புதன், 9 அக்டோபர், 2013

தமிழ் செய்திகள்

ராதே கிருஷ்ணா 09-10-2013

தமிழ் செய்திகள்


Newspaper · 156,173 likes












கட்டாயம் அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டிய மிக முக்கியமான தொடர் இது!!! (பாகம்-1) கட்டாயம் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் இது எமது தேசியத்தைஅழிக்கும் நடவக்கையில் இருந்து எம்மை காத்துக்கொள்ளும் முயற்சி... ஈழத் தமிழர்கள் – குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் தம்மை அறியாமலேயே ஒரு மிகப்பெரிய உளவியல் போருக்கு உள்ளாகிக்கொண்டு இருப்பதாக அண்மையில் என்னுடன் பேசிய ஒரு தென்னிலங்கை இராணுவ ஆய்வாளர் தெரிவித்தார். தென்னிலங்கையில் செயற்பட்டு தற்பொழுது அமெரிக்காவில் வசித்துவரும் அந்த சிங்கள இராணுவ ஆய்வாளர் குறிப்பிடும்பொழுது, ஈழத் தமிழர்களை -குறிப்பாக புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் பணியகம்(;( Directorate of psychological Operations) ஏற்கனவே உளவியல் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் அந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் கூட அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்துவருவதாகவும், புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த செயற்பாடுகள் எதிர்காலத்தில் சிறிலங்கா தேசத்திற்கும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் அபாயம் இருப்பதாக இந்த இரண்டு நாடுகளும் சந்தேகிப்பதால், புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும், அவர்களது உளவியல் பலத்தையும் குறிவைத்து இந்த இரண்டு நாடுகளும் மிகப்பெரிய அளவில் உளவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அண்மைக்காலமாக வெளிவருகின்ற செய்திகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, அந்த ஊடகவியலாளரின் கூற்றில் நிறைய சாத்தியப்பாடுகள் இருப்பதை உணக்கூடியதாகவே இருக்கின்றது. புலம்பெயர் தமிழர் தொடர்பாக சிறிலங்கா அமைச்சர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்ற கருத்துக்கள், இந்தியாவில் சில தலைவர்களைக் கொலை செய்யப் புலிகள் திட்டமிட்டுவருவதாக வெளியிடப்பட்டுள்ள கட்டுக்கதைகள், கே.பி. என்கின்ற விடுதலைப் புலி முன்னாள் முக்கிஸ்தரை சிறைப்படுத்தி, நிர்கதியாக நிற்கும் அவரை வைத்து மேற்கொள்ளப்படுகின்ற சதிகள் – இதுபோன்ற பல விடயங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கின்ற பொழுது, புலம் பெயர் தமிழர்களின் உளவியலைக் குறிவைத்து ஒரு மிகப் பெரிய சதி நடைபெற இருப்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உணரக்கூடியதாகவே இருக்கின்றது. இந்த இடத்தில் சிலருடைய மனங்களில்; சில கேள்விகள் எழலாம். புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து எப்படியான உளவியல் நடவடிக்கையை எமது எதிரிகள் மேற்கொள்ளக்கூடும்? அந்த உளவியல் நடவடிக்கைகள் எப்படியான விளைவினை ஈழத் தமிழர் மத்தியில் ஏற்படுத்தக்கூடும்? இதனால் ஈழத் தமிழினத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் என்ன? எதிரிகளின் இந்த உளவியல் நடவடிக்கையைத் தடுப்பதற்கு ஈழத் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்? இவ்வாறு பல கேள்விகள் உங்களுடைய மனங்களில் எழலாம். புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களை பல பிரிவுகளாகப் பிரிக்கும் நோக்கம், எதிரிகளின் அந்த உளவியல் நடவடிக்கையின் பிரதான உள்நோக்கமாக இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் இனி ஒரு விடுதலைப் போராட்டம் பற்றிச் சிந்தக்க முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவதென்பது, சிறிலங்கா-இந்திய உளவியல் நடவடிக்கைகளின் மற்றொரு நோக்கமாக இருக்கலாம். இவற்றை விட மற்றொரு குறிக்கோளும், இந்த உளவியல் நடவடிக்கைக்கு இருக்கின்றதாக, என்னுடன் பேசிய அந்த தென்னிலங்கை ஊடகவியலாளர் தெரிவித்தார். அதாவது, விடுதலைப் புலிகளையும், அந்த அமைப்பின் தலைமையையும் ஈழத் தமிழர் மற்றும் உலகத் தமிழர் மனங்களில் இருந்து முற்றாகவே அகற்றிவிடும் நோக்கம் சிறிலங்கா மற்றும் இந்தியா மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பற்றியும் உலகத் தமிழர் மனங்களில் இருக்கின்ற பிரமாண்டத்தை, ஈடுபாட்டை, நம்பிக்கையை, ஆர்வத்தை, அன்பை சுக்குநூறாக உடைத்தெறிவதென்பது எதிரியின் இன்றைய முக்கிமானதொரு நகர்வாக இருக்கின்றது. மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதென்பதில் ஆரம்பமான இந்த முயற்சி, பல்வேறு ஊடகங்களை உருவாக்குவது, குழப்பங்களை ஏற்படுத்துவது, பல்வேறு வதந்திகளைக் கட்டவிழ்த்துவிடுவது என்பதினூடாகப் பயணித்து, இன்று திட்டமிட்ட உளவியல் போர் என்கின்ற அளவிற்கு முன்னேறி இருக்கின்றது. உலகத் தமிழர்கள் தங்களது கதாநாயகர்களாக, மிகப் பெரும் தியாகிகளாக நினைக்கும் மாவீர்களையும், தங்களது உன்னதமானதும் ஒப்பற்றதுமான தலைவனையும் அவர்களது மனங்களில் இருந்து அழிப்பதென்பது எவராலும் முடியாத காரியம் என்று எங்களில் பலர்; கூறலாம். ‘ஈழத் தமிழர்களுக்கு உலகில் ஒரு முகவரியைத் தந்த அந்த உன்னதத் தலைவரை அந்த மக்கள் மறப்பதா- அது முடியவே முடியாது..’- இவ்வாறு பலர் வாதிடலாம். ஆனால் psychological operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கை என்கின்ற ஒரு மிகப் பெரிய ஆயுதத்தைக் கொண்டு, முடியாது என்று நினைக்கின்ற பல விடயங்களை சாதித்துக்காட்டிய வரலாறு உலகில் நிறையவே இருக்கின்றன. உதாரணத்திற்கு ஹிட்லர் என்கின்ற ஒரு மிகப் பெரிய தலைவனை உலகமும், அவனது சொந்த ஜேர்மணிய மக்களும் முற்றாகவே நிராகரிக்கும்படியான உளவியல் நடவடிக்கையை அமெரிக்காவும், மேற்குலகும் மேற்கொண்டு அதில் இன்று மிகப் பெரிய வெற்றியையும் அடைந்திருக்கின்றது. முதலாம் உலகப் போரில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த ஜேர்மனி, தனது பிரதேசங்கள் பலவற்றையும் அயல்நாடுகளிடம் ஒப்படைத்து, மீளமுடியாத பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி, உலகத்தின் மத்தியில் கூணிக் குறுகி நின்று கொண்டிருந்தது. அப்படியான நிலையில் இருந்த ஜேர்மணியை மீண்டும் ஒரு உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்திய ஒருவர்தான் ஹிட்லர். பாலங்கள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், ஆட்டோ மொபைல் தொழில்நுட்பம், என்று ஜேர்மனியை உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு நடாத்திச் சென்றவர் ஹிட்லர். தொழில்துறையில் ஜெர்மணியை அவர் ஒரு உச்சத்திற்கு கொண்டுபோயிருந்தார். ஒரு காலகட்டத்தில் ஜேர்மணியில் வேலையில்லாத ஒருவர் கூட இல்லை என்கின்ற அளவிற்கு அந்த தேசத்தை உலகின் தரவரிசையில் அனைத்து விடயங்களிலும் ஒரு உன்னத ஸ்தானத்திற்குக் கொண்டு சென்றவர்தான் ஹிட்லர். உலகின் நெருக்குவாரங்கள் அனைத்தையும் மீறி ஜேர்மணியின் இராணுவத்தை உலகமே வியக்கும் அளவிற்கு கட்டியமைத்தார். முதலாம் உலகப் போர் தோல்வியால் கிட்டத்தட்ட அநாதையாக விழுந்துகிடந்த ஜேர்மன் தேசத்தை, மீண்டும் நிமிர்ந்து உற்காரவைத்த- அதுவும் ஒரு உயரிய சிம்மாசனத்தில் உற்கார வைத்த ஒரு சிறந்த தலைவர்தான் ஹிட்லர். ஆனால் அந்த ஹிட்லர் என்கின்ற தலைவனை இன்று உலகம் முற்றாகவே நிராகரித்துவிட்டுள்ளது. உலகம் மாத்திரமல்ல ஹிட்லர் எந்த சேத்திற்காக பாடுபட்டாரோ, எந்த தேசத்தை உலகின் தரத்திற்கு உயர்த்தினாரோ, எந்த தேசத்திற்கு உலகில் ஒரு முகவரியைப் பெற்றுக்கொடுத்திருந்தாரோ, அந்த தேசமே இன்று ஹிட்லர் என்கின்ற தனது தலைவனை நிராகரித்து விட்டுள்ளது. ஹிட்லர் பல நாடுகளை ஆக்கிரமித்தார் என்ற குற்றச்சாட்டு மேற்குலகால் அல்லது அவர் பற்றி அவதூறு பேசுபவர்களால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் ஹிட்லர் நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்ததாகக் குற்றம்சாட்டப்படும் அதே காலப்பகுதியில், பிரித்தானியா உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து தன்வசம் வைத்திருந்தது என்கின்ற உண்மையை ஹிட்லரை தூற்றும் யாவரும் கருத்தில் எடுக்கத் தவறுகின்றார்கள்:. அதைவிட ஜேர்மனி அயல்நாடுகள் மீது படைநடவடிக்கைகளை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அதே காலப்பகுதியில், இத்தாலி (07.04.1939இல்)அல்பேனியாவைக் கைப்பற்றியது, ரஷ்யா பின்லாந்தை ஆக்கிரமித்தது(30.11.1939), பிரித்தானிய நோர்வேயை ஆக்கிரமித்தது(08.04.1940), இத்தாலி எகிப்தை ஆக்கிரமித்தது(28.10.1940), பிரித்தானிய எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தது(07.03.1941), பிரிட்டனும் பிரான்சும் சிரியாவை ஆக்கிரமித்தது(08.06.1941), ஈரானை பிரித்தானியா ஆக்கிரமித்தது(25.08.1941), பின்லாந்து, ஹங்கேரி, ருமெனியா போன்ற நாடுகள் மீது பிரித்தானியா போர்தொடுத்தது (05.12.1941), துனீஷியாவை அமெரிக்கா ஆக்கிரமித்தது(08.11.1942), மலேசியா, பர்மா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், போன்ற நாடுகளை ஜப்பான் ஆக்கிரமித்தது(டிசம்பர் 1941). இப்படி உலகின் பல நாடுகள் மாறி மாறி மற்றைய நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில்தான் ஜேர்மனி ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை ஆக்கிரமித்திருந்தது. யூதர்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தினார் ஹிட்லர் என்றொரு குற்றச்சாட்டு… உக்ரேனில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியன் 76 இலட்சம் மக்களைப் படுகொலை செய்து இனஅழிப்பொன்றை மேற்கொண்ட, சீனாவின் நான்கிம் பிரதேசத்தில் ஜப்பானியப்படைகள் இலட்சக்கணக்கான சீனர்களை படுகொலை செய்த காலப்பகுதியில்தான், ஹிட்லர் பல இலட்சம் யூதர்களையும், கமியூனிஸ்டுக்களையும் படுகொலை செய்திருந்தார். இனப்படுகொலைகளிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் உலகின் பல நாடுகளுமே சாதாரணமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ஹிட்லர் என்கின்ற தலைவன் இதுபோன்ற காரியத்தைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் ஹிட்லர் மாத்திரம் உலகினாலும், அவரது சொந்த மக்களினாலும் இன்று ஓரம்கட்டுப்பட்டதற்கு அவருக்கு ஏற்பட்ட தோல்வியும், அந்தத் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்காவும், அதனது நேச நாடுகளும் மேற்கொண்ட உளவியல் போரும்தான் காரணம். இன்று ஜேர்மனியர்கள் ஹிட்லரை முற்றாகவே மறந்துவிட்டார்கள். கொஞ்சம் நினைவு வைத்திருப்பவர்கள் கூட அவரைப்பற்றிய வெறுப்புடன்தான் ஹிட்லரை நினைவு வைத்திருக்கின்றார்கள். இத்தனையையும் சாதித்தது psychological operations என்று அழைக்கப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகள்தான். இன்று உலகத் தமிழர்களைக் குறிவைத்து எதிரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உளவியல் நடவடிக்கைகள், இதனைத்தான் சாதிக்க நினைக்கின்றது. இப்படியான ஒரு விளைவைத்தான் புலிகளுக்கும், அதனது தலைமைக்கும் ஏற்படுத்த நினைக்கின்றது சிங்கள தேசமும், இந்தியாவும். புலிகளின் தலைவர் ஒரு கதாநாயகனாக, விடுதலை வீரனாக, உதாரண புருஷனான தமிழ் மக்கள் மனங்களின் நீண்டகாலம் வலம் வருவதை சிறிலங்காவும், இந்தியாவும் விரும்பவில்லை. அவர் அஞ்சா நெஞ்சம் கொண்ட, யாருக்கும் அடிப்பணியாத ஒரு வீரனாக சரித்திரத்தில் வலம்வருவதை இந்த தேசங்கள் விரும்பவில்லை. புலிகளின் தலைவர் பற்றி ஒரு கோளையான, கொடுரமான ஒரு கொலைகாரணான, ஒரு சமூக விரோதியான ஒரு பிம்பமே உலகத் தமிழர் மனங்களில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்த தேசங்களது விருப்பமாக இருக்கின்றது. இப்படியான ஒரு பிம்பத்தை உலகத் தமிழர் மனங்களிலும், உலகின் சரித்திரத்திலும் ஏற்படுத்தும் நோக்கத்தோடுதான் உளவியல் யுத்தம் ஒன்றை உலகத் தமிழரைக் குறிவைத்து இந்த நாடுகள் மேற்கொள்வதற்குத் தலைப்படுகின்றன. இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி இதுதான். ஒரு உளவியல் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா? இரண்டு பெரும் தேசங்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ள இருக்கின்ற மாபெரும் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றார்களா? என்னைப் பொறுத்தவரையில் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ளுகின்ற பலம் பெரிய அளவில் எம்மிடம் கிடையாது என்றுதான் நான் கூறுவேன். ஏன் என்றும், எதிரியின் உளவியல் யுத்தங்களை எதிர்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும் என்றும் அடுத்த வாரம் முதல் விரிவாக ஆராய்வோம்.


Newspaper · 156,178 likes

கஞ்சாவும், இந்தியா இராணுவமும்.... ---------------------------------------ஹிந்தியப் பயங்கரவாதிகள் தமிழர்களுடைய போராட்டத்தையும் தமிழ் உணர்வையும் சிதைத்து தமிழ் இளம் சமுதாயத்தை அழிக்கும் முயற்சியில் தோற்றது. இதை வாசித்த பின்னும் உன் குருதி கொதிக்கவில்லை என்றால் நீ தமிழனே கிடையாது.. 80களின் பிற்பகுதியில் இந்தியப் படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதி. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புக்கள், இந்தியாவின் முப்படைகள், ஆயிரக்கணக்கான இந்தியச் சார்பு தமிழ் ஆயதக்குழுக்கள் என்பன, தமிழீழ மக்கள் மீது பாரிய ஆக்கிரமிப்பொன்றை மேற்கொண்டிருந்தார்கள். தமிழீழம் ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் கைதிகளாகவே நடத்தப்பட்டார்கள். வகைதொகையின்றி தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்கள். கொள்ளைகள், கொலைகள் பரவலாகவே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. இப்படி பல காரியங்கள் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், மறுபக்கத்தில் மற்றொரு முக்கியமான காரியத்தை இந்தியப் படையின் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தார்கள். மிகவும் இரகசியமாக, அதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைக் குறிவைத்து பரந்த அளவில் இந்தக் காரியத்தை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். கஞ்சாச் செய்கை. வடக்கு கிழக்கு முழுவதிலும் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் கஞ்சா விதைகளை தூவி, கஞ்சா செடிகளை உருவாக்கும் காரியத்தைத்தான் அவர்கள் அதிசிரத்தையுடன்; செய்துகொண்டிருந்தார்கள். வடக்கு கிழக்கில் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கஞ்சாச் செடிகளை இந்தியப் படைகள் உருவாக்கினார்கள். இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் கஞ்சாச் செடிகளை இத்தனை ஆர்வமாக உருவாக்குவதற்கு காணம் என்ன ? அப்பொழுது இந்த விடயத்தைப் பற்றி தமிழ் மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் இந்தியப் படை ஜவான்கள் ஈழத்தில் பல வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். வெளிநாட்டு மின்சார உபகரணங்களை மலிவு விலையில் கொள்வனவு செய்து இந்தியாவிற்கு கொண்டு செல்வது முதல், நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாரிய மரங்களை வெட்டி இந்தியாவிற்கு கொண்டு செல்வது வரை, பல வியாபார நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். கஞ்சா செடிகளை உருவாக்கி கஞ்சாவை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காகவே இந்தியப் படையினர் கஞ்சா செய்கையில் ஆர்வம் காண்பிப்பதாக நினைத்து தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அத்தனை ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால் ஈழத்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்தியா இத்தகைய கைங்காரியத்தைச் செய்து வருகின்றது என்று பாவம் எமது மக்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. கேவலமான சதி: தமிழர் பிரதேசங்களில் இந்தியப் படைகள் கஞ்சா செடிகளை வளர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது, தமிழ் மக்களை கஞ்சா வியாபாரம் செய்வதற்குத் தூண்டுவது. யுத்த நிலை காரணமாக அக்காலகட்டத்தில் பல தமிழ் விவசாயக் குடும்பங்கள் பொருளாதார இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். நல்ல வருமானமுள்ள ஒரு தொழிலாக கஞ்சா வியாபாரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயக் குடும்பங்களை, கஞ்சாப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தமுடியும் என்று இந்தியத் தரப்பினர் நினைத்திருக்கலாம். ஆனால், இந்தியப் படையினர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையை பாரிய அளவில் மேற்கொள்ளுவதற்கு, மேற் கூறப்பட்டதை விட மற்றொரு மற்றொரு முக்கிய நோக்கம் அவர்களுக்கு இருந்ததாக பின்நாட்களில் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருந்தார்கள். வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்களை கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் ஒரு கேவலமான நோக்கம் இந்தியாவிடம் காணப்பட்டதாக புலிகள் தெரிவித்திருந்தார்கள். கஞ்சா புழக்கம் தமிழ் பிரதேசங்களில் அதிகமாக, அதிகமாக, தமிழ் இளைஞர்கள் கஞ்சாவைப் புகைக்க ஆரம்பிப்பார்கள். படிப்படியாக கஞ்சாப் பழக்கம் தமிழ் இளைஞர்களிடையே பரவிவிடும். கஞ்சா புகைப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எம்மில் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதற்கும் கவலைப்படாமல், அனைத்திற்குமே சிரித்தபடி, ஒருவித போதை மிதப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு கோபம் என்பது ஒருபோதும் வராது. எந்தவித உணர்ச்சியும் ஏற்படாது. எப்படியான நிகழ்வுகளும் அவர்களைப் பாதிக்காது. ஒரு முறை கஞ்சாவை உட்கொண்டவர்கள், தொடர்ந்து கஞ்சாவை உள்கொள்ளும்படியான போதைக்கு அடிமைகளாக மாறிவிடுவார்கள். இதுதான் கஞ்சாவின் மகிமை. இப்படிப்பட்ட போதைக்கு, தமிழ் இளைஞர்களை அடிமையாக்க இந்தியா ஏன் விரும்பியது? சிதைக்கும் நோக்கம்: ஈழத்தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்ச்சிகளை அழிக்க இந்தியா விரும்பியது. எதிர்கால ஈழத் தமிழ் சந்ததியினரை, தமது இனம் சார்ந்த எந்தவித பிரஞ்சையும் இல்லாத ஒரு சந்ததியாக உருவாகவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டது. தனது இந்த கேவலமான சதியின் ஒரு நகர்வாகத்தான், இந்தியத் தரப்பினர் தமிழீழப் பிரதேசங்களில் கஞ்சாச் செடிகளை இலட்சக்கணக்கில் உருவாக்கியிருந்தார்கள். இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகள், தற்பொழுது கூட வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகளை அழிக்க, இந்தியப் படையின் வெளியேற்றத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் வனவளத்துறை கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்ததாக புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஒருதடவை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சண்டைகள் அதிகம் இடம்பெறும் பிரதேசங்களான வாகநேரி, பொண்டுகள்சேனை, காயங்கேணி, குளத்துமேடு போன்ற பிரதேசங்களில் இந்தியப் படையினர் விதைத்த இலட்சக்கணக்கான கஞ்சாச் செடிகள் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கின்றன. முகாம்களிலும்: தமிழ் இளைஞர்களிடையே போதைப் பழக்கவழக்கத்தை உருவாக்கும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையின் மற்றொரு பக்கம், அக்காலங்களில் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழக்களின் முகாம்களில் அரங்கேறியிருந்தது. தமிழ் குழுக்களது முகாம்களுக்கு இந்திய ’ரம்’ மதுப்புட்டிகள் பெட்டி பெட்டியாக வினியோகிக்கப்பட்டன. தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் இந்தியாவின் விஷேட மதுபானமான ரம் இற்கு அடிமையாகியிருந்தார்கள். அத்துடன் வெற்றிலை பாக்குடன் ஒரு வகைப் போதை வஸ்தை கலந்து தயாரிக்கப்படும் ’பாண் பராக்’ எனப்படும்- மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளுக்கும், தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் திட்டமிட்டு அடிமையாக்கப்பட்டிருந்தார்கள். பங்களாதேஷிலும்.... இந்த கஞ்சாச் செடி வளர்க்கும் சதியை இந்தியா ஈழத்தில் மட்டும் அரங்கேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே பங்காளதேஷை விடுவிக்கவென்று இந்தியப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்த காலத்திலும், இதே வகையான பயிர் வளர்ப்பை அங்கு மேற்கொண்டிருந்தார்கள். ஈழத்தைப் போலல்லாது பங்காளதேஷில் இந்தியா தனது சதியின் பயனை அறுவடைசெய்து வருகின்றது. முன்னர் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்த பங்களாதேஷ் நாட்டின் இன்றைய தலைமுறையினரில் அதிகமானவர்கள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். பங்களாதேஷின் இளம் தலைமுறையினரிடையே இன்று புரையோடிக் காணப்படும் போதை வஸ்துப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசு இன்றைக்கும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களிலுள்ள காடுகளிலும், கிராமங்களிலும் கூட இந்தியப் படைகள் கஞ்சாப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது. இரகசிய நடவடிக்கைகள். இலங்கையைப் பொறுத்த வரையில் இந்திய இராணுவத்தினர் பல்வேறு சந்தர்பங்களில் பலவிதமான இரகசிய இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்தார்கள். மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டிருந்த இத்தகைய நடவடிக்கைகளில் சில நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தன. சில வெளித்தெரியவராமல் மறைக்கப்பட்டுவிட்டன. ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இந்தியாவின் இரகசியப் புலனாய்வு நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இலங்கையில் இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட சில முக்கிய இராணுவ நடவடிக்கைகள் பற்றி இன்றைய அத்தியாயத்தில் ஓரளவு மேலோட்டமாக ஆராய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இலங்கையின் இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா நேரடியாகவும், மறைமுகமாகவும், இரகசியமாகவும் பல தலையீடுகளைச் செய்து வருகின்ற இன்றைய காலகட்டத்தில், இலங்கை தொடர்பான இந்தியாவின் கடந்தகால அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய அறிவும் தெளிவும் தமிழ் இனத்தின் மத்தியில் இருப்பது அவசியம் என்பது - காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது. இராணுவ நடவடிக்கைகள்: இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் இராணுவத் தலையீடுகள் முதன்முதலில் 1971ம் ஆண்டு ஆரம்பமாகி இருந்தன - என்று கூறலாம். ஜே.வீ.பி.யை அடக்குவதற்கு என்று, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையின் பெயரில், இந்தியப்படைகள் இலங்கைக்கு வந்திருந்தன. அதன் பின்னர் 1987ம் ஆண்டில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு என்று கூறி, இந்தியப் படைகள் இலங்கைக்கு வந்திருந்தன. இந்த இரண்டு நடவடிக்கைளும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதேபோன்று விடுதலைப்புலிகள் யாழ் குடாவைக் கைப்பற்ற மேற்கொண்டிருந்த ஓயாத அலைகள்-4 நடவடிக்கைகளின் போது, யாழ் குடாவில் முற்றுகைக்கு உள்ளாகி இருந்த ஸ்ரீலங்கா படையினரைக் காப்பாற்ற இந்தியப் படையினர் ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி இருந்தார்கள். பலாலி தளத்தைக் கைப்பற்றி ஒரு நாள் முழுவதும் அதனைத் தக்கவைத்தபடி ஸ்ரீலங்காப் படையினரை வெளியேற்றுவதற்கு இந்தியப் படையினர் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இறுதி நேரத்தில் பலவேறு காரணங்களினால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டன. அந்த நடவடிக்கையும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பெயரிலேயே மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதேவேளை, ஸ்ரீலங்கா அரசின் அனுமதி இல்லாமல் இலங்கையில் படைநடவடிக்கைள் எடுப்பதற்கான திட்டங்கள் சிலவற்றையும் இந்தியப் படையினர் முன்னர் வகுத்திருந்தார்கள். அவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியுமிருந்தார்கள். 1987ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஸ்ரீலங்காப் படைகள் யாழ்ப்பாணம் வடமாராட்சியில் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது, யாழ் மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களைப் போடும் ஒப்பரேசன் பூமாலை நடவடிக்கை 04.06.1987 அன்று இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதி இன்றி இலங்கையில் இந்தியா மேற்கொண்ட ஒரு அதிரடி இராணுவ நடவடிக்கை இது. இரகசியத் திட்டங்கள்: இது போன்று சிறிலங்கா அரசுக்கு எதிராக இலங்கை மண்ணில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு இந்தியா பல இரகசியத் திட்டங்களை வகுத்திருந்த விடயம் பின்நாட்களிலேயே வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 80 களின் ஆரம்பத்தில் ஈழப் போராளிகளை அடக்குவதற்கு என்று ஜே.ஆர். அரசாங்கம் மேற்குலக நாடுகளின் பக்கம் சாய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சிறிலங்காவை வழிக்குக் கொண்டு வருவதற்கும், இலங்கை மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கும் - இந்தியா பல திட்டங்களை வகுத்திருந்தது. இனப்பிரச்சினையைக் காரணம் காண்பித்து இந்தியாவின் அப்போதைய ஜென்ம விரோதிகளான அமெரிக்கா, பாக்கிஸ்தான், சீனா, இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்தெல்லாம் ஸ்ரீலங்கா அரசாங்கம், ஆயுதம் மற்றும் பல்வேறு உதவிகளையெல்லாம் பெற ஆரம்பித்திருந்ததைத் தொடர்ந்து, இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்திய அரசியல் தலைமையிடம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது. அதற்கான ஒரு இராணுவத் திட்டமும் தீட்டப்பட்டது. அதேவேளை, இந்திய இராணுவத்தின் தளபதி பொறுப்பை கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீ புதிதாக ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்தியப் படைகள் நவீனமயப்படுத்தப்பட்டன. புதிய போர் யுக்திகள் வகுக்கப்பட்டன. நவீன ஆயுதங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவம் தான் புதிதாகப் பெற்றிருந்த தனது பலத்தைப் பரீட்சித்துப்பார்க்க ஒரு இடத்தைத் தேடிவந்தது. அதேவேளை இலங்கை மீது ஒரு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும் உருவாகி இருந்ததால், இலங்கைத் தீவை தனது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு நிலையமாகத் தெரிவுசெய்து கொண்டது. இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இந்தியப் படைத்தளபதி சுந்தர்ஜீயிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த படையெடுப்பிற்கு யார்யார் தலைமை தாங்குவது, எந்தெந்த இலக்குகளைத் தாக்குவது, எந்தெந்தப் படைப்பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவது என்றெல்லாம் திர்மாணிக்கப்பட்டிருந்தது. இலங்கை மீது மேற்கொள்ளப்பட இருந்த தாக்குதல் நடவடிக்கைக்கு திரிஷக்தி என்று பெயரும் சூட்டப்பட்டிருந்தது. ஏதோ காரணத்திற்காக இந்த நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. ஸ்ரீலங்காவிற்கான பணி: இதேபோன்று இலங்கைக்கு எதிரான மேற்கொள்வதற்கென்று மற்றொரு இரகசிய நடவடிக்கையும் திட்டமிட்டப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தியின் பணிப்புரையின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைக்காக இந்திய இராணுவத்தின் பல்வேறு படை அணிகளைக் கொண்ட தனிப் பிரிவொன்றும் 1987ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. `MO-SL’ என்று இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டிருந்தது. `MO-SL’ என்றால் (Mission Of Sri Lanka) என்று அர்த்தம். 87ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் திகதி இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட ஒப்பரேசன் பூமாலை(Operation Poomalai) நடவடிக்கைக்கு ஸ்ரீலங்காப் படையினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தால் இந்தியப் படையின்; இந்த விஷேட பிரிவினர் களமிறக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒப்பரேஷன் பூமாலை நடவடிக்கையின்போது ஸ்ரீலங்காப் படையினர் எதுவுமே செய்யமுடியாது அடங்கிப்போயிருந்ததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருந்தது. இதேபோன்று, இலங்கையில் மேற்கொள்ளுவதற்கென்று இந்தியா மற்றொரு இரகசிய இராணுவ நடவடிக்கையையும் திட்டமிட்டிருந்தது. ஒப்பிரேஷன் கொழும்பு: இந்தியப் படைகள் இலங்கைக்கு வருவதற்கு சற்று முந்திய காலப்பகுதியில், கொழும்பில் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்; இரகசிய இராணுவ நடவடிக்கை ஒன்றை இந்திய இராணுவம் திட்டமிட்டிருந்தது. யாழ்பாணத்தில் ஆப்பரேசன் பூமாலை(Operation Poomalai) இராணுவ நடவடிக்கை இடம்பெறுவதற்கு சற்று முன்னர் இந்த இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது. வெளியே எவருக்கும் தெரியாது இந்தியா மேற்கொண்டிருந்த இந்த இரகசிய நடவடிக்கை பற்றி, ராஜேஷ் காடியன் என்கின்ற இந்திய இராணுவ ஆய்வாளர் பின்னாட்களிலேயே தகவல் வெளியிட்டிருந்தார். INDIA’S SRI LANKA FIASCO என்ற தனது ஆய்வு நூலில் இந்தியாவின் இந்த இரகசிய இராணுவ நடவடிக்கை பற்றி அவர் தகவல் வெளியிட்டிருந்தார். 1987 இல், ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு மீது, அல்லது கொழும்பிலுள்ள முக்கிய இலக்கொன்றின் மீது திடீர் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு இந்தியா திட்டமிட்டிருந்தது. அதற்காக இந்திய இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற பராக் கொமாண்டோக்கள் 100 பேர் கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். இந்தப் பராக் கொமாண்டோக்கள் பொதுமக்கள் போலவும், வியாபாரிகள் போலம் மாறுவேடமிட்டே கொழும்புக்கு வந்திருந்தார்கள். கொழும்பின் புறநகர் பகுதியில் இருந்த இந்திய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா ஒன்றிலும், மற்றொரு இந்தியருக்குச் சொந்தமான ஆடம்பர ஹோட்டல் ஒன்றிலும் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் மேற்கொள்ள இருந்த தாக்குதலுக்கு உதவுவதற்காகவும், மேலதிக துருப்பக்களை ஏற்றி இறக்குவதற்கு ஏதுவாகவும், நான்கு எம்.ஐ.-8 ரக உலங்குவானூர்திகள் இந்தியாவின் தென்கரைப் பகுதி ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் ஏதோ காரணத்தினால் இறுதி நேரத்தில் அந்த இரகசிய நடவடிக்கை கைவிடப்பட்டது. பின்னர் அந்தப் பராக்கொமாண்டோக்களில் சிலர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனுப்பட்டார்கள் மற்றவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டார்கள். மலையகத்தில்: இதேபோன்று,1987-88ம் ஆண்டுகளில் இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தபோதும், இலங்கையில் மேற்கொள்வதற்கு என்று இந்திய இராணுவத்தினர் மற்றொரு இரகசியத் திட்டத்தை தீட்டியிருந்தார்கள். இந்தியாவிற்கு எதிராக ஜே.வீ.பியினர் தென்பகுதியில் பிரச்சாரங்களைக் கட்விழ்த்துவிட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வன்முறையில் இறங்கியிருந்த காலப்பகுதியில் இந்தியப் படையினர் ஒரு இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டடிருந்தனர். இந்தியப் பொருட்களை கடைகளில் விற்கக்கூடாது என்று உத்தரவிட்டு இந்திய விரோதப் போக்கை ஜே.வீ.பியினர் மிக மேசமாக தென்பகுதிகளில் மேற்கொண்டு வந்த வேளையில், மலைநாட்டில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தாக்குதல்கள் இடம்பெற்றுவிடும் என்று இலங்கையில் இருந்த இந்தியப் படையினர் எதிர்பார்த்தார்கள். அப்படி மலையகத்தில் இருந்த இந்தியத் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது தாக்குதல்கள் இடம்பெறும் பட்சத்தில் மலையகத்தில் ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு, இந்தியப் படையின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங்கின் தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இதற்காக பலாலி தளத்தில் இந்திய இராணுவத்தின்ஒரு விஷேட பரசூட் கொமாண்டோ அணி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஹெலிக்கொப்பர்ஸ் மூலமாக இவர்களை மலைநாட்டில் தரையிறக்குவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. அதேவேளை மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் 76வது காலட் படைப்பிரிவை மட்-பதுளை ஏ-5 வீதி வழியாக மலைநாட்டிற்கு நகர்த்தும் திட்டத்தையும் இந்தியப்படையினர் கைவசம் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். ஆனால் மலையகத்தில் இந்தியத் தமிழர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் எதுவும் ஏற்படாததால் இந்த திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. மாத்தையாவிற்கு துணையாக.. இதேபோன்று புலிகள் அமைப்பின் பிரதித்தலைவர் மாத்தையா, புலிகளின் தலைமைக்கு எதிராக சதி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட போதும், இந்தியா தனது படைகளை வன்னிக்கு அனுப்பி மாத்தையாவிற்குத் துணையாகக் களம் இறக்கும் திட்டத்தை வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் அந்தச் சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டுவிட்டதால், அது கை கூடாமல் போயிருந்தது. இதேபோன்று புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்தும், இந்தியாவில் இருந்த ஈ.என்.டி.எல்.எப் அமைப்பை கருணாவுடன் இணைத்து ஒரு இரகசிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது. (அந்த நடவடிக்கை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப்போம்) கேள்விகள் இந்த இடத்தில் எமது வாசகர்களாலும், பொதுவாக பல தமிழ் மக்களாலும், குறிப்பாக இளையதலைமுறையினராலும் எழுப்பப்படுகின்ற சில கேள்விகள் பற்றிப் பார்க்கவேண்டி இருக்கின்றது. 1)இந்தியா எதற்காக ஈழப்பிரச்சனையில் தலையீடு செய்தது? 2)தமிழ் மக்களைக் காப்பாற்றத்தானே இந்தியா இலங்கைப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டது? 3)தமிழ் மக்களில் அக்கறைகொண்டு இலங்கைப் பிரச்சனையில் தலையிட்ட இந்தியா மீது விடுதலைப் புலிகள் எதற்காகத் தாக்குதல் நடாத்தினார்கள்? 4)புலிகள் செய்தது சரியா? 5)புலிகள்-இந்திய யுத்தம் எவ்வாறு ஆரம்பமானது? 6)ஏன் ஆரம்பமானது? எமது வாசகர்கள் மத்தியில் இருந்து எழுகின்ற இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை அடுத்தவாரம் முதல் தேடுவதற்கு முனைவோம். அவலங்கள் தொடரும்…










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக