வெள்ளி, 25 நவம்பர், 2011

திருப்புகழ் ( பகுதி - 3 ) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூன்றாம் பகுதி



ராதே கிருஷ்ணா 26-11-2011

திருப்புகழ் ( பகுதி - 3 ) அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூன்றாம் பகுதி

திருப்புகழ் பகுதி-3






அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூன்றாம் பகுதி

4. திருக்காளத்தி (வாயு)
596. சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச்  செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக்  குடிபேணிக்
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப்  படுவேனைக்
குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற்  கழல்தாராய்
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற்   றருள்வோனே
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத்  தருள்வோனே
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப்  புணர்வோனே
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப்  பெருமாளே.
597. சிரத்தா னத்திற்  பணியாதே
செகத்தோர் பற்றைக்  குறியாதே
வருத்தா மற்றொப்  பிலதான
மலர்த்தாள் வைத்தெத்  தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத்  துவநேசா
நினைத்தார் சித்தத்  துறைவோனே
திருத்தாள் முத்தர்க்  கருள்வோனே
திருக்கா ளத்திப்  பெருமாளே.
598. பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர  உருவாயே
பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல்  படிறாயே
சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
வந்துடல் மூடக் கலங்கி டாமதி
தந்தடி யேனைப் புரந்தி டாயுன  தருளாலே
சங்கரர் வாமத் திருந்த நூபுர
சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
தண்டைய னேகுக் குடம்ப தாகையின்  முருகோனே
திங்களு லாவப் பணிந்த வேணியர்
பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
திண்சிலை சூலத் தழுந்து பாணியர்  நெடிதாழ்வார்
சிந்துவி லேயுற் றெழுந்த காளவி
டங்கள மீதிற் சிறந்த சோதியர்
திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய  குருநாதா
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
வம்பொடி யாகப் பறந்து சீறிய
சிம்புள தாகச் சிறந்த காவென  வருகோமுன்
செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
தென்கயி லாயத்தமர்ந்து வாழ்வருள்  பெருமாளே.
5. சிதம்பரம் (ஆகாயம்)
599. கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப்  பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப்  பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப்  பெருமாள்காண்
விதிமுனிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப்  பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப்  பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
திருமுருக நாமப்  பெருமாள்கண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற்  பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற்  பெருமாளே.
600. கைத்தருண சோதி யத்திமுக வேத
கற்பகச கோத்ரப்  பெருமாள்காண்
கற்புசிவ காமி நித்யகலி யாணி
கத்தர்குரு நாதப்  பெருமாள்காண்
வித்துருப ராம ருக்குமரு கான
வெற்றியயில் பாணிப்  பெருமாள்காண்
வெற்புளக டாக முட்குதிர வீசு
வெற்றிமயில் வாகப்  பெருமாள்காண்
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
திக்கிணி லாதப்  பெருமாள்கண்
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
சித்திரகு மாரப்  பெருமாள்காண்
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
தொட்டகவி ராஜப்  பெருமாள்காண்
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
சுத்தசிவ ஞானப்  பெருமாளே.
601. இருவினையின் மதிம யங்கித்  திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற்  றலையாதே
பரமகுரு அருள்நி னைந்திட்  டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற்  கருள்வாயே
தெரிதமிழை யுதவு சங்கப்  புலவோனே
சிவனருளு முருக செம்பொற்  கழலோனே
கருணைநெறி புரியு மன்பர்க்  கெளியோனே
கனகசபை மருவு கந்தப்  பெருமாளே.
602. குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு நாவினி லின்பக்
குமுளி சிவவமு தூறுக வுந்திப்  பசியாறிக்
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
குலைய நமசிவ யோமென கொஞ்சிக்  களிகூரப்
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யிணையிலி நாடக செம்பொற்
பரம கதியிது வாமென சிந்தித்  தழகாகப்
பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற்
றருண சரண்மயி லேறியு னம்பொற்  கழல்தாராய்
தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல்தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச்  சமரேறிக்
ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத்  தொடும்வேலா
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப்  பெருமாளே.
603. வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு  கென்பக்ரீவம்
மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொருள்  அன்பினாலே
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில்  மங்குறாமல்
கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை  யென்றுசேர்வேன்
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
டஞ்சகட் டைக்குண கொம்புக் கைக்கிட  லென்பதாளம்
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
னஞ்சவித் துத்திர ளண்டமுட் டித்துகள்  வந்தசூரர்
கண்டமற் றுக்குட் லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
கண்தெறிக் கத்தலை பந்தடிக் துக்கையி  லங்குவேலால்
கண்களிக்  கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
கம்பலத் திற்குற மங்கபைக் கத்துறை  தம்பிரானே.
604. கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி
மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு
கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக  செம்பொனாரம்
கந்த ரந்தரித் தாடு கொங்கைக
ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி
கந்த முஞ்சிறுத் தேம லும்பட  சம்பைபோல
அங்க மைந்திடைப் பாளி தங்கொடு
குந்தி யின்குறைக் கால்ம றைந்திட
அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி  கொஞ்சமேவும்
அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்
அங்கை பொன்பறிக் கார பெண்களொ
டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ  தென்றுபோமோ
சங்கு பொன்தவிற் காள முந்துரி
யங்கள் துந்துமிக் காட திர்ந்திட
சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட  அண்டகோசம்
சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட
இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட
தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட  வந்தசூரைச்
செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
அந்த கன்புரத் தேற வஞ்சகர்
செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி  கந்தவேளே
திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு
செம்பொ னம்பலத் தேசி றந்தருள்  தம்பிரானே.
605. கொந்த ளம்புழு கெந்த வண்பனி
ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய  மடமாதர்
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில்  மயில்போலே
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
கொங்கை யும்புய முந்த ழும்புற
மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ  மயல்மேலாய்
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த
வஞ்சி னங்களு டன்கி டந்துட ல்  அழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன
திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கொம்பு துந்துமி  பலபேரி
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர்  களமீதே
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
செங்க ளந்திகை யெங்கு மண்டிட  விடும்வேலா
திங்க ளிந்திர னும்ப ரந்தர
ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை
செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள்  பெருமாளே.
606. மந்தர மென்குவ டார்த னங்களி
லாரம ழுந்திட வேம ணம்பெறு
சந்தன குங்கும சேறு டன்பனி
நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி
மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
வாள்விழி செங்கழு நீர்த தும்பிய  கொந்தளோலை
வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை
வாடந டம்புரி வார்ம ருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
மோகன வஞ்சியர் போல கம்பெற
வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
போல இருந்தெ னாம யங்கிட  இன்சொல்கூறிச்
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
வாருமெ னும்படி யால கங்கொடு
பண்சர சங்கொள வேணு மென்றவர்
சேம வளந்துறு தேன ருந்திட
துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
ரோடு விழைந்துமெ கூடி யின்புறு  மங்கையோரால்
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
சீபுழு வுஞ்சல மோடி றங்கிய
புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
சூலைமி குந்திட வேப றந்துடல்
துஞ்சிய மன்பதி யேபு குந்துய
ராழிவி டும்படி சீர்பதம்பெறு  விஞ்சைதாராய்
அந்தர துந்துமி யோடு டன்கண
நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய
ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
வாணர்த வம்புலி யோர்ப தஞ்சலி
அம்புய னந்திரு மாலொ டிந்திரை
வாணிய ணங்கவ ளோட ருந்தவர்  தங்கள்மாதர்
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
மாவுர கன்புவி யோர்கள் மங்கையர்
அம்புவி மங்கைய ரோட ருந்ததி 
மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
காம சவுந்தரி யாள்ப யந்தருள்  கந்தவேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
தீததி திந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன
தானத னந்தன னாவெ னும்பறை
செந்தவில் சங்குட னேமு ழங்கசு
ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல்  கண்டவேலா
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
வாழுமி ளங்கொடி யாள்ப தங்களில்
வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு
தாளழ கங்கையின் வேலு டன்புவி
செம்பொனி னம்பல மேல கம்பிர
காரச மந்திர மீத மர்ந்தருள்  தம்பிரானே.
607. வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும்
வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி  வங்களாலே
மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
வந்து சிந்துரத் தேறி யண்டரொடு  தொண்டர்சூழ
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர  மந்திமேவும்
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
என்றன் முந்துறத் தோணி யுன்றனது  சிந்தைதாராய்
அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
ரம்பு யன்சலித் தோட எண்டிசையை  யுண்டமாயோன்
அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
அங்கியின்குணக்கோலையுந்திவிடு  செங்கைவேலா
சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
மங்கை யின்புறத் தோள ணைந்துருக
சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல்  கந்தவேளே
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
செம்பொ னம்பலத் தாடு மம்பலவர்  தம்பிரானே.
608. கதித்துப்பொங் கலுக்கொத்துப்
பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
கவித்துச்செம் பொனைத்துற்றுக்  குழலார்பின்
கழுத்தைப்பண் புறக்கட்டிச்
சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
கலைத்துச்செங் குணத்திற்பித்  திடுமாதர்
பதித்துத்தந் தனத்தொக்கப்
பிணித்துப்பண் புறக்கட்டிப்
பசப்பின்பொன் தரப்பற்றிப்  பொருள்மாளப்
பறித்துப்பின் துரத்துச்சொற்
கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
பலித்துப்பின் கசுத்திப்பட்  டுழல்வேனோ
கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
கொதித்துச்சங் கரித்துப்பற்
கடித்துச்சென் றுழக்கித்துக்  கசுரோரைக்
கழித்துப்பண் டமர்க்குச்செப்
பதத்தைத்தந் தளித்துக்கைக்
கணிக்குச்சந் தரத்தைச்சுத்  தொளிர்வேலா
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
கயத்தைச்சென் றுரித்துத்தற்
சினத்தக்கன் சிரத்தைத்தட்  சிவனார்தம்
செவிக்குச்செம் பொருட்கற்கப்
புகட்டிச்செம் பரத்திற்செய்த்
திருச்சிற்றம் பலச்சொக்கப்  பெருமாளே.
609. சிரித்துச் சங்கொளி யாமின லாமென
உருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு
செணத்திற் சம்பள மேபறி காரிகள்  சிலபேரைச்
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை
திருத்திப்பண்குழலேய்முகிலோவிய  மயில்போலே
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க
ளளித்துப்பொன்குயி லாமெனவேகுரல்  மிடறோதை
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி
மினுக்கிச் சந்தன வாசனை சேறுட
னமைத்துப்பஞ்சணைமீதணைமாதர்கள்  உறவாமோ
இரைத்துப் பண்டம ராவதி வானவ
ரொளித்துக் கந்தசு வாமிப ராபர
மெனப்பட்டெண்கிரி ஏழ்கடல் தூள்பட  அசுரர்கள்
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ
டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு  மயில்வீரா
சிரித்திட் டம்புர மேமத னாருட
லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை
திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல்  கியசேயே
திருச்சித் தந்தனி லேகுற மானதை
யிருத்திக் கண்களி கூர்திக ழாடக
திருச்சிற் றம்பல மேவியு லாவிய  பெருமாளே.
610. தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர்
பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்
சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை என்பநீலச்
சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
டொற்றின்நன் சித்திரம் போலஎத் தும்பறியர்
சக்களஞ் சக்கடம் சாதிதுக் கங்கொலையர்  சங்கமாதர்
சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
முற்பணங்  கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும்  விஞ்சையோர்பால்
தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு
துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி  யெந்தநாளோ
குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்
கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி  கொண்டவேலா
கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி
கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி  மங்கைபாலா
சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
செட்டியென றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி
சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரும்  எங்கள்கோவே
சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர்  தம்பிரானே.
611. தனத்திற்குங் குமத்தைச்சந்
தனத்தைக்கொண் டணைத்துச்சங்
கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்
தனிற்கொத்துந் தரித்துச்சுந்
தரத்திற்பண் பழித்துக்கண்
சுழற்றிச்சண் பகப்புட்பங்  குழல்மேவித்
தரத்தைக்கொண் டசைத்துப்பொன்
தகைப்பட்டுந் தரித்துப்பின்
சிரித்துக்கொண் டழைத்துக்கொந்
தளத்தைத்தண் குலுக்கிச்சங்
கலப்புத்தங் கரத்துக்கொண்
டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண்  டுறவாடிப்
புனித்தப்பஞ் சணைக்கட்டிண்
படுத்துச்சந் தனப்பொட்டுங்
குலைத்துப்பின் புயத்தைக்கொண்
டணைத்துப்பின் சுகித்திட்டின்
புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்
சிதைப்பப் பொன் தரப்பற்றும்  பொதுமாதர்
புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்
கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்
திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண்
சிறுப்பப்புண் பிடித்தப்புண்
புடைத்துக்கண் பழுத்துக்கண்
டவர்க்குக்கண் புதைப்பச்சென்  றுழல்வேனோ
சினத்துக்கண் சிவப்பச்சங்
கொலிப்பத்திண் கவட்டுச்செங்
குவட்டைச்சென் றிடித்துச்செண்
டரைத்துக்கம் பிடிக்கப்பண்
சிரத்தைப்பந் தடித்துக்கொண்
டிறைத்துத்தெண் கடற்றிட்டும்  கொளைபோகச்
செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்
களித்துக்கொண் டளிப்புட்பஞ்
சிறக்கப்பண் சிரத்திற்கொண்
டிறைத்துச்செம் பதத்திற்கண்
திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்
புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண்  புயவேளே
பனித்துட்கங் கசற்குக்கண்
பரப்பித்தன் சினத்திற்றிண்
புரத்தைக்கண் டெரித்துப்பண்
கயத்தைப்பண் டுரித்துப்பன்
பகைத்தக்கன் தவத்தைச்சென்
றழித்துக்கொன் றடற்பித்தன்  தருவாழ்வே
படத்துப்பொன் றுடைத்திட்பன்
தனைக்குட்டும் படுத்திப்பண்
கடிப்புட்பங் கலைச்சுற்றும்
பதத்தப்பண் புறச்சிற்றம்
பலத்திற்கண் களித்தப்பைம்
புனத்திற்செங் குறத்திப்பெண்  பெருமாளே.
612. திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள்  சதிகாரர்
செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்
செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர்  வெகுமோகக்
குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்
குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர்  விழியாலே
கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்
குணமதில் முழுக்சுத் தசங்க்ய சங்கிக  ளுறவாமோ
இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட  வருசூரர்
இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
இவுளியி ரதத்துற் றங்க மங்கிட  விடும்வேலா
அரிகரி யுரித்திட் டங்க சன்புர
மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
மளவொடு மறுத்துப் பண்டணிந்தவர்  அருள்கோனே
அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
அழகிய திருச்சிற் றம்ப லம்புகு  பெருமாளே.
613. கொந்த ரங்குழ லிந்து வண்புரு
வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி  துண்டமாதர்
கொந்த ளங்கதி ரின்கு லங்களி
னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
கொண்ட நண்பித  ழின்சுகங்குயி லின்  சொல்மேவும்
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
கந்த ரங்கமு கென்ப பைங்கழை
தண்பு யந்தளி ரின்கு டங்கைய  ரம்பொனாரம்
தந்தி யின்குவ டின்த னங்களி
ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
தங்க டம்படி யுங்க வண்டிய  சிந்தையாமோ
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற  எந்தவாழ்வும்
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்
வண்டர் லங்கை யுளன்சி ரம்பொடி  கண்டமாயோன்
உந்தி யின்புவ னங்க ளெங்கும
டங்க வுண்டகு டங்கை யன்புகம்
ஒண்பு ரம்பொடி கண்டஎந்தையர்  பங்கின்மேவும்
உம்ப லின்கலை மங்கை சங்கரி
மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ்  தம்பிரானே.
614. தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
கடந்தொந்தஞ் செறிந்ததைந்திந்
த்ரியம்பந்தந் தருந்துன்பம்  படுமேழை
திதம்பண்பொன் றிலன்பண்டன்
தலன்குண்டன் சலன்கண்டன்
தெளிந்துன்றன் பழந்தொண்டென்  றுயர்வாகப்
புயங்கந்திங் களின்துண்டங்
குருத்தின்கொந் தயன்றன்கம்
பொருத்துங்கங் கலந்தஞ்செஞ்  சடைசூடி
புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்
புலம்பும்பங் கயந்தந்தென்  குறைதீராய்
இயம்புஞ்சம் புகந்துன்றும்
கணங்கன்செம் பருந்தங்கங்
கிணக்குஞ்செந் தடங்கண்டும்  களிகூர
இடும்பைங்கண் சிரங்கண்டம்
பதந்தந்தங் கரஞ்சந்தொன்
றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ்  செயும்வேலா
தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்
தனந்தந்தந் தனந்தந்தந்
தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ்  சிறுகூரா
தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்
தலந்துன்றம் பலந்தங்கும்  பெருமாளே.
615. பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
பவளம் பதித்த செம்பொ  னிறமார்பிற்
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
பலவிஞ் சையைப் புலம்பி  அழகான
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
புளகஞ் செலுத்தி ரண்டு  கயல்மேவும்
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
பொடிகொண் டழிக்கும் வஞ்சர்  உறவாமோ
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
உறவும் பிடித்த ணங்கை  வனமீதே
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த  மணிமார்பா
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
சிவமஞ் செழுத்தை முந்த  விடுவோனே
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
திருவம் பலத்த மர்ந்த  பெருமாளே.
616. மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
வளருந் தனத்த ணிந்த  மணியாரம்
வளைசெங் கையிற்சி றந்த வொளிகண்டு நித்தி லங்கு
வரருந் திகைத்தி ரங்க  வருமானார்
விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்
மிகைகண் டுறக்க லங்கி  மருளாதே
விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்புகழ்ந்து
மிகவிஞ்சு பொற்ப தங்கள்  தருவாயே
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
நடநம் பருற்றி ருந்த  கயிலாய
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
நவதுங்க ரத்ன முந்து  திரடோளுஞ்
சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்தகொண்டல்
திறல்செங்க ணச்சு தன்றன்  மருகோனே
தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
திருவம் பலத்த மர்ந்த  பெருமாளே.
617. முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
முகிலங்குழலொளிர் தொங்கலொ டிசைவண்டுகள்பாட
மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற்  குழையாட
முழவங்கர சமுகம்பரி மளகுங்கும வாச
முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக்  கொடிபோலத்
துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை
மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு
துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச்  செயல்மேவித்
தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண் டணை கீனுஞ்
சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக்  கருள்வாயே
அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி
அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக்  கொருசேயே
அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய
அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் திகழ்வோனே
மரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத
மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக்  கதிர்வேலா
வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்
மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப்  பெருமாளே.
618. சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
மந்தர மாலந னீர்த தும்பநல்
சண்பக மாலைகு லாவி ளங்குழல்  மஞ்சுபோலத்
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
தன்செய லார்நகை சோதி யின்கதிர்  சங்குமேவுங்
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
சந்தன சேறுட னார்க வின்பெறு
கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய  ரம்பையாரைக்
கண்களி கூரவெ காசை கொண்டவர்
பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு
கண்களி ராறுமி ராறு திண்புய  முங்கொள்வேனே
இந்திர லோகமு ளாரி தம்பெற
சந்திர சூரியர் தேர்ந டந்திட
எண்கிரி சூரர்கு ழாமி றந்திட  கண்டவேலா
இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
ரிந்துச டாதரன் வாச வ ன்தொழு
தின்புற வேமனு நூல்வி ளம்பிய  கந்தவேளே
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ்வளி நாய கொண்குக  அன்பரோது
செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
கங்கைய ளாவும காசி தம்பர
திண்சபை மேவும னாச வுந்தர  தம்பிரானே.
619.காய மாய வீடு மீறிய கூடு நந்து
புற்பு தந்த னிற்கு ரம்பை  கொண்டுநாளுங்
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
யப்ர மந்த டித்த லைந்து  சிந்தைவேறாய்
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
யத்து கொங்கை யுற்றி ணங்கி  நொந்திடாதே
வேத கீத போத மோனமெய் ஞான நந்த
முற்றி டின்ப முத்தி யொன்று  தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
விக்ர மங்கொள் வெற்பி டந்த  செங்கைவேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
யைப்பு ணர்ந்த வெற்ப கந்த  செந்தில்வேளே
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
ழுத்த ழங்க முட்ட நின்று  துன்றுசோதீ
ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
லச்சி தம்ப ரத்த மர்ந்த  தம்பிரானே.
620. அவகுண விரகனை வேதாள ரூபனை
அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை  அஞ்சுபூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை
அழிகரு வழிவரு வீணாதி வீணனை
அழுகலை யவிசலை ஆறான வூணனை  அன்பிலாத
கவடனை விகடனை நானா விகாரனை
வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை  வெம்பிவீழும்
களியனை யறிவுரை பேணாத மானுட
கசனியை யசனியை மாபாத னாகிய
கதியிலி தனையடி நாயேனை யாளுவ  தெந்தநாளோ
மவுலியி லழகிய பாதாள லோகனு
மரகத முழுதிய காகோத ராஜனு
மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுடன்  உம்பர்சேரும்
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர  மன்றுளாடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
தெரிசன பரகதி யானாய் நமோநம
திசையினு மிசையினும் வாழ்வே நமோநம  செஞ்சொல்சேருந்
திருதரு கலவிம ணாளா நமோநம
திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர்  தம்பிரானே.
621. கட்டி முண்டகர பாலி யங்கிதனை
முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
கத்த மந்திரவ தான வெண்புரவி  மிசையேறிக்
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ  டசையாமல்
சுட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபதம்  உறமேவித்
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
வச்சி ரங்களென மேனி தங்கமுற
சுத்த கம்புகுத வேத விந்தையொடு  புகழ்வேனோ
எட்டி ரண்டுமறி யாத என்செவியில்
எட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு  முருகோனே
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
எட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில்  விடுவோனே
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
சித்த முங்குளிர நாதி வண்பொருளை  நவில்வோனே
செட்டி யென்றுவன மேவி யின்பரச
சத்தி யின்செயலி னாளை யன்புருக
தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர்  பெருமாளே.
622. நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
நம்புதல் தீதெனநி  னைந்துநாயேன்
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
நங்களப் பாசரண  மென்றுகூறல்
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையை கொல்
உன்சொலைத் தாழ்வுசெய்து  மிஞ்சுவாரார்
உன்றனக் கேபரமும் என்றனைக் கார்துணைவர்
உம்பருக் காவதினின்  வந்துதோணாய்
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
கண்களிப் பாகவிடு  செங்கையோனே
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
கஞ்சுகப் பான்மைபுனை  பொன்செய்தோளாய்
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
அந்தரத் தேறவிடு  கந்தவேளே
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
அம்பலத் தாடுமவர்  தம்பிரானே.
623. செங்கலச முலையார்பால் சிந்தைபல தடுமாறி
அங்கமிக மெலியாதே அன்புருக அருள்வாயே
செங்கைபிடி கொடியோனே செஞ்சொல்தெரி புலவோனே
மங்கையுமை தருசேயே மன்றுள்வளர் பெருமாளே.
624. கரிய மேக மெனுங்குழ லார்பிறை
சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி  துண்டமாதர்
கமுக க்ரீவர் புயங்கழை யார்தன
மலைக ளாஇணை யுங்குவ டார்அகர
கமல வாழை மனுந்தொடை யார்சர  சுங்கமாடை
வரிய பாளித முந்துடை யாரிடை
துடிகள் நூலிய லுங்கவி னாரல்குல்
மணமு லாவிய ரம்பையி னார்பொருள்  சங்கமாதர்
மயில்கள் போல நடம்புரி வாரியல்
குணமி லாத வியன்செய லார்வலை
மசகி நாயெ னழிந்திட வோவுன  தன்புதாராய்
சரியி லாத சயம்பவி யார்முகி
லளக பார பொனின்சடை யாள்சிவை
சருவ லோக சவுந்தரி யாளருள்  கந்தவேளே
சதப ணாம குடம்பொடி யாய்விட
அவுணர் சேனை மடிந்திட வேயொரு
தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக  செம்பொன்வாகா
அரிய மேனி யிலங்கை யிராவணன்
முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
அகில மீரெழு முண்டவன் மாமரு  கண்டரோதும்
அழகு சோபித அங்கொளு மானன
விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
அருள்கொ டாடிசி தம்பர மேவிய  தம்பிரானே.
625. கூந்த லாழவி ரிந்து சரிந்திட
காந்து மாலைகு லைந்து பளிங்கிட
கூர்ந்த வாள்விழி கெண்டைக லங்கிட  கொங்கைதானும்
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
காந்தள் மேனிம ருங்குது வண்டிட
கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர  சங்கள்பாயச்
சாந்து வேர்வின ழிந்து மணந்தப
வோங்க வாவில்க லந்துமு கங்கொடு
தான்ப லாசுளை யின்சுவை கண்டித  ழுண்டுமோகம்
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல்  மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பைத வண்டைகள்  பொங்குசூரைச்
சேண்சு லாமகு டம்பொடி தம்பட
வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
சேந்த வேலது கொண்டுந டம்பயில்  கந்தவேளே
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
வான்கு லாவுசி தம்பரம் வந்தமர்  செங்கைவேலா
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
வார்ந்த ரூபிகு றம்பெண்வ ணங்கிய  தம்பிரானே.
626. அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ  ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல  படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ளம்  உணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ  தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளும்
தித்து மன்னு பிள்ளை  முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி  அலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு  மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல  பெருமாளே.
627. இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
னுதல்காட்டி வெல்லு  மிருபாண
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
நகைகாட்டு வல்லி  யிடைமாதர்
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
இடுகாட்டி னெல்லை  நடவாத
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
வினைவாட்டி யல்லல்  செயலாமோ
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
மொழிகாட்டு தில்லை  யிளையோனே
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
குறவாட்டி புல்லு  மணிமார்பா
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
அடல்காட்டு வல்ல  சுரர்கோபா
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல  பெருமாளே.
628. முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை
வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை
முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ  லலைபோதம்
மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்
கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக
முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை  மலையானை
வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி
றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல்
வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி  புரவோசை
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்
தள்ளுமடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு
வல்லவர்கள் போலபொற் சூறைகொண்டார்கள்மயல்  உறலாமோ
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய
வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி
ழள்ளமையஞானவித்தோதுகந்தாகுமர  முருகோனே
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிர
லென்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்
அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி  மணவாளா
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர
வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி
செல்லதிசை யோடுவிட்டாடுசிங்காரமுக  வடிவேலா
தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி
வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்
தில்லைநகர்கோபுரத்தே மகிழ்ந்தேகுலவு  பெருமாளே.
629. அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர
வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு
அணுக்கிச்செந்துணுக்கிற்கோவிதழுறல்க  ழூளதுகோதி
அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை
நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென
அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க  ளுறவோடே
படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள்
படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள
பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிகள்  அவமாயப்
பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை
பரத்துற் றண்பதத்துப் போதக மீதென  அருள்தாராய்
தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை
நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ
தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண  கலைவீரா
தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்
சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில்
தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி  மணவாளா
திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
திருப்பொற்பங்கயத்துக்கேசவர்மாயவர்  அறியாமல்
திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய
சமர்த்தப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக
திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய  பெருமாளே.
630. அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி
லப்புச் சீபுழு வோடடை யார்தசை  உறமேவி
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி  விரகாளர்
சுக்கத் தாழ்கட லேசுக மாமென
புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ  டதனாலே
துக்கத் தேபர வாமல் சதாசிவ
முத்திக் கேசுக மாக பராபர
சொர்க்கப் பூமியி லேறிட வேபதம்  அருள்வாயே
தக்கத் தோகிட தாகிட தீகிட
செக்கச் சேகண தாகண தோகண
தத்தத் தானன டீகுட டாடுடு  எவனதாளம்
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
சத்திக் கேயிரை யாமென வேவிடு  கதிர்வேலா
திக்கத் தோகண தாவென வேபொரு
சொச்சத் தாதையர் தாமென வேதிரு
செக்கர்ப் பாதம தேபதி யாசுதி  யவைபாடச்
செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
தெற்குக் கோபுர வாசலில் மேவிய  பெருமாளே.
631. ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
போருக் காமென மாமுலை யேகொடு
ஆயத் தூசினை மேவிய நூலிடை  மடமாதர்
ஆலைக் கோதினி லீரமி லாமன
நேசத் தோடுற வானவர் போலுவர்
ஆருக் கேபொரு ளாமென வேநினை  வதனாலே
காருக் கேநிக ராகிய வோதிய
மாழைத் தோடணி காதொடு மோதிய
காலத் தூதர்கை வேலெனு நீள்விழி  வலையாலே
காதற் சாகர மூழ்கிய காமுகர்
மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
காமத் தோடுற வாகையி லாவருள்  புரிவாயே
சூரர்க் கேயொரு கோளரி யாமென
நீலத் தோகைம யூரம தேறிய
தூளிக் கேகடல் தூர நிசாசரர்  களமீதே
சோரிக் கேவெகு ரூபம தாவடு
தானத் தானன தானன தானன
சூழிட் டேபல சோகுக ளாடவெ  பொரும்வேலா
வீரத் தால்வல ராவண னார்முடி
போகத் தானொரு வாளியை யேவிய
மேகத் தேநிக ராகிய மேனியன்  மருகோனே
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
மேலைக் கோபுர வாசலில் மேவிய  பெருமாளே.
632. காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
காமப் பூச லிட்டு  மதியாதே
காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
னீழற் கேத ருக்கி  விளையாடிச்
சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
சேலொத் தேவ ருத்தும்  விழிமானார்
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
தீமைக் காவி தப்ப  நெறிதாராய்
மாதைக் காத லித்து வேடக் கான கத்து
வாசத் தாள்சி வப்ப  வருவோனே
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
மாளப் போர்தொ லைத்த  வடிவேலா
வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
வீரத் தேர்ம றைத்த  புலியூர்வாழ்
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
வேதத் தோர்து தித்த  பெருமாளே.
633. கொள்ளை யாசைக் காரிகள் பாதக
வல்ல மாயக் காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள்  விழியாலே
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு  மவர்போலே
உள்ள நோவைத் தேயுற வாடியர்
அல்லை நேரொப் பாமன தோஷிகள்
உள்வி ரோதக் காரிகள் மாயையில்  உழல்நாயேன்
உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
கையு நீபத் தார்முக மாறுமுன்
உள்ள ஞானப் போதமு நீதர  வருவாயே
கள்ள மாயத் தாருகன் மாமுடி
துள்ள நீலத் தோகையின் மீதொரு
கையின் வேல்தொட் டேவிய சேவக  முருகோனே
கல்லி லேபொற் றாள்பட வேயது
நல்ல ரூபத் தேவர கானிடை
கௌவை தீரப் போகுமி ராகவன்  மருகோனே
தெள்ளி யேமுற் றீரமு னோதிய
சொல்வ ழாமல் தானொரு வானுறு
செல்வி மார்பிற் பூஷண மாயணை  மணவாளா
தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
வள்ளி வேளைக் காரம னோகர
தில்லை மேலைக் கோபுர மேவிய  பெருமாளே.
634. தாது மாமலர் முடியா லேபத
றாத நூபுர அடியா லேகர
தாள மாகிய நொடியா லேமடி  பிடியாலே
சாடை பேசிய வகையா லேமிகு
வாடை பூசிய நகையா லேபல
தாறு மாறுசொல் மிகையா லேயன  நடையாலே
மோதி மீறிய முலையா லேமுலை
மீதி லேறிய கலையா லேவெகு
மோடி நாணய விலையா லேமயல்  தருமானார்
மோக வாரிதி தனிலே நாடொறு
மூழ்கு வேனுன தடியா ராகிய
மோன ஞானிக ளுடனே சேரவும்  அருள்வாயே
காத லாயருள் புரிவாய் நான்மறை
மூல மேயென வுடனே மாகரி
காண நேர்வரு திருமால் நாரணன்  மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ்சபை
நாத னார்தம திடமே வாழ்சிவ
காம நாயகி தருபா லாபுலி  சையில்வாழ்வே
வேத நூன்முறை வழுவா மேதினம்
வேள்வி யாலெழில் புனைமு வாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனை  புரிகோவே
வீறு. சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில்மீ தேறிய  பெருமாளே.
635. எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
இரத்தச் சாகர நீர்மல மேவிய  கும்பியோடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
இரைப்புக் கேவல மூலவி யாதியொ  டண்டவாதம்
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
குருட்டுக் கால்முட மூமையு ளூடறு  கண்டமாலை
குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
னிடத்துத் தாள்பெற ஞான சதாசிவ  அன்புதாராய்
கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட  கண்ட வேலா
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி  பங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்துப் போதுடல் கீழ்விழ வேசெய்து
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர  சம்புபாலா
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய  தம்பிரானே.
636. நீல மாமுகில் போலும் வார்குழ
லார்கள் மாலைகு லாவ வேல்கணை
நீள வாள்விழி பார்வை காதிரு  குழையாட
நீடு மார்பணி யாட வோடிய
கோடு போலிணை யாட நூலிடை
நேச பாளித சோலை மாமயி  லெனவேகிக்
காலி னூபுர வோசை கோவென
ஆடி மால்கொடு நாணி யேவியர்
காய மோடணு பாகு பால்மொழி  விலைமாதர்
காத லாயவ ரோடு பாழ்வினை
மூழ்கி யேழ்நர காழு மூடனை
காரிர் பாருமை யாசி வாபத  மருள்வாயே
கோல மாமயி லேறி வார்குழை
யாட வேல்கொடு வீர வார்கழல்
கோடி கோடிடி யோசை போல்மிக  மெருதூளாய்க்
கோகோவென ஆழி பாடுகள்
தீவு தாடசு ரார்கு ழாமொடு
கூள மாகவி ணோர்கள் வாழ்வுற  விடும்வேலா
நாலு வேதமு டாடு வேதனை
யீண கேசவ னார்ச கோதரி
நாதர் பாகம்வி டாள்சி காமணி  உமைபாலா
ஞான பூமிய தான பேர்புலி
யூரில் வாழ்தெய்வ யானை மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய  பெருமாளே.
637. வாத பித்தமொடு சூலை விப்புருதி
யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ  டந்திமாலை
மாச டைக்குருடு காத டைப்புசெவி
டூமை கெட்டவலி மூல முற்றுதரு
மாலை யுற்றதொணு றாறுதத்துவர்கள்  உண்டகாயம்
வேத வித்துபரி கோல முற்றுவிளை
யாடு வித்தகட லோட மொய்த்தபல
வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல்  சிங்கியாலே
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
வீட ளித்துமயி லாடு சுத்தவெளி  சிந்தியாதோ
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
நீறு பட்டலற சூர வெற்பவுண
ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக  ழங்கிவேலா
ஓந மச்சிவாய சாமி சுத்தஅடி
யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள்  தந்தசேயே
ஆதி கற்பகவி நாய கற்குபிற
கான பொற்சரவ ணாப ரப்பிரம
னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய  றிந்தகோவே
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
மேவி சுத்தமண மாடி நற்புலியு
ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ்  தம்பிரானே.
638. சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
துரந்துற்ற குளிர்வாடை  யதனாலும்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
தொடர்ந்துற்று வருமாதர்  வசையாலும்
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
மடைந்திட்ட விடைமேவு  மணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை  தரவேணும்
கருங்குற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
கரந்துற்ற மடமானி  னுடனேசார்
கரும்புற்ற வயல்சூழு பெரும்பற்ற புலியூரில்
களம்பற்றி நடமாடு  மரன்வாழ்வே
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
இதம்பெற்ற மயிலேறி  வருகோவே
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
டெறிந்திட்டு விளையாடு  பெருமாளே.
639. இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள்  கடிதாகும்
இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள்  எவரேனும்
பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
பலஞ்செய் பித்தர மீளழை யாதவர்  அவரோடே
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
பதம்பற் றிப்புக ழானது கூறிட  அருள்வாயே
வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
மலங்கப் பொக்கரை யீடழி மாதவன்  மருகோனே
மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
வளைந்திட் டுக்கள மீதினி லேகொல  விடும்வேலா
பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
பிளந்திட் டுப்பல மாமயி லேறிய  முருகோனே
பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு
பெரும்பற்றப்புலி யூர்தனில் மேவிய  பெருமாளே.
640. விடுங்கைக் கொத்தக டாவுடை யானிடம்
மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்
விழுங்கப் பட்டற வேயற லோதியர்  விழியாலே
விரும்பத் தக்கன போகமு மோகமும்
விளம்பத் தக்கன ஞானமு மானமும்
வெறுஞ்சுத்தச்சலமாய்வெளியாயுயிர்  விடுநாளில்
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
இடங்கட் டிச்சுடு காடுபு காமுன  மனதாலே
இந்திட் டுப்பெற வேகதி யாயினும்
இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர  இசைவாயே
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
குரங்கைச் செற்றும கோததி தூளெழ   நிருதேசன்
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
குமண்டைக் குத்திர ராவண னார்முடி  அடியோடே
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
ப்ரியங்கொட் டக்கநன் மாமரு காஇயல்
ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென  விருதூதும்
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ
பெரும்பற் றப்புலியூர்தனில் மேவிய  பெருமாளே.
641. கொந்தள வோலைக ளாடப்பண்
சங்கொளி போல்நகை வீசித்தண்
கொங்கைகள் மார்பினி லாடக்கொண்  டையென்மேகம்
கொங்கெழு தோள்வளை யாடக்கண்
செங்கயல் வாளிகள் போலப்பண்
கொஞ்சிய கோகில மாகப்பொன்  பறிகாரர்
தந்திர மாமென வேகிப்பொன்
தொங்கலொ டாரமு மாடச்செந்
தம்பல வாயொடு பேசிக்கொண்  டுறவாடிச்
சம்பள மீதென வோதிப்பின்
பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
சங்கையில் மூளியர் பால்வைக்குஞ்  செயல்தீராய்
அந்தக னாருயிர் போகப்பொன்
திண்புர மோடெரி பாயப்பண்
டங்கச னாருடல் வேகக்கண்  டழல்மேவி
அண்டர்க ளோடட லார்தக்கன்
சந்திர சூரியர் வீழச்சென்
றம்பல மீதினி லாடத்தன்  குருநாதா
சிந்துர மோடரி தேர்வர்க்கம்
பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
சிந்திட வேல்விடு வாகைத்திண்  புயவேளே
செங்குற மாதுமி னாளைக்கண்
டிங்கித மாயுற வாடிப்பண்
செந்தமிழ் மால்புலி யூர்நத்தும்  பெருமாளே.
642.  நகையா லெத்திகள் வாயிற்றம்
பலமோ டெத்திகள் நாணற்றின்
நயனா லெத்திகள் நாறற்புண்  தொடைமாதர்
நடையா லெத்திக ளாரக்கொங்
கையினா லெத்திகள் மோகத்தின்
நவிலா லெத்திகள் தோகைப்பைங்  குழல்மேகச்
சிகையா லெத்திக ளாசைச்சங்
கடியா லெத்திகள் பாடிப்பண்
திறனா லெத்திகள் பாரத்திண்  தெருவூடே
சிலர்கூ  டிக்கொடு ஆடிக்கொண்
டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
செயலா லற்புத ஞானத்திண்  கழல்தாராய்
பகையா ருட்கிட வேலைக்கொண்
டுவரா ழிக்கிரி நாகத்தின்
படமோ டிற்றிட சூரைச்சங்  கரிசூரா
பணநா கத்திடை சேர்முத்தின்
சிவகா மிக்கொரு பாகத்தன்
பரிவால் சத்துப தேசிக்கும்  குரவோனே
சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
தடியே னுக்கருள் பாலிக்குஞ்
சுடர்பா தக்குக னேமுத்தின்  கழல்வீரா
சுகரே சத்தன பாரச்செங்
குறமா தைக்கள வால்நித்தம்
சுகமூழ் கிப்புலி யூர்நத்தும்
643. எழுகடல் மணலை அளவிடி னதிகம்
எனதிடர் பிறவி  அவதாரம்
இனியுன தபய மெனதுயி ருடலு
மினியுடல் விடுக  முடியாது
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
கமலனு மிகவு  அயர்வானார்
கடனுன தபய மடிமையு னடிமை
கடுகியு னடிகள்  தருவாயே
விழுதிக ழழகி மரகத வடிவி
விமலிமு னருளு  முருகோனே
விரிதல மெரிய குலகிரி நெரிய
விசைபெறு மயிலில்  வருவோனே
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
இரைகொளும் அயிலை  யுடையோனே
இமையவர் முனிவர் பரவிய புலியு
ரினில்நட மருவு  பெருமானே.
644. தறுகணன் மறலி முறுகிய கயிறு
தலைகொடு விசிறிக்  கொடுபோகும்
சளமது தவிர அளவிடு சுருதி
தலைகொடு பலசாத்  திரமோதி
அறுவகை சமய முறைமுறை சருவி
யலைபடு தலைமூச்  சினையாகும்
அருவரு வொழிய வடிவுள பொருளை
அலம்வர அடியேற்  கருள்வாயே
நறுமல ரிறைவி அரிதிரு மருக
நகமுத வியபார்ப்  பதிவாழ்வே
நதிமதி யிதழி பணியணி கடவுள்
நடமிடு புலியூர்க்  குமரேசா
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
கடலிடை பொடியாப்  பொருதோனே
கழலிணை பணியு மவருடன் முனிவு
கனவிலு மறியாப்  பெருமாளே.
645. இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்கள்
எழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிகள்
இகலியா டப்படிக மோடடும் பொனுரு  திங்கள்மேவும்
இலவுதா வித்தஇகழ் குமிழைநே ரொத்தஎழி
விலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையின்
இயல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச  தங்கமார்பின்
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லின்தறளிரின்
வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை
மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
மணமெலா மற்றநறை கமலபோ துத்தொடையென்
வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை  ரம்பைமாதர்
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை
வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி
வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை  தந்துஆள்வாய்
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்
முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை  எங்குமோட
முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்
முனிவரா டிப்புகழ் வேதவிஞ் சையர்கள்
முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு  கந்தவேளே
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்கள்
அளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்வ
ளடையுமே ரக்கனக நாடெனும்புலியுர்  சந்தவேலா
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை
அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்
அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர்  தம்பிரானே.
646. இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
னிடம தேறியென்  இருநோயும்
எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக  ஒளிமேவி
அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென  தளவாக
அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயிணை  அடிதாராய்
பரம தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி  தவழ்வேணிப்
பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர்  அருள்பாலா
மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமும்  அருள்வோனே
மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள்  பெருமாளே.
647. காவி யுடுத்துந் தாழ்சடை வைத்தும்
காடுகள் புக்கும்  தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்தும்
காசினி முற்றும்  திரியாதே
சிவ னொடுக்கம் பூத வொடுக்கம்
தேற வுதிக்கும்  பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
சீதள பத்மம்  தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
பாழ்பட வுக்ரம்  தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
பாடலை மெச்சும்  கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும்
சோலை சிறக்கும்  புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
தோகை நடத்தும்  பெருமாளே.
648. கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்
பாவித் தாகச் சாந்தணி வார்முலை
கோடுத்தானைத் தேன்துவர் வாய்மொழி  குயில்போலக்
கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர்
கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள்  வருமோவென்
றோதித் தோளிற் பூந்துகி லால்முலை
மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு
வோடித் தேடிச் சோம்பிடு வார்சில  விலைமாதர்
ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி
சூளைக் காரச் சாங்கமி லார்சில
வோரைச் சாகத் தீம்பிடு வார்செய  லுறவாமோ
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி
வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல்  விடும்வேலா
வேளைச் சீறித் தூங்கலொ டேவய
மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட
மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை  தருசேயே
நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்
மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்
நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள்  சுரமானை
ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி
மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ
ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ்  பெருமாளே.
649. சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
மதவின்பத் துடனே பலபணி
தனிதம்பட் டுடையோ டிகல்முர  சொலிவீணை
தவளந்தப் புடனே கிடுகிடு
நடைதம்பட் டமிடோல் பலவொலி
சதளம்பொற் றடிகா ரருமிவை  புடைசூழ
வெகுகும்பத் துடனே பலபடை
கரகஞ்சுற் றிடவே வரஇசை
வெகுசம்பத் துடனே யழகுட  னிதமேவும்
விருமஞ்சித் திரமா மிதுநொடி
மறையும்பொய்ப் பவு÷ஷா டுழல்வது
விடவும்பர்க் கரிதா மிணையடி  தருவாயே
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுதந்தித் திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செச் செகசே செககண  எனபேரி
திமிர்தங்கற் குவடோ டெழுகட
லொலிகொண்டற் றுருவோ டலறிட
திரள்சண்டத் தவுணோர் பொடிபட  விடும்வேலா
அகரம்பச் சுருவோ டொளியுறை
படிகம்பொற் செயலா ளரனரி
அயனண்டர்க் கரியா ளுமையருள்  முருகோனே
அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை
மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
அருள்செம்பொற் புலியூர் மருவிய  பெருமாளே.
650. சகுடமுந்துங் கடலடைந்துங்
குளமகிழ்ந்துந் தோய்சங்கம்
கமுகடைந்தண் டமுதகண்டம்
தரளகந்தந் தேர்கஞ்சஞ்
சரமெனுங்கண் குமிழதுண்டம்
புருவெனுஞ்செஞ் சாபம்பொன்  திகழ்மாதர்
சலசகெந்தம் புழுகுடன்சண்
பகமணங்கொண் டேய்ரண்டந்
தனகனம்பொன் கிரிவணங்கும்
பொறிபடுஞ்செம் பேர்வந்தண்
சலனசம்பொன் றிடைபணங்கின்
கடிதடங்கொண் டாரம்பொன்  தொடர்பார்வை
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்
சரணபந்தந் தோதிந்தம்
புரமுடன்கிண் கிணிசிலம்பும்
பொலியலம்புந் தாள்ரங்கம்
புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங்  கடைநாயேன்
புகழடைந்துன் கழல்பணிந்தொண்
பொடியணிந்தங் காநந்தம்
புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
தவசர்சந்தம் போலுந்திண்
புவனிகண்டின் றடிவணங்குஞ்
செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன்  கழல்தாராய்
திகுடதிந்தித் தகுடதந்தந்
திகுடதிந்திந் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண்
டகுடடண்டண் டோடிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
டிமுடடிண்டென் றேசங்கம்  பலபேரி
செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்
பறைமுழங்கும் போரண்டஞ்
சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
பொடிபறந்துண் டோர்சங்கம்
சிரமுடைந்தண் டவுணரங்கம்
பிணமலைந்தன் றாடுஞ்செங்  கதிர்வேலா
அகில அண்டஞ் சுழலஎங்கும்
பவுரிகொண்டங் காடுங்கொன்
புகழ்விளங்குங் கவுரிபங்கன்
குருவெனுஞ்சிங் காரங்கொண்
டறுமுகம்பொன் சதிதுலங்கும்
திருபதங்கந் தாஎன்றென்று  அமரோர்பால்
அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்
சரணமுங்கொண் டோதந்தம்
புனைகுறம்பெண் சிறுமியங்கம்
புணர்செயங்கொண் டேயம்பொன்
அமைவிளங்கும் புலிசரம்பொன்
திருநடங்கொண் டார்கந்தம்  பெருமாளே.
651. சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
மோந்துப யோதரம  தணையாகச்
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக
காந்தமொ டூசியென  மடவார்பால்
கூர்ந்தக்ரு பாமனது போந்துள தாள்குறுகி
ஓர்ந்துண ராவுணர்வில்  அடிநாயேன்
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
பூண்டுற வாடுதினம்  உளதோதான்
பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
நீண்டிடு மாலொடய  னறியாது
பாம்புரு வானமுனி வாம்புலி யானபதன்
ஏய்ந்தெதிர் காணநட  மிடுபாதர்
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
மாங்கன காபுரியி  லமர்வாழ்வே
பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
சூழ்ம்புலி யூரிலுறை  பெருமாளே.
652. சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
சொருபகிரி யிடமேவு  முகமாறும்
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
துகிரிதழின் மொழிவேத  மணம்வீச
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
அயில்கரமொ டெழில்தோகை  மயிலேறி
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
அதிசயமெ னருள்பாட  வரவேணும்
விடைபரவி அயன்மாலொ டமரர்முனி கணமோட
மிடறடைய விடம்வாரி  அருள்நாதன்
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
மிகமகிழ அநுபூதி  அருள்வோனே
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
னிணையிளநிர் முலைமார்பின்  அணைமார்பா
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
இருடியர்கள் புகழ்ஞான  பெருமாளே.
653. தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி  பிடிபோல
தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவர்  உடல்பூசி
வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி  உடைசோர
மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி  செயலாமோ
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
நித்தியகல் யாணிஎனை யீணமலை மாதுசிவை
தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை  யருள்பாலா
சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
ரத்னமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட  மிடுவோனே
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
சுத்தஅணை யூடுவட மாமுலைவிடாதகர  மணிமார்பா
சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ்  பெருமாளே.
654. துத்தி பொற்றன மேரு வாமென
வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
துப்பு முத்தொடு மார்பி னாடிட  மயில்போலே
சுக்கை மைக்குழ லாட நூலடை
பட்டு விட்டவிர் காம னாரல்குல்
சுற்று வித்துறு வாழை சேர்தொடை  விலைமாதர்
தத்தை புட்குர லோசை நூபுர
மொத்த நட்டமொ டாடி மார்முலை
சற்ற சைத்துகு  லாவும் வேசிய  ரவரோடே
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ டூளை நாயென
சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட  உழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக
தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை  தவில்போடச்
சித்ர வித்தைய ராட வானவர்
பொற்பு விட்டிடு ஜேஜே சேயென
செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட  விடும்வேலா
செத்தி டச்சம னார்க டாபட
அற்று தைத்தசு வாமி யாரிட
சித்தி ரச்சிவ தீவு யாரருள்  முருகோனே
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
விட்ட அச்சுத ரீன மானொடு
சித்தி ரப்புலி யூரில் மேவிய  பெருமாளே.
655. நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி  வினையாயின்
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுனது  அருள்பேசி
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை  யருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் எனத்தொழுது
வாரே னெனக்கெதிர்முன்  வரவேணும்
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை  அருள்பாலா
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த 
தோழா கடப்பமல  ணிவோனே
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு  மணவாளா
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ்  பெருமாளே.
656. நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
நாடியின டத்தி மந்திர  பந்தியாலே
நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
நாறிசை நடத்தி மண்டல  சந்தியாறில்
கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
கோவென முழக்கு சங்கொலி  விந்துநாதம்
கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
கோடிநட னப்ப தஞ்சபை  என்றுசேர்வேன்
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
ஆரணா தலைக்க லங்கொளி  செம்பொன்வாசி
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
ஆளுமை பரத்தி சுந்தரி  தந்தசேயே
வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
வீடெரி கொளுத்தி யெண்கட  லுண்டவேலா
வேதசது ரத்தர்தென்புலி யூருறையொருத்தி பங்கினர்
வீறுநட னர்க்கி சைந்தருள்  தம்பிரானே.
657. நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
நீளச்சசி யார்பொட்டணி  நுதல்மாதர்
நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
நேமித்தெழு தாசித்திர  வடிவார்தோள்
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
யாகத்தமி யேனித்தமும்  உழல்வேனோ
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
மாகக்கொள வேமுத்தியை  அருள்வாயே
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
மார்பிற்பிர காசக்கிரி  தனபார
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
மாணிக்கமி னாள்நிஷ்கள  உமைபாகர்
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
சோதிப்பொருள் கேள்விக்கிடு  முருகோனே
சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
சோதிப்புலி யூர்நத்திய  பெருமாளே.
658. பனிபோ லத்துளி சலவா யுட்கரு
பதின்மா தத்திடை  தலைகீழாய்ப்
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
பயில்வா ருத்தியில்  சிலநாள்போய்த்
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
சதிகா ரச்சமன்  வருநாளில்
தரியா ரிற்சடம் விடுவா ரிப்படி
தளர்மா யத்துயர்  ஒழியாதோ
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
விகடா ருக்கிட  விடும்வேலா
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
மிகவே குட்டிய  குருநாதா
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
நிழலாள் பத்தினி  மணவாளா
நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
நிறைவே பத்தர்கள்  பெருமாளே.
659. மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
வரவர வரஇத ழூற லூட்டியும்  வலைவீசும்
மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
வளமையி லிளமையில் மாடை வேட்கையில்  மறுகாதே
இகலிய பிரமக பால பாத்திரம்
எழில்பட இடுதிரு நீறு சேர்த்திறம்
இதழியை யழகிய வேணி யார்த்ததும்  விருதாக
எழில்பட மழுவுடன் மானுமேற்றது
மிசைபட இசைதரு ஆதி தோற்றமு
மிவையிவை யெனவுப தேச மேற்றுவ  தொருநாளே
ஜலதல மதிலருள் ஞான வாட்கொடு
தலைபறி யமணர்ச மூக மாற்றிய
தவமுனி சகமுளர் பாடு பாட்டென  மறைபாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி
கிடதரி கிடதரி தாவெ னாச்சில
சபதமொ டெழுவன தாள வாச்சியம்  உடனேநீள்
அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
அலகைக ளடைவுட னாடு மாட்டமும்
அரனவ னுடனெழு காளி கூட்டமும்  அகலாதே
அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனும்
அரிதென முறைமுறை யாடல்காட்டிய  பெருமாளே.
660. மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
வைச்சி றைச்ச பாத்ரம்  அநுபோகம்
மட்க விட்ட சேக்கை உப்பு ழுத்த வாழ்க்கை
மட்கு லப்ப தார்த்தம்  இடிபாறை
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்ச ளைச்ச நாய்க்கு
மெய்ச்சி ளைச்ச ஈக்கும்  இரையாகும்
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
இப்ப டிக்கு மோக்ஷம்  அருள்வாயே
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
பொற்ப தத்து ளாக்கு  புலியூரா
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
புத்தி மெத்த காட்டு  புனவேடன்
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
பைச்சி லைக்கு மாட்கொள்  அரன்வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
பத்த ருக்கு வாய்த்த  பெருமாளே.
661. மதிய மண்குண மஞ்சு நால்முக
நகர முன்கலை கங்கை நால்குண
மகர முன்சிக ரங்கி மூணிடை  தங்குகோண
மதன முன்தரி சண்ட மாருத
மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
வகர மிஞ்சிய கன்ப டாகமொ  ரொன்றுசேரும்
கதிர டங்கிய அண்ட கோளகை
யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
ககன மின்சுழி ரண்டு கால்பரி  கந்துபாயும்
கருணை யிந்திரி யங்கள் சோதிய
அருண சந்திர மண்ட லீகரர்
கதிகொள் யந்திர விந்துநாதமொ  டென்றுசேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக
முதிர அண்டமொ டைந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக  என்றுதாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரொ
டிதவி தம்பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள்  பொங்கவூடு
உதிர மண்டல மெங்கு மாயொளி
யெழகு மண்டியெ ழுந்து சூரரை
உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி  சிந்திவீழ
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
உரக னும்புலி கண்ட வூர்மகிழ்  தம்பிரானே.
662. மருவு கடல்முகி லனைய குழல்மதி
வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி
மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமிழ் 
ஒப்பக் கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரை
தரள மெனுநகை மிடறு கமுகென
வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ
டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநகம்
எனவு மிகலிய குவடு மிணையென
வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்
வைத்தப்பொற்குட மொத்திட்டுத்திகழ்  முலைமேவும்
வடமு நிரைநிரை தரள பவளமொ
டசைய பழுமர இலைவ யிறுமயி
ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்
அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
அரிய கடிதட மமிர்த கழைரச
மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி
துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்
கணையு முழவென கமட மெழுதிய
வட்டப் புத்தக மொத்துப் பொற்சர
ணத்திற்பிற்புற மெத்துத் தத்தைகள்  மயில்போலே
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு
தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்
பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட
மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமென
பலவில் சுளையென வுருக வுயர்மயல்
சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்
வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென  நரைமேவிச்
செவியொ டொளிர்விழி மறைய மலசல
மொழுக பலவுரை குழற தடிகொடு
தெத்திப் பித்தமு முற்றித் தற்செய
லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி
லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய
ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசை
அறைய அணைபவ ரெடென சுடலையில்
சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி
நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சடம்  உழல்வேனோ
குருவி னுருவென அருள்செய் துறையினில்
குதிரை கொளவரு நிறைத வசிதலை
கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத
மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடை
அருண வுழைமழு மருவு திருபுயர்
கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ
விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடு
வளையு மெழுகட லதிர முழவொடு
கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட
லொப்பத் திக்கும டுத்துத் தத்திட  அமர்மேவிக்
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர
குமர குருபர எனவொ தமரர்கள்
கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர
ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபல
கருட னடமிட குருதி பருகிட
கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக
னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு  மயில்வீரா
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு
பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர
வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுல
கடைய நெடியவா திருவு மழகியர்
தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின
முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு மனவலி சிலைகை கொடுகரம்
இருப துடைகிரி சிரமொர் பதும்விழ
திக்கெட் டைக்க னத்தர்க் குக்கொடு
பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர  மருகோனே
திலத மதிமுக அழகி மரகத
வடிவி பரிபுர  நடனி மலர்பத
சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன
முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவித
சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ
சித்திற் சிற்பதம் வைத்துக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியின்
அரிய மகனென புகழ்பு லிநகரில்
செப்புப் பொற்றன முற்றப் பொற்குற
தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய  பெருமாளே.
663. முத்த மோகன தத்தையி னார்குர
லொத்த வாயித சர்க்கரை யார்நகை
முத்து வாரணி பொற்குவ டார்முலை  விலைமாதர்
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்
பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்
முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர்  கலிசூழச்
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ
டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை
சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர்  மடமீதே
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
வைத்து நாயென ருட்பெற வேபொருள்
செப்பி யாறுமு கப்பரி வோடுணர்  வருள்வாயே
தத்த னானத னத்தன தாவெனனு
டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
சத்த தீவுத யித்தியர் மாளிட  விடும்வேலா
சத்தி லோகப ரப்பர மேசுர
நிர்த்த மாடுக ழற்கரு ணாகர
தற்ப ராபர நித்தனொர் பாலுறை  உமைபாலா
துத்தி மார்முலை முத்தணி மோகன
பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்
துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன்  மணிமார்பா
சுட்டி நீலஇ ரத்தின மாமயில்
உற்று மேவிய ருட்புலி யூர்வளர்
சுத்த னேசசி பெற்றபெ ணாயகி  பெருமாளே.
664. பரமகுரு நாத கருணை யுபதேச
பதவிதரு ஞானப்  பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப்  பெருமாள்காண்
திருவளரு நீதி தின மனொக ராதி
செகபதியை யாளப்  பெருமாள்காண்
செகதலமும் வானு மருவை யவைபூத
தெரிசனை சிவாயப்  பெருமாள்காண்
ஒருபொருள தாகி அரு விடையை யூரு
முமைதன் மண வாளப்  பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப்  பெருமாள்காண்
கருவுதனி லூற மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப்  பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப்  பெருமாளே.
665. தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயுறும்  அதிமோக
தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய  நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு  வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்திணை யேயு மாறருள்  புரிவாயே
வார ணத்தினை யேக ராவுமு
னேவ ளைத்திடு போது மேவிய
மாய வற்கித மாக வீறிய  மருகோனே
வாழு முப்புர வீற தானது
நீறெ ழப்புகை யாக வேசெய்த
மாம திப்பிறை வேணி யாரருள்  புதல்வோனே
கார ணக்குறி யான நீதிய
ரான வர்க்குமு னாக வேநெறி
காவி யச்சிவ நூலை யோதிய  கதிர்வேலா
கான கக்குற மாதை மேவிய
ஞான சொற்கும ராப ராபர
காசி யிற்பிர தாப மாயுறை  பெருமாளே.
666. மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
பங்கப் படமிசை யேபனி போல்மதம்
வந்துட் பெருகிட வேவிதி யானவன்  அருள்மேவி
வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
பந்துப் பனைபழ மோடிள நீர்குட
மண்டிப் பலபல வாய்வினை கோலும  வழியாலே
திங்கட் பதுசெல வேதலை கீழுற
வந்திப் புவிதனி லேமத லாயென
சிந்தைக் குழவியெ னாவனை தாதையும்  அருள்கூரச்
செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல
சிங்கிப் பெருவிழி யாரவ மாயதில்  அழிவேனோ
அங்கைத் தரியென வேயொரு பாலக
னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை
அம்பற் கொடுவரி யாயிரண் யாசுரன்  உடல்பீறி
அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி
சங்குத் திகிரிக ரோனரி நாரவ
ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன்  மருகோனே
கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
தங்கப் பவளொளி பால்மதி போல்முக
கங்குற் றரிகுழ லாள்பர மேஸ்வரி  அருள்பாலா
கந்துப் பரிமயில் வாகன மீதிரு
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
கங்கைப் பதிநதி காசியில் மேவிய  பெருமாளே.
காசி
667. வேழ முண்ட விளா கனி  யதுபோல
மேனி கொண்டு வியாபக  மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக  அயர்வாகி
நானு நைந்து விடாதருள்  புரிவாயே
மாள அன்றம ணீசர்கள்  கழுவேற
வாதில் வென்ற சிகாமணி  மயில்வீரா
காள கண்ட னுமாபதி  தருபாலா
காசி கங்கையில் மேவிய  பெருமாளே.
ஹரித்துவார் (மாயாபுரி)
668. சிகர மருந்த வாழ்வது  சிவஞானம்
சிதறி யலைந்து போவது  செயலாசை
மகர நெருங்க வீழ்வது  மகமாய
மருவி நினைந்தி டாவருள்  புரிவாயே
அகர நெருங்கி னாமய  முறவாகி
அவச மொடுங்கை யாறொடு  முனமேகிக்
ககன மிசைந்த சூரியர்  புகமாயை
கருணை பொழிந்து மேவிய  பெருமாளே.
பஞ்சாப் (வயிரவி வனம்)
669. அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளுணு
மரனிட மிருக்கு மாயி  யருள்வோனே
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
மணிமயில் நடத்து மாசை  மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
னிருகர மிகுத்த பார  முருகாநின்
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவு மெனக்கு ஞானம்  அருள்வாயே
சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக்கு ளாதி
சொலுவென வுரைத்த ஞான  குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
துணிபட அரக்கர் மாள  விடும்வேலா
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல  மலர்வாவி
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு  பெருமாளே.
வெள்ளிகரம்
670. அடலரி மகவு விதிவழி யொழுகு
மைவரு மொய்க்கு ரம்பை  உடனாளும்
அலைகட லுலகி லலம்வரு கலக
ஐவர்த மக்கு டைந்து  தடுமாறி
இடர்படு மடிமை யுளமுரை உடலொ
டெல்லைவி டப்ர பஞ்ச  மயல்தீர
எனதற நினது கழல்பெற மவுன
வெல்லைகு றிப்ப தொன்று  புகல்வாயே
வடமணி முலையும் அழகிய முகமும்
வள்ளைஎ னத்த யங்கும்  இருகாதும்
மரகத வடிவு மடலிடை எழுதி
வள்ளிபு னத்தில் நின்ற  மயில்வீரா
விடதர திகுண ரசசிதர் நிமலர்
வெள்ளிம லைச்ச யம்பு  குருநாதா
விகசித கமல பரிபுர முளரி
வெள்ளிக ரத்த மர்ந்த  பெருமாளே.
671. சிகரிக ளிடிய நடநவில் கலவி
செவ்வி மலர்க்க டம்பு  சிறுவாள்வேல்
திருமுக சமுக சததள முளரி
திவ்ய கரத்தி ணங்கு  பொருசேவல்
அகிலடி பறிய எறிதிரை யருவி
ஐவன வெற்பில் வஞ்சி  கணவாஎன்று
அகிலமு முணர மொழிதரு மொழியின்
அல்லது பொற்பதங்கள்  பெறலாமோ
நிகரிட அரிய சிவசுத பரம
நிர்வச னப்ர சங்க  குருநாதா
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
நெல்லி மரத்த மர்ந்த  அபிராம
வெகுமுக ககன நதிமதி யிதழி
வில்வ முடித்த நம்பர்  பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல
வெள்ளி கரத்த மர்ந்த  பெருமாளே.
672. குவலய மல்கு தவலிகள் முல்லை
குளிர்நகை சொல்லு  முதுபாகு
குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
குயமுலை கொள்ளை  விழைமேவிக்
கவலைசெய் வல்ல தவலரு முள்ள
கலவியில் தெள்ளு  கவிமாலை
கடிமல ரைய அணிவன செய்ய
கழலிணை பைய  அருள்வாயே
தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
தனியுழை புள்ளி  உடனாடித்
தருபுன வள்ளி மலைமற வள்ளி
தருதினை மெள்ள  நுகர்வோனே
அவநெறி சொல்லு மவரவை கொல்லும்
அழகிய வெள்ளி  நகர்வாழ்வே
அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல  பெருமாளே.
673. பொருவன கள்ள இருகயல் வள்ளை
புரிகுழை தள்ளி  விளையாடும்
புளகித வல்லி யிளகித வல்லி
புரியிள முல்லை  நகைமீதே
உருகிட வுள்ள விரகுடை யுள்ள
முலகுயி ருள்ள  பொழுதேநின்
றுமைதரு செல்வ னெனமிகு கல்வி
யுணர்வொடு சொல்ல  வுணராதோ
மருவலர் வள்ளி புரமுள வள்ளி
மலைமற வள்ளி  மணவாளா
வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை
மரகத நல்ல  மயில்வீரா
அருவரை விள்ள அயில்விடு மள்ள
அணிவயல் வெள்ளி  நகர்வாழ்வே
அடையலர் செல்வ மளறிடை செல்ல
அமர்செய வல்ல  பெருமாளே.
674. கள்ள முள்ள வல்ல வல்லி
கையி லள்ளி  பொருளீயக்
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
கல்வி செல்வர்  கிளைமாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
மல்லல் சொல்ல  முடியாதே
ஐய ரைய மெய்யர் மெய்ய
ஐய செய்ய  கழல்தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
வள்ளி கிள்ளை  மொழியாலே
மைய லெய்து மைய செய்யில்
வையில் வெள்வ  ளைகளேற
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
வெள்ள வெள்ளி  நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல  பெருமாளே.
675. தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
தொய்யு மைய  இடையாலும்
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல்
சொல்லு கள்ள  விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை
மல்கு நல்ல  குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும்
வல்லி சொல்லை  மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி
செல்வி கல்வ  ரையிலேனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு
செல்வ பிள்ளை  முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
வெள்ளை வெள்ளி  நகர்வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை
வெல்ல வல்ல  பெருமாளே.
676. இல்லையென நாணி யுள்ளதின்ம றாமல்
எள்ளினள வேனும்  பகிராரை
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
யெவ்வகையு நாமங்  கவியாகச்
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
தொல்லைமுத லேதென்  றுணரேனைத்
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாதுன்
துய்யகழ லாளுந்  திறமேதோ
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
மையவரை பாகம்  படமோது
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
வள்ளிமலை வாழுங்  கொடிகோவே
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
வெள்ளிலுட னீபம்  புனைவோனே
வெள்ளிமணி மாட மல்குதிகு வீதி
வெள்ளிநகர் மேவும்  பெருமாளே.
677. பையரவு போலு நொய்யஇடை மாதர்
பையவரு கோலந்  தனைநாடிப்
பையலென வோடி மையல்மிகு மோக
பவ்வமிசை வீழுந்  தனிநாயேன்
உய்யவொரு கால மையவுப தேச
முள்ளுருக நாடும்  படிபேசி
உள்ளதுமி லாது மல்லதவி ரோதம்
உல்லசவி நோதம்  தருவாயே
வையமுழு தாளு மையகும ரேச
வள்ளிபடர் கானம்  புடைசூழும்
வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
மையுததி ஏழும்  கனல்மூள
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
எல்லயில்வி நோதம்  புரிவோனே
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
வெள்ளிநகர் மேவும்  பெருமாளே.
678. வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
வாராய்பதி காதங் காதரை  யொன்றுமூரும்
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
மாலாய்மட லேறுங் காமுக  எம்பிரானே
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில்தின்று
லீலாசல மாடுந் தூயவன்  மைந்தநாளும்
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ளமெனக் கலந்து
நூறாயிர பேதஞ் சாதமொ  ழிந்தவாதான்
கதைகன சாபத கிரிவளை வாளொடு கைவசி வித்த நந்த
கோபாலம கீபன் தேவிம  கிழ்ந்துவாழக்
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப்பயந்து
ஆகாயக பாலம் பீறிநி  மிர்ந்துநீள
விதரணமாவலிவெருமகாவ்ருதவெள்ளவெளுக்கநின்ற
நாராயண மாமன் சேயைமு  னிந்தகோவே
விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
வேலாயுத மேவும் தேவர்கள்  தம்பிரானே.
திருவல்லம்  (திருவலம்)
679. நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
நடுநடு வேயென்  புறுகீலும்
நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
றுறநடை யாருங்  குடிலூடே
விசையுறு காலம் புலனெறி யேவெங்
கனலுயிர் வேடந்  திரியாதே
விழுமடி யார்முன் பழுதற வேள்கந்
தனுமென வோதும்  விறல்தாராய்
இசையுற வேயன் றசைவற ஓதும்
எழிலுறு வேழம்  எனையாளென்று
இடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்
இடமிமை யாமுன்  வருமாயன்
திசைமுக னாருந் திசைபுவி வானுந்
திரிதர வாழுஞ்  சிவன்மூதூர்
தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்
திருவல மேவும்  பெருமாளே.
வேலூர்
680. அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்
ரசனை காட்டிக ளீயார் கூடினும்
அகல வோட்டிகள் மாயா ரூபிகள்  நண்புபோலே
அசட ராக்கிகள் மார்மே லேபடு
முலைகள் காட்டிகள் கூசா தேவிழும்
அழகு காட்டிக ளாரோ டாகிலு  மன்புபோலே
சதிர தாய்த்திரி வோயா வேசிகள்
கருணை நோக்கமி லாமா பாவிகள்
தருமு பேட்சைசெய்தோஷாதோஷிகள்  நம்பொணாத
சரச வார்த்தையி னாலே வாதுசெய்
விரக மாக்கி விடாமூ தேவிகள்
தகைமை நீத்துன தாளே சேர்வதும்  எந்தநாளோ
மதுரை நாட்டினி லேவாழ் வாகிய
அருகர் வாக்கினி லேசார் வாகிய
வழுதி மேற்றிரு நீறே பூசிநி  மிர்ந்துகூனும்
மருவு மாற்றெதிர் வீறே டேறிட
அழகி போற்றிய மாறா லாகிய
மகிமை யாற்சமண் வேரோ டேகெட  வென்றகோவே
புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்
பகலி ராத்திரி யோயா ஆலைகள்
புரள மேற்செல வூரூர் பாயஅ  ணைந்துபோதும்
புகழி னாற்கடல் சூழ்பார் மீதினில்
அளகை போற்பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய  தம்பிரானே.
681. சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
சீர்வாழ்வு சிந்தை பொன்ற  முதல்நாடித்
தேன்மேவுசெஞ்சொலின்சொல் தானோதி வந்தணைந்து
தீராத துன்ப இன்பம்  உறுமாதர்
கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு
கூராமல் மங்கி யங்கம்  அழியாதே
கோள்கோடி பொன்றவென்று நாடோறு நின்றி யங்கு
கூர்வாய்மை கொண்டி றைஞ்ச  அருள்தாராய்
மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்
வாகோட ழிந்தொ டுங்க  முதல்நாடி
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த
மாசூரர் குன்ற வென்றி  மயிலேறி
மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க
வேலாலெ றிந்து குன்றை  மலைவோனே
வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு
வேலூர்வி ளங்க வந்த  பெருமாளே.
விரிஞ்சிபுரம்
682. ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்
டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட்  டதனாலே
ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்
டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்
டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச்  செயுமானார்
தருமயற் ப்ரமைதனில் தவநெறிக் கயலெனச்
சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்
தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத்  திரிவேனைச்
சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
தரணியிற்புகழ்பெறத்தகைமைபெற்றுனதுபொற்
சரணமெய் பொழுதுநட் பொடுநினைத் திடஅருள்  தருவாயே
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்
தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்
கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத்  திடும்வேலா
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ் சிலைநுதற்
சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப்  புணர்வோனே
கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்
பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்
கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத்  திடுவோனே
கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகத்
கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்
கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப்  பெருமாளே.
683. குலையமயி ரோதி குவியவிழி வீறு
குருகினிசை பாடி  முகமீதே
குறுவியர்வு லாவ அமுதினினி தான
குதலையுமொ ராறு  படவேதான்
பலவிதவி நோத முடனுபய பாத
பரிபுரமு மாட  அணைமீதே
பரிவுதரு மாசை விடமனமொ வாத
பதகனையு மாள  நினைவாயே
சிலைமலைய தான பரமர்தரு பால
சிகிபரிய தான  குமரேசா
திருமதுரை மேவு மமணர்குல மான
திருடர்கழு வேற  வருவோனே
கலின்வடிவ மான அகலிகைபெ ணான
கமலபத மாயன்  மருகோனே
கழனிநெடு வாளை கமுகொடிய மோது
கரபுரியில் வீறு  பெருமாளே.
684. நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
நெகிழ வந்து நேர்படு  மவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
நிருப அங்கு மாரவெ  ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
சமய பஞ்ச பாதகர்  அறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
சரண புண்ட ரீகம  தருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
மறுகி வெந்து வாய்விட  நெடுவான
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
மடிய இந்தி ராதியர்  குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
சிறுவ சந்த்ர சேகரர்  பெருவாழ்வே
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
திருவி ரிஞ்சை மேவிய  பெருமாளே.
685. பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட்  பரிவாலே
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
பசியில் வருமவர்க் கசன மொருபிடிப்  படையாதே
சருவி யினியநட் புறவு சொலிமுதற்
பழகு மவரெனப் பதறி அருகினிற்
சரச விதமளித் துரிய பொருள்பறித்  திடுமானார்
தமது ம்ருகமதக் களப புளகிதச்
சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
தழுவி யவசமுற் றுருகி மருளெனத்  திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத்  திடுதீரா
கமல அயனுமச் சுதனும் வருணனக்
கினியு நமனுமக் கரியி லுறையுமெய்க்
கணனு மமரரத் தனையு நிலைபெறப்  புரிவோனே
இரையு முததியிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத்  தமவேளே
இசையும் அருமறைப் பொருள்கள் தினமுரைத்
தவனி தனிலெழிற் கரும முனிவருக்
கினிய கரபுரப் பதியி லறுமுகப்  பெருமாளே.
686. மருவு மஞ்சுபூத முரிமை வந்தி டாது
மலமி தென்று போட  அறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
வகையில் வந்தி ராத  அடியேனும்
உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
உலக மென்று பேச  அறியாத
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
உபய துங்க பாதம்  அருள்வாயே
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
அடிப ணிந்து பேசி  கடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி  குருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
செரு அடங்க வேலை  விடுவோனே
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு  பெருமாளே.
திருவாலங்காடு
687. கனவாலங் கூர்விழி மாதர்கள்
மனசாலஞ் சால்பழி காரிகள்
கனபோகம் போருக மாமிணை  முலைமீதே
கசிவாருங் கீறுகி ளாலுறு
வசைகாணுங் காளிம வீணிகள்
களிகூறும் பேயமு தூணிடு  கசுமாலர்
மனவேலங் கீலக லாவிகள்
மயமாயங் கீதவி நோதிகள்
மருளாருங் காதலர் மேல்வீழு  மகளீர்வில்
மதிமாடம் வானிகழ் வார்மிசை
மகிழ்கூரும் பாழ்மன மாமுன
மலர்பேணும் தாளுன வேயருள்  அருளாயோ
தனதானந் தானன தானன
எனவேதங் கூறுசொல் மீறளி
ததைசேர்தண் பூமண மாலிகை  அணிமார்பா
தகரேறங் காரச மேவிய
குகவீரம் பாகும ராமிகு
தகைசாலன் பாரடி யார்மகிழ்  பெருவாழ்வே
தினமாமன் பாபுன மேவிய
தனிமானின் தோளுட னாடிய
தினைமாவின் பாவுயர் தேவர்கள்  தலைவாமா
திகழ்வேடங் காளியொ டாடிய
ஜெகதீசங் கேசந டேசுரர்
திருவாலங் காடினில் வீறிய  பெருமாளே.
688. பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
பொன்றானென் றாட்டம் பெருகிய  புவியூடே
பொங்காவெங் கூற்றம் பொதிதரு
சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரும் உயிர்கோல
நின்றானின் றேத்தும் படிநினை
வுந்தானும் போச்சென் றுயர்வற
நிந்தாகும் பேச்சென் பதுபட  நிகழாமுன்
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
விஞ்சாதென் பாற்சென் றகலிட
நின்தாள்தந் தாட்கொண் டருள்தர  நினைவாயே
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
கன்றாமுன் காத்துங் குவலயம்
உண்டார்கொண் டாட்டம் பெருகிய  மருகோனே
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
மின்தாள்சிந் தாச்சிந் தையில் மயல்
கொண்டேசென் றாட்கொண் டருளென  மொழிவோனே
அன்றாலங் காட்டண் டருமுய
நின்றாடும் கூத்தன் திருவருள்
அங்காகும் பாட்டின் பயனினை  அருள்வாழ்வே
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சாநெஞ் சாக்கந் தரவல  பெருமாளே.
689. புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
புதுமன மானும் பூட்டி  இடையூடே
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுந் காட்டி
புகல்வழி நாலைந் தாக்கி  வருகாயம்
பலவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
பசுபதி பாசங் காட்டி  லமாயப்
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
பரகதி தானும் காட்டி  அருள்வாயே
சிவமய ஞானங் கேட்க தவமுனி வோரும் பார்க்க
திருநட மாடுங் கூத்தர்  முருகோனே
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
ஜெகமொடு வானங் காக்க  மயிலேறிக்
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
குதர்வடி வேலங் கோட்டு  குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
குறமகள் பாதம் போற்று  பெருமாளே.
690. வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
வரவிடு தூதன் கோட்டி  விடுபாசம்
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
மதிகெட மாயந் தீட்டி  உயிர்போமுன்
படிமிசை தாளுங் காட்டி உடலுறு நோய்பண் டேற்ற
பழவினை பாவம் தீர்த்துன்  அடியேனைப்
பரிவொடு நாளும் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
பரபுகழ் பாடென் றாட்கொண்  டருள்வாயே
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
முதிர்நட மாடுங் கூத்தர்  புதல்வோனே
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கை  மயல்கூர்வாய்
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
எதிர்பொரு சூரன் தாக்க  வரஏகி
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
இமையவ ரேதந் தீர்த்த  பெருமாளே.
செய்யாறு (திருவோத்தூர்)
691. தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
தணியாச் சாகர மேழுங்  கிரியேழுஞ்
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
தரிகூத் தாடிய மாவுந்  தினைகாவல்
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொருதேனுந்
துணையாத் தாழ்வற வாழும்  பெரியோனே
துணையாய்க்காவல் செய்வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
தொலையாப் பாடலை யானும்  புகல்வேனோ
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார்மிசை வீழும்  படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங்  கழுவேறச்
சிவமாய்த் தேனமு தூறுந்திருவாக் காலொளிசேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ்  சிறியோனே
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும்  பெருமாளே.
திருநின்றவூர் அருகில் (பாக்கம்)
692. கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
காய்த்தொட்டொ ணாதவுரு  ஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு போய்க்கக்க மானவுடல்
காட்டத்தி னீளெரியி  லுறவானிற்
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
போத்துக்க மானகுறை  உடையேனைக்
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
கோக்கைக்கு நூலறிவு  தருவாயே
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
போய்த்திக்கெ லாமடிய  வடிவேலால்
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
போற்றிச்செய் வார்சிறையை  விடுவோனே
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
னாய்ப்பத்தி கூர்மொழிகள்  பகர்வாழ்வே
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
பாக்கத்தில் மேவவல  பெருமாளே.
693. பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
நோக்கிச் சுமந்து கொண்டு  பதிதோறும்
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
ஏக்கற்று நின்று நின்று  தளராதே
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
கீர்த்தித்து நின்ப தங்கள்  அடியேனும்
வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற
வீட்டிற் புகுந்தி ருந்து  மகிழ்வேனோ
மாற்றற்ற பொன்து லங்கு வாட்சக்கி ரந்தெ ரிந்து
வாய்ப்புற்ற மைந்த சங்கு  தடிசாப
மாற்பொற்க லந்து லங்க நாட்டச்சு தன்ப ணிந்து
வார்க்கைத்த லங்க ளென்று  திரைமோதும்
பாற்சொற்ற டம்பு குந்து வேற்கட்சி னம்பொ ருந்து
பாய்க்குட் டுயின்ற வன்றன்  மருகோனே
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த
பாக்கத் தமர்ந்தி ருந்த  பெருமாளே.
திருவேற்காடு
694. ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
மாளம்போர் செயுமாய  விழியாலே
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரஆர
ஆடம் பார் குவி நேய  முலையாலே
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடிஆய
வேளங்கார் துடிநீப  இடையாலே
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
காலந்தா னொழிவேது  உரையாயோ
பாலம் பால்மணநாறு காலங்கே யிறிலாத
மாதம்பா தருசேய  வயலூரா
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
பாசந்தா திருமாலின்  மருகோனே
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
வீறங்கே யிருபாலு  முறவீறு
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
வேலங்கா டுறைசீல  பெருமாளே.
695. கார்ச்சார்குழ லார்விழி யாரயி
லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள்  மயலாலே
காழ்க்காதல தாமன மேமிக
வார்க்காமுக னாயுறு சாதக
மாப்பாதக னாமடி யேனைநி  னருளாலே
பார்ப்பாயலை யோவடி யாரொடு
சேர்ப்பாயலை யோவுன தாரருள்
கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு  குமரேசா
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
நீர்ப்பாரினில் மீறிய கீரரை
யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ  லருள்வாயே
வார்ப்பேரரு ளேபொழி காரண
நேர்ப்பாவச காரண மாமத
ஏற்பாடிக ளேயழி வேயுற  அறைகோப
வாக்காசிவ மாமத மேமிக
ஊக்காதிப யோகம தேயுறும்
ஆத்தாசிவ பாலகு காவடி  யர்கள்வாழ்வே
வேற்காடவல் வேடர்கள் மாமக
ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
வேற்காடுறை வேதபு ரீசுரர்  தருசேயே
வேட்டார்மக வான்மக ளானவள்
ஏட்டார்திரு மாமண வாபொனி
னாட்டார்பெரு வாழ்வென வேவரு  பெருமாளே.
வடதிருமுல்லைவாயில்
696. அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
தனநிவ்வி யேகரை யேறிட
அறிவில்லி யாமடி யேனிட  ரதுதீர
அருள்வல்லை யோநெடு நாளின
மிருளில்லி லேயிடு மோவுன
தருளில்லை யோஇன மானவை  அறியேனே
குணவில்ல தாமக மேரினை
யணிசெல்வி யாயரு ணாசல
குருவல்ல மாதவ மேபெறு  குணசாத
குடிலில்ல மேதரு நாளெது
மொழிநல்ல யோகவ ரேபணி
குணவல்ல வாசிவ னேசிவ  குருநாதா
பணிகொள்ளி மாகண பூதமொ
டமர்கள்ளி கானக நாடக
பரமெல்லி யார்பர மேஸ்வரி  தருகோவே
படரல்லி மாமலர் பாணம
துடைவில்லி மாமத னாரனை
பரிசெல்வி யார்மரு காசுர  முருகேசா
மணமொல்லை யாகி நகாகன
தனவல்லி மோகன மோடமர்
மகிழ்தில்லை மாநட மாடினர்  அருள்பாலா
மருமல்லி மாவன நீடிய
பொழில்மெல்லி காவன மாடமை
வடமுல்லை வாயிலின் மேவிய  பெருமாளே.
697. சோதி மாமதி போல்முக முங்கிளர்
மேரு லாவிய மாமுலை யுங்கொடு
தூர வேவரு மாடவர் தங்கள்முன்  எதிராயே
சோலி பேசிமு னாளிலி ணங்கிய
மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
சூதி னால்வர வேமனை கொண்டவர்  உடன்மேவி
மோதி யேகனி வாயத ரந்தரு
நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
மோன மாயவ மேசில சண்டக  ளுடனேசி
மோச மேதரு தோதக வம்பியர்
மீதி லேமய லாகிம னந்தளர்
மோட னாகிய பாதக னுங்கதி  பெறுவேனோ
ஆதி யேயெனும் வானவர் தம்பகை
யான சூரனை மோதிய ரும்பொடி
யாக வேமயி லேறிமு னிந்திடு  நெடுவேலா
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
லேறி யேயுறி மீதளை யுங்கள
வாக வேகொடு போதநு கர்ந்தவன்  மருகோனே
வாதி னால்வரு காளியை வென்றிடு
மாதி நாயகர் வீறுத யங்குகை
வாரி ராசனு மேபணி யுந்திரு  நடபாதர்
வாச மாமல ரோனொடு செந்திரு
மார்பில் வீறிய மாயவ னும்பணி
மாசி லாமணி ஈசர்ம கிழ்ந்தருள்  பெருமாளே.
698. மின்னிடைக லாப தொங்கலொ
டன்னமயில் நாண விஞ்சிய
மெல்லியர்கு ழாமி சைந்தொரு  தெருமீதே
மெள்ளவுமு லாவி யிங்கித
சொல்குயில்கு லாவி நண்பொடு
வில்லியல்பு ரூர கண்கணை  தொடுமோக
கன்னியர்கள் போலி தம்பெறு
மின்னணிக லார கொங்கையர்
கண்ணியில்வி ழாம லன்பொடு  பதஞான
கண்ணியிலு ளாக சுந்தர
பொன்னியல்ப தார முங்கொடு
கண்ணுறுவ ராம லின்பமொடு  எனையாள்வாய்
சென்னியிலு டாடி ளம்பிறை
வன்னியும ராவு கொன்றையர்
செம்மணிகு லாவு மெந்தையர்  குருநாதா
செம்முகஇ ராவ ணன்தலை
விண்ணுறவில் வாளி யுந்தொடு
தெய்விகபொ னாழி வண்கையன்  மருகோனே
துன்னியெதிர் சூரர் மங்கிட
சண்முகம தாகி வன்கிரி
துள்ளிடவெ லாயு தந்தனை  விடுவோனே
சொல்லுமுனி வோர்த வம்புரி
முல்லைவட வாயில் வந்தருள்
துல்யபர ஞான வும்பர்கள்  பெருமாளே.
பாடி (திருவலிதாயம்)
699. மருமல்லி யார்குழலின்  மடமாதர்
மருளுள்ளி நாயடிய  அலையாமல்
இருநல்ல வாகுமுனன்  துடிபேண
இனவல்ல மானமன  அருளாயோ
கருநெல்லி மேனியரி  மருகோனே
கனவள்ளி யார்கணவ  முருகேசா
திருவல்லி தாயமதில்  உறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள்  பெருமாளே.
திருவொற்றியூர்-சென்னை
700. கரியமுகில் போலு மிருளளக பார
கயல்பொருத வேலின்  விழிமாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர
களபமுலை தோய  அணையூடே
விரகமது வான மதனகலை யோது
வெறியனென நாளு  முலகோர்கள்
விதரணம தான வகைநகைகள் கூறி
விடுவதன்முன் ஞான  அருள்தாராய்
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
அவர்கள்புக ழோத  புவிமீதே
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
அமரர்குல நேச  குமரேசா
சிரகர கபாலர் அரிவையொரு பாகர்
திகழ்கனக மேனி யுடையாளர்
திருவளரு மாதி புரியதனில் மேவு
ஜெயமுருக தேவர்  பெருமாளே.
701. சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
சுகவிப்பிர தேசரச  சுபமாயா
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
தொகைவிக்ரம மாதர்வயி  றிடையூறு
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
களையெத்திடி ராகவகை  யதின்மீறிக்
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
கதிபெற்றிட ரானவையை  யொழிவேனோ
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
பிடிகைத்தல ஆதியரி  மருகோனே
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
குணமுட்டர வாவசுரர்  குலகாலா
திருவெற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
யருகுற்றிடு மாதிசிவ  னருள்பாலா
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
ளிதயத்திட மேமருவு  பெருமாளே.
மயிலாப்பூர் (திருமயிலை)
702. அமரு மமரரினி லதிக னயனுமரி
யவரும் வெருவவரு  மதிகாளம்
அதனை யதகரண விதன பரிபுரண
மமைய னவர்கரண  அகிலேச
நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
நிமிர சமிரமய  நியமாய
நிமிட மதனிலுண வலசி வசுதவர
நினது பதவிதர  வருவாயே
சமர சமரசுர அசுர விதரபர
சரத விரதஅயில்  விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
தரர ரரரரிரி  தகுர்தாத
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
மிமைய மகள்குமர  எமதீச
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
மெமது பரகுரவ  பெருமாளே.
703. அயிலொத் தெழுமிரு  விழியாலே
அமுதொத் திடுமரு  மொழியாலே
சயிலத் தெழுதுணை  முலையாலே
தடையுற் றடியனு  மடிவேனோ
கயிலைப் பதியரன்  முருகோனே
கடலக் கரைதிரை  யருகேசூழ்
மயிலைப் பதிதனி  லுறைவோனே
மகிமைக் கடியவர்  பெருமாளே.
704. அறமி லாவதி பாதக வஞ்சத்  தொழிலாலே
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற்  றிளையாதே
திறல்கு லாவிய சேவடி வந்தித்  தருள்கூடத்
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத்  தருவாயே
விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப்  பொரும்வேலா
விமல மாதபி ராமித ருஞ்செய்ப்  புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற்  புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப்  பெருமாளே.
705. இகல வருதிரை பெருகிய சலநிதி
நிலவு முலகினி லிகமுறு பிறவியி
னினிமை பெறவரு மிடருறு மிருவினை  யதுதீர
இசையு முனதிரு பதமலர் தனைமன
மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி  உமைபாகர்
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
மடமை குறைகிலி மதியுணர் வறிகலி
வசன மறவுறு மவுனமொ டுறைகிலி  மடமாதர்
மயம தடரிட இடருறு மடியனு
மினிமை தருமுன தடியவ ருடனுற
மருவஅருள்தரு கிருபையின்மலிகுவ  தொருநாளே
சிகர தனகிரி குறமக ளினிதுற
சிலத நலமுறு சிலபல வசனமு
திறைய அறைபயி லறுமுக நிறைதரு  மருணீத
சிரண புரணவி தரணவி சிரவண
சரணு சரவண பவகுக சயனொளி
திரவ பரவதி சிரமறை முடிவுறு  பொருணீத
அகர உகரதி மகரதி சிகரதி
யகர அருளதி தெருளதி வலவல
அரணமுரணுறு மசுரர்கள்கெடஅயில்  விடுவோனே
அழகு மிலகிய புலமையு மகிமையும்
வளமு முறைதிரு மயிலையி லநுதின
மமரு மரகர சிவசுத அடியவர்  பெருமாளே.
706. இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
இருகுழையின் மீத டர்ந்து  அமராடி
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
இருநயனர் வாரி ணங்கு  மதிபாரப்
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
பருவரதி போல வந்த  விலைமானார்
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
படுகுழியி லேம யங்கி  விழலாமோ
கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
கலபமயில் மேலு கந்த  குமரேசா
கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாகவிண்டு
கதறிவிழ வேலெ றிந்த  முருகோனே
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
மலையவிலி னாய கன்றன்  ஒருபாக
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
மயிலைநகர் வாழ வந்த  பெருமாளே.
707. களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
கலகமத வேள்தொ டுத்த  கணையாலும்
கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேசவுற்ற
கனலெனவு லாவு வட்ட  மதியாலும்
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
வனிதைமடல் நாடி நித்த  நலியாதே
வரியளிவு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
மலரணையில் நீய ணைக்க  வரவேணும்
துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
துயிலதர னாத ரித்த  மருகோனே
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகதக லாப பச்சை  மயில்வீரா
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீளழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற  குமரேசா
அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
அமரர்பதி வாழ வைத்த  பெருமாளே.
708. கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
கலக மேசெய் பாழ்மூடர் வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
கனவி கார மேபேசி  நெறிபேணாக்
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
குடிலின் மேவி யேநாளு  மடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
குவளை வாகும் நேர்காண  வருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
பணமு மாட வேநீடு  வரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
பதிய தாக வேலேவு  மயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
வனச வாவி பூவோடை  வயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
மயிலை மேவி வாழ்தேவர்  பெருமாளே.
709. திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
திரிவே னுனையோதுதல்  திகழாமே
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
சுதனே திரிதேவர்கள்  தலைவாமால்
வரைமா துமையாள்தரு மணியே குகனேயென
அறையா வடியேனுமு  னடியாராய்
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
மகநா ளுளதோசொல  அருள்வாயே
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
மிழிவா கிமுனேயிய  லிலராகி
இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
இடரே செயவேயவ  ரிடர்தீர
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
மதமா மிகுசூரனை  மடிவாக
வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
மயிலா புரிமேவிய  பெருமாளே.
710. நிரைதரு மணியணி யார்ந்த பூரித
ம்ருகமத களபகில் சாந்து சேரிய
இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல  ரணைமீதே
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை
யொடுபொர இருகர மேந்து நீள்வளை  யொலிகூர
விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக  வியனாடும்
வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது  மொருநாளே
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை  சதகோடி
பகவதி யிருசுட ரேந்து காரணி
மலைமகள் கவுரியி தார்ந்த மோகினி
படர்சடை யவனிட நீங்கு றாதவள்  தருகோவே
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு  முருகோனே
குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
மயிலையி லுறைதரு சேந்த சேவக
குகசர வணபவ வாய்ந்த தேவர்கள்  பெருமாளே.
711. வருமயி லொத்தவ ரீவார் மாமுக
மதியென வைத்தவர் தாவா காமிகள்
வரிசையின் முற்றிய வாகா ராமியல்  மடமாதர்
மயிலினி லுற்றவர் மோகா வாரிதி
யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
தருவிய லுத்தர்கள் மாடா மாமதி  மிகமூழ்கி
தருபர வுத்தம வேளே சீருறை
அறுமுக நற்றவ லீலா கூருடை
அயிலுறை கைத்தல சீலா பூரண  பரயோக
சரவண வெற்றிவி நோதா மாமணி
தருமர வைக்கடி நீதா வாமணி
மயிலுறை வித்தவு னாதா ராமணி  பெறுவேனோ
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி  தொதிதீதோ
தெனவரி மத்தள மீதார் தேமுழ
திடுவென மிக்கியல் வேதா வேதொழு
திருநட மிட்டவர் காதே மூடிய  குருபோதம்
உரைசெயு முத்தம வீரா நாரணி
உமையவ ளுத்தர பூர்வா காரணி
உறுஜக ரக்ஷணி நீரா வாரணி  தருசேயே
உயர்வர முற்றிய கோவே யாரண
மறைமுடி வித்தக தேவே காரண
ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள்  பெருமாளே.
திருவான்மியூர்
712. குசமாகி யாருமலை மாரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறு  குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
குழல்கார தானகுண  மிலிமாதர்
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
புலையேனு லாவிமிகு  புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமல  ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
நிகழ்போத மானபர  முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
நிபுணாநி சாசரர்கள்  குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
சிவநாத ராலமயில்  அமுதேசர்
திகழ்பால மாகமுற மணியாளி மாடமுயர்
திருவான்மி யூர்மருவு  பெருமாளே.
கோயம்பேடு (கோசை நகர்)
713. ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன  கலைலீலை
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய  னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை  நலமாக
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள  வருவாயே
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில  பரமேசர்
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர்  குலகாலா
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமற வீறிவரு  குமரேசா
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர்  பெருமாளே.
பெருங்குடி
714. தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
தழைந்தவு தரந்திகழ்  தசமாதஞ்
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
தவழ்ந்தனர் நடந்தனர்  சிலகாலந்
துலங்கு நலபெண்களை முயங்கினர் மயங்கினர்
தொடுந்தொழி லுடன்தம  க்ரகபாரஞ்
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
சுடும்பினை யெனும்பவ  மொழியேனோ
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
ளிலெங்கணு மிலங்கென  முறையோதி
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
எழுந்தருள் முகுந்தனன்  மருகோனே
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
ப்ரசண்டக ரதண்டமிழ்  வயலூரா
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
பெருங்குடி மருங்குறை  பெருமாளே.
மாடம்பாக்கம்-சென்னை வண்டலூர் அருகில்
715. தோடு றுங்குழை யாலே கோல்வளை
சூடு செங்கைக ளாலே யாழ்தரு
கீத மென்குர லாலே தூமணி  நகையாலே
தூம மென்குழ லாலே யூறிய
தேனி லங்கித ழாலே யாலவி
லோச னங்களி னாலே சோபித  அழகாலே
பாட கம்புனை தாளா லேமிக
வீசு தண்பனி நீரா லேவளர்
பார கொங்கைக ளாலே கோலிய  விலைமாதர்
பாவ கங்களி னாலே யான்மயல்
மூழ்கி நின்றய ராதே நூபுர
பாத பங்கய மீதே யாள்வது  கருதாயோ
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
வாக மங்களி னானா பேதவ
நாத தந்த்ரக லாமா போதக  வடிவாகி
நால்வி தந்தரு வேதா வேதமு
நாடி நின்றதொர் மாயா தீதம
னோல யந்தரு நாதா ஆறிரு  புயவேளே
வாட யங்கிய வேலா லேபொரு
சூர்த டிந்தருள் வீரா மாமயி
லேறு கந்தவி நோதா கூறென  அரனார்முன்
வாச கம்பிற வாதோர் ஞானசு
கோத யம்புகல் வாசா தேசிக
மாடை யம்பதி வாழ்வே தேவர்கள்  பெருமாளே.
716. விலைய றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா  யுதிரநீ ருடனே
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
மெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
யுடன்கொண் டன்பு டன்போய்  சயனபா யலின்மேல்
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
முனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர்  புதியபே ரூடனே
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுற
நினைத்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறி
விலன்பொங் கும்பெ ரும்பா  தகனையா ளுவையோ
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட
மனந்தந் தந்த ணந்தா
மரைமலர்ப்பிர மனைந டுத்தலை
யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங் கங்கி ருந்தா  ளருளுமா முருகா
செருவி டத்தல கைகள் தெனத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ யென  இரா வணனீள்
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு
மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே  மயிலின்மேல் வருவாய்
வயல்க ளிற்கய லினமி குத்தெழு
வரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர்  இளைய நாயகனே.
வல்லக்கோட்டை (கோடை நகர்)
717. ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று  புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி நின்று  விளையாடிப்
பூதல மெலாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று  பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு  தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன்  மருகோனே
தேவர்முனி வோர்கள் கொண்டல்மாலரிபிர் மாவுநின்று
தேடஅரி தான வன்றன்  முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த  குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த  பெருமாளே.
718. சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
சாமளவ தாக வந்து  புவிமீதே
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
தாரணியி லேத வழ்ந்து  விளையாடிப்
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
பாரதன மீத ணைந்து  பொருள்தேடிப்
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
பாதமலர் சேர அன்பு  தருவாயே
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
ஆடரவு பூணர் தந்த  முருகோனே
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
ஆதிமுதல் நார ணன்றன்  மருகோனே
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்மடந்தை
கோவையமு தூற லுண்ட  குமரேசா
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெ றிந்த
கோடை நகர் வாழ வந்த  பெருமாளே.
719. ஏறா னாலே நீறாய் மாயா
வேளே வாசக்  கணையாலே
ஏயா வேயா மாயா வேயா
லாமே ழோசைத்  தொளையாலே
மாறா யூறா யீறாய் மாலாய்
வாடா மானைக்  கழியாதே
வாராய் பாராய் சேரா யானால்
வாடா நீபத்  தொடைதாராய்
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
சீரார் தோகைக்  குமரேசா
தேவா சாவா மூவா நாதா
தீரா கோடைப்  பதியோனே
வேறாய் மாறா யாறா மாசூர்
வேர்போய் வீழப்  பொருதோனே
வேதா போதா வேலா பாலா
வீரா வீரப்  பெருமாளே.
720. ஞால மெங்கும் வளைத்த ரற்று
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும்  வசையாலே
ஆல முந்து மதித்த ழற்கும்  அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க  வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த  ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு  மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த  முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்த  பெருமாளே.
721. தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
சூழ்விர தங்கள்கடிந்த குண்டர்கள்  பெரியோரைத்
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்க
ளீவது கண்டுத கைந்த குண்டர்கள்
சூளுறவென்பதொ ழிந்த குண்டர்கள்  தொலையாமல்
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
மானவ கந்தைமி குந்த குண்டர்கள்  வலையாலே
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி  விழுவாரே
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
வாலியு மம்பர மும்ப ரம்பரை
ராவண னுஞ்சது ரங்க லங்கையு  மடைவேமுன்
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
ராம சரந்தொடு புங்க வன்திரு  மருகோனே
கோழி சிலம்பந லம்ப யின்றக
லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல  வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
கோடை யெனும்பதி வந்த இந்திரர்  பெருமாளே.
722. தோடப் பாமற் றோய்தப் பாணிச்
சூழ்துற் றார்துற்  றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்
சூலப் பாசச்  சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
பாழ்பட் டேபட்  டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
பாதத் தேவைத்  தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
தாரச் சீறிப்  பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
காரத் தாரைத்  தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
கூடப் பாடித்  திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்
கோடைத் தேவப்  பெருமாளே.
723. வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
வாய்மைப்ர காச மென்று  நிலையாக
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
வாயுப்பி ராண னொன்று மடைமாறி
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு  முயிர்போக
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
லோகத்தில் மாய்வ தென்று  மொழியாதோ
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
மேலிட்ட சூர்த டிந்த  கதிர்வேலா
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
வேடிச்சி காலி லன்று  விழுவோனே
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
கூளப்பு ராரி தந்த  சிறியோனே
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
கோடைக்குள் வாழ வந்த  பெருமாளே.
திருப்போரூர்
724. அனுத்தே னேர்மொழி யாலே மாமய
லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
லடுத்தே தூதுகள் நூறா றானதும்  விடுவார்கள்
அழைத்தே வீடினி லேதா னேகுவர்
நகைத்தே மோடிக ளாவார் காதலொ
டடுத்தே மாமுலை மீதே மார்புற  அணைவார்பின்
குனித்தே பாகிலை யீவார் பாதியில்
கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
குடிப்பார் தேனென நானா லீலைகள்  புரிவார்கள்
குறித்தே மாமய லாலே நீள்பொருள்
பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக
குணத்தார் மாதர்கள் மேலா சாவிட  அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும்  விறல்வீரா
மலர்த்தே னேடையி லோர்மா வானதை
பிடித்தே நீள்கர வாதா டாழியை
மனத்தா லேவிய மாமா லானவர்  மருகோனே
சினத்தே சூரர்கள் போராய் மாளவு
மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
திருத்தோ ளாஇரு பாதா தாமரை  முருகோனே
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
திருப்போ ரூருறை தேவா தேவர்கள்  பெருமாளே.
725. உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
உகப்பார் வால சந்த்ர  னுதனூலாம்
உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோளோதி கொண்ட
லுவப்பா மேல்வி ழுந்து  திரிவோர்கள்
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
வலைக்கேபூணு நெஞ்ச  னதிபாவி
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
அவத்தா லீன மின்றி  யருள்வாயே
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
யினைச்சூ டாதி நம்பர்  புதல்வோனே
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
லிருப்பா யானை தங்கு  மணிமார்பா
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
திறற்சேர் வேல்கை கொண்ட  முருகோனே
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
திருப்போ ரூர மர்ந்த  பெருமாளே.
726. சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க  லாமதி  முகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி  குமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி  னருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழவி னாமிக  அருள்வாயே
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
காவல் மாதினொ டாவல்செய்  தணைவோனே
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர  முருகோனே
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
பூப சேவக மாமயில்  மிசையோனே
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய  பெருமாளே.
727. திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரிய  திரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன்  மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணி  தருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவா மாமக ளாசைகொள்  மணியேசம்
பமர பாரப்ர  பாருண தாரக மாசுக
பசுர பாடன பாளித  பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவல  பரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில்  முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவிய  பெருமாளே.
உத்திரமேரூர்
728. சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முனிவோர்கள்
துகளி லிருடி யெழுபேர்கள்  சுடர்முவர்
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
தொலைவி லுடுவி னுலகோர்கள்  மறையோர்கள்
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
அரியு மயனு மொருகோடி  யிவர்கூடி
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
அறிவு ளறியு மறிவூற  அருள்வாயே
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
மகர சலதி அளறாக  முதுசூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
மவுலி சிதறி இரைதேடி  வருநாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
நமனும் வெருவி யடிபேண  மயிலேறி
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
நகரி யுறையு மிமையோர்கள்  பெருமாளே.
729. தோலெ லும்பு சிந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
சோரி பிண்ட மாயு ருண்டு  வடிவான
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
சோரு மிந்த நோய கன்று  துயராற
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
னார ணங்க ளாக மங்கள்  புகழ்தாளும்
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளுமங்கை
யாடல் வென்றி வேலு மென்று  நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
வாணி பஞ்ச பாணி தந்த  முருகோனே
மாயை யைந்து வேக மைந்து பூதமைந்து நாதமைந்து
வாழ்பெ ருஞ்ச ராச ரங்க  ளுறைவோனே
வேலை யன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச  அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
மேரு மங்கை யாள வந்த  பெருமாளே.
730. நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
நேசமுற் றடியேனு  நெறிகேடாய்
நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
நீதியிற் சிவவாழ்வை  நினையாதே
பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
பாடலுற் றிடவேசெய்  திடுமோச
பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
பார்வைசற் றருளோடு  பணியாயோ
ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
மாகமப் பொருளோரு  மனைவோரும்
ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
மாயிரத் திருநூறு  மறையோரும்
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
வாகுசித் திரதோகை  மயிலேறி
மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
மான்மகட் குளனான  பெருமாளே.
731. மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
வாச மென்குழ லிற்சே லைப்பொரும்  விழிவேலில்
மாமை யொன்றும் லர்த்தாள் வைப்பினில்
வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில்  மயலாகி
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
ஆகி நின்றுத வித்தே நித்தலும்  அலைவேனோ
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
ஆயி ரங்கலை கத்தா மத்திப
னாயு ழன்றலை கிற்பே னுக்கருள்  புரிவாயே
சாத னங்கொடு தத்தா மெத்தென
வேந டந்துபொய் பித்தா வுத்தர
மேதெ னும்படி தற்காய் நிற்பவர்  சபையூடே
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
நீதி தந்திர நற்சார் புற்றருள்
சால நின்றுச மர்த்தா வெற்றிகொ  ளரன்வாழ்வே
வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
வேள்வி யும்படி யிற்றா பித்தருள்
வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ்  மறையோர்வாழ்
மேரு மங்கையி லத்தா வித்தக
வேலொ டும்படை குத்தா வொற்றிய
வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள்  பெருமாளே.
மதுராந்தகம்
732. குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
கிந்த்ரி யக்கு ரம்பை  வினைகூர்தூர்
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
கொண்டி ளைத்த யர்ந்து  சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
கிண்கி ணிச்ச தங்கை  விதகீத
உபயாம்பு யப்ப ணையையி னிப்பற்
றுங்க ருத்தை யென்று  தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளையடற்சக்
ரந்த ரித்த கொண்டல்  மருகோனே
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
பைம்பு னக்க ரும்பின்  மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
மந்த னிற்பி றந்த  குமரேசா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த  பெருமாளே.
733. சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
கங்கொ டுத்த கம்பர்  வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
கங்கை வைத்த நம்பர்  உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
த்வம்பெ றப்ப கர்ந்த  வுபதேசஞ்
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
றுங்கு ருத்து வங்கு  றையுமோதான்
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
கன்ற னைப்பி ளந்து  சுரர்வாழ
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
றுந்தி றற்ப்ர சண்ட  முழநீல
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
குன்றி டித்த சங்க்ர  மவிநோதா
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
றம்ப லத்த மர்ந்த  பெருமாளே.
734. மனைமாண்சுத ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு  வம்பராதி
மயமாம்பல வான கணங்குல
மெனப்ராந்தியும் யானென தென்றுறு
வனவாம்பிர மாத குணங்குறி  யின்பசார
இனவாம்பரி தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன  வும்பரேசா
இடவார்ந்தன சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடமாங்கன தாளரு ளும்படி  யென்றுதானோ
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில்  எம்பிரானார்
தமதாஞ்சுத் தாபர சங்கம்
மெனவோம்புறு தாவன வம்படர்
தகுதாம்பிர சேவித ரஞ்சித  வும்பர்வாழ்வே
முனவாம்பத மூடிக வந்தன
முயல்வான்பிடி மாடிமை யைங்கரர்
முகதாம்பின மேவுறு சம்ப்ரம  சங்கணாறு
முககாம்பிர மோடமர் சம்பன
மதுராந்தக மாநக ரந்திகழ்
முருகாந்திர மோடம ரும்பர்கள்  தம்பிரானே.
செய்யூர் (சேயூர்-மதுராந்தகம் அருகில்)
735. முகிலாமெனும் வார்குழ லார்சிலை
புருவார்கயல் வேல்விழி யார்சசி
முகவார்தர ளாமென வேநகை  புரிமாதர்
முலைமாலிணை கோபுர மாமென
வடமாடிட வேகொடி நூலிடை
முதுபாளித சேலைகு லாவிய  மயில்போல்வார்
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
அழகார்ழ லார்தர வேய்தரு
அழகார்கன நூபுர மாடிட  நடைமேவி
அனமாமென யாரையு மால்கொள
விழியால்சுழ லாவிடு பாவையர்
அவர்பாயலி லேயடி யேனுட  லழிவேனோ
ககனார்பதி யோர்முறை கோவென
இருள்காரசு ரார்படை தூள்பட
கடலேழ்கிரி நாகமு நூறிட  விடும்வேலா
கமலாலய நாயகி வானவர்
தொழுமீசுர னாரிட மேவிய
கருணாகர ஞானப ராபரை  யருள்பாலா
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
குடனாடநி லாமயில் கோகில
மகிழ்நாடுறை மால்வளி நாயகி  மணவாளா
மதிமாமுக வாவடி யேனிரு
வினைதூள்பட வேயயி லேவிய
வளவாபுரி வாழ்மயில் வாகன  பெருமாளே.
திருவக்கரை
736. கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி  துரையாதே
கருவழி தத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை  யிடைவீழா
உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி  யடிநாயேன்
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத  மருள்வாயே
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு  மயில்வீரா
குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர்  மணிமார்பா
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை  யுறைவோனே
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள்  பெருமாளே.
737. பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட  நினைவோர்கள்
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை  யிதழுறல்
எச்சில ளிப்பவர் கச்சணி மெத்தையில்
இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு  மடமாதர்
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத  மருள்வாயே
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
ணைக்கடல் பத்மம் லர்த்திரு வைப்புணர்
நத்துத ரித்தக ரத்தர்தி ருத்துள  வணிமார்பர்
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
நட்டர வப்பணி சுற்றிம தித்துள
நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர்  மருகோனே
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
றத்தித னக்கும னப்ரிய முற்றிடு  குமரேசா
கொத்தவிழ் பத்மம் லர்ப்பழ னத்தொடு
குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை  பெருமாளே.
சிறுவாபுரி-சென்னை (சிறுவை)
738. அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற  அருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு  மகிழ்வாக
மண்டலமு முனிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு  மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி  வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள  வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு  வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய  முருகேசா
சந்தகமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு  பெருமாளே.
739. சீதள வாரிஜ பாதாந மோநம
நாரத கீதவி நோதாந மோநம
சேவல மாமயில் ப்ரீதாந மோநம  மறைதேடும்
சேகர மானப்ர தாபாந மோநம
ஆகம சாரசொ ரூபாந மோநம
தேவர்கள் சேனைம கீபாந மோநம  கதிதோயப்
பாதக நீவுகு டாராந மோநம
மாவசு ரேசக டோராந மோநம
பாரினி லேஜய வீராந மோநம  மலைமாது
பார்வதி யாள்தரு பாலாந மோநம
நாவல ஞானம னோலாந மோநம
பாலகு மாரசு வாமீந மோநம  அருள்தாராய்
போதக மாமுக னேரான சோதர
நீறணி வேணியர் நேயாப்ர பாகர
பூமக ளார்மரு கேசாம கோததி  யிகல்சூரா
போதக மாமறை ஞானாத யாகர
தேனவிழ் நீபந றாவாரு மார்பக
பூரண மாமதி போலாறு மாமுக  முருகேசா
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
மாநில மேழினு மேலான நாயக  வடிவேலா
வானவ ரூரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர்  பெருமாளே.
740. பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று  தடுமாறிப்
பெருகுதீய வினையினொந்துகதிகடோறுமலைபொருந்தி
பிடிப டாத ஜனன நம்பி  யழியாதே
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை  யகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவைதனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று  பெறுவேனோ
பொறிவ ழாத முனிவர் தங்கள் நெறிவழாதபிலனுழன்று
பொருநி சாச ரனைநி னைந்து  வினைநாடிப்
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த  முருகோனே
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து  சமராடிச்
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த  பெருமாளே.
741. வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
காத லின்பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டுள நாடிய ரூமைகள்  விலைகூறி
வேளை யென்பதி லாவசை பேசியர்
வேசி யென்பவ ராமிசை மோகிகள்
மீது நெஞ்சழி யாசையி லேயுழல்  சிறியேனும்
மால யன்பர னாரிமை யோர்முனி 
வோர் புரந்தர னாதிய ரேதொழ
மாத வம்பெறு தாளிணை யேதின  மறவாதே
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
யேவி ரும்பிவி னாவுட னேதொழ
வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர்  களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி  யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பெ ருஞ்சடை யாரருள் தேசிக  முருகேச
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
மாநி லங்களெ லாநிலை யேதரு
ஆய னந்திரு வூரக மால்திரு
ஆட கம்பயில் கோபுர மாமதி
லால யம்பல வீதியு மேநிறை
வான தென்சிறு வாபுரி மேவிய  பெருமாளே.
திருவாமாத்தூர்
742. அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு  மதவேழத்
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி  னழகாலும்
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
துணிவு னூடு மாதர்கள்  துணையாகத்
தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்
துலையலை மாறு போலுயிர்  சுழல்வேனோ
அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
மடிதொழு தாடு மாண்மையு  முடையோனே
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை
அறிவுட னோது மாதவர்  பெருவாழ்வே
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
யுகநெடி தோட மேலணை  பவர்மூதூர்
விரைசெறி தோகை மாதர்கள் விரகுடனாடு மாதையில்
விறல்மயில் மீது மேவிய  பெருமாளே.
743. கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது
நன்க மைக்கின மாமாமென  முகையான
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற
விஞ்ச மைப்பொரு கார்கோதைகொ  டுயர்காலன்
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள்
மன்பி டிப்பது போல்நீள்வடி  வுடைமாதர்
பின்பொ ழித்திடு மாமாயைபி லன்பு வைத்தழி யாதேயுறு
கிஞ்சி லத்தனை தாள்பேணிட  அருள்தாராய்
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு
விண்டு வித்தகன் வீழ்தாளினர்  விடையேறி
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர்
வெங்க யத்துரி யார்போர்வையார்  மிகுவாழ்வே
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல
முங்கி ளைத்திட வானீள்திசை  யொடுதாவித்
தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை
சண்ட விக்ரம வேலேவிய  பெருமாளே.
744. கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
கனியமு தூறித் தேறிய  மொழிமாதர்
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
கனதன பாரக் காரிகள்  செயலோடே
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
பொருளள வாசைப் பாடிகள்  புவிமீதே
பொதுவிகள் போகப்பாவிகள் வசமழி வேனுக்கோரருள்
புரிவது தானெப் போதது  புகல்வாயே
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
சமனிலை யேறப் பாறொடு  கொடிவீழத்
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
தசையுண வேல்விட்  டேவிய  தனிவீரா
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள்முத் தார்நகை
அழகுடை யாள்மெய்ப் பாலுமை  யருள்பாலா
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
அழகர்தென் மாதைக் கேயுறை  பெருமாளே.
745. கால முகிலென நினைவுகொ டுருவிலி
காதி யமர்பொரு கணையென வடுவகிர்
காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு  கயலாலும்
கான மமர்குழ லரிவையர் சிலுகொடு
காசி னளவொரு தலையணு மனதினர்
காம மிவர்சிலை கபடிகள் படிறுசொல்  கலையாலும்
சால மயல்கொடு புளகித கனதன
பார முறவண முருகவிழ் மலரணை
சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும்  அடியேனைச்
சாதி குலமுறு படியினின் முழுகிய
தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்
தாள தடைவது தவமிக நினைவது  தருவாயே
வேலை தனில்விழி துயில்பவ னரவணை
வேயி னிசையது நிரைதனி லருள்பவன்
வீர துரகத நரபதி வனிதையர்  கரமீதே  கரமீதே
வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
வேடை கெடவமு தருளிய பொழுதினில்
வீசு கயிறுட னடிபடு சிறியவ  னதிகோப
வாலி யுடனெழு மரமற நிசிசரன்
வாகு முடியொரு பதுகர மிருபது
மாள வொருசரம் விடுமொரு கரியவன்  மருகோனே
வாச முறுமலர் விசிறிய பரிமள
மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக
வானி லடியவ ரிடர்கெட அருளிய  பெருமாளே.
ஆண்டார்குப்பம் (தச்சூர்)
746. அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க
ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து  உறவாடி
அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க
வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து
அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி  ரிலையாசை
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க
ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்
மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க  ளதனாலே
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து
வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து  திரிவேனோ
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி  நிலையாயே
எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த
முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி
யெக்காலு மக்காத சூர்க்கொத் தரிந்த  சினவேலா
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து
சக்காகி யப்பேடை யாட்குப் புகுந்து
தப்பாம லிப்பூர்வ மேற்குத் தரங்கள்
தெற்காகு மிப்பாரில் கீர்த்திக் கிசைந்த
தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த  பெருமாளே.
திருக்கோவிலூர் (திருக்கோவலூர்)
747. பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
பாவை யாரிள நீரன  முலையாலும்
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
பார காரன வார்குழ  லதனாலும்
சாவ தார விதாரமு தார்த ராவித ழாலித
சாத மூரலி தாமதி  முகமாலும்
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
சார மாயதி லேயுற  லொழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
யாதி காணரி தாகிய  பரமேச
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
னாதி தேவர்க ளியாவர்கள்  பணிபாத
கோவ தாமறை யோர்மறை யோது மோதம் விழாவொலி
கோடி யாகம மாவொலி  மிகவீறும்
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
கோதை யானையி னோடமர்  பெருமாளே.
அறகண்ட நல்லூர் (தேவனூர்)
748. ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
ஆறு மாறு மஞ்சு மஞ்சும்  அறுநாலும்
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
ஆர ணாக மங்க டந்த  கலையான
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
யேது வேறி யம்ப லின்றி  யொருதானாய்
யாவு மாய்ம னங்கடந்த மோன வீட டைந்தொருங்கி
யான வாவ டங்க என்று  பெறுவேனோ
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல்வெ குண்ட சண்ட  விததாரை
வாகை வேல கொன்றைதும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
வால சோம னஞ்சு பொங்கு  பகுவாய
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசி காக டம்ப லங்கல்  புனைவோனே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த  பெருமாளே.
749. தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
சாதி பூத ரங்கு லுங்க  முதுமீனச்
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
தாரை வேல்தொ டுங்க டம்ப  மததாரை
ஆர  வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
மானை யாளு நின்ற குன்ற  மறமானும்
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று  புகழ்வேனோ
பாரமார்தழும்பர்செம்பொன் மேனியாளர்கங்கை வெண்க
பால மாலை கொன்றை தும்பை  சிறுதாளி
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
பானல் கூவி ளங்க ரந்தை  அறுகோடே
சேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த
சீத ளார விந்த வஞ்சி  பெருவாழ்வே
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
தேவ னூர்வி ளங்க வந்த  பெருமாளே.
750. காணொ ணாதது உருவோ டருவது
பேசொ ணாதது உரையே தருவது
காணு நான்மறை முடிவாய் நிறைவது  பஞ்சபூதக்
காய பாசம தனிலே யுறைவது
மாய மாயுட லறியா வகையது காய
மானவ ரெதிரே யவரென  வந்து பேசிப்
பேணொ ணாதது வெளியே யொளியது
மாய னாரய னறியா வகையது
பேத பேதமொ டுலகாய் வளர்வது  விந்துநாதப்
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
தீத மானது வினையேன் முடிதவ
பேறு மாயருள் நிறைவாய் விளைவது  ஒன்றுநீயே
வீணொ ணாதென அமையா தசுரரை
நூறி யேயுயிர் நமனீ கொளுவென
வேல்க டாவிய கரனே யுமைமுலை  யுண்டகோவே
வேத நான்முக மறையோ னொடும்விளை
யாடி யேகுடு மியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர்கு  றிஞ்சியூடே
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
சேர நாடிய திருடா வருடரு  கந்தவேளே
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
ஞான யோகிக ளுளமே யுறைதரு
தேவ னூர்வரு குமரா வமரர்கள்  தம்பிரானே
திருவதிகை
751. பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
பவளநிறத் ததரம்விளைத்  தமுதூறல்
பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
படைமதனக் கலையடவிப்  பொதுமாதர்
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
துகிலகலக் க்ருபைவிளைவித்  துருகாமுன்
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
சுழலுமனக் கவலையொழித்  தருள்வாயே
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
கணைதொடுமச் சுதன்மருகக்  குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
கவிநிறையப் பெறும்வரிசைப்  புலவோனே
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
செறியும்வயற் கதிரலையத்  திரைமோதித்
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
திருவதிகைப் பதிமுருகப்  பெருமாளே.
752. விடமும் வேலன மலரன விழிகளு
மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
விரகி னாலெழு மிருதன வகைகளு  மிதமாடி
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
வினையு மாவியு முடனிரு வலையிடை
வெளியி லேபட விசிறிய விஷமிக  ளுடன்மேவா
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
இனிமை போலெழு பிறவியெ னுவரியி
னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி  லிழியாதே
இசையி னாடொறு மிமையவர் முனிவர்கள்
ககன பூபதி யிடர்கெட அருளிய
இறைநினாறிரு புயமென வுரைசெய  அருள்வாயே
படரு மார்பினி லிருபது புயமதொ
டரிய மாமணி முடியொளி ரொருபது
படியி லேவிழ வொருகணை தொடுபவ  ரிடமாராய்
பரவை யூடெரி பகழியை விடுபவர்
பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ 
பரவு பால்கட லரவணை துயில்பவர்  மருகோனே
அடர வேவரு மசுரர்கள் குருதியை
அரக ராவென அலகைகள் பலியுண
அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு  மயில்வீரா
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
அதிகை மாநகர் மருவிய சசிமகள்  பெருமாளே.
திருவாமூர்
753. சீத மதிய மெறிக்குந்  தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ்  சிலையாலே
ஓத மருவி யலைக்குங்  கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும்  படியோதான்
மாது புகழை வளர்க்குந்  திருவாமூர்
வாழு மயிலி லிருக்குங்  குமரேசா
காத லடியர் கருத்தின்  பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும்  பெருமாளே.
திருவாண்டார் கோயில்-புதுச்சேரி (வடுகூர்)
754. அரியய னறியா தவரெரி புரமூ
ணதுபுக நகையே  வியநாதர்
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
றழலையு மழுநேர்  பிடிநாதர்
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
கமும்விழ விழியே  வியநாதர்
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
மலரடி தொழுமா  றருள்வாயே
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
அவனியை வலமாய்  வருவோனே
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
அயில்தனை விசையாய்  விடுவோனே
வரிசையொ டொருமா தினைதரு வனமே
மருவியொர் குறமா  தணைவேடா
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
வருதவ முனிவோர்  பெருமாளே.
திருத்தளூர்-கடலூர் (திருத்துறையூர்)
755. ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
யாழ்வைத்திசை கூரக்குழ  லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
யாசப்படு வார்பொட்டணி  சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதி  ரொளிசேரும்
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
கோபச்செய லார்பித்தர்க  ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி  சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள்  குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள்  விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய  பெருமாளே.
756. வெகுமாய விதத்துரு வாகிய
திறமேபழ கப்படு சாதக
விதமேழ்கட லிற்பெரி தாமதில்  சுழலாகி
வினையான கருக்குழி யாமெனு
மடையாள முளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கவொ ணாதெனு  முதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை
கயிறாலு மிறுக்கிம காகட
சலதாரை வெளிக்கிடை யேசெல  வுருவாகிச்
சதிகாரர் விடக்கதி லேதிரள்
புழுவாக நெளித்தெரி யேபெறு
மெழுகாக வுருக்கு முபாதிகள்  தவிர்வேனோ
உககால நெருப்பதி லேபுகை
யெழவேகு முறைப்படு பாவனை
யுறவே குகை யிற்புட மாய்விட  வெளியாகி
உலவாநர குக்கிரை யாமவர்
பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
உளமாழ்கி மிகக்குழை வாகவு  முறவாடித்
தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையே பணியத் தருவாய்பரி  மயில்வேலா
துதிமாதவர் சித்தர்ம கேசுரர்
அரிமால்பிர மர்க்கருள் கூர்தரு
துறையூர்நக ரிற்குடி யாய்வரு  பெருமாளே.
திருநாவலூர்
757. கோலமறை யொத்த மாலைதனி லுற்ற
கோரமதன் விட்ட  கணையாலே
கோதிலத் ருக்கள் மேவுபொழி லுற்ற
கோகிலமி குத்த  குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
ஆரழலி றைக்கு  நிலவாலே
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
மாசைகொட ணைக்க  வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
நாரணனு மெச்சு  மருகோனே
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
நாகமற விட்ட  மயில்வீரா
சேலெனும்வி ழிச்சி வேடுவர்சி றுக்கி
சீரணித னத்தி லணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
தேவர்சிறை விட்ட  பெருமாளே.
திருவெண்ணெய்நல்லூர்
758.பலபல தத்துவ மதனை யெரித்திருள்
பரையர ணப்படர் வடவன லுக்கிரை
படநட னச்சுடர் பெருவெளி யிற்கொள  விடமேவிப்
பவன மொழித்திரு வழியை யடைத்தொரு
பருதி வழிப்பட விடல்கக னத்தொடு
பவுரி கொளச்சிவ மயமென முற்றிய  பரமூடே
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
வொலிமலி யத்திரு நடன மியற்றிய
கனக சபைக்குளி லுருகி நிறைக்கட  லதில்மூழ்கிக்
கவுரி மினற்சடை யரனொடு நித்தமொ
டனக சகத்துவம் வருதலு மிப்படி
கழிய நலக்கினி நிறமென விற்றுட  லருள்வாயே
புலையர் பொடித்தளும் அமண ருடற்களை
நிரையில் கழுக்களி லுறவிடு சித்திர
புலவனெ னச்சில விருது படைத்திடு  மிளையோனே
புனமலை யிற்குற மகளய லுற்றொரு
கிழவ னெனச்சுனை தனிலவ ளைப்புய
புளகித முற்றிபம் வரவணை யப்புணர்  மணிமார்பா
மலைசிலை பற்றிய கடவு ளிடத்துறை
கிழவி யறச்சுக குமரி தகப்பனை
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள்  முருகோனே
மகிழ்பெணை யிற்கரை பொழிமுகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின் மிசைக்கொடு திருநட மிட்டுறை  பெருமாளே.
திருப்பாதிரிப்புலியூர்-கடலூர்
759. நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு நோய்படு  முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ  முயவோரும்
உணர்விலி செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி
உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை  வழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
அறுமுக மொளிவிட வந்து நான்மறை
யுபநிட மதனை விளங்க நீயருள்  புரிவாயே
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொரு  பதுமாறிப்
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறுசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி விண்டு மால்திரு  மருகோனே
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
குலகிரி யடைய இடிந்து தூளெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு  முருகோனே
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர்  பெருமாளே.
திருமாணிகுழி
760. மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
மணத்த வார்குழல் மாமாத ராரிரு  கொங்கைமூழ்கி
மதித்த பூதர மாமாம னோலயர்
செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
வடித்த தேன்மொழி வாயூற லேநுகர்  பண்டநாயேன்
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
படைக்குள் மேவிய சீராவொ டேகலை
பணைத்த தோள்களொ டீராறு தோடுகள்  தங்குகாதும்
பணிக்க லாபமும் வேலோடு சேவலும்
வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
படைத்த வாகையு நாடாது பாழில்ம  யங்கலாமோ
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
கலக்கி யூர்பதி தீமூள வேவிடும்  வஞ்சவேலா
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
கடித்த பூதமொ டேபாடி யாடுதல்  கண்டவீரா
குதித்து வானர மேலேறு தாறுகள்
குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
குலைக்கு மேல்விழ வேரேறு போகமும்   வஞ்சிதோயுங்
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு  தம்பிரானே.
திருவேட்களம்-சிதம்பரம்
761. சதுரத்தரை நோக்கிய பூவொடு
கதிரொத்திட ஆக்கிய கோளகை
தழையச்சிவ பாக்கிய நாடக  அநுபூதி
சரணக்கழல் காட்டியெ னாணவ
மலமற்றிட வாட்டிய ஆறிரு
சயிலக்குல மீட்டிய தோளொடு  முகமாறும்
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
மயிலிற்புற நோக்கிய னாமென
கருணைக்கடல் காட்டிய கோலமும்  அடியேனைக்
கனகத்தினு நோக்கினி தாயடி
யவர்முத்தமி ழாற்புக வேபர
கதிபெற்றிட நோக்கிய பார்வையு  மறவேனே
சிதறத்தரை நாற்றிசை பூதர
நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
சிதறக்கட லார்ப்புற வேயயில்  விடுவோனே
சிவபத்தினி கூற்றினை மோதிய
பதசத்தினி மூத்தவி நாயகி
செகமிப்படி தோற்றிய பார்வதி  யருள்பாலா
விதுரற்கும ராக்கொடி யானையும்
விகடத்துற வாக்கிய மாதவன்
விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன்  மருகோனே
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
விறல்மெய்த்திரு வேட்கள மேவிய  பெருமாளே.
762. மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
வாழ்க்கையை நீடென  மதியாமல்
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
மாப்பரி வேயெய்தி  அநுபோக
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
பாற்படு ஆடக  மதுதேடப்
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி 
பாற்கட லானென  வுழல்வேனோ
சாத்திர மாறையு நீத்தம னோலய
சாத்தியர் மேவிய  பதவேளே
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
தாட்பர னார்தரு  குமரேசா
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
மீக்கமு தாமயில்  மணவாளா
வேத்தம தாமறை யார்த்திடு சீர்தரு
வேட்கள மேவிய  பெருமாளே.
சிவபுரி (திருநெல்வாயில்)
763.  அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள்  புனையாதர்
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள்  தெரியாத
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த  தமிழ்கூறி
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி  யருள்வாயே
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து  களிகூர
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி  யிடர்கூர
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த  வடிவேலா
மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
மதியு லாவிய மாடமேற் படிந்த
வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த  பெருமாளே.
விருத்தாசலம்
764. குடத்தாமரை யாமென வேயிரு
தனத்தார்மதி வாணுத லாரிருள்
குழற்காடின மாமுகில் போல்முது  கலைமோதக்
குலக்கார்மயி லாமென வேகயல்
விழித்தார்கர மேல்கொடு மாமுலை
குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் குரலோசை
படித்தார்மயி லாமென வேநடை
நெளித்தார்பல காமுகர் வார்கலை
பழிப்பாரவ ராசையை மேல்கொடு  விலைமாதர்
படிக்கார்மின லாமென வேநகை
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
பறிப்பார்பழி காரிகள் நாரிக   ளுறவாமோ
அடைத்தார்கட லோர்வலி ராவண
குலத்தோடரி யோர்சர னார்சின
மழித்தார்முகி லேய்நிற ராகவர்  மருகோனே
அறுத்தாரய னார்தலை யேபுர
மெரித்தாரதி லேபுல னாருயி
ரளித்தாருடல் பாதியி லேயுமை  அருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரற
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை  மிடிதீர
விழித்தாமரை போலழ காகுற
மகட்கானவ ணாஎன தாயுறை
விருத்தாசலம் வாழ்மயில் வாகன  பெருமாளே.
765. திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய  குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட  விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை   யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு  மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென  முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு  முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை  முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு  பெருமாளே.
766. பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி
பறியக்கை சொறியப்பல்  வெளியாகிப்
படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க
பழமுற்று நரைகொக்கி  னிறமாகி
விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு
மெலிவுற்று விரல்பற்று  தடியோடே
வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை
விடுவித்து னருள்வைப்ப  தொருநாளே
அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி
னடல்வஜ்ர கரன்மற்று  முளவானோர்
அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்
அதுலச்ச மரவெற்றி  யுடையோனே
வசையற்று முடிவுற்று வளர்பற்றி னளவற்ற
வடிவுற்ற முகில்கிட்ணன்  மருகோனே
மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்
வளர்விர்த்த கிரியுற்ற  பெருமாளே.
வேப்பூர்-வடஆற்காடு
767. குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து
கூத்தாடு கின்ற  குடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலை யின்றி  யவிரோதம்
வரஇரு வினையற உணர்வொடு தூங்கு
வார்க்கே விளங்கு  மநுபூதி
வடிவினை யுனதழ கியதிரு வார்ந்த
வாக்கால்மொ ழிந்த  ருளவேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன்  மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர  புரிவாழ
விரிதிரை யெரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த  புவியேழும்
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர மர்ந்த  பெருமாளே.
நிம்பபுரம்-வடஆற்காடு
768.  அஞ்சுவித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாது  மறியாத
அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு  பெறுமாறு
மஞ்சுதவழ் சார லஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி  வனமீது
வந்தசர ணார விந்தமது பாட
வண்டமிழ்வி நோத  மருள்வாயே
குஞ்சரக லாப வஞ்சியபி ராம
குங்குமப டீர  வதிரேகக்
கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற  இகல்கோப
வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை  விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர்  பெருமாளே.
வேப்பஞ்சந்தி-வடஆற்காடு
769. நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற்  படியாதே
நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப்  பதமீவாய்
வாட்டங் கண்டுற் றண்டத் தமரப்  படைமீதே
மாற்றந் தந்துப் பந்திச் சமருக்  கெதிரானோர்
கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப்  பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத்  தொளிர்வேலா
வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக்  கிளையோனே
வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப்  பெருமாளே.
திருக்கூடலையாற்றூர்-கடலூர்
770. வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
மூட்டியுலைக் காய்ந்தமழு வாமெனவி காசமொடு
மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு  விஞ்சையாலே
வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு
வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ்  வன்புகூரத்
தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
பூட்டிவிடப் போந்துபிணி யோடுவலி வாதமென
சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன தன்பிலாமல்
தேட்டமுறத் தேர்ந்துமமிர் தாமெனவே யேகிநம
னோட்டிவிடக் காய்ந்துவரி வேதனடை யாளமருள்
சீட்டுவரக்  காண்டுநலி காலனணு காநினரு  ளன்புதாராய்
வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
நாட்டவரைச் சேந்தகதிர் வேல்கொடம ராடிசிறை
மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் விஞ்சையோனே
வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடிவைகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதையர
மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட  முங்கொளாயி
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமெனப் போந்தஅழ கானசிவ காமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள்  கந்தவேளே
கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ்
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையோடே
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர  தம்பிரானே.
மேலக்கடம்பூர்-கடலூர் (கடம்பூர்)
771. வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண
மால்கடந் தேபோமெ  னியலூடே
வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார
வாசகம் போல்கூறி  யணைமீதே
சேருமுன் காசாடை வாவியும் போதாமை
தீமைகொண் டேபோமெ  னடமாதர்
சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார  மருள்வாயே
நாரணன் சீராம கேசவன் கூராழி
நாயகன் பூவாயன்  மருகோனே
நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு
நாடகஞ் சேய்தாள  ரருள்பாலா
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட
சூரியன் தேரோட  அயிலேவி
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு
சூழ்கடம் பூர்தேவர்  பெருமாளே.
திருவரத்துறை
772. கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
கவிசொ லிச்சிரித்  துறவாடிக்
களவு வித்தையிட் டுளமு ருக்கிமுற்
கருதி வைத்தவைப்  பவைசேரத்
தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
தழுவி நெக்குநெக்  குயிர்சோரக்
சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
தருணி கட்ககப்  படலாமோ
பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
பிரம சிற்சுகக்  கடல்மூழ்கும்
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
ப்ரபல கொச்சையிற்  சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
சிவிகை யைக்கொடுத்  தருளீசன்
செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
திருவ ரத்துறைப்  பெருமாளே.
எருக்கத்தம்புலியூர் (யாழ்ப்பாணாயன்பட்டினம்)
773. பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன்  விடுதூதும்
போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயங் கற்றமை விழியின  ரமுதூறல்
வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத  மகிலாரம்
மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட  அருளாயோ
ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி  புவநேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம துறைபவன்  பெறுசேயே
ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு  முருகோனே
ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய  பெருமாளே.
ஸ்ரீ முஷ்ணம் (ஸ்ரீமுஷ்டம்)
774. கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை  மலைமேவும்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை  யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
னடைவொத்து லாவ  அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
மடிமைக்கு ழாமொ  டருள்வாயே
மழையொத்த சோதி குயில்தத்தை போலு
மழலைச்சொ லாயி  யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனு  முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
திருமுத்தி மாதின்  மணவாளா
சிறையிட்டசூரர் தளைவெட்டி ஞான
திருமுட்ட மேவு  பெருமாளே.
775. சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை  மடவார்கள்
சனுமெத் தப்பரி வாகிய மாமய
லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
ததுதத் தக்கிட தோதகு தீதென  விளையாடும்
விரகத் துர்க்குண வேசைய ராசையர்
பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள்  அதிபோக
மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள்  உறவாமோ
பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
லெரபட் டுச்சரு காய்விழ வேநகை
புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட  மொருமாது
புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
புவனத் தைப்பரி வாய்முத லீனுமை  யருள்பாலா
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
சிவபத் தர்க்கிது வாமென வேபகி  ரரிராமர்
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
மகளைப் பொற்றன வாசையொ டாடிய
திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர்  பெருமாளே.
ஆச்சாள்புரம்-நாகை மாவட்டம் (திருநல்லூர்)
776. மூல முண்டகனு பூதி மந்திரப
ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
தார சந்திமுக மாறு மிந்த்ரதரு  வுந்தளாமேல்
மூது ரம்பலவர் பீட மந்தமுமி
லாத பந்தவொளி யாயி ரங்கிரண
மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக  விந்துநாதம்
ஓல மென்றுபல தாள சந்தமிடு
சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி  ரங்கிசூலம்
ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி  சந்தியாதோ
சூலி யந்தரிக பாலி சங்கரிபு
ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
வாமி பங்கிசிவ காம சுந்தரியு  கந்தசேயே
சூர சங்கரகு மார இந்திரச
காய அன்பருக கார சுந்தரகு
காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட  னங்கொள்வேலா
சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக  கந்தவேளே
தேவ ரம்பையமு தீண மங்கைதரு
மான ணைந்தபுய தீர சங்கரதி
யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர்  தம்பிரானே.
மகேந்திரப்பள்ளி (திருமயேந்திரம்)
777. வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை  குயில்போல
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை  மடவார்பொன்
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
கண்சுழ லும்படி தாண்டி யாடிகள்  சதிகாரர்
கஞ்சுளி யுந்தடி யூந்து போவென
நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு  முழல்வேனோ
அண்டரு டன்தவ சேந்து மாதவர்
புண்டரி கன்திரு பாங்கர் கோவென
அஞ்சலெ னும்படி போந்து வீரமொ  டசுராரை
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
அந்தக னுங்கயி றாங்கை வீசிட  விடும்வேலா
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
யென்பணி யன்கன சாம்பல் பூசிய
செஞ்சட லன்சுத சேந்த வேலவ  முருகோனே
திங்கள்மு கந்தன சாந்து மார்பின
ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய  பெருமாளே.
சீர்காழி (சீகாழி )
778. அலைகடல் சிலைமதன் அந்தி யூதையும்
அரிவையர் வசையுட னங்கி போல்வர
அசைவன விடைமணி யன்றில் கோகிலம்  அஞ்சிநானும்
அழலிடு மெழுகென வெம்பி வேர்வெழ
அகிலொடு ம்ருகமத நஞ்சு போலுற
அணிபணிமணிபலவெந்துநீறெழ  அங்கம்வேறாய்
முலைகனல் சொரிவர முன்பு போல்நினை
வழிவச மறஅறநின்று சோர்வுற
முழுதுகொள் விரகனல்மொண்டுவீசிட  மங்கிடாதே
முருகவிழ் திரள்புய முந்து வேலணி
முளரியொ டழகிய தொங்கல் தாரினை
முனிவற நினதருள் தந்தென் மாலைமு  னிந்திடாதோ
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள்  சிங்கமேறி
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட
சிவனுட னடம்வரு மங்கைமாதுமை  தந்தவேளே
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மலரடி வருடியெ நின்று நாடொறு
மயில்பயில்குயில்கிளிவம்பிலேகடி  தொண்டினோனே
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள்  தம்பிரானே.
779. இரத மான தேனூற லதர மான மாமாத
ரெதிரி லாத பூணார  முலைமீதே
இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
விழியி னாலு மாலாகி  யநுராக
விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
ம்ருகம தாதி சேரோதி  நிழல்மூழ்கி
விளையு மோக மாமாயை கழலு மாறு நாயேனும்
விழல னாய்வி டாதேநி  னருள்தாராய்
அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
அடிகள் பூசி யாமூடர்  கரையேற
அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
அறம்வி சாரி யாமூடர்  நரகேழிற்
புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
புரண பூர ணாகார  முருகோனே
புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
புகலி மேவி வாழ்தேவர்  பெருமாளே.
780. ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாயமிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை  மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஓடித்தடு மாறி யுழன்று  தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து  புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்களகன்று
கோலக்கழ லேபெற இன்று  அருள்வாயே
சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச்சம ணோர்கழு வின்கண்  மிசையேறத்
தீரத்திரு நீறுபுரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
தீமைப்பிணி தீர வுவந்த  குருநாதா
கானச்சிறு மானைநி னைந்து ஏனற்புன மீதுந டந்து
காதற்கிளி யோடுமொ ழிந்து  சிலைவேடர்
காணக்கணியாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து
காழிப்பதி மேவி யுகந்த  பெருமாளே.
781. ஒய்யா ரச்சிலை யாமென வாசனை
மெய்யா ரப்பணி பூஷண மாலைக
ளுய்யா நற்கலை யேகொடு மாமத  விதமாகி
ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு
கையா ரக்கணை மோதிர மேய்பல
வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு  முடல்பேணிச்
செய்வா ரிப்படி யேபல வாணிப
மிய்யா ரிற்பண மேயொரு காசிடை
செய்யார் சற்பனை காரர்பி சாசரு  னடிபேணாச்
செய்வா ரிற்படு நானொரு பாதகன்
மெய்யா எப்படி யோர்கரை சேர்வது
செய்யாயற்புத மேபெற வோர்பொரு  ளருள்வாயே
மையா ரக்கிரி யேபொடி யாய்விட
பொய்சூ ரப்பதி யேகெட வானவர்
வையாய் பொற்சர ணாஎன வேதொழ  விடும்வேலா
வையா ளிப்பரி வாகன மாகொளு
துவ்வா ழிக்கட லேழ்மலை தூளிசெய்
மைபோ லக்கதி ரேய்நிற மாகிய  மயில்வாழ்வே
தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்
செய்யா முத்தமி ழாகர னேபுகழ்
தெய்வீ கப்பர மாகுரு வேயென  விருதூதத்
திய்யா ரக்கழு வேறிட நீறிடு
கையா அற்புத னேபிர மாபுர
செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர்  பெருமாளே.
782. கட்கா மக்ரோ தத்தே கட்சீ
மிழ்த்தோர் கட்குக்  கவிபாடிக்
கச்சா பிச்சா கத்தா வித்தா
ரத்தே யக்கொட்  களைநீளக்
கொட்கா லக்கோ லக்கோ ணத்தே
யிட்டா சைப்பட்  டிடவேவை
கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
னித்தீ தத்தைக்  களைவாயே
வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
விக்கா னத்தைத்  தரிமாறன்
வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
புக்காய் வெற்பிற்  குறமானை
முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
முற்சார் செச்சைப்  புயவீரா
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப்  பெருமாளே.
783. கொங்கு லாவிய குழலினு நிழலினு
நஞ்ச ளாவிய விழியினு மிரணிய
குன்று போல்வளர் முலையினு நிலையினு  மடமாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினு
மன்பு கூர்வன மொழியினு மெழில்குடி
கொண்ட சேயித ழமுதினு நகையினு  மனதாய
சங்கை யாளியை அணுவிடை பிளவள
வின்சொல் வாசக மொழிவன இவையில
சம்ப்ர தாயனை அவலனை ஒளிதிக  ழிசைகூருந்
தண்டை நூபுர மணுகிய இருகழல்
கண்டு நாளவ மிகையற விழியருள்
தந்த பேரருள் கனவிலு நனவிலு  மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர்
துங்க மாமுடி பொடிபட வடவனல்
மங்கி நீறெழ அலகைகள் நடமிட  மயிலேறி
வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய
சண்பை மாநக ருறையுமொ ரறுமுக
வந்த வானவர் மனதினி லிடர்கெட  நினைவோனே
பங்க வீரியர் பறிதலை விரகினர்
மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர்
பந்த மேவிய பகடிகள் கபடிகள்  நிலைகேடர்
பண்பி லாதவர் கொலைசெயு மனதின
ரிங்கெ ணாயிர ருயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய  பெருமாளே.
784. சந்த னம்பரி மளபுழு கொடுபுனை
கொங்கை வஞ்சியர் சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர் அனமென வருநடை  மடமாதர்
சந்த தம்பொலி வழகுள வடிவினர்
வஞ்ச கம்பொதி மனதின ரணுகினர்
தங்கள் நெஞ்சக மகிழ்வுற நிதிதர  அவர்மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள் தரணியி லணைபவர்
செம்பொ னிங்கினி யிலையெனில் மிகுதியு  முனிவாகித்
திங்க ளொன்றினில் நெனல்பொரு ளுதவில
னென்று சண்டைகள் புரிதரு மயலியர்
சிங்கி யுங்கொடு மிடிமையு மகலநி  னருள்கூர்வாய்
மந்த ரங்குடை யெனநிரை யுறுதுயர்
சிந்த அன்றடர் மழைதனி லுதவிய
மஞ்செ னும்படி வடிவுறு மரிபுகழ்  மருகோனே
மங்கை யம்பிகை மகிழ்சர வணபவ
துங்க வெங்கய முகன்மகிழ் துணைவநல்
வஞ்சி தண்குற மகள்பத மலர்பணி  மணவாளா
தந்த னந்தன தனதன தனவென
வண்டு விண்டிசை முரல்தரு மணமலர்
தங்கு சண்பக முகிலள வுயர்தரு  பொழில்மீதே
சங்கு நன்குமிழ் தரளமு மெழில்பெறு
துங்க வொண்பணி மணிகளும் வெயில்விடு
சண்பை யம்பதி மருவிய அமரர்கள்  பெருமாளே.
785. சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்ற வரும்பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய  தமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ்  தனிவேலும்
விருது துலங்க சிகண்டியி லண்டரு
முருகி வணங்க வரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை  புனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல்  மறவேனே
கருதியி லங்கை யழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ னிந்துவி ளங்கிவ ரும்படி  விடுமாயன்
கடகரி யஞ்சி நடுங்கிவ ருந்திடு
மடுவினில் வந்துத வும்பய லிந்திரை
கணவன ரங்கமு குந்தன்வ ருஞ்சக  டறமோதி
மருதுகு லுங்கி நலங்கமு னிந்திடு
வரதன லங்கல் புனைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை  தொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
மன்தினி லும்பரி வொன்றிய மர்ந்தருள்  பெருமாளே.
786. சிந்துற்றெழு மாமதி அங்கித்  திரளாலே
தென்றற்றரு வாசமி குந்துற்  றெழலாலே
அந்திப்பொழு தாகிய கங்குற்  றிரளாலே
அன்புற்றெழு பேதைம யங்கித்  தனியானாள்
நந்துற்றிடு வாரியை மங்கத்  திகழாயே
நஞ்சொத்தொளிர் வேலினை யுந்திப்  பொருவேளே
சந்தக்கவி நூலினர் தஞ்சொற்  கினியோனே
சண்பைப்பதி மேவிய கந்தப்  பெருமாளே.
787. செக்கர்வா னப்பிறைக் கிக்குமா ரற்கலத்
தெற்கிலூ தைக்கனற்  றணியாத
சித்ரவீ ணைக்கலர்ப் பெற்றதா யர்க்கவச்
சித்தம்வா டிக்கனக்  கவிபாடிக்
கைக்கபோ லக்கிரிப் பொற்கொள்ரா சிக்கொடைக்
கற்பதா ருச்செகத்  த்ரயபாநு
கற்றபேர் வைப்பெனச் செத்தையோ கத்தினர்க்
கைக்குணான் வெட்கிநிற்  பதுபாராய்
சக்ரபா ணிக்குமப் பத்மயோ னிக்குநித்
தப்ரதா பர்க்குமெட் டரிதாய
தத்வவே தத்தினுற் பத்திபோ தித்தஅத்
தத்வரூ பக்கிரிப்   புரைசாடிக்
கொக்கிலே புக்கொளித் திட்டசூர் பொட்டெழக்
குத்துரா வுத்தபொற்  குமரோனே
கொற்றவா வுற்பலச் செச்சைமா லைப்புயக்
கொச்சைவாழ் முத்தமிழ்ப்  பெருமாளே.
788. தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி  கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட  இருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி  யரசாகி
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி  விடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க  ளருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய  வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடு  பெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர்  பெருமாளே.
789. பூமாதுர மேயணி மான்மறை
வாய்நாலுடை யோன்மலி வானவர்
கோமான்முநி வோர்முதல் யாருமி  யம்புவேதம்
பூராயம தாய்மொழி நூல்களும்
ஆராய்வதி லாதட லாசுரர்
போரால்மறை வாயுறு பீதியின்  வந்துகூடி
நீமாறரு ளாயென ஈசனை
பாமாலைக ளால்தொழு தேதிரு
நீறார்தரு மேனிய தேனியல்  கொன்றையோடு
நீரேர்தரு சானவி மாமதி
காகோதர மாதுளை கூவிளை
நேரோடம்வி ளாமுத லார்சடை  யெம்பிரானே
போமாறினி வேறெது வோதென
வேயாரரு ளாலவ ரீதரு
போர்வேலவ நீலக லாவியி  வர்ந்துநிடு
பூலோகமொ டேயறு லோகமு
நேரோர்நொடி யேவரு வோய்சுர
சேனாபதி யாயவ னேயுனை  யன்பினோடும்
காமாவறு சோம ஸமானன
தாமாமண மார்தரு நீபசு
தாமாவென வேதுதி யாதுழல்  வஞ்சனேனைக்
காவாயடி நாளசு ரேசரை
யேசாடிய கூர்வடி வேலவ
காரார்தரு காழியின் மேவிய  தம்பிரானே.
790. மதனச்சொற் காரக் காரிகள் பவளக்கொப் பாடச் சீறிகள்
மருளப்பட் டாடைக் காரிக  ளழகாக
மவுனச்சுட்டாடிச்சோலிகள் இசலிப்பித்தாசைக்காரிகள்
வகைமுத்துச் சாரச் சூடிகள்  விலைமாதர்
குதலைச்சொற் சாரப் பேசிகள் நரகச்சிற் சாடிப் பீடிகள்
குசலைக்கொட் சூலைக் காலிகள்  மயல்மேலாய்க்
கொளுவிக்கட் டாசைப்பாசனை பவதுக்கக்காரச்சூதனை
குமுதப்பொற் பாதச் சேவையி  லருள்வாயே
கதறக்கற் சூரைக் கார்கட லெரியத்திக் கூறிற் பாழ்பட
ககனக்கட் டாரிக் காயிரை  யிடும்வேலா
கதிர்சுற்றிட் டாசைப் பால்கிரி யுறைபச்சைப் பாசக் கோகில
கவுரிப்பொற் சேர்வைச் சேகர  முருகோனே
திதலைப்பொற் பாணிக் கார்குயி லழகிற்பொற் றோகைப் பாவையை
தினமுற்றுச் சாரத் தோள்மிசை  யணைவோனே
திலதப்பொட் டாசைச் சேர்முக மயிலுற்றிட் டேறிக் காழியில்
சிவன்மெச்சக் காதுக் கோதிய  பெருமாளே.
791. விடமெனமி குத்தவட வனலென வுயர்த்துரவி
விரிகதிரெ னப்பரவு  நிலவாலே
விதனமிக வுற்றுவரு ரதிபதிக டுத்துவிடு
விரைதருவி தட்கமல  கணையாலே
அடலமரி யற்றுதிசை யினில்மருவி மிக்கவனல்
அழலொடுகொ தித்துவரு  கடைநாளில்
அணுகிநம னெற்றம்யல் கொளுமநிலை சித்தமுற
அவசமொட ணைத்தருள  வரவேணும்
அடவிதனில் மிக்கபரு வரையவ ரளித்ததிரு
அனையமயில் முத்தமணி  சுரயானை
அழகியம ணிக்கலச முலைகளில்ம யக்கமுறு
மதிவிரக சித்ரமணி  மயில்வீரா
கடதடக ளிற்றுமுக ரிளையவகி ரிக்குமரி
கருணையொ டளித்ததிற  முருகோனே
கமலமல ரொத்தவிழி யரிமருக பத்தர்பணி
கழுமலந கர்க்குமர  பெருமாளே.
கொண்டல்வண்ணன்குடி-சீர்காழி (கரியவனகர்)
792. அளிசுழ லளகக் காடு காட்டவும்
விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
அமளியில் முடியப்போது போக்கவும்  இளைஞோர்கள்
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
அளவிய தெருவிற் போயு லாத்தவும்  அதிபார
இளமுலை மிசையிற் றூசு நீக்கவும்
முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
இருநிதி யிலரைத் தூர நீக்கவும்  இனிதாக
எவரையு மளவிப் போய ணாப்பவும்
நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
இடரது தொலையத் தாள்கள் காட்டிநின்  அருள்தாராய்
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள்  கழுகாட
நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு  பொரும்வீரா
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
கனகிரி புயமுத் தார மேற்றருள்  திருமார்பா
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி
கருணைய தமிழிற் பாடல்கேட்டருள்  பெருமாளே.
வைத்தீஸ்வரன் கோயில் (வைத்தீசுரன்கோயில்)
793. உரத்துறை போதத்  தனியான
உனைச்சிறி தோதத்  தெரியாது
மரத்துறை போலுற்  றடியேனும்
மலத்திருள் மூடிக்  கெடலாமோ
பரத்துறை சீலத்  தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற்  றருள்வோனே
வரத்துறை நீதர்க்  கொருசேயே
வயித்திய நாதப்  பெருமாளே.
794. எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
யெத்தனை கோடி போன  தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
யிப்படி யாவ தேது  இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
சிக்கினி லாயு மாயு  மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
சித்திர ஞான பாத  மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
நிர்த்தம தாடு மாறு  முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
நெட்டிலை சூல பாணி  யருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
பத்திர பாத நீல  மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
பற்றிய மூவர் தேவர்  பெருமாளே.
795. பாட கச்சிலம் போடு செச்சைமணி
கொவெ னக்கலந் தாடு பொற்சரணர்
பாவை சித்திரம் போல்வர்பட்டுடையி  னிடைநூலார்
பார பொற்றனங் கோபு ரச்சிகர
மாமெ னப்படர்ந் தேம லிப்பரித
பாகு நற்கரும் போடு சர்க்கரையின்  மொழிமாதர்
ஏட கக்குலஞ் சேரு மைக்குழலொ
டாளி ளிக்குலம் பாட நற்றெருவி
லேகி புட்குலம் போல பற்பலசொ  லிசைபாடி
ஏறி யிச்சகம் பேசி யெத்தியிதம்
வாரு முற்பணந் தாரு மிட்டமென
ஏணி வைத்துவந் தேற விட்டிடுவர்  செயலாமோ
சேட னுக்கசண் டாள ரக்கர்குல
மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
சேர வற்றநின் றாட யிற்கரமி  ரறுதோள்மேல்
சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி  புகழ்வேலா
நாட கப்புனங் காவ லுற்றசுக
மோக னத்திமென் தோளி சித்ரவளி
நாய கிக்கிதம் பாடி நித்தமணி  புனைவோனே
ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
நாய கிக்குநன் பாக ரக்கணியும்
நாதர் மெச்சவந் தாடு முத்தமருள்  பெருமாளே.
796. மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
மாறி யாடெ டுத்த சிந்தை  யநியாய
மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
வாரை யாயி னிப்பி றந்து  இறவாமல்
வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎரித்து உன்றன்
வீடு தாப ரித்த அன்பர்  கணமூடே
மேவி யானு னைப்பொல் சிந்தை யாகவேக ளித்துகந்த
வேளெ யாமெ னப்ப ரிந்து  அருள்வாயே
காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
கால பாநு சத்தி யங்கை  முருகோனே
காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த
காளை யேறு கர்த்த னெந்தை  யருள்பாலா
சேலை நேர்வி ழிக்க றம்பெ ணாசைதோளு றப்பு ணர்ந்து
சீரை யோது பத்த ரன்பி  லுறைவோனே
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த
சேவல் கேது சுற்றுகந்த  பெருமாளே.
797. மூலா தாரமொ டேற்றி யங்கியை
ஆறா தாரமொ டோட்டி யந்திர
மூலா வாயுவை யேற்று நன்சுழி  முனையூடே
மூதா தாரம ரூப்பி லந்தர
நாதா கீதம தார்த்தி டும்பர
மூடே பாலொளி ஆத்து மந்தனை  விலகாமல்
மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர  தவிசூடே
மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
வீடே மூணொளி காட்டி சந்திர
வாகார் தேனமு தூட்டி யென்றனை  யுடனாள்வாய்
சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
மாதா ராபகல் காத்த மைந்தனை
சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ  னெமையாளும்
தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ  ளருள்பாலா
வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
மூடார் சூரரை வாட்டி யந்தகன்
வீடு டேவிய காத்தி ரம்பரி  மயில்வாழ்வே
வேதா நால்தலை சீக்கொ ளும்படி
கோலா காலம தாட்டு மந்திர
வேலா மால்மக ளார்க்கி ரங்கிய  பெருமாளே.
798. மேக வார்குழல தாடதன பாரமிசை
யார மாடகுழை யாடவிழி யாடபொறி
மேனி வாசனைகள் வீசஅல்குல் மோதிபரி  மளமேற
மீனு லாடையிடை யாடமயில் போலநடை
யோல மோலமென பாதமணி நூபுரமு
மேல்வில் வீசபணி கீரகுயில் போலகுரல்  முழவோசை
ஆக வேயவைகள் கூடிடுவர் வீதிவரு
வோரை  வாருமென வேசரச மோடுருகி
ஆசை போலமனை யேகொடணை வார்கள்குவ  டதிபார
ஆணி மாமுலையின் மூழ்கிசுக வாரிகொடு
வேர்வை பாயஅணை யூடமளி யாடியிட
ரான சூலைபல நோய்கள்கட லாடியுட  லுழல்வேனோ
நாக லோகர்மதி லோகர்பக லோகர்விதி
நாடு ளோர்களம ரோர்கள்கண நாதர்விடை
நாதர் வேதியர்கள் ஆதிசர சோதிதிகழ்  முனிவோர்கள்
நாத ரேநரர்ம னாரணர்பு ராணவகை
வேத கீதவொலி பூரையிது பூரையென
நாச மாயசுரர் மேவுகிரி தூளிபட  விடும்வேலா
தோகை மாதுகுற மாதமுத மாதுவினல்
தோழி மாதுவளி நாயகிமி னாளைசுக
சோக மோடிறுகி மார்முலைவி டாமலணை  புணர்வோனே
தோளி ராறுமுக மாறுமயில் வேலழகு
மீதெய் வானவடி வாதொழுதெ ணாவயனர்
சூழு காவிரியும் வேளூர்முரு காவமரர்  பெருமாளே.
திருக்கடையூர் (திருக்கடவூர்)
799. ஏட்டின்வி திப்படி யேகொடு மாபுர
வீட்டில டைத்திசை வேகசை முணதி
லேற்றிய டித்திட வேகட லோடம  தெனவேகி
ஏற்குமெ னப்பொரு ளாசையெ ணாசைகொ
ளாத்துவெ னத்திரி யாபரி யாதவ
மேற்றியி ருப்பிட மேயறி  யாமலு  முடல்பேணிப்
பூட்டுச ரப்பளி யேமத னாமென
ஆட்டிய சைத்திய லேதிரி நாளையில்
பூத்தம லக்குகை யோபொதி சோறென  கழுகாகம்
போற்றிந மக்கிரை யாமென வேகொள
நாட்டிலொ டுக்கென வேவிழு போதினில்
பூட்டுப ணிப்பத மாமயி லாவருள்  புரிவாயே
வீட்டில டைத்தெரி யேயிடு பாதக
னாட்டைவி டுத்திட வேபல சூதினில்
வீழ்த்தவி திப்படி யேகுரு காவலர்  வனமேபோய்
வேற்றுமை யுற்றுறா வோடியில் நாளது
பார்த்துமு டித்திர வேயொரு பாரத
மேற்புனை வித்தம காவிர மாயவன்  மருகோனே
கோட்டை யழித்தசு ரார்பதி கோவென
மூட்டியெ ரித்தப ராபர சேகர
கோத்தம ணிக்கதி ரேநிக ராகிய  வடிவேலா
கூற்றும் ரித்திட வேயுதை பார்வதி
யார்க்குமி னித்தபெ ணாகிய மான்மகள்
கோட்டுமு லைக்கதி பாகட வூருறை  பெருமாளே.
800. சூலமென வோடு சர்ப்ப வாயுவைவி டாத டக்கி
தூயவொளி காண முத்தி  விதமாகச்
சூழுமிருள் பாவ கத்தை வீழஅழ லூடெ ரித்து
சோதிமணி பீட மிட்ட  மடமேவி
மேலைவெளி யாயி ரத்து நாலிருப ராப ரத்தின்
மேவியரு ணாச லத்தி  னுடன்மூழ்கி
வேலுமயில் வாக னப்ர காசமதி லேத ரித்து
வீடுமது வேசி றக்க  அருள்தாராய்
ஓலசுர ராழி யெட்டு வாளகிரி மாய வெற்பு
மூடுருவ வேல்தொ டுத்த  மயில்வீரா
ஓதுகுற மான்வ னத்தில் மேவியவள் கால்பி டித்து
ளோமெனுப தேச வித்தொ  டணைவோனே
காலனொடு மேதி மட்க வூழிபுவி மேல்கி டத்து
காலனிட மேவு சத்தி  யருள்பாலா
காலமுதல் வாழ்பு விக்க தாரநகர் கோபு ரத்துள்
கானமயில் மேல்த ரித்த  பெருமாளே.
இலுப்பைப்பட்டு (திருப்படிக்கரை)
801. அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
டழைத்தி தப்படச்  சிலகூறி
அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
தணைத்தி தழ்க்கொடுத்  தநுராகத்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
குளக்க ருத்தினிற்  ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
துனைத்தி ருப்புகழ்ப்  பகர்வேனோ
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
றடப்பொ ருப்பெடுத்  தணையாகச்
சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
றரித்த ரக்கர்பொட்  டெழவேபோர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
செயித்த வுத்தமத்  திருமாமன்
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
திருப்ப டிக்கரைப்  பெருமாளே.
மயிலாடுதுறை (மாயூரம்)
802. அமுதினை மெத்தச் சொரிந்து மாவின
தினியப ழத்தைப் பிரிந்து பானற
வதனொடு தித்தித் தகண்ட ளாவிய  விதழாராய்
அழகிய பொற்றட் டினொண்டு வேடையின்
வருபசி யர்க்குற் றவன்பி னாலுண
வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர்  மயல்தீரக்
குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய
நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய
குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண  தனபாரக்
குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு
மவர்மய லிற்புக் கழிந்த பாவியை
குரைகழல்பற்றிப் புகழ்ந்துவாழ்வுற  அருள்வாயே
வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்
மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன்  மதியாமே
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம் விளைக்கக் குரங்கி னாலவன்
வமிசம றுத்திட் டிலங்கு மாயவன்  மருகோனே
எமதும லத்தைக் களைந்து பாடென
அருள அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள்  முருகோனே
எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை  பெருமாளே.
பாகை (மயிலாடுதுறை அருகில்)
803. ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொக்
தாகம் வேர்வுற மால்கொண்  டயராதே
ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
றாயு வேதனை யேயென்  றுலையாதே
சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
த்யாக மீபவர் யாரென்  றலையாதே
தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
தேவ நாயக நானின்  றடைவேனோ
பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
பாவை பாகனு நாளும்  தவறாதே
பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
பாகை மாநக ராளுங்  குமரேசா
கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதம்
கூறு நாவல மேவும்  தமிழ்வீரா
கோடி தாவனர் தோளும் தாளும் வீழவு லாவும்
கோல மாமயி லேறும்  பெருமாளே.
804. ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
நோய்கள் வளைந்தற  இளையாதே
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு
காடு பயின்றுயி  ரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்
வேறு படுந்தழல்  முழுகாதே
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்
வாழ்வு பெறும்படி  மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்
சேல்கள் மறிந்திட  வலைபீறா
வாகை துதைந்தணி கேதகை மங்கிட
மோதி வெகுண்டிள  மதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை
சாடி நெடுங்கடல்  கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி
தோகை விரும்பிய  பெருமாளே.
805. குவளை பொருதிரு குழையை முடுகிய
கோல வேல்விழி  மடவார்தம்
கொடிய ம்ருகமத புளக தனகிரி
கூடி நாடொறு  மயலாகித்
துவள வுருகிய சரச விதமது
சோர வாரிதி  யலையூடே
சுழலு மெனதுயிர் மவுன பரமசு
கோம கோததி  படியாதோ
கவள கரதல கரட விகடக
போல பூதர  முகமான
கடவுள் கணபதி பிறகு வருமொரு
கார ணாகதிர்  வடிவேலா
பவள மரகத கனக வயிரக
பாட கோபுர  அரிதேரின்
பரியு மிடறிய புரிசை தழுவிய
பாகை மேவிய  பெருமாளே.
திருவிடைக்கழி (திருக்கடையூர் அருகில்)
806. அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத்
தடர்பொய்க் குருதிக்  குடில்பேணா
அவலக் கவலைச் சவலைக் கலைகற்
றதனிற் பொருள்சற்  றறியாதே
குனகித் தனகிக் கனலொத் துருகிக்
குலவிக் கலவிக்  கொடியார்தம்
கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற்
குலைபட் டலையக்  கடவேனோ
தினைவித் தினநற் புனமுற் றகுறத்
திருவைப் புணர்பொற்  புயவீரா
தெளியத் தெளியப் பவளச் சடிலச்
சிவனுக் கொருசொற்  பகர்வோனே
கனகச் சிகரக் குலவெற் புருவக்
கறுவிப் பொருகைக்  கதிர்வேலா
கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக்
கழியிற் குமரப்  பெருமாளே.
807. இரக்குமவர்க் கிரக்கமிகுத்
தளிப்பனசொப் பனத்திலுமற்
றெனக்கியலுக் கிசைக்கெதிரெப்   புலவோரென்
றெடுத்துமுடித் தடக்கைமுடித்
திரட்டையுடுத்  திலச்சினையிட்
டடைப்பையிடப் ப்ரபுத்துவமுற்  றியல்மாதர்
குரக்குமுகத் தினைக்குழலைப்
பனிப்பிறையொப்  பெனப்புயலொப்
பெனக்குறுகிக் கலைக்குள்மறைத்  திடுமானின்
குளப்படியிற் சளப்படுமிப்
பவக்கடலைக் கடக்கஇனிக்
குறித்திருபொற் கழற்புணையைத்  தருவாயே
அரக்கரடற் கடக்கஅமர்க்
களத்தடையப் புடைத்துலகுக்
கலக்கணறக் குலக்கிரிபொட்  டெழவாரி
அனைத்தும்வறப் புறச்சுரர்கற்
பகப்புரியிற் புகக்கமலத்
தனைச்சிறையிட் டிடைக்கழியிற்  பயில்வோனே
கரக்கரடக் களிற்றுமருப்
புலக்கையினிற் கொழித்தமணிக்
கழைத்தரளத் தினைத்தினையிற்  குறுவாளைக்
கணிக்குறவக் குறிச்சியினிற்
சிலைக்குறவர்க் கிலச்சைவரக்
கயத்தொடுகைப் பிடித்தமணப்  பெருமாளே.
808. பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப்  பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத்  தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலிவும் அற்புதப்  பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ்ப லத்தினைத்  தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற்  பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத்  திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர்க்  குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்
றிருவி டைக்கழிப்  பெருமாளே.
809. படிபுனல்நெ ருப்படற் பவனம்வெளி பொய்க்கருப்
பவமுறைய வத்தைமுக்  குணநீடு
பயில்பிணிகள் மச்சைசுக் கிலமுதிர மத்திமெய்ப்
பசிபடுநி ணச்சடக்  குடில்பேணும்
உடலதுபொ றுத்தறக் கடைபெறுபி றப்பினுக்
குணர்வுடைய சித்தமற்  றடிநாயேன்
உழலுமது கற்பலக் கழலிணையெ னக்களித்
துனதுதம ரொக்கவைத்  தருள்வாயே
கொடியவொரு குக்குடக் கொடியவடி விற்புனக்
கொடிபடர்பு யக்கிரிக்  கதிர்வேலா
குமரசம ரச்சினக் குமரவணி யத்தன்மெய்க்
குமரமகிழ் முத்தமிழ்ப்  புலவோனே
தடவிகட மத்தகத் தடவரைய ரத்தரத்
தடலனுச வித்தகத்  துறையோனே
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தருதிருவி டைக்கழிப்  பெருமாளே.
810. பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
பகரும்வினைச் செயல்மாதர்  தருமாயப்
படுகுழிபுக் கினிதோறும் வழிதடவித் தெரியாது
பழமையிதற் றிடுலோக  முழுமூடர்
உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
யொருபயனைத் தெளியாது  விளியாமுன்
உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
உனதுதிருப் புகழோத  அருள்வாயே
தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
திடுதிடெனப் பலபூதர்  விதமாகத்
திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை  விடுவோனே
அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
அடல்தருகெற் சிதநீல  மயில்வீரா
அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
அதிபஇடைக் கழிமேவு  பெருமாளே.
811. பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
பிடித்து போயவர் தொடையொடு தொடைபட  வுறவாடிப்
பிதற்றி யேயள விடுபண மதுதம
திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர்  கனமாலாய்
முருக்கி னேரித ழமுதுப ருகுமென
வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர்  பொருள்தீரின்
முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ  அருள்தாராய்
நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி  கொளும்வேலா
நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
புரத்தி லேநகை புரிபர னடியவர்
நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய  புதல்வோனே
செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
திருக்கை வேல்வடி வழகிய குருபர  முருகோனே
சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய  பெருமாளே.
812. மருக்கு லாவிய மலரணை  கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது  மொழியாதே
கருக்கு லாவிய அயலவர்  பழியாதே
கடப்ப மாலையை யினிவர  விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை  மணவாளா
சமர்த்த னேமணி மரகத  மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி  லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகிய  பெருமாளே.
813. முலைகு லுக்கிகள் கபடிகள் வடிபு ழுக்கைக ளசடிகள்
முறைம சக்கிகள் திருடிகள்  மதவேணூல்
மொழிப சப்பிகள் விகடிகள் அழும னத்திகள் தகுநகை
முகமி னுக்கிகள் கசடிகள்  இடையேசூழ்
கலைநெ கிழ்த்திக ளிளைஞர்கள் பொருள்ப றித்தம ளியின்மிசை
கனியி தழ்ச்சுருள் பிளவிலை  யொருபாதி
கலவி யிற்றரும் வசவிகள் விழிம யக்கினில் வசமழி
கவலை யற்றிட நினதருள்  புரிவாயே
அலைநெ ருப்பெழ வடவரை பொடிப டச்சம ணர்கள்குலம்
அணிக ழுப்பெற நடவிய  மயில்வீரா
அரன ரிப்பிர மர்கள்முதல் வழிப டப்பிரி யமும்வர
அவர வர்க்கொரு பொருள்புகல்  பெரியோனே
சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புண ரரிதிரு  மருகோனே
திரள்வக ருக்கைகள் முகுகள் சொரிமதுக்கத லிகள்வளர்
திருவி டைக்கழி மருவிய  பெருமாளே.
ஆக்கூர் (தான்தோன்றி)
814. சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர்
தூண்போன்ற இக்குடிலு  முலகூடே
சோர்ந்தூய்ந்து மக்கினில் நூண்சாம்பல் பட்டுவிடு
தோம்பாங்கை யுட்பெரிது  முணராமே
வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
வேண்டீங்கை யிட்டுவர  குழுவார்போல்
வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
வாம்பாங்கில் நற்கழல்கள்  தொழஆளாய்
வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
வான்தோன்று மற்றவரு  மடிபேண
மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
வான்தீண்ட வுற்றமயில்  மிசையேறித்
தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
சாய்ந்தேங்க வுற்றமர்செய்  வடிவேலா
தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
தான்தோன்றி நிற்கவல  பெருமாளே.
கந்தன் குடி (பேரளம் அருகில்) 
815. எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படி  யொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெட  மயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுட  ரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றும் கொளும்
வண்டன்தமி யன்றன்பவம்  ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு  மணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம்  விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழ மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு  வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கிய  பெருமாளே.
சிதலைப்பதி (திலதைப்பதி)
816. இறையத் தனையோ  அதுதானும்
இலையிட் டுணலேய்  தருகாலம்
அறையிற் பெரிதா  மலமாயை
அலையப் படுமா  றினியாமோ
மறையத் தனைமா  சிறைசாலை
வழியுய்த் துயர்வா  னுறுதேவர்
சிறையைத் தவிரா  விடும்வேலா
திலதைப் பதிவாழ்  பெருமாளே.
817. பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
படர்பொற் பணிபு னைந்த  முலைமீதில்
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
படுபுட் பவன முன்றி  லியலாரும்
அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
அழகிற் றனித ளர்ந்து  மதிமோக
மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
அலையிற் றிரிவ னென்று  மறிவேனோ
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
தனனத் தனன தந்த  தனதானா
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
தனிமத் தளமு ழங்க  வருவோனே
செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
செறிநற் கழைதி ரண்டு  வளமேவித்
திருநற் சிகரி துங்க வரையைப் பொருவு கின்ற
திலதைப் பதிய மர்ந்த  பெருமாளே.
818. மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு
வசியச் சரத்தி யைந்த  குறியாலே
வடசெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று
மதர்விற் பணைத்தெ ழுந்த  முலைமீதே
உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த
வுலைபட் டலர்ச்ச ரங்கள்  நலியாமல்
உலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு
னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து  திரிவேனோ
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த
பொழுதிற் கரத்தொ டர்ந்து  பிடிநாளில்
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
புகுதக் கணத்து வந்து  கையிலாரும்
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
சிவைதற் பரைக்கி சைந்த  புதல்வோனே
சிவபத்தர் முத்த ரும்பர் தவசித்தர் சித்த மொன்று
திலதைப் பதிக்கு கந்த  பெருமாளே.
திருவம்பர்-அம்பர் மாகாளம் அருகில்
819. சோதி மந்திரம் போத கம்பரவு
ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட  முங்கொளாமல்
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
தோத கம்பரிந் தாடு சிந்துபரி  கந்துபாயும்
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
கோல மண்டிநின் றாடி யின்பவகை
வேணு மென்றுகண் சோர ஜம்புலனொ  டுங்குபோதில்
வேதி யன்புரிந் தேடு கண்டளவி
லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட  ரென்றுபோமோ
ஆதி மண்டலஞ் சேர வும்பரம
சோம மண்டலங் கூட வும்பதும
வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப  டர்ந்ததோகை
ஆழி மண்டலந் தாவி யண்டமுத
லான மண்டலந் தேடி யொன்றதொமு
கான மண்டலஞ் சேட னங்கணயில்  கொண்டுலாவிச்
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
யாகி விண்பறந் தோட மண்டியொரு
சூரி யன்திரண் டோட கண்டுநகை  கொண்டவேலா
சோடை கொண்டுளங் கான மங்கைமய
லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர்  தம்பிரானே.
அம்பர் மாகாளம் (திருமாகாளம்)
820. காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
கோலாக லாரமுலை மார்புதைய பூணகல
காரோடு கூடளக பாரமல ரோடலைய  அணைமீதே
காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ
டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள
காவீர மானஇத ழுறல்தர நேசமென  மிடறோதை
நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள
மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய
நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல்  படுவேனை
நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்
சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு
நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள்  புரிவாயே
பாதாள சேடனுட லாயிரப ணாமகுட
மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்
பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு  சுடர்வேலா
பாலாயி மீதரவின் மேல்திருவொ டேயமளி
சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய
பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி  மருகோனே
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை
ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்
மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள்  குருநாதா
வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண
வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு
மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு  பெருமாளே.
 இஞ்சிகுடி-அம்பர் மாகாளம் அருகில்
821. குங்குமகற் பூர நாவி யிமசல
சந்தனகத் தூரி லேப பரிமள
கொங்கைதனைக் கோலி நீடு முகபட  நகரேகை
கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை
துங்கமுடித் தால கால மெனவடல்
கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு  மமுதேயாம்
அங்குளநிட் டூர மாய விழிகொடு
வஞ்சமனத் தாசை கூறி யெவரையு
மன்புடைமெய்க் கோல ராக விரகினி  லுறவாடி
அன்றளவுக் கான காசு பொருள்கவர்
மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ
லன்றியுனைப் பாடி வீடு புகுவது  மொருநாளே
சங்கதசக் ரீவ னோடு சொலவள
மிண்டுசெயப் போன வாயு சுதனொடு
சம்பவசுக் ரீவ னாதி யெழுபது  வெளமாகச்
சண்டகவிச் சேனை யால்மு னலைகடல்
குன்றிலடைத் தேறி மோச நிசிசரர்
தங்கிளைகெட் டோட ஏவு சரபதி  மருகோனே
எங்குநினைப் போர்கள் நேச சரவண
சிந்துரகர்ப் பூர ஆறு முககுக
எந்தனுடைச் சாமிநாத வயலியி  லுறைவேலா
இன்புறுபொற் கூட மாட நவமணி
மண்டபவித் தார வீதி புடைவளர்
இஞ்சிகுடிப் பார்வ ரருளிய  பெருமாளே.
திருநள்ளாறு
822. பச்சை யொண்கிரி போலிரு மாதன
முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
பற்று புண்டரி காமென ஏய்கயல்  விழிஞான
பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
பத்ம செண்பக மாமநு பூதியி  னழகாளென்
றிச்சை யந்தரி பார்வதி மோகினி
தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
றிற்ப சுங்கிளி யானமி னூலிடை  யபிராமி
எக்கு லங்குடி லோடுல கியாவையு
மிற்ப திந்திரு நாழிநெ லாலற
மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன  வுருகேனோ
கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
பொற்பு யங்களும் வேலுமி ராறுள
கட்சி வங்கம லாமுக மாறுள  முருகோனே
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற  விடும்வேலா
நச்சு வெண்பட மீதணை வார்முகில்
பச்சை வண்புய னார்கரு டாசனர்
நற்க ரந்தநு கோல்வளை நேமியர்  மருகோனே
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
நத்தி வந்துந ளாறுறை தேவர்கள்  பெருமாளே.
வழுவூர்
823. தருவூரிசை யாரமு தார்நிகர்
குயிலார்மொழி தோதக மாதர்கள்
தணியாமய லாழிவி லாழவு  மமிழாதே
தழலேபொழி கோரவி லோசன
மெறிபாசம காமுனை சூலமுள்
சமனார்முகில் மேனிக டாவினி  லணுகாதே
கருவூறிய நாளுமு நூறெழு
மலதேகமு மாவலு மாசைக
படமாகிய பாதக தீதற  மிடிதீரக்
கனிவீறிய போதமெய் ஞானமு
மியலார்சிவ நேசமு மேவர
கழல்சேரணி நூபுர தாளிணை  நிழல்தாராய்
புருகூதன்மி னாளொரு பாலுற
சிலைவேடுவர் மானொரு பாலுற
புதுமாமயில் மீதணை யாவரு  மழகோனே
புழுகார்பனிர் மூசிய வாசனை
யுரகாலணி கோலமென் மாலைய
புரிநூலுமு லாவுது வாதச  புயவீரா
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
செழிசாலிகு லாவிய கார்வயல்
மகதாபத சீலமு மேபுனை  வளமூதூர்
மகதேவர்பு ராரிச தாசிவர்
சுதராகிய தேவசி காமணி
வழுவூரில்நி லாவியெ வாழ்வருள்  பெருமாளே.
824. தலைநா ளிற்பத மேத்தி யன்புற
வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
தவஞா னக்கட லாட்டி யென்றனை  யருளாலுன்
சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
ளறியா முத்தமி ழூட்டி முண்டக
தளிர்வே தத்துறை காட்டி மண்டலம்  வலமேவும்
கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
கமழ்வா சற்படி நாட்ட முங்கொள  விதிதாவிக்
கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல்  மறவேனே
சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு  கதிர்வேலா
சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக  அழகோனே
மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
யமுதா கத்தன வாட்டி யிந்துள
மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன்  மணவாளா
வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள்  பெருமாளே.
திருக்கண்ணபுரம் (கன்னபுரம்)
825. அன்னமிசைச் செந்நளினச் சென்மிகணக் கந்நியமத்
தன்னமயப் புலால்யாக்கை  துஞ்சிடாதென்
றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
கன்னியசற் றுலாமூச்ச  டங்கயோகம்
என்னுமருட்கின்னமுடைப்பன்னவைகற் றின்னவைவிட்
டின்னணமெய்த் தடாமார்க்க  மின்புறாதென்
றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
தின்னதெனப் படாவாழ்க்கை  தந்திடாதோ
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
கண்ணவிரச் சுறாவீட்டு  கெண்டையாளைக்
கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
கன்னிலையிற் புகாவேர்த்து  நின்றவாழ்வே
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
பொன்னிநதிக் கராநீர்ப்பு   யங்கநாதா
பொன்மலையிற் பொன்னிநகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்
பொன்னுலகத் திராசாக்கள்  தம்பிரானே.
ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்)
826. இபமாந்தர் சக்ர பதிசெறி
படையாண்டு சக்ர வரிசைக
ளிடவாழ்ந்து திக்கு விசயம  ணரசாகி
இறுமாந்து வட்ட வணைமிசை
விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
யெழிலார்ந்த பட்டி வகைபரி  மளலேபந்
தபனாங்க ரத்ன வணிகல
னிவைசேர்ந்த விச்சு வடிவது
தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு  வியபோது
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
தனவாஞ்சை மிக்கு னடிதொழ  நினையாரே
உபசாந்த சித்த குருகுல
பவபாண்ட வர்க்கு வரதன்மை
யுருவோன்ப்ர சித்த நெடியவன்  ரிஷிகேசன்
உலகீன்ற பச்சை யுமையணன்
வடவேங்க டத்தி லுறைபவ
னுயர்சார்ங்க சக்ர கரதலன்  மருகோனே
த்ரிபுராந்த கற்கு வரசுத
ரதிகாந்தன் மைத்து னமுருக
திறல்பூண்ட சுப்ர மணியஷண்  முகவேலா
திரைபாய்ந்த பத்ம தடவய
லியில்வேந்த முத்தி யருள்தரு
திருவாஞ்சி யத்தி லமரர்கள்  பெருமாளே.
திருச்செங்காட்டங்குடி
827. வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ்  மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய  லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர்சீசியவர்மாயவலையோடடியெ  னுழலாமல்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள்  புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென  விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு  முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர  மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர்  பெருமாளே.
திருவிற்குடி
828. சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள
மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை
சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய  வஞ்சிமாதர்
சித்த மத்தனையு முற்ற ளப்பகடல்
மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது
சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம  ளங்கள்வீசப்
பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்
வித்து ருத்தநுவ ளைத்த நெற்றிவனை
பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல்  விஞ்சைபேசிப்
பச்சை ரத்னமயி லைப்பொ லத்தெருவி
லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை
பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென  மங்குவேனோ
தத்த னத்தனத னத்த னத்தனன
தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென  சங்குபேரி
சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்
நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி
சக்கு முக்கிவிட கட்க துட்டசுர  ரங்கமாள
வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு
வித்த ளித்துமதி பெற்ற தத்தைமண  முண்டவேலா
வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ்  தம்பிரானே.
விஜயபுரம் (திருவாரூர் அருகில்)
829. குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
குளுகுளெ னும்படி மூடிய  மலமாக
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
குமிழியி னுங்கடி தாகியெ  யழிமாய
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
லவுடத மும்பல யோகமு  முயலாநின்
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
னழகிய தண்டைவி டாமல  ரடைவேனோ
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
மிடிபட இன்பம கோததி  வறிதாக
இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர
எழில்பட மொன்று மொராயிர  முகமான
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
வெயில்நகை தந்த புராரிம  தனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
விஜயபுர ரந்தனில் மேவிய  பெருமாளே.
திருவாரூர்
830. கூசா தேபா ரேசா தேமால்
கூறா நூல்கற்  றுளம்வேறு
கோடா தேவேல் பாடா தேமால்
கூர்கூ தாளத்  தொடைதோளில்
வீசா தேபேர் பேசா தேசீர்
வேதா தீதக்  கழல்மீதே
வீழா தேபோய் நாயேன் வாணாள்
வீணே போகத்  தகுமோதான்
நேசா வானோ ரீசா வாமா
நீபா கானப்  புனமானை
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
நீள்கார் சூழ்கற்  பகசாலத்
தேசா தீனா தீனா ரீசா
சீரா ரூரிற்  பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.
831. கூர்வாய் நாராய் வாராய் போனார்
கூடா ரேசற்  றலஆவி
கோதா னேன்மா தாமா றானாள்
கோளே கேள்மற்  றிளவாடை
ஈர்வாள் போலே மேலே வீசா
ஏறா வேறிட்  டதுதீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா
ஈடே றாரிற்  கெடலாமோ
சூர்வா ழாதே மாறா தேவாழ்
சூழ்வா னோர்கட்  கருள்கூரும்
தோலா வேலா வீறா ரூர்வாழ்
சோதீ பாகத்  துமையூடே
சேர்வாய் நீதீ வானோர் வீரா
சேர ரூரைச்  சுடுவார்தம்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.
832. பாலோ தேனோ பாகோ வானோர்
பாரா வாரத்  தமுதேயோ
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
பானோ வான்முத்  தெனநீளத்
தாலோ தாலே லோபா டாதே
தாய்மார் நேசத்  துனுசாரந்
தாரா தேபே ரீயா தேபே
சாதே யேசத்  தகுமோதான்
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
லானா தேனற்  புனமேபோய்
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
ஆளா வேளைப்  புகுவோனே
சேலோ டேசே ராரால் சாலார்
சீரா ரூரிற்  பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப்  பெருமாளே.
833. நீதானெத் தனையாலும் - நீடூழிக்  க்ருபையாகி
மாதானத் தனமாக - மாஞானக் கழல்தாராய்
வேதாமைத் துனவேளே - வீராசற்  குணசீலா
ஆதாரத் தொளியானே - ஆரூரிற் பெருமாளே.
834. மகரம துகெட இருகுமி ழடைசி
வாரார்ச ரங்க  ளெனநீளும்
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
வாணாள டங்க  வருவார்தம்
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
பாடீர கும்ப  மிசைவாவிப்
படிமன துனது பரிபுர சரண
பாதார விந்த  நினையாதோ
நகமுக சமுக நிருதரு மடிய
நானாவி லங்கல்  பொடியாக
நதிபதி கதற வொருகணை தெரியு
நாராய ணன்றன்  மருகோனே
அகனக கனக சிவதல முழுது
மாராம பந்தி  யவைதோறும்
அரியளி விததி முறைமுறை கருது
மாரூர மர்ந்த  பெருமாளே.
835. கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
கலக மிடுவிழி கடலென விடமென  மனதூடே
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
களப புளகித கிரியினு  மயல்கொடு   திரிவேனும்
இரவு பகலற இகலற மலமற
இயலு மயலற விழியினி ரிழிவர
இதய முருகியெ யொருகுள பதமுற  மடலூடே
எழுத அரியவள் குறமக ளிருதன
கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
யினிமை பெறுவது மிருபத மடைவது  மொருநாளே
சுரபி மகவினை யெழுபொருள் வினவிட
மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
துயரில் செவியினி லடிபட வினவுமி  னதிதீது
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
சுரபி யலமர விழிபுனல் பெருகிட  நடுவாகப்
பரவி யதனது துயர்கொடு நடவிய
பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
படிய ரதமதை நடவிட மொழிபவ  னருளாரூர்ப்
படியி லறுமுக சிவசுத கணபதி
யிளைய குமரநி ருபபதி சரவண
பரவை முறையிட அயில்கொடுநடவிய  பெருமாளே.
836. பாலோ தேனோ பலவுறு சுளையது
தானோ வானோர் அமுதுகொல் கழைரச
பாகோ வூனோ டுருகிய மகனுண  வருண்ஞானப்
பலோ வேறோ மொழியென அடுகொடு
வேலோ கோலோ விழியென முகமது
பானோ வானூர் நிலவுகொ லெனமகண்  மகிழ்வேனை
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
யேதோ மாதோம் எனதகம் வளரொளி
நானோ நீயோ படிகமொ டொளிரிட  மதுசோதி
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
தூணேர் தோளா சுரமுக கனசபை
நாதா தாதா எனவுரு கிடஅருள்  புரிவாயே
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
தாரா சூரா எனமுனி வர்கள்புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ  எனவோதா
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
கோகோ கோகோ எனமலை வெடிபட
வாளால் வேலால் மடிவுசெய் தருளிய  முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
ஒதார் சீராள் கதிர்மதி குலவிய
தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன்  அருள்பாலா
தூயா ராயார் இதுசுக சிவபத
வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
சூழ்சி ராரூர் மருவிய இமையவர்  பெருமாளே.
பெரியமடம்-கும்பகோணம் மகாமகம் குளக்கரை அருகில்
837. கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
களவுமத னூல்பலப டித்தவா வேட்கை
கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து  கழுநீரார்
கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து
நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்
கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை  கருதாதே
தலமடைசு சாளரமு கப்பிலே காத்து
நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த
தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை  தடுமாறித்
தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை
தனையுமரு நாளையும வத்திலே போக்கு
தலையறிவிலேனைநெறி நிற்கநீ திநீøக்ஷ  தரவேணும்
அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி
அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி
அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி  அவதான
அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி
அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி
அருணகிரி நாதஎனும் அப்பனேபோற்றி  அசுரேசர்
பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி
கரதலக பாலிகுரு வித்தனே போற்றி
பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி  பெருவாழ்வாம்
பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி
பரசமய கோளரித வத்தினால் வாய்த்த
பெரியமட மேவியசு கத்தனே யோக்யர்  பெருமாளே.
சோமநாதன் மடம்-ஆரணி அருகில்
838. ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
முழலுமநு ராக மோக  அநுபோகம்
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
வுளமுநெகிழ் வாகு மாறு  அடியேனுக்
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
மெனமொழியும் வீசு பாச  கனகோப
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
யெனதுபகை தீர தீயும்  அருள்வாயே
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
அடைவுதவ றாது பேணும்  அறிவாளன்
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
அவனிபுகழ் சோம நாதன்  மடமேவும்
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
முகரசல ராசி வேக  முனிவோனே
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
முனியஅறி யாத தேவர்  பெருமாளே.
மதுரமாணிக்கம்-திருவாரூர் அருகில் (திரியம்பகபுரம்)
839. உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென
வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு
ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு  பொருள்தேடி
உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு
சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக
ளுபய கொங்கையும் புளகித மெழமிக  வுறவாயே
விரக வன்புடன் பரிமள மிகவுள
முழுகி நன்றியொன் றிடமல ரமளியில்
வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம  துறுநாளே
விளைத னங்கவர்ந் திடுபல மனதிய
ரயல்த னங்களுந் தமதென நினைபவர்
வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற  அருள்வாயே
செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை
செகம டங்கலும் பயமற மயில்மிசை  தனிலேறித்
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென  வருபூதங்
கரையி றந்திடும் கடலென மருவிய
வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ
கலவி யன்புடன் குறமகள் தழுவிய  முருகோனே
கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
கவுரி தந்தகந் தறுமுக எனஇரு
கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல  பெருமாளே.
சிக்கல்
840. கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்
வன்ம னத்தை யுருக்கு லீலையர்
கண்வெ ருட்டி விழித்த பார்வையர்  இதமாகக்
கையி லுற்ற பொருட்கள் யாவையும்
வையெ னக்கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றி யிழுத்து மார்முலை  தனில்வீழப்
பின்னி விட்ட சடைக்கு ளேமலர்
தன்னை வைத்து முடிப்பை நீயவி
ழென்னு மற்ப குணத்த ராசையி  லுழலாமல்
பெய்யு முத்த மிழிற்ற யாபர
என்ன முத்தர் துதிக்க வேமகிழ்
பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக  அருள்தாராய்
வன்னி யொத்த படைக்க லாதிய
துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி
மண்ணி லற்று விழச்செய் மாதவன்  மருகோனே
மன்னு பைப்பணி யுற்ற நீள்விட
மென்ன விட்டு முடுக்கு சூரனை
மல்லு டற்று முருட்டு மார்பற  அடைவாகச்
சென்னி பற்றி யறுத்த கூரிய
மின்னி ழைத்த திறத்த வேலவ
செய்ய பொற்புன வெற்பு மானணை  மணிமார்பா
செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய  பெருமாளே.
841. புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
பொருபுய திக்கெட் டும்போயு லாவிய  புகழாளா
பொருவரு நட்புக் பண்பான வாய்மையி
லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய  கவிபாடி
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிக
ளெவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு  மிடிதீர
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு  மருள்வாயே
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
இமயம கட்குச் சந்தான மாகிய  முருகோனே
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன்  மருகோனே
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி  யிசையாலே
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
அசுரரை வெட்டிச் சங்கார மாடிய  பெருமாளே.
நாகப்பட்டினம்
842. ஓல மிட்டு ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
ஊர்மு கிற்ற ருக்க ளொன்று  மவராரென்
றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
ஊன ரைப்ர  புக்க ளென்று  மறியாமல்
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
கோடி யிச்சை செப்பி வம்பி  லுழல்நாயேன்
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
கூடு தற்கு முத்தி யென்று  தருவாயே
வாலை துர்க்கை சத்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
மாது பெற்றெ டுத்து கந்த  சிறியோனே
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
வாகை மற்பு யப்ர சண்ட  மயில்வீரா
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
நார ணற்க ருட்சு ரந்த  மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
நாக பட்டி னத்த மர்ந்த  பெருமாளே.
843. மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
டார மும்படித ரம்பொறியு டன்பணிகள்
மாலை யொண்பவள மும்பரிமளங்கலவை  தொங்கலாட
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக
பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி
வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள  சங்குமோக
சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்
பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச
தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை  ரம்பைமாதர்
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி
யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி
தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம  றந்திடேனே
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ  டர்ந்தசூரன்
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய
ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட  னங்கொள்வேலா
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர்  தந்தமூல
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர் புகழ்  தம்பிரானே.
844. விழுதா தெனவே கருதா துடலை
வினைசேர் வதுவே  புரிதாக
விருதா வினிலே யுலகா யதமே
லிடவே மடவார்  மயலாலே
அழுதா கெடவே அவமா கிடநா
ளடைவே கழியா  துனையோதி
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
ரழியா வரமே  தருவாயே
தொழுதார் வினைவே ரடியோ டறவே
துகள்தீர் பரமே  தருதேவா
சுரர்பூ பதியே கருணா லயனே
சுகிர்தா வடியார்  பெருவாழ்வே
எழுதா மறைமா முடிவே வடிவே
லிறைவா எனையா  ளுடையோனே
இறைவா எதுதா வதுதா தனையே
இணைநா கையில்வாழ்  பெருமாளே.
எட்டு குடி
845. உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
திளகிப் புளகித்  திடமாயே
உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
தமிதக் கெறுவத்  துடன்வீறு
தரமொத் துபயக் களபத் தளமிக்
கவனத் தருணத்  தனமீதே
சருவிச் சருவித் தழுவித் தழுவித்
தவமற் கவிடுத்  துழல்வேனோ
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
கருமைத் திருமைத்  துனவேளே
அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
தசுரப் படையைப்  பொருவேனே
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
தகமுத் தமிழைப்  பகர்வோனே
பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
பதியிற் குமரப் பெருமாளே.
846. ஓங்கு மைம்புல னோட நினைத்தின்  பயர்வேனை
ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந்  தனையாள்வாய்
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம்  புகடாவி
வாங்கி நின்றன ஏவி லுகைக்குங்  குமரேசா
மூங்கி லம்புய வாச மணக்குஞ்  சரிமானு
காங்கை யங்கறு பாசில் மனத்தன்  பர்கள்வாழ்வே
காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம்  பெருமாளே.
847. கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
கயலொத்த மலரொத்த  விழிமானார்
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
கதிர்முத்து முலைதைக்க  அகலாதே
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
மிடிபட்டு மடிபட்டு  மனமாழ்கி
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
மிகநட்பொ டருள்தற்கு  வருவாயே
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
தலைபத்து டையதுட்ட  னுயிர்போகச்
சலசத்த மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
தருசக்ர தரனுக்கு  மருகோனே
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
சிவனுக்கு விழியொத்த  புதல்வோனே
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
திகழெட்டி குடியுற்ற  பெருமாளே.

848. மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ
மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ  வடிதேனோ
வத்திர மெய்ச்சசி தானோ நாணோ
குத்துமு லைக்கிள நீரோ மேரோ
வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ  வெனமாதர்
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
லச்சைய றப்புணர் வாதே காதே
சைச்சையெ னத்திரி நாயே னோயா  தலையாதே
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
தற்சமை யத்தக லாவே னாதா
தத்தும யிற்பரி மீதே நீதான்  வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா
சித்தசன் மைத்துன வேளா தோளார்
மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன்  மருகோனே
முத்தமிழ் வித்வவி நோதா கீதா
மற்றவ ரொப்பில ரூபா தீபா
முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால்  முருகோனே
இக்குநி ரைத்தவி ராலூர் சேலூர்
செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர்  வயலூரா
எச்சுரு திக்குளு  நீயே தாயே
சுத்தவி றற்றிறல் வீரா தீரா
எட்டிகு டிப்பதி வேலா மேலோர்  பெருமாளே.
எண்கண்
849. சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு  திரடோளும்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச  மயிலேறித்
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து  க்ருபையோடே
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
செம்ப தம்ப ணிந்தி ரென்று  மொழிவாயே
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
அங்க முங்கு லைந்த ரங்கொள்  பொடியாக
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல்  மருகோனே
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
டும்ப ரன்ற னன்பில் வந்த  குமரேசா
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
எண்க ணங்க மர்ந்தி ருந்த  பெருமாளே.
குடவாசல் (திருக்குடவாயில்)
850. அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
அயலார் நத்திடு  விலைமாதர்
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக
ளவரே வற்செய்து  தமியேனும்
மயலா கித்திரி வதுதா னற்றிட
மலமா யைக்குண  மதுமாற
மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத  மருள்வாயே
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை  யிடுவோனே
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர்வேல் விட்டிடு  திறலோனே
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி  யுறைவோனே
குறமா தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர்.
851. சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு  துணையாய்மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு  சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு  பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு  பயனோதான்
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை  கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள்  கழுவேறக்
குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
கொடியமாறன்மெய் கூனிமி ராமுனை  குலையாவான்
குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய  பெருமாளே.
வலிவலம்
852. தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
இருக்க வேறொரு பெயர்தம திடமது
துவட்சி யேபெறி லவருடன் மருவிடு  பொதுமாதர்
துவக்கி லேயடி படநறு மலரயன்
விதித்த தோதக வினையுறு தகவது
துறக்க நீறிட அரகர வெனவுள  மமையாதே
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
மசட்ட னாதுலன் அவமது தவிரநி  னடியாரோ
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
யரத்த மாமணி யணிகழ லிணைதொழ  அருள்தாராய்
எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன்  மருகோனே
எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள்  புதல்வோனே
வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
வடித்த வேல்விடு கரதல ம்ருகமத  புயவேளே
வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகருறை  பெருமாளே.
வேதாரண்யம்
853. சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி  கழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு  துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை  தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை  யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல்  மருகோனே
வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு  முருகோனே
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள்  பெருமாளே.
854. சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
சீத வரிக்குழல் கிண்டி  யளிமூசத்
தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
தேச மனைத்தையும் வென்ற  விழிமானார்
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
மாலி லகப்பட நொந்து  திரிவேனோ
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
மாயை தொலைத்திட வுன்ற  னருள்தாராய்
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
பார மலைக்குள் கன்று  கணையாலேழ்
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
பால்வ ருணத்தலை வன்சொல்  வழியாலே
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
வீட ணருக்கருள் கொண்டல்  மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேத வனத்தில மர்ந்த  பெருமாளே.
855. நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
நூபுர மொய்த்த பதங்கள்  இவையாலும்
நூறிசைபெற்றபதங்கொள்மேருவை யொத்ததனங்கள்
நூல்வல்ம லர்ப்பொரு துண்டம்  அவையாலும்
சேலினை யொத்திடு கண்க ளாலும ழைத்திடு பெண்கள்
தேனிதழ் பற்றுமொ ரின்ப  வலைமூழ்கிச்
சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி
தேறுத வத்தை யிழந்து  திரிவேனோ
வாலஇ ளப்பிறை தும்பை யாறுக டுக்கை கரந்தை
வாசுகி யைப்புனை நம்பர்  தருசேயே
மாவலி யைச்சிறை மண்ட ஓரடி யொட்டிய ளந்து
வாளிப ரப்பியி லங்கை  யரசானோன்
மேல்முடி பத்தும ரிந்து தோளிரு பத்தும ரிந்து
வீரமி குத்தமு குந்தன்  மருகோனே
மேவுதி ருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேதவ னத்தில மர்ந்த  பெருமாளே.
856. காதலுடைத் தாகி யன்று ஆரணியத்  தேநடந்து
கானவர்பொற் பாவை கொங்கை  அணைவோனே!
கோதில்தமிழ்க் கானகும்ப மாமுனிவற் காம  ணஞ்செய்
கோலமளித் தாளு மும்பர்....   முருகோனே!
கோகனகத் தான்வ ணங்கி.... 
கோடிமறைக் காட மர்ந்த  பெருமாளே!
கோடியக்காடு - (குழகர் கோயில்) திருக்கோடி
857. நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
நேயமதி லேதினமு  முழலாமல்
நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
நீரிலுழல் மீனதென  முயலாமல்
காலனது நாவரவ வாயிலிடு தேரையென
காயமரு வாவிவிழ  அணுகாமுன்
காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு
கால்முருக வேளெனவு  மருள்தாராய்ந
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
தோகைகுற மாதினுட  னுறவாடிச்
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
சோதிகதிர் வேலுறவு  மயில்வீரா
கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
கூடிவிளை யாடுமுமை  தருசேயே
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
கோடிநகர் மேவிவளர்  பெருமாளே.
ஆவுடையார் கோயில் - திருப்பெருந்துறை
858. இரத்த முஞ்சியு மூளை யெலும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிறுக்கு மண்சல வீடுபு குந்திட்  டதில்மேவி
இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்பட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட்  டிடமாயா
பிரத்தம் வந்திடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித்  தடிமேலாய்ப்
பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச்  சடமாமோ
தரித்த னந்தன தானன தந்தத்
திமித்தி மிந்திமி தீதக திந்தத்
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்  டியல்தாளம்
தனத்த குந்தகு தானன தந்தக்
கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட்  டிடும்வேலா
சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
டிரைத்து வந்தம ரோர்கள்ப டித்துச்
சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற்  சரணோனே
செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
திருப்பெ ருந்தறை மேவிய கந்தப்  பெருமாளே.
859. வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
மகிழ்ச்சிகொண் டிடஅதி  விதமான
வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன்
மயக்கவந் ததிலறி  வழியாத
கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர
களிப்புடன் களிதரு  மடமாதர்
கருப்பெங் கடலது கடக்கவுன் திருவடி
களைத்தருந் திருவுள  மினியாமோ
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு
புகைப்பரந் தெரியெழ  விடும்வேலா
புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி
பொறுத்தமந் தரகிரி  கடலூடே
திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக
திருட்டியெண் கணன்முத  லடிபேணத்
திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு
திருப்பெருந் துறையுறை  பெருமாளே.
860. முகர வண்டெழுங் கருமுகி லலையவு
முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு
முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு  மமுதூறும்
முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு
மருவு சங்கநின் றொலிகொடு பதறவு
முழுது மன்புதந் தமளியி னுதவிய  அநுராகச்
சிகர கும்பகுங் குமபுள கிததன
மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி
தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட  னுறமேவித்
திமிர கங்குலின் புதவிடு மவசர
நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது
தெரிச னஞ்செயும் பரிவற இனியருள்  புரிவாயே
மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்
மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு
வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது  புயவீரன்
மடிய வங்குசென் றவனொரு பதுமுடி
முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல்
மதிலி லங்கையும் பொடிபட அருளரி  மருகோனே
நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற
விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை
நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு  மிளையோனே
நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்
பவள மும்பொரும் பழனமு மழகுற
நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு  பெருமாளே.
குத்தாலம்(நாகப்பட்டினம்) - திருத்துருத்தி
861. மலைக் கனத்தென மார்பினி லேயிரு
முலைக் கனத்துற வேயிடை நூலென
வளைத்து குப்பமை யார்குழல் தோளொடும்  அலைமோத
மயிற் குலத்தவ ராமென நீள்கலை
நெகிழ்த்து வித்திரு வார்விழி வேல்கொடு
மயக்கி நத்தினர் மேல்மறு பாடும  விழியேவி
விலைக் கெனத்தன மாயிர மாயிர
முலைக்க ளப்பினு மாசைபொ தாதென
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர்  மயல்மேலாய்
வெடுக் கெடுத்தும காபிணி மேலிட
முடக்கி வெட்கும தாமத வீணனை
மினற் பொலிப்பத மோடுற வேயருள்  புரிவாயே
அலைக் கடுத்தசு ரார்பதி கோவென
விடப் பணச்சிர மாயிர சேடனும்
அதிர்த்தி டக்கதிர் வேல்விடு சேவக  மயில்வீரா
அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
அழைத்து முத்திய தாமநு பூதியெ
னருட்டி ருப்புக ழோதுக வேல்மயி  லருள்வோனே
சிலைக்கை முப்புர நீறெழ வேதிரு
வுளத்தி லற்பமெ னாநினை தேசிகர்
சிறக்க முத்தமி ழாலொரு பாவக  மருள்பாலா
திருக் கடப்பமலர் சூடிய வார்குழல்
குறத்தி கற்புட னேவிளை யாடியொர்
திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர்  பெருமாளே.
திருவீழிமிழலை
862. எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய்  விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய்  வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா  யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ  தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா  ளருள்வோனே
முனிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல்  விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால்  மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ்  பெருமாளே.
திருவாடுதுறை
863. சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுற்றி
சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து  விலைமாதர்
துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை
வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த
துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த  நிதிமேவு
கற்பகஇ ராச னெனப்படைக்  குப்பெருத்த
அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து
கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து  மிகையாகக்
கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து
கைப்பொருளி லாமை யெனக்கலக் கப்படுத்து
கற்பனைவி டாமலலைத் திருக்கச் சலிக்க  விடலாமோ
எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து
பற்றிய கராவை யிழுத்துரக் கக்கிழித்து
எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு  நிலையோதி
எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து
முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த
யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த  திறல்வீரா
வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து
வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்
மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து  வெகுகோடி
விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த
ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து
மிக்கதிரு வாக டுநற்றுறைக் குட்செழித்த  பெருமாளே.
மருத்துவக்குடி (ஆடுதுறை அருகில்)
864. கருத்தி தப்படு காமா லீலைகள்
விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்பன மாயா வாதிகள்  பலகாலும்
கரைத்து ரைத்திடு மோகா மோகிக
ளளிக்கு லப்பதி கார்போ லோதிகள்
கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு  வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை
யவத்த மெத்திய ஆசா பாசனை
யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை  யருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
யளிக்கு நற்பொ ளாயே மாதவ
வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை  யருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு
மதத்த துட்டர்கள் மாசூ ராதிய
சினத்தர் பட்டிட வேவே லேவிய  முருகோனே
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
கதித்த முத்தமிழ் மாலா யோதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய  மயில்வீரா
வரைத்த வர்க்கரர் சூலா பாணிய
ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த
மனத்தி யற்படு ஞானா தேசிக  வடிவேலா
வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு
தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு
மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள்  பெருமாளே.
பந்தநல்லூர் (திருபந்தணை நல்லூர்)
865. இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர
இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக்  குயில்போல
இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார
இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான
இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித்  தெருமீதே
பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச
நடைகொண்டிடு மயிலென்பன கலையும்கழ லாட
பரிசும்பல மொழியும்சில கிளிகொஞ்சுகை போலப் பரிவாகிப்
பணமுண்டென தவலம்படு நினை வுண்டிடை சோர
இதுகண்டவர்மயல்கொண்டிடமனமுஞ்செயல்மாற
பகலுஞ்சில இரவுந்துயில் சிவவஞ்சகர் மாயைத் துயர்தீராய்
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் கொடுசூரர்
சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி
நிணமுங்குடல் தசையுங்கட லெனசெம்புன லோட
சிலசெம்புள்கள் கழுகுங்சிறு நரியுங்கொடி யாடப் பொரும்வேலா
மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி
வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் தருசேயே
வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ
டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர
வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப்  பெருமாளே.
866. இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச  மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க  புகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த  குகவேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழந டஞ்செய்  கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு  மருகோனே
வரைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன்  மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்த  முருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள்  பெருமாளே.
867. எகினி னம்பழி நாடக மாடிகள்
மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்
இசையி டுங்குர லார்கட னாளிகள்  வெகுமோகம்
எனவி ழுந்திடு வார்முலை மேல்துகி
லலைய வுந்திரி வாரெவ ராயினு
மிளகு கண்சுழல் வார்விலை வேசியர்  வலைவீசும்
அகித வஞ்சக பாவனை யார்மயல்
கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி
யதிக முங்கொடு நாயடி யேனினி  யுழலாமல்
அமுத மந்திர ஞானொப தேசமு
மருளி யன்புற வேமுரு காவென
அருள்பு குந்திட வேகழ லார்கழ  லருள்வாயே
ககன விஞ்சையர் கோவென வேகுவ
டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்
கமற வெந்தழல் வேல்விடு சேவக  முருகோனே
கரிநெ டும்புலி தோலுடை யாரெனை
யடிமை கொண்டசு வாமிச தாசிவ
கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை  யருள்பாலா
செகமு மண்டமு மோருரு வாய்நிறை
நெடிய அம்புயல் மேனிய னாரரி
திருவு றைந்துள மார்பக னார்திரு  மருகோனே
தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி
வளர்த னம்புதை மார்பழ காமிகு
திலக பந்தணை மாநகர் மேவிய  பெருமாளே.
868. கும்பமுநி கர்த்த கொங்கையைவ ளர்த்த
கொஞ்சுகிளி யொத்த  மொழிமானார்
குங்குமப ணிக்குள் வண்புழுகு விட்ட
கொந்தளகம் வைத்த  மடவார்பால்
வம்புகள்வி ளைத்து நண்புகள்கொ டுத்து
மங்கிநர கத்தில்  மெலியாமல்
வண்கயிலை சுற்றி வந்திடுப தத்தை
வந்தனைசெய் புத்தி  தருவாயே
பம்புநதி யுற்ற பங்கொருச மர்த்தி
பண்டுளத வத்தி  லருள்சேயே
பைம்புயலு டுத்த தண்டலைமி குத்த
பந்தணை நகர்க்கு  ளுறைவோனே
சம்புநிழ லுக்குள் வந்தவத ரித்த
சங்கரர்த மக்கு  மிறையோனே
சங்கணிக ரத்த ரும்பர்பய முற்ற
சஞ்சலம றுத்த  பெருமாளே.
869. கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற்  கொடுபோய்வண்
கெந்தபொடி யும்புனைந் துறவணைத்
தின்பவச னந்தருந் தொழிலடுக்
கின்றமய ரின்படுந் துயரறப்  ப்ரபைவீசும்
தண்டைகள் கலின்கலின் கலினெனக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனத்
தண்கொலு சுடன்சிலம் பசையவுட்  பரிவாகிச்
சந்ததமும் வந்திரும் பரிமளப்
பங்கய பதங்களென் கொடுவினைச்
சஞ்சல மலங்கெடும் படியருட்  புரிவாயே
தொண்டர்கள் சரண்சரண் சரணெனக்
கொம்புகள் குகுங்குகுங் குகுமெனத்
துந்துமி திமிந்திமிந் திமினெனக்  குறுமோசை
சுந்தரி மணஞ்செயுஞ் சவுரியக்
கந்தகுற வஞ்சிதங் கருவனத்
துங்கமலை யும்புரந் தமரருக்  கிடர்கூரும்
பண்டர்கள்பு யங்களும் புடைபடக்
கண்ட வப்ர சண்டகுஞ் சரிஎழில்
பைந்தரு வனம்புரந் தகழெயில்  புடைசூழும்
பந்திவரு மந்திசெண் பகமகிற்
சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
பந்தணையில் வந்திடுஞ் சரவணப்  பெருமாளே.
870. தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை
யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி
சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய  தென்புரூவர்
தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி
னார்பு யங்கழையி னார்த னங்குவடு
சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை  புண்டரீகம்
சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை
யார்ச ரண்கமல நேரி ளம்பருவ
தோகை சந்தமணி வாரு டன்கலவி  யின்பமூடே
சோக முண்டுவிளை யாடி னுங்கமல
பாத மும்புயமி ராறு மிந்துளபல்
தோடங்கலணி மார்பமும்பரிவு  ளங்கொள்வேனே
ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக
நீலி கண்டிகலி யாணி விந்துவொளி
யோசை தங்குமபி ராமி யம்பிகைப  யந்தவேளே
ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்
சேறு டன்குருதி யோட எண்டிசையும்
ஓது கெந்தருவர் பாட நின்றுநட  னங்கொள்வேலா
ஏனல் மங்கைசுகி ஞான ரம்பையென
தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
மானொ டும்பர்தரு மான ணைந்தழகி  லங்குமார்பா
ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழி
லீறில் பந்தணைந லூர மர்ந்துவளர்  தம்பிரானே.
871. மதியஞ்சத்திரு நிறைந்த மாமுக
மயிலஞ்சக்கிளி யினங்க ளாமென
மதுரஞ்செப்பிய மடந்தை மேனகை  ரதிபோல
மருவும்பொற்குட மெழுந்த மாமுலை
வளர்வஞ்சிக்கொடி நடந்த வாறென
வருதுங்கக்கட லணங்கு போல்பவர்  தெருவூடே
நிதமிந்தப்படி யிருந்து வாறவர்
பொருள்தங்கப்பணி கலந்து போய்வர
நெறிதந்திட்டவர் வசங்க ளாமென  வுழலாதே
நிதிபொங்கப்பல தவங்க ளாலுனை
மொழியும்புத்திகள் தெரிந்து நானுனை
நிகர்சந்தத்தமிழ் சொரிந்து பாடவு  மருள்தாராய்
நதிமிஞ்சச்சடை விரிந்த நாயக
னுமையன்பிற்செயு மிகுந்த பூசனை
நலமென்றுட்குளிர் சிவன்ப ராபர  னருள்பாலா
நவகங்கைக்கிணை பகர்ந்த மாமணி
நதிபங்கிற்குல வுகந்து காபுரி
நகர்பொங்கித்தழை யவந்து வாழ்வுறு  முருகோனே
செதிதங்கத்தகு கணங்கள் வானவ
ரரிகஞ்சத்தவர் முகுந்தர் நாவலர்
கிளைபொங்கக் க்ருபை புரிந்து வாழ்கென  அருள்நாதா
கெருவம்பற்றிகல் விளைந்த சூரொடு
தளமஞ்சப்பொரு தெழுந்து தீயுகள்
கிரவுஞ்சக்கிரி வகிர்த்த வேலுள பெருமாளே.
திருப்பனந்தாள்
872. கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
யென்றே செப்பிய  மொழிமாதர்
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
னந்தா னித்தரை  மலைபோலே
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
னந்தா னிப்படி  யுழலாமல்
மங்கா நற்பொரு ளிந்தா வற்புத
மென்றே யிப்படி  அருள்வாயே
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
மண்டா நற்றவர்  குடியோட
எங்கே யக்கரி யெங்கே யிக்கிரி
யென்றே திக்கென  வருசூரைப்
பந்தா டித்தலை விண்டோ டக்களம்
வந்தோ ரைச்சில  ரணகாளிப்
பங்கா கத்தரு கந்தா மிக்கப
னந்தா ளுற்றருள்  பெருமாளே.
திருவிடைமருதூர்
873. அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினிலருமையிடமொளுமொளெனவுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் அவரொரு  பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவியாய வோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் அவியுறு  சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள் 
திடுதிடென நுழைவதன் முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா விதிதனை  நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேளமேசொலா யாளி வாயராய் மிடையுற  வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் மனையவள்  மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் மனிதர்கள்  பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமோ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையோடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனி  லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா இமையவர்  பெருமாளே.
874. இலகு குழைகிழிய வூடு போயுலவி
யடர வருமதன னூல ளாவியெதி
ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ திந்தநீலம்
இனிமை கரைபுரள வாகு லாவுசரி
நெறிவு கலகலென வாசம் வீசுகுழ
லிருளின் முகநிலவு கூர மாணுடைய  கன்றுபோக
மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
லிறுக இறுகியநு ராக போகமிக
வளரு மிளகுதன பார மீதினில்மு  யங்குவேனை
மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி
வசன முடையவழி பாடு சேருமருள்  தந்திடாதோ
கலக அசுரர்கிளை மாள மேருகிரி
தவிடு படவுதிர வோல வாரியலை
கதற வரியரவம் வாய்வி டாபசித  ணிந்தபோகக்
கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
பரவு மமரர்குடி யேற நாளும்விளை
கடிய கொடியவினை வீழ வேலைவிட  வந்தவாழ்வே
அலகை யுடனமட தாடு தாதைசெவி
நிறைய மவுனவுரை யாடு நீபஎழி
லடவி தனிலுறையும் வேடர் பேதையைம  ணந்தகோவே
அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
கருது குமரகுரு நாத நீதியுள
தருளுமிடைமருதில்மேவுமாமுனிவர்  தம்பிரானே.
875. படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன்  செம்பொன்மேனிப்
பரமனெழில் புனையுமர வங்களும் கங்கையும்
திருவளரு முளரியொடு திங்களும் கொன்றையும்
பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந்  துன்றுமூலச்
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
சரவணையில் வருமுதுலி கொந்தகன் கந்தனென்  றுய்ந்துபாடித்
தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ்  சிந்தியாதோ
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் கண்டுசேரக்
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந்  துங்கவேலா
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந்  தங்குமார்பா
அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்
றழகுபெற நெறிவரு யண்டருந் தொண்டுறுந்  தம்பிரானே.
876. புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
புளகிதஅபி ராம பூஷித  கொங்கையானை
பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீதுதாவடி
பொருவனகணை போல்வி லோசன  வந்தியாலே
மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன
வெகுவிதபரி தாப வாதனை  கொண்டுநாயேன்
மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின்
விதரணசிவ ஞான போதகம்  வந்துதாராய்
எழுகிரிநிலையோடவாரிதி மொகுமொகுவென வீசமேதினி
யிடர்கெடஅசு ரேசர் சேனைமு  றிந்துபோக
இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட
ரணமுககண பூத சேனைகள்  நின்றுலாவச்
செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
செயசெயமுரு காகு காவளர்  கந்தவேளே
திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
திருவிடைம தூரில் மேவிய  தம்பிரானே.
திருபுவனம் (தஞ்சாவூர்) - திரிபுவனம்
877. தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
சத்திக் கச்சில தித்திக் கப்படும்   அன்புபேசித்
தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன  தொண்டையூறல்
கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி
கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப  தம்பெறேனோ
முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
முத்தச் சித்ரத னத்துக் கிச்சித  அம்புராசி
முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
முட்டப்பெட்டெழ வெட்டிக்குத்தும  டங்கல்வீரா
அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை
அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
னத்துப்பொற்புறுசித்திச் சித்தர்கள்  தம்பிரானே.
கும்பகோணம்
878. இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
டின்பரசப் பாலமுதச்  சுவைமேவு
எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச்  சபையூடே
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக்  கடல்மூழ்கிக்
கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக்  கருள்வாயே
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித்  தவிலோசை
சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக்  கதிர்வேலா
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத்  தரைமீதே
கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
கும்பகொணத் தாறுமுகப்  பெருமாளே.
879. தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
றொந்தமெனப் பாயுமுலைக்  கனமாதர்
தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
தொங்கல்மயிற் சாயலெனக்  குழல்மேவிச்
செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
செங்கயலைப் போலும்விழிக்  கணையாலே
சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்
திந்திமெனுற் றாடுமவர்க்  குழல்வேனோ
தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
சந்தமயிற் சாய்விலகிச்  சிறைபோகச்
சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள் விழத்
தங்கநிறத் தாள்சிறையைத்  தவிர்மாயோன்
கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
கொண்டுவளைத் தேமகிழச்  சுதனீண
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்
கும்பகொணத் தாறுமுகப்  பெருமாளே.
880. கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
கெந்தவா சப்புழுகு  மணநாறும்
கிச்புரீ சக்களப கொங்கையா னைச்சிறிது
சிஞ்சுகா ணப்பெருகி  யடியேனும்
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
வண்டனா கப்புவியி  லுழலாமல்
வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா ளைத்தினமு  மருள்வாயே
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரிய
ளைந்துவீ ழப்பொருத  கதிர்வேலா
அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
னன்புளா ரைச்சிறையி  டசுவோரைக்
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை  யரிவோனே
கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
கும்கோ ணத்திலுறை  பெருமாளே.
881. பஞ்சுசேர் நிர்த்தப்  பதமாதர்
பங்கமார் தொக்கிற்  படியாமற்
செஞ்சொல்சேர் சித்ரத்  தமிழாலுன்
செம்பொனார் வத்தைப்  பெறுவேனோ
பஞ்சபா ணத்தற்  பொருதேவர்
பங்கில்வாழ் சத்திக்  குமரேசா
குஞ்சரீ வெற்புத்  தனநேயா
கும்பகோ ணத்திற்  பெருமாளே.
882. மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
வாசமலர் சிந்து  குழல்கோதி
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க
மால்பெருகி நின்ற  மடவாரைச்
சாலைவழி வந்து போமவர்க ணின்று
தார்குழல்கள் கண்டு  தடுமாறித்
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி
சாலமிகு நொந்து   தவியாமல்
காலையிலெ ழுந்து னாமமெமொ ழிந்து
காதலுமை மைந்த  எனவோதிக்
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்
காணஅரு ளென்று  பெறுவேனோ
கோலமுட னன்று சூர்படையின் முன்பு
கோபமுட னின்ற  குமரேசா
கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப
கோணநகர் வந்த  பெருமாளே.
883. கறுத்த குஞ்சியும் வெளிறியெ ழுங்கொத்
துருத்த வெண்பலு மடையவி ழுந்துட்
கருத்து டன்திகழ் மதியும ருண்டச்  சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகுமு டங்கக்
கழுத்தில் வந்திளை யிருமலொ துங்கக்  கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகைந டுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள்வி ளம்பச்  சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழியலொ ழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற்  றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறுகு ழம்பப்
புகட்ட ரங்கிய விரகது ரங்கத்  திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரியநெ ருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப்  பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக்  கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருகசி கண்டிப்
பரிச்சு மந்திடு குமரக டம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப்  பெருமாளே.
884. செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு  முடலூடே
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
இரைத்திடு டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை  யனைவோருங்
கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்திதி டுஞ்சட மோபொடி யாய்விடு  முடல்பேணிக்
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு  மருள்வாயே
தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ  டடல்பேரி
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள்  புரிவோனே
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திருப்பு யந்தரு மோகன மானினை  யணைவோனே
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர்  பெருமாளே.
885. கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
களப முலை புளகமெழ நேரான வேல்விழிகள்
கயல்பொருது செயலதென நீள் பூசலாபநல  கனிவாயின்
கமழ்குமுத அதரஇதழ் தேனூறல் பாயமிகு
கமலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை
கலகலென மொழிபதன மாமோக காதலது  கரைக
தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை
கருவருட லொருவரென நாணாது பாயல்மிசை
யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு  மிமையாதே
இரவினிடை துயிலுகினும் யாரொடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை ஈராறு தோள்நிரையும்
இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை  அருள்வாயே
உரியதவ நெறியில்நம நாராய ணயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
னுனதிறைவ னெதனிலுள னோதய டாவெனுமு  னுறுதூணில்
உரமுடைய அரிவடிவ தாய்மோதி விழவிர
லுகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு  முயர்வாக
வரியளிக ளிசைமுரல வாகான தோகையின
மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
வளர்கமுகின் விரிகுலைகள்பூ ணார மாகியிட  மதில்சூழும்
மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள்  பெருமாளே.
கொட்டையூர்
886. பட்டுமணிக் கச்சிறுகக் கட்டியவிழ்த் துத்தரியப்
பத்தியின்முத் துச்செறிவெற்  பிணையாமென்
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
பட்டுருகிக் கெட்டவினைத்  தொழிலாலே
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத்  திரிவேனைத்
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத்  தருள்வாயே
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
துக்கமுறச் சொர்க்கமுறக்  கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
சுற்றுவனத் திற்சிறைவைத்  திடுதீரன்
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
குற்றமறச் சுற்றமறப்  பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப்  பெருமாளே.
சிவபுரம்
887. மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
புனலு டன்புவி கூடிய தோருடல்
வடிவு கொண்டதி லேபதி மூணெழு  வகையாலே
வருசு கந்துய ராசையி லேயுழல்
மதியை வென்றுப ராபர ஞானநல்
வழிபெ றும்படி நாயடி யேனைநி  னருள்சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி
விமலி யெண்குண பூரணி காரணி
சிவைப ரம்பரை யாகிய பார்வதி  அருள்பாலா
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
அசுரர் தங்கிளை யானது வேரற
சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு  முருகோனே
கனக னங்கையி னாலறை தூணிடை
மனித சிங்கம தாய்வரை பார்திசை
கடல்க லங்கிட வேபொரு தேயுகிர்  முனையாலே
ககத வென்றுடல் கீணவ னாயிரு
ருதிர முஞ்சித றாதமு தாயுணு
கமல வுந்திய னாகிய மால்திரு  மருகோனே
தினக ரன்சிலை வேளருள் மாதவர்
சுரர்க ளிந்திர னாருர காதிபர்
திசைமு கன்செழு மாமறை யோர்புக  ழழகோனே
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
அகமொ டம்பொனி னாலய நீடிய
சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக  பெருமாளே.
திருநாகேஸ்வரர் - திருநாகேச்சுரம்
888. ஆசார வீனக் குதர்க்க ஆட்டங்கள்
மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவி னூசைச் செகுத்த துட்டர்கள்  பரதாரம்
ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்க
ளாவேச நீரைக் குடித்த துட்டர்கள்  தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள்  குருசேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப்பி றப்பினி  லுழல்வாரே
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி
பேரார வாரச் சமுத்தி ரத்தினில்
மீளாம லோடித் துரத்தி யுட்குறு  மொருமாவை
வேரொடு வீழத் தறித்த டுக்கிய
போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்
வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு  வயலூரா
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
மாயாவி காரத் தியக்க றுத்தருள்
ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு  வடிவான
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய  பெருமாளே.
கூந்தலூர் (கும்பகோணம் அருகில்)
889. தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை  மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய  தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய  வினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறுபரிவொடு வீழ்ந்து தாடொழ  அருள்வாயே
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன்  மருகோனே
உனதடி யவர்புக ழாய்ந்த நூலினை
ரமர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி  லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ  முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை  பெருமாளே.
திருச்சத்தி முற்றம் (திருச்சத்தி முத்தம்)
890. கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக
வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர்
கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி  யணியாலே
கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்
கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை
கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனை  விலகாது
கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய
லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு
கயல்விழிவெ ருட்டித்து ரத்திச்செ விக்குழையின்  மிசைதாவும்
களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு
கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள்
கணியினில கப்பட்ட முத்தத்து யர்ப்படுவ  தொழியேனோ
அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்
அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு  மழகோனே
அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு
மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு  மதிசூரா
விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவு
ளுலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக
விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு  மொருமாயோன்
விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய
விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு  பெருமாளே.
திருவலஞ்சுழி
891. மகர குண்டல மீதே மோதுவ
வருண பங்கய மோபூ வோடையில்
மருவு செங்கழு நீரோ நீவிடு  வடிவேலோ
மதன்வி டுங்கணை யோவா ளோசில
கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை
மறலி யென்பவ னோமா னோமது  நுகர்கீத
முகர வண்டின மோவான் மேலெழு
நிலவ ருந்துபு ளோமா தேவருண்
முதிய வெங்கடு வோதே மாவடு  வகிரோபார்
முடிவெ னுங்கட லோயா தோவென
வுலகு கண்கொடு நேரே சூறைகொள்
முறைய றிந்தப சாசே போல்பவ  ருறவாமோ
நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
தசமு கன்படை கோடா கோடிய
நிருத ரும்பட வோரே வேவியெ  யடுபோர்செய்
நெடிய னங்கனு மானோ டேயெழு
பதுவெ ளங்கவி சேனா சேவித
நிருப னம்பரர் கோமான் ராகவன்  மருகோனே
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
சிவச டங்கமொ டீசா னாதிகள்  சிவமோனார்
தெளியு மந்த்ரக லாபா யோகிக
ளயல்வி ளங்குசு வாமீ காமரு
திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள்  பெருமாளே.
கீழ்பழையாறை வடதளி (திருப்பழையாறை)
892. தோடுற்றுக் காதள வோடிய
வேலுக்குத் தானிக ராயெழு
சூதத்திற் காமனி ராசத  விழியாலே
சோடுற்றத் தாமரை மாமுகை
போலக்கற் பூரம ளாவிய
தோல்முத்துக் கோடென வீறிய  முலைமானார்
கூடச்சிக் காயவ ரூழிய
மேபற்றிக் காதலி னோடிய
கூளச்சித் தாளனை மூளனை  வினையேனைக்
கோபித்துத் தாயென நீயொரு
போகத்தைப் பேசவ தாலருள்
கோடித்துத் தானடி யேனடி  பெறவேணும்
வேடிக்கைக் காரவு தாரகு
ணாபத்மத் தாரணி காரண
வீரச்சுத் தாமகு டாசமர்  அடுதீரா
வேலைக்கட் டாணிம காரத
சூரற்குச் சூரனை வேல்விடு
வேழத்திற் சீரரு ளூறிய  இளையோனே
ஆடத்தக் காருமை பாதியர்
வேதப்பொற் கோவண வாடையர்
ஆலித்துத் தானரு ளூரிய  முருகோனே
ஆடப்பொற் கோபுர மேவிய
ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை
யாறைப்பொற் கோயிலின் மேவிய  பெருமாளே.
சக்கரப்பள்ளி (திருச்சக்கிரப்பள்ளி)
893. திட்டெ னப்பல செப்பைய டிப்பன
பொற்கு டத்தையு டைப்பன வுத்தர
திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன  வதின்மேலே
செப்ப வத்திம ருப்பையொ டிப்பன
புற்பு தத்தையி மைப்பில ழிப்பன
செய்த்த லைக்கம லத்தைய லைப்பன  திறமேய
புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன
சித்த முற்பொர விட்டுமு றிப்பன
புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன  இளநீரைப்
புக்கு டைப்பன முத்திரை யிட்டத
னத்தை விற்பவர் பொய்க்கல் விக்குழல் 
புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு  தருள்வாயே
துட்ட நிக்ரக சத்தித ரப்ரப
லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய
துட்க ரக்கவி தைப்புக லிக்கர  செனுநாமச்
சொற்க நிற்கசொ லட்சண தட்சண
குத்த ரத்தில கத்திய னுக்கருள் 
சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண்  முகநாத
தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ
ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ர
சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி  மயிலேறி
சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்
மிக்க ரத்நம திற்புடை சுற்றிய
சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள்  பெருமாளே.
ஆடுதுறை (திருக்குரங்காடுதுறை)
894. அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத்  திரடோளும்
அலந்தாம மணித்திரளைப் புரண்டாட நிரைத்தகரத்
தணிந்தாழி வனைக்கடகச்  சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப்  புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற்  புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச்  சிறைமீளும்
இளங்காள முகிற்கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற்  கினியோனே.
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கயிலைத்  தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப்  பெருமாளே.
895. குறித்தநெஞ் சாசை விரகிகள்
நவிற்றுசங் கீத மிடறிகள்
குதித்தரங் கேறு நடனிகள்  எவரோடும்
குறைப்படுங் காதல் குனகிகள்
அரைப்பணங் கூறு விலையினர்
கொடுக்கொடும் பார்வை நயனிகள்  நகரேகை
பொறித்தசிங் கார முலையினர்
வடுப்படுங் கோவை யதழிகள்
பொருட்டினந் தேடு கபடிகள்  தவர்சோரப்
புரித்திடும் பாவ சொருபிகள்
உருக்குசம் போக சரசிகள்
புணர்ச்சிகொண் டாடு மருளது  தவிர்வேனோ
நெறித்திருண் டாறு பதமலர்
பணத்தபைங் கோதை வகைவகை
நெகிழ்க்குமஞ் சோதி வனசரி  மணவாளா
நெருக்குமிந்த் ராதி யமரர்கள்
வளப்பெருஞ் சேனை யுடையவர்
நினைக்குமென் போலு மடியவர்  பெருவாழ்வே
செறித்தமந் தாரை மகிழ்புனை
மிகுத்ததண் சோலை வகைவகை
தியக்கியம் பேறு நதியது  பலவாறுந்
திரைக்கரங் கோலி நவமணி
கொழித்திடுஞ் சாரல் வயலணி
திருக்குரங் காடு துறையுறை  பெருமாளே.
896. குடங்கள் நிறைத்தேறு தடங்கள் குறித்தார
வடங்கள் அசைத்தார  செயநீலங்
குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது
குளிர்ந்த முகப்பார்வை  வலையாலே
உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
யுலந்து மிகக்கோலு  மகலாதே
உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு
முரங்கொள பொற்பாத  மருள்வாயே
விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட
விதங்கொள் முதற்பாய  லுறைமாயன்
விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
விளங்கு முகிற்கான  மருகோனே
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
தழங்கு மியற்பாடி  யளிசூழத்
தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
தலங்க ளிசைப்பான  பெருமாளே.
காவளூர் (தஞ்சாவூர் திட்டை அருகில்)
897. மானை நேர்விழி யொத்தம டந்தையர்
பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்
வாச மாமலர் கட்டும ரம்பைய  ரிருதோளும்
மார்பு மீதினு முத்துவ டம்புரள்
காம பூரண பொற்கட கம்பொர
வாரி நீலவ ளைக்கைபு லம்பிட  அநுராகம்
ஆன நேரில்வி தத்திர யங்களும்
நாண மாறம யக்கியி யம்பவும்
ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும்  உறவாடி
ஆர வாரந யத்தகு ணங்களில்
வேளி னூல்களை கற்றவி ளம்பவும்
ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை  யடைவேனோ
சான கீதுய ரத்தில ருஞ்சிறை
போன போதுதொ குத்தசி னங்களில்
தாப சோபமொ ழிப்பஇ லங்கையு  மழிவாகத்
தாரை மானொரு சுக்கரி பன்பெற
வாலி வாகுத லத்தில்வி ழுந்திட
சாத வாளிதொ டுத்தமு குந்தனன்  மருகோனே
கான வேடர்சி றுக்குடி லம்புன
மீதில் வாழித ணத்திலு றைந்திடு
காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு  மணிமார்பா
காவு லாவிய பொற்கமு கின்திரள்
பாளை வீசம லர்த்தட முஞ்செறி
காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி  பெருமாளே.
தஞ்சாவூர் (தஞ்சை)
898. அஞ்சன வேல்விழி  மடமாதர்
அங்கவர் மாயையி  லலைவேனோ
விஞ்சுறு மாவுன  தடசேர
விம்பம தாயரு  ளருளாதோ
நஞ்சமு தாவுணு  மரனார்தம்
நன்கும ராவுமை  யருள்பாலா
தஞ்சென வாமடி  யவர்வாழத்
தஞ்சையில் மேவிய  பெருமாளே.
899. அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்
தஞ்ச வேமணிக்  குழைவீசும்
அங்க ணாரிடத் தின்ப சாகரத்
தங்கி மூழ்குமிச்  சையினாலே
எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்
திந்திர சால இப்  ப்ரமைதீர
இங்கு வாவெனப் பண்பி னாலழைத்
தெங்கு மானமெய்ப்  பொருள்தாராய்
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
கொண்டல் போல்குழற்  கனமேருக்
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோசலற்  குணவேலா
சம்ப சாரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக்  குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப்  பெருமாளே.
900. கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து
கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து  தெருவூடே
கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து
வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து
கண்களாகியகூர வேலைவிட்டெறிந்து  விலைகூறி
வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து
கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி
மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து  மயல்பூணு
மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க  வருவாயே
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன்  மருகோனே
எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு  கதிர்வேலா
சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு  மணிமார்பா
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்தமர்ந்த  பெருமாளே.
சப்தஸ்தானம் (சப்ததானம்)
901. மருவு லாவிடு மோதிகு லைப்பவர்
சமர வேலெனு நீடுவி ழிச்சியர்
மனதி லேகப டூருப ரத்தைய  ரதிகேள்வர்
மதன னோடுறழ் பூசலி டைச்சிய
ரிளைஞ ராருயிர் வாழுமு லைச்சியர்
மதுர மாமொழி பேசுகு ணத்தியர்  தெருமீதே
சருவி யாரையும் வாவென ழைப்பவர்
பொருளி லேவெகு ஆசைப ரப்பிகள்
சகல தோதக மாயைப டிப்பரை  யணுகாதே
சலச மேவிய பாதநி னைத்துமு
னருணை நாடதி லோதுதி ருப்புகழ் 
தணிய வோகையி லோதஎ னக்கருள்  புரிவாயே
அரிய கானக மேவுகு றத்தித
னிதணி லேசில நாளும னத்துட
னடவி தோறுமெ வாழியல் பத்தினி  மணவாளா
அசுரர் வீடுகள் நூறுபொ டிப்பட
உழவர் சாகர மோடியொ ளித்திட
அமரர் நாடுபொன் மாரிமி குத்திட  நினைவோனே
திருவின் மாமர மார்பழ னப்பதி
அயிலு சோறவை யாளுது றைப்பதி
திசையி னான்மறை தேடிய முற்குடி  விதியாதிச்
சிரமு மாநிலம் வீழ்தரு மெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
திருவை யாறுட னேழுதி ருப்பதி  பெருமாளே.
திருவையாறு
902. சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
சுடர்கொள் வாளிணை யோபினை யோவிழி
சுரர்த மாரமு தோகுயி லோமொழி  யிதழ்கோவை
துவர தோஇல வோதெரி யாஇடை
துகளி லாவன மோபிடி யோநடை
துணைகொள் மாமலை யோமுலை தானென  உரையாடிப்
பரிவி னாலெனை யாளுக நானொரு
பழுதி லானென வாணுத லாரொடு
பகடி யேபடி யாவொழி யாஇடர்  படுமாயப்
பரவை மீதழி யாவகை ஞானிகள்
பரவு நீள்புக ழேயது வாமிகு
பரம வீடது சேர்வது மாவது  மொருநாளே
கரிய மேனிய னானிரை யாள்பவன்
அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
கனகன் மார்பது பீறிய வாளரி  கனமாயக்
கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
கணையி னால்நில மீதுற நூறிய
கருணை மால்கவிகோபக்ரு பாகரன்  மருகோனே
திரிபு ராதிகள் தூளெழ வானவர்
திகழ வேமுனி யாவருள் கூர்பவர்
தெரிவை பாதியர் சாதியி லாதவர்  தருசேயே
சிகர பூதர நீறுசெய் வேலவ
திமிர மோகர வீரதி வாகர
திருவை யாறுறை தேவக்ரு பாகர  பெருமாளே.
திருப்பூந்துருத்தி
903. வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர
வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ்  உண்டுதோயா
வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன
வாஞ்சை யிற்களி கூரா வாள்விழி
மேம்ப டக்குழை மீதே மோதிட  வண்டிராசி
ஓங்கு மைக்குழல் சாதா வீறென
வீந்து புட்குரல் கூவா வேள்கலை
யோர்ந்தி டப்பல க்ரீடா பேதமு  யங்குமாகா
ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை
தீர்ந்து னக்கெளி தாயே மாதவ
மூன்று தற்குமெய்ஞ் ஞான சாரம்வ  ழங்குவாயே
தாங்கு நிற்சரர் சேனா நீதரு
னாங்கு ருத்தகு மாரா கோஷண
தாண்ட வற்கருள் கேகீ வாகன  துங்கவீரா
சாங்கி பற்சுகர் சீநா தீசுர
ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ  லங்கள்மார்பா
பூங்கு ளத்திடை தாரா வோடன
மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
போன்ற விக்ரக சூரா ரீபகி  ரண்டரூபா
போந்த பத்தர்பொ லாநோய் போயிட
வேண்ட நுக்ரக போதா மேவிய
பூந்து ருத்தயில் வாழ்வே தேவர்கள்  தம்பிரானே.
தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்)
904. முகிலைச் காரைச் சருவிய குழலது
சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர்  முகம்வேர்வ
முனையிற் காதிப் பொருகணை யினையிள
வடுவைப் பானற் பரிமள நறையிதழ்
முகையைப் போலச் சமர்செயு மிருவிழி  குழைமோதத்
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
பருகிக் காதற் றுயரற வளநிறை
துணைபொற் றோளிற் குழைவுற மனமது  களிகூரச்
சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத
நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை
துவளக் கூடித் துயில்கினு முனதடி  மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள்  களமீதே
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு  குமரேசா
செகசெச் சேசெச் செகவென முரசொலி
திகழச் சூழத் திருநட மிடுபவர்
செறிகட் காளப் பணியணி யிறையவர்  தருசேயே
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
கலசத் தாமத் தனகிரி தழுவிய
திருநெய்த் தானத் துறைபவ சுரபதி  பெருமாளே.
கீழப்பழுவூர் (திருப்பழுவூர்)
905. விகட சங்கட வார்த்தை பேசிகள்
அவல மங்கைய ரூத்தை நாறிகள்
விரிவ டங்கிட மாற்றும் வாறென  வருவார்தம்
விதம்வி தங்களை நோக்கி யாசையி
லுபரி தங்களை மூட்டி யேதம
இடும ருந்தொடு சோற்றை யேயிடு  விலைமாதர்
சகல மஞ்சன மாட்டி யேமுலை
படவ ளைந்திசை மூட்டி யேவரு
சரச இங்கித நேத்தி யாகிய  சுழலாலே
சதமு ழங்கிட வாய்ப்ப ணானது
மலர வுந்தியை வாட்டி யேயிடை
தளர வுங்கணை யாட்டும் வேசிய  ருறவாமோ
திகிரி கொண்டரு ளாக்கி யேயிரு
தமையர் தம்பியர் மூத்த தாதையர்
திலக மைந்தரை யேற்ற சூரரை  வெகுவான
செனம டங்கலு மாற்றி யேயுடல்
தகர அங்கவர் கூட்டை யேநரி
திருகி யுண்டிட ஆர்த்த கூளிக  ளடர்பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரத
முடிய அன்பர்க ளேத்த வேயரி
யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவயன்  மருகோனே
அமர ரந்தணர் போற்ற வேகிரி
கடல திர்ந்திட நோக்கு மாமயி
லழகொ டும்பழ வூர்க்குள் மேவிய  பெருமாளே.
பெரும்புலியூர்
906. சதங்கைமமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப்  புயமீதே
தனங்கள்குவ டாடப் படந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற்  குழையாட
இதங்கொளமயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக்  குழலாரோ
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத்  தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற்  றிடுவோனே
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக்  களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக்  கொருபாலா
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற்  பெருமாளே.
திருநெடுங்குளம் (நெடுங்களம்)
907. பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
பஞ்செனஎ ரிந்துபொடி  யங்கமாகிப்
பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி
பஞ்சவர்வி யன் பதியு  டன்குலாவக்
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
கொஞ்சியசி லம்புகழல்  விந்துநாதங்
கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை
கொன்றருள்நீ றைந்தகழ  லின்றுதாராய்
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
இன்பரச கொங்கைகர  முங்கொளாமல்
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
இந்துநுத லும்புரள  கங்குல்மேகம்
அஞ்சுமள கம்புரள மென்குகை ளும்புரள
அம்பொனுரு மங்கைமண  முண்டபாலா
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியி
லண்டரய னும்பரவு  தம்பிரானே.
குறட்டி (புதுக்கோட்டை அருகில்)
908. கூரிய கடைக்க ணாலு மேருநிக ரொப்ப தான
கோடதனில் மெத்த வீறு  முலையாலும்
கோபவத ரத்தி னாலு மேவிடுவிதத்து ளால
கோலவுத ரத்தினாலு  மொழியாலும்
சீரியவ ளைக்கை யாலு மேகலைநெ கிழ்ச்சி யேசெய்
சீருறுநு சுப்பினாலும்  விலைமாதர்
சேறுதனி னித்த மூழ்கி நாளவமி றைத்த மாயை
சேர்தருமு ளத்தனாகி  யுழல்வேனோ
தாரணித னக்குள் வீறி யேசமர துட்ட னான
ராவணன் மிகுத்த தானை  பொடியாகச்
சாடுமுவ ணப்ப தாகை நீடுமுகி லொத்த மேனி
தாதுறைபு யத்து மாயன்  மருகோனே
வாணரமு ரித்து மாதர் மேகலைவ ளைக்கை நாண
மாப லிமு தற்கொ ணாதன்  முருகோனே
வாருறுத னத்தி னார்கள் சேருமதி ளுப்ப ரீகை
வாகுளகு றட்டி மேவு  பெருமாளே.
909. நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
நீள்குளிர் வெதுப்பு வேறு  முளநோய்கள்
நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
நீடிய விரத்த மூளை  தசைதோல்சீ
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
பாய்பிணி யியற்று பாவை  நரிநாய்பேய்
பாறொடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
பாழுட லெடுத்து வீணி  லுழல்வேனோ
நாரணி யறத்தி னாரி ஆறுசம யத்தி பூத
நாயக ரிடத்து காமி  மகமாயி
நாடக நடத்தி கோல நீலவரு ணத்தி வேத
நாயகி யுமைச்சி நீலி  திரிசூலி
வாரணி முலைச்கி ஞான பூரணி கலைச்சி நாக
வாணுத லளித்த வீர  மயிலோனே
மாடமதில் முத்து மேடை கோபுர மணத்த சோலை
வாகுற குறட்டி மேவு  பெருமாளே.
அத்திப்பட்டு (புதுக்கோட்டை அருகில்)
910. கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
கனகமணி சிவிகையில் மர்த்திக் கட்டையினிலி  டைபோடாக்
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
கலையையுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
கணகணென எரியவுடல் கட்டுக் கக்ஷியவர்  வழியேபோய்
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
மனிதர் தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன்  மலராலே
மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
வழியையி துவழியென வுரைத்துப் பொற்கழல்கள்  தருவாயே
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
இரணியத னுக்கைப் பற்றியியல்
புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி  லுறுமேவும்
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
பொறியரவின் மிசை துயிலு சுத்தப் பச்சைமுகில்  மருகோனே
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு  மிளையோனே
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை  பெருமாளே.
அத்திக்கரை (புதுக்கோட்டை அருகில்)
911. தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
சுற்றிக்கல னிட்டுக் கடிதரு
சொக்குப்புலி யப்பிப் புகழுறு  களியாலே
சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
சொற்றப்பிய கத்தைப் புரிபுல
சுற்றுத்துட னுற்றிப் புவியிடை  யலையாமல்
முக்குற்றம கற்றிப் பலகலை
கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்
முத்தர்க்கடி மைப்பட் டிலகிய  அறிவாலே
முத்தித்தவ சுற்றுக் கதியுறு
சத்தைத் தெரி சித்துக் கரையகல்
முத்திப்புண ரிக்குட் புகவர  மருள்வாயே
திக்கெட்டும் டக்கிக் கடவுள
ருக்குப்பணி கற்பித் தருளறு
சித்தத்தொட டுத்துப் படைகொடு  பொருசூரர்
செச்சைப்புய மற்றுப் புகவொரு
சத்திப்படை விட்டுச் சுரர்பதி
சித்தத்துயர் கெட்டுப் பதிபெற  அருள்வோனே
அக்கைப்புனை கொச்சைக் குறமக
ளச்சத்தையொ ழித்துக் கரிவரும்
அத்தத்தி லழைத்துப் பரிவுட  னணைவோனே
அப்பைப்பிறை யைக்கட் டியசடை
அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
அத்திக்கரை யிச்சித் துறைதரு  பெருமாளே.
கந்தனூர் (புதுக்கோட்டை அருகில்)
912. விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
மின்சரா சர்க்குலமும்  வந்துலாவி
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
மிஞ்சநீ விட்டவடி  வங்களாலே
வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
வந்துதா இக்கணமெ  யென்றுகூற
மைந்தர்தா விப்புகழ் தந்தைதா யுற்றுருகி
வந்துசே யைத் தழுவல்  சிந்தியாதோ
அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
மங்கிபார் வைப்பறையர்  மங்கிமாள
அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகி
ழண்டரே றக்கிருபை  கொண்டபாலா
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடைய
ரெந்தைபா கத்துறையு  மந்தமாது
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுக
ழெந்தைபூ சித்துமகிழ்  தம்பிரானே.
வாலிகொண்டபுரம் (பெரம்பலூர் அருகில்)
913. ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத  வும்பல்போலே
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியது போத மென்கசில
ரேய்த னங்கள் தனி வாகு சிந்தைவச  னங்கள்பேசிச்
சீத தொங்லழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லூத தண்டிகையி  லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்த்டவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனத பாத தொண்டனென  அன்புதாராய்
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு  பங்கினோடச்
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத  லன்புகூர
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட  னங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்துதினை
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
வாலி கொண்டபுர மேய மர்ந்துவளர்  தம்பிரானே.
மாந்துறை (திருமாந்துறை)
914. ஆங்குடல்வ ளைந்து நீங்குபல்நெ கிழ்ந்து
ஆய்ஞ்சுதளர் சிந்தை  தடுமாறி
ஆர்ந்துளக டன்கள் வாங்கவும றிந்து
ஆண்டுபல சென்று  கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குடல் நொந்து
ஓய்ந் துணரவ ழிந்து  உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
ஊன்றியப தங்கள்  தருவாயே
வேங்கையுமு யர்ந்த தீம்புனமி ருந்த
வேந்திழையி னின்ப  மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டியப தங்கள்  புரிவோனே
மாங்கனியு டைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல்வி ளைந்த  வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
மாந்துறைய மர்ந்த  பெருமாளே.
வயலூர்
915. அரிமரு கோனேநமோவென் றறுதியி லானேநமோவென்
றறுமுக வேளே நமோவென்  றுனபாதம்
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
றருணசொ ரூபா நமோவென்  றுளதாசை
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
பகைமயில் வேலா யுதாடம்  பரநாளும்
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழைநானுன்
பதிபசு பாசோப தேசம்  பெறவேணும்
கரதல சூலாயுத தாமுன் சலபதி போலார வாரம்
கடினசு ராபான சாமுண்  டியுமாடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாப தீயென்
களமிசை தானேறி யேயஞ்  சியசூரன்
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
குடல்கொள வேபூச லாடும்  பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
குளிர்வய லூரார மேவும்  பெருமாளே.
916. ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
யாடையணி காட்டி  அநுராக
ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
ஆதரவு காட்டி  எவரோடும்
ஈரநகை காட்டி நேரமிகை காட்டி
யேவினைகள் காட்டி  யுறவாடி
ஏதமயல் காட்டு மாதல்வலை காட்டி
யீடழிதல் காட்ட  லமையாதோ
வீரவப ராட்டு சூரர்படை காட்டில்
வீழனலை யூட்டி  மயிலூர்தி
வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு
வேலைவிளை யாட்டு  வயலூரா
சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
சீலிகுற வாட்டி  மணவாளா
தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி
தேவர்சிறை மீட்ட  பெருமாளே.
917. இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத
மத்தக்க ளிற்றையெதிர் 
புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை
கட்டிப்பி ணித்திறுகி
யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி
முத்தத்தை யிட்டுநக   தந்தமான
இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையி
லெற்றிக்க லக்கமுற
இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது
தொட்டுத்தி ரித்துமிக
இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி
செக்கச்சி வக்கவளை  செங்கைசோர
அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல
கொத்துக்கு ழற்குலைய
மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர
நெக்குக்க ருத்தழிய
அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்கரண
வர்க்கத்தி னிற்புணரு  மின்பவேலை
அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர
கட்டுப்பொ றிச்சியர்கள்
மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை
யுற்றுத்து திக்கும்வகை 
அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்
ரக்ஷித்த ளித்தருள்வ  தெந்தநாளோ
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட
தத்தித்த ரித்தகுட
செகணசெசகணசக செக்கச்செ கச்செகண
சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி
தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி
தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி
டட்டட்ட   குட்டகுட
தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை
பக்கக்க ணப்பறைத வண்டைபேரி
வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை
பக்கத்தி னிற்சரிய
எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி
விட்டத்த மித்ததென
வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது
தொக்குக்கு னிப்புவிட  வென்றவேலா
வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி
சித்ரப்ர சித்தமுறு
அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி
தத்வத்தி றச்சிகர
வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி
தப்பற்று ரைக்கவல  தம்பிரானே.
918. இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
கலைகள் பலவறி தெருளிகள் மருளிக
ளெயிறு கடிபடு முதடிகள் பதடிகள்  எவரோடும்
இனிய நயமொழி பழகிக ளழகிகள்
படையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்
யமனு மிகையென வழிதரு முழிதரும்  விழிவாளால்
உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்
சிலுகு சிலரொடு புகலிக ளிகலிக
ளுறவு சொலவல துரகிகள் விரகிகள்  பிறைபோலே
உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
பகடி யிடவல கபடிகள் முகடிகள்
உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக  ளுறவாமோ
அலகை புடைபட வருவன பொருவன
கலக கணநிரை நகுவன தகுவன
அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன  பொடியாடி
அலரி குடதிசை யடைவன குடைவன
தரும வநிதையு மகிழ்வன புகழ்வன
அகில புவனமு மரகர கரவென  அமர்வேள்வி
திலத நுதலுமை பணிவரு செயமகள்
கலையி னடமிட வெரிவிரி முடியினர்
திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட  மயிலேறிச்
சிறிது பொழுதினிலயில்விடு குருபர
அறிவு நெறியுள அறுமுக இறையவ
த்ரிசிர கிரியயல் வயலியி லினிதுறை  பெருமாளே.
919. என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும்  கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும்  பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும்  தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும்  இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம்  தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம்  கண்டவேலா
மன்னா னதக்கனை முன்னால் முடித்தலை
வன்வாளி யிற்கொளும்  தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு  தம்பிரானே.
920. கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
கனிபோற் றுகிரிதழ்  எழிலாகும்
கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
கடிபோற் பணியரை  யெனவாகும்
உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
ளுடையாற் கெறுவித  நடையாலும்
ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்பாடும்
ஒழியாத் துயரது  தவிரேனோ
குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
கொளிவாய்ப் பலஅல  கைகள் பேய்கள்
கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
குடியேற் றியகுக  வுயர்தாழை
மடல்கீற் றினலெழு விரைபூப் பொழில்செறி
வயலூர்ப் பதிதனி  லுறைவோனே
மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
மகள்மேற் ப்ரியமுள  பெருமாளே.
921. கமலத் தேகு லாவு மரிவையை
நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
கலகக் காம நூலை முழுதுண  ரிளைஞோர்கள்
கலவிக் காசை கூர வளர்பரி
மளகற் பூர தூம கனதன
கலகத் தாலும் வானி னசையுமி  னிடையாலும்
விமலச் சோதி ரூப இமகர
வதனத் தாலு நாத முதலிய
விரவுற் றாறு கால்கள் சுழலிருள்  குழலாலும்
வெயிலெப் போதும் வீசு மணிவளை
அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்
விழியிற் பார்வை யாலு மினியிடர்  படுவேனோ
சமரிற் பூதம் யாளி பரிபிணி
கனகத் தேர்கள் யானை யவுணர்கள்
தகரக் கூர்கொள் வேலை விடுதிற  லுருவோனே
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்
புகழக் கானி லாடு பரிபுர
சரணத் தேக வீர அமைமன  மகிழ்வீரா
அமரர்க் கீச னான சசிபதி
மகள்மெய்த் தோயு நாத குறமக
ளணையச் சூழு நீத கரமிசை  யுறுவேலா
அருளிற் சீர்பொ யாத கணபதி
திருவக் கீசன் வாழும் வயலியி
னழகுக் கோவில் மீதில் மருவிய  பெருமாளே.
922. கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
களையுற்று மாயாது  மந்த்ரவாதக்
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது  கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு  நண்புளோர்செய்
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம்  வந்துதாராய்
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
மதுதுக்க மேயாக  மிஞ்சிடாமல்
அடமிட்ட வேல்வீர திருவெற்றி யூர்நாதர்
அருணச்சி காநீல  கண்டபார
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி
மலநிட்க ளாமாயை  விந்துநாதம்
வரசத்தி மேலான பரவத்து வேமேலை
வயலிக்குள் வாழ்தேவர்  தம்பிரானே.
923. குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
மருவு முருவமு மலமல மழகொடு
குலுவு பலபணி பரிமள மறுசுவை  மடைபாயல்
குளிரி லறையக மிவைகளு மலமல
மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல  மொருநாலு
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
யுலக கலைகளு மலமல மிலகிய
தொலைவி லுனைநினை பவருற வலதினி  யயலார்பால்
சுழல்வதினிதென வசமுடன் வழிபடு
முறவு மலமல மருளலை கடல்கழி
துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற  அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
விகட இறகுகள் பறையிட அலகைகள்  நடமாட
விபுத ரரகர சிவசிவ சரணென
விரவு கதிரமுதி ரிமகரன் வலம்வர
வினைகொள் நிசிரர் பொடிபட அடல்செயும்  வடிவேலா
மருது நெறுநெறு நெறுவென முறிபட
வுருளு முரலொடு தவழரி மருகசெ
வனச மலர்சுனை புலிநுழை முழையுடை  யவிராலி
மலையி லுறைகிற அறுமுக குருபர
கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
வயலி நகரியி லிறையவ அருள்தரு  பெருமாளே.
924. குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
குறியீர் தனி செறியீரினி  யென்றுபாடிக்
குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
குலையாவல்கு லளையாவிரு  கொங்கைமீதில்
பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
பகையேயென நினையாதுற  நண்புகூரும்
பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
பதிநேருநி னருளால்மெயு ணர்ந்திடேனோ
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
விசையேழ்பரி ரவிசேயெனு  மங்கராசன்
விசிகாகவ மயல்பேடிகைபடுபோதுசன் னிதியானவன்
விதிதேடிய திருவாளிய  ரன்குமரா
அயலூறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
யகிலாரம தெறிகாவிரி  வண்டல்மேவும்
அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
அமராபதி யதில்வாழ்பவர்  தம்பிரானே.
925. கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்கும்
கோதை மாதர் முலைக்கும்  குறியாலும்
கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்
கோதி வாரி முடிக்கும்  குழலாலும்
ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்
டாசை யாயினு நித்தந்  தளராதே
ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொ ருவர்க்கொன்
றாடல் தாள்க ளெனக்கின்  றருள்வாயே
சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்கும்
த்யாக சீல குணத்தன்  திருமாலும்
தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்
தேயு வான நிறத்தன்   புதல்வோனே
காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்கும்
காவி சூழ்வ யலிக்கும்  ப்ரியமானாய்
காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்கும்
கால னாடல் தவிர்க்கும்  பெருமாளே.
926. தாமரையின் மட்டு வாசமல ரொத்த
தாளிணைநி னைப்பி  லடியேனைத்
தாதவிழ்க டுக்கை நாகமகிழ் கற்ப
தாருவென மெத்தி  யவிராலி
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
வாவெனஅ ழைத்தென்  மனதாசை
மாசினைய றுத்து ஞானமுத ளித்த
வாரமினி நித்த  மறவேனே
காமனையெ ரித்த தீநயன நெற்றி
காதியசு வர்க்க  நதிவேணி
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
காதுடைய அப்பர்  குருநாதா
சோமனொ டருக்கன் மீனாலவு மிக்க
சோலையுடை சுற்று  வயலூரா
சூடிய தடக்கை வேல்கொடுவி டுத்து
சூர்தலை துணித்த  பெருமாளே.
927. திருவு ரூப நேராக அழக தான மாமாய
திமிர மோக மானார்கள்  கலைமூடும்
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
செருகு மால னாசார  வினையேனைக்
கருரவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
கனவி லாள்சு வாமீநின்  மயில்வாழ்வும்
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
கழலு நீப வேல்வாகு  மறவேனே
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
சயில நாரி பாகாதி  புதல்வோனே
சதம் கீவல் போர்மோவு குலிச பாணி மால்யானை
சகச மான சாரீசெ  யிளையோனே
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
வரையில் வீசு தாள்மாயன்  மருகோனே
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமலை
வயலி மீது வாழ்தேவர்   பெருமாளே.
928. நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ  இனிதூறும்
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
சுத்த மிடறது வளையோ கமுகோ
நிற்கு மிளமுலை குடமோ மலையோ  அறவேதேய்ந்
தெய்த்த இடையது கொடியோ துடியோ
மிக்க திருவரை அரவோ ரதமோ
இப்பொ னடியிணை மலரோ தளிரோ  எனமாலாய்
இச்சை விரகுடன் மடவா ருடனே
செப்ப மருளுட னவமே திரிவேன்
ரத்ன பரிபுர இருகா லொருகால்  மறவேனே
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
தெற்கு நரபதி திருநீ றிடவே
புக்க அனல்வய மிகஏ டுயவே  உமையாளதன்
புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
பொற்ப கவுணியர் பெருமா னுருவாய்  வருவோனே
புத்த முடையவுன் முகனே குகனே
வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
சத்தி கணபதி யிளையா யுளையா  யொளிகூருஞ்
சக்ர தரஅரி மருகா முருகா
உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்ப முளதட வயலூ ரியலூர்  பெருமாளே.
929. முலைம றைக்கவும் வாசலி லேதலை
மறைய நிற்கவும் ஆசையு ளோரென
முகிழ்ந சைச்சிறு தூதினை யேவவு  முகமோடே
முகம் ழுத்தவும் ஆசைகள் கூறவு
நகம ழுத்தவும் லீலையி லேயுற
முறைம சக்கவும் வாசமு லாமல  ரணைமீதே
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி
கறைய ழிக்கவு நானென் வேயணி  விலையிதே
கடிய சத்திய மாமென வேசொலி
யவர்கொ டப்பண மாறிட வீறோடு
கடுக டுத்திடு வாரொடு கூடிய  தமையாதோ
மலையை மத்தென வாசுகி யேகடை
கயிறெ னத்திரு மாலொரு பாதியு
மருவு மற்றது வாலியு மேலிட  அலையாழி
வலய முட்டவொ ரோசைய தாயொலி
திமிதி மித்திமெ னாவெழ வேயலை
மறுகி டக்கடை யாவெழ மேலெழு  மமுதோட
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
வயலை யற்புத னேவினை யானவை
தொடர றுத்திடு மாரிய கேவலி  மணவாளா
துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
மறுவொ ரொட்டுட னாயிர மேலொரு
துகள றுத்தணி யாரழ காசுரர்  பெருமாளே.
930. மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
வேல்விழி புரட்டிக் காட்டி  யழகாக
மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
வீடுக ளழைத்துக் காட்டி  மதராசன்
ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
யாரொடு நகைத்துக் காட்டி  விரகாலே
ஆதர மனத்தைக்காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
ஆசையை யவர்க்குக் காட்டி  யழிவேனோ
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
மூதமிழ் முனிக்குக் கூட்டு  குருநாதா
மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
மூரிவில் மதற்குக் காட்டு  வயலூரா
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
வாழ்மயில் நடத்திக் காட்டு  மிளையோனே
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் நிறத்தைக் காட்டி
வானவர் சிரத்தைக் காத்த  பெருமாளே.
931. வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
ராஜ நடையினு மம்பதி னும்பெரு
வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு  மரிதான
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ
வாயு நகைமுக வெண்பலு நண்புடன்
வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய  பனிநீருந்
தூளி படுநவ குங்கும முங்குளி
ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையு மங்கையு  மெவரேனும்
தோயு மளறெனி தம்பமு முந்தியு
மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்
சூளை யரையெதிர் கண்டும ருண்டிட  லொழிவேனோ
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
நீலி கவுரிப யங்கரி சங்கரி
காரு ணியசிவ குண்டலி சண்டிகை  த்ரிபுராரி
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
கான நடனமு கந்தவள் செந்திரு  அயன்மாது
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு  ளிளையோனே
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்
தீர வருள்தரு கந்தநி ரந்தர
மேலை வயலையு கந்துள நின்றருள்  பெருமாளே.
932. விகட பரிமள ம்ருகமத இமசல
வகிர படிரமு மளவிய களபமு
மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்
உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்
கலவி விதவிய னரிவையர் மருள்வலை
யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
புரண புளகித இளமுலை யுரமிசை
தைக்கக் கழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி  யன்புகூர
விபுத ரமுதென மதுவென அறுசுவை
அபரி மிதமென இலவிதழ் முறைமுறை
துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்
வரையு முறைசெய்து முனிவரு மனவலி
கரையு மரிசன பரிசன ப்ரியவுடை
தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்
விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ
மொழிகள் பதறிட ரதிபதி கலைவிழி
கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு  வுந்திமூழ்கிப்
புகடு வெகுவித கரணமு மருவிய
வகையின் முகிலென இருளென வனமென
ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய
அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை
குமுத பதிகலை குறைகலை நிறைகலை
சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு
பொழுதும் விடலரி தெனுமநு பலமவை
முழுது மொழிவற மருவிய கலவியி
தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில்  நைந்துசோரப்
புணரு மிதுசிறு சுகமென இகபரம்
உண்டு மறிவிலி ப்ரமைதரு திரிமலம்
அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தமையில்
மறுகு பொறிகழல் நிறுவிய சிறிதுமெய்
உணர்வு முணர்வுற வழுவற வொருஜக
வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநபவ வடிவினை யளவறு
அகில வெளியையு மொளியையும் மறிசிவ
தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை  யென்றுசேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட
தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திருகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி  என்றுபேரி
திமிலை கரடிகை பதலைச லரிதவில்
தமர முரசுகள் குடமுழ வொடுதுடி
சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
குசலபசுபதி குருவென விருதுகள்
ஒத்தித்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
மகர சலநிதி மொகுமொகு மொகுவென
எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற்  நின்றசேடன்
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
அகில புவனமும் ஹரஹர ஹரவென
நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி
குருதி யருவியின் முழுகிய கழுகுகள்
பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை
எயிறு அலைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி  யும்பர்வாழ
மடிய அவுணர்கள் குரகத கஜரத
கடக முடைபட வெடிபட எழுகிரி
அற்றுப்ப றக்க வெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
அமர்செய் தயில்கையில் வெயிலெழ  மயில்மிசை
அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக
இயலு மிசைகளு நடனமும் வகைவகை
சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள்  தம்பிரானே.
லால்குடி (திருத்தவத்துறை)
933. காரணி யுங்குழ லைக்கு வித்திடு
கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
காணவ ருந்திமு டித்தி டக்கடு  விரகாலே
காதள வுங்கய லைப்பு ரட்டிம
னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
காமுக ரன்புகு வித்த கைப்பொரு  ளுறவாகிப்
பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
சீதள குங்கும மொத்த சித்திர
பூஷித கொங்கையி லுற்று முத்தணி  பிறையான
போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட  அருள்வாயே
வீரபு யங்கரி யுக்ர விக்ரம
பூத கணம்பல நிர்த்த மிட்டிட
வேக முடன்பறை கொட்டி டக்கழு  கினமாட
வீசிய பம்பர மொப்பெ னக்களி
வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
வேதப ரம்பரை யுட்க ளித்திட  வரும்வீரா
சீரணி யுந்திரை தத்து முத்தெறி
காவிரி யின்கரை மொத்து மெத்திய
சீர்புனை கின்றதி ருத்த வத்துறை  வரும்வாழ்வே
சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
தேவர்கள்தஞ்சிறை வெட்டிவிட்டருள்  பெருமாளே.
934. நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
பொறுத்த வெற்பிணை மார்முலை மேலணி
நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி  முகமானார்
நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை
யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு  நெறியாலே
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
கழற்று தித்திடு வாழ்வது தான்மன  துறமேவிக்
கதித்த பத்திமை சாலடி யார்சபை
மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
கதிக்க டுத்துயர் வாகவு மேயரு  ளுரையாதோ
வரைத்த நுக்கரர் மாதவ மேவின
ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய  வடிவேலா
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
ருரைத்து ளத்திரு வாசக மானது
மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய  மணிமாடத்
திரைக்க டற்பொரு காவிரி மாநதி
பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை  குவையாகச்
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காவறம்
வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
திருத்த வத்துறை மாநகர் தானுறை  பெருமாளே.
பூவாளூர் (லால்குடி அருகில்)
935. காலன் வேற்கணை யீர்வா ளாலமு
நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்
காம சாத்திர வாய்பாடேணிக  ளெவரேனும்
காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்
போக பாத்திர மாமூ தேவிகள்
காசு கேட்டிடு மாயா ரூபிக  ளதிமோக
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
ஆனை போற்பொர நேரே போர்முலை
மார்பு காட்டிகள் நானா பேதக  மெனமாயா
மாப ராக்கிக ளோடே சீரிய
போது போக்குத லாமோ நீயினி
வாவெ னாப்பரி வாலே யாள்வது  மொருநாளே
பால றாத்திரு வாயா லோதிய
ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
பாடல் தோற்றிரு நாலா மாயிர  சமண்மூடர்
பாரின் மேற்கழு மீதே யேறிட
நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
பாது காத்தரு ளாலே கூனிமி  ரிறையோனும்
ஞால மேத்திய தோர்மா தேவியும்
ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
ஞான பாக்கிய பாலா வேலவ  மயில்வீரா
ஞான தீக்ஷித சேயே காவிரி
யாறு தேக்கிய கால்வாய் மாமழ
நாடு போற்றிய பூவா ளுருறை  பெருமாளே.
திருப்பராய்த்துறை
936. வாசனை மங்கையர் போற்று சிற்றடி
பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட
மாமலை ரண்டென நாட்டு மத்தக  முலையானை
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை
நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு  விழியார்கள்
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்
தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ
நீசனெ னும்படி யாக்கி விட்டொரு  பிணியான
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட
யோகமி குந்திட நீக்கி யிப்படி
நீயக லந்தனில் வீற்றி ருப்பது  மொருநாளே
தேசம டங்கலு மேத்து மைப்புய
லாயநெ டுங்தகை வாழ்த்த வச்சிர
தேகமி லங்கிய தீர்க்க புத்திர  முதல்வோனே
தீரனெ னும்படி சாற்று விக்ரம
சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்
தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு  கதிர்வேலா
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
லாசனன் வந்துல காக்கி வைத்திடு
வேதன கந்தையை மாற்றி முக்கண  ரறிவாக
மூதறி வுந்திய தீøக்ஷ செப்பிய
ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
மூவரி லங்குப ராய்த்து றைப்பதி  பெருமாளே.
குளித்தலை (தென்கடம்பந்துறை)
937. புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
கயலினொடு கெண்டையுஞ் சண்டனும் கஞ்சமும்
புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப்  பெறிவேலும்
பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்
றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்
புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக்  குழைமோதிக்
குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்
படியமார்பு ரிந்தருஞ் சங்கடம் சந்ததம்
கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் கணினார்பால்
குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
த்ரிவிதகர ணங்களுள் கந்தநின் செம்பதங்
குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுஞ் தொந்தமற் றமைவேனோ
துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்
புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்
தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் திருதோளுந்
தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்
பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்
துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்று செய்ப் பதிவாழ்வாய்
கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்
குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்
கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் குருநாதா
கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்
குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்
கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப்  பெருமாளே.
கரூர் (கருவூர்)
938. மதியால்வித்  தகனாகி  -  மனதாலுத்  தமனாகிப்
பதிவாகிச்  சிவஞான  -  பரயோகத்  தருள்வாயே
நிதியேநித்  தியமேயென் - நினைவேநற் பொருளாயோய்
கதியேசொற்  பரவேளே - கருவூரிற்  பெருமாளே.
939. இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
யிரதக் குடத்தையெணு  மரபோடே
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய
இதழ்சர்க்க ரைப்பழமொ  டுறழூறல்
முளரிப்பு வொத்தமுக முகம்வைத் தருத்திநல
முதிரத்து வற்பஅல்குல்  மிசைமூழ்கி
மொழிதத்தை யொப்பகடை விழிகட் சிவப்பமளி
முழுகிச்சு கிக்கும்வினை  யறஆளாய்
நளினப் பதக்கழலு மொளிர்செச்சை பொற்புயமெ
னயனத்தி லுற்றுநட  மிடும்வேலா
நரனுக் கமைத்தகொடி யிரதச்சு தக்களவ
னறைபுட்ப நற்றுளவன்  மருகோனே
களபத தனத்திசுக சரசக் குறத்திமுக
கமலப்பு யத்துவளி  மணவாளா
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்
கருவைப் பதிக்குளுறை  பெருமாளே.
940. தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப்  பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத்  தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட்  களமான
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித்  தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத்  தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித்  திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத்  துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப்  பெருமாளே.
941. நித்தப் பிணிகொடு மேவிய காயமி
தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
நிற்பொற் ககனமொ டாமிவை பூதக  லவைமேவி
நிற்கப் படுமுல காளவு மாகரி
டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
நெட்டுப்பணிகலைபூணிடுநானெனு  மடவாண்மை
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
டிச்சைப் படஅறியாதுபொய் மாயையி  லுழல்வேனை
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
திட்டுத் திருவடியாமுயர் வாழ்வுற  இனிதாள்வாய்
தத்தத் தனதன தானன தானன
தித்தித் திமிதிமி தீதக தோதக
டத்தக் குடகுகு தாகுட தீகுட  வெனபேரிச்
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை  யெறிவோனே
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
வெற்புப் புரமது நீறெழ காணிய  ரருள்பாலா
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய  பெருமாளே.
942. முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியனெ
மொட்பைவி ளைத்து முறையளித்  திடுமாதர்
முத்தமி ரத்ன மரகதம் வைத்தவி சித்ர முகபட
மொச்சிய பச்சை யகிலமணத்  தனபாரம்
கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய
கைத்தல மெய்த்து வசனமற்  றுயிர்சேரும்
கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
கற்பனை பக்ஷ முடனளித்  தருளாதோ
வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக
விக்ரம வுக்ர வெகுவிதப்  படைவீரா
வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்
வித்தக சித்த வயலியிற்  குமரேசா
கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
கித்திந டக்கு மலகைசுற்  றியவேலா
கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
கெர்ப்பபு ரத்தி லறுமுகப்  பெருமாளே.
943. சஞ்சல சரித பரநாட்டவர்கள்
மந்திரி குமரர் படையாட்சிகள்
சங்கட மகிபர் தொழஆக்கினை முடிசூடித்
தண்டிகை  களிறு பரிமேற்றனி
கவண்குடை நிழலி லுலவாக்கன
சம்பரம விபவ சவு பாக்கிய முடையோராய்க்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
பஞ்சணை மிசையிலிசையாத்திரள்
கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய மியல்கீதம்
கொங்கணி மகளிர் பெருநாட்டிய
நன்றென மனது மகிழ்பார்த்திபர்
கொண்டய னெழுதும் யமகோட்டியை யுணராரே
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
வென்றி ட சகுனி கவறாற் பொருள்
பங்குடை யவனி பதிதோற்றிடஅயலேபோய்ப்
பண்டையில் விதியை நினையாப்பனி
ரண்டுடை வருஷ முறையாப்பல
பண்புடன் மறைவின் முறையாற்றிடு வருளாலே
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
முந்துத முடைய மனைவாழ்க்கையின்
வந்தபி னுரிமை யதுகேட்டிட இசையாநாள்
மண்கொள வினசயன் விடுதேர்ப்பசி
யுந்தினன் மருக வயலூர்க்குக்
வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் பெருமாளே.
944. முகிலள கஞ்சரி யாக்குழையில்கல்வன கண்சிவ வாச்சிவ
முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ வநுபோக
முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட
முகுளித பங்கய மாக்கர நுதல்சேரத்
துகிலொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி
துவளமு யங்கிவி டாய்த்தரி வையர் தோளின்
துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில்
சொரூபமு நெஞ்சிலி ராப்பகல் மறவேனே
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்
சரவண சம்பவ தீர்க்கஷன் முகமாகிச்
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு
சமர முகந்தனில் நாட்டிய மயிலேறி
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத
வசுரர கங்கெட வார்த்திடு கொடிகூவ
அமரர டங்கலு மாட்கொள வமரர்த லங்குடி போற்றிட
வமரரை யுஞ்சிறை மீட்டருள் பெருமானே.
நெருவூர் (கரூர் அருகில்)
945. குருவு மடியவ ரடியவ ரடிமையு
மருண மணியணி கணயண விதகர
குடல செடிலினு நிகரென வழிபடு  குணசீலர்
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுத
லழுகு தலுமிலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி  விலைமாதர்
மருவு முலையென மலையினி லிடறியு
மளக மெனவள ரடவியில் மறுகியு
மகர மெறியிரு கடலினில் முழுகியு  முழலாமே
வயலி நகரியு லருள்பெற மயில்மிசை
யுதவு பரிமள மதுகர வெகுவித
வனச மலரடி கனவிலு நனவிலு  மறவேனே
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு
மருது நெறிபட முறைபட வரைதனி
லுரலி னொடுதவழ் விரகுள இளமையு  மிகமாரி
உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
கவிகை யிடவல மதுகையு நிலைகெட
வுலவில் நிலவறை யுருவிய வருமையு  மொருநூறு
திருவெஞ்சமாக்கூடல்
946. வண்டுபோற் சாரத்  தருள்தேடி
மந்திபோற் காலப்  பிணிசாடிச்
செண்டுபோற் பாசத்  துடனாடிச்
சிந்தைமாய்த் தேசித்  தருள்வாயே
தொண்டராற் காணப்  பெறுவோனே
துங்கவேற் காணத்  துறைவோனே
மிண்டராற் காணக் கிடையானே
வெஞ்சமாக் கூடற்  பெருமாளே.
கொடுமுடி (திருப்பாண்டிக்கொடுமுடி)
947. இருவினைப் பிறவிக்  கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப்  புகுதாதே
திருவருட் கருணைப்  ப்ரபையாலே
திரமெனக் கதியைப்  பெறுவேனோ
அரியயற் கறிதற்  கரியானே
அடியவர்க் கெளியற்  புதநேயா
குருவெனச் சிவனுக்  கருள்போதா
கொடிமுடிக் குமரப்  பெருமாளே.
948. காந்தட் கரவளை சேந்துற் றிடமத
காண்டத் தரிவைய  ருடனூசி
காந்தத் துறவென வீழந்தப் படிகுறி
காண்டற் கநுபவ  விதமேவிச்
சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்
சாய்ந்திட் டயில்விழி  குழைமீதே
தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி
தாங்கித் தழுவுத  லொழியேனோ
மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
வாஞ்சைப் படியருள்  வயலூரா
வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
மான்சிற் றடிதொழு  மதிகாமி
பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
பாண்டிக் கொடுமுடி  யுடையாரும்
பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
பாண்சொற் பரவிய  பெருமாளே.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


















































































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக