ஞாயிறு, 21 ஜூன், 2015

காயத்ரி மந்திரம்

ராதே கிருஷ்ணா 22-06-2015

காயத்ரி மந்திரம்






சதா ஏன் காயத்ரி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்? காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?- காஞ்சி மஹா பெரியவர்

காயத்ரி மந்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது?
சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய கார்யங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம்.
த்ரிபம் ஏவது வேதேப்ய:பாதம் பாதமதூதுஹம் (மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?
ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம்.
காயத்ரீ என்றால், "எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது"என்பது அர்த்தம்.
காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே !
கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை; பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது,
காயத்ரீம் சந்தஸாம் மாதா
என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது.
காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும்.
மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தேஹோ தேவாலய:ப்ரக்தோ ஜீவ:ப்ரோக்தோ ஸநாதன:|
தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம். ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது. மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும். வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம்இருக்கிறது. ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும்,ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா (மாதவிடாய்) ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system -ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?
ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்கு ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது.
மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?"என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது. "பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல.
லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது"என்று (வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்) சொல்லியிருக்கிறது:"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே!இஹ க்லேசாய மஹதே". லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதற்காகவே-
அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும். 'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே!ஏன் நாம் செய்யக் கூடாது?என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள்.
இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான். இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை.
லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary (இரண்டாவது) தான். மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும். யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், அவன் பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது"என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.
மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும். அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.
மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் ப்ராம்மணர்கள் என்று பெயரளவாது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ப்ராம்மணன்; கெட்டுப்போன ப்ராம்மணன். கெட்டாலும் 'ப்ராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்றுதலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்மபந்துதான்;அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்!அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்;வைசியன் வைசிய பந்துவாகிறான்.
ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப் படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.
ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ண வேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !








"இந்தப் பூணூல் தயாரிக்கப்படும் முறை மிகவும் சுவாரஸ்யமானதாகும்...."
(சமீபத்தில் வெளியான அடியேனுடய ’யக்ஞோபவீதம்’ நூலிலிருந்து ஒரு பக்கம்)

பருத்தியால் ஆன நூலை ஒரு சுத்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு. அதனை வலது கையின் நாலு விரல்களைச் சேர்த்துவைத்துக் கொண்டு (ஒவ்வொரு சுற்றிலும் நான்கு அங்குல நீளமுள்ள நூல் வரும்படி) வலதுபுறமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 96 முறை சுற்ற வேண்டும். இதை ‘ஷண்ணவதி’ என்று சொல்லுவார்கள்.

இந்த 96 என்கின்ற எண்ணிக்கைக்கு பலவிதமான கணித விளக்கங்களும் காதில் விழுவதுண்டு.

காயத்ரி மந்த்ரத்தில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. நான்கு வேதங்களுக்கும் உண்டான காயத்ரி மந்த்ரத்தை சேர்க்கும் போது அது 96 ஆகி அதன் சக்தியைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. காயத்ரி மந்த்ர ஜபத்தைக் கணக்கிட பயன்படுத்தப்படும் நான்கு விரல்களும் மனிதன் அன்றாடம் அனுபவிக்கும் விழிப்பு நிலை, கனவு காணும் நிலை, ஆழந்த உறக்கம் மற்றும் பிராஹ்மண நிலை ஆகியவற்றை பிரதிநிதித்துப் படுத்துகிறது.

மனித உடலில் சத்வ, ரஜோ மற்றும் தமோ குணங்களால் ஆன 25 அம்சங்கள் உள்ளன. இத்துடன் நாம் கடைப்பிடிக்கும் 16 திதிக்கள், 27 நட்சத்திரங்கள், 4 வேதங்கள், 6 ருதுக்கள் மற்றும் 12 மாதங்கள் ஆகியவற்றைச் சேர்க்கும் போது அதன் கூட்டுத் தொகை 96 ஆகிறது. இந்த அம்சங்களைச் சுற்றிச் சுற்றியே மனித வாழ்க்கை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சரி, மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

இதை, 96 முறை சுற்றியதை, தீர்த்தத்தால் சுத்திசெய்து முறுக்கி மூன்றாக மடித்து முறுக்கி ஆற்றி எடுத்தால் ஒன்பது தந்துக்களுடன் ஒரு ஸரமாகும். அதை மூன்று வளையமாகச் செய்து வலம்புரியாய் முடிபோட வேண்டும். இதுதான் முப்புரி நூல். அதற்குத்தான் யக்ஞோபவீதம் என்று பெயர்.

இந்த 3 இழைகளும் பிரஹ்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் ஆகிய 3 தெய்வங்களையும் குறிக்கிறது என்றும், இவை ஒன்றாக இணைக்கப்படும் பொழுது பரப்ரஹ்மம் ஆகிறது என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.

3 உலகங்களான பூ:, புவ:, சுவ: ஆகியவற்றைக் குறிக்கிறது என்றும் முப்பெரும் சக்திகளான லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் துர்க்கையைக் குறிக்கிறது என்றும், 3 குணங்களான ஸத்வம், ரஜம் மற்றும் தமம் ஆகியவற்றை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த 3 இழைகளும் இட, பிங்கல மற்றும் சூக்ஷ்மம் ஆகிய 3 நாடிகளையும் அதன் மூலம் குண்டலிணி சக்தியைக் குறிக்கிறது என்றும் ஒரு கருத்து உள்ளது. 3 இழைகளை கொண்டுள்ள இதனை அணிந்து கொள்ளும் நபர் தனது மனம், வாக்கு மற்றும் உடல் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பதாகவும் கூறுகின்றார்கள்.

ப்ரஹ்ம க்ரந்தி (ப்ரஹ்ம முடிச்சு):
யக்ஞோபவீதத்தில் உள்ள 3 இழைகளையும் இணைத்துப் போடப்படும் முடிச்சு பிரஹ்ம முடிச்சு என்று அழைக்கப்படுகிறது. இது சகல வேத ஸ்வரூபியான ப்ரப்ரஹ்மத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இங்கு போடும் முடிச்சை ப்ரஹ்ம முடிச்சு என்றும் கூறுவர். ப்ரஹ்மாவுடன் (அதற்கு முன்பே ) பூணூல் உடன் பிறந்ததாக ஐதீகம் இருப்பதால் அந்த ப்ரஹ்ம தேவனை நினைத்து பூணூலுக்கு முடிபோடும்போது ஹரிஹரப்ரம்ஹாதிகளை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். ஒரு ஒருசில குறிப்பிட்ட ஸ்லோகங்களையும் சொல்லுவர். வேத அத்யயனம் செய்தவர்கள் வேதமந்த்ர பாகங்களையும் சொல்லுவதுண்டு.







Do you know that the PooNal is to be worn 'like garland around the neck' when you wear a shirt ?

THE POONAL IS WORN IN THREE WAYS
(Excerpts from the book 'Yajnopaveetam' )

1. Upaveeta,
2. Praacheenaveeta
and
3. Niveeta.

1 Upaveeta: This is the normal manner of wearing the pooNal, the default method. Unless otherwise required for specific purposes, this is the way to wear the pooNal. The poonal will circle from the left shoulder blade to the right hip.

2 Praacheenaveeta: For pitru karma-s the pooNal is worn in this manner. This is the reverse of upaveeta and here the pooNal covers the right shoulder blade to the left hip.

The karta can be seen using this style when doing tarpana or sraaddha.

3 Niveeta: Here the pooNal is worn like a garland around the neck, shortened so that it does not go below the chest.
This method is used in the following circumstances:
* Visiting someone to condole a death in their house within 10 days of the death
* During intercourse
* At the time of ablutions and while taking bath
* When we wear a shirt and go out









"இல்லாதவர்களுக்கு உதவி செய்து அதனால்
கிடைக்கும் புண்ணியத்தைப் பெற்றிருக்காயா?"
என்றார்கள் ஸ்வாமிகள்.

செல்வந்தர் ஒருவர் ஸ்வாமிகளை தரிசனம்
செய்ய வந்திருந்தார்.
"இறைவன் அருளால் எல்லாச் செல்வங்களையும்
பெற்றிருக்கிறேன்.என்னைப் புண்ணியம்
செய்தவனாக்கி விட்டார் கடவுள்" என்றபடியே,
பத்து பவுனை ஸ்வாமிகளின் காலடியில் வைத்தார்.
"இல்லாதவர்களுக்கு உதவி செய்து அதனால்
கிடைக்கும் புண்ணியத்தைப் பெற்றிருக்காயா?"
என்றார்கள் ஸ்வாமிகள்.
பெரியவாளின் கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
அச்சமயம் தன் பெண்ணுடன் ஸ்வாமிகளைத்
தரிசித்தார் ஓர் ஏழை பிராமணன்.
"ஸ்வாமி என்னிடம் கல்யாணத்திற்கு பெண்
இருக்கிறது. ஆனால் பொன் கிடையாது.
தாங்கள் தான் கண் திறக்க வேண்டும்" என்றார்.
ஸ்வாமிகள்; தன்னருகே நின்ற செல்வந்தரிடம்,
"ஆம், நீ புண்யம் செய்தவனாகி விட்டாய். நீ கொண்டு
வந்த பவுனை இவரிடம் கொடுத்தால்,கன்னிகா தானம்
செய்து வைத்த புண்ணியம் உனக்கு கிடைக்கும்"
என்றார்கள்.
காரணமும் தானே, காரியமும் தானே என்றாகி
நின்றார்கள் பெரியவா.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்பதை உண்மையாக்கி விட்டு சிரித்தபடியே
நின்றது அந்த சாது மஹாபெரியவா என்கிற கருணைத் தெய்வம்.







"பிள்ளையாருiக்குத் தேங்காய் உடைப்பது,தோப்புக்கரணம், எதற்காக? "

ஒளி-1.................................ஒலி-2

தெய்வத்தின் (பெரியவா) குரலில்.
ரா.கணபதியின் எழுத்தில்.

சில வாரங்களுக்கு சில ரசமான பகுதிகள் தொடரும்

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து "உன் சிரசையே எனக்குப் பலி கொடு" என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான். இந்த உண்மை ஒரு குழந்தை மூலமாகத்தான் எனக்கே தெரிந்தது. அப்போது (1941) நான் நாகைப்பட்டினத்தில் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டித்து வந்தேன். அங்கே கோயிலில் பிள்ளையாருக்கு நிறையச் சிதறுகாய் போடுவது வழக்கம். காயை உடைக்கவே இடம் கொடுக்காத அளவுக்குக் குழந்தைகள் ஒரே நெரிசலாகச் சேர்ந்துவிடும். திபுதிபு என்று அவை ஓடி வருவதில் என்மேல் விழுந்துவிடுப் போகின்றனவே என்று என்கூட வந்தவர்களுக்குப் பயம். அவர்கள் குழந்தைகளிடம் "இப்படிக் கூட்டம் போடாதீர்கள், விலகிப் போங்கள்" என்று கண்டித்தார்கள். அப்போது ஒரு பையன் 'டாண்' என்று, "பிள்ளையாருக்குத் தேங்காய் போட்டுவிட்டு, அப்புறம் எங்களை இங்கே வராதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன பாத்தியதையு இருக்கிறது? சிதறுகாய் போட்டால் அது எங்கள் பாத்தியதைதான். அதை எடுத்துக் கொள்ள நாங்கள் வரத்தான் செய்வோம்" என்றான். அவன் பேசிய ஜோர், அதிலிருந்த உறுதியைப் பார்த்தபோதுதான் எனக்கே, 'வாஸ்தவம்தான், குழந்தை ஸ்வாமியின் பிரஸாதத்தில் குழந்தைகளுக்குத்தான் முழு பாத்தியதையும்' என்று தெரிந்தது.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக
 — with Balaji Periyava Dasan.






ஆகாச கருடன்கிழங்கு

கட்டிப் போட்டால்குட்டி போடும்என்றழைக்கப்படும்ஆகாச

கருடன்கயிற்றில்கட்டித்தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை

உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து

வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச்

சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும்

அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு

சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை

போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன்

தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி

நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக

இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

தொட்டால் சிணுங்கி.நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது.

தெய்வீக மூலிகையுமாம். தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள்

மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல்

பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும்.

மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை மிகுவிக்கும்.அதனால்

‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை உடையது.

“பகரவே இன்னமொரு மூலிகேளு

பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே

பூசையிடு மந்திரத்தால் நினைவாக

உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.”

என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம்

செய்யப் பயன்படுத்துவர்.









கோபாலபுரம் கான்ரான்ஸ்மித் ரோடில் காஞ்சி மாமுனிவர் முகாமிட்டிருந்தார். சாவி அப்போது கோபாலபுரத்தில் வசித்து வந்தார்.
விகடனில் உதவி ஆசிரியராக இருந்த ஸ்ரீதரும் சாவியும் நெருங்கிய நண்பர்கள். அன்று மஹா பெரியவர் ஒரு பங்களாவின் காம்பவுண்டுக்குள் மேனா என்கிற இருக்கையில் படுத்திருந்தார். ஸ்வாமிகள் கண் விழித்து எழும்போது அந்த விஸ்வரூப தரிசனத்துக்காக சாவியும் ஸ்ரீதரும் காத்திருந்தனர். மங்கலான வெளிச்சம். வேறு மனித சஞ்சாரமே இல்லை. ஸ்வாமிகள் துயிலெழுந்ததும் இவர்களைப் பார்த்து ‘யாரு?‘ என்பதைப் போல் சைகையால் வினவ நண்பர்கள் இருவரும் தரையில் விழுந்து வணங்கினார்கள். அடுத்த கணமே, ‘இவர் ஸ்ரீதர், விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தார் சாவி.

“நீ யாரு?” என்று கேட்டார் பரமாச்சார்யாள்.

“நானும் விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறேன். என் பெயர் சாவன்னா விஸ்வநாதன். சுப்ரமணிய சாஸ்திரிகளின் புத்திரன். சாவி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மஹா பெரியவரின் முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லை. ஆசீர்வாதமும் பண்ணவில்லை. மௌனமாகவே எழுந்து போய் அந்த வீட்டுக்குள் மறைந்து விட்டார். இரண்டு பேருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

“என்ன தவறு செய்தோம்? ஸ்வாமிகள் ஏன் நம்மைக் கண்டு கொள்ளவே இல்லை ?” என்று இரண்டு பேரும் கேள்வி கேட்டுக் கொண்டார்களே தவிர விடை கிடைக்கவில்லை.

“பரவாயில்லை. நாளைக்கு மறுபடியும் வந்து தரிசனம் செய்யலாம்” என்றார் ஸ்ரீதர்.

மறுநாளும் அதேபோலத்தான்.

“நீ யார்?” என்று மஹா பெரியவர் சாவியைக் கேட்க தான் முதல் நாள் சொன்ன விவரங்களை மறுபடியும் சாவி சொன்னார். “சாமா சுப்ரமணிய சாஸ்திரிகளின் மகன். சாவன்னா விஸ்வநாதன்” என்று மட்டும் சாவி சொன்னாரே தவிர, வேறு விவரம் ஏதும் சாவி சொல்லவில்லை. ஸ்வாமிகள் மறு நாளும் எதுவும் பேசாமல் எழுந்து போய் விட்டார். மீண்டும் இருவருக்கும் ஏமாற்றம்.

இப்படித் தொடர்ந்து பலநாட்கள் வரை இவர்கள் போவதும், “நீ யார்?” என்று ஸ்வாமிகள் கேட்பதும் என்று காலம் போய்க் கொண்டிருந்தது. அப்புறம் சில நாட்களுக்குள் மஹா பெரியவர் தமது முகாமை கோபாலபுரத்தில் இருந்து நுங்கம்பாக்கத்துக்கு மாற்றி விட்டார்.

“விடக்கூடாது, பெரியவர் மனசில என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் ? நாம் என்ன தப்பு செய்தோம் ? ஏன் பேசாமல், ஆசீர்வாதமும் பண்ணாமல், மௌனம் சாதிக்கிறார் ? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று இரண்டு பேரும் சங்கடப்பட்டார்கள். நுங்கம்பாக்கத்திலும் சில நாட்கள் இந்தக் கேள்வி-பதில் உரையாடல் தொடர்ந்தது.

கடைசியாக சாவி மிகவும் சலித்துப் போய், “ஸ்ரீதர், இன்னிக்கு நான் வரலை. நீங்க வேண்டுமானால் போய்ப் பாருங்கள்” என்றார். அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த தருணத்தில் மடத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்ரீதர் வீடு தேடி வந்தார். காப்பி அருந்திக் கொண்டிருந்த சாவியும் ஸ்ரீதரும் ஒரு கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தார்கள்.

“பெரியவா சாவியை அழைச்சுண்டு வரச் சொன்னா” என்றார் வந்தவர்.

இரண்டு பேருக்கும் வியப்பு தாங்கவில்லை. சோதித்து போதும் என்று தெய்வம் மனம் இறங்கி விட்டதோ! ‘வாங்க வாங்க உடனே போவோம்’ என்று சொல்லிக் கொண்டே இருவரும் கிளம்பிப் போனார்கள்.

இவர்கள் சுவாமிகளைத் தேடிச் சென்றபோது மஹா பெரியவர் மேனாவில் திருவீதி உலா போய்க் கொண்டிருந்தார். இவர்களும் கூட்டத்துடன் சேர்ந்து மேனாவைத் தொடர்ந்து போனார்கள்.

“சாவியும் ஸ்ரீதரும் வந்திருக்கா” என்று மடத்து பிராமணர் சுவாமிகளிடம் வாய் பொத்திச் சொன்னதை பெரியவர் கவனிக்காதது போல் இருந்து விட்டார். இவர்களை அவர் கண்டுகொண்டதற்கான எந்தவித அடையாளமும் இல்லை.

காலை பதினொன்றரை மணி. வெயில் சுரீர் என்று கொளுத்திக் கொண்டிருந்தது. திருவீதி உலா முடிந்து மஹா பெரியவர் தங்கியிருந்த முகாமுக்குத் திரும்பிய போது அங்கே பக்தர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. அவ்வளவு பேரும் ஒவ்வொருவராக வந்து அவரை வந்தனம் செய்துகொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றார்கள்.

அவர்கள் எல்லோரும் போன பின்பு கடைசியாக சாவியும் ஸ்ரீதரும் பெரியவாளின் பதங்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்தார்கள். பெரியவர் முகத்தில் லேசான புன்னகை! ”சாவன்னா விஸ்வநாதன். சாமா சுப்ரமணிய சாஸ்த்ரிகளோட புத்திரன். ம்..” என்று சொல்லி விட்டு, முதன் முதலாக கை உயர்த்தி இருவரையும் ஆசீர்வதித்ததோடு இருவருக்கும் குங்குமப் பிரசாதம் வழங்கினார்.
சாவிக்கு அந்த ஆசீர்வாதம் தந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆனால், ‘ஏன் இப்படி இத்தனை நாட்கள் இழுத்தடிக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. அப்புறம் அதைப் பற்றிப் பெரியவரும் எதுவும் பேசவில்லை.

“இன்றுவரை மகாபெரியவர் ஏன் உங்களை அப்படிச் சோதித்தார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளவே இல்லையா ?” என்று நான் சாவியைக் கேட்டபோது, “தெரிந்து கொண்டேன். ஆனால் மஹா பெரியவரைக் கேட்டு அல்ல. இந்தச் சம்பவத்தை, கற்றறிந்த பண்டிதர்கள் சிலரிடம் விவரித்துச் சொல்லி, “காரணம் என்னவாக இருக்கும்?” என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் இதுதான்:

ஒரு பிராமணன் மூத்தவர்களை வணங்கும்போது, ‘அபிவாதயே‘ சொல்ல வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த ‘அபிவாதயே‘வில் வணகுபவரின் பூர்வோத்தரமே அடங்கி இருக்கும். தான் யார், தன் கோத்திரம் என்ன, பூர்வீகம் என்ன என்கிற அத்தனை விவரங்களும் அதில் அடங்கி இருக்கும். முதலில் நான் யார் என்பதைச் சொல்லாமல் ஸ்ரீதரைப் பற்றிச் சொன்னது அதிகப்பிரசங்கித்தனம்” என்பதை உணர்த்தவே ஸ்வாமிகள் அப்படி அலைக்கழித்திருக்கிறார்.

“நான் மகாபெரியவரைப் பார்த்தவுடன் முதலில் என்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லாமல் ஏதோ மிகப் பெரிய மேதாவி போல ஸ்ரீதரை அறிமுகப்படுத்தியது முறையற்ற செயல், அதிகப்பிரசங்கித்தனம் என்பதை உணர்த்தவே பெரியவாள், “நீ யார்?” என்று என்னைக் கேட்டிருக்கிறார்.

சுவாமிகளை வணங்கும்போது ‘அபிவாதயே‘ சொல்லத் தேவையில்லை என்றாலும் என்னை நான் முதலில் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தவறியதைச் சுட்டிக் காட்டவே அந்த மாதிரி இழுத்தடித்துச் சோதித்தார் என்ற முடிவுக்குத் தான் என்னால் வர முடிந்தது.”

அதே மகாபெரியவர் பின்னாளில் சாவியிடம் அன்பு காட்டியதும், ‘வேத வித்து‘ கதை எழுத ஆசி வழங்கியதையும், குங்குமம் பத்திரிகை தொடங்கிய போது கை நிறையக் குங்குமப் பிரசாதத்தை வாரி வழங்கி அரக்கோணம் பரசுராமன் மீனாக்ஷி தம்பதியர் மூலம் அனுப்பி வைத்ததையும் பற்றி சாவி சொல்லும்போது அவர் ஆனந்தக் கண்ணீர் பெருக்குவதைக் கண்டிருக்கிறேன்.





"என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா,
..சொல்லட்டுமே!"

(சொந்தக் குடும்பப் பிரச்சனை சொல்கிறர்களைப்பற்றி)

மெய் சிலிர்க்கும் பல அனுபவங்கள் இக்கட்டுரையில்.

சொன்னவர்-ஆர் ராமமூர்த்தி சாஸ்திரிகள்

தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பிரும்மஸ்ரீ ஆர். ராமமூர்த்தி சாஸ்திரிகள் மகாதானபுரம்
பாடசாலையில் அத்யயனம் செய்தவர். மந்தமான புத்தி,
அத்துடன் திக்குவாய்! பேசும்போதுதான் திக்கும்.மந்திரம்
சொல்லும் போது எவ்விதத் தடங்கலும் இருக்காது.

பிழைப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே? வைதீகம்
பண்ணி பிழைக்க முடியாது.இவரை யாரும் கூப்பிட்டு
ஆதரிக்க மாட்டார்கள்.

இருபத்தி நான்கு வயதானபோது 1957-ல் ஸ்ரீமடத்தில்
சேர்ந்து விட்டார். தந்தை,'இவன் ஒண்ணுக்கும்
பிரயோஜனமில்லே,புத்தி மந்தம்,மடத்திலே ஏதாவது
கைங்கர்யம் பண்ணிண்டிருக்கட்டும்' என்று, மகா
சுவாமிகளிடம் விக்ஞாபித்துக் கொண்டார்,தகப்பனார்.

:வஸ்திரம் தோய்த்து உலர்த்து' மூகபஞ்சசதி படி"
என்று மகாஸ்வாமிகள் உத்திரவிட்டார்.

ஸ்ரீ சாஸ்திரிகளுடைய கைங்கர்யம் இன்றும் தொடர்கிறது.
மகாப் பெரியவாளைப் பற்றிச் சொல்லும்போதே,
முகம் மலர்ந்து போகிறது.

"ரொம்ப ஆனந்தமான காலம்!...ரொம்ப பாக்யம்! அவர்
சொன்னபடி, அப்பப்போ, மூக பஞ்சசதீ படிப்பேன்.
திக்குவாய் போன இடம் தெரியல்லே! அவா அனுக்ரஹம்.

ஒரு நாளைக்கு ஐந்தாறு தடவை குளிப்பார்.(பெரியவா)
அப்போவெல்லாம், நாங்க காகிதத்தைத் தொட்டால் கூட
விழுப்பு! காகிதத்தைத் தொட்டுட்டா, நாங்க ஸ்நானம்
பண்ணணும்!.

தரிசனம் பண்ண வரவாளெல்லாம், சொந்தக் குடும்பப்
பிரச்சனைகளையெல்லாம் சொல்லுவா-

"மாடு கன்னு போடணும்.

பிள்ளை ஊர் சுத்திண்டு இருக்கான், திருந்தி வரணும்.

குத்தகை கொடுக்க மாட்டேங்கிறான்'

இப்படியெல்லாம் அவா சொல்றதை, மகாப் பெரியவா
பொறுமையா கேட்டிண்டிருப்பா.

"என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா,
..சொல்லட்டுமே!" என்றார்.

சில சந்தர்ப்பங்களிலே, தரிசனார்த்திகள் நிறையப் பேர்
வந்துட்டா, பூஜைக்கு நேரமாயிடும். 'பூஜைக்கு
நாழியாகிறதே' என்றால், "ஆகட்டும், இவ்வளவு பேரும்
எங்கிருந்தோ வந்திருக்கா. அவாளுக்குத் திருப்தி
ஏற்பட வேண்டாமா?" என்பார்.

1980லேர்ந்து எனக்கு வயிற்றுவலி.
"இப்படியே ஓட்டு"ன்னார் மகா பெரியவா.
89லே, வயிற்று வலி தாங்க முடியல்லே.
டாக்டர் பார்த்துட்டு, ஆபரேஷன் பண்ணிக்கோ-ன்னார்.
பெரியாவாகிட்ட சொன்னேன்.
"ஆபரேஷன் பண்ணிக்க வேண்டாம்-னுட்டார்.

'பெரியவா உச்சிஷ்டத்தைச் சாப்பிடு';ன்னு
ஒரு சிஷ்யர் சொன்னார்.

அதன்படி, ஒரு நாள் பெரியவா பிக்ஷை ஆனதும்
அவா சாப்பிட்ட இலையிலே மிச்சமிருந்ததை எடுத்துச்
சாப்பிட்டேன்.அதைப் பார்த்துட்டு பெரியவா சிரிச்சா!...
அப்புறம் வலியே இல்லே!......

தரிசனத்துக்கு வருபவர்களில் யாராவது,
'தொண்டை,மூக்கு,காது,கண்-இப்படி,ஏதாவது
'ஆபரேஷன் பண்ணிக்கணும்.நல்லபடியா நடக்கணும்னு
பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்'னு கேட்டால்.
"ஆபரேஷன் வேண்டாம்"னு பெரியவா சொல்லுவா.
நோய் தானே சரியாய் போயிடும்! இப்படி ஏராளமான
பேர்களுக்கு அனுக்ரஹம் பண்ணியிருக்கா.

என் வீட்டுப் பெண்-பிள்ளைகளுக்குக் கல்யாணம்
செய்து வைத்ததே பெரியவா தான்.என்ன செலவாச்சுன்னு
இன்றுவரை எனக்குத் தெரியாது.கன்னிகா தானமா
ஏற்பாடு பண்ணினார். கோத்ரம் மட்டும் கேட்பார்.
நக்ஷத்திரம் கூடக் கேட்கிறதில்லே. ஜாதகமே இருக்காது!

பெரியவா வாக்கே, அருள் வாக்கு.

"உன் பொண்ணைக் கொடு; புள்ளையைக் கொடு"ன்னு
சொல்றது மட்டுமில்லே, கல்யாணத் தேதியைக் கூடக்
கொடுத்துடவா. ஸ்மார்த்தா-வடமா-பிரஹசரணம்
இதுகளிலே என்ன பிரிவுன்னு கேட்டுப்பா.

ரொம்ப ஆனந்தமான காலம்
 — with Kunchithapatham Kashyap.







காஞ்சி சங்கரமடத்தில்… மடத்து வாத்தியாராக இருந்து, மகா பெரியவருக்கு உண்டான கைங்கர்யங்களை மிகுந்த சிரத்தையுடன் செய்து வந்தவர் மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். மெத்தப் படித்தவர்; காஞ்சி மகானை கண் கண்ட தெய்வமாகவே எண்ணி போற்றி வருபவர்!
காஞ்சி மகான் இருந்தபோதே, அவரது ஜன்ம நட்சத்திரமான அனுஷ நாளில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வேத பாராயணம், பாதுகாபிஷேகம் என்று விமரிசையாகக் கொண்டாடினார் பட்டு சாஸ்திரிகள். இதற்காக தன் பாதுகைகளையும் 32 ரூபாயையும் கொடுத்து, அனுஷத்தைக் கொண்டாடுவதற்கு பட்டு சாஸ்திரிகளுக்கு ஆசிர்வாதம் செய்தார், மகா பெரியவர்! சாஸ்திரிகளின் இல்லத்தில்… பெரியவாளின் பாதுகைகளைக் கொண்டு, மாதந்தோறும் அனுஷ நட்சத்திர உற்ஸவம் நடைபெறும். மகா அனுஷ நட்சத்திர உற்ஸவம் மேற்கு மாம்பலம்- அயோத்தியா மண்டபத்தில் கொண்டாடப் படும். துவக்கத்தில் சொந்த செலவில், இந்த வைபவத்தை கொண்டாடி வந்தார் சாஸ்திரிகள். பின்னர், காஞ்சி மகானின் அருளுக்குப் பாத்திரமான அன்பர்கள் இவரது சேவைக்கு உதவினர்; உதவியும் வருகின்றனர்.
2001-ஆம் வருட மகா அனுஷ உற்ஸவம், அயோத்தியா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது சுவாமிநாதன் (மகானின் பூர்வாஸ்ரமப் பெயர்…சுவாமிநாதன்) என்ற பக்தர், இரண்டு பித்தளை சொம்புகளை பட்டு சாஸ்திரிகளிடம் கொடுத்து, ”மகா ஸ்வாமிகளுக்குப் பஞ்ச லோக விக்கிரகம் வடித்து, உற்ஸவம் நடத்துங்கள்” என்று கூறி விட்டு நகர்ந்தார். இதை மைக்கில் அறிவித்ததுடன், பித்தளை சொம்பு கொடுத்தவரை கௌரவிக்கும் விதமாக, ‘சுவாமிநாதனை மேடைக்கு அழைக்கிறேன்’ என மைக்கில் கூறினார் சாஸ்திரிகள். ஆனால், சுவாமிநாதன் வரவே இல்லை. எனவே, ‘இது ஸ்வாமிகளின் விருப்பம் போலும்’ என தீர்மானித்த அன்பர்கள், அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொருவரது வீட்டில் இருந்தும் சொம்பு மற்றும் பழைய பாத்திரங்களை கொண்டு வந்தனர். பஞ்ச லோக விக்கிரகம் வடிப்பதற்குத் தேவையான உலோகங்கள் வந்து சேர்ந்ததும், அவற்றை சுவாமிமலையில் உள்ள ஸ்தபதி ஒருவரிடம் வழங்கி, விக்கிரகம் வடிக்கும் பணியை ஒப்படைத்தார் பட்டு சாஸ்திரிகள்.
இதையடுத்து, பெரியவாளின் மகா ஜயந்தி நாள் நெருங்கும் வேளையில் (வைகாசி மாதம்), தான் வடித்த மகா பெரியவாளின் விக்கிரகத்துடன் பட்டு சாஸ்திரிகளின் இல்லத்துக்கு வந்தார் ஸ்தபதி. சாஸ்திரிகள் சொன்ன கால அவகாசத்துக்கு முன்னரே வேலையை முடித்திருந்தார் ஸ்தபதி. இதுகுறித்து மகிழ்ச்சியடைவதற்கு பதில் கவலைக்குள்ளானார் சாஸ்திரிகள். காரணம்? விக்கிரகம் வடிப்பதற்காக ஸ்தபதிக்கு முன்பணம் கொடுத்திருந்தார் சாஸ்திரிகள். இப்போது மீதத் தொகையான ஆறாயிரம் ரூபாயை ஸ்தபதிக்கு தர வேண்டும். ஆனால், சாஸ்திரிகளிடம் பணம் இல்லை. எனவே தயங்கியபடி, ”இப்ப பணம் இல்லையே…” என்றார். உடனே ஸ்தபதி, ”பரவாயில்லீங்க. பணம் வந்ததும் கொடுங்க!” என்று கூறிச் சென்றார்.
தன் உண்மையான பக்தன் கஷ்டப்படுவதைக் கண்டு காஞ்சி மகானுக்கு பொறுக்கவில்லை போலும்!
கணேஷ்குமார் (கடம் விநாயக்ராமின் சகோதரரின் மாப்பிள்ளை) என்பவர், மகா பெரியவாளின் தீவிர பக்தர்; அப்போது அமெரிக்காவில் இருந்தார். ஒருநாள் இரவில்… இவரின் கனவில் தோன்றிய பெரியவாள், ‘மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்கிட்ட ஆறாயிரம் ரூபாயை உடனே கொடுத்துடு’ என்று கூறி மறைந்தார். சட்டென்று விழித்த கணேஷ்குமார், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அசதியில் அப்படியே தூங்கிப் போனார். அப்போது எவரோ வந்து தன்னை தட்டி எழுப்புவது போல் உணர்ந்தார் கணேஷ் குமார். இதன் பிறகு, கனவு குறித்து யோசித்தவர், சென்னையில் உள்ள உறவினர் மூலம் பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாயை கொடுக்கும்படி தெரிவித்தார். மறுநாள்! பட்டு சாஸ்திரிகளிடம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கண்ணில் நீர் மல்க வாங்கிய சாஸ்திரிகள், உடனே பூஜை அறைக்கு ஓடிச் சென்று, மகா பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன் விழுந்து நமஸ்கரித்தார். ஸ்தபதிக்கு பணத்தை பட்டுவாடா செய்தார்; பஞ்ச லோக விக்கிரகத்தை பூஜிக்கலானார்!
இந்த விக்கிரகத்தைக் கொண்டு, மாதந் தோறும் சாஸ்திரிகளின் இல்லத்திலும் மகா அனுஷ நாளில் அயோத்தியா மண்டபத்திலும் உற்ஸவ வழிபாடுகள் நடந்தேறும். கொடியேற்றத்துடன் துவங்கி, ஹோமங்கள், வேத பாராயணம், கச்சேரிகள், விக்கிரக ஊர்வலம் என்று அமர்க்களப்படும் விழாவில்… தினமும் 108 குடங்களில் திரவியங்கள் மற்றும் மலர்கள், விபூதி ஆகியவை சேகரித்து அபிஷேகம் செய்யப்படும். தவிர 1008 சங்காபிஷேகம், 1008 இளநீர் அபிஷேகம், பாதுகைக்கு 1008 வடைமாலை மற்றும் 1008 ஜாங்கிரி மாலை ஆகியவையும் சார்த்தப்படுகிறது.
”என் காலத்துக்குள்ளேயே மகா பெரியவாளுக்கு ஒரு கோயில் கட்டணும்னு ஆசை” என்கிற பட்டு சாஸ்திரிகளுக்கு வயது 91. இவர் மகன் சந்திரமௌலியும் இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக