வியாழன், 24 அக்டோபர், 2013

மகாபாரதம் - ஆறாம் பகுதி

ராதே கிருஷ்ணா 25-10-2013

 மகாபாரதம் - ஆறாம் பகுதி 

 மகாபாரதம்
 
படையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ... மேலும்
 
பரந்தாமா ! என்ன இது விபரீதம்! சாரதியாய் வந்த நீர், இவ்வாறு போர்க்கோலம் பூணுவது நீதியாகுமா? எதிர்த்திசையில் இருப்பவர்கள் எனது உற்றார், உறவினர் என்பதால் தானே, நான் தயக்கத்துடன் ... மேலும்
 
சல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், ... மேலும்
 
அலம்புசனுக்கும் அரவானுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. நாக வடிவ அரவானை ஏதும் செய்ய முடியாததால், மாயையில் சிறந்த அலம்புசன் கருட வடிவம் எடுத்தான். கருடனைக் கண்டால் நாகம் அஞ்சுவது ... மேலும்
 

மகாபாரதம் பகுதி-76
ஜூன் 21,2013
அ-
+
படையினர் பின்னேறினாலும், பீமன் சற்றும் தயங்காமல் முன்நோக்கி சென்றான். கவுரவர்களின் காலாட்படைகளை தன் காலால் மிதித்தே கொன்று தீர்த்தான். இதைப் பார்த்த துரியோதனன் ஆத்திரத்துடன் பீமன் அருகில் வந்தான். அவனுக்கு துணையாக பல நாட்டு ராஜாக்களும் வந்தனர். பீமன் அவர்களது தேர்களை தன் புஜபலத்தாலேயே அடித்து நொறுக்கினான். அந்த ராஜாக்களை தன் கதாயுதத்தால் கொன்று போட்டான். பின்னர் துரியோதனனின் தேரை தன் பலம் கொண்ட மட்டில் தூக்கி வீசினான். துரியோதனன் இறந்துவிட்டானோ என்று நினைத்த கவுரவப்படை பின் வாங்க ஆரம்பித்தது. இதுகண்டு துணுக்குற்ற துரியோதனின் மைத்துனர்கள், அவனுக்கு ஆதரவாக வர போர் உக்கிரமானது. அவர்களைச் சிதறி ஓட வைத்தான் பீமன். விராடதேச இளவரசன் உத்தரகுமாரனைக் கொன்ற சல்லியனை நோக்கி முன்னேறினான் அவனது தம்பி
சுவேதன்.
இதுகண்ட துரியோதனன் பீஷ்மரை அவனுடன் போரிட அனுப்பினான். சுவேதனோ பெரும் வில்லாளி. அவன் விட்ட பாணங்களின் விவளவாக பிதாமகர் பீஷ்மரே தன் வில்லையும் அம்புகளையும் இழந்து நிராயுதபாணியானார் என்றால், அவனது வீரத்தை அளவிட மதிப்பேது? அதன் பின் மற்றொரு வில்லை எடுத்து அவர் போரிட வேண்டிய தாயிற்று. அவர் விட்ட அம்பில் சுவேதனின் கிரீடம் பறந்தது. இது கண்டு கோபமடைந்த சுவேதன் கடும்போர் புரிந்து மீண்டும் அவரை சோர்வுக்குள்ளாக்கினான். இவனை எப்படித்தான் வெல்வது என்று பீஷ்மரே யோசிக்க ஆரம்பித்து விட்டார். பீஷ்மர் சோர்ந்து விட்டதைக் கவுனித்த துரியோதனன், மேலும் பல அரசர்களை அவருக்கு துணைக்கு அனுப்பினான். ஒருவனை அடிக்க இத்தனை பேரா என்று சொல்லுமளவுக்கு, சுவேதனை சுற்றி நின்று அரசர்கள் தாக்கினர். ஆனால், வீராதி வீரனான சுவேதன் அவர்கள் அனைவரையும் பின்வாங்கச் செய்யும் வகையில் அஸ்திரங்களை எய்தான்.
இப்படி ஒருவன் தன் பக்கம் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று துரியோதனனே நினைக்குமளவுக்கு நிலைமை போய்விட்டது. இதையடுத்து மேலும் ஐந்து பலசாலி அரசர்களை அனுப்பினான். அவர்களில் குகுர தேசத்து மன்னனும் அடக்கம். அவனும் பெரும் வில்லாளி. அவர்களையும் தோற்கடித்தான் சுவேதன்.வானுலக தேவர்களே அவனது வீரத்தை ஆஹா என விண்ணிலிருந்து பாராட்டினர். அவனது இந்த வெற்றிக்கு காரணம் என்னவென்றால், ஒரு காலத்தில் அவன் இந்த வில்லை, தான் செய்த தவத்திற்காக சிவபெருமானிடமிருந்தே பெற்றிருந்தான். சிவதனுசுக்கு ஏது தோல்வி? அதனால் தான் இவ்வளவு உக்கிரமாக அவனால் போரிட முடிந்தது. இவனை அழிக்க வேண்டுமானால் வீரம் பயன்படாது. விவேகம் தான் பயன்படும் என்று பீஷ்மர் சிந்தித்தார். எங்கே பொறுமை குறைகிறதோ, எங்கு உணர்ச்சிகள் அதிகமாகிறாதோ, அங்கே தோல்வி தேடி வந்து சேரும்.
இந்த தத்துவத்தை உணர்ந்தவர் பிதாமகர் பீஷ்மர். அவர் சுவேதனிடம், வில்வித்தையில் உன்னிலும் உயர்ந்தவர்கள் இல்லை என்றே சொல்வேன். ஆனால், உன் திறமை மட்டுமே இப்படி ஒரு வெற்றியை விட்டு, தன் உறையில் இருந்து வாளை உருவியபடியே, என்னையா வீரனில்லை என்றீர்? என்றபடியே, பீஷ்மர் முன்னால் நீட்டினான். அக்கணமே, பீஷ்மர் வில்லை எடுத்து அவனது கையில் அஸ்திரத்தைப் பாய்ச்ச அவனது கை அறுந்து விழுந்தது. ஆனாலும், அந்த வீரமகன் அதைப் பொருட்படுத்தவில்லை. இடது கையில் வாளைப் பிடித்து பீஷ்மரின் தலையை அறுத்தெடுக்கும் அளவுக்கு முன்னேறி விட்டான். அப்போது பீஷ்மர் மற்றொரு அம்பைப் பாய்ச்ச அவனது மார்பில் தைத்தது. அவன் விண்ணுலகை அடைந்தான். அவன் சுத்த வீரனாக சொர்க்கத்துக்குள் நுழைந்ததும், தேவர்களே அவனை மாலையிட்டு வரவேற்றார்கள். வெறும் வீரமும், ஒற்றைக் கலையும் மட்டும் மனிதனை வெற்றி பெற வைத்து விடாது. சகல கலைகளையும் மனிதன் கற்க வேண்டும். கற்றாலும் அறிவுத்திறனையும் பயன்படுத்த தெரிய வேண்டும். அவனே பூரண வெற்றியடைய முடியும் என்பது பாரதம் நமக்கு உணர்த்தும் பாடம்.
முதல்நாள் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அன்று கவுரவர் பக்கமே அதிக வெற்றி என்பது போல் மாயை ஏற்பட்டது. தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த விராடராஜன் கலங்கி நின்றான். அவனை தர்மர் தேற்றினார். விராடராஜா! உன் மகன் சுவேதனை விண்ணுலக தேவர்களே பாராட்டியிருக்கிறார்கள். அவன் வீர சொர்க்கமே அடைந்தான். மகாத்மா பீஷ்மரே மாண்பு தவறி நடந்து கொண்டதன் விளைவே உன் மகனின் மரணம் என்பதே உனக்கு வெற்றி தான். உத்தர குமாரனும் பல வீரச்செயல்களை செய்தே மாண்டான். வீரப்பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்கள் இறந்து போனால் வருந்தக்கூடாது, என தேற்றினார். அப்போது விராடராஜன் மனம் மகிழ்ந்து, தர்மரே! என் பிள்ளைகள் உயிர் மட்டுமல்ல, எனது உயிரும் உமக்காகவே செல்லும், என்றான். தர்மர் அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். இரண்டாம் நாள் விடிந்தது. பாண்டவர் படைக்கு அன்று திரவுபதியின் மூத்த சகோதரன் திருஷ்டத்யும்நன் தலைமை சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். இரண்டு படைகளும் களத்தில் இறங்கின.


மகாபாரதம் பகுதி-77
ஜூன் 21,2013
அ-
+
பரந்தாமா ! என்ன இது விபரீதம்! சாரதியாய் வந்த நீர், இவ்வாறு போர்க்கோலம் பூணுவது நீதியாகுமா? எதிர்த்திசையில் இருப்பவர்கள் எனது உற்றார், உறவினர் என்பதால் தானே, நான் தயக்கத்துடன் போர் புரிகிறேன். இல்லாவிட்டால், என் பாணங்கள் இதற்குள் எதிரிகளின் தலைகளைக் கொய்திருக்காதா! கேசவா! சினம் தணிந்து என் தேரில் மீண்டும் ஏறும். அபிமன்யுவும், பீமனும் தங்களைக் காத்து கொள்ளும் திறமை வாய்ந்தவர்கள். பீஷ்மரால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் கூட நான் மகிழத்தான் செய்வேன். மகிமைக்குரிய மகாத்மா அல்லவா அவர்! அவருடன் போர் செய்ய நீர் செல்லலாமா? அது உம் தகுதிக்கு அழகாகுமா? என்ற அர்ஜுனனின் சொல்லை சற்றும் மதிக்கவில்லை கிருஷ்ணர். அவர் முன்னேறிச் சென்றார். தன்னை நோக்கி கண்ணனே வருகிறார் என்றால், தனக்கு அழிவு நிச்சயம் என்பதை பீஷ்மர் உணர்ந்து கொண்டார். கிருஷ்ணரின் கையால் இறந்தவர்கள் வைகுண்டபதியை அடைந்து, பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பதை, தன் இறப்பு விரைவில் நிகழட்டும் என ஆசைப்பட்டார். ஆனால், மனிதன் நினைப்பதை இறைவன் அவ்வளவு எளிதில் கொடுத்து விடுவதில்லை.
பீஷ்மர் கிருஷ்ணரை நோக்கி ஓடி வந்தார். புண்டரீகாக்ஷõ, கோவிந்தா, மதுசூதனா, கோபாலா, நாராயணா, விஷ்ணுபதீ! உன்னால் எனக்கு அழிவு நேருமானால், நான் செய்த பாக்கியம் தான் என்னே! என்னைக் கொன்று விடு. இனி, இவ்வுலகில் பிறக்கவிடாதே! என்றவராய் கிருஷ்ணனை நோக்கி ஓடி வந்தார். தனது திருநாமங்களை சொல்லி, மரணத்தை கண்டு அஞ்சாமலும், இறைவனுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஓடி வந்த பீஷ்மர் மீது கிருஷ்ணருக்கு அனுதாபம் ஏற்பட்டது. மரணத்தைக் கண்டு எவனொருவன் அஞ்சாமல் இருக்கிறானோ அவனுக்கு என்றும் மரணமில்லை, என்ற தத்துவத்தின் அடிப்படையில், பகவான் கிருஷ்ணர் கோபம் தணிந்தார். அங்கிருந்து  திரும்பி, மீண்டும் அர்ஜுனனின் தேரில் ஏறிவிட்டார். இதன்பிறகும் அமைதியாக இருந்தால், பீஷ்மர் உள்ளிட்ட அத்தனை உயிர்களும் பறிக்கப்படும் என்பதால் அச்சம் கொண்ட அர்ஜுனன், எதிரிகளின் மீது பாணமழை பொழிந்தான். கவுரவர்கள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அர்ஜுனனின் அம்புகளால் துண்டிக்கப்பட்ட  பலதேசத்து ராஜாக்களின் உடலில் இருந்து பாய்ந்த ரத்தம் விண்ணுலகைத் தொட்டு, சூரியனை நனைத்ததாம். அந்தளவுக்கு உக்கிரமாக போர் புரிந்தான் அர்ஜுனன். அவனது போர், எதிரிகளுக்கு திகிலைக் கொடுத்ததால், கிருஷ்ணர் திருப்தியடைந்தார். கவுரவர்களுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கிய மகிழ்ச்சியுடன் அன்றையப் போர் நிறைவு பெற்றது.
மறுநாள் நான்காம் தின போருக்கு படைகள் ஆயத்தமாயின. அன்றைய தினம் கவுரவப்படைகள் பகதத்தனை களத்தில் இறக்கின. இவன் யார் தெரியுமா? தீபாவளி பண்டிகைக்கு காரணமான நரகாசுரனின் மகன். நரகாசுரனை விஷ்ணு அழித்ததும், அவனது மகன் பகதத்தனை பராமரிக்கும் பொறுப்பு அவரது தலையில் விழுந்தது. பகதத்தனை மிகுந்த அன்புடன் கவனித்து, அவனை தந்தைக்குப் பிறகு மன்னனாக்கினார் விஷ்ணு. ஆனாலும், அவன் தன் தந்தையைக் கொன்ற விஷ்ணுவின் ஆதரவாளர்களான பாண்டவர்களுக்கு எதிராகவே இருந்தான். இதைப்பயன்படுத்தி, துரியோதனன், அவனைத் தனது படையில் முக்கிய ஸ்தானத்தில் வைத்துக் கொண்டான். அவன் பாண்டவர்களை எதிர்த்து உக்கிரமாகப் போரிட்டான். பலம் கொண்ட அசுர வீரனை எதிர்க்க மானிடர்களால் எப்படி முடியும்? எல்லாரும் ராமனாகி விட முடியுமா? எனவே, அவனை எதிர்க்க பீமனுக்கும், இடும்பி என்ற அரக்கிக்கும் பிறந்து, அரக்கர் குலத்திலேயே வாழ்ந்த கடோத்கஜனை ஏற்பாடு செய்தனர்.
கடோத்தகஜனும், பகதத்தனும் கடுமையாக மோதினர். வெகு நீண்ட நேரம் சமபலத்துடன் போரிட்ட பிறகு, கடோத்கஜனின் கை ஓங்கியது. பாண்டவர் படையினர் ஆரவாரம் செய்தனர். அன்றையப் போரில் பகதத்தன் இருந்தும், கவுரவர்கள் பக்கம் தாள முடியாத ஒரு இழப்பு ஏற்பட்டது. துரியோதனின் தம்பிகள் ஐந்துபேரை எதிர்த் தரப்பினர் கொன்று விட்டனர். இதுகேட்டு காந்தாரி துடித்தாள். திரவுபதியை தனது மக்கள் துகிலுரிந்து வேடிக்கை பார்த்த போது, அதைக் கண்டுகொள்ளாமலும், பிள்ளைகளைக் கண்டிக்காமலும் இருந்த அந்த மாது இப்போது துடித்தாள். பிள்ளைகளைத் தாய்மார்கள் நல்ல முறையில் வளர்க்க வேண்டும். பொறாமை, போட்டி மனப்பான்மை, பெண்களை மதிக்காத தன்மை, மண்ணாசை பொன்னாசையுடன் தன் பிள்ளைகளை வளர்த்தாள். அதன் காரணமாக இன்று பிள்ளைகளை வரிசையாக இழக்கத்துவங்கி விட்டாள். அநியாய குணங்களுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் நிச்சயம் அழிவைச் சந்திப்பார்கள் என்பதற்கு மகாபாரதத்தின் இந்தக்காட்சி ஒரு உதாரணம். காந்தாரி புலம்பித் தீர்த்தாள்.
மக்களே! தினமும் உங்கள் நூறு பேரையும் பார்த்து பெருமைப்படுவேன். இப்போது ஐவர் இறந்து விட்டீர்கள். எதிரிகளான ஐந்துபேரை நீங்கள் அழிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் ஐந்துபேர் அழிந்து போனீர்களே! என்று அழுதாள். நான்காம் நாள் போரும் பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியான விடையையே தர, மறுநாள் போரும் அவ்வாறே அமைந்தது. அன்றைய தினம், கிருஷ்ணரின் மகன் சாத்தகியும், கவுரவப்படையின் தேர்ப்படை சேனாதி பதியான பூரிச்ரவஸும் செய்த போர் மிக கடுமையாக இருந்தது. அன்றைய தினம் மட்டும் இருபத்தைந்தாயிரம் அரசர்கள் இறந்தார்கள். ஆறாம்நாள் போரில், துரோணரும், பீமனும் மோதிக் கொண்டனர். துரோணர் தனது குரு என்பதால், அவரை நமஸ்கரித்த பிறகே, பீமன் அவருடன் கடும் போர் செய்தான். அவரது தேரை இழுத்து வந்த குதிரைகளை அம்பெய்து கொன்றான். தேர் நின்றுவிட்டது. இதைப் பார்த்த நகுல, சகா தேவனின் தாய்மாமனும், சந்தர்ப்பவசத்தால் துரியோதனனின் படையில் சேர்ந்தவனுமான சல்லியன், பீமனுடன் களத்தில் மோதினான். பீமனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நின்ற வேளையில், சல்லியரே! இப்போது உங்கள் உயிர் எனது கையில், என்று வீரம் பேசிய பீமனை நோக்கி தேரில் பறந்து வந்தான் துரியோதனன்.


மகாபாரதம் பகுதி-78
ஜூன் 21,2013
அ-
+
சல்லியனைக் காப்பாற்றும் விதத்தில், துரியோதனன் பீமனுடன் கடும் யுத்தம் செய்தான். இருவரும் மோது வதைப் பார்த்து பீமனின் மகன் கடோத்கஜன் வந்தான். அவனோடு கவுரவப்படைகள் மோதின. ஆனால், இந்த இருவரின் பலத்தின் முன்பு துரியோதனின் படைகளால் ஏதும் செய்ய முடியவில்லை. அவர்கள் பயத்தில் புறமுதுகிட்டு ஓடினர். அப்போது, துரியோதனின் தம்பி விகர்ணன் பாண்டவர் படைகளை ஒரு இடத்தில் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான். இதைப்பார்த்து விட்ட அபிமன்யு, அவனோடு கடும் யுத்தம் செய்தான். அவன் விட்ட அம்புகளால் விகர்ணனின் வயிறு கிழிந்து தொங்கிவிட்டது. அவனது குடல் சரிந்து மிகுந்த ஆபத்தான நிலையில் தரையில் விழுந்தான். இது கண்டு கவுரவப்படையினர் திடுக்கிட்டு ஓடினர். தங்கள் உயிரையும் அபிமன்யு பறித்து விடுவான் என்று அவர்கள் ஓடிய வேளையில், சூரியன் அஸ்தமிக்கவே ஆறாம்நாள் போர் முடிந்தது. ஏழாம்நாள் போரில் பீஷ்மரும் அர்ச்சுனனும் சமபலத்துடன் மோதினர்.
பீமனுடன் சகுனியும், சல்லியனும் மோதி தோற்றுப்போனார்கள். ஆனாலும், பொதுவான அளவில் பார்த்தால் வெற்றி தோல்வியின்றியே முடிந்தது. எடடாம் நாள் கவுரவர் படைக்கு பெரும் இழப்பாக அமைந்தது. கவுரவர்கள் நூறுபேர் என்ற இலக்கணத்தை அன்றைய தினம் மாற்றியமைத்தான் பீமன். அன்று துரியோதனனின் தம்பிகளான சுந்தரன், விசாலக்கண்ணன், பவுதுண்டன், மகாவிந்து, அபயன், மகோதரன், ஆதித்தகேது, வீரவாசி ஆகியோர் துரியோதனனுடன் வந்து, பீமனுடன் ஒட்டுமொத்தமாக இணைந்து யுத்தம் செய்தனர். பீமனுக்கு அல்வா சாப்பிட்டது போல இருந்தது. அன்று அவர்களை வதம் செய்தே தீருவதென உறுதியெடுத்தான். அதன்படி அம்பு மழையை அவர்கள் மீது பொழிந்தான். அவை துரியோதனனின் எட்டு தம்பிமார்களையும் விண்ணுலகுக்கு அனுப்பியது. அந்தக் காட்சியைக் கண்ட துரியோதனனால், மேற்கொண்டு போர் செய்ய முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் தனது தேரை மகாத்மா பீஷ்மரை நோக்கி ஓட்டினான். பிதாமகரே! ஐயனே! தாங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். எனது தம்பிமார்கள் எட்டுபேர், ஒரே நேரத்தில் என் கண்முன்னால் துடிதுடித்து இறந்தார்கள். நீங்கள் எங்கள் சேனாதிபதி மட்டுமல்ல! தாயும் தந்தையுமாக இருக்கிறீர்கள். நீங்கள் இருந்த இந்த போர்க்களத்தில், இப்படி ஒரு மாபெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறேன், என்று கண்ணீர் வழியச் சொன்னான்.
அப்போது, பீஷ்மர் துரியோதனனுக்கு சொன்ன அறிவுரை உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்துவதாக அமைந்தது. துரியோதனா! இறப்பைக் கண்டு வருந்தாதே. போர்க்களத்தில், நாம் ஆயுதங்களை ஏந்துவது நமது பாதுகாப்புக்காக மட்டுமல்ல. பிறரைக் கொல்வதற்கும் தான். மேலும், போர்க்களத்தில் உயிர்விடுவது வீரர்களுக்கு சிறப்பாகும். அதாவது, ஒரு செயலைச் செய்வதென முடிவெடுத்து விட்டோம். அப்போது உயிருக்கு ஆபத்து வருகிறதே என ஒதுங்கி விடக்கூடாது. எதிர்த்து நின்று ஜெயிக்க வேண்டும், இல்லையேல் மரணத்தை ஏற்க வேண்டும். ஒரு வள்ளல் தனது செல்வத்தை பிறருக்கு கொடுக்க தயங்கமாட்டான். ஒரு நல்ல இல்லறத்தான், தன் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிப்பதில் ஆனந்தம் கொள்வான். உலகம் நிலையற்றது என நினைக்கும் ஞானி மரணத்தைக் கண்டு ஒதுங்கமாட்டான். இதெல்லாம் எவ்வளவு நிச்சயமோ, அதுபோல் போர்க்களத்தில் சாவும் நிச்சயம். அது கண்டு அஞ்சக்கூடாது, என்றவர் மேலும் தொடர்ந்தார்.
துரியோதனா! இந்தக்கிழவன் நேரம் கெட்ட நேரத்தில் தத்துவங்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறானே என எண்ணாதே. நிஜத்தை சில இடங்களில் சொல்லியே தீர வேண்டும். இன்று உன் தம்பிகளை இழந்ததற்கான காரணத்தை எண்ணிப்பார். அன்று, யார் சொல்லையும் கேட்காமல், நீ திரவுபதியின் ஆடையைக் களைய உத்தரவிட்டாய். அவள் வடித்த கண்ணீர் இன்று இந்தக்கதிக்கு உன் தம்பிகளை ஆளாக்கியிருக்கிறது. எந்த ஒரு வீட்டில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கிறாளோ, அந்த இல்லம் அழிந்து போவது உறுதி. கர்ணனும், சகுனியும் சொன்னதைக் கேட்டு உன் சிந்தையில் தீமையை வளர்த்துக் கொண்டாயே அதன் பலாபலனை நீ தானே அனுபவிக்க வேண்டும், அதுமட்டுமா? மகாத்மா விதுரர் உனக்கு என்ன கேடு செய்தார்? மாபெரும் சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றை அவர் வைத்திருந்தார். அது ஒன்று மட்டும் இருக்குமானால், இன்று குரு÷க்ஷத்ர களத்திலே, பாண்டவர்களில் ஒருவர் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள். ஆனால், நீயோ அவரது பிறப்பைப் பற்றி பழித்துப்பேசி, கோபத்தைத் தூண்டி, வில்லை ஒடிக்கச் செய்தாய். கர்ணனும் கோபித்துக் கொண்டு ஆயுதம் எடுக்காமல் இருக்கிறான். மேலும், பாண்டவர்களுக்கு கண்ணபிரானின் ஆசியும் இருக்கிறது.
பாண்டவர்களை எதிர்க்க இப்போது உன்னையும், என்னையும் விட்டால் வீரர்கள் யாருமில்லை. சரிவா! இருவரும் போவோம். போராடுவோம். மரணம் வந்தாலும் தழுவிக்கொள்வோம், என்று சொல்லியபிறகு, அவனது பதிலுக்கு காத்திராமல், தேரை படைகளின் மத்தியில் செலுத்தினார். இந்த சமயத்தில் பாண்டவர்களுக்காக களப்பலியானவனும், அர்ஜுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்தவனுமான அரவான், தான் சாகும் முன்பு போர்க்கள காட்சிகளை சில நாட்களாவது பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்டுப்பெற்ற வரத்தின்படி போர்க்களத்தில் நின்று காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மாயவித்தைகள் தெரிந்தவன். மாயத்தோற்றங்கள் பலவற்றை எடுத்து அவனும் போரில் குதித்தான். கவுரவப் படையுடன் கடுமையாகப் போரிட்டான். பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது, வேத்தீரிய வனத்தில் தங்கியிருந்தனர். அவ்வனத்தில் வசித்த மக்களை அங்குள்ள பகாசுரன் என்பவன், நாளுக்கு ஒருவர் வீதம் விருந்தாக உண்டான். ஒருமுறை, பீமன் தாங்கள் தங்கியிருந்த வீட்டிலுள்ள இளைஞனுக்குப் பதிலாகச் சென்று பகாசுரனைக் கொன்று விட்டான்.அவனது தம்பி அலம்புசன் என்பவன், தன் சகோதரனைக் கொன்ற பீமனைப் பழிவாங்க துரியோதனனுடன் இணைந்திருந்தான். அவனுக்கும், அரவானுக்கும் அன்று கடும்போர் நடந்தது. அரவான் நாகவடிவத்தில் அவனுடன் போர் செய்தான்.


மகாபாரதம் பகுதி-79
ஜூன் 21,2013
அ-
+
அலம்புசனுக்கும் அரவானுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. நாக வடிவ அரவானை ஏதும் செய்ய முடியாததால், மாயையில் சிறந்த அலம்புசன் கருட வடிவம் எடுத்தான். கருடனைக் கண்டால் நாகம் அஞ்சுவது இயற்கை தானே! அரவான் அதிர்ச்சியடைந்தான். தன் பலத்தையெல்லாம் இழந்து நின்ற வேளையில் இதுதான் சமயமென அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான் அலம்புசன். அரவானின் மரணம் கவுரவ சேனைக்கு புதிய ஆற்றலைத் தந்தது. அரவான் மடிந்தான், அலம்புசன் வாழ்க, துரியோதன மாமன்னர் வாழ்க என்ற கோஷத்துடன், பாண்டவப் படைகளை உக்கிரத் துடன் தாக்கின கவுரவப்படைகள். தாய் வேறானாலும், தன் சொந்த தம்பியாகவே அரவானைப் பாவித் தவன் அபிமன்யு. அவன் அரவானின் மரணம் கண்டு கலங்கினான். கண்களில் வெள்ளம் பொங்கியது. அதுவே, கோபத்தால் கனல் நீராக மாற, அவன் ஆர்ப்பரித்து போரிட்ட கவுரவப்படைகள் மீது அம்புகளை வாரியிறைத்தான். ஆர்ப்பரித்த கவுரவ படைகளும், அவர்களுக்கு தலைமை தாங்கிய பலநாட்டு மன்னர்களும் ஏராளமாக மண்ணில் சாய்ந்தனர். தம்பி மகனான அரவான் இறந்ததைக் கண்ட பீமனும் கூட்டத்துக்குள் புகுந்து பலரையும் தூக்கி வீசியே கொன்று ஆவேசத்தை வெளிப்படுத்தினான்.
அரவான் மரணத் துக்குப் பழிக்குப்பழியாக எப்படியேனும், துரியோதனப் படையின் முக்கியஸ்தர்கள் சிலரை அழித்தே தீருவதென கங்கணம் கட்டி முன்னேறினான். அவனது முன்னேற்றத்தைக் கண்ட துரியோதனன், தன் தம்பிமார்களுடன் அவனை எதிர்க்க ஆவேசத்துடன் ஓடிவந்தான். சற்றும் தாமதிக்காமல், கணநேரத்தில் தன் வில்லை வளைத்து, பீமன் அம்பு மழையைப் பொழிந் தானோ இல்லையோ.... ஆ...ஆ...என்ற அலறலுடன் ஏழு பேர் சாய்ந்தனர். துரியோதனன் இப்படி நடக்குமென கனவிலும் நினைக்கவில்லை. ஏற்கனவே நடந்த போரில் எட்டு தம்பிமார்களை இழந்திருந்த அவன், நொடிப்பொழுது நேரத்தில் மேலும் ஏழு பேரை இழந்தான். குண்டலபோசன், தீர்க்கநயனன், குண்டலன், குண்டலதாரன், திம்மவாகு, கனகத்துவஜன், அனாதியக்கன் ஆகியோர் அவர்கள். துரியோதனன் திகைத்து நின்ற வேளையில், இன்று நீயும் என்னிடம் அழிந்து போவாய், எனச் சொல்லி ஆக் ரோஷமாகப் போரிட் டான். துக்கத்தில் இருந்த துரியோதனனால் பீமனை சற்றும் எதிர்க்க முடியவில்லை. அவன் தோற்று ஓடிவிட்டான். இத்துடன் அன்றையப் போர் முடிந்தது. படைகள் தங்கள் இருப்பிடம் திரும்பினர். அன்று இரவில் அரவானின் மரணம் பற்றி பாண்டவர்கள் பேசி வருந்தினர். கிருஷ்ணர் அவர்களைத் தேற்றினார்.
பாண்டவச் செல்வங்களே! அரவான் ஏற்கனவே தன்னைக் காளிக்கு பலியிட்டு இறந்து போனவன் தான். அவன் கேட்ட வரத்தால், போர்க்களக் காட்சிகளைக் காணும் பாக்கியத்தைக் கொடுத்தேன். அவன் விதி முடியும் நேரம் வந்ததும், அவனுக்கு ஆக்ரோஷத்தைக் கொடுத்து சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டேன். இறந்தவன் மீண்டும் இறந்தது பற்றி கவலைப்பட வேண்டாம், என்றார். பாண்டவர்கள் மனம் தேறினர். இதே போல, கவுரவர்களின்  பாசறையில் துரியோதனன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். தன் மனஆறுதலுக்குரியவன் நண்பன் கர்ணனே என்பதால், அவனை அழைத்து வர உத்தரவிட்டான். கர்ணனிடம், நண்பா! பார்த்தாயா! நமது சகோதரர்கள் பலரை கொடிய பீமன் கொன்று விட்டான். பீஷ்மரும், துரோணரும் இருக்கும் நமது படையை நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது. அவர்களால் போர் செய்ய முடியவில்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில், என்னைக் காக்கும் கருணைக்கடல் நீ மட்டுமே! என்னைக் காப்பாற்று. நம் தேசத்தைக் காப்பாற்று, என்றான். கர்ணனுக்கு ஆவேசம் அதிக
மாயிற்று.
நண்பா! இப்போது வருத்தப்பட்டு என்ன லாபம்? அன்று, படைகளைப் பிரித்த போது, என்னை ஒரு கடைநிலை பணியான அர்த்தரத சேனாதிபதியாக்கி உத்தரவிட்டாரே பீஷ்மர்! அப்போது, அவையில் இருந்த நீ அடக்கமாகத்தானே இருந்தாய். மேலும், யாரை நீ நம்பினாயோ, அந்த பீஷ்மரே உன்னைக் காப்பாற்றுவார். நான் ஏற்கனவே சொன்னபடி, பீஷ்மர் களத்தில் என்று தோற்றோடுகிறாரோ, அடுத்த கணமே நான் உன்னருகில் இருப்பேன். உன்னைக் காப்பாற்றுவேன். கிருஷ்ணரையும், பாண்டவர்களையும் கொல்வேன். அதுவரை என்னை அழைக்காதே, என சொல்லி விட்டு சென்று விட்டான். துரியோதனனை பயம் கவ்விக் கொண்டது. கர்ணன் தன்னிடம் சொன்னதை அப்படியே பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி வரும்படி, தன் தம்பி துச்சாதனனை அனுப்பி வைத்தான். துச்சாதனனும் அதையே செய்ய, பீஷ்மர் சிரித்தார். ஒன்றைச் சொல்கிறேன் கேள் துச்சாதனா! நீங்கள் நினைப்பது போல், ஒருவேளை கர்ணன் பலரை  கொன்றாலும், அர்ஜுனனை அவனால் ஏதுமே செய்ய முடியாது. அது மட்டுமல்ல! பீமன் வல்லவன், பலசாலி. நீங்கள் திரவுபதியை துகிலுரிந்து அவமானம் செய்தது, ஆறா வடுவாக அவன் மனதில் பதிந்து விட்டது. அதற்கு, அவன் உங்களைப் பழிவாங்கியே தீருவான். இதுதான் நடக்கப் போகிறது. நாளை ஒன்பதாம் நாள் போர். நாளை மட்டுமே நான் உங்கள் படையில் இருப்பேன். பத்தாம் நாள் போரில் நான் இறந்து போவேன். என் ஆயுள் முடியும் நேரம் வந்துவிட்டதை நான் அறிவேன். அதன் பிறகு கர்ணனோ வேறு பலசாலியோ உங் களைப் பாதுகாக்கட்டும், என்று சொல்லி அனுப்பி விட்டார்.
துச்சாதனன் அவரிடம் விடைபெற்று குழம்பிய மனதுடன் கிளம்பிவிட்டான். மறுநாள் காலை. ஒன்பதாம் நாள் விடியலில் போர் துவங்கியது. பீமன் ஆத்திரத்துடன் களத்தில் புகுந்தான். அரவானைக் கொன்ற அசுரன் அலம்புசனை இன்று கொன்றே தீருவதென்பது அவன் இலக்கு. அந்த ஆவேசத்துடன், களத்தில் இறங்கியவன், ஏ அலம்புசா! அரவான் ஏற்கனவே களப்பலியானவன். செத்த பாம்பை அடித்து விட்டு, நீ வீரம் கொண்டாடுகிறாயோ! உங்கள் பாசறையில் நேற்று, அரவானைக் கொன்றதற்காக உன்னை தலையில் தூக்கி வைத்து ஆடினார்களாமே கவுரவர்கள்...அட மடையனே! வா, என்னோடு போர் புரி, என்னை ஜெயித்தால் நீயே பலசாலியென ஒப்புக்கொள்கிறேன். வா சண்டைக்கு, என அவனது உணர்வுகளைத் தூண்டி விட்டான். அசுரனாகிய தன்னை மானிடனான ஒருவன் வம்புக்கு இழுக்கிறானோ என ஆவேசப்பட்டான் அலம்புசன்.
































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக