செவ்வாய், 7 ஜனவரி, 2014

யுகந்தோறும் அவதரிப்பேன்!

ராதே கிருஷ்ணா 08-01-2014


யுகந்தோறும் அவதரிப்பேன்!



Status Update
By திரு மூலர்
யுகந்தோறும் அவதரிப்பேன்!
உலகம் முழுவதிலும் கடவுளை மறுக்கும் நாத்திகர்கள்தான் பெருகி உள்ளனர். இது மேலும் மேலும் அதிகரிக்கும். உலகத்தில் உள்ள மதங்கள் மார்க்கங்கள் அனைத்தும் அழியும்.முக்கியமாக வேதம் சனாதனம மதம் என்று அறிய படும் இந்த ஹிந்து மதம் முற்றிலும் அழியும்.
ஐரோப்பா கண்டத்தை கிருஸ்துவ மயமாக்கிவிட்டோம். அடுத்து அமெரிக்க கண்டத்தை அப்படி ஆக்கினோம்.. இப்போது நமது கடமை ஆசியா கண்டத்தை கிருஸ்துவ மயமாக்க வேண்டும். முக்கியமாக இந்தியாவை இயேசு நாமம் சொல்லும் பூமியாக மாற்ற வேண்டும்.!
உலகம் முழுவதும் எங்க அமைதி மார்கமே பரவி கொண்டு உள்ளது..ஏக இறைவனுக்கு இணை வைக்கும் அனைத்து சாத்தான் மதங்களும் அழியும். இந்திய இஸ்லாமிய நாடாகும் . உலகம் முழுவதும் இஸ்லாமே ஆட்சி செய்யும். அல்லாவின் படையை எவனும் அழிக்க முடியாது.. அல்லாஹு அக்பர்!..
இப்படியாக இவர்கள் சொல்வது எல்லாம் நடக்குமா? நடந்து கொண்டு உள்ளனவா? சிறிது அமர்ந்து யோசித்தேன்.. இந்த மூடனுக்கு விடை கிடைக்க வில்லை.. நம் வேத இலக்கியங்கள் இதை பற்றி என்ன சொல்கின்றன என்று ஆராய்ந்தேன்.. பலவாறு படித்து ஆராய்ந்து, எனக்கு கிடைத்த விடைகள.
கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? மக்களின் எவ்வாறு வாழ்வார்கள், அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்.. இதை பற்றி நம் வேதங்களிலும் புராணங்களிலும் இப்படியாக குறிப்பிடபட்டுள்ளன.!
ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாக்க மாட்டார்கள்.. வரி வசீலித்து மக்களை கொடுமை படுத்துவதில் குறியாய் இருப்பார்.
ஆட்சியாளர்களிடம் நல்லவர் மேன்மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்.. வெறும் திருடர்களே அவர்களிடம் இருப்பார்.. ஆட்சியாளர்களும்திருடர்களாகவே இருப்பார்.
அனைவரும், பணம் சேர்ப்பதிலும் கொள்ளை அடிப்பதிலும் குறியாய் இருப்பார்.
ஆட்சியை கைப்பற்ற, தற்காக்க, சொந்த குடிமக்களையே ஆட்சியாளர்கள் கொல்வர.
15 வயதுகளில் பெண்கள் தாயாவர்கள். பெண்கள் பணமே குறியாய் இருப்பார். பணத்திற்காக அன்னிய ஆடவர்களுடன் கூடுவர்.
ஆண்கள், தங்கள் மனைவியை விட்டு விட்டு, திருமணம் ஆன வேறு பெண்களிடம் கூடுவர்.. விருப்பபடி பெண்களை வைத்து கொள்வர்.
தாய்க்கும் சகோதரிக்கும் மனைவிக்கும் வித்தியாசம் தெரியாது..
சிறிதளவு கல்வி அறிவு பெற்றாலே , ஒருவன் பெரும் ஞானியாக அறியபடுவான்..எவனிடம் செல்வம் உள்ளதோ, அவனே பெரியவனாவான்.. எவன் பலசாலியோ, அவனே, தலைவனாவான்.
எந்த மனிதனையும் நம்ப முடியாது. திருட்டு, கொள்ளை, சூழ்ச்சி, வன்மம், வக்கீரம், நிறைந்து, மற்றவர்களுக்கு கொடுமை செய்பவர்களாகவே மக்கள் இருப்பார்.
மனிதனுக்கு ஆன்ம அறிவு அறவே இருக்காது.. பலாத்காரம் செய்தே.. தன் நம்பிக்கைகளை மற்றவர் மீது திணிப்பார்.
சொந்த நாட்டு மக்களையே கொடுமை செய்வர்.. பலர் அகதிகளாகி தாம் பிறந்த நாட்டை விட்டு பிரிந்து செல்வர்.
மிக கடுமையான கொச்சை மொழியையே பேசுவர். சுடு சொற்களால் மனதை வேதனை படுத்துவர்.
மனைவி கணவனை மதிக்க மாட்டாள்.. கணவன் மனைவியை அடிமையாக கருதுவான்.. பிள்ளைகள் பெற்றோர்களால் கைவிட படுவர். பிள்ளைகளும்.பெற்றோர்களை பாதுகாக்காமல் கைவிடுவர்.. ஒருகாலும் அவர்களை மதிக்க மாட்டார்கள்.
வியாபாரிகள் லாபமே குறிகோளாக இருப்பார். அனைத்திலும் கலப்படம் இருக்கும்..
உலகம் முழுவதும், போரும், படுகொலைகளும் நடக்கும். மக்கள் லட்சகணக்கில் மடிவர்..
மனிதன் செய்யும் பாவங்களால், மேலும் மேலும் நோய்கள் பெருகும். பஞ்சம், வறட்சி, நிலநடுக்கம், போன்றவை உண்டாகும்.. மேலும் மேலும் மக்கள் மடிவர்.
குழைந்தைகள் கர்பத்தில்கொலை செய்ய படுவர்.. கன்னி பெண்கள் வியாபார பொருளாவர்!
மக்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் துன்ப படுவர்.. ஆட்சியாளர்கள் அதை கண்டு கொள்ள மாட்டார்கள்.. சுகபோகத்தில் வாழ்வதிலியே காலத்தை கழிப்பர்.
பசுக்கள் பெரும் அளவில் கொல்ல படும்.. விவசாயம் குறையும். மேலும் மேலும் உணவு பற்றாக்குறை உண்டாகி மக்கள் மடிவர்.
பெற்ற மகளை தந்தையும் தாயும், விலைக்கு விற்பர்.. அதை கொண்டு வயிற்றை நிரப்புவர்..
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆயுள் குறையும்.. முப்பது வயதில் மூப்படைவர்.. !
தர்மம் அறவே நசியும்.. யாகம் இருக்காது.. முன்னோர்களுக்குதர்ப்பணம் இருக்காது.. ஏழைகளுக்கு தானம் இருக்காது.. பசிக்களிடம் அன்பு இருக்காது.. !
உடலில் சுத்தம் இருக்காது.. பேச்சில் சுத்தம் இருக்காது.. நடத்தையில் சுத்தம் இருக்காது..
வேதம் பழிக்க படும். வேத நியமனங்கள் மறக்க ப்படும்.
இது மட்டும் அல்ல.. இன்னும் எவ்வளவோ.. அநியாயங்கள் அக்கிரமங்கள் உலகில் நடக்கும் என்று நமது வேத இலக்கியங்கள் சொல்கின்றன..
அனைத்தையும் எழுதினால், பெரிய அளவில் நீண்டு கொண்டே போகும். அதனால், நிறுத்துவோம்.. இப்போது விசயத்திற்கு வருவோம்.
வேத தர்மத்தை அழிப்போம்.. ஹிந்து மதத்தை அழிப்போம்.. உலகம் முழுவதும் நாங்களே பெருகுவோம். என்று மேலே சொன்ன மூன்று தரபட்ட மக்கள் கூறுகிறார்கள் அல்லவா!..
அதையும்.. நம் வேத இலக்கியங்களில் கலியுகத்தில் மக்கள் எப்படி இருப்பார்கள்..அவர்களின் மன நிலை என்ன.. அவர்கள் நடைத்தைகள் என்ன என்பதை விரிவாக விளக்க பட்டிருப்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்..வேதம் வாக்கியம் ஒருகாலும் பொய்யாகாது!.
அறிவுக்கு எதாவது புலப்படுகிறதா? சிறிது சிந்தித்து பாருங்கள். நன்றாக புலப்படும். !
இதை படித்து, சிலர் கவலை கொள்ளலாம். ஆனால், அதற்கு அவசியம் இல்லை.. ஒருகாலும் இவ்வுலகில் வேத தர்மம் முழுமையாக நசியாது.. சர்வ லோக ரட்சகன்.. தேவாதி தேவன்.. ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா திருவாய்மொழியும் பொய்யாகாது!.
யாதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாமி அஹம்.!
எப்போது தர்மம் நசிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ,பாரத குல தோன்றலே (அர்ஜுனா) அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்.!
பரித்ராணாய சாதுனாம்
விநாசாய ச துஸ்கிர்தாம்
தர்ம சம்ஸ்தா பனார்தாய
சம்பவாமி யுகே யுகே..
பக்தர்களை காத்து கொடியவர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்த யுகந்தோறும் நான் அவதரிப்பேன்.
மீண்டும் படியுங்கள்.
யுகந்தோறும் அவதரிப்பேன்!
நிச்சயம் அவதரிப்பான்!



































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக