வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !

ராதே கிருஷ்ணா 27-02-2014







From the album: Timeline Photos
By tamilkey
ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !

இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர்.

தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.

ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.

ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.

இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.கல்லீரல் இழைநார் வளர்ச்சி :
இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

2.அதிக இரத்த அழுத்தம் :
பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

3.அதிக எடை :
வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

4.இதய நோய் :
இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

5.அனீமியா :
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

6.மன அழுத்தம் ;
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

7.மூட்டு வலி :
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

8.கணைய பாதிப்பு :
ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

9.நரம்பு பாதிப்பு :
ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டு ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.

எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - சபரி வெங்கட்

ராதே கிருஷ்ணா 27-02-2014



எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - சபரி வெங்கட்




From the album: Timeline Photos
By Coimbatore, India
எனக்கு பிடித்த நிஜ மனிதர்கள் - சபரி வெங்கட்

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கோவை- பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட். பிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான். பார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு மாறிவந்தனர். பார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும் பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும் இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.

பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான். அங்குள்ள பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும் படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல் ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான். கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.

இதெல்லாம் சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக் கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள். ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான். அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள். விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம் அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.
அப்போது நடந்த சம்பவம் சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல் விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக் கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்.

இந்த தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார். பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.
கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், "உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்'' என்றனர். பணம், பொருள், மருத்துவம் என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான்.
சபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர் அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன் என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

இன்னொரு விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில் ஒருவர், "ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்'' என்று கேட்டிருக்கிறார். எனக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, "நாடு நல்லாயிருக்கணும்' என்ற வரம் கேட்பேன் என்றதும் "என்னப்பா இப்படி சொல்றே', நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா'? என்றதும், "பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்'' என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.

சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக்கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்கிறான். பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்... கேட்டுக்கொண்டே இருக்கலாம். திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு, சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.
.சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம் வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில் படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர், சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால், அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது? சொல்லட்டுமா? என்று சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார், அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர் அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558.
- எல்.முருகராஜ்

நன்றி தினமலர்.





































































































தெரிந்து கொள்ளுங்கள்...

ராதே கிருஷ்ணா 27-02-2014


தெரிந்து கொள்ளுங்கள்...

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு”

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" ”அல்ஹம்துலில்லா” என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.
தெரிந்து கொள்ளுங்கள்...

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு”

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" ”அல்ஹம்துலில்லா” என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.


புதன், 26 பிப்ரவரி, 2014

நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி

ராதே கிருஷ்ணா 26-02-2014

நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி

நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி. நெடுங்காலத்திற்கு முன் நடந்தது.

ஒரு சிறுவனின் சருமத்தில் கரும் திட்டுகள் தோன்றி உடல் முழுவதும் பரவி விட்டது. பார்க்கவே ஓர் அருவருப்பு. உடன் படிப்பவர்கள் அவனை ஒதுக்கி ஓடினார்கள்.

உடல் வியாதி பாதியும் மனோ வியாதி மீதியுமாய் சாம்பி போன பிள்ளையை தாயார்க்காரி தயாமூர்த்தியிடம் அழைத்து வந்து உருகி வேண்டினாள்.
...
நம்ப வொண்ணாத அருள் வாசகம் ஐயன் திருவாயில் இருந்து வந்தது. 'கொழந்தே, இங்கே என்னோடே மூணு நாள் இருக்கியா?'

அவன் பதில் சொல்லும் முன்பே தாயார்க்காரி, 'பாக்கியம், மூணு என்ன, எத்தனை நாள் வேணுமானாலும் பையன் பெரிவாளோட இருக்கட்டும்' என்றாள்.

பையனும் மனமார ஒத்துக்கொண்டான்.

'நான் என்ன சாப்பிடறேனோ, அதைத்தான் நீயும் சாப்பிடணும். செய்வியா?' என்றார் ஸ்ரீ சரணர்.

'பெரியவா என்ன சொன்னாலும் செய்யறேன், உடம்பு சரியா போனா போறும்' என்றான் பையன்.

'நான் சாப்பிடறதுக்கு மேலே ஒண்ணே ஒண்ணு மட்டும் நீ அப்பப்போ சாப்பிடணும் - உப்பு போடாத மோர் அடிக்கடி சாப்பிடு. காபி, டீ வேண்டாம்'.

'பெரியவா சொல்றபடி'.

அடுத்த மூன்று நாள்கள் அந்த 'யாரோ பையன்' ஸ்ரீ மடத்தில் பெற்ற அதீத கவனிப்பு உண்டே! பார்த்து பார்த்து, மோர், MORE AND MORE மோர் கொடுத்தார்கள். பெரியவாளும் அது பற்றி அக்கறையுடன் விசாரித்த வண்ண இருந்தார்.

சாக்ஷாத் ஸ்ரீ பெரியவாள் திருவமுது கொண்ட ஆகாரத்தின் மிகுதி சிறுவனுக்கும் வழங்கப்பட்டது.

அது என்ன ஆகாரம் என்பதல்லவா முக்கியம்?

பச்சை வாழை தண்டித்தான் பொடிபொடியாக நறுக்கி எவ்வித தாளிப்பும் இல்லாமல், சிறிது தயிர் மட்டும் கலந்திருந்தது. அதுவே பெரியவாளுக்கு பிக்ஷை. சிறுவனுக்கு பிரசாதம். பெரியவாளின் பிரசாதம் ஆதலால், அதுவே சிறுவனுக்கு அறுசுவை விருந்தாக ருசித்தது.

மூன்று நாளில் நோய் நன்கு நிவர்த்தி ஆயிற்று. சாம்பி வந்த குழந்தை மலர்ச்சி கண்டான்.

'ஆத்துக்கு போனாவிட்டும் ஒரு மாசம், உப்பு, புளி, மொளகா, சேர்க்காம சாதுவா சாப்பிடு. இந்த 'ஒடம்பு' ஒரு நாளும் வராது.' என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பினார் வைத்தியநாதன்.

குஷியாக ஓடினான் பாலகன்.

பெரியவாளின் அன்பு கரிசனம் வாசகர் நெஞ்சை தொடவே செய்யும். ஆனாலும் 'ஆழ'த்தொடும் என்று அடைமொழி சேர்த்ததற்கு இதனினும் காரணம் உண்டு.

பெரியவாள் அக்காலத்தில் பச்சை வாழை தண்டே உண்டாராக்கும், அதையே பாலனுக்கும் பகிர்ந்து அளித்தாராக்கும் என்று வாசகர் எண்ணக்கூடும். உண்மை அது அல்ல. பெரியவாளின் பிக்ஷையை பையனின் உணவாக்கவில்லை. பையனுக்கான உணவைத்தான் பெரியவாள் தமது பிக்ஷை ஆக்கி கொண்டார்...

ஆம், அது பெரியவாள் ஓரளவு காய்கறிகளுடன் அன்ன பிக்ஷையும் அவ்வப்போது ஏற்று வந்த காலம் தான். அது போன்ற சமயத்தில் பையனுக்கு இந்த பத்தியம் அவசியம் என்று விதித்த மஹா ஆத்மன், ஒரு குழந்தை நாவை அவ்வாறு கட்டுபடுத்தும் போது தாமும் அந்த கட்டுபாட்டை ஏற்க வேண்டும் என்றே கருதி காரியத்தில் செய்து காட்டினார்.

சேய்க்கு வந்த நோய்க்கு அந்த அருட் தாயும் மருந்து உண்டாள் என்றும் சொல்லலாம்
நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி. நெடுங்காலத்திற்கு முன் நடந்தது. 

ஒரு சிறுவனின் சருமத்தில் கரும் திட்டுகள் தோன்றி உடல் முழுவதும் பரவி விட்டது. பார்க்கவே ஓர் அருவருப்பு. உடன் படிப்பவர்கள் அவனை ஒதுக்கி ஓடினார்கள்.

உடல் வியாதி பாதியும் மனோ வியாதி மீதியுமாய் சாம்பி போன பிள்ளையை தாயார்க்காரி தயாமூர்த்தியிடம் அழைத்து வந்து உருகி வேண்டினாள்.
... 
நம்ப வொண்ணாத அருள் வாசகம் ஐயன் திருவாயில் இருந்து வந்தது. 'கொழந்தே, இங்கே என்னோடே மூணு நாள் இருக்கியா?'

அவன் பதில் சொல்லும் முன்பே தாயார்க்காரி, 'பாக்கியம், மூணு என்ன, எத்தனை நாள் வேணுமானாலும் பையன் பெரிவாளோட இருக்கட்டும்' என்றாள்.

பையனும் மனமார ஒத்துக்கொண்டான். 

'நான் என்ன சாப்பிடறேனோ, அதைத்தான் நீயும் சாப்பிடணும். செய்வியா?' என்றார் ஸ்ரீ சரணர்.

'பெரியவா என்ன சொன்னாலும் செய்யறேன், உடம்பு சரியா போனா போறும்' என்றான் பையன். 

'நான் சாப்பிடறதுக்கு மேலே ஒண்ணே ஒண்ணு மட்டும் நீ அப்பப்போ சாப்பிடணும் - உப்பு போடாத மோர் அடிக்கடி சாப்பிடு. காபி, டீ வேண்டாம்'. 

'பெரியவா சொல்றபடி'. 

அடுத்த மூன்று நாள்கள் அந்த 'யாரோ பையன்' ஸ்ரீ மடத்தில் பெற்ற அதீத கவனிப்பு உண்டே! பார்த்து பார்த்து, மோர், MORE AND MORE மோர் கொடுத்தார்கள். பெரியவாளும் அது பற்றி அக்கறையுடன் விசாரித்த வண்ண இருந்தார். 

சாக்ஷாத் ஸ்ரீ பெரியவாள் திருவமுது கொண்ட ஆகாரத்தின் மிகுதி சிறுவனுக்கும் வழங்கப்பட்டது. 

அது என்ன ஆகாரம் என்பதல்லவா முக்கியம்?

பச்சை வாழை தண்டித்தான் பொடிபொடியாக நறுக்கி எவ்வித தாளிப்பும் இல்லாமல், சிறிது தயிர் மட்டும் கலந்திருந்தது. அதுவே பெரியவாளுக்கு பிக்ஷை. சிறுவனுக்கு பிரசாதம். பெரியவாளின் பிரசாதம் ஆதலால், அதுவே சிறுவனுக்கு அறுசுவை விருந்தாக ருசித்தது. 

மூன்று நாளில் நோய் நன்கு நிவர்த்தி ஆயிற்று. சாம்பி வந்த குழந்தை மலர்ச்சி கண்டான். 

'ஆத்துக்கு போனாவிட்டும் ஒரு மாசம், உப்பு, புளி, மொளகா, சேர்க்காம சாதுவா சாப்பிடு. இந்த 'ஒடம்பு' ஒரு நாளும் வராது.' என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பினார் வைத்தியநாதன். 

குஷியாக ஓடினான் பாலகன். 

பெரியவாளின் அன்பு கரிசனம் வாசகர் நெஞ்சை தொடவே செய்யும். ஆனாலும் 'ஆழ'த்தொடும் என்று அடைமொழி சேர்த்ததற்கு இதனினும் காரணம் உண்டு. 

பெரியவாள் அக்காலத்தில் பச்சை வாழை தண்டே உண்டாராக்கும், அதையே பாலனுக்கும் பகிர்ந்து அளித்தாராக்கும் என்று வாசகர் எண்ணக்கூடும். உண்மை அது அல்ல. பெரியவாளின் பிக்ஷையை பையனின் உணவாக்கவில்லை. பையனுக்கான உணவைத்தான் பெரியவாள் தமது பிக்ஷை ஆக்கி கொண்டார்...

ஆம், அது பெரியவாள் ஓரளவு காய்கறிகளுடன் அன்ன பிக்ஷையும் அவ்வப்போது ஏற்று வந்த காலம் தான். அது போன்ற சமயத்தில் பையனுக்கு இந்த பத்தியம் அவசியம் என்று விதித்த மஹா ஆத்மன், ஒரு குழந்தை நாவை அவ்வாறு கட்டுபடுத்தும் போது தாமும் அந்த கட்டுபாட்டை ஏற்க வேண்டும் என்றே கருதி காரியத்தில் செய்து காட்டினார். 

சேய்க்கு வந்த நோய்க்கு அந்த அருட் தாயும் மருந்து உண்டாள் என்றும் சொல்லலாம்



செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

"ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்"

ராதே கிருஷ்ணா 26-02-2014


"ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்"


From the album: Timeline Photos
By Varagooran Narayanan
"ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்"

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1965ம் வருஷம் என்று ஞாபகம்.
ஸ்ரீ மகாப் பெரியவாள், திருப்பதி க்ஷேத்திரத்தில்
முகாமிட்டிருந்தபோது, பெருமாளுக்கு கல்யாண
உற்சவம், (ரூ.600/- செலுத்தி) நடத்தினார்கள்.
உற்சவ நிகழ்ச்சிகள் முடிந்ததும், பிரசாதம்
கொடுத்தார்கள் தேவஸ்தானத்தார்.

வரிசையில் நிற்காமல் ஸ்ரீநிவாஸப் பெருமாள்
தரிசனம் உண்டு,கல்யாணம் நடத்துபவர்களுக்கு.
மரியதை காரணமாக, ஸ்ரீ பெரியவாளுடன்
சென்றிருந்த எல்லோரையும்-15 பேர்கள்-
பெருமாள் தரிசனத்துக்கு அழைத்தார்.

பெரியவாள்; "கல்யாண உத்ஸவம் பண்ணினா,
எத்தனை பேருக்கு தரிசன அனுமதி உண்டு?.."

"ஆறு பேர்" என்றார், பேஷ்கார்.

பெரியவாள்; "அப்படியானா, நாங்க ஆறு பேர் மட்டும்
இந்த சலுகை தரிசனத்துக்கு வரோம். நான்,
புதுப் பெரியவாள், அப்புறம் நாலுபேர்..."

"எல்லாருமே போகலாம்.." என்று குழைந்து
பணிந்து சொன்னார், பேஷ்கார்.

"அது தப்பு; அதர்மம். ஆறு பேர் மட்டும்தான்
போகலாம்னு தேவஸ்தானம் சட்டம் போட்டிருக்கு.
நீங்க தேவஸ்தான சிப்பந்தி. எங்கிட்டவுள்ள
பக்தியாலே, பதினஞ்சு பேரையும் பெருமாள்
தரிசனத்துக்கு அனுப்பினா,அதிலே இரண்டு
குற்றம் உண்டாகிறது.

ஒண்ணு - தேவஸ்தானம் போட்ட விதியை,
தேவஸ்தான ஆபிசரே மீறி நடக்கிற குற்றம் !
சட்டம் போட்டவாளே, அதை மதிக்கல்லேன்னா,
அப்புறம் சட்டம் என்னத்துக்கு ?....
அடுத்தது - சட்டத்தை மீறும்படியான ஒரு
நிர்ப்பந்தத்தைக் கொடுத்தது நான் செய்த குற்றம் !."

தர்மம், வெறும் பிரசாரத்துக்காக மட்டுமல்ல;
ஸ்வயமே அனுஷ்டித்துக் காட்ட வேண்டும் -
என்பதைத் தன் செயல் மூலமே
நிரூபித்துவிட்டார்கள் ஸ்ரீ மகாப் பெரியவாள்.

'ராமோ விக்ரஹவாந் தர்ம;' ஸ்ரீ ராமன் தர்மத்தின்
திருவடிவம் - என்றால், நம்முடைய
ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்
என்பது நான் கண்கூடாகத் தெரிந்து கொண்ட உண்மை



































































இது பெண்களுக்கு எதிரானதுமல்ல ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவும் அல்ல..!

ராதே கிருஷ்ணா 26-02-2014




இது பெண்களுக்கு எதிரானதுமல்ல ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவும் அல்ல..!

From the album: Timeline Photos
By My Mom Is My World ''அம்மா என் உலகம்''
இது பெண்களுக்கு எதிரானதுமல்ல ஆண்களுக்கு வக்காலத்து வாங்கவும் அல்ல..!

(முழுமையாக வாசித்துவிட்டு கட்டாயம் #பகிரவும்)

உலகில் உள்ள எத்தனையோ நாடுகள் நாகரீகம் என்கின்ற பெயரில் தங்கள் கலாச்சாரங்களை சீரழித்து கொண்டிருக்கும் போது இந்தியர்கள் கலாச்சாரம், பண்பாடு, என்று பழைமை மாறாமல் மேற்கத்திய நாகரீகத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், பெண்களை தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் வணங்குவது இந்தியாவில் மட்டும்தான் !

ஆனால் பலநூறு ஆண்டுகளாக சேலை உடுத்திவந்த நம் பெண்கள் உடுத்துவதற்கு எளிதாக இருப்பதாலும், கொஞ்சம் மாடர்னாக இருப்பதாலும் நிறைய பாதுகாப்பாக இருப்பதாலும் சுடிதார் அணிய ஆரம்பித்தார்கள், பின் இரவில் மட்டுமே அணிய வேண்டிய nighty யை பகலெல்லாம் அணிந்து அகதிகளை போலவும், அரை பைத்தியங்கள் போலவும் தெருக்கள் தோறும் திரிய ஆரம்பித்தார்கள்.

இப்போது புதிதாக ஒன்று வந்திருக்கின்றது 'லெக்கின்ஸ்'
இடுப்பில் இருந்து ஒரு பெண்ணின் கால் எந்த அளவில் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது, சுடிதாருக்கு மாற ஒரு காரணம் இருந்தது, இது போன்ற தனது அங்கங்களின் அளவை எடுத்துக்காட்டும் உடைகளை அணிய என்ன காரணம்?

ஒரு பெண் தன்னுடைய அறிவாலும், திறமையாலும் ஒழுக்கத்தாலும், பிறரை கவர நினைக்காமல் இதுபோன்ற ஆடைகளாலும், அலங்கரிப்புகளாலும்
ஆண்களின் கவனத்தை ஈர்ப்பது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது, இதற்கு பெரும்பாலான பெண்கள் சொல்லும் முட்டாள் தனமான பதில் ''ஆண்களின் பார்வை தான் தப்பாக இருக்கிறது ,அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! ''

இந்தியா என்பது ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினரையும் அதிகம் கொண்ட நாடு, இந்த சூழ்நிலையில் வளர்கின்ற ஒருவன் தனது தாயையோ, தங்கையையோ இது போன்ற ஆடைகளில் பார்க்காமல் வெளி உலகுக்கு வரும்போது அவனுக்கு இந்த உடைகள் எல்லாம் அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் தான் தெரியும், மேற்கத்தைய கலாச்சாரத்தை பின்பற்றி ஆடை அணியும் வெட்கம்கெட்டவர்களைப்போல் அல்லாமல் , உடையை ஒழுக்கமாக அணிய ஆரம்பித்தால் உங்களை யாரும் eve teasing செய்யமாட்டார்கள் துன்புறுத்தமாட்டார்கள்,

அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்படியான, உடலழகையும், அளவையும் காட்டும் விதமான ஆபாச உடைகளை அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்

குழந்தை பருவங்களில் முறையாக, ஒழுக்கமாக, அன்போடும் ஆதரவோடும் வளர்க்கப்படாத கோடிக்கணக்கான குழந்தைகள் நம் நாட்டில் ரௌடிகளாகவும், பொறுக்கிகளாகவும், சைக்கோக்களாகவும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் அவர்கள் கண்ணில் நீங்கள் ஆபாசமாக தெரிந்தால் சீரழித்துவிடுவார்கள்,

முதலில் இந்த சமுதாயம் உங்களை எப்படி பார்க்கவேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

கண்ணியமான பெண்ணாக நிலைநிறுத்தினால் மரியாதை கலந்த அன்புடன் நோக்குவார்கள்!

ஒரு போகப்பொருளைப்போல் காட்சிதந்தால் கைதட்டிதான் கூப்பிடுவார்கள்!

ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன்னை கண்ணியமாக பார்க்க பழகினால் பின் இந்த உலகமே அவ்வாறு பார்க்கத்தொடங்கும்!




















































































மூன்று வருட ஆட்சியில் சில கின்னஸ் சாதனைகள்.

ராதே கிருஷ்ணா 26-02-2014


Sarvam Krishnarpanam...

மூன்று வருட ஆட்சியில் சில கின்னஸ் சாதனைகள்.

From the album: Timeline Photos
By வினோத் சுந்தரம் பாமக
Sarvam Krishnarpanam...

மூன்று வருட ஆட்சியில் சில கின்னஸ் சாதனைகள்.

மூன்றே வருடங்களில் 30 லட்சம் குடிகாரர்களை உருவாக்கியுள்ளதில் கின்னஸ் சாதனை

ஈரோட்டில் உள்ள மதுபான கடையில் பள்ளி மாணவிகள் கூட சென்று குடிக்கும் அளவிற்கு மாற்றியுள்ள‌ சாதனை.

இடைவிடாத மின்வெட்டால் ஒரு மாநிலத்தை தொடர்ந்து இருளில் மூழ்க வைத்த சாதனை

ஒரு சேர பலர் மேஜையை டப் டப் என்று அடித்து அதிக ஒலி எழுப்பியதற்கான சாதனை.

பேருந்தில் செல்வதற்கு பேங்கில் லோன் போட வேண்டிய அளவிற்கு கொண்டு சென்றுள்ள சாதனை.

மின்சார கட்டனத்தை கேட்டாலே "ஷாக்" அடிக்கும் அளவிற்கு ஏற்றி வைத்துள்ள சாதனை

பால் விலையை ஏற்றி பலர் வாழ்வை முடித்து பால் ஊற்றிய சாதனை

எல்லா தொழிலையும் அரசாங்கமே எடுத்துக் கொண்டு ஏகாதிபத்யம் செய்யும் சாதனை.

தொழில் அதிபர்கள் பலர் ஓட்டாண்டியாகி, அம்மா உணவகத்தில் கையேந்த வைத்த சாதனை.

இலவச அரிசி, கிரைண்டர், மிக்சி என்று மக்களை பிச்சைக்காரர்களாக்கிய சாதனை.

சட்டம் ஒழுங்கின்மையால் பல பெண்கள் தாலி இழந்து வரும் நிலையில், தாலிக்கு தங்கம் கொடுக்கிறார் என்று தண்டோரா போடுவதில் சாதனை.

புதிய ரோடுகள் இல்லை, புதிய பாலங்கள் இல்லை, எந்த வளர்ச்சியுமே இல்லாமல் செலவு கணக்கு காட்டுவதில் சாதனை.

மக்களுக்கு மட்டும் வேதனையோ வேதனை !!




































































































































திருமண பொருத்தம் : - எளிய வழி

ராதே கிருஷ்ணா 26-02-2014


திருமண பொருத்தம் :
- எளிய வழி 
From the album: Mobile Uploads
By Jeyananthan Durai
திருமண பொருத்தம் :
- எளிய வழி

1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.



Status Update
By Narasimman Nagarajan
நோயை விரட்டும் சரபேஸ்வர தியான சுலோகம்:
(திருபுவனத்தில் உள்ளது சரபேஸ்வரர் ஆலயம்)

அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:-

ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷீ சதுர் பாஹுக:
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
காலாக்னி கோடித்யுதி:
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
ஸத் யோரிபுக் னோஸ்து

(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்.



Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
மந்திரத்தில் (!!?!!) மாங்காயும் பறிக்கலாம்:(நன்றி- Parasuram Sv )

குறுக்கு புத்தி இருந்தால் போதும் நீங்கள் விரும்பினால் உங்கள் கையில் மற்றும் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.

உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும்.

காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும். மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊற வைத்து ஒரு பாட்டிலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்.

நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது, ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன.

இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வயிற்றுப்பிழைப்பு வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைப்பாடுகளை செய்கிறார்கள்.உண்மையான மந்திரம் அறிந்தவர்கள் இறைவனை அடையவே முற்படுவர் !நமக்கும் அதையே போதிப்பார்கள் !போலிகளைகண்டு ஏமாறாதீர்




Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவராக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்கள்




















































































வியாழன், 20 பிப்ரவரி, 2014

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

ராதே கிருஷ்ணா 20-02-2014








Like This Page · Yesterday 

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

.......PLEASE SHARE THIS

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..


















































































புதன், 19 பிப்ரவரி, 2014

இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள்

ராதே கிருஷ்ணா 19-02-2014




இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள்



இளங்கோவன் அரவணைப்பில் 5917 குழந்தைகள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன்.

இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான்.

ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும்.

பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கமுடியாத சூழல். இதனால் வாடகை சைக்கிளில் சென்று வந்தார். அந்த சைக்கிள் வாடகையை கொடுப்பற்காக வாரவிடுமுறை நாட்களில் பவர்லூம் பேக்டரியில் தார் சுற்றி சைக்கிள் வாடகையை கொடுத்துக் கல்வி கற்று வந்தார்.

கல்லூரி படிப்பை தொடர தேவையான ரூபாய்க்காக உறவினர்கள் வீட்டு படிகளில் தவம் கிடந்தார். தன் பிள்ளை இப்படி வீடு வீடாக போய் கல்வி உதவித்தொகை கேட்கப்போவதை காணமுடியாத இளங்கோவனின் தந்தை, "நமக்கு வேண்டாம்யா இந்த படிப்பெல்லாம், பேசாம பவர்லூம் பேக்டரிக்கு வேலைக்கு போய் விடு'' என்று பிள்ளையிடம் சொல்லியிருக்கிறார்.

"இல்லப்பா எனக்கு தெரிஞ்சதெல்லாம் படிப்பு ஒண்ணுதாம்பா கொஞ்ச ம் பொறுத்துக்கங்கப்பா' 'என்று தந்தையை சமாதானம் செய்து மீண்டும் கிராமத்து வேலைகளை செய்து கடன் வாங்கிக் கொண்டு போய் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் பிடிசி கோர்ஸ்ம், கோவை சி.ஐ.டி கல்லூரியில் பொறியியலும் படித்தார்.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தூங்கி, படிப்பு படிப்பு என்று படிப்பில் மூழ்கி பி.இ.,மற்றும் எம்.இ.,படித்தார். ஒவ்வொரு கட்டத்தை தாண்டும் போதும் தந்தையின் விவசாய நிலங்களும், தாயின் தாலிக்கொடியும் கூட அடமானமாக சென்றது அதில் பல விஷயங்கள் மீட்க முடியாமலும் போனது.

இவ்வளவு கஷ்டத்திற்கும் ஒரு விடிவு கிடைத்தது.

இளங்கோவன் படித்த கல்லூயிலேயே விரிவுரையாளராக வேலை கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குவைத்தில் வேலையும் கிடைத்தது. இடையில் நிறைய வீழ்ச்சி. வீழ்வது தவறில்லை வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என கடுமையாக உழைத்து மேன்மை கொண்டார்.

தனக்காக தாய், தந்தை, மனைவி வகையில் இழந்த சொத்துக்களை மீட்க ஒரு யோகி போல மூன்று வருடம் குவைத்தில் குடும்பம், உறவு, தூக்கம் மறந்து கடுமையாக உழைத்தார். நிறைய பேருக்கு குவைத்தில் ட்யூஷன் எடுத்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் உள்ள வகையில் பயன்படுத்தினார். இவரது வைராக்கியம் காரணமாக இழந்ததை எல்லாம் மீட்டார் மேலும் பல மடங்கு சம்பாதித்தார். விடா முயற்சியால் அமெரிக்காவில் பிஎச்டி முடித்தார்.

இப்போது ஒரு தன்னிறைவான வாழ்க்கை

இந்த வாழ்க்கை என்பது எனக்கு சுயமானது, நான் என் குடும்பம் என்றானது, என்னை எவ்வளவோ சிரமத்திற்கு நடுவிலும் ஆளாக்கிய என் தேசத்திற்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்தார், பிறகு தான் என்ன செய்யமுடியும் என்பதை முடிவு செய்தார்.

"கல்வி ஒருவனை உயர்த்துமே தவிர ஒரு காலத்திலும் தாழ்த்தாது. ஆனால் அந்த கல்வியை பெற தான் கஷ்டப்பட்டது போல தாய் நாட்டில் எத்தனையோ பேர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வி உதவியை செய்வோம் என்பதை லட்சியமாகக் கொண்டார்".

இதற்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினார். இவரது நண்பர்களும் இவருடன் சேர்ந்து கொள்ள "அரவணைப்பு' அமைப்பு கோவையில் 28.01.2009 ல் தோன்றியது. இந்த அரவணைப்பு இயக்கமானது கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5917 மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு தந்தை இல்லாத அவர்களை படிக்க ஆதரவளித்து வருகிறது.

எப்போதோ குவைத் வேலையை விட்டுவிட்டு மனைவி, குழந்தைகளோடு கோவை மிதமான வெயிலில் இதமான வாழ்க்கை இவர் மேற்கொண்டு இருக்கலாம், ஆனால் குறைந்த பட்சம் பத்தாயிரம் பேரையாவது படிக்கவைக்கவேண்டும் என்ற லட்சியம் காரணமாக குவைத்தின் சூடான சூழலில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள ஏழை எளிய மாணவர்களுக்காக உருகுகிறார்.

ஆகவே இதை படிக்கும் அல்லது பார்க்கும் நண்பர்கள் இளங்கோவனின் கல்விச்சேவையில் விருப்பப்பட்டால் உங்களையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் இதற்கென உள்ள அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பல்வேறு முறைகளில் அரவணைப்பு குழுவினர் ஆய்வு செய்து விண்ணப்பம் நியாயமானது, நேர்மையானது என்று முடிவெடுத்த பின் சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களுக்கு "செக்" கொடுத்து உதவுகிறார்கள்.

இதை படிக்கும் இணையதள நண்பர்கள் அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்தை இல்லாத ஏழை மாணவ, மாணவியருக்கு கொடுப்பது கூட ஒரு வகையில் தொண்டுதான்.

இளங்கோவனை மனதார பாராட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய எண்: 9597889679. இந்த கட்டுரை வரும்போது அநேகமாக அவர் குவைத்தில் இருக்கலாம். குவைத் எண்: 00965 99239369. குவைத் எண்ணில் பேசினால் உங்களுக்கு ரோமிங் கட்டணம் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். அவரது மெயில் மற்றும் அரவணைப்பு இணையதள முகவரி:

mail id :skilangovan01@gmail.com
www.aravanaipu.org