செவ்வாய், 30 ஜூன், 2015

மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது!

ராதே கிருஷ்ணா 01-07-2015







மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது!

(இந்த வார கல்கி)

மூன்று வயஸாவது பெரியவனாக இருப்பவனுக்குத்தான் பூமியில் விழுந்து நமஸ்காரம், மற்றவர்களுக்கு வேறே தினுஸில் ‘விஷ்’ பண்ணுவது என்பார்கள். முன்னேயே சொன்னாற்போல, விநயம் ரொம்பக் குறைந்து வருகிற இந்நாளில் நமஸ்காரப் பழக்கத்தை எவ்வளவு வ்ருத்தி செய்து கொடுத்தாலும் நல்லதுதான் என்பதால் குறைந்த பக்ஷம் மூன்று வயஸு ஜாஸ்தி இருக்கணும் என்பதைப் பார்க்கலாம். நம்மைவிடப் பெரியவர்களாக உள்ள எல்லாருக்குமே நமஸ்காரம் பண்ணிவிடலாமென்று தோன்றுகிறது.

கண்டிப்பான சாஸ்த்ர விதிப்படியேகூட நம்மைவிட வயஸில் சின்னவர்களாகவுள்ள சில பேருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டுமென்று இருக்கிறது. உதாரணமாக, மன்னி வயஸில் சின்னவளாகவே இருந்தாலுங்கூட ஸ்தானத்தால் தாயார் மாதிரி என்பதால் நமஸ்காரம் பண்ணவேண்டும். அதே மாதிரிதான் குரு பத்னியும் ஒருவேளை நம்மைவிட வயஸு குறைவானாலும் நமஸ்கரிக்கணும். பொதுவாகவே கூட, நம்மைவிட வயஸில் பெரிய எவருடைய பத்னியும் அவரில் பாதி என்பதாலும், தம்பதி ஸமேதர்களாக நம்ஸ்கரிப்பது விசேஷம் என்பதாலும் அந்த ஸ்த்ரீகளுடைய வயஸைப் பார்க்காமல் விழுந்து நமஸ்கரிக்கணும்.

வித்யையில் பெரியவர், குணத்தில் பெரியவர், அநுபூதிமானாக இருப்பவர், பக்த ச்ரேஷ்டர்கள், ஞானிகள், ஸந்நி யாஸிகள், ஆத்ம ஸம்பந்தமான, தர்ம ஸம்பந்தமான ஸ்தாபனங்களில் ஆசார்ய ஸ்தானத்தி லுள்ளவர்கள் அதாவது பணம், பதவி, அந்தஸ்துகளால் இல்லாமல் வேறே விதங்களில் பெரியவர்களாக உள்ள எல்லோருக்குமே இந்த மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது. நம்மைவிட வயஸில் சின்ன வர்களானாலும் நமஸ்கரிக்கணும். குரு புத்ரனையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளணும்.

நிறைய பேரின் காலில் போய் விழ விழ அஹங்காரம் குறைந்து கொண்டே வரும் என்பதுதான் பொதுக் கொள்கை.
 — with Kunchithapatham Kashyap.



ராம் ராம், இந்த நாள்இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 69

க்ஷத்ரியரும் ப்ராமணரும்

இன்னொரு விஷயமும் தோன்றுகிறது. ப்ராமண த்ரோணரை எதிர்த்தவன் க்ஷத்ரிய த்ருபதன். ப்ராமணர்கள் அத்யாபனம் செய்து வந்த வேதத்தையும், அவர்கள் அநுஷ்டானம் செய்த யஜ்ஞ கர்மாவையும் எதிர்த்த புத்தரும் ஜினரும்கூட க்ஷத்ரியர்கள்தான். பிற்காலத்தில், அதாவது தற்காலத்துக்கு ஐந்நூறு வருஷம் முந்தி வேத ப்ராமாண்யம் (வேதத்தின் ‘அதாரிடி’), வர்ணாச்ரமம் ஆகியவற்றை புத்தர், ஜினர் ஆகியவர்களைப் போலவே ஆக்ஷேபித்து, ஆனாலும் ஹிந்து தர்மத்திலிருந்து அடியோடு முறித்துக்கொண்டு போகாமல் இதிலிருந்தே நாம ஜபம், சப்த ப்ரஹ்ம அநுஸந்தானம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஸிக்கிய மதத்தை ஸ்தாபித்த நானக் யார் என்று பார்த்தால் அவரும் க்ஷத்ரியர்தான்.

கொள்கையை எதிர்த்துப் புதுசாக மதம் பண்ணாமல், ஒரு ப்ராமணரிடம் தனிப்பட்ட முறையில் த்வேஷம் கொண்டவர்களாக இருந்தவர்களைப் பார்த்தாலும் த்ரோணரிடம் விரோதம் கொண்ட த்ருபதன், அவருக்கு முந்தி ஜமதக்னி மஹர்ஷியிடம் விரோதம் பாராட்டிய கார்த்தவீர்யன் முதலானவர்கள் க்ஷத்ரியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். த்ருபதனுக்கு ஏளனமாக ஆரம்பித்தது த்வேஷமாக முடிந்தது. கர்த்தவீர்யனுக்கோ ஜமதக்னியிடம் பொறாமையில் ஆரம்பித்தது. ‘இந்த ப்ராமணன் ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு குடிசையில் உட்கார்ந்திருந்தாலும் இவனுடைய தபோபலத்தால் அல்லவா நம் புஜபலத்தால் பெறமுடியாத தேவலோகப் பசுவான ஸுரபியைப் பெற்று இஷ்டமானதையெல்லாம் கறக்கும் அதைக் கொண்டு, பரிவாரத்தோடு வந்திருக்கும் நமக்கு இவனுடைய பத்னி இவ்வளவு விருந்துபசாரம் பண்ண முடிகிறது?’ என்ற பொறாமை கர்த்தவீர்யாஜுனனுக்கு முற்றிப்போய்த்தான் த்வேஷமாக ஆகி அவன் அந்த மஹர்ஷியை வதம் பண்ணியது. இதேபோல ப்ராமண வஸிஷ்டரிடம் க்ஷத்ரிய விஷ்வாமித்ரருக்கு ஏற்பட்ட மாத்ஸர்யம், அவர் போட்ட போட்டி, அப்புறம் “வஸிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி” ஆனது எல்லாமும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம்முடைய சாஸ்திர புராணங்களில் ரொம்பக் குறைவான இடங்களில் தான் என்றாலும், அங்கங்கே இப்படி ப்ராமணனின் தபோபலத்துக்கும், க்ஷத்ரியனின் புஜபலத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டதாகப் பார்க்கிறோம்.

இதே ஆராய்ந்து பார்த்தோமானால் தற்போது வர்ண தர்மத்தை ஆக்ஷேபித்து எழுப்பப்படும் ஒரு புரளி உடைபட்டுப் போய்விடும். தற்காலச் சீர் திருத்த வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், துருக்கர், வெள்ளைக்காரர் முதலிய அந்நிய தேசத்தார் இத்தனாம் பெரிய நம்முடைய உபகண்டத்தை அவர்களுடைய ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வந்ததற்குக் காரணமே வர்ண விபாகத்தால் நம்முடைய ஸமுதாயம் பிளவுபட்டு பலஹீனமாயிருந்ததுதான் என்று சொல்கிறார்கள். உள்ளர்த்தம் என்னவென்றால், ப்ராமணர்கள் ராஜாக்களைக் கையில் போட்டுக்கொண்டு மற்ற ஜனங்களை ரொம்பவும் தாழ்த்தி வைத்திருந்தார்கள். இதனால் மனம் கசந்து போயிருந்த மெஜாரிடியான மற்ற ஜாதிக்காரர்கள், ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று அந்நியர் படையெடுத்தபோது, தங்கள் ராஜாவுடன் ஒத்துழைக்காமலோ, அல்லது அந்நியர்களுக்கு ஸஹாயமே செய்தோ நாம் தோற்றுப்போகும்படியாகப் பண்ணினார்கள் என்பதுதான். ப்ராமணர்களைக் குற்றவாளிகளாகப் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தில் கற்பித்திருக்கிற இந்த அபிப்ரயாப்படி உண்மையில் இதர ஜாதியினர்தான் பெரிய குற்றவாளிகளாக ஆக்கபடுகிறார்கள். தங்களுக்கு உயர்வு இல்லை என்பதற்காக தேசத்தையே பிறரிடம் அவர்கள் காட்டிக் கொடுத்ததாகத்தானே இந்த அபிப்ராயப்படி ஆகிறது? இம்மாதிரி, அவர்கள் ப்ரம்ம – க்ஷத்ரியர்களிடம் த்வேஷம் கொண்டிருந்ததாகவோ, அந்நியர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவோ சரித்ர ரீதியில் ஸாக்ஷியே கிடையாது. ஆனாலும் இப்படிச் சான்று எதுவும் காட்டாத அந்த சரித்ர புஸ்தகங்களை எழுதியுள்ள வெள்ளைக்காரர்களும், அந்த வெள்ளைக்காரர்களின் மனபான்மையிலேயே ஊறிப்போய்விட்ட நம்மவர்களும், “வர்ணபேதம் இருந்ததால்தான் ஹிந்து ஸமுதாயம் கட்டுக்கோப்பில்லாமல் பிறர் ஆதிக்கத்தில் அடிக்கடி விழுந்தது” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

நம் ராஜாக்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமலிருந்ததால்தான் அந்நியருக்கு இங்கே ஆதிக்கம் கொடுத்துபோயிற்றே ஒழிய வர்ண விபாகத்தினால் ஏதோ உட்பூசல் ஏற்பட்டிருந்தால் இல்லவே இல்லை.

சற்று முன் காட்டிய மாதிரி, எப்போதாவது இரண்டு வர்ணங்களிடையே மோதல் ஏற்பட்டது என்றால் அது ப்ராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் இடையேதான்.





பெரியவா சூலூர்ப் பேட்டையில் தங்கியிருந்த
சமயம் ஒரு சூரிய க்ரஹணம் வந்தது.

தற்செயலாக நாங்கள் தரிசனத்துக்குச்
சென்றிருந்தோம்..

க்ரஹணம் பிடிக்க வேண்டிய ஸ்னானத்துக்கு
சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்கு பெரியவா
சென்றார்களெல்லாரும் உடன் சென்றோம்.
ஸ்னானம் செய்வதற்குமுன் சொல்ல
வேண்டிய சங்கல்ப மந்திரம் சொல்ல அங்கு
பண்டிதர் யாரும் இல்லாததால் பெரியவாளே
சங்கல்ப மந்த்ரத்தைச் சொன்னார்.எங்கள்
பாக்யம்!

பின் க்ரஹணம் முடிந்த பிறகு ஸ்ரீமடத்துக்கு
அருகில் உள்ள திருக்குளத்துக்கு விமோசன
ஸ்னானம் செய்ய பெரியவாளுடன்
நாங்களும் சென்றோம் . வழி நெடுகிலும்
நெருஞ்சி முட்கள்.பெரியவா பாதங்களை
படாத பாடு படுத்தி விட்டன. குளத்தின்
படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு,
ஒரு கால் மேல் மற்றொறு காலை மடித்து
வைத்துக் கொண்டு தக்ஷிணாமூர்த்தியாகக்
காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தன் உள்ளங்காலை உன்னிப்பாகப் பார்த்தார்கள்.
எத்தனை முட்கள் அவரது சரணத்தில் தஞ்சம்
புகுந்தனவோ!

அடியார்களாகிய நாங்கள் சற்று தூரத்திலிருந்து
இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
என்னை மட்டும் அருகில் அழைத்தார்! எத்தனை
முட்கள் பார் என்று காட்டப் போகிறார்கள் என
நினைத்து அருகில் சென்றேன்.

''என் உள்ளங்காலைப் பார் , நிறைய சக்கரங்கள்
இருக்கு; இங்கே பார் ஒரே புள்ளியில் மூன்று
ரேகைகள் சந்திக்கின்றன. அதனால் வண்டிச்
சக்கரம் போல் ஆறு ரேகைகள் தோன்றுகிறதில்லையா?''
இதற்கு ஷடரம் என்று பெயர். இந்த ரேகை இருப்பவர்கள்
ஓரிடத்தில் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.
(அதனால்தான் நானும் ஓடிக்கொண்டே இருக்கேன்!)

ராம நாதபுரம் ராஜா சொன்னார்..''உங்கள் பாதங்களில்
அபூர்வ ரேகைகள் இருக்கின்றன; நடந்தால் அவை
அழிந்துவிடும், அதனால் நான் என் ஆட்களுடன் மேனா
ஏற்பாடு செய்கிறேன் ''என்றார்.
''என்னிடமிருந்த பக்தியினால் அப்படிச் சொன்னார்
ஆனால் நான் அது காரிய சாத்யமில்லை என்று சொல்லி
விட்டேன்''

அதன்பிறகு ஸ்னானம் செய்து முகாமுக்குத்
திரும்பினோம்.

ஊர் திரும்பியதும் நடந்ததை அம்மாவிடம்
சொன்னேன்.
அம்மாவுக்குப் பரம பரவசம்!
''யாருக்கும் கிட்டாத பாத தரிசன அனுக்ரஹம்
உனக்குக் கிடைத்திருக்கு! க்ரஹண புண்ய
காலத்தில் பாத தரிசனம் கொடுத்து உன்னை
ஆசீர்வாதம் பண்ணியிருக்கா''

இதனை டைப் அடிக்கும்போது உள்ளம் நெகிழ்கிறது
முதலாவதாக பத்ம பாதம் எப்படி நொந்திருக்கும்
என்ற பாமரத்தனமான நினைவு; அடுத்து எப்பேர்ப்பட்ட
பாக்யசாலி இந்த அனுபவத்தை அடைந்த எஸ் சீதாராமன்
என்ற பக்தர்! எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
இறைவா எனப் பாடத் தோன்றுகிறதல்லவா? மிக்க
அனுக்ரஹசாலி!!

தகவல் கோதண்டராம சர்மா தரிசன அனுபவங்கள்

ஜய ஜய சங்கரா....





"விதண்டாவாதியும் மஹாபெரியவாளும்"

(கோபப் புயலாய் இருந்த பெரியவா

அருட் தென்றலாய் மாறிய நிகழ்ச்சி)

புத்தகம்-சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்.

ஆசிரியர்------ஸ்ரீ ரா. கணபதி.

(ஒரு மறுபதிவு)

ஓர் இரவு பெரியவாளிடம், ஒரு வெளியூர் அடியார், மறுநாள் அதிகாலை ஊருக்குப் புறப்படவிருப்பதாகச் சொல்லிப் பிரஸாதம் கேட்டபோது, " நாளைக்கு விடிகாலை ஊருக்குப் போறயா? ஸ்ரீராமநவமியாச்சே?, ஒண்ணு, வந்தது வந்தே, இங்கே மடத்துல ராமர் பூஜைக்கு இருக்கணும், இல்லாட்டா, இன்னி ஸாயங்காலம் ரயிலுக்கே போயாவது இருக்கணும். அப்ப ஊருக்குப் போய்ச்சேர்ந்து ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும். ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கேயும் இல்லாம, நாளை காலம்பர பஸ்ஸிலே போறேங்கறியே!" என்றார் ஸ்ரீசரணர்.

'அடியார்' என்று மரியாதையை உத்தேசித்துச் சொல்லப்பட்ட அந்நபர் ஒரு விதண்டாவாதி. மரியாதை முறை பாராது ஜகத்குருவிடமும் விதண்டை செய்பவர். அதற்கேற்பவே இப்போது, " நான் வேதத்துல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கிறதுகளைத்தான்பண்ணுகிறது. வேதந்தானே நமக்கு எல்லாம்? அதுல இல்லாதது எதுக்கு? வேதத்துல ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்கே இருக்கு? வேதம் ஏற்பட்டு, எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து அதைப் பின்பத்தினவாதானே அவாளும்? அதனால, ராமர், க்ருஷ்ணர் சமாசாரமெல்லம் எதுவும் நான் எடுத்துக்கிறதில்லே. ராமநவமியும் பண்றதில்லே. ராமர் படம் கூட ஆத்துல கிடையாது." என்றார்.

அப்படியானால், அவர் வேதோக்த கர்மாக்கள் செய்வாரா என்றால் அதுவும் மாட்டார்! இது ஸ்ரீசரணாளுக்கா தெரியாது?

'புரு, புரு, புரு' என்று ஒரு வேகம் ஏறி, பெரியவர்தானா பேசுகிறாரென வியப்புறுமாறு பெரியவர் விளாச ஆரம்பித்தார்!

"ஓ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும் ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸரி, அப்ப கார்த்தால எழுந்த ஒடனே டூத்பேஸ்ட், அப்புறம் காபி மூஞ்சில் முழிக்கறையே, டூத்பேஸ்டும் காபியும் வேதத்துல சொல்லியிருக்கோ? அப்புறம் சோப்புத்தேச்சுண்டு குளிக்கறயே, அந்த சோப்பு? ஒன் ஆம்படையா க்ரைண்டர்ல அறைச்சு, ப்ரெஸ்டீஜ்--ல சமைச்சதைச் சாப்படறயே, அந்த க்ரைண்டரும் குக்கரும் வேதத்துல சொன்னதுதானாடாப்பா? எல்லாத்தையும் விட, 'ஆபீஸ்'னு, அதைத்தான் ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சுண்டு போறியே, ஸூட் மாட்டிக்கிண்டு! ஸூட் வேதத்துல இல்லேங்கறது இருக்கட்டும். மொதலுக்கே மோசமா வேதத்துலே இப்படித்தான் ப்ராமண ஜாதிக்காரனை ஆஃபீஸ் உத்யோகம் பார்க்கச்சொல்லியிருக்கோ? ஆஃபீஸுக்கு ஸ்கூட்டரோ, பஸ்ஸோ, எலெக்ட்ரிக் ட்ரெயினோ எதுவோ ஒண்ணுல போறியே, அந்த வாஹனாதிகள் எந்த வேதத்துல இருக்கு?" என்றார். அதோடு விட்டரா? மேலும் மேலும், மின்விளக்கு, மின்விசிறி, ஸினிமா, கிரிக்கெட் என்பதாக அடியாரது அனுபவத்திற்கு உரிய பலவற்றை அடுக்கிக் கொண்டே போய், அது ஒவ்வொன்றும் 'வேதத்தில் சொல்லியிருக்கா/" என்றோ, 'எந்த வேதத்தில் சொல்லியிருக்கு' என்றோ முத்தாய்ப்பு வைத்தார்!

முடிவாக, " வேதத்துல எங்கேயும் 'டைரக்'டா இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்னு வெச்சுண்டு 'பப்ளிக்' பூஜை பண்ணீண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்னு இருக்கறதா தெரியெல்லே--ன்னு கூட உன் மாதிரி மேதைகளோட ஆராய்ச்சியில ஏற்படலாம்! அதனால், நீ இப்ப எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே வேதத்துல சொல்லாததுதான்--னு ஆகறது. போய்ட்டு வா!" என்றாரே பார்க்கலாம்!

விதண்டாவாதி ஆடியே போய் விட்டார்! தடாலென்று தண்ட நமஸ்காரம் செய்து ஸ்ரீசரணரிடம் தம்மை க்ஷமித்து நல்லறிவு தர வேண்டினார்!

கோபப்புயலாயிருந்த ஸ்ரீசரணாள் அக்கணமே அருட்தென்றலாகிக் கூறலானார்.

வேதகாலத்திற்குப் பிற்பட்டும் அதில் நேராக உள்ளவற்றை அநுஸரித்தே, அந்த விருக்ஷத்துடைய புதுப் புதுக் கிளை, இலை என்றெல்லாம் காலம் தோறும் அநேகம் ஏற்பட்டு வைதீக ஸம்ப்ரதாயத்தில் அங்கமாகக் கலந்து விட்டன. அதெல்லாமும் வேதமாகவே மதித்து, போற்றி, நாமெல்லாம் அநுஸரிக்க வேண்டியவைதான். மூலமாக ஒரு 'தியரி' இருந்து அதை அப்புறம் காலம் தோறும் 'அடாப்ட்' பண்ணிப் புதுப் புது 'டிஸ்கவரி' கள் செய்தால் அதெல்லாவற்றையும் கூட அந்தத்துறையைச் சேர்ந்ததாகவேதானே எடுத்துக் கொள்கிறோம்? அப்படியும் வேத தாத்பரியங்களை ப்ரயோஜனப்படுத்திப் பிற்காலங்களில் அநேகம் சேர்ந்து தற்போதுள்ள ஹிந்து மதம் என்கிறதை ரூபம் பண்ணீயிருக்கிறது----என்பதை தீர்க்கமாக விளக்கி விட்டுத் தொடர்வார்:

"இது ஒரு அம்சம். இன்னொரு அம்சம், வேதத்தில் என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ, அநுமதிச்சிருக்கோ, அந்தக் கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்தில் சொல்லாத உபகரணங்கள் பிற்காலங்களீல் கண்டு பிடிச்சிண்டே வந்திருக்கா. அத்யயனம், யக்ஞம், பூஜை, ஜபம், த்யானம் முதலான அநுஷ்டானங்கள் பண்றதைப்பற்றி மட்டும் வேதத்தில் சொல்லி நிறுத்திடலை. எழுந்ததும் தந்த தாவனம்--னு பல் தேய்ச்சுக்கறது, அப்புறம் ஸ்நானம் பண்றது, சாப்படறது, பானம் பண்றது, ஸ்வதர்ம கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கை--ன்னு ஏற்பட்டிருக்கிறதில அங்கே இங்கே ஓடறது, ப்ரயாணம் பண்றது, 'ரிக்ரியேஷன்' னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது---எல்லாமே வேதத்துல சொன்ன, அநுமதிச்சிருக்கற கார்யந்தான். ஆனா அந்தக் கார்யம் நடத்திக்க அன்னிக்கு இருந்த உபகரணம் போய், இன்னிக்கு வேறே வந்திருக்கலாம். அன்னிக்குக் குதிரை மேலேயோ மாட்டு வண்டியிலேயோ ப்ரயாணம் பண்ணிணா--ன்னா இன்னிக்கு ஸ்கூட்டர், எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்திருக்கலாம். இதுகளை வேதத்தில சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துக்கிறதுன்னு ஒரு 'பாலிஸி'யா வெச்சுண்டு தள்ளுபடி பண்ண வேண்டியதில்லே! இந்த உபகரணங்களில் எது எது வேதத்தின் 'ஸ்பிரிட்' டுக்கு விருத்தமாயிருக்கோ[ விரோதமாகயிருக்கின்றனவோ] அநாசாரத்தை உண்டாக்கறதோ அதையெல்லாம்தான் தள்ளுபடி பண்ணணும். டூத்பேஸ்ட்லேந்து, காபிலேந்து ஆரம்பிச்சு, அநாசாரம் கலந்ததையெல்லாம்தான் நிஷேதிக்கணும் [ விலக்க வேண்டும் ]

. சிலது ஸந்தர்ப்பக் கொடுமையால் சேந்த தவிர்க்க முடியாத அநாசாரமாயிருக்கு---ப்ராமணன் வைதீக வ்ருத்தியை [ தொழிலை ] விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி--ன்னு உத்யோகம் பார்க்கறது இப்படி ஏற்பட்டு விட்டதுதான். இது பெரிய்ய அநாசாரந்தான், பெரிய அபசாரமே! ஆனாலும் என்ன பண்ணலாம்? தவிர்க்க முடியாததா ஆயிருக்கே? அதனாலே, பெருமை பெருமையா, 'நாமாக்கும் பெரிய உத்யோகம் பண்ணி, வாரி வாரிக் குவிச்சுக்கிறோம்! இன்னும் பெரிசாப் பண்ணி ஜாஸ்தியா குவிச்சுக்கணும்'னு பறக்காம, பகவான் கிட்ட மன்னிப்பு கேட்டுண்டு, 'இப்படி இருக்கே'ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்யத் தேவைக்கானதை மட்டும் உத்யோகம் பண்ணி ஸம்பாதிச்சுக்கணும். நெறைய 'டயம்' ஒழியும்படிப் பண்ணிண்டு அந்த டயத்துல வேதத்யயனாதிகள், அநுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும். ரிடயர் ஆன விட்டு, வேதத்துக்கே வாழ்க்கையை அர்ப்பணம் பண்ணணும். அப்படி இப்பவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்.

"ராமநவமி, கோகுலாஷ்டமி, இன்னும் இப்ப இருக்கிற ரூபத்துல ஹரிகதை, பஜனை--ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும் வேத வழியில் நாம சேர்கிறதற்கு ரொம்ப ஒத்தாசை பண்றவைதான். வேதகாலத்துப் புருஷ ஸிம்ஹங்களா இல்லாமப் பூஞ்சையா வந்திருக்கிற பின்தலைமுறைக்காராளை அவா மனஸுக்கு ரஞ்சகமான மொறையிலேயே வேத வழிக்குக் கொண்டு சேர்த்துப் பரோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கிறது இதுகள்தான். ஸங்கீதக் கச்சேரியில பல்லவி பாடறதுன்னு சன்ன பின்னலாத் தாளத்தை வித்யாசப்படுத்தறதைத் தேர்ந்த வித்வான்கள்தான் ரொம்பவும் ரஸிச்சுத் தாங்களும் பங்கு எடுத்துப்பா. மத்தவாளுக்கு அது கடபுடாதான்! வைதீகாநுஷ்டானங்கள் பூஞ்சையான நமக்குக் கொஞ்சம் அப்படி இருக்கறதுதான்! பல்லவிக்கு முன்னாடி ஸர்வஜன ரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவியிலேயே ராகமாலிகை ஸ்வரம், அப்பறம் துக்கடான்னு கச்சேரி பத்ததியில் நன்னா இளக்கிக் குடுத்து லேசு பண்ணி எல்லாரையும்˜ப்ளீஸ்™ பண்ணிட்டா, அதனாலேயே அவாளும் இந்தப் பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமுந்தான் தெரிஞ்சுப்போமேன்னு ˜இன்ட்ரெஸ்ட்™ எடுத்துக்கறாளோல்லியோ? அந்த மாதிரிதான் ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையுமே நமக்கெல்லாமும் ரஞ்சகமாயிருந்துண்டு, அதோட, இதுக்கெல்லாமும் வேதந்தானே மூலம்கிறா?

அதுலயுந்தான் நமக்குப் பரிசயம் வேணும்னு நம்மை உத்ஸாகப்படுத்தற இன்ஸென்டிவ்கள்! பல்லவியானாலும், துக்கடாவானாலும் எல்லாம் ஸங்கீதம்தானே? அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து, ஹரி போல்வரை எல்லாமே ஒரே ஸனாதன தர்மத்தின் ஸ்பிரிட்டில் தோணினதுதான். துக்கடா கேக்கறதுலேயே ஆரம்பிச்சவா அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே போய் ராகம் கண்டு பிடிக்கறது, தாங்களே பாட்டுக் கத்துக்கறதுன்னு போய், பல்லவி பாடறதுலேயே ˜எக்ஸ்பெர்ட்டா ஆனதாக்கூட ஒண்னு ரெண்டு கேஸ் நானே பார்த்திருக்கேன். கச்சேரின்னா அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். ˜இன்னிக்கு என்ன மெய்ன்னு அதைத்தான் மெய்னாகவே வெச்சிருக்கறதாத் தெரியறது? அப்படி வேத ஸம்ப்ரதாய பத்ததின்னா, அதுக்கு வேத யக்ஞாதிகள்தான் மெய்ன். அதுதான் நமக்குப் பூர்த்தி ஸ்தானம்.

அந்த யக்ஞாதிகளைப் பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா அதையும் பண்ணாம, அதுக்கு அழைச்சிண்டு போறதுகளையும் பண்ணாம விட்டுடறது தனக்குத்தானே ஹானி உண்டாக்கிக்கறதுதான். இப்படி அழைச்சுண்டு போறதுகளும், எந்த லக்ஷ்யத்துல கொண்டு சேர்க்கிறதோ அந்த லக்ஷ்யத்தின் ˜ஸ்பிரிட்டிலேயே பொறந்ததுதானானதால், இதுகளையும் ஒரு போதும் தள்ளாம யக்ஞாதிகள் பண்றவா அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாத்தம் உண்டாகாம வழிகாட்டினதா இருக்கும். இன்னி வரைக்கும் நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கிறவா அப்படித்தான் ரெண்டையும் அநுஷ்டிச்சுண்டும் வரா.

நீயும் ஸ்ரீராமநவமி பூஜை மாதிரி சின்னதா ஒரு பூஜைல ஆரம்பிச்சு வாஜபேயி ஆற வரைக்கும் மேலே மேலே அபிவ்ருத்தியா [வாயாக]!. நாளைக்கு இங்கேயே வழக்கமான மடத்துப் பூஜையோட ராமர் பூஜையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன். ஸந்தோஷமாப் போய்ட்டு வா!

உருகிவிட்டார் உருகி, மாஜி விதண்டாவாதி!

அருட்செல்வம் சிந்தனைச் செல்வமாகவும், சொற்செல்வமாகவும் அலர்ந்ததற்கு ஓர் அழகான உதாரணம்!




ஸ்வஸ்திவாசனம் - குருவந்தனம்

நம்மை விட பெரியவர்களுக்கு, தம்பதிகளுக்கு நமஸ்காரம் செய்கையில் "அபிவாதன" மந்த்ரம் சொல்லி நமஸ்கரித்து அவர்களது ஆசிய்iநைப் பெறுகிறோம். நான் இன்னார் வழியில் வந்த இந்த கோத்ரத்தைச் சேர்ந்த இன்னார் எனச் சொல்வது வழக்கம். 

அதுபோல ஆச்சார்யாளை வந்தனம் செய்கையில் நாம் சொல்ல வேண்டியது அவர்களது புகழினை. அதுவே ஸ்வஸ்திவாசனம் எனும் குரு வந்தன மந்திரம். 

நம் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளை வந்தனம் செய்வதற்குண்டான ஸ்வஸ்தி வாசன மந்திரம் இதுவே.

ஸ்வஸ்திவாசனம் - குருவந்தனம்
============================

ஸ்ரீ குருப்யோ நம:

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத 
ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார - 
த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித - 
ஸ்ரீ காமாக்ஷீ தேவீஸனாத - ஸ்ரீமதேகாம்ரநாத - 
ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத - ஸாக்ஷாத்கார - பரமாதிஷ்ட்டான - ஸத்யவ்ரத நாமாங்கித - 
காஞ்சீ திவ்யக்ஷேத்ரே - சாரதாமட ஸுஸ்த்திதாநாம் - 
அதுலித ஸுதாரஸ - மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல - மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ - 
ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த - 
துந்துலித - மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத - சாந்தி தாந்தி பூம்நாம் -
ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக - ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம் - நிகில பாஷண்ட ஷண்ட - கண்டகோத்காடநேந -விசதீக்ருத வேத வேதாந்த மார்க - ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம் -ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய - ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமச்சங்கர பகவத் பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே - ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமச் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம் அந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம் - ததந்தேவாஸிவர்ய - ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.

ஸ்ரீ குருப்யோ நமஹ ||




ஓம் ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமிகள் நாமாவளி:

ஓம் ஸ்ரீ மஹா கணபதி ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாத்மஜாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கர்பத்ருதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அனுராதா பவாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வைத்யனாதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அத்வைத சிகராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வேதமந்த்ர ப்ரியாய்a மஹாஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஷ்ட மௌன ப்ரிய்aஅய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ நாராயண ஸ்மரணாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சச்சிதானந்தாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சரணாகத வத்ஸலாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிகாலஞானாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி பூஜா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ க்ஷிப்ர ப்ரஸாதனாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ பாத யாத்ரா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ துளசீ பில்வ ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷ ப்ரம்ம ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமாக்ஷி ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஞ்சி க்ஷேத்ரே நிவாஸாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமகோடீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹா ஸ்வாமினே நமோ நம: நமோ நம: நமோ நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ மபௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத்||
ஸ்ரீ ஜகத்குருப்யோ நமோ நம:
ஸ்ரீ மஹாபெரியவா சகல லோக ஜீவிதர்களுக்கும் பொதுவானவர் என்பதால்இந்த அற்புத நாமாவளிகளை உங்கள் அனைவரது மூலமாகவும் அனைத்து ஜீவிதர்களுக்கும் கிடைக்கச் செய்யும் பொருட்டு இங்கே பகிர்கிறேன். இந்த நாமாவளிகளை நாமும் பாராயணம் செய்து அனைவருக்கும் கிட்டிட இதனை பகிர்ந்து சகல சௌபாக்கியங்களும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாவோமாக.
ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!
 — with Mannargudi Sitaraman Srinivasan.





































































































































திங்கள், 29 ஜூன், 2015

திருமங்கை ஆழ்வார்

ராதே கிருஷ்ணா 30-06-2015





திருமங்கை ஆழ்வார்

*திருவரங்கத்தில் மதில்கட்டும் திருப்பணியில் ஆழ்ந்திருந்தபோது பொருள் தட்டுப்பாடு! நாகப்பட்டினத்தில் புத்தரின் தங்கச்சிலை இருப்பதை அறிந்து அதனைக் கவரும் சூத்திரத்தை இலங்கை வரை சென்று அறிந்தார். சிலையை அறம்பாடி உருக்கினார்.

ஈயத்தாலாகாதோ இரும்பினா லாகாதோ

பூயத்தால்மிக்க தொரு பூதத்தா லாகாதோ

பித்தளை நற்செம்புகளா லாகாதோ - மாயப்

பொன்னும் வேண்டுமோ மதித்துன்னை பண்ணுகைக்கு!

திருவரங்கத்து மதில் பணிகளைக் குறைவின்றி நிறைவேற்றினார்.

ஒவ்வொரு திவ்யதேசத்திலும் ஆழ்வாருக்கு விதவிதமான அனுபவங்கள்! அவற்றிலிருந்து:

திருமணக்கோலத்தில் தாயாருடன் வந்து கலியனுக்குக் காட்சியளித்து அவன் அகஇருளை நீக்கியது வயலாளி மணவாளன்!

நீலன், வைணவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களைப் பெற்றுத் திருமங்கை ஆழ்வாராய் மிளிர்ந்தது திருநறையூர் நம்பியிடம்!

திருஎட்டெழுத்து மந்திரத்தைக் கற்றறிந்தது திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடம்!

திருமங்கையாழ்வார் பாடல் தேடி ஓடிவந்த பெருமாள் திருநின்றவூர் பக்தவத்ஸலன்!

ஆறு மாதம் ஆழ்வாரைக் காக்கவைத்துக் காட்சியளித்தவன் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள்!

நாடிவந்த ஆழ்வாருக்கு முதலில் கதவடைத்துப் பின்னர் உரையாடி மகிழ்ந்து காட்சியளித்தது திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன்.

வழிப்போக்கனாக வந்து திருக்காட்சி நல்கியது திருக்கண்ணங்குடி ச்யாமளமேனிப் பெருமாள்!

மூன்று நாட்கள் காக்கவைத்துக் காட்சி கொடுத்தது நந்திபுர விண்ணகரம் ஜெகந்நாதப் பெருமாள்!

அறியாமல் சென்ற ஆழ்வாரை அழைத்துக் காட்சிதந்து உணவளித்தவன் தேரெழுந்தூர் ஆமருவியப்பன்!











































































ஞாயிறு, 28 ஜூன், 2015

RIP -இரங்கல் செய்தி - நாம் சொல்லுவது சரியா? யோசிப்போம்.

ராதே கிருஷ்ணா 29-06-2015








RIP -இரங்கல் செய்தி - நாம் சொல்லுவது சரியா? யோசிப்போம்.

மனதை உறுத்துகிற விஷயம் என்னவென்றால், யாருக்காவது மரணம் நேர்ந்து தங்களது துக்கத்தை உறவினர்களுக்கு வெளிப்படுத்தும்போது பெரும்பாலோர் கடைசியில் ‘ இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கின்றேன்’ (May the soul rest in peace) என்று முடிப்பதுதான்.

நமது சம்ப்ரதாயத்தில் இந்த RIP அணுகுமுறை கிடையாது. 

ஆனால் நமது ஹிந்து மத சித்தாந்தத்தின்படியும், நம்பிக்கையின்படியும், கலாச்சாரத்தின்படியும் ’ஆன்மா சாந்தியடைவது’ என்பது அபத்தமான ‘கான்செப்ட்’ ஆகும். நாம் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

இது உங்களுக்கே தெரிந்திருக்கும். சுமார் 40,50 வருஷங்கள் முன்பு வரை நமது பெரியோர்கள் யாரும் ’ஆன்மா சாந்தியடையட்டும்’ என்பது போன்ற சொற்றொடர்களை உபயோகப்படுத்தியதே இல்லை.

மேற்கத்திய கண்ணோட்டத்தில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். அதை பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை.

இறந்தவர் நல்லகதியை அடைய வேண்டித்தான் நாம் இறுதி சடங்குகளை (அபர கர்மா) அவரவர்களது குலாச்சாரப்படி செய்கின்றோம். இந்த அபர கர்மா என்பது ஒரு இஷ்டிக்கு சமம். ஆதலால்தான் இந்த கர்மாவிற்கு ‘அந்த்யேஷ்டி’ என்ற ஒரு பெயரும் உண்டு.

அநித்யமான உடலே நீங்கியது என்பதே சத்யம். ஜீவன் நல்ல கதியை அடைந்துவிட்டான் என்பதில்தான் இறந்தவரின் பந்துக்களுக்கு மனச்சாந்தி உண்டாகிறது. ஒரு ஜீவன் பாபியாக இருந்தால் பாப பலனை அனுபவிக்க நரகத்தை அடைவான் என்றும், புண்ணியவானாக இருந்தால் புண்யபலனை அனுபவிக்க ஸ்வர்கத்தை அடைவான் என்றும் வேதம் சொல்கிறது.

அதாவது 100 சதவிகிதம் புண்யம் செய்தால் ஸ்வர்க்கம், 100 சதவிகிதம் பாபம் செய்திருந்தால் நரகம். பாதி புண்யம். பாதி பாபம் என்றால் மனுஷ ஜன்மம். பாபமே மிகுதியாக செய்திருந்தால் மிருக ஜன்மம் என்று பொதுவாக கூறலாம்.

மேலும் பல ஜன்மாக்களில் செய்யும் தபஸ், புண்ய குவியலினால் தேவதைகளுடைய லோகத்தை அடைவது ஸாலோக்யமாகும். தேவதைகளின் ஐஸ்வர்யத்தை அடைவது ஸார்ஷ்டிதமாகும். தேவதைகளாகவே ஆகிவிடுவது ஸாயுஜ்யமாகும். இவ்வாறு அவரவர் புண்ணியத்திற்கு தக்கபடி பலன் கிடைக்கும்.

இறந்து போனவன் நரகத்தையடையாமல் புண்ணிய லோகத்தையோ அல்லது மறுபிறவியில் சுகானுபவம் பெற உதவி புரிவதற்காகவே அபா கர்மா செய்யப்படுகிறது.

நமக்கு வினைப்பயனிலும், மறு பிறவியிலும் நம்பிக்கையுண்டு. அது மாத்திரம் அல்ல. விசிஷ்டாத்வைதியாக இருந்தாலும் அல்லது அத்வைதியாக இருந்தாலும் நமக்கு ’ஆன்மா சாந்தியடைவது’ என்ற பேச்சே இல்லை.

சரி, அப்போ, எனன சொற்களை உபயோகப்படுதினால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். “அவரது ஆன்மா நற்கதியடைய பிரார்த்திக்கின்றேன்’ எனும் பொருள்பட சொல்லுவதுதான் சரி. இதுதான் நமது ‘கான்செப்ட்’ ஆகும்.

ஆதலாம் இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால், நம்மில் சில பேராவது இனிமேல் மேற்கத்திய ‘கான்செப்டான’ சொற்றொடர்களை உபயோகப்படுத்தாமல் அதற்கு பதிலாக “ஆன்மா நல்லா கதியை அடையப் பிரார்த்திக்கின்றேன்...” என்பது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம்.

There can be alterations in this for specific sampradaya's: Vaishnava-s can say "Acharyan thiruvadi prapti" or "Vaikunta prapti" while Smartha-s can say "Sivaloka prapti".

I hope I do not appear to be hair-splitting or being hung on semantics. The idea to be conveyed varies, and hence my proposal.

அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்


"பெரியவாள் போர்த்திய துப்பட்டா….."
கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகம்.
கட்டுரையாளர்-கவிஞர் நெமிலி எழில்மணி.
அந்தக் காஞ்சீபுரத்தில் இரவுப் பூக்களை மெல்ல உதிர்த்து விட்டு சூரியன் தன் விடியல் வெளிச்சத்தோடு பிரவேசித்தான்.
வழக்கம் போல் காமாட்சித் தாய் மடியில் சீராட்சி புரிந்து வரும் காமகோடிப் பெரியவாளின் கண்கொள்ளா தரிசனம் காண திரளான கூட்டம். ஏக்கத்தைத் தேக்கியுள்ள ஏழை மக்களின் கவலை முகங்கள் காஞ்சிப் பெரியவாளின் கருணை முகத்தைக் கண்டவுடன் ஏக்கத்தை மறந்தன. கவலைகள் பறந்தன. பரமாச்சார்யாள் வழங்கும் ஆசியிலே மெய்ம்மறந்து நீங்காத சுகம் பெற்றன. அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும் அந்த ஆண்டவன் அருகினிலே நான்கைந்து மூக்குக் கண்ணாடிகள்
. அன்று மின்னொளி இல்லாமையால் அன்பர் ஒருவர் ‘டார்ச்’ விளக்கொளியைக் காட்டத் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பரமாச்சார்யாள்.
அதில் ஒன்றில் நான்கைந்து பக்கங்கள் அடங்கிய சம்ஸ்கிருத ஸ்லோகங்கள். யாரோ ஒரு அன்பர் தமது இல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கான பத்திரிகையை உடன் வைத்து அதனுடன் காணிக்கையாக அந்த ஸ்லோகங்களை எழுதி அனுப்பியிருந்தார்.
மெல்லப் படித்துக் கொண்டிருந்த கருணை மேகம் தம் முகத்தை மேல் நோக்கியவாறு பார்த்து விழிகளாலே ஒரு வினாவை எழுப்பியது.
ஆம்! “இந்த ஸ்லோகங்களைப் படிக்கிறவா இங்கே யாராவது இருக்காளா ?” என்ற வினாதான் அது.
அனைவரும் அமைதியாயிருந்தனர். பெரியவர் விடவில்லை.
தமது திருவாய் மலர்ந்து வாய்மொழியாகவே, “இங்கே சம்ஸ்க்ருதம் தெரிஞ்சவா யாராவது இருக்காளா? இந்த ஸ்லோகத்தைப் படிக்கணும்!” என்று கேட்டார்.
அப்போது அங்கே ஓரமாக நின்று கொண்டிருந்த ஓர் ஏழைப் பிராம்மணர் பெரியவாள் அருகே வந்து, “நான் படிக்கலாமா?” என பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
உடனே காஞ்சி மாமுனிவர் அந்தக் கடிதங்களைக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள்.
மெல்ல அவற்றை எடுத்து பிரித்து வைத்துக்கொண்டு கம்பீரமாகப் படிக்கலானார் அந்தப் பிராம்மணர்.
அந்த ஸ்லோகங்களைக் கேட்கக் கேட்க பெரியவாள் முகத்திலே பூரிப்பு மலர்ந்தது. கேட்கக் கேட்க பிரம்மானந்தமாக அதனைப் பெரியவாள் அனுபவித்தார். அந்த ஸ்லோகங்களை எழுதிய அன்பருக்கு புடவை வேஷ்டிகளை அனுப்ப உத்தரவிட்டார். திருமணத்திற்கு, நான்கு வேதங்களும் அறிந்த வேத விற்பன்னர்களை அனுப்பிவைக்கவும் ஆணைகள் பிறப்பித்தார்.
அந்த ஸ்லோகங்களைப் படித்து முடிக்கவும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு சிதம்பரம் அவர்களின் P.A. அவர்கள் வரவும் சரியாயிருந்தது. ஸ்லோகங்களைப் படித்த அந்த அன்பர் மெல்ல நகர்ந்து ஓரமாக வந்துவிட்டார்.
உடனே அமைச்சரின் P.A. அவர்கள் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
பெரியவாள் புன்சிரிப்புடன் ஆசி செய்துவிட்டு, “சிதம்பரம் எந்த டிபார்ட்மெண்ட் பார்க்கறார் ?” என்று கேட்டார்.
P.A. அவர்கள் பதில் கூறுவதற்குள், “முன்னாலே வெங்கடசுப்பையா பாத்துண்டிருந்தாரே அந்த டிபார்ட்மெண்ட்தானே ?” என்றாரே பார்க்கலாம் ! சுமார் அரை மணி நேரம் மிகவும் அன்புடன் சம்பாஷித்த பெரியவாள் துப்பட்டா ஒன்றைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். அடுத்த நிமிடம் அழகான சால்வை வந்து சேர்ந்தது.
“பெரியவா கூட மினிஸ்டர் P.A. வந்தவுடன் துப்பட்டா கொண்டுவரச் சொல்லிவிட்டாரே ?” என்று ஒரு கணம் நினைத்தேன்.
மறுகணம் பளீரென்று எனக்கு ஒரு சாட்டை அடி விழுந்தது.
ஆம்! அந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டே, “எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர்?” என்று ஸ்வாமிகள் கேட்டாரே பார்க்கலாம்!
தூரத்திலிருந்த அன்பர் பெரியவாள் அருகே ஓடி வந்தார்.
“இந்த துப்பட்டாவை அவருக்குப் போர்த்து!” என்று எடுத்துத் தந்ததும் அந்த அன்பர் துடித்துப் போய்விட்டார்.
“பெரியவா தரிசனத்துக்குத்தான் நான் வந்தேன். இப்படிப் பெரியவா பண்ணுவான்னு நன் நினைக்கல்லே! எனக்குப் போய்…… “ என்று அந்த அன்பர் பேசமுடியாமல் திணறினார்.
“உனக்கா போர்த்தறேன்? உன்னோட வித்வத்துக்குத்தானே போத்தறேன்! தைரியமா நான் படிக்கறேன்னு சொல்லி படிச்சுக் காண்பிச்சயே ! அதுக்குத்தான் இந்த மரியாதை !” என்றார் பெரியவர்.
ஒரு கணத்தில் பெரியவாளைப் பற்றித் தப்பாக நினைத்த நான் மனம் வருந்தி கன்னங்களில் போட்டுக் கொண்டேன். எல்லோரையும் போல் அவரையும் நினைக்க இந்தக் குட்டிச்சுவரான மனத்திற்கு எப்படித்தான் முடிந்ததோ? “மன்னிக்கணும் ! மன்னிக்கணும்!” என்று பரமாச்சார்யாளின் பாதங்களில் மானசீகமாக விழுந்து அரற்றிக் கொண்டிருந்தேன்.
அரைமணி நேரத்துக்கும் மேலாக வேறு திசையில் பேச்சு திரும்பிவிட்ட போதிலும் அந்த ஸ்லோகம் படித்த அன்பரை அல்லவா அந்த தெய்வத்தின் நெஞ்சம் எண்ணிக்கொண்டிருந்தது !
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனம் ‘சரஸ்வதி’ கடாட்சம் பெற்ற அந்த அன்பருக்கு மயங்கி அவரது வித்தைக்கு சால்வை போர்த்தியுள்ளது.
சரஸ்வதியே சரஸ்வதிக்கு சால்வை போர்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளேது?
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்




(ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா பற்றி எழுதியது)

நித்தம் காமாக்ஷி அன்னையை வலம்வந்து தொழுதவன்தாள் வணங்கியே போற்றிடுவோம்!
"ஸாக்ஷாத்க்ருத ஜகன் மாத்ரு ஸ்வரூபாய நமோ நமஹ":
"ஜகன்மாத்ரு ஸ்வரூபத்தை நேரில் கண்டவருக்கு நமஸ்காரம்"
"Obeisance to Him who has directly seen the form of the Mother of the universe"
உலகெலாமீன்ற தாயை, காமாக்ஷி அன்னையை, ஓர்கணமும்
விலகாமல் அருகிருந்து நித்தம் கண்டுருகி
வலம்வந்து தொழுதவன்தாள் வணங்கியே
நலம்கொண்ட ஸ்ரீ சந்திரசேகரசங்கரனாய் வந்துதித்த
எம் ஸத் குருவை போற்றிடுவோம்.
வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம்
குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்!
(ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்)
அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம்
ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே
ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும்
பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே!
OM NAMO BHAGAVATHE SRI CHANDRASEKARENDRYA!





Kvs Seshadri Iyengar posted in 2 groups.
  • भगवद्गीता किंचिदधिता गङगाजललवकणिका पीता ।
    सकृदपि येन मुरारि समर्चा क्रियते तस्य यमेन न चर्चा ।।
    எவனொருவன் பகவத்கீதையை சிறிதாவது படிக்கிறானோ (பகவத் கீதா கிஞ்சித் அதீதா), கங்கா தீா்த்தம் எவனொருவனால் சிறிதளவாவது பானம் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனொருவன் ஒருதடவையாவது முராாியான ஸ்ரீ க்ருஷ்ணனை ஆராதனை செய்திருந்தானோ அவனைப் பற்றிய பாவ புண்ணியம் யமதா்மராஜாவால் விசாரணை செய்யப்படுவதில்லை (யம பயம் நீங்கிவிடும்).
    (பஜ கோவிந்தம் சா்படபஞ்ஜாிகா ஸ்தோத்ரம் - ஸ்ரீ ஆதிசங்கரா் அருளியது)





ஸ்வாமி என்றால் என்ன?-(ஸ்ரீ மஹா பெரியவா)

ஸ்வம் என்கிற வார்த்தைக்கு உடைமை சொத்து என்று அர்த்தம். ஸ்வம் என்பதே தெலுங்கில் ஸொம்மு என்றாகியிருக்கிறது. ஸொம்மு என்றால் சொத்து. ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் தேவஸ்வம் என்கிறார்கள் அல்லவா? உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் ஸ்வாமி. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை உடையார் என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் திருச்சிற்றம்பலமுடையார், திருவேங்கடமுடையார், திருநாகேஷ்வரமுடையார், கபாலீஷ்வரமுடையார் என்பது போலவே உடையார் என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை உடையவர் என்றே சொல்கிறார்கள்.

ஸ்வாமி என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து. சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே சொந்தமாகும். எல்லாம் என் உடமையே என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்கும் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே - அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.

நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப் பொருட்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவரது சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. மூலப் பொருட்களை (element) செய். அணுவை (atom) உண்டாக்கு என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ் சிறிய இலையைச் செய்ய முடியுமா?

எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர். என்று ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தப்படும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒர் ஆனந்தம்தான்.

இப்போது, நான் நான் என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமையில்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான். ஸ்வாமி என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடம் எந்த சொந்தமும் இல்லை. நாமம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்த்துவது பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.




திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் –(மஹா சுவாமிகள்)

1949, மஹா சுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.

மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.

‘அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ?’

உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். மஹா பெரியவா.

ஒரே குரலில்,‘தெரியாது’ என்று பதில் வந்தது.

‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’

இரண்டு நிமிஷ நடை.

‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..’

‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும்?..’

மஹா பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !

அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..

‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’

அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்!

திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.

பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.

மார்கழி மாதம் வந்தது.

மஹா பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.

‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?

‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

அப்புறம் கேட்பானேன்!

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!

ஓரிரு ஆண்டுகள் சென்றன.

ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், மஹா பெரியவாள்.

‘ஞாபகம் இருக்கா? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’

இது, மஹா பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.



பகவானைத் தவிா்த்த மற்றைய விஷயங்களை நாம் அனுபவிக்கிறபோதுஏழுவிதமான தோஷங்கள் சம்பவிக்கிறது. பகவத் விஷயத்திலேதான் தோஷம் என்பதே கிடையாது. தோஷத்தில் முதலாவது அல்பம். பகவானைத் தவிா்த்த அனைத்துமே அல்பம்தான். தா்ம,அா்த்த,காம,மோக்ஷங்கள் இருக்கின்றனவே...அவைகூட அல்பம்தான்! இவற்றைக்கூட அல்பம் என்று தள்ளிவைத்துவிட்டு அவனையே ஆச்ரயிக்க வேண்டும் என்கிறாா் ஸ்வாமி தேசிகன்.
அப்படிச் செய்தால் கட்டாயம் மோக்ஷம் தானாகவே கிடைக்கும்.
யாருக்காவது அப்படி கிடைத்திருக்கிறதா என்றால், ஜடாயுவுக்கு கிடைத்திருக்கிறது.
எம்பெருமான் பொருட்டு தன்னையே அா்ப்பணித்து,சீதைக்காக ராவணனுடன் போராடி இறக்கை இழந்து வீழ்ந்தான் ஜடாயு.
தனனுடைய நெருங்கிய பந்துக்கள் காலமானால் எப்படி துக்கமடைவாளோ, அந்த மாதிாி துக்கமடைந்தாளாம் சீதாபிராட்டி. ஜடாயுவைத் தொட்டுத் தடவிக் கொடுத்து கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்.
பின்னால் அந்த ஜடாயுவை ராமன் பாா்க்கிறான். பாா்த்து ஒரு பொிய அனுக்கிரஹம் பண்ணுகிறான்.
ஜடாயு, அந்த ராமனிடத்திலே ராவணன்தான் சீதையை அபகாித்துப் போனான் என்பதைச் சொன்னான். சொன்னதுமில்லாமல், விந்தம் என்கிற முகூா்த்தத்திலே அபகாிக்கப்பட்டதனாலே,சீதை கட்டாயம் கிடைப்பாள் என்றும் சொன்னான்.
(ஒரு வஸ்து தொலைந்துபோய் கிடைக்காவிட்டால், காா்த்தவீா்யாா்ஜுனனை நினைக்க வேண்டும் என்பாா்கள்.அதற்கென்று ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தைச் சொல்லி ஜபம் பண்ணினால் தொலைந்த பொருள் கிடைக்கும்).அதனால்தான் ஜடாயு அப்படி நம்பிக்கை ஏற்படும்படி ராமனிடம் சொன்னான்.
ஜடாயு காலமானதும் ராமன் துடித்துப் போனான். ஜடாயுவைச் சிதையிலே வைத்து ஈமச் சடங்குகள் பண்ணுகிறான். உயா்ந்த யஜ்ஞ யாகாதிகள் பண்ணுபவா்களுக்கு என்ன உயா் கதி கிடைக்குமோ, ஆத்ம சமா்ப்பணம் பண்ணினால் என்ன கதி கிடைக்குமோ...அப்படி, திரும்பி வருதல் இல்லாத சாச்வதமான நித்யானந்தத்தையே ஜடாயு அடைய வேண்டும் என்று அனுக்கிரஹம் பண்ணிவிட்டான். அதன்படி ஜடாயுவுக்கு உயா்ந்த கதி கிடைத்தது. மஹாலக்ஷ்மி தொட்டு அனுக்கிரஹம் பண்ணினாள் அல்லவா...பகவானுடைய அனுக்கிரஹம் அவனுக்குக் கிடைத்துவிட்டது.
ஜடாயு, 'எனக்கு மோக்ஷம் வேண்டும்' என்று கேட்டானா? இல்லையே! ஆனால் கேட்காமலேயே கொடுத்துவிட்டான் பரமாத்மா. ஆதலால் அல்ப விஷயங்களைப் போய் நாம் அவனிடம் கேட்பது அறியாமையேயாகும்.
அவனைத் தவிா்த்த மற்ற விஷயங்களெல்லாம் அல்பம்தான்.
அது வேண்டும், இது வேண்டும் என்று லோகத்தில் பலபோிடம் கேட்டுப் பெறுகிறோம். பல விஷயங்களை அனுபவிக்கிறோம். அப்படிப் பெற்ற வஸ்துக்களினாலேயே நமக்குப் பலவித கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
சாப்பிடுகிற வஸ்துவினால் கஷ்டம். தன்னைச் சோ்ந்த வஸ்துக்களினாலே கஷ்டம் ஏற்படுகிறது. உலகத்தில் இப்படி பாா்த்தோமானால் எதை எடுத்துக் கொண்டாலும் கஷ்டம்தான்.கஷ்டமில்லாத, தோஷமில்லாத, உயா்ந்தவன் பரமாத்மாதான். அவன் திருவடியிலே ஈடுபட்டோமேயானால் எந்தக் கஷ்டமும் இல்லை என்று தொிந்து கொள்ள வேண்டும். இதை உணா்த்தத்தான் ஜடாயுவுக்கு உயா்ந்த கதியைக் கொடுத்தான். அதனால் தா்மாா்த்த காம மோக்ஷாதிகளையும் விட்டு அவன் திருவடியையே பற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறது.
(Mukkur Sri Lakshmi Narasimma Chariar Swamy)