புதன், 16 செப்டம்பர், 2015

விநாயக சதுர்த்தீ-17-09-2015-பூஜை

ராதே கிருஷ்ணா 17-09-2015








விநாயக சதுர்த்தீ-17-09-2015-பூஜை
(சங்கல்பமும் சேர்ந்து)

ஆசமனம்:

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,

ஓம் அச்சுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும்.

விக்னேஸ்வர பூஜை:

மஞ்சள் பிள்ளையார் கூம்பு வடிவத்தில் பிடித்து வைத்து சந்தன குங்கும அக்ஷதைகள் சேர்த்து ஒரு சின்ன பித்தளை தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பஞ்சுத் திரி நெய் கொண்டு ஐந்து முக விளக்கொன்றை ஏற்றி

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் சர்வவிக்னோ (உ)ப சாந்தயே

என்று ஜபித்து, வலது தொடை மீது வலது கை வைத்து இடது கையால் வலது கையை மூடிக்கொண்டு சங்கல்பம் செய்து கொள்ளவும்.

மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர

ப்ரீத்யர்த்தம் ததேவலக்னம் சுதினம் ததேவ தாராபலம்

சந்திரபலம் ததேவ வித்யாபலம் தெய்வபலம் ததேவ

மன்மத நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே

வர்ஷர்தௌ பாத்ரபத மாஸே ஸுக்ல பக்ஷே

சதுர்த்யாம் ஸுபதிதௌ,குருவாஸர ஸ்வாதீ

நக்ஷத்ர மாஹேந்த்ர யோக வணிஜ

(காலை 07-17க்கு மேல் பத்ரா) கரண

ஏவங்குண விசேஷண விசிஷ்டாயா மஸ்யாம்

சதுர்த்யாம் ஸுபதிதௌ மம ஸஹ குடும்பஸ்ய

ஸ்ரீ ஸித்தி விநாயக ப்ரஸாத ஸித்யர்த்தம்

பாத்ரபத ஸுக்ல சதுர்த்தீ புண்யகாலே

கல்போக்த ப்ரகாரேண ஸ்ரீ ஸித்தி விநாயக

பூஜாம் கரிஷ்யே

த்யானம்:

கணானாம் த்வாம் கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரம்ஹணாம் பிரம்மணஸ்பத ஆனஹ
ஸ்ருன்வன்னோதிப்ஹிஸ்சீத சாதனம்

ஆவஹனம்

இஷ்டதெய்வத்தை மனதில் த்யானித்துக் கொண்டு, பூ அக்ஷதை சமர்ப்பணம் செய்து, மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜிக்கவும்
.
அஸ்மின் பிம்பே ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசனம் சமர்ப்பயாமி (பூ போடவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: அர்க்யம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: மதுபர்க்கம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஸ்நானாநந்தரம் ஆசமநீயம் சமர்ப்பயாமி (உத்தரணி ஜலம் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: வஸ்த்ரம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: உபவீதம் சமர்ப்பயாமி (பூ அக்ஷதை சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆபரணம் சமர்ப்பயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் சமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: புஷ்பை பூஜயாமி ( (பூ அக்ஷதை சேர்க்கவும்)

புஷ்பத்தால் அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்பகர்னாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் சித்திவினாயகாய நம:
ஓம் ஸ்ரீ மகாகணபதயே நம:

உத்தர பூஜை

தூபம்: ஊதுவத்தி காண்பித்து : தூபம் ஆக்ஹ்ராபயாமி

தீபம்: நெய் ஜோதி விளக்கு காண்பித்து: தீபம் சந்தர்ஷயாமி

உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : தீபானந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி

நைவேத்யம்: தேங்காய் பழங்கள் மீது தண்ணீர் தெளித்து:

ஓம் பூர்புவஸ்ஸுவ: அம்ர்தோபஸ்தரனாமஸி, பிராணாய: ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, சமானாய ஸ்வாஹா, பிரம்மனே ஸ்வாஹா, நைவேத்யம் நிவேதயாமி, நைவேத்யானன்தரம் ஆசமநீயம் சமர்பயாமி

தாம்பூலம் சமர்பித்து:
தாம்பூலம் சமர்பயாமி
கற்பூர நீராஞ்சனம்: கற்பூர நீராஞ்சனம் சமர்பயாமி

உத்தரணி ஜலம் எடுத்து கிண்ணத்தில் சேர்த்து : கற்பூர நீராஜனனந்தரம் ஆசமநீயம் சமர்பயாமி

வந்தனம்: மந்த்ரபுஷ்பம் சமர்பயாமி
ஆத்ம பிரதக்ஷிணம்
(தன்னையே பிரதக்ஷிணம் செய்து கொண்டு)

யானி கானிச்ச பாபானி ஜன்மாந்தர க்ரிதானிச தானி தானி வினஸ் யந்தி பிரதக்ஷின பதே பதே

பிரார்த்தனை:
நமஸ்காரம் செய்து:

நமோ நமோ கணேசாய நமஸ்தே விஸ்வ ரூபிணே
நிர்விக்னம் குருமே காமம் நமாமி த்வாம் கஜானன
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்னிசம்
அநேக தந்தம் பக்தாநாம் ஏகதந்தம் உபாஸ்மஹே
விநாயக வரம் தேஹி மகாத்மான் மோதகப்ரிய
அவிக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா
வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா சர்வகார்யேஷு சர்வதா
ப்ரதக்ஷிண நமஸ்காரான் சமர்பயாமி

பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று
விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா



ஏன் அவர் பெயர் கணபதி?

ஏன் அவர் பெயர் கணபதி?, Yaen avan peyar ganapathy
அந்த நாள் முதல் இந்த நாள் வரை அனைத்து காரியங்களைத் துவக்கும்போதும் முதலில் செய்வது கணபதி பூஜைதான். யானை முகம் கொண்டவராக சித்தரிக்கப்படும் இவர் கணபதியா அல்லது கஜபதியா? கணபதிக்கு இந்தப் பெயர் வரக் காரணம் என்ன? குட்டிக் கதை மூலம் விளக்குகிறார் சத்குரு…
சிவன் பார்வதியை மணந்து கொண்டபோது, அவளுடன் அவர் அவ்வப்போது மட்டுமே வாழ்ந்து வந்தார். சில நேரங்களில் அவர் ஒரு கிரஹஸ்தர் போலவும், மற்ற நேரங்களில் ஒரு கடுந்துறவியைப் போலவும் காணப்பட்டார்.
பார்வதியோடு சில காலம் இருந்துவிட்டு, திடீரென்று சில காலம் மறைந்துவிடுவார். பிறகு மீண்டும் அவர் மானசரோவர் ஏரிக்கரைக்கு வருவார். அவருடைய நண்பர்களான கணங்களுடன், பத்து பனிரெண்டு வருடங்களுக்கு அவர் அப்படி சென்றுவிடுவார்.
புராணங்களில் கணங்களை, நேர்த்தியற்ற உருவமுடைய உயிரினங்கள் என்றும், யாராலும் புரிந்து கொள்ள முடியாத அபஸ்வரமான ஒலிகளை எந்நேரமும் எழுப்பிக் கொண்டிருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் கைகால்களில் எலும்புகள் கிடையாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிவன் ஒரு யக்ஷன் என்பதால் பார்வதியால் சிவனின் குழந்தையை அவளது கருவில் சுமக்க முடியவில்லை. அவரால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்ணின் மூலம் ஒரு குழந்தையை உருவாக்க முடியாது. இதனால் பார்வதியின் தாய்மைக்கான ஏக்கம் மேலோங்கி இருந்தது.
அவள் மானசரோவரின் கரைகளில் தனிமையில் இருந்தபோது, அவள் உடல் மேல் பூசியிருந்த சந்தனத்தை எடுத்து, ஏரிக்கரையில் இருந்த மண்ணுடன் குழைத்தாள். அந்தக் கலவையை ஒரு குழந்தை போல் உருவம் பெறச் செய்தாள். தனது யோக சக்தியின் மூலம் அதற்கு உயிர் கொடுத்தாள். அந்த குழந்தை உயிர் பெற்றது, வளர்ந்தது. அந்தக் குழந்தையை அவள், தான் பெற்ற குழந்தையாகவே பாவித்து வளர்த்தாள்.
அந்த சிறுவனுக்கு பத்து வயதாகி இருந்தபோது, சிவன் தனது கூட்டத்துடன் மீண்டும் மானசரோவர் வந்து சேர்ந்தார். அப்போது அந்த சிறுவனை வெளியே காவலுக்கு வைத்துவிட்டு, பார்வதி குளித்துக் கொண்டிருந்ததாள். அந்த சிறுவனும் கையில் ஈட்டியுடன் தன் தாய்க்கு காவல் காத்திருந்தான்.
சிவன் வந்தபோது, அந்த சிறுவனை கவனிக்காமல் நேரே உள்ளே செல்ல முற்பட்டார். அதுவரையில் அவரை பார்த்திராத இந்த சிறுவன் அவரை தடுக்க முற்பட்டான். “நீங்கள் உள்ளே செல்ல முடியாது” என்று உரக்க கூவினான்.
சிவன் அவனைப் பார்த்து, “நீ யார்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் யார் என்பது முக்கியமில்லை, நீங்கள் உள்ளே செல்ல முடியாது” என்று கூறினான். சிவன் உடனே தனது மழுவை (கோடாலி) எடுத்து அந்த சிறுவனின் தலையை வெட்டி வீழ்த்தினார். அந்த சிறுவன் செத்து விழுந்தான்.
அவள் பிள்ளையின் வீரத்தை அறிந்திருந்த பார்வதிக்கோ சிவன் அவனை மீறி உள்ளே வந்தது சற்றே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரிடம், “எப்படி உள்ளே வந்தீர்கள்?” என்று வினவினாள்.
“அவன் உங்களை உள்ளே நுழைய அனுமதித்தானா?” என்று கேட்டாள்.
“யார் என்னை உள்ளே அனுமதிக்க வேண்டும்?” என்றார் சிவன்.
“என் மகன். அவன் உங்களை உள்ளே அனுமதித்தானா?” மீண்டும் கேட்டாள்.
“எந்த மகன்? நான் அவன் தலையைக் கொய்துவிட்டேனே?” என்றார் சிவன்.
இதைக் கேட்ட பார்வதி துக்கத்தில் மூழ்கினாள். “எப்படி அவன் தலையை நீங்கள் சீவலாம்? அவன் என் மகன். நான் அவனுக்கு உயிர் கொடுத்தேன்” என்று சிவன் மேல் அடங்கா சினம் கொண்டாள். இதற்கு ஏதாவது செய்யுமாறு அவள் சிவனை வற்புறுத்தினாள். “எப்படியாவது அவனை மீண்டும் உயிர்ப்பித்துவிடுங்கள்” என்று கதறினாள்.
சிவன் அவனை உயிர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவனுடைய மூளை இறந்துவிட்டதால், சிறுவனுக்குப் பொருத்துவதற்கு சிவனுக்கு இன்னொரு தலை தேவைப்பட்டது. கணங்களின் தலைவனாக இருந்தவரின் தலையை எடுத்து, சிவன் அந்த சிறுவனின் உடலின் மேல் பொருத்தினார். இப்படித்தான் அந்த சிறுவன் கணங்களின் தலைவனாக ஆனான்.
அவனுடைய முகத்தில் எலும்புகள் இல்லாமல் ஒரு கை இருந்தது. சிவன் அவனுக்கு கணபதி என்று பெயரிட்டார்; அவனை கணங்களின் தலைவனாக ஆக்கினார். காலப்போக்கில் மக்கள் அவனுடைய முகத்தில் இருந்த ஒரு கையைப் பற்றி பேசியதைக் கேட்ட ஓவியர்கள், அதை ஒரு யானை முகம் என்று கற்பனை செய்து, யானைத் தலையை வரைந்துவிட்டனர். இந்த ‘தலை மாற்றத்தினால்’ கணபதியின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும்.
திடீரென கணபதி மிகவும் புத்திசாலியாகிவிட்டார். அவர் பிருஹஸ்பதி ஆகிவிட்டார்.
பிருஹஸ்பதி என்றால் முழுமையான அறிவுடையவர் என்று பொருள். இந்த நாட்டில் இருக்கும் அத்தனை இலக்கியங்களையும் எழுதியவர் பிருகஸ்பதிதான்.
நாட்டில் நாம் காணும் அத்தனை அறிவு வளங்களையும் ஒருங்கிணைத்தவர் அவர்தான். அவை அனைத்தையும் அவர் கிரஹித்துக் கொண்டு எழுதி வைத்தார். அவருடைய ஆசிகள் உங்களுக்குத் தேவை ஏனென்றால், அவர்தான் அனைவரிலும் சிறந்த புத்திசாலியாக கருதப்படுகிறார். மனித உடலும், வேற்றுகிரக உயிரினத்தின் தலையும் உடையவர் அவர். இன்றும் கூட ஒரு குழந்தைக்கு கல்விப் பயிற்சியைத் துவக்க வேண்டும் என்றால், முதலில் நீங்கள் கணபதியைத்தான் வழிபட வேண்டும்.
நாளை விநாயகர் சதுர்த்தி, இந்த அற்புதமான பண்டிகை இத்தனை ஆயிரம் வருடங்களாக இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. கணபதி இந்தியாவின் மிகப் பிரபலமான கடவுள்களில் ஒருவராகிவிட்டார்.
அவர் மிகவும் புத்திசாலியாக, மிகப் பெரிய அறிஞராக இருந்தாலும், அவருக்கு உணவு என்றால் கொள்ளை விருப்பம். பொதுவாக அறிஞர் பெருமக்கள் ஒல்லியாகத்தான் இருப்பார்கள். ஆனால் நன்றாக சாப்பிட்டு கொழுகொழுவென்று இருக்கும் இந்த அறிஞரைப் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.









































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக