வியாழன், 31 அக்டோபர், 2013

தீபாவளிக்கு மத்தாப்பு

ராதே கிருஷ்ணா 31-10-2013

தீபாவளிப் பண்டிகையை இறைவன் விருப்பப்படி அவன் நினைவோடு பெரியவர்களுடன் (பெற்றவர்களுடன் ) குழந்தைகளுடனும் சேர்ந்து மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும். அப்போது தான் இறைவன் மகிழ்ந்து நம்மிடம் வருவான்.

Narasimman Nagarajan shared Varagooran Narayanan's photo.



தீபாவளிக்கு மத்தாப்பு கட்டாயம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது. "ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. "துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோ ஷே பூத தர்ஸ்யோ: உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்' என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி. 'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை. இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம். காரணம் என்ன? "பித்ரூணாம்' என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள். இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக!




ஜாதகம்

ராதே கிருஷ்ணா 31-10-2013



ஜாதகம்








Narasimman Nagarajan shared பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்'s photo.














திருமண தடை;
---------------------
எந்த ஒரு ஜாதகருக்கும் / ஜாதகிக்கும் - திருமண விஷயமாக பார்க்கும்போது - மூன்று வித தோஷங்கள் ஆராயப்படுகின்றன . சர்ப்ப தோஷம் . செவ்வாய் தோஷம் அடுத்து புனர்பூ.முதல் இரண்டு தோஷங்களும், எல்லா ஜோதிடர்களுக்கும் அத்துபடி.
அதனாலே , அந்த ரெண்டைப் பத்தி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.இப்பொழுது பார்க்கவிருப்பது புனர்பூ .

ஒரு சில ஜாதகர்களுக்கு - பொருத்தம் பார்க்கும்போது , கொஞ்சம் ஓரளவுக்கு பொருந்தி , பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கும்போதே , திடீரென்று - பொருத்தம் பார்க்கப் பட்ட ஜாதகருக்கு , வேறு ஒரு இடத்தில் நல்ல வரன் வந்து , டக்குனு , முடிஞ்சு கல்யாணமே முடிந்து போகும்... கவனித்து இருக்கிறீர்களா ?

அது எல்லாமே .. இந்த புனர்பூ தோஷ வகையை சார்ந்தது... இந்த தோஷம் இருப்பவர்களுக்கு , பொருத்தம் பார்க்கும்போது - சம்பந்தப்பட்ட ஜாதகர் / ஜாதகிக்கு வேறு ஒரு நல்ல வரன் அமைந்து விடுகிறது.

சரி, இதை எப்படி ஜாதக ரீதியாக கண்டு பிடிப்பது ?

சந்திரன் , சனி - இரண்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ? என்று பாருங்கள். இரண்டும் ஒரே வீட்டில் சேர்ந்து இருந்தால் , அல்லது ஒருவருக்கொருவர் சம சப்தம பார்வை கொண்டு இருந்தால் ... ( அதாங்க - சந்திரனில் இருந்து ஏழாம் வீட்டில் சனி இருந்தால் ) , அல்லது இரண்டும் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... அல்லது இரண்டு கிரகமும் இருக்கும் நட்சத்திரங்கள் பரிவர்த்தனை ஆகி இருந்தால்... ( அதாவது - பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்து , அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது போலே... )

இந்த மாதிரி அமைப்பு இருப்பவர்கள் புனர்பூ தோஷத்தால் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் என்பது பொருள்.

புனர்பூ தோஷம் இருப்பவர்களுக்கு திருமண விஷயத்தில் என்ன நடக்கும் ?

(1 ) திருமணம் காலதாமதமாவது
(2 ) திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமே தடைகள் ஏற்படுவது,
(3 ) திருமண நிச்சயம் முறிந்து போவது,
(4 ) நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி தள்ளி வைக்கப்படுவது,
(5 ) மணப்பெண்ணோ மாப்பிள்ளையோ மாறிப் போவது,
(6 ) திருமணத்துக்கு போகும் வழியில் காலதாமதமாகிப் போவது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பரிகாரம் :

நல்லா ஜோதிடரிடம் ஜாதகத்தை காட்டி,அவர்களின் ஜாதகத்திற்கு ஏற்றாற்போல் பரிகாரம் செய்யலாம்.பொதுவான பரிகாரமாக..,

திருமணஞ்சேரி சென்று முறைப்படி பரிகார பூஜை செய்து கொள்வது நல்லது . வசதி இருப்பவர்கள் , யாராவது ஏழை , எளியவர்களுக்கு திருமணம் நடைபெற உதவி செய்யலாம்.

குலதெய்வத்திற்கு - முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம்.

தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து - திருவண்ணாமலை கிரிவலம் சென்று , மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் , உடனடியாக பொருத்தமான வரன் அமையும்.

களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடும் , குடும்ப ஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும் பாதிக்கப் பட்டிருந்தாலும், திருமணம் தள்ளிப் போகும். அவர்களுக்கும், மேற்கூறிய பரிகார முறை பொருந்தும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.


விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?

ராஜ யோகம் என்றால் சொத்து, பதவி போன்றதா? எதிர் பார்ப்பதை விட அதிகமான நன்மை கிடைப்பதுதான் ராஜ யோகம். நாம் அந்த அளவிற்கு எதிர் பார்த்திருக்கவே மாட்டோம். அது கிட்டினால் அதை விபரீத ராஜ யோகம் என்று சொல்லலாம்.

6க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்று ஒரு வாக்கு உண்டு. கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும்.

கன்னி, ரிஷபம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் குறிப்பாக ராகு, கேது பெயர்ச்சியால் விபரீத ராஜ யோகம் ஏற்படும்.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.


நவ கிரகங்களின் காரகன்.

சூரியன் பித்ருகாரகன்

சந்திரன் மாத்ருகாரகன் 

செவ்வாய் சகோதரகாரகன்

புதன் புத்திகாரகன்

குரு புத்திரகாரகன்

சனி ஆயுள்காரகன்

சுக்கிரன் களத்திரகாரகன்

ராகு யோக போககாரகன்

கேது ஞான மோட்சகாரகன்




கேந்திரம் & திரிகோணம்

ஒருவருடைய ஜாதகதில் 1,4,7 & 10 கேந்திர ஸ்தானம் என்பது ஸ்ரீவிஷ்ணுவை குறிக்கும். 1,5 & 9 திரிகோண ஸ்தானம் என்பது ஸ்ரீலட்சுமியை குறிக்கும்.

ஒருவருடைய ஜாதகதில் கேந்திரம் & திரிகோணம் சுப கிரகங்கள் அமர்ந்தால் ராஜயோகம் ஏற்படும். 

ஸ்ரீலட்சுமி ஸ்தானம் மற்றும் ஸ்ரீவிஷ்ணு ஸ்தானம் அசுப கிரகங்கள் அமர்ந்தால் சிறப்பான பலன் தருவதில்லை.

ஒருவருடைய ஜாதகதில் கேந்திரம் & திரிகோணம் ஸ்தானங்கள் தூண்கள் என்பது ஆகும்.


Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.



குருவுக்கு பார்வை பலம்

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது.

குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. 

அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

குருவுக்கு 2, 11 ஆகிய பார்வை இடங்கள் அற்புதமானவை.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.



நீசபங்க ராஜயோகம் உண்டாகுமா ராஜயோகம்?.

ஒரு கிரகம் தனது பலவீன ஸ்தானமான நீச ஸ்தானத்தில் இருப்பது, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்தையும், அந்தக் கிரகம் எந்த வீட்டின் அதிபதியாக இருக்கிறதோ அந்த வீட்டின் பலனையும் பாதிக்கும் என்றாலும், நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.

ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும், நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ, அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது.

Narasimman Nagarajan shared Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik's status update.


களத்திர ஸ்தானம் - ஏழாம் வீடு , மனைவி / கணவன்.

திருமணம் : - 7க்குரிய கிரகத்தின் திசை புக்தியில் திருமணம் நடக்கும்.

நல்ல மனைவி கிடைப்பாள் :- 7ல் குரு நல்ல மனைவி, 7ல் குருவின் பார்வை பெற்றாலும் ,7ல் சுக்கிரன் (அ) சந்திரன் இருந்தாலும் நல்ல மனைவி கிடைப்பாள்

புத்திசாலி மனைவி : 7ல் குருவும், சுக்கிரனும் கூடி நின்றால்.

மகிழ்ச்சியற்ற மனைவி:- ஜாதகத்தில் 7ஆம் அதிபதி 6,8 & 12ல் மறைவுற்றால் மண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

திருமணம் நடைபெறாது :- ஜாதகத்தில் 7ஆம் அதிபதியும் , லக்கினாதிபதியும், சேர்ந்து ஜாதகத்தில் 6,8 & 12 ல் வீடுகளில் அமர்ந்திருந்தால் ஜாதகனுக்குத் திருமணம் நடைபெறாது.

விதவை மணம் : ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் 7ஆம் வீட்டில் அமர்ந்திருந்தால் ஒரு விதவையை ஜாதகன் மணப்பான்.

தாமத திருமணம்:- 7ல் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்திருந்தாலும், 7ல் செவ்வாயும், சனியும் சேர்ந்திருந்தாலும் ஜாதகனுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்காது.















































































கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

ராதே கிருஷ்ணா 31-10-2013


கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

Ravi Natarajan shared Mannargudi Sitaraman Srinivasan's status update.
கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?
==========================
கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

சரவணபவ தத்துவம்

சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத்தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின் மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோமுக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்த தினம் வைகாசி மாத - விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறுஉருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

மு - முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு - ருத்ரன் என்கிற சிவன்
க - கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ?

ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.

நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :

1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.

ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?

ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு

ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்.

ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.

திருப்பரங்குன்றம் - மூலாதாரம்

திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்

பழனி - மணிபூரகம்

சுவாமிமலை - அனாஹதம்

திருத்தணிகை - விசுத்தி

பழமுதிர்சோலை - ஆக்ஞை.

ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.









Santhanam

ராதே கிருஷ்ணா 31-10-2013



N. Santhanam


N. Santhanam is an acclaimed Indian film actor who plays lead comedian roles in Tamil films. His fame started off with Lollu Sabha. He made his feature film debut withManmadhan in 2004 and later appeared in several successful films. Though Manmadhan is considered his first feature film, he has acted in two films before Manmadhan. Santhanam was also in STR's debut film as a leading actor, namely Kadhal Azhivathillai.[3] He is best known for his roles in Siruthai (2011) and director M. Rajesh's comic trilogy, comprisingSiva Manasula Sakthi (2009), Boss Engira Bhaskaran (2010) and Oru Kal Oru Kannadi(2012), the former two earning him the Vijay Award for Best Comedian for their respective years. After Manmadhan, Santhanam continued his collaboration with actor Silambarasan, appearing in successful comedy tracks in VallavanKaalaiSilambattamVaanam andOsthe. As of 2012, he is the most popular comedian working in Tamil cinema.[4] He has started a film production company named Handmade Films.

Santhanam
N.Santhanam Indian film actor who plays lead comedian roles.jpg
Birth nameN. Santhanam
Born21 January 1980 (age 33)[1]
Pozhichalur, ChennaiTamil Nadu, India
NationalityIndian
GenresComedy
InfluencesGoundamani
SpouseUsha

Background

Santhanam resides in Pozhichalur, Chennai. He has a Diploma in Electronics and Communication Engineering from Meenakshi Krishnan Polytechnic College.[6] Santhanam started his career in television in a comedy show titled Sakala vs Ragala followed by Lollu Sabha and went on to do Tamil films starting in Manmadhan in 2004. He starred as hero in the movie Arai En 305-il Kadavul alongside Ganja Karuppu. He garnered a lot of attention and appreciation following his appearance in movies like Siva Manasula Sakthi and Boss Engira Bhaskaran. He has worked with several popular actors including RajnikanthAjith KumarVijayDhanushSuriyaKarthiJiivaVikramAryaMadhavanJayam RaviVishal KrishnaArun VijaySathyarajSimbu and many others.[1] Much like career of veteran comedians like Vivek who played important comedians role and side kick to main hero from 1998-2009 in most of the Tamil films,even Santhanam since 2010 has been getting such pivotal comedian roles. Since 2009 Santhanam plays the role of the hero's sidekick (sometimes foil), contributing more to the main story.[4] Based on an online poll conducted by The Times of India, Santhanam won the Best Actor in a Comic Role for Vaanam.[7]

Other interests

The actor, in an interview, expressed his wish to direct Tamil movies in comedy-sentiment subjects.[8] He feels that India is a land of spirituality and science with lot of untouched subjects and he would venture to touch those in his directorial venture.[8] Santhanam is part of 'Kanna Laddu Thinna Aasaiya' in Tamil. A cameo role is done by Simbu in this film.[9] In recent times Santhanam is titled as the comedy super star of Tamil Cinema.[10]

Popularity

After Vadivelu, Santhanam is regarded as one of the best comedians in Tamil film industry. Most of the directors depend on him to ensure box-office success.[11] He is accused of imitating veteran Goundamani's style of making sarcastic comments which Santhanam denies.[12]

Awards

Won
Nominated

Filmography

Television

  • 2001 - "super comedies in win tv"
  • 2002 – Tea Kadai Bench in WIN TV with super 10 Balaji
  • 2001–2004 – Lollu Sabha

Films


  • Santhanam
    Film actor
  • N. Santhanam is an acclaimed Indian film actor who plays lead comedian roles in Tamil films. His fame started off with Lollu Sabha. He made his feature film debut with Manmadhan in 2004 and later appeared in several successful films. Wikipedia
  • BornJanuary 21, 1980 (age 33),Polichalur
    Height1.70 m

    Santhanam filmography


    Films

    YearFilmRoleNotes
    2002Pesadha Kannum Pesume[1]Uncredited
    2002Kadhal AzhivathillaiUncredited
    2004Manmadhan[2]Bobby
    2005February 14[3]
    2005Englishkaran[3]
    2005Oru Kalluriyin Kathai[4]David
    2005Sachien[5]Santhanam
    2005Anbe Aaruyire[6]
    2006Idhaya Thirudan[7]Mahesh
    2006Unakkum Enakkum[8]Arivu
    2006Sillunu Oru Kaadhal[9]Rajesh
    2006Vallavan[10]Bala
    2006Rendu[11]Seenu
    2007Veerasamy[12]
    2007Vyapari[13]Satish
    2007Kireedam[14]Balasubramaniam
    2007Veerappu[15]
    2007Thottal Poo Malarum[16]
    2007Azhagiya Tamil Magan[17]Murugan
    2007Machakaaran[18]
    2007Polladhavan[19]Satheesh
    2007Billa[20]Krishna
    2008Kaalai[21]
    2008Theekuchi[22]
    2008Vaitheeswaran[23]
    2008Kannum Kannum[24]
    2008Santosh SubramaniamSrinivasan
    2008Arai Enn 305-il Kadavul[25]Raasu
    2008KuselanNagercoil Nagaraj
    2008JayamkondaanBhavani
    2008Mahesh, Saranya Matrum Palar
    2008SilambattamSama
    2009Siva Manasula SakthiVivekWinnerVijay Award for Best Comedian
    2009ThoranaiVellaichamy
    2009MasilamaniPazhani
    2009VaamananChandru
    2009Modhi VilayaduKaduku
    2009Malai MalaiVimala Haasan
    2009Kandein KadhalaiMokkai Raasu
    2009KandhakottaiVelu
    2009Balam
    2010Theeradha Vilaiyattu PillaiKumar
    2010Guru Sishyan
    2010Maanja VeluManikkam
    2010ThillalangadiDr.Putti Paul
    2010Moscowin KaveryDevaraj
    2010Boss Engira BhaskaranNallathambiWinner, Vijay Award for Best Comedian
    Winner, Edison Award for Best Comedian
    Nominated, Filmfare Award for Best Supporting Actor - Tamil
    2010Enthiran[26]Siva
    2010Mandhira PunnagaiSenthil
    2010Chikku BukkuKrishna
    2010Ayyanaar
    2010Aattanayagan
    2010Chutti ChathanScientist Vasu
    2011SiruthaiKaatuppoochiWinner, Vijay Award for Best Comedian
    Nominated, Filmfare Award for Best Supporting Actor – Tamil
    2011ThambikottaiSaisa
    2011Singam PuliBuji Babu
    2011Vaanam"Tantana Tan" SeenuWinnerSIIMA Award for Best Comedian
    2011KandaenSaami
    2011UdhayanMukundhan
    2011Deiva ThirumagalVinodNominated, Vijay Award for Best Comedian
    Nominated, Filmfare Award for Best Supporting Actor – Tamil
    2011MarkandeyanYaanai mudi
    2011Yuvan YuvathiSakkarai
    2011Vanthaan VendraanDelhi
    2011Vellore MaavattamKumaravel
    2011VelayudhamSpeedu
    2011OstheSelvam
    2012Muppozhudhum Un KarpanaigalChandru
    2012Kadhal Pisase
    2012VinayagaSenthil
    2012Oru Kal Oru Kannadi[27]Parthasarathi (Partha)Winner, Vijay Award for Best Comedian
    Winner—SIIMA Award for Best Comedian
    2012LeelaiVicky
    2012KalakalappuVettupuli
    2012IshtamThiyagu
    2012SaguniAppadurai Rajini
    2012Naan EePoottu Govindhan
    2012MirattalChari
    2012ThaandavamSathyan
    2012Podaa PodiSpecial appearance
    2012Neethaane En PonvasanthamPrakash
    2013Alex PandianKaalayan
    2013Kanna Laddu Thinna AasaiyaKaalkattu Kaliyaperumal (KK)Also producer and Script Writer
    2013SettaiNagaraj (Nadupakka Nakki)Also dialogue writer
    2013Theeya Velai Seiyyanum KumaruNokia
    2013Thillu MulluCameo appearance
    2013Singam 2Susai
    2013Pattathu YaanaiPoongavanam (Gouravam)
    2013ThalaivaaLogu
    2013Ainthu Ainthu AinthuGopal
    2013Ya YaRajkiran (Sehwag)
    2013Raja RaniSarathy
    2013Vanakkam ChennaiNarayanan

    Upcoming Projects

    YearFilmNotes
    2013Madha Gaja RajaPost-production
    2013Mappilai VinayagarPost-production
    2013Amali ThumaliPost-production
    2013JK Enum Nanbanin VaazhkaiPost-production
    2013All in All Azhagu RajaPost-production
    2013BoologamFilming
    2013Idhu Kathirvelan KadhalFilming
    2013VaaluFilming
    2013Endrendrum PunnagaiFilming
    2013NarathanFilming[28]
    2013Tamilselvanum Thaniyar AnjalumFilming
    2013Inga Enna SolluthuFilming
    2013NambiarFilming[29]
    2013Vaaliba RajaFilming[30]
    2014Vettai MannanPre-production
    2014VeeramFilming
    2014IFilming
    2014BrahmanFilming
    2014AranmanaiFilming
    2014Vallavanukku Pullum Aayudham[31]Filming
    2014Untitled Simbhu-Pandiraj ProjectAnnounced

    Singer

    YearFilmSongComposerNotes
    2013Thalaivaa"Vanganna Vanakkanganna"G. V. Prakash Kumar
    2013Nambiar"Aara Amara"Vijay Antony[32]