திங்கள், 7 அக்டோபர், 2013

ஸ்ரீ மதே ராமானுஜாய நம :

ராதே கிருஷ்ணா 07-10-2013

நமது புரீ ஜகன்னாத் யாத்ரையில் நமது பஸ்ஸில் நம்மோடு பயணம் செய்து

நல்லவைகளை அவ்வப்பொழுது நமக்கு விளக்கிச் சொல்லிய பெரியவர்கள் (திருமதி சேஷாத்ரி , மும்பை ) அவர்களின் புகழுரையை கீழே அளித்துள்ளேன்.

ஸ்ரீ மதே ராமானுஜாய நம :


1. ஆசான் புகழ் பாட ஆசான் அருள் வேண்டும்

    நாவு துடித்தது , பரீவாஹம் பொங்கியது

    நம் மனதில் எழுந்தது  எண்ண அலைகள்

   நம்முடன் இதை பகிர்ந்து கொள்ள தவிக்கிறேன்

2.  ரங்கனின் திருவடிகளைப் பற்றியவர்

     ஸ்ரீ ரங்க நாச்சியாரின் அருள் பெற்றவர்

     வேளுக்குடி ஸ்ரீ வரதாச்சார்யர் தவப்புதல்வர்

     வேண்டிய நாம் அவர் தாள் பணிவோம்.

3.   சுவாமிகளின் சொல் ஒரு வரைபடம்

      படைப்புக்கள் சொல்லால் வரும் காவியம்

     ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெட்டகம்

     நீந்திக் கரைசேர ஒரு நாவாயாக இருப்பவர்,

4.  கல்லையும் திரித்து நார் எடுப்பார்

     சாரத்தின் சாரத்தை நமக்களிப்பார்

     தேசிகரை துணையாக உரைத்த வள்ளல்,

5.  நம்மாழ்வாரும் ஆழ்வார்களும் சேர்ந்து

     நாக்கில் நாட்டியம் ஆடிடுவார்

    ஆட்டம் பார்த்த நாமும் நாகத்தினைப் போல்

    நன்றாக ஆடி களித்திடுவோம்.

6.  கோதோபநிஷத் சொன்னவர் இவர்

     கீதோபநிஷத்தும் அழித்துக் காத்தார்

    உபநிஷத்தை உலகுக்கு அறியச் செய்தார்

   ஸ்ரீ வைணவத் தூணென நின்றிடுவார்

7.  பிரமத்தின் பெருமையை பரக்கப் பேசுவார்

     நம் மனத்தில் படும்படி பாங்காய் உரைப்பார்

     எத்தனையோ எத்தனையோ சொல்லத் துடிக்குது

    சொல்லில் அடங்காததால் களைத்துப் போனேன்

8.  ராமானுஜனின் புகழைக் காட்டித்தந்தாய்

    ராமானுஜ அடியார்கள் வாழவென்று

    போற்றி போற்றி என்று புகழ்ந்திடுவோம்

   கைங்கர்யம் செய்ய யாசித்திடுவோம்


                       அடியேன் வேத ராமானுஜதாணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக