திங்கள், 22 செப்டம்பர், 2014

ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை .........(2)

ராதே கிருஷ்ணா 22-09-2014



Maalu Srirangam added 8 new photos.
ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை .........(2)

Status Update
By Maalu Srirangam
ஸ்ரீ ரங்கநாதன் ஸ்ரீ ரங்கம் வந்த கதை .........(2)

கிள்ளி வளவன் ( கிளி சோழன் ) பின் வந்த சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள்,விஜயநகர மன்னர்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் ஆகியோரின்தொடர்பணியால் இன்று உள்ள அளவு உயர்ந்தோங்கி செம்மாந்து நிற்கிறதுதிருவரங்கம்.

மூலவர்
ஸ்ரீரெங்கநாதன், பெரிய பெருமாள்

நம் பெருமாள், அழகிய மணவாளன் என்னும் திருப்பெயர்களும்
உண்டு. ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய
புஜங்க சயனம்

உற்சவர்
நம் பெருமாள் (கஸ்தூரி ரங்கன் )
தாயார்
ஸ்ரீரங்க நாச்சியார், மற்றும் ஸ்ரீ தேவி , பூ தேவி ( உபய நாய்ச்சிமார்)

தீர்த்தங்கள்:

இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள்

1. சந்திரபுஷ்கரணி 2. வில்வ தீர்த்தம்
3. நாவல் தீர்த்தம் 4. அரசு தீர்த்தம்
5. புன்னை தீர்த்தம் 6. மகிழ் தீர்த்தம்
7. பொரசு தீர்த்தம் 8. கடம்ப தீர்த்தம்
9. மா தீர்த்தம்

இதில் இன்று இருப்பதும், பிரதானமானதும் சந்திர புஷ்கரணியே.

ஸ்தல விருட்சம்
புன்னை
விமானம்
ப்ரணா வாக்ருதி

காட்சி கண்டவர்கள்

வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன், சந்திரன்.

சிறப்புக்கள்

இத்தலம் பற்றிய சிறப்புக்களைத் தொகுத்து தனி நூலொன்றே எழுதி
விடலாம். சிலவற்றை மட்டும் ஈண்டு நோக்குவோம்.

1) திருமகள் தினமும் வந்து பூஜித்துச் செல்லும் இத்தலம் இராமாயண
காலத்தோடு தொடர்பு கொண்டு இந்தியாவின் தேசியத்திற்கு மதமும் ஒருகாரணம் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

2) சிலப்பதிகாரத்தில் இத்தலம் கீழ்க்கண்டவாறு குறிக்கப்படுகிறது.
விரிந்த அலைகளோடு கூடிய மிகப்பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில்,திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவனும், நீலநிறம்கொண்டவனுமாகிய திருமால் ஆயிரம் தலைகளுடையவனுமாகிய ஆதிசேடன்என்னும் சிறந்த பாம்பனையாகிய பள்ளியணை மீது அழகுறச்சாய்ந்து
கொண்டிருக்கும் தன்மை நீல நிறமுடைய ஒரு மேகமானது ஒருபொன்மலையைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கிறது
.
“நீல மேகம் நெடும் பொற்குன்றத்துப்
பால் விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி
திருவமர்மார்பன் கிடந்த வண்ணம்”

என்கிறார் இளங்கோவடிகள்.

3) பரமபதத்தில் இரண்டு மணத்தூண்கள் உள்ளது. பரமபதத்திற்குச்
செல்வோர் இந்த மணத்தூண்களைத் தழுவி நித்ய சூரிகளாக
விளங்குகின்றனர். (நித்ய சூரி-அழிவில்லாத பேரின்பமயமான சூழ்நிலையில்எம்பெருமானுக்கு பணிவிடைபுரியும் ஆத்மாக்கள்)இதே போல் இங்குள்ளகருவறையிலும் இரண்டு மணத்தூண்கள் உள்ளன. இந்த மணத்தூண்களைத்தழுவிக்கொள்வோர் பரமபதத்து நித்ய சூரியாகும் பாக்கியம் பெறுவர், என்பதுஐதீஹம். இந்த மணத்தூண்களை பற்றிக்கொண்டு எம்பெருமானை வாழ்த்தும்நாள் எந்நாளோ என்று குலசேகராழ்வார், மயங்கி நிற்கிறார். இதோ அவரின்பாடல்,.....

“கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூனே பற்றி நின்றென்
வாயாரா என்று கொலோ வாழ்த்தும் நாளே”

4) உலகு போற்றும் காவியமான கம்ப இராமாயணத்தை கம்பர்
இங்குதான் அரங்கேற்றினார். இவ்விடம் தாயார் சன்னதிக்கு எதிரே கம்பர்மண்டபம் என்ற பெயரில் நின்றிலங்குகிறது. கம்பர் தமது இராமாயணத்தில்இரண்யனை சம்ஹாரம் செய்த வரலாற்றை விளக்குகிறார். இராமாயணத்தில்இரண்ய வரலாறு வரக்கூடாது இதை ஏற்கமாட்டோம் என அறிஞர் பலரும்உரைக்கவே, அவ்வாறாயின் எம்பெருமான் திருமுன்பு அரங்கேற்றம்நடத்துவோம் அவர் ஒப்புக் கொண்டால் அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான், என்று முடிவு கட்டி இவ்விடத்தே வந்து கம்பர் தமதுராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் வேளையில் இச்சன்னதிக்குள்மேட்டுப்புறத்தில் எழுந்தருளியுள்ள அழகிய சிங்கப் பெருமாள்,கம்பரின் இராமகாதையை நாம் அங்கீகரித்தோம் என்ற கர்ஜனையுடன்பெருமுழக்கம் செய்ததாகக் கூறுவர். இந்த மேட்டு அழகிய சிங்கர் கோவில்5வது திருச்சுற்றுக்குள் 5வது மதிலுக்குள்) உள்ளது.

5) இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம்.
அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகியமணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர்கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில்ஏற்றுக் கொண்டார். தான் பேணி வளர்த்த பெண்ணான ஆண்டாளைஇப்பெருமாள் பெண்டுகொண்டு போனதைப் பற்றி பெரியாழ்வார்.......

.ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான்பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்றவசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ

- பெரியாழ்வார் திருமொழி 3-8-4
என்று மயங்கி மகிழ்வார்.

6) ஆழ்வார்கள் பன்னிருவரில் பதினோரு ஆழ்வார்களின்
மங்களாசாசனத்தைப் பெற்ற திவ்யதேசமாகும் இது. 11 ஆழ்வார்கள் 247
பாக்களில் மங்களாசாசனம் பொழிந்த திவ்யதேசம். 108திவ்யதேசங்களில்இப்பெருமை வேறெந்த திவ்ய தேசத்திற்கும் இல்லை.

12 ஆழ்வார்களில்மதுரகவியாழ்வார் வேறொன்றும் நானறியேன் என்று நம்மாழ்வார் ஒருவரைமட்டுமே மங்களாசாசனம் செய்து உய்ந்தார். இவர் எந்த திவ்ய தேசத்தையும்பாடவில்லை. திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள்
மதுரகவியாழ்வார் தவிர்த்த மீதி 11 ஆழ்வார்கள்தான். இந்த 11
ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதால் இவர் ஆழ்வார்களுகந்தஎம்பெருமான் என்று போற்றப்படுகிறார்.


































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக