செவ்வாய், 22 அக்டோபர், 2013

விநாயகர் அகவல்

ராதே கிருஷ்ணா 22-10-2013


விநாயகர் அகவல்
  • Narasimman Nagarajan shared Varagooran Narayanan's status update.
    ← விநாயகர் அகவல்
    எழுதியவர்: ஔவையார் →

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)
    Like ·  ·  · 10 hours ago · 
    • Ranga Rao Narasimhan
  • Narasimman Nagarajan shared Varagooran Narayanan's status update.
    கனகதாரா ஸ்தோத்ரம்

    1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ

    ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|

    அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா

    மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:||

    மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின் மார்பில் தவழும் மங்கல தேவதையான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் அழகு - அது அனைவருக்கும் ஐச்வர்யத்தை நல்குவது - எனக்கு மங்களம் தருவதாகுக !

    2. முக்தா முஹ§:விதததீ வதனே முராரே:

    ப்ரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி|

    மாலா த்ருசோ:மதுகரீவ மஹோத்பலே யா

    ஸா மே ஸ்ரீயம் திசது ஸாகரஸம்பவாயா:||

    மலர்ந்து பரந்த உத்பல புஷ்பத்தில் தேன் வண்டு போல் முராரியான நாராயணனுடைய முகத்தில் ப்ரேமையுடனும், வெட்கத்துடனும் மெல்ல மெல்லப் போவதும் வருவதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண்தொடர் எனக்கு ஐச்வர்யத்தை கொடுக்கட்டும்.

    3. விச்வாமரேந்த்ர பதவிப்ரம தானதக்ஷம்

    ஆனந்த ஹேது ரதிகம் முரவித்விஷோபி|

    ஈஷந்நிஷீதது மயி க்ஷண மீக்ஷணார்தம்

    இந்தீவரோதரஸஹோதரமிந்திராயா:||

    எல்லா தேவர்களுக்கும் தலைமையான - இந்த பதவியை - கொடுக்க வல்லதும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் அது மகிழ்ச்சியைக் கொடுப்பதும், நீல ஆம்பல பூ போன்றதுமான லக்ஷ்மி தேவியின் அரைக்கண் பார்வை என்னிடம் நொடியாகிலும் நிலை பெறட்டுமே!

    4. ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம்

    ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்||

    ஆகேரஸ்தித கநீநிக பக்ஷநேத்ரம்

    பூத்யை பவேத் மம புஜங்கசயாங்கநாயா:||

    சற்றே மூடிய கண்களையுடயை முகுந்தனை மகிழ்ச்சியுடன் அடைந்து - (ஆனந்தத்தின் மூலகாரணமாயும் மறைவில்லாததுமான காம சாஸ்திரமயமாகியவர் அவர்) சற்று சாய்வாக நிற்கும் கருவிழியும், இமையும் கொண்ட லக்ஷ்மி தேவியின் கண் எனக்கு ஐச்வர்யத்தை பயக்கட்டும்.

    5. பாஹ்வந்தரே மதுஜித:ச்ரித கௌஸ்துபே யா

    ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி|

    காமப்ரதா பகவதோபி கடாக்ஷமாலா

    கல்யாணமாவஹதுமே கமலாலயாயா:||

    மஹாவிஷ்ணுவின் கௌஸ்துபம் கொண்ட மார்பில் இந்திர நீல மணி ஹாரம் போல் விளங்குவதும், பகவானுக்கே காமத்தை கொடுப்பதுமான லக்ஷ்மி தேவியின் கடைக்கண் தொடர் எனக்கு மங்களத்தை உண்டாக்கட்டும்.

    6. காலாம்புதாலிலலிதோரஸி கைடபாரே:

    தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ|

    மாது:ஸம்ஸ்தஜகதாம் மஹனீயமூர்த்தி:

    பத்ரானி மே திசது பார்கவந்தனாயா:||

    கைடபனை வதைத்த மஹாவிஷ்ணுவின் கரூநீல மேகம் போன்ற சீரிய மார்பில், மேகத்தின் மேல் விளங்கும் மின்னல் கொடி போல் பிரகாசிக்கின்றதே ஜகன் மாதாவின் மேன்மை தங்கிய வடிவம், அது எனக்கு மங்களங்களைக் கொடுக்கட்டும்.

    7. ப்ராப்தம் பதம் ப்ரதமத:கலு யத்ப்ரபாவாத்

    மாங்கல்யபாஜி மதுமாதினி மன்மதே ந|

    மய்யாபதேத் ததிஹ மந்தரமீக்ஷணார்தம்

    மந்தாலஸ ம் ச மகராலய கன்காயா:||

    பாற்கடலின் மகளான மஹாலக்ஷ்மியின் மேலான கடைக்கண் என்மேல் சிக்கெனப் பதியட்டும். அதன் வலிமையாலன்றோ மன்மதன், முதலில் மதுவரக்கனை வீழ்த்திய மஹாவிஷ்ணுவினிடத்தில் இடம் பெற்றான்.

    8. தத்யாத்தயானுபவனோ த்ரவிணாம்புதாராம்

    அஸ்மின் அகிஞ்சன விஹங்கசிசௌ விஷண்ணே|

    துஷ்கர்மகர்மமபநீய சிராய தூரம்

    நாராயணப்ரணயினீ நயனாம் புவாஹ:||

    ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மியின் கடாக்ஷம் என்ற கார்மேகம் தயவு என்ற காற்றுத் துணையுடன், வெகு நாள் செய்த பாபமாகிய கோடையை நீக்கி பணமாகிய நீர்மழையை இந்த ஏழை சாதகக்குஞ்சின் மேல் பொழியட்டும்.

    9. இஷ்டாவிசிஷ்டமதயோபி யயா தயார்த்ர -

    த்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே|

    த்ருஷ்டி: ப்ரஹ்ருஷ்டகமலோகரதீப்திரிஷ்டாம்

    புஷ்டீம் க்ருஷீஷ்ட மம புஷ்கரவிஷ்டராயா:||

    சாதாரண புத்திமான்களும் தயைததும்பும் எந்தக்கண் பார்வையால் மூவுலகத்தலைமைப் பதவியை கூட சுலபமாக பெறுகின்றனரோ, அந்த மலர்ந்த தாமரை மலரையத்த பார்வை- தாமரைமலரில் வீற்றிருக்கும் மஹாலக்ஷ்மியின் பார்வை - என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்.

    10. கீர்தேவதேதி கருடத்வஜஸுந்தரீதி

    சாகம்பரீதி சசிசேகர வல்லபேதி|

    சிருஷ்டிஸ்திதி ப்ரலய கேலிஷ§ ஸம்ஸ்திதாயை

    தஸ்யை நம:த்ரிபுவணே குரோஸ் தருண்யை ||

    மூன்று உலகங்களுக்கும் ஒரே நாயகரான பரமேச்வரனுக்கு உலகை ஆக்கவும், நிலைபெறச் செய்யவும் அழிக்கவும் ஆன விளையாட்டில் உடனிருக்கும் பத்நியாக ஸரஸ்வதீ எனவும், சாகம்பரீ எனவும், சந்திரசேகரரின்பிரியை எனவும் விளிக்கப்பட அவ்வன்னைக்கு நமஸ்காரம்.

    11. ஸ்ரீ§த்யை நமோஸ்து சுபகர்மபலப்ரஸ¨த்யை

    ரத்யை நமோஸ்து ரமணீய குணர்ணவாயை||

    சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதநாயை

    புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை||

    நாம் செய்த நற்செயல்களின் பயனைக் கொடுக்கும் சுருதி என்றறியப்படுபவளுக்கும், இணிய குணங்களுக்கு கடல் போன்றிருக்கும் ரதிக்கும், தாமரையை இருப்பிடமாஸகக் கொண்ட சக்திக்கும், புருஷோத்தமன் ப்ரியையான புஷ்டிக்கும் நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

    12. நமோஸ்து நாலீக நிபானனாயை

    நமோஸ்து துக்தோததி ஜன்ம பூம்யை|

    நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

    நமோஸ்து நாராயண வல்லபாயை||

    தாமரை மலரொத்த முகமுடையவளும், பாற்கடலை பிறந்த இடமாகக் கொண்டவளும், சந்திரன், அமிர்தம் இவற்றின் சகோதரியாகவும் இருக்கிற ஸ்ரீ நாராயணரின் ப்ரியையான லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.

    13. ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தனாநி

    ஸாம்ராஜ்ய தான விபவானி ஸரோருஹா

    த்வத்வந்தனாநி துரிதாஹரணோத்யதாநி

    மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே||

    ஹே!தாமரைபோல் கண்களை உடையவளே!செல்வம் கொழிப்பனவும், கரணங்களனைத்தையும் மகிழ்விப்பனவும் சக்ரவர்த்தி பதவியை நல்குவனவும், பாபங்களைப் போக்குபவனவுமான உன்னை வணங்கல்கள் என்னையே சாரட்டும்.

    14. யத்கடாக்ஷஸமுபாஸனாவிதி:

    ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத:|

    ஸந்தநோதி வசனாங்க மானஸை:

    த்வாம் முராரிஹ்ருதயேச்வரீம் பஜே||

    எந்த அம்பிகையின் வழிபாடு, வழிபடுபவனுக்கு எல்லா வித செல்வங்களையும் நல்குமோ, அந்தவிஷ்ணு பத்னியை முக்கரணங்களாலும் சேவிக்கிறேன்.

    15. ஸரஸிஜநிலயே ஸரோஜ ஹஸ்தே

    தவல தமாம்சுக கந்த மால்யசோபே|

    பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே

    த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்||

    தாமரைமலரில் வீற்றிருப்பவளே! கையில் தாமரையை கொண்டவளே!மிக வெண்மையான துகில், சந்தனம் மாலை இவற்றால் அழகியவளே!இனியவளே, மதிப்பிற்குரிய ஹரிப்ரியே!மூவலகிற்கும் ஐச்வர்யம் நல்குபவளே எனக்கு மனமுவந்து அருள்வாயாக!

    16. திக்ஹஸ்திபி:கனக கும்ப முகாவஸ்ருஷ்ட

    ஸ்வர்வாஹினீ விமல சாரு ஜலுப்லுதாங்கீம்|

    ப்ராதர்நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ

    லோகாதிநாத க்ருஹீணீ மம்ருதாப்திபுத்ரீம்||

    திக்கஜங்கள், தங்கக்குடங்களின் வழியே பெருகச்செய்த ஆகாசகங்கை நீரால் நனைந்த உடலையுடையவளும், உலகனைத்திற்கும் தாய் ஆனவளும், உலக நாயகரான விஷ்ணு ப்ரியையானவளும், பாற்கடல் பெண்ணுமாகிய லக்ஷ்மி தேவியை வணங்குகிறேன்.

    17. கமலே கமலாக்ஷ வல்லபே த்வம்

    கருணா பூரதரங்கிதை ரபாங்கை:|

    அவலோகய மாமகிஞ்சனானாம்

    ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா:||

    மஹாலக்ஷ்மி!மஹாவிஷ்ணுவின் பிரியே!நீ கருணை ததும்பும் கடாக்ஷங்களால், மிக ஏழையானவர்களுக்கு இரக்கம் காட்டவேண்டிய முதல் நபரான என் மேல் பார்த்தருள்வாயாக !

    18. ஸ்துவந்த யே ஸ்துதிபிரமூபிரன்வஹம்

    த்ரயீமயீம் த்ரிபுவன மாதரம் ரமாம்!

    குணாதிகா குருதர பாக்ய பாஜினோ (பாஜனா:)

    பவந்தி தே புவி புதபாவிதாசாய:||

    மூன்று வேதங்களே உருவான த்ரிலோகமாதாவும் லக்ஷ்மிதேவியை இந்தஸ் ஸ்தோரங்களால் தினந்தோறும் ஸ்தோத்ரம் செய்பவர் குணம் மிக்கவராயும், மிகப்பெரிய பேறு பெற்றவராயும், அறிஞர் போற்றும் கருத்து கொண்டவராயும் ஆவர்.

  • Narasimman Nagarajan shared Varagooran Narayanan's status update.


    1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
    கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்
    அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
    நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்

    மனம் மகிழ்ந்து, கையில் மோதகம் ஏந்தி, எப்பொழுதும் மோட்சம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதிகொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். யானையரக்கனைக் கொன்றவர். வணங்கியவரை குறைதீர்த்துக் காப்பவர். அவரை வணங்குகிறேன்.

    2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
    நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்
    ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
    மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்

    வணங்காதவருக்கு விநாயகர் பயமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவரும் அசுரரும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும், கஜாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.

    3. ஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்
    தரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
    க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
    மனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமிபாஸ்வரம்

    கஜாஸுரனை அழித்து அகில உலகுக்கும் ÷க்ஷமத்தைச் செய்தவர் விநாயகர். மேலும் அவர் பருத்த தொந்தியும், சிறந்த யானைமுகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி தோன்ற புகழ்சேர்ப்பவர். வணங்கியவருக்கு நல் மனம் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.

    4. அகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
    புராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
    ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
    கபோலதான வாரணம் பஜே புராண வாரணம்

    ஏழைகளின் துன்பத்தைத் துடைத்து உபநிஷதங்கள் போற்ற நிற்பவர். பரமசிவனின் மூத்த மகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். பாம்பை ஆபரணமாகக் கொண்டவர். மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.

    5. நிதாந்த காந்தி தந்தகாந்த மந்தகாந்த காத்மஜம்
    அசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்
    ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
    தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்

    மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.

    6. மகாகணேச பஞ்சரத்ன மாதரேண யோன்வகம்
    ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரன்கணேச்வரம்
    அரோகதா மதோஷதாம் ஸுஸாதிஹிதீம் ஸுபுத்ரதாம்
    ஸமாஹிதா யுரஷ்ட் பூதீ மப்யுபைதி ஸோசிராத்.

    இந்த கணேச பஞ்சரத்னத்தை எவர் தினமும் காலையில் கணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறாரோ, அவன் நோயின்றி குறையேதுமின்றி, நல்ல கல்விகளையும், நன்மக்களையும், அஷ்டைச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
    Like ·  ·  · 10 hours ago · 
    • Ranga Rao Narasimhan

  • ஏதுகுறை எனக்கென்றும்! குருவே சரணமென்றே னென்குறைகள் களையுமையா உருவே நீயென்றானபின் னெதற்கினி திருவுருவம்? ஆண்டவன் அருகிலில்லை எனவறிந்திலேன் நானென்றும் எனையாளும் நீயிருக்க ஏதுகுறை எனக்கென்றும் இந்நாளில் நான்கண்ட இறையருளே பரமகுரு எந்நாளும் எனைக்காத்து இரட்சிப்பாய் பரம்பொருளே எத்தனை மகான்களிந்த திருநாட்டில் வந்தனரே அத்தனையும் இறைவனி னருட்த்திரு வருளாலே யுகங்கள் கடந்தாலுமந்த முகங்கள் மறவாதே நெறிகள் காட்டினரெந்தன் வாழ்க்கை பயனுறவே ஆதிசங்கரர் வழிவந்த ஆத்மகுரு பரமேஸ்வரா ஆனந்த வாழ்க்கையளித் தாட்கொள்ளும் மகேஸ்வரா அவதாரத் திருவுருவே அகிலத்தைக் காப்பவரே அடியேனை ஆதரிக்கும் அன்னையே ஆரருளே இறையருளே குருவருளாம் குருவருளே இறையருளாம் இத்திருநாளி லந்தஇறையருளில் இரண்டறக் கலந்தஎங்கள் இறைவனே பரமகுருஅனுராதா நட்சத்திரமும் சேர்ந்ததே இன்றுஉனைப் பாடுமிவ்வேளையிலே என்குருனாதரே குருவே சரணமென்றே னென்குறைகள் களையுமையா உருவே நீயென்றானபின் னெதற்கினி திருவுருவம்? ஆக்கம்: சுரேஜமீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக