ஞாயிறு, 28 ஜூன், 2015

RIP -இரங்கல் செய்தி - நாம் சொல்லுவது சரியா? யோசிப்போம்.

ராதே கிருஷ்ணா 29-06-2015








RIP -இரங்கல் செய்தி - நாம் சொல்லுவது சரியா? யோசிப்போம்.

மனதை உறுத்துகிற விஷயம் என்னவென்றால், யாருக்காவது மரணம் நேர்ந்து தங்களது துக்கத்தை உறவினர்களுக்கு வெளிப்படுத்தும்போது பெரும்பாலோர் கடைசியில் ‘ இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கின்றேன்’ (May the soul rest in peace) என்று முடிப்பதுதான்.

நமது சம்ப்ரதாயத்தில் இந்த RIP அணுகுமுறை கிடையாது. 

ஆனால் நமது ஹிந்து மத சித்தாந்தத்தின்படியும், நம்பிக்கையின்படியும், கலாச்சாரத்தின்படியும் ’ஆன்மா சாந்தியடைவது’ என்பது அபத்தமான ‘கான்செப்ட்’ ஆகும். நாம் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

இது உங்களுக்கே தெரிந்திருக்கும். சுமார் 40,50 வருஷங்கள் முன்பு வரை நமது பெரியோர்கள் யாரும் ’ஆன்மா சாந்தியடையட்டும்’ என்பது போன்ற சொற்றொடர்களை உபயோகப்படுத்தியதே இல்லை.

மேற்கத்திய கண்ணோட்டத்தில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். அதை பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை.

இறந்தவர் நல்லகதியை அடைய வேண்டித்தான் நாம் இறுதி சடங்குகளை (அபர கர்மா) அவரவர்களது குலாச்சாரப்படி செய்கின்றோம். இந்த அபர கர்மா என்பது ஒரு இஷ்டிக்கு சமம். ஆதலால்தான் இந்த கர்மாவிற்கு ‘அந்த்யேஷ்டி’ என்ற ஒரு பெயரும் உண்டு.

அநித்யமான உடலே நீங்கியது என்பதே சத்யம். ஜீவன் நல்ல கதியை அடைந்துவிட்டான் என்பதில்தான் இறந்தவரின் பந்துக்களுக்கு மனச்சாந்தி உண்டாகிறது. ஒரு ஜீவன் பாபியாக இருந்தால் பாப பலனை அனுபவிக்க நரகத்தை அடைவான் என்றும், புண்ணியவானாக இருந்தால் புண்யபலனை அனுபவிக்க ஸ்வர்கத்தை அடைவான் என்றும் வேதம் சொல்கிறது.

அதாவது 100 சதவிகிதம் புண்யம் செய்தால் ஸ்வர்க்கம், 100 சதவிகிதம் பாபம் செய்திருந்தால் நரகம். பாதி புண்யம். பாதி பாபம் என்றால் மனுஷ ஜன்மம். பாபமே மிகுதியாக செய்திருந்தால் மிருக ஜன்மம் என்று பொதுவாக கூறலாம்.

மேலும் பல ஜன்மாக்களில் செய்யும் தபஸ், புண்ய குவியலினால் தேவதைகளுடைய லோகத்தை அடைவது ஸாலோக்யமாகும். தேவதைகளின் ஐஸ்வர்யத்தை அடைவது ஸார்ஷ்டிதமாகும். தேவதைகளாகவே ஆகிவிடுவது ஸாயுஜ்யமாகும். இவ்வாறு அவரவர் புண்ணியத்திற்கு தக்கபடி பலன் கிடைக்கும்.

இறந்து போனவன் நரகத்தையடையாமல் புண்ணிய லோகத்தையோ அல்லது மறுபிறவியில் சுகானுபவம் பெற உதவி புரிவதற்காகவே அபா கர்மா செய்யப்படுகிறது.

நமக்கு வினைப்பயனிலும், மறு பிறவியிலும் நம்பிக்கையுண்டு. அது மாத்திரம் அல்ல. விசிஷ்டாத்வைதியாக இருந்தாலும் அல்லது அத்வைதியாக இருந்தாலும் நமக்கு ’ஆன்மா சாந்தியடைவது’ என்ற பேச்சே இல்லை.

சரி, அப்போ, எனன சொற்களை உபயோகப்படுதினால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். “அவரது ஆன்மா நற்கதியடைய பிரார்த்திக்கின்றேன்’ எனும் பொருள்பட சொல்லுவதுதான் சரி. இதுதான் நமது ‘கான்செப்ட்’ ஆகும்.

ஆதலாம் இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால், நம்மில் சில பேராவது இனிமேல் மேற்கத்திய ‘கான்செப்டான’ சொற்றொடர்களை உபயோகப்படுத்தாமல் அதற்கு பதிலாக “ஆன்மா நல்லா கதியை அடையப் பிரார்த்திக்கின்றேன்...” என்பது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம்.

There can be alterations in this for specific sampradaya's: Vaishnava-s can say "Acharyan thiruvadi prapti" or "Vaikunta prapti" while Smartha-s can say "Sivaloka prapti".

I hope I do not appear to be hair-splitting or being hung on semantics. The idea to be conveyed varies, and hence my proposal.

அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்


"பெரியவாள் போர்த்திய துப்பட்டா….."
கலவையில் பிறந்த பேரொளி’ என்ற புத்தகம்.
கட்டுரையாளர்-கவிஞர் நெமிலி எழில்மணி.
அந்தக் காஞ்சீபுரத்தில் இரவுப் பூக்களை மெல்ல உதிர்த்து விட்டு சூரியன் தன் விடியல் வெளிச்சத்தோடு பிரவேசித்தான்.
வழக்கம் போல் காமாட்சித் தாய் மடியில் சீராட்சி புரிந்து வரும் காமகோடிப் பெரியவாளின் கண்கொள்ளா தரிசனம் காண திரளான கூட்டம். ஏக்கத்தைத் தேக்கியுள்ள ஏழை மக்களின் கவலை முகங்கள் காஞ்சிப் பெரியவாளின் கருணை முகத்தைக் கண்டவுடன் ஏக்கத்தை மறந்தன. கவலைகள் பறந்தன. பரமாச்சார்யாள் வழங்கும் ஆசியிலே மெய்ம்மறந்து நீங்காத சுகம் பெற்றன. அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும் அந்த ஆண்டவன் அருகினிலே நான்கைந்து மூக்குக் கண்ணாடிகள்
. அன்று மின்னொளி இல்லாமையால் அன்பர் ஒருவர் ‘டார்ச்’ விளக்கொளியைக் காட்டத் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தார் பரமாச்சார்யாள்.
அதில் ஒன்றில் நான்கைந்து பக்கங்கள் அடங்கிய சம்ஸ்கிருத ஸ்லோகங்கள். யாரோ ஒரு அன்பர் தமது இல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கான பத்திரிகையை உடன் வைத்து அதனுடன் காணிக்கையாக அந்த ஸ்லோகங்களை எழுதி அனுப்பியிருந்தார்.
மெல்லப் படித்துக் கொண்டிருந்த கருணை மேகம் தம் முகத்தை மேல் நோக்கியவாறு பார்த்து விழிகளாலே ஒரு வினாவை எழுப்பியது.
ஆம்! “இந்த ஸ்லோகங்களைப் படிக்கிறவா இங்கே யாராவது இருக்காளா ?” என்ற வினாதான் அது.
அனைவரும் அமைதியாயிருந்தனர். பெரியவர் விடவில்லை.
தமது திருவாய் மலர்ந்து வாய்மொழியாகவே, “இங்கே சம்ஸ்க்ருதம் தெரிஞ்சவா யாராவது இருக்காளா? இந்த ஸ்லோகத்தைப் படிக்கணும்!” என்று கேட்டார்.
அப்போது அங்கே ஓரமாக நின்று கொண்டிருந்த ஓர் ஏழைப் பிராம்மணர் பெரியவாள் அருகே வந்து, “நான் படிக்கலாமா?” என பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
உடனே காஞ்சி மாமுனிவர் அந்தக் கடிதங்களைக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்கள்.
மெல்ல அவற்றை எடுத்து பிரித்து வைத்துக்கொண்டு கம்பீரமாகப் படிக்கலானார் அந்தப் பிராம்மணர்.
அந்த ஸ்லோகங்களைக் கேட்கக் கேட்க பெரியவாள் முகத்திலே பூரிப்பு மலர்ந்தது. கேட்கக் கேட்க பிரம்மானந்தமாக அதனைப் பெரியவாள் அனுபவித்தார். அந்த ஸ்லோகங்களை எழுதிய அன்பருக்கு புடவை வேஷ்டிகளை அனுப்ப உத்தரவிட்டார். திருமணத்திற்கு, நான்கு வேதங்களும் அறிந்த வேத விற்பன்னர்களை அனுப்பிவைக்கவும் ஆணைகள் பிறப்பித்தார்.
அந்த ஸ்லோகங்களைப் படித்து முடிக்கவும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு சிதம்பரம் அவர்களின் P.A. அவர்கள் வரவும் சரியாயிருந்தது. ஸ்லோகங்களைப் படித்த அந்த அன்பர் மெல்ல நகர்ந்து ஓரமாக வந்துவிட்டார்.
உடனே அமைச்சரின் P.A. அவர்கள் பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.
பெரியவாள் புன்சிரிப்புடன் ஆசி செய்துவிட்டு, “சிதம்பரம் எந்த டிபார்ட்மெண்ட் பார்க்கறார் ?” என்று கேட்டார்.
P.A. அவர்கள் பதில் கூறுவதற்குள், “முன்னாலே வெங்கடசுப்பையா பாத்துண்டிருந்தாரே அந்த டிபார்ட்மெண்ட்தானே ?” என்றாரே பார்க்கலாம் ! சுமார் அரை மணி நேரம் மிகவும் அன்புடன் சம்பாஷித்த பெரியவாள் துப்பட்டா ஒன்றைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். அடுத்த நிமிடம் அழகான சால்வை வந்து சேர்ந்தது.
“பெரியவா கூட மினிஸ்டர் P.A. வந்தவுடன் துப்பட்டா கொண்டுவரச் சொல்லிவிட்டாரே ?” என்று ஒரு கணம் நினைத்தேன்.
மறுகணம் பளீரென்று எனக்கு ஒரு சாட்டை அடி விழுந்தது.
ஆம்! அந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டே, “எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர்?” என்று ஸ்வாமிகள் கேட்டாரே பார்க்கலாம்!
தூரத்திலிருந்த அன்பர் பெரியவாள் அருகே ஓடி வந்தார்.
“இந்த துப்பட்டாவை அவருக்குப் போர்த்து!” என்று எடுத்துத் தந்ததும் அந்த அன்பர் துடித்துப் போய்விட்டார்.
“பெரியவா தரிசனத்துக்குத்தான் நான் வந்தேன். இப்படிப் பெரியவா பண்ணுவான்னு நன் நினைக்கல்லே! எனக்குப் போய்…… “ என்று அந்த அன்பர் பேசமுடியாமல் திணறினார்.
“உனக்கா போர்த்தறேன்? உன்னோட வித்வத்துக்குத்தானே போத்தறேன்! தைரியமா நான் படிக்கறேன்னு சொல்லி படிச்சுக் காண்பிச்சயே ! அதுக்குத்தான் இந்த மரியாதை !” என்றார் பெரியவர்.
ஒரு கணத்தில் பெரியவாளைப் பற்றித் தப்பாக நினைத்த நான் மனம் வருந்தி கன்னங்களில் போட்டுக் கொண்டேன். எல்லோரையும் போல் அவரையும் நினைக்க இந்தக் குட்டிச்சுவரான மனத்திற்கு எப்படித்தான் முடிந்ததோ? “மன்னிக்கணும் ! மன்னிக்கணும்!” என்று பரமாச்சார்யாளின் பாதங்களில் மானசீகமாக விழுந்து அரற்றிக் கொண்டிருந்தேன்.
அரைமணி நேரத்துக்கும் மேலாக வேறு திசையில் பேச்சு திரும்பிவிட்ட போதிலும் அந்த ஸ்லோகம் படித்த அன்பரை அல்லவா அந்த தெய்வத்தின் நெஞ்சம் எண்ணிக்கொண்டிருந்தது !
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனம் ‘சரஸ்வதி’ கடாட்சம் பெற்ற அந்த அன்பருக்கு மயங்கி அவரது வித்தைக்கு சால்வை போர்த்தியுள்ளது.
சரஸ்வதியே சரஸ்வதிக்கு சால்வை போர்த்திய அந்த அற்புத நிகழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளேது?
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்




(ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா பற்றி எழுதியது)

நித்தம் காமாக்ஷி அன்னையை வலம்வந்து தொழுதவன்தாள் வணங்கியே போற்றிடுவோம்!
"ஸாக்ஷாத்க்ருத ஜகன் மாத்ரு ஸ்வரூபாய நமோ நமஹ":
"ஜகன்மாத்ரு ஸ்வரூபத்தை நேரில் கண்டவருக்கு நமஸ்காரம்"
"Obeisance to Him who has directly seen the form of the Mother of the universe"
உலகெலாமீன்ற தாயை, காமாக்ஷி அன்னையை, ஓர்கணமும்
விலகாமல் அருகிருந்து நித்தம் கண்டுருகி
வலம்வந்து தொழுதவன்தாள் வணங்கியே
நலம்கொண்ட ஸ்ரீ சந்திரசேகரசங்கரனாய் வந்துதித்த
எம் ஸத் குருவை போற்றிடுவோம்.
வேதக்ஞான் வேதபாஷ்யக்ஞான் கர்த்தும் யஸ்ய ஸமுத்யம்
குருர்யஸ்ய மஹாதேவ தம் வந்தே சந்திரசேகரம்!
(ஸத்குரு ஸ்ரீ சந்திர சேகரரை வணங்குகிறேன்)
அத்வைதானந்தபரிதம் ஸாதூநாமுபகாரிணம்
ஸர்வ சாஸ்திரவிதம் சாந்தம் நமஸ்யே சித்தசுத்தயே
ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும்
பக்தாநாம் ஹிதவக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே!
OM NAMO BHAGAVATHE SRI CHANDRASEKARENDRYA!





Kvs Seshadri Iyengar posted in 2 groups.
  • भगवद्गीता किंचिदधिता गङगाजललवकणिका पीता ।
    सकृदपि येन मुरारि समर्चा क्रियते तस्य यमेन न चर्चा ।।
    எவனொருவன் பகவத்கீதையை சிறிதாவது படிக்கிறானோ (பகவத் கீதா கிஞ்சித் அதீதா), கங்கா தீா்த்தம் எவனொருவனால் சிறிதளவாவது பானம் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனொருவன் ஒருதடவையாவது முராாியான ஸ்ரீ க்ருஷ்ணனை ஆராதனை செய்திருந்தானோ அவனைப் பற்றிய பாவ புண்ணியம் யமதா்மராஜாவால் விசாரணை செய்யப்படுவதில்லை (யம பயம் நீங்கிவிடும்).
    (பஜ கோவிந்தம் சா்படபஞ்ஜாிகா ஸ்தோத்ரம் - ஸ்ரீ ஆதிசங்கரா் அருளியது)





ஸ்வாமி என்றால் என்ன?-(ஸ்ரீ மஹா பெரியவா)

ஸ்வம் என்கிற வார்த்தைக்கு உடைமை சொத்து என்று அர்த்தம். ஸ்வம் என்பதே தெலுங்கில் ஸொம்மு என்றாகியிருக்கிறது. ஸொம்மு என்றால் சொத்து. ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் தேவஸ்வம் என்கிறார்கள் அல்லவா? உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் ஸ்வாமி. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை உடையார் என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் திருச்சிற்றம்பலமுடையார், திருவேங்கடமுடையார், திருநாகேஷ்வரமுடையார், கபாலீஷ்வரமுடையார் என்பது போலவே உடையார் என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை உடையவர் என்றே சொல்கிறார்கள்.

ஸ்வாமி என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து. சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே சொந்தமாகும். எல்லாம் என் உடமையே என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்கும் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே - அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.

நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப் பொருட்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவரது சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. மூலப் பொருட்களை (element) செய். அணுவை (atom) உண்டாக்கு என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ் சிறிய இலையைச் செய்ய முடியுமா?

எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர். என்று ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தப்படும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒர் ஆனந்தம்தான்.

இப்போது, நான் நான் என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமையில்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான். ஸ்வாமி என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடம் எந்த சொந்தமும் இல்லை. நாமம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்த்துவது பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.




திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் –(மஹா சுவாமிகள்)

1949, மஹா சுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.

மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.

‘அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ?’

உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். மஹா பெரியவா.

ஒரே குரலில்,‘தெரியாது’ என்று பதில் வந்தது.

‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’

இரண்டு நிமிஷ நடை.

‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..’

‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும்?..’

மஹா பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !

அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..

‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’

அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்!

திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.

பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.

மார்கழி மாதம் வந்தது.

மஹா பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.

‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?

‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

அப்புறம் கேட்பானேன்!

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!

ஓரிரு ஆண்டுகள் சென்றன.

ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், மஹா பெரியவாள்.

‘ஞாபகம் இருக்கா? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’

இது, மஹா பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.



பகவானைத் தவிா்த்த மற்றைய விஷயங்களை நாம் அனுபவிக்கிறபோதுஏழுவிதமான தோஷங்கள் சம்பவிக்கிறது. பகவத் விஷயத்திலேதான் தோஷம் என்பதே கிடையாது. தோஷத்தில் முதலாவது அல்பம். பகவானைத் தவிா்த்த அனைத்துமே அல்பம்தான். தா்ம,அா்த்த,காம,மோக்ஷங்கள் இருக்கின்றனவே...அவைகூட அல்பம்தான்! இவற்றைக்கூட அல்பம் என்று தள்ளிவைத்துவிட்டு அவனையே ஆச்ரயிக்க வேண்டும் என்கிறாா் ஸ்வாமி தேசிகன்.
அப்படிச் செய்தால் கட்டாயம் மோக்ஷம் தானாகவே கிடைக்கும்.
யாருக்காவது அப்படி கிடைத்திருக்கிறதா என்றால், ஜடாயுவுக்கு கிடைத்திருக்கிறது.
எம்பெருமான் பொருட்டு தன்னையே அா்ப்பணித்து,சீதைக்காக ராவணனுடன் போராடி இறக்கை இழந்து வீழ்ந்தான் ஜடாயு.
தனனுடைய நெருங்கிய பந்துக்கள் காலமானால் எப்படி துக்கமடைவாளோ, அந்த மாதிாி துக்கமடைந்தாளாம் சீதாபிராட்டி. ஜடாயுவைத் தொட்டுத் தடவிக் கொடுத்து கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள்.
பின்னால் அந்த ஜடாயுவை ராமன் பாா்க்கிறான். பாா்த்து ஒரு பொிய அனுக்கிரஹம் பண்ணுகிறான்.
ஜடாயு, அந்த ராமனிடத்திலே ராவணன்தான் சீதையை அபகாித்துப் போனான் என்பதைச் சொன்னான். சொன்னதுமில்லாமல், விந்தம் என்கிற முகூா்த்தத்திலே அபகாிக்கப்பட்டதனாலே,சீதை கட்டாயம் கிடைப்பாள் என்றும் சொன்னான்.
(ஒரு வஸ்து தொலைந்துபோய் கிடைக்காவிட்டால், காா்த்தவீா்யாா்ஜுனனை நினைக்க வேண்டும் என்பாா்கள்.அதற்கென்று ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தைச் சொல்லி ஜபம் பண்ணினால் தொலைந்த பொருள் கிடைக்கும்).அதனால்தான் ஜடாயு அப்படி நம்பிக்கை ஏற்படும்படி ராமனிடம் சொன்னான்.
ஜடாயு காலமானதும் ராமன் துடித்துப் போனான். ஜடாயுவைச் சிதையிலே வைத்து ஈமச் சடங்குகள் பண்ணுகிறான். உயா்ந்த யஜ்ஞ யாகாதிகள் பண்ணுபவா்களுக்கு என்ன உயா் கதி கிடைக்குமோ, ஆத்ம சமா்ப்பணம் பண்ணினால் என்ன கதி கிடைக்குமோ...அப்படி, திரும்பி வருதல் இல்லாத சாச்வதமான நித்யானந்தத்தையே ஜடாயு அடைய வேண்டும் என்று அனுக்கிரஹம் பண்ணிவிட்டான். அதன்படி ஜடாயுவுக்கு உயா்ந்த கதி கிடைத்தது. மஹாலக்ஷ்மி தொட்டு அனுக்கிரஹம் பண்ணினாள் அல்லவா...பகவானுடைய அனுக்கிரஹம் அவனுக்குக் கிடைத்துவிட்டது.
ஜடாயு, 'எனக்கு மோக்ஷம் வேண்டும்' என்று கேட்டானா? இல்லையே! ஆனால் கேட்காமலேயே கொடுத்துவிட்டான் பரமாத்மா. ஆதலால் அல்ப விஷயங்களைப் போய் நாம் அவனிடம் கேட்பது அறியாமையேயாகும்.
அவனைத் தவிா்த்த மற்ற விஷயங்களெல்லாம் அல்பம்தான்.
அது வேண்டும், இது வேண்டும் என்று லோகத்தில் பலபோிடம் கேட்டுப் பெறுகிறோம். பல விஷயங்களை அனுபவிக்கிறோம். அப்படிப் பெற்ற வஸ்துக்களினாலேயே நமக்குப் பலவித கஷ்டங்கள் ஏற்படுகின்றன.
சாப்பிடுகிற வஸ்துவினால் கஷ்டம். தன்னைச் சோ்ந்த வஸ்துக்களினாலே கஷ்டம் ஏற்படுகிறது. உலகத்தில் இப்படி பாா்த்தோமானால் எதை எடுத்துக் கொண்டாலும் கஷ்டம்தான்.கஷ்டமில்லாத, தோஷமில்லாத, உயா்ந்தவன் பரமாத்மாதான். அவன் திருவடியிலே ஈடுபட்டோமேயானால் எந்தக் கஷ்டமும் இல்லை என்று தொிந்து கொள்ள வேண்டும். இதை உணா்த்தத்தான் ஜடாயுவுக்கு உயா்ந்த கதியைக் கொடுத்தான். அதனால் தா்மாா்த்த காம மோக்ஷாதிகளையும் விட்டு அவன் திருவடியையே பற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறது.
(Mukkur Sri Lakshmi Narasimma Chariar Swamy)










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக