செவ்வாய், 7 ஜனவரி, 2014

யாருமற்ற அனாதைகட்கு எள்ளும் தண்ணீரும் :

ராதே கிருஷ்ணா 08-01-2014


Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
யாருமற்ற அனாதைகட்கு எள்ளும் தண்ணீரும் :

தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக,

‘ஏஷாம் ந மாதா ந பிதா… நபந்து ...நான்ய கோத்ரிணஹா....தே: ஸர்வே த்ருப்திமாயாந்து மயோத்ஸ்ருஷ்டை: குசோதகை:’

என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள்.

‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளிகள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ… இதுபோன்று யாருமே அற்ற அனாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்றுபொருள்பட ஜாதி மத பேதமற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் எனப் பிரார்த்தனை செய்யச் சொல்கிறது நமது சாஸ்திரம். இதுதான் இந்து மதத்தின் மகோன்னதம்!












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக