ஒளி அணுக்கள் எல்லாவற்றையும் சிரசுக்கு மேலுள்ள விந்து மண்டலத்தில் வெவ்வேறு வகை ஒளி பாய்வதை ஓராண்டு ஆட்சி செய்வாய். ஆனால் பழமையான உடலில் பொருந்திய சதாசிவ  தத்துவம் அமையும்.
685. ஆகின்ற சந்திரன் தன்னொளி யாய்அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவன் ஆமே.
பொருள் : வளர்கின்ற சந்திரனது ஒளியை நெற்றி நடுவில் விளங்கப் பெறுபவன் அச்சந்திரனைப் போன்று தண்ணளியுடையவன் ஆவான். வளர்கின்ற சந்திரகலை பூரணத்துவம் பெற்றிடில் சந்திரகலை விளங்கப் பெற்ற சீவன் சதாசிவ நிலை பெறுவான்.
686. தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன்என்னும் தன்மையன் ஆமே.
பொருள் : ஈசத்துவம் பெற்றவர் படைத்தல் தொழிலைச் செய்ய வல்லவராவர். அவரே காத்தலைச் செய்பவராவர். அவரே அழித்தலையும் செய்ய வல்லவர். அவரே தமக்குத் தாமே ஒப்பாகும் தன்மை உடையவர் ஆவர். சதாசிவ ரூபம் பெற்றவர் முத்தொழிலையும் செய்யும் தன்மையைப் பெறுவர்.
687. தண்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய  தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.
பொருள் : குளிர்ந்த கிரணங்களுடன் கூடிய சந்திரகலையில் விளங்கும் ஒளியில் பலவாறாகக் காணும் பஞ்சபூத அணுக்களை ஓராண்டுக் காலம் வெவ்வேறாகக் காணாமல் பால் வண்ணனது நீல ஒளியைக் கண்டால் மெய்ப்பொருளான மேன்மையான ஆன்மா சிரசில் மேல் ஒளியாக விளங்கும்.
வசித்துவம்
688. மெய்ப்பொரு ளாக விளைந்தது ஏதுஎனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப்பொரு ளாகக் கலந்தஉயிர்க்கு எல்லாம்
தற்பொரு ளாகிய தன்மையன் ஆகுமே.
பொருள் : உண்மையைப் பொருளாகத் தாரணை முதலிய சம்மியத்தால் உண்டாகியது எது என்றால் நல்ல பொருள் என்று பாராட்டப் பெறும் வசீகரிக்கும் தன்மையாம். தன் விருப்பப்படி நடக்கச் செய்யும் உயிர் வருக்கத்துக் கெல்லாம் சிவமேயான தன்மையனாகச் சாதகன் ஆவான். (தற்பொருள் - சிவன்.)
689. தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயி
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.
பொருள் : சிவமாந் தன்மை பெற்றுச் சிறப்புற்ற சித்தன் மகா சூக்குமமாகிய தனது ஆன்மாவை அறியின், பொன்னொளியுடன் கூடிய ஒளி உடலைப் பெற்றுப் புலன்களின் சேட்டையினின்றும் விடுபட உலகுக்கு நன்மையைச் செய்கின்ற நல்ல சதாசிவ நாயகியைக் காண்பான். (நன்மை-திருவடிப்பேறு நற்கொடி - திருவருள்)
690. நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாதும் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வரும்
கற்கொடி யாகிய காமுக னாமே.
பொருள் : நல்ல கொடிபோன்ற நன்மையைச் செய்யும் சதாசிவநாயகி தன்னுடன் அக்கொடி போன்ற சத்தியைத் தன்னிடத்தில் நிலை பெற்றுள்ளதாக ஓராண்டு தியானிப்பவன் பொன்னொளியாகிய புவனங்களில் நினைத்த மாத்திரத்தில் சென்று வருகின்ற செவ்வொளி போன்ற காமேசுரனது இயல்பினைப் பெறுவான் கல்-மாணிக்கம்.
691. காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனமது ஆயிடும்
மாமரு உன்னிடை மெய்த்திடு மான்அனாய்
நாமரு வும்ஒளி நாயகம் ஆனதே.
பொருள் : எல்லாவற்றையும் வசீகரிக்கும் தன்மை வந்த பின்னர் சகஸ்ர தளத்தில் வாசனையாகத் தங்கியுள்ள தன்மாத்திரை உருவமான ஒளிகள் அதனதன் தன்மைக்கேற்பப் புவனங்களாய் விரிந்து நிற்கும் மகத்துப் போன்ற பெருமையுடையாய் ! அருட் சத்தியானது வசித்துவம் கைவரப் பெற்றவரிடம் விளங்கும் சத்தியோடு பேதமின்றி வாக்கு ரூபமான ஒளித் தன்மை பெற்று நாயகன் என ஆகும்.
692. நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங்கு இருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.
பொருள் : எல்லாவற்றுக்கும் தலைமையான சிவச் சோதியைத் தரிசித்த பின்னர், அவ் வொளியே தாய்வீடாகக் கொண்டு மகிழ்ச்சியுடன் அங்கு வீற்றிருப்பான். எல்லாப் புவனங்களிலும் சென்று கண்டபின் உடலுள் பேய்கள் போன்ற காமக் குரோதிகள் வாழும் ஏனைய புவனங்களுக்காகச் சித்தி பெற்றவன் சொல்ல விரும்பமாட்டான். (ஏகாரம் - எதிர்மறை காணுமே-காணமாட்டான்.)
693. பேரொளி யாகிய பெரிய அவ்எட்டையும்
பாரொளி யாகப் பகைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.
பொருள் : பேரொளிப் பிழம்பான இறைவனை உலக ஒளியைக் காணுதல் போல நடுக்கமின்றிக் கண்டவன் ஆன்ம ஒளியுடன் பூமண்டலம் முழுவதும் விசுவ வியாபியாய் ஒரே ஒளிமயமான பிராண ஒளியைக் காணுவான். (எட்டு-அஷ்ட மூர்த்த வடிவமான இறைவன்.)
694. காலோடு உயிரும் கலக்கும் வகைசொல்லின்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞாற்று ஒருபத்து மூன்றையும்
காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே.
பொருள் : சுழுமுனை நாடியில் உயிர் எவ்வாறு கலந்துள்ளது என்பதைச் சொல்லின் சுழுமுனையில் மின்னொளி போன்று விளங்கும் பராசத்தியின் ஒளியுடனாகும். சுழுமுனையில் தொடர்புள்ள ஐந்நூற்றுப் பதின்மூன்றையும் சுழுமுனையில் வேண்டி உயிர் கலந்திருக்கும் தன்மை இதுவாம். காலது 513-பிராணவாயு வியாபிக்கும் நாடிகளின் தொகை நாயகி-சத்தி.
695. ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடு ஐஞ்சுள
ஆறது ஆயிரம் ஆகும் அருவழி
ஆறது ஆயிரம் வளர்ப்பது இரண்டே
பொருள் : அமிர்தத்தைப் பெருக்குகின்ற சிரசினுள் நிரோதினி கலையுள்ளது அமுதத்தைப் பெருக்கி மாற்றத்தைச் செய்வதற்கு வழியாக ஆயிரத்து முன்னூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் உள்ளன. மேல் நிøயிலுள்ள சகஸ்ரதளத்துக்குச் செல்ல இது வழியாகவுள்ளது. இதனை வழியாகக் கொண்டு உயிரை வளர்ப்பது சிவ சத்தியாகிய இரண்டுமாம்.
696. இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண்டு எழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய்த்
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே.
பொருள் : சிவதத்துவத்தில் சிறந்து விளங்கும் மனோன்மணியாகிய சதாசிவ நாயகி இடை பிங்கலையாகிய இருநாடிகளின் மேல் சிரசுக்குச் சென்று விளங்குவøத் சொல்லின் இரண்டு நாடிகளும் சகஸ்ரதளத்தை அடைந்து விரியுமுன் ஐம்பத்தொரு அட்சரங்களால் உணர்த்தப் பெறும் ஆறு ஆதாரங்களைக் கடந்ததாய்த் திரண்டுள்ளது. அந்நிலையில் சாதகனின் காலத்தைக் கடக்கச் செய்வதும் ஐம்முகங்களோடு கூடிய சதாசிவனின் நாயகியாகும்.
697. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது ஆயுத மாவது
அஞ்சது அன்றி இரண்டது ஆயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.
பொருள் : பத்துத் திசைகளும் பத்து முகங்களையுடைய சதாசிவ நாயகிக்கு, பிராணன் முதலிய பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாம். ஐம்முகச் சத்திக்கு அவையன்றிக் கவிழ்ந்த சகஸ்ரதளம் நிமிர்ந்த சகஸ்ரதளமாகிய இரண்டும் ஆயுதங்களாகும். அச்சத்தி உருவமற்ற நிலையில் தசவாயுக்களையும் திக்குகளையும் கடந்த வெளியாகவும் விளங்கும்.
698. ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் உன்னே.
பொருள் : அகண்ட வியாபகமான ஏக பராசக்தி சுழுமுனை நாடியில் பொருந்தி ஏறும் வகை சொல்லின் கவிழ்ந்த சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ர தளமாக மாற்றியமைத்து, காலத்தைக் கடக்கச் செய்ய உதவும் என்பதை நினைவு கூர்வாயாக.
699. முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுவாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே.
பொருள் : சிரசின் முன்பக்கத்தில் விளங்கும் ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் அமர்ந்துள்ள பரையுடன் முன்னோக்கிப் பாயும் வாயு முடியும் வகையைச் சொல்லப் போனால் முன்னாக விளங்கிய ஐம்பத்தொரு அட்சரங்களையுடைய ஆறு ஆதாரங்களை இயக்கிக் கொண்டு இருந்த ஐம்முகச்சத்தி பராசத்தியாக மாறினபோது முன்னர் விளங்கிய வாயு அடங்கும் வகையாகும்.
700. ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரும் வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐந்நூற்று முப்பதொடு ஒன்பது
மாய்வரும் வாயு வனப்புள் இருந்தது.
பொருள் : ஆராய்ச்சியினால் அடையமுடியாத ஒப்பற்ற பரையுடன் ஆராய்வதற்குரிய வாயுவின் அளவை அறிந்து சொல்லப் போனால் ஆகிவருகின்ற வாயு ஒரு நாளைக்கு ஐந்நூற்று முப்பத்தொன்பதாகக் குறைந்து வளமான பராசத்தியினிடம் இலயமடையும் சுவாச இயக்க காலத்தை நீடித்தால் ஆயுள் பெருக்கம் உண்டாகிறது என்கிறார்.
701. இருநிதி யாகிய எந்தை இடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.
பொருள் : பெருஞ் செல்வமாகிய ஒளிமண்டலம் தாண்டி விளங்கும் சிவனிடத்து, செல்வமாகவுள்ள மூச்சுக் காற்று இயங்கும் தன்மையில் இருநூற்று முப்பத்தெட்டாகக் குறைந்து அது பிரணவத்தில் நடக்கும். நாதத்தை முதல் ஒலி வடிவம் என்றும் விந்துவை ஒலி முதல் எனவும் கூறுவர்.
702. எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற்று இருபத்து ஒன்பா னதுநாலாய்
எழுந்துடன் அங்கி இருந்தது இவ்வாறே.
பொருள் : மூலாதாரத்திலிருந்து எழுகின்ற சோதியுள் விளங்கும் பராசத்தியினிடம் சுழுமுனை வழிபாய்கின்ற மூச்சுக் காற்றின் இடத்தைச் சொன்னால் எழுநூற்று இருபத்தொன்பது நாடிகளிலும் கலந்துள்ளது. நான்கு இதழ்களையுடைய மூலாதாரத்திலுள்ள அக்கினியே இவ்வாறு சோதியாய் வெளிப்படுகிறது. (நாலாய் - பலவாறாய்)
703. ஆறது கால்கொண்டு இரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண்டு இரட்டி இறக்கிட
எட்டது கால்கொண்டு இடவகை ஒத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.
பொருள் : ஆறாவது கலையாகிய நிரோதினி சக்தியை நெற்றியின் மேற்பாகத்தில் தியானித்தால் புகைபோன்ற நிறம் விளையத் தொடங்கும். ஏழாவது கலையாகிய நாதகலை ஒளியை வியக்தமாகத் தெரிவித்துச் சந்திரகலையைப் பெருக்கிச் சாதகனை இருமடங்கு ஆனந்தத்தில் அழுந்தும்படி செய்து எட்டாவது இடமாகிய நாதாந்தத்தில் மனம் எண்ணுவதை விட்டு உணர்தல் என்ற நிலையில் ஒன்றிய போது ஒன்பதாவது நிலையாகிய சத்தி கலையில் உடலை இயக்கி வந்த பிராணவாயு அடங்கியது.
704. சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானும் தலைப்படும் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாம் சகமுகத்து
உந்தி சமாதி யுடையொளி யோகியே.
பொருள் : சந்திரன் சூரியன் ஆன்மாவாகிய மூன்றும் விளங்கும் நிமிர்ந்த சகஸ்ரதளத்தில், சந்திரகலை விளங்கும் இயல்பினை உலகில் உயிருடன் வாழும் போதே சிவஒளியைச் சிவஒளியுடன் பொருந்திச் சமாதிநிலை பெற்ற யோகியே சுழுமுனை உச்சியிலே உணர்ந்து உணர்ந்து சிமாந்தன்மை பெறுவான். (தற்பரன் - ஆன்மா, தாணு - துண்போன்று விளங்கும் சிவன்.)
705. அணங்குஅற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்வி மாஞானம் மிகுத்தல்
சிணுங்குற்ற வாயர் சித்திதூரம் கேட்டல்
நுணங்கல் திரோதல்கால் வேகத்து நுந்தலே.
பொருள் : ஆசை அழிதல், பந்து மித்திரர்களிடமிருந்து விலகியிருந்தல், பணிவைத்தரும் சிவ ஞானம் பதி ஞானம் வலுத்தல் சுருங்குதலை யுடைய வாயினராதல். அஃதாவது பேச்சுக் குறைதல். அனுக்கிரக நிக்கிரக சக்திபெறுதல். தூரத்தில் நடப்பவை கேட்டல், நுட்பமாய் மறைந்திருத்தல், காற்றை மேலே செலுத்துதல். (பிராண செயம் பெறுதல்) (சிணுங்குற்ற வாயர் - சித்தர்.)
706. மரணம் சரைவிடல் வண்பர காயம்
இரணம் சேர்பூமி இறந்தோர்க்கு அளித்தல்
அரணம் திருவுரு ஆதல்மூ ஏழாம்
கரன்உரு கேள்வி கணக்கறிந் தோனே.
பொருள் : இறப்பையும் மூப்பையும் கடத்தல், வளப்பமான பரகாயப் பிரவேசம் செய்யும் ஆற்றலைப் பெறுதல், பொன்னுலகத்தை இறந்தவர்க்கு அளிக்கும் வல்லமை பெறுதல், பாதுகாப்பான பிரணவதேகம் பெறுதல், மூண்டு எழுகின்ற சிவசூரியனைப் பற்றிய கேள்வி ஞானம் பெறுதல் (சூரியன் என்பது, சித்தர் வழக்கில் அறிவினைக் குறிக்கும்) இத்துணை தன்மைகளையும் யோகிய அறிந்தோன் ஆவான். யோகியர் பேறு கூறியவாறு. (சிறை - சரீரம், அரணன் - பரமசிவன்.)
707. ஓதம் ஒலிக்கும் உலகை வலம் வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகர்அறி வாறே.
பொருள் : கடல்சூழ்ந்த உலகத்தைச் சுற்ற வலமாக வந்து, கால் வருந்த தல யாத்திரை செய்தும் அடையும் பயன் ஒன்றும் இல்லை. அன்போடு இறைவனைக் கண்டு இன்பம் பெறுபவர் தலைவன் எங்கும் உள்ளான் என்று உணர்ந்து வழிபட்டுப் பயன் எய்துவர். (நகர் - திருக்கோவில்.)
708. மூல முதல்வேதா மால்அரன் முன்நிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாவித்த சத்தி பரைபரன் பாதமே.
பொருள் : மூலாதாரத்துக்கு மேல் சுவாதிட்டானத்தில் பிரமனும் மணிபூரகத்தில் திருமாலும் அநாகதத்தில் உருத்திரனும் விளங்க, அதற்கு மேல் நெற்றி முதல் சிரசுவரை வியாபகமுள்ள சிவாம்சமான சதாசிவனும், சதாசிவநிலைக்கு மேலுள்ள பரவிந்து பெருமை மிக்க பரநாதம் நாதந்தமும் கடந்து அருள்வழங்கும் சிவ சத்தியின் திருவடியாம்.
709. ஆதார யோகத்து அதிதே வொடும்சென்று
மீதான் தற்பரை மேவும் பரனொடு
மேதாதி ஈரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தம்மீ தானந்த யோகமே.
பொருள் : ஆதாரங்களுக்குரிய பிரமனாதி அதி தேவதையோரும் பொருந்திச் சென்று மேன்மையான பரை பொருந்தும் பரனோடு மேதை முதலாகப் பதினாறு கலைகளாகிய பிரசாத நெறியில் மேல்விளங்கும் ஒளியில், வாக்கும் மனமும் சிறந்து எண்ணமற்று நிற்கின்ற நிலையே ஆனந்த யோகமாம். (யோகம் - ஒடுக்கம்.)
710. மதியமும் ஞாயிறும் வரதுடன் கூடத்
துதிசெய் பவர்அவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.
பொருள் : இடைபிங்கலை இணைந்துள்ள சுழுமுனை உச்சியில் சிவனைத் துதித்து வணங்குபவர் பழமையிலே தேவரானவர். பிராசாத நெறியில் முறைப்படி உண்மைப் பொருளை நாடிச் செல்லும் அவ் வடியார்களுக்கு நிலையான வீடு பேற்றை அளிக்கும் பரமனும் உடனின்று அருளுவான்.
711. கட்டவல் லார்கள் கரந்தெங்கும் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டறி வார்க்கு நமனில்லை தானே.
பொருள் : பிராணனைக் கட்ட வல்லவர்கள் எங்கும் மறைந்து நின்று எவ்விடத்திலும் விளங்க வல்லவர்கள். தேன் மிகுந்த தாமரையாகிய சுவாதிட்டானம் மூலாதாரத்தில் சேர்க்கையை உண்டு பண்ணிப் பிரமரந்திரத்தில் மோதச் செய்து பொறியறிவு நீங்கிச் சுழு முனையில் நின்று அங்கு நடம்புரியும் சிவனை அறிந்திருப்பார்க்கு எமனில்லை. (பொட்டு-உச்சிக்குழி)
12. கலை நிலை
(கலைநிலை - கலை நிற்கும் நிலை. சந்திரகலை, சூரியகலை, அக்கினிகலை ஆகியவை உடம்பில் விளங்கும் முறை கூறப்பெறும் குருவருளால் சந்திர சூரிய கலைகளைச் சேர்த்து அக்கினிக்கலையில் சிவன் பொருந்தி நிற்கும் நிலையும் இப்பகுதியில் காண்க. சந்திரகலை அகரம் முதல் உன்மனிவரை பதினாறாகும். அக்கினி கலையாகிய சுழுமுனையில் சீவன் பொருந்தி யிருக்கும் போது பிராணன் இலயமடைந்து ஒளி மண்டலம் விளங்கும்.)
712. காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் விழிசெய்த கண்ணுற நோக்கிடில்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலும் ஆமே.
பொருள் : காமத்துக்கே காரணமாய்ச் சுவாதிட்டானத்திலிருந்து வழி செய்து கொண்டிருந்த நெற்றிக் கண்ணையுடைய பெருமானை அன்பு செலுத்திக் கண்கள் இரண்டையும் சேர்த்து மேலே பார்த்தால் அன்பின்வழி கங்கை போன்ற ஒளிப்பிரவாகம் பெருகும். அவ்வாறு அன்பு செய்வதால் உடம்பில் பொருந்திய உயிரை அழியாது காக்கலுமாகும்.
இடைகலை பிங்கலை நாடிகளைக் கங்கை யென்றும் யமுனை யென்றும், சுழுமுனையை அந்தர் வாகினியான சரஸ்வதி என்றும் யோக நூல்கள் கூறும்.
713. காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலைபதி னாறையும்
காக்கலும் ஆகும் கலந்தநல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்துற நில்லே.
பொருள் : மனம், புத்தி, சித்தம், அகங்காரமாகிய அந்தக்கரணங்கள் நான்கையும் பாச வழிச்சொல்லாமல், பதிவழிச்செலுத்திக் காத்தலுமாகும். அந்தக் கரணங்கள் நன்மை செய்வதால் சந்திரகலை பதினாறும் வியாபகம் பெறுமாறு காக்கலாம். பாச இயக்கத்துக்குக் காரணமான மனம் சிவ ஒளியைப் பற்றி நின்றபோது பிராணனும் சிவ ஒளியில் சென்று லயமடையும், ஆகவே உன்னுடைய கருத்தை அகண்டமான ஆகாயத்தில் பதித்து நிற்பாயாக.
714. நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
அலைஅற வாகும் வழியிது வாமே.
பொருள் : சுழுமுனையில் செல்லும் வாயு நிலைபெற நின்றது, அது காற்றில்லாத இடத்திலுள்ள விளக்கொளி போலும் அசையாமல் மலைபோலும் நின்றது. சந்திரகலை பதினாறில் சிவசத்தி பொருந்தியுள்ளதை அறியில் மனம் அலையாது நிற்கும் வழி இதுவேயாகும். மலைவு அறவாகும் என்பதும் பாடம். (மலைவு - மயக்கம்)
715. புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றில் ஏறியே வீற்றிருந் தானே.
பொருள் : எங்கும் நிறைந்து நிற்கும் பூத நாயகனை, சிறு வழிகளாகிய நாடிகளில் மாறிச் செல்லாமல் பிராணன் நடு நாடியில் ஒன்றி நிற்க வாய்த்தபோது, கிரணங்களாகிய சடையோடு கூடிய அச் சங்கரநாதன் விந்து மண்டலமாகிய இடபத்தில் ஏறி அமர்ந்திருந்தான். (சடை - திருவாதிரைநாள்; தாங்கும் இடமுமாம்)
716. இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடும் சாதகன் ஆமே.
பொருள் : சமாதியில் பொருந்தியிருக்கும் காலத்தைச் சாதகர் உணரார். பெருக இருக்கின்ற காலப் பெருமையை எதிர்நோக்கி சுழுமுனையில் ஒன்று பட்டிருக்கின்ற பிராணன் ஒளி பொருந்திய பரவொளியாகிய சகஸ்ரதளத்தைப் பொருந்த செருக்கின்றி இருப்பவன் சாதகனாம்.
717. சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.
பொருள் : இவ் வண்ணம் சாதகமான அத் தன்மையை ஆராய்ந்து பெரிய தவமான வழிபாட்டை நீங்கள் செய்யுங்கள். அவ்வாறு செய்து பிராணனைக் கபாலத்திலுள்ள ஆயிரஇதழ்த் தாமரையின் உள்ளாகப் புகச் செலுத்தினால் இரசவாதம் செய்வோர் உபயோகிக்கும் வாத குளிகை போன்று உடலில் விளைந்துள்ள குற்றங்களை அகற்றி விடும். செம்புபொன்னாதல் (வேதகம்), போல ஆவியும் சிவனாக விளங்கும்.
718. கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉன் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.
பொருள் : அங்ஙனம் விளைந்து கிடந்த பயன் இம்மை இன்பம், மறுமை இன்பம், வீடாகிய மூன்றாம். உள்நாடியான சுழுமுனையை நோக்கிச் சென்ற சீவனைச் சகஸ்ர தளத்தில் பொருந்திய அச்சோதி மூலமாகிய சிவத்துடன் தொடர்ந்து அடங்கியதாம்.
719. தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்துஎம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகுஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலயம் ஆகுமே.
பொருள் : இவ்வாறு தனக்கு ஓர் ஆதாரமின்றித் தான் பிறவற்றுக்கு ஆதாரமாயுள்ள பராசக்தி இவ்வுடலில் வழி செய்து கொண்டு எமக்குள்ளாகவே இருப்பாள். தேவர் உலகையும் பெற்ற தாயாகிய பராசக்தி விரும்பி இடங் கொள்ள இன்பத்தை உண்டாக்கும் ஒளியில் அமிழ்ந்து திளைத்த சிவயோகியின் உடம்பு சிவாலயமாகும். சாதகனது உடம்பு சிவாலயமாகும்.
720. திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே.
பொருள் : விளங்கும் வண்ணம் நிறைந்து நிற்கும் பிராணன் ஒடுங்கும் முறையை யாரும் அறிய வில்லை. பிராணன் ஒடுங்கும் முறையை அறிந்தபின் வாயு இலயமடைந்த ஆகாய மண்டலத்தில் விளங்கலாம். பிராணவாயுவை அடக்கும் முறையினை அறிந்தபின் சிவபெருமான் அவ்வாயுவின் மேலதாய்த் திகழ்ந்து விளங்குவான்.
729. நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.
பொருள் : நூறு நாடிகளும் அறுபது தாத்துவிகங்களும் ஆறத்து வாவும் பிங்கலையைப் பற்றி இயங்கியும், அவை  இடைகலையைப் பற்றி இயங்கியும் வர அவை சாதனையால் தூய்மை பெற்று மாறி அமைய, சாதகர் இவற்றைக் கடந்து மேல் நிலைக்குச் செல்வர்.  (ஈற்றடிக்கு வரையறுக்கப்பட்ட நூறு ஆண்டினையும் மாறும்படி நீண்டநாள் எய்துவர் என்று பொருள் கொள்வாரும் உளர்)
730. சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியார் னத்திலே வாத்தியம் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சென்னோம் சதாநந்தி ஆணையே.
பொருள் : சந்திர கலையைச் சூரிய கலையில் பொருந்துமாறு சாதனை செய்தால் மத்தியானத்தில் பிரணவகோஷம் கேட்கலாம். இன்பத்தைத் தரும் சிவ நடனத்தைக்கண்டு களிக்கலாம். இறைவன் மேல் ஆணையிட்டு இதனைச் சொன்னோம். (மத்தியத்தானம் மத்தியானம் என்றாயிற்று.)
731. திறத்திறம் விந்துத் திகழும் அகாரம்
உறப்பெற வேநினைத்து ஓதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெற யோகிக்கு அறநெறி யாமே.
பொருள் : மிகத் தூய்மையான ஒளியுடன் கூடிய அகாரம் பொருந்தும்படி நினைந்து சாரத்தை ஓதுங்கள். அவ்வாறு அம்சம் என்று மனனம் செய்வதே மந்திரமாகும். அவ்வாறு முழுமையாக எண்ணிப் பெறும் நாதமே யோகிக்கு வழிபாட்டுக்குரிய மூர்த்தியாகும். (மறித்தல் - ஸ்மரித்தல் அல்லது மனனம் செய்தல். இதுவே அம்சவித்தை என்றும் அசபை என்று பெயர் பெறும்.)
732. உந்திச் சுழியின் உடனே பிராணனைச்
சிந்தித்து எழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித்து எழுப்பச் சிவன்அவன் ஆமே.
பொருள் : உந்திக் கமலத்திலுள்ள பிராணனை (சூரியனை) உடனே, அம்சம் என்ற மந்திரப் பொருளான சிவத்தை நினைத்து எழுப்பி முன்புறம் புருவ நடுவில் தியானித்து நிறுத்தி, பின் மேலிருந்து கீழே நினைந்து அபானனை எழுப்பச் சிவனாவன். (முகடு-உச்சித்தொளை என்பர் சிலர்.)
733. மாறா மலக்குதம் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீயே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசம் கொண்டது காணுமே.
பொருள் : நீங்காத மலம் பொருந்திய எருவாய்க்கு இரண்டு விரற்கடை மேலும், வாயிட்டுச் சொல்லமுடியாத பாலுணர்வைத் தரும் குறிக்கும் கீழேயும் உள்ள மூலாதாரத்தில் தியானம் செய்யுங்கள். உடம்பையே வழியாகக் கொண்டு சீவர்களை நடத்தும் சிவம் அங்குள்ளது. சம்பிரதாயத்தால் உணர்த்தப்படும் உபதேசத்தைப் பெற்று முன் கூறியவற்றைக் காணுங்கள்.
734. நீல நிறவடை நேரிழை யாளொடும்
சாலவும் புல்லிச் சதமென்று இருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே.
பொருள் : நீலவொளியில் விளங்குகின்ற சத்தியுடன் முழுவதும் பொருந்தி, அவளையே அடைக்கலம் என்று இருப்பார்க்கு உலகோர் காணும் வகையில் நரைதிரை மாறி இளமைத் தோற்றம் அமையும் இது சிவனது ஆணையாகும்.
735. அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.
பொருள் : கருவாய் செயலற்று இருந்தால் மனிதனும் எவ்வித இழப்பும் இல்லை. உடம்பு மெலிவால் சத்துவகுணம் மேலிட்டுப் பிராணனைச் செயிக்க முடியும். உணவு குறையின் மேல் நிற்றலுக்கு வழி பலவுண்டு யோகநெறி நிற்போர் நீலகண்டப் பெருமானாவர்.
736. பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்து அடுத்து ஏகிடல்
வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்
கண்டுஇச் சிக்கும் காயமும் ஆமே.
பொருள் : உடம்பில் பொருந்தியுள்ள மூலாதாரச் சக்கரத்திலுள்ள காம வாயுவைச் சிரசின்மேல் சகஸ்ரதளத்துக்கு அனுப்பும் பயிற்சியைச் செய்துவந்தால் வண்டுகள் விரும்பும் நறுமணமுள்ள பூக்களை அணிந்துள்ள பெண்கள் பார்த்து விரும்பும் அழகிய வடிவைப் பெறுவர்.
737. சுழலும் பெரும் கூற்றுத்  தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள்ள அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே.
பொருள் : காலத்தை உருண்டு ஓடச் செய்கின்ற எமனை முன்பு வெகுண்டு பிரகாசம் பொருந்திய புணர்ச்சியில் மூலாதாரத்திலுள்ள அதோமுகச் சக்கரத்தில் விளங்கும் சிவனது ஒலிக்கின்ற திருவடியைக் கண்டால் அப்பொழுதே இவ்வுலகிலும் மேல் உலகிலும் வாழலாம். நெற்றி நடுவில் காணப்படும் முக்கோணம் தேர் போல் காணப்படுதலால் இரதம் என்று குறிக்கப்பட்டதாகச் சிலர் பொருள் கொள்வர்.
738. நான்கொண்ட வன்னியும் நாலு கலைஏழும்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.
பொருள் : நான் தரிசித்த அக்கினி கலையாகிய சிவம் சந்திரன் சூரியன் அக்கினி தாரகையாகிய நான்கு கலைகளிலும், ஏழு ஆதாரங்களலும் தான் கண்ட பிராணனாய் உடல் முழுவதும் உடலில் வெளிப்பட்ட உணர்வே அமுதமாக, சீவன் இன்பம் பெற்று வளர்கின்ற முறையில் துணைபுரியும்.
739. ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீர்கொள் நெல்லில் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பலகோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே.
பொருள் : ஆகுஞ்சன முத்திரையில் வெளிப்படும் வேத சத்திரை நீ அன்போடு ஏற்றுக்கொண்டு வேளாண்மையில் நெல்லினை விதைப் பண்டமாகவும் உணவுப் பண்டமாகவும் சேமித்து வைப்பது போல் அளவுற்ற பயிற்சியால் இருளுக்கும் ஒளிக்கும் நடக்கும் போரில் இருள் கீழ்ப் படுத்தப்பட்டு ஒளிச் சேமிப்பு உண்டாய் அங்கே ஒடுங்குவாயாக. ஊழ் கொண்ட மந்திரம். அசாபமந்திரம். சனவேதசத்தி - திரோதாயி அவர்கள், ஆகும்+சனவே+சத்தி என்று பிரிப்பர்.
14. கால சக்கரம்
(காலம் சக்கரம் போல முடிவின்றி மாறி மாறி வருவதாகலின் கால சக்கரம் எனப்பட்டது. மக்களின் கால எல்லையும் அதனைக் கடக்கும் உபாயமும் இங்குக் கூறப்பெறும்.)
740. மதிவட்ட மாக வரைஐந்து நாடி
இதுவிட்டுஇங்கு ஈராது அமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே.
பொருள் : சந்திர மண்டலத்திலுள்ள வியாபினி முதலிய ஐந்து கலைகளின் இயல்பை அறிந்து, இவற்றை நீங்கிச் சிரசின் மேல் துவாதசாந்தப் பெருவெளியில் அமர்ந்தமையால் சிவ சத்தியின் சங்கற்பத்தால் அருளும் வகையும், அக்கால சத்தியின் ஆளுகையை விட்டுக் கடக்கும் நிலையையும் ஆராயலுற்றேன். (மாறும்+அது என்பதை மாறும்+மது எனப் பிரித்து, மது-அமுதம் என்று பொருள் கூறுவாரும் உளர்.)
741. உற்றறிவு ஐந்தும் உணர்ந்தறிவு ஆறுஏழும்
கற்றறிவு எட்டும் கலந்தறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றுஅழி யாது அழிகின்ற வாறே.
பொருள் : சத்தம் முதலாகிய ஐம்புலன்களைப் பொருந்தி அறியும் அறிவும், ஐவகைக் கருவிபற்றிய அறிவை வேறாக இருந்து அறியும் ஆறாவது அறிவும், பொருள்களின் நலன் தீங்குகளைப் பற்றிய ஆராச்சியுடைய ஏழாவதாகவுள்ள அறிவும், கல்வியினால் பெற்ற எட்டாதவராக உள்ள அறிவும், அவ் எட்டுடன் தம் அனுபவம் பற்றிய அறிவும் சேர்ந்த போது உள்ள ஒன்பதாவது அறிவும், ஒன்பது வகை அறிவுக்குக் காரணம் சிவசத்தி என்றறிந்து அதனைப் பிரியாத நிற்கும் பதிஞானமாகிய பத்தாவது அறிவுமாகிய பலவகையான அறிவன் தார தம்மியத்தை அறிந்து ஒழுகாது நிற்பதால் காலம் அறுதியிட்டுப் பட்டு மக்கள் அழிகின்றனர்.
742. அழிகின்ற ஆண்டுஅவை ஐ அஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்பது ஆகும்
கழிகின்ற காலறு பத்திரண்டு என்பது
எழுகின்ற ஈர்ஐம்பது எண்ணற்று இருந்தே.
பொருள் : மக்கள் அழிகின்ற காலம் இருபத்தைந்து ஆண்டு முதல் இருபத்தெட்டு ஆண்டுவரை ஓர்எல்லையும், சொல்லப்படுகின்ற முப்பது முதல் முப்பத்துமூன்றுவரை ஓர் எல்லையும் ஆகும். பின் செல்கின்ற காலம் அறுபது முதல் அறுபத்திரண்டு வரை ஓர் எல்லை என்றபடி. இனி நூறாண்டுக்கு ஓர் எல்லையும் அதற்கு மேல் வருவனவற்றுக்கு எல்லையும் இல்லையாம். மக்கள் ஆயுளில் நான்கு கண்டங்கள் உள்ளன.
743. திருந்து தினம் தினத்தி னொடு நின்று
இருந்தறி நாளொன்று இரண்டுஎட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்குஅறிந்து ஓங்கி
வருந்துதல் அன்றி மனைபுக லாமே.
பொருள் : திருந்திய நாளாகிய பிறந்த நாளும், அதனோடு பொருந்தி நிற்கின்ற ஜென்ம நட்சத்திரம் கூடிய நாள் ஒன்றும், பின் ஜென்ம நட்சத்திர தினத்தோடு பதினாறு நாள்கள் கூட்டப் பதினேழாம் நாளும், ஆறு நாள்கள் கூட்ட ஏழாம் நாளும் ஆகியவை தவிர, பொருந்திய நாள்களை ஆராய்ந்து அறிந்து வருத்தமின்றி யோகப் பயிற்சி தொடங்குவதற்குரிய நாளாகும்.
744. மனைபுகு வீர்உம் அகத்திடை நாடி
எனஇரு பத்தஞ்சும் ஈராறு அதனால்
தனைஅறிந்து ஏறட்டுத் தற்குறி யாறு
வினை அறி யாறு விளங்கிய நாலே.
பொருள் : உம்முடைய உள்ளத்தின்கண் விரும்பி ஞானயோகம் செய்யப் புகுவீர் ! இருபத்தைந்து தத்துவங்களும் பன்னிரு இராசியில் செல்லும் சூரியனாகிய அறிவால் தன் உண்மையை அறிந்து பக்குவப்பட்டு, சிவன் விளங்கும் ஆறு ஆதாரங்கள் கிரியை செய்யும் வழிகளென அறிந்து அவற்றைக் கடந்தபோது சிவம் சத்தி நாதம் விந்துவாகிய நான்கே விளங்குமாம்.
745. நாலும் கடந்தது நால்வரும் நால்ஐஞ்சு
பாலம் கடந்தது பத்துப் பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்தண்டு மூவிரண்டு
ஆலம் கடந்ததொன்று ஆர்அறி வாரே.
பொருள் : உருவங்கள் நான்கையும் கடந்து அருவுருவம் அருவம் ஆகிய ஒன்பது வடிவங்களாக விளங்கி, நெற்றியைக் கடந்து இருபத்தைந்து ஆன்ம தத்துவங்களால் விளங்கும் குறியைக் கடந்ததாய், அவற்றில் பொருந்தும் குண கஞ்சுகமாய், நச்சுத் தன்மையுடைய வினையை ஈட்டுகின்ற ஆறு ஆதாரங்களைத்தாண்டிய ஆன்மாவாகிய சூரியனை யாரே அறிய வல்லார்.
746. ஆறும் இருபதுக்கு ஐ ஐஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறுஇவை
கூறும் மதிஒன் றினுக்குஇரு பத்தேழு
வேறு பதியங்கள் நாள்விதித் தானே.
பொருள் : ஆறு ஆதாரங்களில் நாற்பத்தெட்டு இலக்கங்கள் அமைந்த பதுமங்களை அறியுங்கள் இரண்டாகிய சூரியன் இருபத்தாறால் அமைவதாக உள்ளது என்று கூறும் அகரமாகிய சந்திர வட்டம் இருபத்தேழாகும். இனிவேறு வகையாகவும் நாட்கணக்கை விதித்துள்ளான்.
747. விதித்த இருபத்தெட் டொடுமூன்று அறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டுப் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண்டு ஒன்றில் முறையே.
பொருள் : முறையான இருபத்தெட்டு இலக்கத்தை அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று கண்டங்களில் காணுங்கள். அதில் முப்பத்திமூன்று தத்துவங்களையும் தொகுத்து அறியுங்கள். பத்துஎட்டு என்பவற்றைப் பூமிமுதலாகப் பொருந்தி அறிந்து கொள்ளுங்கள். அவை நான்கு மூன்று இரண்டு ஒன்றாகவுள்ள முறைமையை அறியுங்கள். (இவ்விருபாடல்களிலும் கூறிய பயிற்சி முறையை ஆசிரியர் வாய் கேட்டறிக.)
748. முறைமுறை ஆய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்றும் இல்லை
பறையறை யாது பணிந்து முடியே.
பொருள் : உபதேச முறைப்படி முயற்சி செய்யாவிடில், இறைவனோடு தொடர்பு கொள்ளுதல் யாவர்க்கும் அருமையாம். மறைவாகச் சொல்லியது உபதேசப்படி பெற வேண்டும். என்பதே யன்றி வேறொன்றில்லை. தம்பட்டம் அடிக்காமல் வணங்கிப் பெற்றுக் கொள்வாயாக ! பயிற்சி முறையைக் குருவினிடம் உபதேசக் கிரமத்தில் பெறவேண்டும். (பறையறையாது - வெளிப்படுத்தாமல்.)
749. முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சல் இருக்க விளக்குஎரி கொண்டு
அடிந்து அனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.
பொருள் : மறைத்து வைத்தமை அறியாமல் முயற்சி செய்யும் அறிவிலிகள் நிமிர்ந்த சகஸ்ரதளமாகிய அகலைக் கொண்டு ஒளியைப் பெற்று, இருளைக் கடிந்து சிந்தனையாகிய தைலத்தை விட்டுச் சுழுமுனையைத் தூண்டிப் பிரகாசப் படுத்தும் திறமையைக் குரு காட்டிய முறையில் பெறுவாராயின் அழிகின்ற உலகினில் அழியாது இருக்கலாம். (இடிஞ்சில்-அகல், சகஸ்ரதளம்)
750. நண்ணு சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.
பொருள் : பொருந்தும் சிறுவிரலை நாணாக, ஒரு கையிலுள்ள மூன்று விரல்களோடு மற்றொரு கையிலுள்ள மூன்று விரல்களையும் கண்களிலும் புருவத்திலும் நெறித்துப்பிடிக்கின் பிராணன் அபானன் ஆகியவை மார்பிடை ஒத்து நிற்கும். அதனால் சிரசில் அக்கினி சூரியன் சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களும் ஒத்தி நிலைபெறும். அங்குக் காணும் ஒளியில் சித்திரம் போல் அசையாது நினைந்து நில்லுங்கள்.
751. ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன்அறி வார்இல்லை
தீவிலை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.
பொருள் : அழகான உணர்வை அறிந்து கொள்ளுங்கள். பாவிகள் இதன் பயனை அறிகின்றார் இல்லை. தீவினைக்குக் காரணமான இவ்வுடலில் மூன்று மண்டலங்களும் சுழுமுனை நாடியில் பொருந்திச் சகஸ்ரதளத்தில் விளங்கி நிற்கும். (இத்தின்-இதன்)
752. தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே.
பொருள் : வீணாத் தண்டமாகிய முதுகு தண்டோடு பிணைந்து சென்று பிரமசந்திரத்தை அடைந்த யோகிக்குச் சோம சூரிய அக்கினியாகிய மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடற்கண் மகிழும்படியாகப் பொருந்தி யிருக்கும், இவ் உண்மையைக் கண்டவர்களே மெய்ஞ்ஞானிகள். இதனை அறியாதார் வினையால் விளைந்த உடம்பு அழியுமாறு மாறுபட்டுக் கெடுகின்றனர்.
753. பிணங்கி அழித்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.
பொருள் : நீ மாறுபட்டு உடம்பு அழியும் பயனைக் கேட்பாயாக ! சூரியனாகிய அறிவு குண்டலியின் வழி காம காரியம் செய்யின் வணங்குதற்குரிய வாழ்வு கெட்டு, நாய் மலம் உண்ணுவதில் விருப்பம் கொள்வது போலக் காமச் செயலில் விருப்பம் கொள்வர். தம் உடல் நாயுண்ணச் சுமந்து திரிந்த தன்மையராய் மாள்வர் என்பது வேறொருபொருள்.
754. சுழல்கின்ற வாறுஇன் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடும் தன்னுள் இலாமல்
கழல்கண்டு போம்வழி காணவீல் லாற்குக்
குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.
பொருள் : காம வயப்பட்டு அலைவதனால் சகஸ்ரதளத்துக்கு மேல் விளங்கும் திருவடியினை உணர முடியவில்லை. தன் ஒளியில், மேல் நில்லாமல் கீழேயுள்ள அக்கினி மண்டலத்தினால் அழிகின்றனர். திருவடியின் சிலம்பு ஓசையை அறிந்து அதன்வழியாகச் செல்பவனுக்கு சுழுமுனை நாடியில் கூத்தப் பெருமான் விளங்குவான்.
755. கூத்தன் குறியில் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத்  தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந்து உள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி அலர்ந்திரும் ஒன்றே.
பொருள் : நாத சம்மியம் செய்வதால் விளையும் பயன் பலவற்றையும் கண்டவர் மெய்ந்நூற் பொருளை உணர்ந்து அனுபவிப்பர். அவ்விதமாக உள்ளே தியானம் செய்திருப்பின் அவன் விருப்பமுடையவனாகிச் சாதகரும் தானும் வேறின்றி ஏகனாய் விளங்குவான்.
756. ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடு முப்பதும் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனும் ஆமே.
பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு இறைவனுடன் பிரிப்பின்றிப் பொருந்தி நிற்பவரது ஆயுள் வளர்வதோடு அழிவும் இல்லை என்பதைக் கேட்பாயாக ! உலக நலம் கொண்ட பூரக, ரேசக, கும்பகமாகியவற்றால் வாழ்நாள் குறையும் அவ்வாறு பூரக ரேசக கும்பகமற்று முப்பது நாழிகை சமாதி செய்பவனின் சகஸ்ரதளத்திலுள்ள பொன் ஒளியில் கூத்தன் விளங்குவான். மெய்-தத்துவம்.
757. கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்தங்கே
ஏததுவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடின்
சாத்திட நூறு தலைப்பெய்ய லாமே.
பொருள் : கூத்தை உடலில் நடத்தும் பிராணன் சூக்குமமாக அடங்கும் நிலையை அறிந்து, அவ்விடத்தில் அகர உகரத்தைப் பொருத்தி அட்டதள கமலத்தை விளங்கச் செய்வர். அட்ட தளகமலத்தில் விளங்கும் சிவனைக் கண்டு இன்புற்றிருப்பின் எடுத்த உடம்பில் சொல்லப் பெற்ற நூறாண்டுகாலம் வாழலாம்.
758. சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரம் கட்டுறக் காண்பார்கள்
சோத்துடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே.
பொருள் : சொல்லப் பெற்ற நூறாண்டு கூடியவர், இவ்வுடலையே ஆயிரம் ஆண்டுகட்குக் குலையாதவண்ணம் காப்பார்கள். இவ்வண்ணம் உடம்போடு கூடி ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் பலயுகம் அறிவால் முதிர்ந்து வாழலாம். (மூத்து-அறிவில் முதிர்ந்து ஊழி - யுகமுடிவு; உலகமுடிவு)
759. உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயர்வறக் காண்பார்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு
உகங்கோடி கண்டங்கு உயர்உறு வாரே.
பொருள் : அங்ஙனம் பல நாட்களைக் கண்டு தளர்ச்சி யின்றி இருந்து மனத்தால் முடிந்த பொருளாகிய சிவத்தை எண்ணி இடையறாது தியானிப்பவர் சிவம் என்றும் தான் என்றும் இரண்டாக அறியாமல் ஏகமாய் உணர்ந்து அங்கே உறைந்து அங்கே நீண்ட காலம் வாழ்ந்து உயர்வினை அடைவார். சிவங்கோடி - சிவமே முடிந்த இடமாக.
760. உயருறு வார்உல கத்தொடும் கூடிப்
பயனுறு வார்பலர் தாம்அறி யாமல்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.
பொருள் : இங்ஙனம் சிவமாந்தன்மை எய்தி உயர்ந்தவரே உலகத்தோடும் கூடிப் பயனை அடைந்தவர் ஆவர். பலர் இவ் உண்மையை அறிந்துகொள்ள மாட்டாமையால்  கன்மங்களை மேலும் மேலும் ஈட்டுவாராயினர். சிலர் இத்தகைய பேற்றை அடைய வேண்டு மென்ற விருப்பம் இல்லாமையால் மீன் போன்று எப்போதும் இமைக்காத கண்ணினையுடைய பராசத்தியை அறியாதவராயினர்.
761. காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமல் கழிக்கின்ற வாறே.
பொருள் : பரையொளியைப் பெறாதவர் பிறவிப்பயன் எய்தாமல் வீணேகழிவர். வெட்கம் இலாதவர் அனுபவமின்றிசசாத்திர நயங்களைப் பேசுவர். பரையொளியைப் பெறாதார் தத்துவப்  பொருள் அனைத்தும் காண முடியாமையால் சேவை செய்யாமல் விலகி விடுகின்றனர்.
762. கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.
பொருள் : பந்தப் படுத்தும் உலகப்பொருளைப் புறக் கண்ணால் காணாதவர் நீங்குகின்ற அப்பொருளின் தன்மையை அகக் கண்ணால் அறியமுடியும். நீங்குகின்ற பொருளின் உள்ளே மன ஒருமைப்பாட்டுடன் பார்த்தால் எப்பொரு ளிலும் இருந்து நீங்காத சிவனைத் தரிசிக்கவும் கூடும் (கழிகின்ற பொருள் சீவன்; கழியாத பொருள் சிவன்)
763. கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண்ணென்று இருக்கும் சிவகதியா நிற்கும்
நண்ணும் பதம்இது நாடவல் லார்கட்கே.
பொருள் : முக்கண்ணை யுடையவனும் பிறப்பில்லாதவனும் குருவானவனுமாகிய நந்தியெம் பெருமானை உயிரின் உள்ளாக ஆராய்ந்து காண்க. எண்ணப்பட்ட  பத்துத் திக்குகளில் இருப்பதோடு தனித்தும் உள்ளது புலப்படும். உறுதியைத் தரும் சிவகதி கிட்டு ஆராயவல்ல யோகியர்க்கு அடையும் பயன் இதுவேயாகும். (சிவன்நிலை - சிவனுக்கு அடிமையாம் நிலை. முக்கண்ணன்; அன்பு அறிவு ஆற்றல்கள் இயல்பாக விளங்கும் சிவன் நந்தி - சிவபெருமான்.)
764. நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி  யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கள் கூறலும் ஆமே.
பொருள் : இவ் வண்ணம் நந்தி யெம் பெருமானை அறிய வல்லார்க்கு ஆயுள் எல்லை அகன்றுவிடுவதால் அழிவில்லை. அறியல்ல வர் மக்களின் தலைவராவர். ஆராய்ச்சி செய்பவர் கண்ட உண்மை இதுவாகும். பெருமானைக் கூட வேண்டுமென்ற விருப்புடையோர்க்கு இவ்வுண்மையைச் சொல்லுதலும் ஆகும்.
765. கூறும் பொருளிது அகார உகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல்வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.
பொருள் : தகுதியுள்ள சீடருக்கு உணர்த்த வேண்டிய பொருள் அகார உகாரமாம் தெளியும் அகார உகாரங்கள் மனத்துள் நிலைபெற்றால், உணர்த்தும் மகாரம் சுழுமுனையாகிய குழலின் வழியே உயரச்சென்று நாத மாக அமைய மாயையின் காரியமான ஆறு ஆதாரங்களும் சேட்டையற்றுச் சிவமும் விளங்கித் தோன்றும்.
766. அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே.
பொருள் : சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் இடத்தை யாரும் அறிய மாட்டார். அப்பெருமான் ஓசை ஒளி மயமாய் எழுந்தருளி யிருக்கும் இடத்தை உணர்வார்க்கு அவன் உள்ளத்தை விட்டு அகலாது விளங்குவான். அவ்வாறு அவனைக் காணில் சிவமேயாவர்.
767. அவன்இவன் ஆகும் பரிசுஅறி வார்இல்லை
அவன்இவன் ஆகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்ட மதாகிநின் றானே.
பொருள் : சிவன் தானாகும் தன்மையை அறிவார் யாரும் இல்லை. அவ்வாறு சிவமாகும் தன்மையை நீ கேட்பாயாக. சிவன் ஆன்மாவின் சூக்கும வாக்கிலும் சூக்கும ஒளியிலும் பொருந்தும். சிவன் இவனது ஆகாயக்கூற்றில் விளங்குவான். சிவன் சீவனது ஒலி ஒளியினுள் பொருந்தி யிருப்பான்.
768. வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.
பொருள் : ஆதாரச் சக்கரங்களாகிய வட்டங்கள் ஏழும் உம்முள்ளே மலரும். அங்கு மேன்மை உடையவனாகிய சிவன் இருக்கும் இடத்தை அடைய அறியீர்கள். உபாயத்தினால் சிவனுடன் பொருந்தி நிற்க, கரும்பின் கட்டி போன்ற இன்பம் இருக்கும் இடத்தை நீவரும் அறியலாம்.
769. காணலும் ஆகும் பிரமன் அரியென்று
காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனைக்
காணலும் ஆகும் சதாசிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே.
பொருள் : முன் மந்திரத்தில் கண்ட முறையால் உள்ளே ஆதார மலர்களில் பிரமன் என்றும் திருமால் என்றும் காணலாம். நீலகண்டன் மகேசுவரன் ஆகியோரையும் அவ்வாறே காணவும் கூடும். இனி சதாசிவ சத்தியையும் காணலாம். உன்னுடைய உயிரிலும் உடம்பிலும் இக்கடவுளர் எல்லாம் பொருந்தியுள்ளதைக் காணலாம்.
15. ஆயுள் பரீட்சை
(ஆயுள் பரீட்சை-வாழ்நாளை அறிவதற்குரிய தேர்வு அஃதாவது, பிராணன் இயக்கத்தை அறிந்து ஆயுட்கால எல்லையை முடிவு செய்த.ஞூ பிராண இயக்கம் நீண்டு செல்லுமாயின் ஆயுள் குறையும். குறைந்து செல்லுமாயின் ஆயுள் நீளும். பிராண சேமிப்பு ஆயுள் நீடிப்புக்கு இன்றியமையாதது என்க.)
770. வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட்டு இரட்டியது ஆயிடில்
நித்தல் உயிர்க்குஒரு திங்களில் ஓசையே.
பொருள் : தலையில் அமைத்த கை பருத்துமின்றிச் சிறுத்துமின்றி அனலாய்த் தோன்றினால் நன்மையாம். பருத்துத் தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பு உண்டாகும். கையானது இரண்டு பங்கு பருத்துத் தோன்றினால் எந்நாளும் ஒரு மாதத்துக்குள் இறப்பு உண்டாகும். பிராணனுக்கு ஓசை உண்டாதலின் பிராணனை ஓசை என்றே கூறினார். உயிர்ப்ப ஓசையின் அளவைச் சிலர் குறிக்கின்றனர்.
771. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த உணர்வுஇது வாமே.
பொருள் : உள்ளத்தில் உண்டாகும் சூக்குமை முதலிய வாக்குகள் ஈசனோடு ஒப்பானவையாகும். நாதத்தைக் கடந்தவர் ஈசனை நினைந்து நாதாந்தத்தில் இருப்பர். நாதாந்தத்தில் இருப்பவர் நெஞ்சில் ஈசனும் ஓசையால் உணர்ந்த உணர்வாக விளங்குவான். (ஓசை - உயிர்ப்பு; இறந்தவர் - உயிர்ப்பை அடக்கியவர். ஓசை இறந்தவர் (மனம் அடங்கப் பெற்றவர்).
772. ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமேல் உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனும் ஆமே.
பொருள் : அழிகின்ற நால்அங்குல வாயுவைக் கண்டு அழியாமல் பொருந்தும்படி செய்யின் உள் நாக்கு மேல் அமையும் சகஸ்ரதளம் விரிந்து நன்மையைச் செய்யும். சகஸ்ரதளம் தங்கும் ஞானம் நிலைபெறும். அவ்வாறு ஞானம் பெற்றவரே உலகத்தலைவராவர். (போதகம் - திருவடி உணர்வு)
773. தலைவ னிடம் வலம் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவ னிடம்வலம் தன்வழி நூறே.
பொருள் : தலைவன் வாழ்கின்ற இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையோடு பொருந்தும் வகை அறிவார் இல்லை. இடக் கண்ணை  வலக் கண்ணோடு பொருந்தினால் ஒளியாகிய சத்தி விளங்கும். இச் சாதனையால் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தன்வழிப் பட்டமையின் இவரது வாழ்நாள் நூறாண்டாகும். (இடக்கண்-சிவன்; வலக்கண்-சத்தி, இடம் வலம் சாதிப்பார் என்பதைப் பிராணாயாமத்தைச் சரியாய்ச் செய்து முடிப்பவர் எனப்பொருள் கொள்வாரும் உளர்.)
774. ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏறிற் சிறக்கும் வகைஎண்ணில்
ஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளிஇவ் வகையே.
பொருள் : ஆறு விரற்கடை அளவு சுவாசம் வெளியேறினால் எண்பது ஆண்டு வாழலாம். ஏழு விரற்கடை அளவு சுவாசம் வெளிப்படுவதை எண்ணினால்  அறுபத்திரண்டாய் ஆயுட் காலம் அமைந்ததையும், ஆராய்ந்து நின்று இவ்வகையாகத் தெளிவாயாக . சுவாச அளவு நீடிப்பதில் ஆயுட்குறைவும், சுவாச அளவு குறைவதில் ஆயுள் நீடிப்பு உண்டாம்.
775. இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே என்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதும் சேரவே நின்றிடின்
முவ்வகை யாம்அது முப்பத்து மூன்றே.
பொருள் : இவ்வகையான எட்டு விரற்கடை சுவாசம் நீண்டு இயங்குமாயின் அவ்வகை ஆயுள் ஐம்பது ஆண்டுகள் என அறியலாம். செம்மையாக ஒன்பது விரற்கடை சுவாசம் சேரஇயங்குமாயின் மூத்து அழியும் காலம் முப்பத்து மூன்று ஆண்டுகளாம்.
776. மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓட அகலவே நின்றிடில்
பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே.
பொருள் : பத்து விரற்கடை சுவாசம் முடிவு பெற நின்றிடில் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழலாம். பதினைந்து விரற்கடை ஓடி நிற்குமாயின் இருபத்தைந்து ஆண்டுகள் வாழலாம்.
777. பார்க்கலும் ஆகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலும் ஆகும்அவ் ஆறிரண்டு உள்ளிட்டுப்
போக்கலும் ஆகும் புகலற ஒன்றெனில்
தேக்கலும் ஆகும் திருத்திய பத்தே.
பொருள் : பகல் முப்பது நாழிகைகளும் சூரியனைச் சந்திரன் பகுதியில் சேர்த்து நிற்பின் சிரசின் ஈசான திக்கில் உணர்வை உதிக்கச் செய்யலாம். அப்போது சுழுமுனையில் சுவாசம் போதலைச் சாதிக்கலாம். இதனால் அகர உகரமாகிய இருகலைகளும் செம்மையுற்றுப் பத்தாகிய அக்கினி கலைவிளங்கும் இதனைப் பார்க்கக் கூடும். (அ-எட்டு, உ இரண்டு தமிழ் எண்கள் இரண்டும் சேர்ந்து பத்து.)
778. ஏயிரு நாளும் இயல்புற ஓடிடில்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறுஎன்று அளக்கலும் ஆமே.
பொருள் : முற்கூறியபடி பொருந்திய இரு நாள்களிலும் சுழுமுனையில் பிராணன் இயங்கில், கீழ் நோக்குதலையுடைய அபானனும் வியாபகமான சந்திரனும் சீவனுக்குப் பகையாக இல்லாமல் உதவுவான். இவ்வாறு கீழ்நோக்கும் சத்தியைக் குறைத்து மூன்று நாட்கள் நிலைபெறில் ஆயுள் நீடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?
779. அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்
விளக்கும் ஒருநாளும் மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகைஐந்தும் தூய்நெறி ஓடில்
களக் மறமூன்றில் காணலும் ஆமே.
பொருள் : இங்ஙனம் அளக்கும் வகையால் நான்கு நாள்கள் சுழுமுனை வழியே பிராணன் இயங்கினால் விளக்கத்தைச் சிவம், சத்தி, விந்து, நாதம் ஆகிய நான்கும் உண்மையாகக் காணலாம். விளக்கமான முறையில் ஐந்து நாட்கள் தூய்மையான இவ்வழியில் இயங்குமாயின் களங்கமின்றிச் சிவம்சத்தி ஆன்மாவாகிய மூன்றையும் காணலாம்.
780. காணலும் ஆகும் கருதிய பத்துஓடில்
காணலும் ஆகும் கலந்த இரண்டையும்
காணலும் ஆகும் கலப்பற மூவைந்தேல்
காணலும் ஆகும் கருத்துற ஒன்றே.
பொருள் : முன்னே விளக்கியபடி பத்து நாட்கள் சுழுமுனையில் அறி பொருந்தியவர்க்கு, தன்னுடன் பொருந்திய சிவம் சத்தியை அறியலாம். அவ்வண்ணம் கலந்த தன்மையும் விட்டுப் பதினைந்து நாட்கள் சுழுமுனை அறிவில் பொருந்தியவர் சீவம் ஒன்றே எண்ணத்தில் காண்பர்.
781. கருதும் இருபதில் காணஆ றாகும்
கருதிய ஐ ஐந்தில் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலும் ஆமே.
பொருள் : கருதப்படுகின்ற இருபது நாட்கள் சுழுமுனையில் நிலைபெறின் ஆகாயக் கூறிலிருந்து ஆறு ஆதாரங்கள் அறியப்படும். அவ்வாறு இருபத்தைந்து நாட்கள் இயங்கினால் ஐம்பூத ஆகாயத்தில் பூதாகாயமும் குணமய ஆகாயமும் கீழ்படுத்தப்பட்டுத் தேயுவும் வாயுவும் ஆகாயமுமாகிய மூன்று விளங்கும். மேலும் இருபத்தாறு நாட்கள் இயங்கினால் கருதுகின்ற தேயுவும் ஆகாயமும் ஆகிய இரண்டும் சிறப்புறும்.
782. காட்டலும் ஆகும் கலந்திரு பத்துஏழுடல்
காட்டலும் ஆகும் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலும் ஆகும் கலந்திரு பத்தெட்டில்
காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே.
பொருள் : முற் கூறியவாறு சுழு முனையில் இருக்கும் ஞானி இருபத்தேழு நாட்கள் அவ்வாறு இருப்பின், சோதிவடிவாகிய சிவத்தைப் பிறர்க்கு உணர்த்தல் கூடும். அவ்வாறு இருபத்தெட்டு நாட்கள் சுழுமுனையில் பொருந்தியிருப்பின், பத்தாவது நிலையான ஊர்த்துவ சகஸ்ரதளத்தில் விளங்கும் ஆன்மாவைப் பிறர்க்கு உணர்த்தல் கூடும்.
783. ஈர் ஐந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பார் அஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரம்செய் நின்ற வகை ஆறுஅஞ்சு ஆமாகில்
ஓர்அஞ்சொடு ஒன்றுஒன்று எனஒன்று நானே.
பொருள் : பத்தும், ஐந்தும், ஆறும், எட்டுமாகிய இருபத்தொன்பது நாட்களும், உலகோர் அஞ்சும்படி பகைசெய்யும் இந்நாட்கள், யோகியர்க்குப் பத்து நாட்கள் போலத் தோன்றும், அன் பினைப் பெருக்குகின்ற வகையில் இறைவனோடு  கலந்திருக் கின்ற முப்பது நாட்களும், ஓர் ஐந்தோடு ஒன்றும் ஒன்று மாகிய ஏழு நாட்கள் கழிந்தன போலத் தோன்றும், (வாரம்-அன்பு மேல்நிலையில் பொருந்தி யிருப்பவர்க்குக் காலம் செல்லுவதே தெரியாது.)
784. ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத்து ஒன்றாகில்
கன்றிய நாளும் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகும் மனையில் இரண்டே.
பொருள் : இறைவனுடன் பொருந்திய நாள்கள் முப்பத்தொன்றாயின், சிறுமையைச் செய்யும் நாள்கள் மனத்தில் மூன்று நாள்கள் போல யோகியர்க்குத் தோன்றும். இறைவனுடன் சென்று உயிர் முப்பத்திரண்டு நாள்கள் பொருந்தி நின்றிடின் உலக நடையினர்க்குரிய இரண்டு நாள்கள் சென்றது போலத் தோன்றும் (கன்று - சிறுமை)
785. மனையில்ஒன்று ஆகும் மாதமும் மூன்றும்
சுனையில் ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையுற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற  தலைவனும் ஆமே.
பொருள் : மூன்று மாதங்களும் சிவமும் ஆன்மாவும் பேதமற ஒன்றாயினார்க்கு, சகஸ்ரதளத்தில் சூக்கும வாக்கு விளங்கும் படி செய்தனன் நந்தியெம் பெருமான். யாதொரு கிரியையும் இன்றிப் பரம ஆகாயத்தில் நிமிர்ந்து நின்றவர்க்கு தன்னுடன் பொருந்தி நின்ற சிவமேயாதல் கூடும். (மாதமும் மூன்றும்-முப்பத்து மூன்று நாட்கள் எனச்சிலர் பொருள் கொண்டனர். நந்தி- சிவபெருமான்.)
786. ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை
ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை
ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரும் அறியா அறிவுஅறிந் தேனே.
பொருள் : பரவெளியில் சூக்கும நிலையில் கலந்துள்ள அக்கினியாகிய பூதத்தை யாரும் அறியார். கலந்துள்ள வாயு பூதத்தை யாரும் அறியமாட்டார். எல்லாவற்றையும் ஒடுக்கியிருக்கின்ற சிவத்தை யாரும் அறியார். மற்றவர் அறிந்து கொள்ள முடியாத அறிவை நான் சிவத்துடன் பொருந்தி உணர்ந்தேன்.
787. அறிவது வாயுவொடு ஐந்துஅறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணியுள் நாடின்
செறிவது நின்று திகழும் அதுவே.
பொருள் : வாயுவோடு கூடி ஐந்து தன்மாத்திரைகளை அறியும் அறிவாகிய சிவம் அறிவாகும். அச்சிவமே உலகுயிர் அனைத்தின் அறிவுமாம். ஆதலின், சிவத்தைப் பிரித்து வேறாகக் காணாமல் ஒன்றாய்க் காணின், அப்பொருளாகிய சிவமே உயிரோடு பொருந்தி நின்று எல்லாப் பொருளையும் விளக்கத்தானும் விளங்கும். (அத்தின் - அனைத்தின், செறிந்து - நிறைந்து.)
788. அதுஅரு ளும்மரு ளானது உலகம்
பொதுஅரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மது அரு ளும்மலர் மங்கையர் செல்வி
இது அருள் செய்யும் இறையவன் ஆமே
பொருள் : அச்சிவம் அருளிச்செய்த உலகம் அஞ்ஞானியர்க்கு மயக்கத்தைத் தருவதாகும். ஞானியர்க்கு நாள் தோறும் சுட்டறிவின் நீங்கிய  பொது அறிவை நல்கும். இன்பத்தை நல்கும் சகஸ்ரதளத்தில் விளங்கும் பராசக்தி இப்பேற்றை ஞானியர்க்குக் கூட்டி வைப்பான். அதனால் ஞானியர் சிவமேயாவர்.
789. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே.
பொருள் : சிருஷ்டியைக் கருதிய பெருமையுடைய நந்திக்குப் பிறப்பு இன்றிக் காண்பவரது அழகிய உடம்பு பழமையான இடமாம். இவ்வுண்மையை உணர்ந்தவர்க்கு ஆசை நீங்கும், பின் ஆசைக்குக் காரணமான பாசங்களை வருந்தும்படி செய்யும் அகன்ற அறிவு விளங்கும். (நந்தி - சிவன்)
16. வார சரம்
(வாரம் - நாள், சாரம் - பிராணன் இயக்கம். இன்னின்ன நாளில் இன்னின்ன நாடி வழியாகப் பிராணன் இயங்க வேண்டும் என்ற முறையைக் கூறுவது இப்பகுதியாகும்.)
790. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறைஇடம்
தெள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே.
பொருள் : வெள்ளி, திங்கள், புதன் கிழமைகளில் இடைநாடி வழியாகச் சுவாசம் இயங்க வேண்டும். ஒண்மையான சனி, ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகளின் வலநாடி வழியாக இயங்க வேண்டும். அழகிய வியாழக்கிழமை வளர்பிறை நாளில் இடை கலையில் விளங்கவேண்டும். அழிகின்ற தேய்பிறை நாளில் வியாழக்கிழமை வலநாடியில் இயங்கவேண்டும்.
791. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக்கே ஊனம் இலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.
பொருள் : வெள்ளி திங்கள் விளங்குகின்ற புதன் கிழமைகளில் இடை நாடியில் சுவாசம் தள்ளி இயங்குமாயின் ஒளிபொருந்திய உடம்புக்கு அழிவில்லையென்று வள்ளலாகிய குரு நாதன் நம்மனோர்க்கு மகிழ்ச்சியோடு உபதேசித்து அருளினான்.
792. செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்குஅவ் ஆனந்த மாமே.
பொருள் : செவ்வாய், தேய்பிறை வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில், சரத்தை வலப்பக்கத்தில் அறிகின்ற யோகி இறைனாவான். இந்நாள்களில் சரம் மாறி இயங்கும் தன்மையை அறிந்து வலப்பக்கத்தில் ஓட விட்டு அம்முறையில் அறிகின்றவர்களுக்கு ஆனந்தம் உண்டாகும்.
793. மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரன்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.
பொருள் : சந்திரனும் சூரியனும் இடை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். அப்போது இடைகலை வழியாக ஏறிப் பிங்கலை வழியாக இறங்கியும், பிங்கலை வழியாக ஏறி இடைகலை வழியாக இறங்கியும், பிராணன் நடு நாடியில் ஊர்ந்து செல்லும், பிராணனின் சிவன் பொருந்தியதை ஆராய்ந்து தெளிந்து அறியுங்கள். (உக்கிரன் - சிவன் (வீரபத்திரன்) ஊறும் உயர் வளரும் உயிர்.)
794. உதித்து வலத்துஇடம் போகின்ற போது
அதிர்த்துஅஞ்சி ஓடுத லாம்அகன்று ஆரும்
உதித்துஅது வேமிக ஓடிடும் ஆகில்
உதித்த இராசி உணர்ந்துகொள் உற்றே.
பொருள் : பிராணன் வலப்பக்கம் உதித்து இடப்பக்கம் மாறிச் செல்லுகின்றபோது, ஒருபுறம் கனமாகவும் மற்றொருபுறம் இலேசாகவும் இளைத்து ஓடுதலாகும். தோன்றிய அப்பிராணன் அகன்றும் தணிந்தும் ஓடுதல் நீங்கிப் பொருந்த ஒரு நாடியில் மிகுதியாக ஓடுமாயின் தோன்றிய இராசியை பொருந்தி மிகுதியாக ஓடும் நாடியைக் கொள்வாயாக (இராசி - ஒழுங்கு)
795. நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென்று இன்பணி சேர
முடி கின்ற தீபத்தின் முன்உண்டுஎன் றானே.
பொருள் : சரியான சுழுமுனையில் பொருந்தி யில்லாமல் இடமாகவோ வலமாகவோ ஓடி, பாய்கின்ற வாயுவை யோகியானவன் பொருந்தி நாடிகள் ஒத்து இயங்குகின்ற புருவ நடுவில் இனிமையைத் தரும் குண்டலினியைச் சேரச் செய்தால் நடுநாடியின் உச்சியில் தீப்பிரகாசம் அமையும் என்று நந்தி அருளினான். (இன்பணி - இனிமையைத்தரும் குண்டலினியாகிய பாம்பு. அந்தணன் - சிவபெருமானைக் குறிக்கும் என்பாரும் உளர்.)
796. ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினாறு உளவலி
போய்அம் மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகுர்த்தமும் ஆமே.
பொருள் : ஆராய்த்தக்க பொருளான சிவமும் அழகிய கண்மலர்களுக்கு மேலாக உள்ளது. அச்சிவனை நினைந்து சுவாச கலையை மாறச் செய்யின் பதினாறு கலைகளையுடைய சந்திரன் விளங்கும் அக்கலை வலிமையாகச் சென்று மனத்தை அழிக்கின்ற ஆதாரமாக ஆயுளும் நாளும் தியான காலமான முகூர்த்தமுமாக அமைகின்றது. (முகூர்த்தம் - 3 3/4 நாழிகை; 1 1/2 மணி நேரம் கொண்ட காலம்)
17. வார சூலம் (வார சூலம் - கிழமை தோஷம் பயணத்துக்கு உரிய தோஷம் இங்குக் கூறப்பெறும்)
797. வாரத்தில் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.
பொருள் : நாள்களில் சூலம் வருகின்ற திசையைக் கூறுமிடத்து திங்களும் சனியும் கிழக்கே சூலமாகும். செவ்வாயும் புதனும் வடக்காகும். ஞாயிறும் வெள்ளியும் மேற்கு ஆகும். இத்திக்குகளில் இக்கிழமைகளில் பயணம் செல்லலாகாது. (சூலம் -முத்தலை - வேல்.)
798. தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.
பொருள் : வியாழக்கிழமை சூலதிசை தெற்காகும். சூலம் இடப்பக்கமாகவும் பின்பக்கமாகவும் இருக்கப் பயணம் செல்வது நன்மையாம். வலப்பக்கமும் முன்பக்கமும் இருக்கச் செல்லின் மேலும் மேலும் பயணத்தின் தீய வினைவுகள் உண்டாகும். சூலத்தில் செல்லுவதால் உண்டாகும் தீமை கூறியவாறு. (அக்கணி - எலும்புமாலை சூட்டப்பெற்ற.)
18. கேசரி யோகம்
(கேசரி என்பது ஆகாயம் அல்லது சிங்கம் என்று பொருள், யோகம் என்பது சேர்க்கை. கேசரி யோகமாவது, சிங்கத்தைப் போன்று மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்தியிருப்பதாகும். இந்த யாகத்தால் சாதகர் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலைப் பெறுவார்)
799. கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.
பொருள் : பிராணன் கீழே இறங்கி வராமல்அண்ணாக்கில் கட்டி, பின் அபானன் குதம் வழியாகவோ குறிவழியாகவோ போகாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்தி, பின், இரண்டு கண் பார்வைகளையும் ஒன்றாக்கி, அடுத்து மனத்தைச் சுழுமுனை வழியாகப் பாயும் பிராணனில் நிறுத்தியிருக்க உடலைத் தாண்டின நிலைக்குச் சென்றமையால் காலத்தைக் கடக்கலாம்.
800. வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகைமேல்
கண்ணாறு மோழை படாமல் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
பொருள் : சிவயோகி நாதத்தால் மோதி முன்புறமுள்ள மூளையில் இருகண் பார்வைகளையும் மாறிமாறிப் பார்ப்பதனால் உண்டாகும் கரையின் எல்லைக்குள் இரு கரைகளின் ஊடே ஆகாயத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகஸ்ரதளத்தை நரப்பினால் நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்க்கச் சீவனின் குற்றமான இருள்விலகிப் பரிசுத்தமாகும். (வண்ணான் - சீவன்.)
801. இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்கச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலும் ஆமே.
பொருள் : இடைகலை பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி, சுழுமுனை வழியாகப் பிராணனைச் செலுத்த வல்லார்க்கு இறப்பின்றி அழியாமல் இருக்கக் கூடும். (உறக்கத்தை நீக்குதலாவது - விடியலில் எழுதல். உண்டி, உறக்கம், பயம், இன்பம் ஆகிய நான்கும் உயிர்ப் பண்புகள் துதிக்கை - சுழுமுனை)
802. ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின்று ஊறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.
பொருள் : ஆராய்ந்து சொல்லுமிடத்துச் சாதனையில் அமுதம் நிலைபெற்று ஊறும் அது வருகின்றபொழுது நன்கு அமைந்து ஒலித்தலைச் செய்யும். பெருகி ஒலித்தலைச் செய்யில் சந்திர மண்டலமாய் விளங்கி ஒலித்தலைச்செய்து அது பாதுகாக்கும் என்றவாறு.
803. நாவின் நுனியை நடுவே விசிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லைச் சதகோடி பூனே.
பொருள் : சாதகர் நல்லாசனத்தில் அமர்ந்து நாக்கின் நுனியை அண்ணாக்கின் மேல் உரசி யிருப்பின் சீவனும் சிவனும் மூவரும் அங்கே தோன்றும். மூவரோடு ஏனைய முப்பத்துகள் மரணமில்லாமல் வாழலாம். இஃது அடயோக முறை சிவிறிடல் என்றும் பாடம் விசிறியின் அடிப்பகுதி முப்பத்து முக்கோடி தேவர் என்றும் சிலம் பொருள் கொள்வர்.
804. ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வார்இல்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளிலும் ஆமே.
பொருள் : ஊனுடலால் அறியப்படும் அறிவெல்லாம் பொருந்தி அமையும் இடமாகிய சிரசின் உச்சிமேல் ஆகாய மண்டலம் விளங்கும் தன்மையை அறிபவர் இல்லை. ஆகாய மண்டலத்தைப் பெருக்கி அறிபவர்க்கு இல்லை. ஆகாய மண்டலத்தைப் பெருக்கி அறிபவர்க்கு அமுதத்தை உண்டு தெளிவினை அடையலாம். ஊன் ஊறம் - சுக்கிலம். வான் ஊறல் (மதி); தேன் ஊறல் - அமுதத்தின் சுவை (சுடுக்கை) வான் ஊறல் - கங்கை (அமுதம்) பாம்பு - குண்டலியாற்றல். கங்கை, மதி, பாம்பு, கடுக்கை என்னும் நான்கும் இறைவன் முடிமேல் உள்ளன.
805. மேலைஅண் ணாவின் விரைந்துஇரு காலிடில்
காலனும் இல்லை கதவம் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே
பொருள் : மேலை அண்ணாக்குப் பிரதேசத்தில் சாதனையால் பிராண அபானனாகிய இருவாயுக்களையும் பொருந்தும் படி செய்யின், தேகத்திற்கு அழிவு இல்லை. பிரமப்புழை திறந்து சாதகர் மேலே செல்வர். உலகத்தார் அறியும் ஆணையாம். இருகால் என்பதற்கு இருமூக்கின் வழியாகவும் வரும் உயிர்ப்பினை (பிராணவாயு) என்று சிலம் பொருள் கொள்வர்.
806. நந்திமுதலாக நாமேலே ஏறிட்டுச்
சிந்தித்து இருக்கில் தரணி முழுதாளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித்து இருப்பவர் தீவினை யாளரே.
பொருள் : இம்முறையில் சிவனை முன்னிட்டுக் கொண்டு நாவினை அண்ணாக்கினுள்ளே ஏறும்படி செய்து, அங்கே நடு நாடியின் உச்சியில் சந்தித்திருப்பின் அச்சாதகர் உலகமுழுதும் ஆள்வார். உடலோடு பின்னிக் கிடக்கும் அறிவு நீங்கி, சிவனை எண்ணியிருப்பவரே உண்மையான அக்கினி காரியம் செய்தவராவார். அதாவது இப்பயிற்சி இல்லாதவர் தீவினையாளர் என்றபடி.
807. தீவினை யாடத் திகைத்தங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும்பு ஆமே
பொருள் : தீய வினைகள் தங்களை வெற்றி கொள்ள அறிவு மயங்கியிருந்த சீவர்கள் நாவால் செய்யும் சாதனையால் நாடினால் நமனுக்கு வேலயில்லை. பரந்த வினைகளை ஆராய்ந்து அவற்றின் பயன் இன்மையை அறிந்தவர் தெய்வப் பணியைச் செய்து அதன் இனிமையைச் சுவைத் திருப்பார். செந்தமிழ் மறைப்பாட்டினை ஆராய்ந்து இடையறாது ஓதி அதன் முழுப் பயனையும் மேற்கொண்டவர் சிவத்துடன் கூடிப் பேரின்பமுறுவர் என்று கூறுவாரும் உளர்.
808. தீங்கரும் பாகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும் பாக அடையதா ஏறிட்டுக்
கோங்கரும் பாகிய கோனை நிமிர்ந்திட
ஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.
பொருள் : இனிய கரும்பை யொத்த வினையைச் செய்பவர் சுழுமுனை நாடியாம் கரும்பைப் பெற நாவினை மேலே ஏற்றி, நடு நாடியின் கோணலை ஒழுங்குபெறச் செய்ய ஊன் உடலிலேயே அமுதத்தைக் காண்பர். (கோணலை - வளைவை ஊனீர் - உடல் அமிழ்து. கோங்குஅரும்பு - பாம்பின்தலை; குண்டலி.)
809. ஊனீர் வழியாக உண்ணாவை ஏறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தரி வீரே.
பொருள் : நாவின் வழியாக உண்ணாக்கை மேலே செலுத்தி, அதனால் ஊற்றெழுந்து வரும் அமுதத்தைப் பருகிச் சிவாய நம எனச்சிந்தித்து இருப்பார்க்கு காத்தலைச் செய்கின்ற ஒளி நீர்ப்பிரவாகம் போல் முகத்தின் முன் பெருகும். அவ் ஆகாய கங்கையைப் பெற்று அறிந்து கொள்ளுங்கள். (சிவாய நம; சி-ஒளி; வ-ஆற்றல்; ய-ஆகாயத்தையும் ஆன்மாவையும், ந-மறைப்பு, ம-மலம் இவைகளைக் குறிக்கும் என்பர்.)
810. வாய்ந்தளித்து உள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந்து உள்ளே படிக்கதவு ஒன்றிட்டுக்
கோய்ந்தறிந்து உள்ளுறை கோயிலும் ஆமே.
பொருள் : சிவத்தைப் பொருந்தி உள்ளத்தில் வழிபாடு செய்தவர்க்கு மலத்தைச் சுட்டெரிக்கும் அருள் சத்தி ஒலி ஒளி வடிவில் வெளிப்பட்டருளுவான். அத்தகைய ஒலி ஒளி வடிவில் மனம் பதிவுற்றுக் கீழ் இறங்காது சாலந்தர பந்தனம் அமைத்து அங்குக் குவிந்து அறிந்து தியானிப்பார்க்கு எடுத்தவுடல் சிவாலயமாகும். கூய்ந்து அறிந்து எனவும் பாடம் (கூய்ந்து - நிர்மலமாகி)
811. கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும்
தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே
பொருள் : அகக் கோயிலலையே வாசகமாகக் கொண்டு வாழும் சீவர்கள் அனைத்து உலகுக்கும் தாயினும் மிக்க கருணையுடைய வராவர். சிலர் இவரைச் சினந்தாலும் நன்மையே செய்வர். ஆனால் சினந்தவரில் தீய வினை செய்தவர்க்குத் தீயைக் காட்டிலும் கொடியராய் அழித்துவிடுவர்.
812. தீவினை யாளர்தம் சென்னியின் உள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத்து உள்ளவன்
மாவினை யாளர்தம் மதியின்உள் ளானே
பொருள் : சிவன் மூலாக்கினியை எழுப்பி யோகம் செய்பவர் சிரத்தில் இருப்பவன். அவன் சகஸ்ரதளத்தில் உணர்பவருக்குப் பொன்னொளி மண்டலத்தில் விளங்குவான். இடைவிடாது பாவனை செய்வாருக்கு அவன் பாவகப் பொருளாய் விளங்குபவன். பெருவினையாகச் சிவயோகம் புரிவோர்க்கு அவரது அறிவில் செறிந்து விளங்குபவனாய் உள்ளான்.
813. மதியின் எழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
பொருள் : சந்திரனிடமிருந்து கலைகளைப் போன்று பதினாறு இதழ்களை யுடைய விசுத்திச் சக்கரத்திலிருந்து பொருந்திய உடம்பாகிய மனையில் இருநூற்று இருபத்து நான்கு புவனங்களிலுமாகி, நடக்கின்ற உடம்பில் ஒளிக்கதிர்களைப் பரப்பி, தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படாதவாறு சிவன் பொருந்தி யிருந்தான்.
814. இருந்தனள் சத்தியும் அக்கலை சூழ
இருந்தனள் கன்னியும் அந்நடு வாக
இருந்தனள் மான்நேர் முகநிலவு ஆர
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
பொருள் : சித்ரூபிணியாகிய பராசத்தியும் விசுத்திச் சக்கரத்திலுள்ள கிரணங்களில் அமைந்துள்ளாள். அவள் அக்கிரணங்களின் நடுவாக விளங்குகிறாள். அவளே ஆன்ம தத்துவத்திலும் சந்திரனாக விளங்கினாள் இவளேதான் போகத்தில் பொருந்தி இன்பம் பொழிபவனாக உள்ளான்.  (விசுத்திசிடறு அறிவு மயமாகிய சிவனுக்கு ஏற்ப ஆற்றல் மயமான சத்தியும் அமைந்து நிற்கும்.)
815. பொழிந்த இருவெள்ளி பொன்மண் அடையில்
வழிந்துஉள் இருந்தது வான்முதல் அங்குக்
கழிந்தது போகாமல் காக்கவல் லார்க்குத்
கொழுந்துஅது வாகும் குணமது தானே.
பொருள் : ஆகாயம் முதலாகிய பராசக்தி பெய்த வெண்மையான சுக்கிலத்திலும் பொன்மயமான சுரோணிதத்திலும் பொருந்தி அவை தொழிற்படும் சுவாதிட்டானச் சக்கரத்தில் உள்ளான். அங்கு ஆற்றல் கழியாது பாதுகாக்கும் திறமையுடையார்க்கு அதுவே உடலைக் காக்கும் பச்சிலை மருந்தாகும். முன் மந்திரங்களில் கண்டவிசுத்திச் சக்கரத்தின் பயன் அதுவாகும். (வெள்ளி - அமுதம் என்றும், பொன்மண். பூதலம் என்றும் பொருள் கொள்வாகும் உளர்.)
816. குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங்கு இருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.
பொருள் : காம செயத்தை அளிக்கும் கொடிபோன்ற குண்டலினி சத்தி, ஆகாய மண்டலத்தில் சிவத்துடன் சேர்க்கை யுற்று மகிழ்ச்சியுடன் விளங்கினால், அட்டமாசித்திகளை அளிக்கும் உண்மை ஞானம் உண்டாகும். குண்டலினியின் இனமாகிய சிற்சித்தியுடன் அறிவுமயமான சிவனும் அறிவில் விளங்குவான். தத்துவஞானம்-இறைவி, மணம்அதுவாக ஈசனுடன் கூடி எனினுமாம்.
817. இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.
பொருள் : விசுத்திச் சக்கரத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த பிராணன் கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச் செல்லும். உடலைத் தாங்கி வீணாத்தண்டைவிட்டுத் தாண்டி ஆகாயத்தை அடைந்து, கவிழ்ந்த சகஸ்ர தளத்தை நிமிர்ந்த சகஸ்ர தளமாக்கி விளங்கும்படி செய்தால் சந்திர மண்டலம் வளர்ச்சி பெற்றுப் பூமண்டலத்தில் நெடிது வாழலாம்.
818. மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனும் கூத்தொழிந் தானே.
பொருள் : மதிமண்டலத்தில் மனத்தைப் பிணிக்கும் ஒட்டியாண பீடத்தைக் கண்டு மனத்தை அங்கேயே நினைந்து கீழ் நிலையில் செல்லாமல் நிறுத்தி, பழமையான ஆனந்த மயகோசத்தில் மகா சூரியப் பிரகாசம் விளங்க, குண்டத்தை அணிந்த கூத்தப் பெருமானும் அசைவற்று விளங்குவான். (கூத்தொழிதல் - ஐந்தொழில் நீங்குதல்)
819. ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
கழிகின்ற வாயும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.
பொருள் : முற்கூறிய சாதனையால் விசுத்திக் சக்கரத்துக்குக் கீழே சென்று ஒழிகின்ற வாயு அண்ணாக்கின் வழிமேலே சென்று தங்கும் அம்முறையில் வாயுவைக் கழியாது காக்கக் கூடும். அதனால் ஒளியானது நிலைகொண்டு வழிகின்ற காலத்தில் சகஸ்ரதளத்தில் விளங்கும் திருவடியைப் புகழ்கின்றபோது உடம்பாகிய பையை விட்டு நில்லுங்கள்.
820. பையனின் உள்ளே படிக்கதவு ஒன்றிடின்
மெய்யினின் உள்ளே விளங்கும் ஒளியதாம்
கையினுள் வாயுக் கதித்தங்கு எழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக்கு ஆமே.
பொருள் : உடம்பினுள் மூலாதாரக் கதவாகிய குதத்தை (எருவாயை) இறுகப் பிடித்தால், உடம்பினுள்ளே ஒளி விளங்குமாம். நாடியினுள் அபானன் உக்கிரமாக மேலெழுந்தபோது மலங்களோடு கூடிய சீவன் பிரகாசம் பொருந்தியதாய் விளங்கும்.
821.விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடுங் கண்டத்து நாடியின் உள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே
பொருள் : மூல பந்தத்தால் அமைந்தவாயு மேல்எழுவதை நினைந்து, கசக்குதலினால் சுருங்குகின்ற விசுத்திச் சக்கரத்தின் மேல் வணங்கத் தக்க சந்திர மண்டலம் விளங்க, அக்கினி சூரிய மண்டலங்கள் சுருங்கிட நின்ற இத்தன்மையைச் சொல்லவா வேண்டும்.
822. சொல்லலும் ஆயிடும் மாகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் அனல்நீர்க் கடினமும்
சொல்லலும் ஆகும் இவைஅஞ்சும் கூடிடில்
சொல்லலும் ஆம்தூர தெரிசனந் தானே
பொருள் : ஆகாய பூதத்தில் வாயு பூதம் உள்ளதைச் சொல்லக்கூடும் மேலும் அக்கினி நீர் நிலம் ஆகியவை அங்குக் கூறலுமாம். ஆகாயம் முதலாகிய ஐம்பூதங்களும் ஒளி மயமாக ஆகாயத்தில் பொருந்தியிருப்பதைச் சொல்லக்கூடும். அவ்வாறு கண்டவர் தூர திருஷ்டியுடையவர் ஆவார். (மாகம் - ஆகாயம்; கடினம் - நிலம், வேறு சிலர் மண் நீர்க்கடினமும் எனப்பாடம் கொண்டு மண், நீர், தீ எனப்பொருள் கொண்டனர் கடினம் - ஈண்டுத்தீ.)
823. தூர தரிசனம் சொல்லுவன் காணலாம்
காராருங் கண்ணி கடைஞானம் உட்பெய்து
ஏராரும் தீபத்து எழிற்சிந்தி வைத்திடின்
பாரார் உலகம் பகன்முன்ன தாமே.
பொருள் : தூர திருஷ்டியைப் பற்றிச் சொல்லுவதை உங்கள் அனுபவத்தில் காணலாம். மேகத்தைப் போன்று அருள் வழங்கும் கண்ணையுடைய பராசக்தியைப் பொருந்துவதால் உண்டாகும் ஞானத்தை உள்ளே நிறுத்தி, அழகு நிறைந்த சிவத்தினிடம் சிந்தையை வைத்திருந்தால் பூமிமுதலான உலகங்கள் பகலில் காணப்படுவதுபோல் நன்குவிளங்கும்.
824. முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்னெழு வேதப் பகல்ஒளி உண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனும் ஆமே.
பொருள் : முன்னே எழுகின்ற உந்திக் கமலத்துக்குப் பன்னிரண்டு விரற்கடை கீழேயுள்ள மூலாதாரத்தில் பன்னிஎழுகின்ற வேதம் சூரியனாகிய புருடன் விளங்குவதாகக்கூறும் கீழேயுள்ள குண்டலினியைப் பந்தித்து மேலே செலுத்துவதில் நன்றாக எழுகின்ற நாதமாகிய அறிவில் மனம் பந்தித்து இருப்பின் ஆன்மாவாகிய தன்னிடம் எழுகின்ற கோயிலில் சிவம் பிரகாசிக்கும்.
19. பரியங்க யோகம்
(பரியங்கம் - கட்டில், யோகம் - சேர்க்கை, கட்டிலில் பெண்ணோடு கூடியிருந்து செய்யும் போகத்தை யோகமாக்குதல் பரியங்க யோகமாகும்.)
பெற்ற சிற்றின்பமே பேரின்ப மாய் அங்கே
முற்ற வரும்பரிசு உந்தீபற
முளையாது மாயை என்று உந்தீபற - திருவுந்தியார்
இதுவே ஒளியை அடைவதற்குரிய குறுக்கு வழி என்கிறார், திபேத்திய குருமார்களில் சிறந்தவராக விளங்கிய நரோப்பா அவர்கள்.
825. பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியோ குங்கலத்து
ஊசித் துளையுறத் தூங்காது போகமே.
பொருள் : பூசத் தகுந்த வாசனைத் திரவியங்கள் எல்லாம் ஆடவன் உடம்பில் பூசிக்கொண்டு மலர்ந்த மணம் நிறைந்த மாலையை அணிவித்து, பெண்ணோடுகலவியிலே பொருந்தி மனமானது பிரமரந்திரமாகிய உச்சியை நினைந்திருக்க போதும் தளராது இன்பம் காலத்திலும் இறைவனை எண்ணியிருக்க வேண்டும்.
826. போதத்தை யுன்னவே போகாது வாயுவும்
மேகத்த வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதுஒத்த மென்முலை யாளும்நற் சூதனும்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே.
பொருள் : முன்மந்திரத்தில் கூறியவாறு பிரமரந்திரத்தில் விளங்கும் பேரறிவுப் பொருளை நினைவில் கொண்டு போதும் புரியின் காம வாயு நிறைந்து தொழிற்படாது. அப்போது நீர்த் தன்மையுடைய சுக்கிலமும் சுரோணிதத்தில் கலக்காது மீளும். சூதாடு கருவியை யொத்த தனங்களையுடைய பெண்ணும் உடம்பாகிய தேரினை நடத்தும் ஆணும் தம்மில் பொருந்திய கூட்டுறவால் விளைந்த சுக்கில சுரோணிதங்கள் விந்து நாதங்களாக மாற்றம் பெற்றுச்சிரசில் பொருந்தும் (சூரன் - தேர்ப்பாகன்)
827. கண்டனும் கண்டியும் காதல்செய் யோகத்து
மண்டலம் கொண்டுஇரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலும் தளராது அங்கமே.
பொருள் : தலைவனும் தலைவியும் விரும்பிப் புணரும் யோகத்து, அக்கினி மண்டலம் சூரிய மண்டலங்களைக் கடந்து சந்திர மண்டலத்தில் இருவரும் சிரசின் மேலேயுள்ள வெளியை அறிவர். உடலாகிய வண்டியை மேலும் மேலும் செலுத்துவதால் மதிமண்டலத்தில் ஆகாய கங்கை யாகிய ஒளியைப் பெருக்கிட அங்கீதத்தில் தண்டு ஒரு போதும் தளர்ச்சியடையாது.
828. அங்குஅப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.
பொருள் : அவ்விடத்தில் அப்புணர்ச்சியின் காரணமான காமாக்கினி, உடம்பில் விந்துவை நீக்கம் செய்கின்ற போகத்தில் அது கெடாமல் பாதுகாத்து, யோகத்தினால் மாற்றி விந்து  ஜெயம் பெற்றவன் தலைவனானவன். வேறுசிலர் அங்கப் புணர்ச்சி எனக் கொண்டு பரி அங்கியோகம் எனப் பொருள்கூறுகின்றனர். பங்கப்படாமல் என்பதற்கு நாதவிந்துக்கள் கெடாமல் என்பர்.
829. தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போதும்
தலைவனும் ஆயிடும் தன்வழி யுள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அங்சே.
பொருள் : அங்ஙனமாகிய தலைவன் ஆன்மாவை அறிந்தவனாகின்றான். அவன் விரும்பிய சிவயோகம் தானே வந்தமையும் அவன்தன்னை வசப்படுத்தி ஆளும் தலைவனாவான். அவன் விருப்பப்படி பஞ்சபூதங்கள் முதலியன நடக்கும்.
830. அஞ்சி கடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளாது என்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.
பொருள் : ஐந்து நாழிகைக்கு மேல் ஆறாவது நாழிகையில் துணைவி துணைவனுடன் பொருந்தி உறக்கங் கொள்வான். ஐந்து நாழிகை கொண்ட பரியங்க யோகம் மனம் நிறைவோடு இனித்தேவையில்லை என்னும்படி செய்தது. கடிகை - நாழிகை.
831. பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇல் யோகம் அøந்தவர்க்கு அல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனம் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கு ஒண்ணாதே.
பொருள் : பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகை அருமையாக இருப்பவர்க்கு அல்லாமல், நழுவுகின்ற வளையலை அணிந்த முன் கையை யுடையவளும் விஷய வாசனை பொருந்திய சூரியசந்திரர்களாகிய தனங்களையும் உடைய குண்டலினி சத்தியை கடந்து மேற்செல்ல ஒருவராலும் முடியாது. கைச்சி - கையை உடையவன்.
832. ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர்என்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை  வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே.
பொருள் : அடைவதற்கு அருமையான இவ் யோகத்தை அடைந்து அறிவித்தவர் யார் என்றால் வேதகங்கையைத் திருமுடி மேல் வைத்தவனாகிய சீகண்டருத்திரனாவான். நாதத்தோடு கூடிய ஒளியினை ஐந்து நாழிகைவரையில் எண்ணாமல் எண்ணி நுகர்ந்திருந்தான்.
833. ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு ஐந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.
பொருள் : இவ் யோகத்துக்குப் பொருந்திய வயது பெண்ணுக்கு இருபது ஆணுக்கு முப்பதுமாகும். அப்போது பொருந்திய பெண்ணுக்கும் மன்னனாகிய ஆணுக்கும் ஆனந்தமாம். பொருந்திய அப்பெண்ணோடு ஐம்பொறிகளும் மலர் மனம் முதலியன அழிந்திடும் சுக்கிலத்துக்கு அழிவில்லை.
834. வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளியுண் ணாவில் அடக்கிவைத் தாரே.
பொருள் : வெண்ணிறமாகிய சுக்கிலம் உருகிப் பொன்னிறமாகிய சுரோணிதத்தில் (நாதத்தில்) கலக்காமல்  மறைந்துள்ள தட்டானாகிய சிவன் கரியாகிய அருளை நல்கிப் பக்குவம் செய்தார். நெருப்பு ஆகிய அக்கினி கலை உண்டாக ஊது குழலாகிய சுழுமுனை வழியே சென்று பொன்னாகிய சந்திரனைச் செப்பு ஆகிய உள் நாவில் விளங்க வைத்தார்.
835. வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினென் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.
பொருள் : இவ்வண்ணம் விந்து நீக்கமின்றிப் புணரும் இருவரும் தம்மில் இன்புற்று, காம வசப்படாமல் தேவ காரியமாக நினைத்துச் செய்கின்ற ஆனந்த நிலையில் பத்துத்திசைகளுக்கும் பதினெட்டுவகைத் தேவர்களுக்கும் தலைவனாக உள்ள சிவசூரியன் விளங்குவான். இப்பரியங்கப் பயிற்சி கைவந்த இருவரும் வெங்கதிரோன்போல் விளங்கும் என்று சிலர் கூறுவர்.
836. வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோர் ஆனந்தம்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
திங்களிற் செவ்வாய் புதைந்திருந் தாரே.
பொருள் : விருப்பத்தைத் தருகின்ற சூரியனுக்கும் சனிப்பித்தலைச் செய்யும் கருவாய்க்கும் இடையில் சிறந்த பெண்ணைப் புணருகின்ற ஆண்மகன் ஆனந்தமடைகிறான். இருவரது புணர்ச்சியில் சுரோணிதவழிச் சுக்கிலம் பாயாமல் சந்திர மண்டலத்தில் விளங்கும் செந்நிறம் பொருந்திய வாக்கின் சத்தியாகிய நாதத்தில் திளைத்திருந்தனர்.
837. திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங்கு இருக்கில்
வருத்தமும் இல்லையாம் மங்கை பங்கற்கும்
துருத்தியில் வெள்ளியும் சோரா தெழுமே.
பொருள் : பரியங்க யோகத்தால் - புதனாகிய அறிவைச் சந்திர மண்டலத்தில் வைப்பதாகிய நன்மையைச் செய்வார்க்கு வியாபகக் கருத்துக்கள் பொருந்த அங்கு இருந்தால், பெண்ணுடன் பொருந்துவார்க்குத் துன்பமும் இல்லையாம். உடம்பில் விந்து நீக்கமின்றி ஊர்த்துவ ரேதக அமையும்.
838. எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்
மெழுகுகுரு கும்பரி செய்திடும் மெய்யே
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.
பொருள் : சுவாதிட்டானத்திலுள்ள காமாக்கினியை மூலாதார வழிப்புருவ நடுவுக்கு கொண்டு சென்றால் அனலின்முன் மெழுகு போன்று சாதகர்க்கு உடம்பு காணாதொழியும் சோதியைக் கண்டபிறகு உழுதலாகிய செயல்இல்லை. புருவ நடுவைத் தாண்டித் துவாத சாந்தப் பெருவெளியை அறிந்த பேர்க்கு உடல் கீழே விழுகின்றதில்லை.
839. வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே.
பொருள் : ஆகாயத் தானத்தை அறிந்து, அங்கு விளங்கும் பொன் ஒளியை அறியில் உள்ளம் வேறுபடாமல் தெளிவான ஞானத்தைப் பெற்றுச் செழுமையான சிவனருளால் பரமான ஆகாயத்தை அறிந்திருந்தேன். அதற்கு மேல் யான் ஒன்றும் அறியவில்லை.
840. மேலாம் தலத்தில் விரிந்தவர் ஆரெனின்
மாலாம் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தின் நடுவான அப்பொருள்
மேலாய் உரைத்தனர் மின்னிடை யாளுக்கே.
பொருள் : ஒன்றிற்கு ஒன்று மேலாக விளங்கும் தலங்களில் விளங்குகின்றவர் யாரென வினவில், திருமால், பிரமன், ருத்திரன், முதலியோர் ஆவர். துரிய பூமியில் விளங்கும் சிவமாகிய பெரும் பொருள் பராசத்தியை விட மேலே உள்ளது என்று கூறினார். (நாலா நிலம் - துரியம்.)
841. மின்னிடை யாளும் மின் னாளனும் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலும் ஆமே.
பொருள் : மின் ஒளியில் விளங்கும் சத்தியும் அவளை ஆள்பவனாகிய சிவனும் ஆகிய இருவரையும் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட ஆகாயத்தில் நிலைபெறும்படி செய்து, அக்கூட்டத்திடை ஆன்மாவாகிய தன்னையும் காணவல்லிரேல், இவ்வுலகத்து நீங்கள் நெடுங்காலம் வாழலாம்.
842. வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகுஅறி வார்இல்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.
பொருள் : வெளிமுகமான காம வாயுவை உள்ளுக்கு இழுத்துச் சுக்கிலம் கெடும்படி செய்தலும், அவ்வாறு உள்ளுக்கு இழுத்த காமவாயுவை ஊர்த்துவ முகமாக்குதலாகிய உபாயத்தை அறிவார் இல்லை. அவ்வாறு மாற்றம் செய்யும் உபாயத்தை அறிந்த வரும் வளர்ச்சிபெற்ற தன்னைச் சிவத்திடம் ஆகுதி பண்ணின வராவார். (விரகு - வழிவகை; உபாயம்.)
843. உதம்அறிந்து அங்கே ஒருசுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம்முளே பார்கடித் தாளே.
பொருள் : ஆத்ம ஆகுதி பண்ணிப் பிரமப்புழையின் மேலான சகஸ்ர தளத்தில் பொருந்தினால் அவ்வழியிலே மண்டையிலுள்ள உரோமம் கறுக்கும். சீவனுக்குச் செய்ய வேண்டிய நன்மையைக் கருதிக்கொண்டு பராசக்தி விளங்குவாள். பக்குவத்தை உம்மிடம் அறிந்து உம்மிடமுள்ள பிருதிவிச் சக்கரத்தின் காரியத்தை அவள் மாற்றியருளுவான். (இதம் - செல்வி, கதம் - மார்க்கம், பதம் - பக்குவம், பார் - ஆதாரங்கள்)
844. பாரில்லை நீரில்லை பயங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே
பொருள் : சகஸ்ரதளமாகிய தாமரை ஒன்றுள்ளது, சிதாகாயத்தில் விளங்குவதால் பூமியும் நீரும் இல்லை. சகஸ்ரதளமாகிய இத்தாமரை மலர்ந்தது. பூவாகவே உள்ளமையால் மொட்டும், மேலிருந்து வந்தமையால் வேரும் இல்லை. அங்குக் காணப்படுகின்ற ஒளி ஒன்றுள்ளது. அகண்டமான மையின் குறிப்பிட்ட இடம் இல்லை. நாதத்துக்குக் காரணமான இச்சகஸ்ரமலர் எங்கும் படர்ந்துள்ளமையின் அதற்கு அடியும் நுனியும் இல்லை. (பங்கயம் சகசிர அறை ; தார் - அரும்பு. கேள்வி - ஞானம்)
20. அமுரி தாரணை
(அமுரி - வீரியம், தாரணை - தரித்தல், அமுரிதாரணை - யாவது வீரியத்தை உடம்பில் தரிக்கும்படி செய்தல். குடிநீர், சிவநீர், வானநீர், ஆகாய கங்கை, அமுத நீர், உவரி, தேறல், மது, கள், மலை நீர் என்பன வெல்லாம் அமுரியைக் குறிக்கும் பல சொற்களாம். சந்திரன் தூலத்தில் வீரியமாகவும், சூக்குமத்தில் ஒளியாகவும், பரத்தில் ஆன்மாவின் சாட்சியாகவும் உள்ளது - யோகசிகோ உபநிடதம் நீர்அமுரியைச் சிறுநீர் என்று கல்பநூல் கூறும். பரியங்க யோகத்தின்  பின் இப்பகுதி அமைந்திருப்பதால் அப்பொருள் இங்குப் பொருந்துவது காண்க.)
845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.
பொருள் : உடம்பினின்றும் நீங்காமல் உறுதியைப் பயப்பதாகவுள்ள உணர்வு நீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு  இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் கீழ்ப்போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம். உப்பு நீரையுடைய கடலுக்கு அருகே தோண்டி எடுக்கின் நன்னீர் இருப்பது போன்று சிறுநீர் வாயிலுக்கு அருகே அமுரி இருக்கும் என்க.
846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே.
பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது இது காற்றுடன் கலந்து மேலேறும். எட்டு ஆண்டுகளில் மனம் கீழ்நோக்குதலைத் தவிர்த்து மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் - அமுரி, அமுதநீர் வளியுறு எட்டின் - பிராணவாயு.
847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே.
பொருள் : அவ்வாறு அருந்தும் சிவநீரானது கீழேயுள்ள குறியை நெருக்குவதாலும் பிழிதாலாலும் அதன் தன்னை கெட்டு மேலேறும் உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த உரோமம் கறுப்பாகும் மாற்றத்தைக் காணலாம். நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.
848. கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.
பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம். (கானல் உவரி  - உப்பங்கழி நீர். வரைதல் - நீக்குதல்)
849. அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.
பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.
850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்
சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.
பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது.
21. சந்திர யோகம்
(சந்திர யோகம் என்பது சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம் என்றபடி புறத்தே சந்திரன் சூரியன் அக்கினி முதலிய ஒளிப்பொருள்கள் இருப்பன போன்று அகத்தேயும் உண்டு.)
851. எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலைபோல ஏறி இறங்குமாம்
துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே.
பொருள் : சந்திர கலை தூல உடலில் இருந்து சூக்கும உடலுக்கு ஏறியும் சூக்கும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும். இது புறத்திலுள்ள சந்திரன் ஒரு பட்சத்தில் வளர்வதும் மற்றொரு பட்சத்தில் தேய்வதும் போல் அமையும் சந்திர கலை விளக்கத்தால் சூக்கும உடல் தூய்மை பெறுவதற்கேற்பத் தூல உடலும் தூய்மை பெறும் (பக்கம் - பட்சம்)
852. ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டோடு ஆறிரண்டு ஈரைந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
பொருள் : உடம்பினுள் ஆகின்ற சந்திரன் சூரியன் அக்கினியாகிய மூன்றுக்கும் முறையே பதினாறு, பன்னிரண்டு, பத்தாக இயங்குகின்ற கலைகள் எல்லாம் நடு நாடியான சுழுமுனை வழி இயங்கச் செய்கின்ற யோகி அறிந்த அறிவேயாகும். சந்திரகலை 16, சூரியகலை, 12 அக்கினிகலை 10.
853. ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலங்கினார் ஞாலம் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்கால் ஈரெட்டு
மாறாக் கதிர்கொள்ளும் மற்றங்கி கூடவே.
பொருள் : பன்னிரண்டு கலைகளையுடைய சூரியனைச் சந்திரனோடு சேர்க்கப் பயின்றவர் உலகம் உவக்கும் பேற்றினை எய்துவர். பெருங்கால் என்ற சந்திரகலை பதினாறும் அக்கினி கலை சேரவே சூரியகலை அடங்கப் பெற்று விளங்கும்.
854. பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.
பொருள் : சூரியகலை உயர்ந்து செல்லும் அளவு பன்னிரண்டு ஆகும். வெண்மதிக்கலை உயர்ந்த அளவு பதினாறாம். சூரியகலையும் சந்திரகலையும் பொருந்திய அக்கினி கலையின் வியாபகம் அறுபத்து நான்காகும். அவ்வாறாகக் கலைகள் நின்றமையை அறிந்து கொள்ளுங்கள். இங்குக் கூறியவை உயர் கலைகள் சிரசுக்குமேல் எல்லாக் கலைகளும் கருவாக அறுபத்திநான்கு  கலைகளாக உள்ளன.
855. எட்எட்டு அனலின் கலையாகும் ஈராறுள்
சுட்டப் படும்கதி ரோனுக்கு சூழ்கலை
கட்டப் படும்ஈர் எட்டாம் மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடுஒன்று ஆகவே.
பொருள் : அக்கினியில் கலைகள் அறுபத்து நான்கும், சூரியனுக்கும் சூழ்ந்துள்ள கலைகள் பன்னிரண்டு என்று சுட்டி அறியப்பெறும். விந்து செயத்தால் அமையும் சந்திரகலை பதினாறாகும். இக்கலைகள் எல்லாம் ஒன்றையொன்று பொருந்தியிரா.
856. எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலையென்ப
கட்டப் படும்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே.
பொருள் : அறுபத்தி நான்கும், பன்னிரண்டும் பதினாறும் முறையே அக்கினி, சூரியன் விந்து நீக்கமற்ற சந்திரன் ஆகியவற்றின் கலைகள் என்பர். இவை கட்டப்படும் மூலாதாரத்திலுள்ள நட்சத்திரத்துக்கு நான்கு கலைகள் உள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட தொண்ணூற்றாறும் கலைகளாகும். சுட்டிட்ட சோமன் என்பதற்கு அமாவசையில் திங்களின் கதிர் ஒடுங்கியிருப்பதால் சுட்ட சோமன் எனக்கூறப்படும் என்பது ஒரு சாரார் கொள்கை.
857. எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் பாரே.
பொருள் : சோம சூரிய அக்கினியாகிய எல்லாக்கலைகளும் இடைபிங்கலை நடு நாடியின் வழியே தொடர்புடையன. அவற்றின் இயல்பான கீழ் நோக்குதலைத் தடுத்துச் சிரசின்மேல் சகஸ்ரதளத்தில் சேரும்படி செய்தலால், நல்ல யோகியர் சிவத்தியானத்தில் பொருந்தியிருப்பார். (இடநாடி - இடகலை. வலநாடி - பிங்கலை; நடுநாடி சுழுமுனை)
858. அங்கியில் சின்னக் கதிர்இரண்டு ஆட்டத்துத்
தங்கிய தாரகை யாகும் சசிபானு
வங்கிய தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ரம் ஆகும் தரணிக்கே.
பொருள் : கீழேயுள்ள அக்கினியில் குறைவினையுடைய இடைபிங்கலைகளின் அசைவில், பொருந்தி ஒளியாகும் சந்திரசூரியர்கள் நாதத்தைச் செய்கின்ற பிரணவமாக மேலே சென்றபோது விளங்கும் அவ்வொளியே, பரையொளி விளங்கும் மேன்மையான சக்கரமாகப் பூமியில் விளங்கும்.
859. தரணி சலங்கனல் கால்தக்க லானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.
பொருள் : நிலம், நீர், தீ, காற்று, சிறந்த ஆகாயம், அழகிய சூரியன், அருமையான சந்திரன், அக்கினி மாறுபாட்டைச் செய்யும் சீவ ஒளியாகிய ஒன்பதும் பிரணவமாகிய பெரு நெறியாகும் அங்கி (சிவவேள்வித்தீ)
860. தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவனர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்து யோனிகள்
தாரகை தாரகை தானாம் சொரூபமே.
பொருள் : சந்திரன் தேய்பிறையை அனுசரித்துக் கீழ்முகமான போது மூலாதாரத்திலுள்ள ஒளி பிரகாசம் அடையும் சந்திரன் வளர்பிறையை அனுசரித்து  மேல்முகமான போது மூலாதாரத்திலுள்ள ஒளி பிரகாசம் இராது. மூலாதாரத்திலுள்ள ஒளியில் எல்லா யோனிகளும் உள்ளன. மூலாதாரச் சக்கரத்துக்குக் காரணமான அகவொளியே சகல சீவர்களின் சொரூபமாகும். தாரகைகளே உலகில் சகல உற்பத்திக்கும் காரணம்.
861. முற்பதின் ஐஞ்சின் முளைத்துப் பொருத்திடும்
பிற்பதின் ஐஞ்சில் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதின் ஐஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலும் ஆமே.
பொருள் : சந்திரனது கிரணங்கள் முதல் பதினைந்து நாள்களில் சிறிது சிறிதாக வளர்ந்து பெருத்துப் பூரணத்தை அடையும் பிற் பதில் ஐந்தில் சிறிது சிறிதாகத் தேய்ந்து பருத்த நிலையினின்றும் குறைந்து விடும். அகரச்சுட்டால் உணர்த்தும் வளர்பிறையை அறிய வல்லவர்கட்கு அளவிட்டுக் கூற முடியாத பெருமை யுடைய சிவனது திருவடியை அடைதலுமாகும்.
862. அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால் தாமம்ஐந்து ஐந்தாக்கிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிர்அங்கி சேர்கின்ற யோகமே.
பொருள் : மூலத்தீயை எழுப்பி அருமையான சூரிய மண்டலப் பெருக்கத்தில் விளங்கும் சந்திர மண்டலத்தால் அகர, உகர, மகர, விந்து நாதமாகிய ஐந்தும் விரிந்த பிரயையுடையதாய் ஒளியான பிரணவம் விளங்கும். அதனால் ஐம்புலவழி போகாது சந்திரன் சூரியன் அக்கினியாகிய மூன்றும் சேர்கின்ற போதும் அமையும்.
863. ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி வாரே.
பொருள் : ஒன்றுபட்ட சந்திர கலைகள் பதினாறும் உடம்பின்கண் பொருந்த நிற்கின்ற ஒளிநிலை கண்டும் தாழ்வானவர்கள் உண்மையை நினைக்கின்றிலர். அதனால் அவர்கள் சினங்கொள்ளும் எமன், உடம்பினின்றும் உயிரைப் பிரிக்க எண்ணம் வைத்தபின் அவ் எண்ணப்படி சென்று இறப்பு என்னும் சுழியில் வீழ்வர். இத்தடுமாற்றமாகிய மயக்கத்தினின்றும் விடுபடார். நீதர்கள் - நீசர்கள்.
864. அங்கி மதிகூட லாகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கி அதுவே சகலமும் ஆமே.
பொருள் : ஆண் குறியிலுள்ள சந்திரன் மூலாக்கினியோடு பிரமரந்திரம் நோக்கிச் சென்றால் சூரிய ஒளி கிட்டம், மூலாதாரத்திலுள்ள அக்கினியையும் மணிபூரகத்திலுள்ள சூரியனையும் ஒன்றாகச் சேர்ப்பதில் சந்திரன் ஒளி அமையும். இவ்விரண்டு ஒளியும் பிரமரந்திரத்தில் ஒன்றானால் சோம சூரியாக்கினி கூடிய பிரணவம் அமையும். அந்நிலையே சகலமும் ஆம்.
865. ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை
பேராற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே,
பொருள் : பன்னிரண்டு கலைகளையுடைய சூரியன் பெண், பதினாறு கலைகளையுடைய சந்திரன் ஆண், இவ்விரண்டும் புறத்தே செல்லாமல் பிடித்து நிறுத்தி, முகத்துக்கு முன்தோன்றும் ஒளியில் கலப்பித்தால் தெவிட்டாத திருவடி இன்பம் நிலைத்த இன்பமாக விளங்கும். (சூரியன் ஆண், சந்திரன் பெண் என்று மற்றொரு சாரார் பொருள் கொள்கின்றனர்.)
866. காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்விரேல்
ஆணி கலங்காதுஅவ் ஆயிரத்து ஆண்டே.
பொருள் : மாட்சிமையுடைய சந்திரனாகிய இடக்கண் பார்வையைச் சூரியனாகிய வலக்கண் பார்வையோடு குரு காட்டிய நெறியில் பொருந்தியும், தோன்றுகின்ற சூரியனாகிய வலக்கண் பார்வையை இடக்கண் பார்வையோடு பொருந்தியும் இம்முறையில் நின்று வழுவாமல் பாதுகாத்து வந்தால் ஆயிரம் ஆண்டு இவ்உடம்பாகிய ஆணி கெடாது நிலைபெறும். (மூக்கின் வழி இயங்கும் மூச்சுக்காற்றைக் குறிப்பதாக ஒரு சாரார் பொருள் கொள்கின்றனர்.)
867. பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
பொருள் : சீவகலை ஒன்பதில் சகஸ்ரதளத்துக்குச் சென்ற போது சிரசில் நாதம் முழங்கும். அந்நாதத்தில் தேவாதி தேவனான சிவபெருமான் களிப்புடன் பொருந்துவான். இந்நிலைக்கு முன்னே சூரிய சந்திரர்கள் வலப்புறம் இடப்புறமும் சிறு தீப ஒளிபோல் விளங்குவர். சூரியன் புறப்படுமுன் சங்கோசை மக்களை எழுப்புவது போல் ஞானசூரியன் எழுமுன் நாதம் உதித்து முன்னேவிளங்கும் (ஒன்பதில் - ஒன்பது துவாரங்களையுடைய தேகத்தில் என்று பொருள் கொண்டு அத்துவாரங்களில் வழியாகத் தோன்றும் ஓசைகள் என்று சிலர் கூறுவர்.)
868. கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவன் உள்ளே பொதிமழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறஞ்சென்று அடர்ப்ப
எதிரவன் ஈசன் இடமது தானே.
பொருள் : சூரிய சந்திர இயக்கத்தில் காலம் அளவிடப் படும். இருவரும் ஒன்று சேர்ந்த பிரணவ நிலையில் சிவசக்தி விளங்குவதால் அமுதும் பெருகும் அருள் நிலையுள்ளது நாத சம்மியம் செய்பவன் நாதத்தோடு கூடி அண்டத்தின் எல்லையாகிய துவாத சாந்தத்துக்குச் சென்று நெருங்க அவ்விடத்தில் ஈசனும் நேராக எதிர்ப்பட்டு விளங்குவான்.
869. உந்திக் கமலத்து உதித்தெழும் சோதியை
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலார்
அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந்தானே.
பொருள் : மணிபூரகத்தில் வெளிப்படுகின்ற சேதியை, அடைந்து பிரணவத்தின் உண்மையை யாரும் அறியவில்லை . யாவராயினும் அடைந்து பிரணவத்தை அறிந்தபின் அவர்க்குச் சிவ ஒளிக்கு முன்னே சீவ ஒளி பிரகாசித்து நிற்கும். ஆறு இடங்களுக்கும் உரியவை முறையே 1 ஓம், 2. ஓம் நமச்சிவய; 3. நமசிவய; 4. சிவாயநம; 5. சிவயசிவ; 6. சிவசிவ என்பவையாகும்.
870. ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.
பொருள் : உண்மைப் பயன் ஒன்றும் அறியமாட்டார். அவ்வுண்மையைப் பிறர் எடுத்துச் சொன்னாலும் தாமே படித்தாலும் உணராத அறிவிலிகள், சந்திரகலையின் ஆதியையும் முடிவையும் சேர்க்கத் திறம் பெற்றீர்ஆகில் இரச குளிகை போன்று மாற்றத்தைச் செய்யும் சிவமும் அங்கே வெளிப்பட்டு விடும். (ஆதியும் அந்தமும் - சுவாசம் உதித்தலும் ஒடுங்குதலும்)
871. பாம்பு மதியைத் தினலுறும் பாம்பது
தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும்
பாம்பு மதியும் பகைதீர்த்து உடன்கொளீஇ
நீங்கல கொடானே நெடுந்தகை யானே.
பொருள் : குண்டலினியாகிய பாம்பு சுவாதிட்டானத்தில் பொருந்திச் சந்திர கலை வளர வொட்டாது விந்துநீக்கம் செய்து கொண்டுள்ளது. அக்குண்டலினியில் ஆற்றல் தீமை தரும் மணி பூரகத்திலுள்ள சூரியனையும் அசைத்து வெப்பத்தினைச் செய்து கொண்டிருக்கும். குண்டலினியையும் சந்திரனையும் பகைமைத் தன்மை நீங்கும்படி சிரசின்மேல் உடனாகக் கொண்டால், பெருங்கருணையாளனான சிவபெருமான் சாதகனை விட்டு நீங்கமாட்டான்.
872. அயின்றது வீழ்வள வும்துயில் இன்றிப்
பயின்ற சகிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவும் சசியே.
பொருள் : குண்டலினியோடு சென்ற சந்திரன் சிரசின் மேல்நிற்கும் அளவும் உறங்காது அதனைக் கவனித்தும் அப்படியாக நின்ற சந்திரன் கீழே இறங்கிய போதும் உறங்கியும், நன்மையைத் தரும் ஒளியை உள்ளத்தில் நிலைப்பித்தால், விரிவினைச் செய்யும் சந்திரன் பூரணமாகச் சாதகனிடம் விளங்கும் பூரணை - நடுநாடி.
873. சசிஉதிக் கும்அள வும்துயி லின்றிச்
சசிஉதித் தானேல் தனதுஊன் அருந்திச்
சசிசரிக் கின்ற வும்துயி லாமல்
சசிசரிப் பின்கட்டன் கண்துயில் கொண்டதே.
பொருள் : சந்திரன் சிரசில் உதிக்குமளவும் காலை எழுந்ததும் தியானம் செய்து சந்திரன் உதித்த பிறகு தன் உணவை உட்கொண்டு சந்திரன் சிரசில் சஞ்சாரம் செய்யும் வரை துயிலாதிருந்து, சந்திரன் சிரசை விட்டுக் கீழ் இறங்கியதும் இது காறும் கட்டி நிறுத்தினவன் உறங்கலாம் (கட்டன் ஒளியைக் கட்டி நிறுத்தினவன்.)
874. ஊழி பிரியாத இருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பார்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் வார்இச் சசிவன்ன ராமே.
பொருள் : ஊழிக்காலம் உயிர் பிரியாதிருக்கின்றயோகியர் நாழி கையைக் கருவியாகக் கொண்டு எமனது வாழ்நாளை அளந்து விடுவார்கள். இவர்கள் உலகில் பஞ்ச இருத்தியம் செய்யும் சதாசிவமூர்த்தியாவர். உலகில் ஆணவமற்றுச் சித்தை முதலாகக் கொண்டு கண்ணொளி பெற்றவராய் விளங்குவர். பஞ்சகிருத்தியம் - ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்பனவாம்.
875. தண்மதி பானுச்சிச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வுஅள விற்குஅணம் இன்றே.
பொருள் : குளிர்ச்சி பொருந்திய சந்திரன் உச்சியாகியவழியில் சென்று உலகினரால் மதிக்கப் பெற்ற இறப்பு நிகழ்வு எதிர்வு ஆகிய முக் காலங்களையும் அவற்றின் காரணங்களையும் உணர்ந்து பூரண நிலா மண்டலத்தைக் கண்டபின் அதிலிருந்து விளைந்து விளங்கும் அமுதத்துக்குக் குறைவில்லை.
876. வளர்க்கின்ற ஆதித்தன் தன்கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை ஆறும்
மலர்ந்தெழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார்அறி வாரே.
பொருள் : மேஷம் முதல் கன்னியா ராசிவரையுள்ள ஆறுகலைகள் வளர்வதிலும், உடலாட்சிக்கான அகரம், உகரம், மகரம், விந்து, அர்த்தசந்திரன், நிரோதினியாகிய ஆறுகலைகள் குறைவதிலும், சுவாசம் நான்கு விரற்கடை கழிவுறாமல் பன்னிரண்டு விரற்கடை விரிந்தோடி விரிந்து நிறைந்தமை யாரே அறியவல்லார் ? சூரியன் கலைகள், மேஷம் ரிஷபம், மிதுனம் கடகம், சிம்மம், கன்னி என்பன.
877. ஆம்உயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கும் போகாது யோகிக்குக்
காமுறவு இன்மையின் கட்டுண்ணும் மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.
பொருள் : ஆகின்ற உயிர்க்குக் குறைகின்ற மதி நாளாவது விந்து கழிகின்ற வழியாலாம். யோகியர்க்குக் காமத் தொடர்பு இல்லை. யாதலின் விந்து நழுவாது. மூலாதாரத்தில் கட்டுப்பட்டு விடும். ஆகவே நீங்கள் பிரணவம் விளங்கும் மதிமண்டலத்தில் உணர்வினைச் செலுத்தி ஏத்துமின்.
878. வேறுறச் செங்கதிர் மெய்க்கலை ஆறொடும்
சூறுற நான்கும் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறில்கி னன்கலை ஈர்ஐந்தொ டேமதித்து
ஆறுட் கலையுள் அகல்உவா வாமே.
பொருள் : சிரசில் வலப்பாகத்தில் மேஷ ராசி முதல் கன்னியாராசி வரை விளங்கும் சூரியன்கலை ஆறுடன் கீழுள்ள மூலாதாரத்திலுள்ள நான்கு கலைகளும் கலந்தே நிற்கும் அறிவுப் பொருளான் சூரியன். அக்கினி கலைபத்துடன் சந்திரன் விளக்கும் துலாம் முதல் மீனராசி வரையில் அறிவு பதிந்த போது சந்திரன் பௌர்ணமி நாளாக விளங்கும். (சூறு - கீழ்ப்புறும்; இனன் - சூரியன்)
879. உணர்வித்து சோணி உறவினன் வீசும்
புணர்வித்து வீசும் கதிரிற் குறையில்
உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.
பொருள் : உணர்வினாலான விந்து சுரோணிதத்துடன் உறவு கொள்ளின் சூரியன் மிக்க ஒளி வீசும். ஆனால் சூரியனது ஆற்றல் குறையின் புணர்ச்சியாலான விந்து ஒளியாகச் சிரசின்மேல் வீசும் ஒளிமயமான உணர்வும் (சூக்கும உடம்பும்) தூலமான உம்பும் ஒத்து நிற்கில் ஒளிமயமான உணர்வும் (சூக்கும உடம்பும்) தூல உடம்பும் யோகிக்கு ஒரு காலத்தும் நீங்கா.
880. விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதம் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.
பொருள் : புறம் போகாத மனம் காற்றோடு இடப்புற மூளையில் பொருந்தி, யாவற்றையும் நடத்துகின்ற சிவசங்கின் தொனியைக் கேட்டு, ஐம்புல ஆசையில் செல்லாது அடங்கி நிற்கும். அவ்வாறு பிரணவத்தில் கட்டப்படாதன வாயின் சாதகர்இன்பமாகிய அமுதத்தைப் பருகமாட்டார்.
881. அமுதப் புனல்வரும் ஆற்றங் கரைமேல்
குமிழிக் குள்சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத்தண்டு ஓட்டித் தரிக்கவல் லார்க்கு
நமம்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.
பொருள் : சந்திர மண்டலப் பிரவாகம் பிடரிக்கண்ணிலிருந்து பாய்ந்து விளங்கும் சகஸ்ரதளத்தில் அதன் கரணிகை குமிழ் போன்று உயர்ந்து நிற்பதில் சிவம், சத்தி, நாதம், விந்து, சீவன் ஆகிய ஐந்து சுடர்களையும் ஒன்றுபடுத்தி, மூலாக்கினியை வீணாத்தண்டில் செலுத்திக் காண்பவர்க்கு இறப்பு இல்லாமையோடு ஒளிபெருகும் காலம் என்று ஒன்று இல்லையாம். ஆறு - ஒளிப் பிரவாகம்.
882. உண்ணீர் அமுதம் உறும்ஊறலைத் திறந்து
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி அமர்ந்துதீ ராநலம்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.
பொருள் : அனுபவிக்கத் தகுந்த அமுதம் ஊறும் ஊறலைத் திறந்து பிரபஞ்சக் கலப்பால் மாறுதல் இல்லாத ஒப்பற்ற சூரியசந்திரர்கள் பொருந்திய சகஸ்ரளத்தை அடைய தெளிவான நீரினுள் இருப்பது போன்ற உணர்வுடன் சமாதியில் நிலைத்து, முடிவில்லாத ஆனந்தத்தை விளைவிக்கும் கண்ணில் விளங்கும் சிவம் உணர்த்தும் வழியில் நின்று பிராண இயக்கத்தை மாற்றுங்கள்.
883. மாறு மதியும் மதித்திரும் மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுஉடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.
பொருள் : கீழ்நோக்குதல் இல்லாத சந்திரகலையை மாறுபடாமல் போற்றியிருங்கள். பிரிவுபடாமல் வீணாத் தண்டினூடே சகஸ்ரதளத்தை அடைந்தால், உடம்பு அழியாது வேண்டிய யோக உபாயங்களும் சிதறாது கிட்டும். இன்பம் உலகில் எங்கும் பெருகும்.
மூன்றாம் தந்திரம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக