புதன், 19 பிப்ரவரி, 2014

ஸ்நான வகைகள் - ஐந்து.

ராதே கிருஷ்ணா 19-02-2014






Like This Page · Yesterday 

ஸ்நான வகைகள் - ஐந்து.

ஸ்நானம்: ஸ்நானத்தில் ஐந்து வகைகள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவற்றில் ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் மூழ்கி /முங்கிக் குளித்தலே. இதுவே முக்கிய ஸ்நானம். 

மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக்கொள்வது போன்றவை இரண்டாம் பக்ஷம்தான். இதற்கு அப்புறம் வருவதுதான் கெளணமாகக் கழுத்துவரைக் குளிப்பது, இடுப்புவரைக் குளிப்பது போன்றவை. ஆனாலும் இந்த 'கெளண' ஸ்நானங்கள் எல்லாம் ஜலத்தால் /நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி அல்லது ஜுரத்தில் இருக்கும்போது விபூதி ஸ்நானம் செய்துகொள்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. ஆக்நேயம் என்று பெயர். அக்னி சம்பந்தமுடையது என்று பொருள். அக்னியில் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை [சாம்பலை] ஜலம் விட்டுக்குழைக்காமல் வாரிப் பூசிக்கொள்வதை 'பஸ்மோத்தூளனம்' என்று சொல்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும்போது, அவற்றின் குளம்படி மண்ணை ரொம்பவும் புனிதமாகாச் சொல்லியிருக்கிறது. இதற்கு ’கோதூளி’ என்று பெயர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனே இந்தப்பசுக்களின் தூளியை சந்தனப்பொடி தூவினார் போல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளி தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ’கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று, அந்த மண் துகள்களை நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ’வாயவ்யம்’.

இது வாயுவுடன் ஸம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால், இதன் பெயர் வாயவ்யம்.

அபூர்வமாக சிலசமயங்களில் வெயில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா. இவ்வாறான மழை ஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்ததிற்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ’திவ்ய ஸ்நானம்’ என்று பெயர். இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

புண்யாஹவாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம்மீது தெளிப்பார். சந்தியா வந்தனத்தில் ‘ஆபோ ஹி ஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக்கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்வது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ’ப்ரம்ஹம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப் படுத்தப்பட்ட தீர்த்த புரோக்ஷணத்திற்கு ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர்.

பார்க்கப்போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம் தான். எந்தக் காரியம் ஆனாலும், அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து, ஈஸ்வர ஸ்மரணையுடப் ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே, அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.











































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக