செவ்வாய், 5 மே, 2015

திருமங்கையாழ்வார் பாகம் - 3

ராதே கிருஷ்ணா 06-05-2015


திருமங்கையாழ்வார் பாகம் - 3


முதல் பக்கம்>நாலாயிர திவ்விய பிரபந்தம் 
நாலாயிர திவ்விய பிரபந்தம்
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

முதல் பக்கம் » இரண்டாவதாயிரம்
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழித் தனியன்கள்! பகுதி-3
டிசம்பர் 15,2011

அ-
+
Temple images

ஏழாம் பத்து
1. கறவா மடநாகு
முதல் திருமொழி
திருநறையூர்-8
பிறவிப் பெருந்துயரை நீக்கித் தமக்கு அருள் புரியுமாறு திருநறையூர் நம்பியை ஆழ்வார் ஈண்டு வேண்டுகிறார். அப்பெருமானை ஆழ்வார் எப்படி மறப்பார்?
கலி விருத்தம்
நம்பி! பிறவா வரம் அருள்வாய்
1548. கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,
நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,
பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே!
நம்பி! நான் உன்னையே அழைக்கின்றேன்
1549. வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,
துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,
அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,
பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே.
நம்பி! நான் உன்னையே உகந்தேன்
1550. தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே
நம்பி! நான் உன்னை எப்படி மறப்பேன்
1551. புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க,
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே.
நம்பி! உன்னைத் தொழும் விதத்தைச் சொல்
1552. வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,
நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி,
சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே.
நம்பி! உன்னைக் கண்டு நான் உய்ந்தேன்
1553. பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,
முனியே திருமூழிக் களத்து விளக்கே,
இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய
கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே!
நம்பி! தொண்டர்கட்கு நீதான் கதி
1554. கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,
நிதியே திருநீர் மலைநித் திலத்தொத்தே,
பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்
கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே.
நம்பி! நான் எப்படி விடுவேன்?
1555. அத்தா அரியே என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.
நம்பி! உயிர்க்கெல்லாம் நீதான் தாய்
1556. தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,
தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,
ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட
வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே!
துயரமே இல்லை; விண்ணுலகு கிடைக்கும்
1557. வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,
என்றும் தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,
தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே.
அடிவரவு: கறவா வற்றா தாரேன் புள் வில் பனி கதி அத்தா தூயாய் வண்டார்-புள்ளாய்

இரண்டாந் திருமொழி
2. புள்ளாயேனமுமாய்
திருநறையூர்-9
திருநறையூர் நம்பியின்பால் தமக்குள்ள ஆழ்ந்த பற்றினை ஈண்டுப் பரக்கக் கூறி மகிழ்கிறார் ஆழ்வார்.
கலி விருத்தம்
நம்பி! நான் உன்னையே நினைப்பேன்
1558. புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட
கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால்,
உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,
நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.
நம்பி! நான் உன்னையே நாடுவேன்
1559. ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன்
மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,
பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு,
நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.
நம்பி! எனக்கு நீயே அம்மையும் அப்பனும்
1560. எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,
அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,
நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன்
மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே
உலகுண்டவன் உறையும் இடம் என் மனம்
1561. சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்
உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான்
அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும்
நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ.
நம்பியே! என் வனத்தை விடுத்து அகலமுடியாது
1562. நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால்,
ஆண்டாயென் று ஆதரிக்கப் படுவாய்க்கு நானடிமை,
பூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்,
நாண்தா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ.
நம்பீ! நீ அருள் செய்து கொண்டே இருப்பாய்
1563. எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,
அந்தோ என் னாருயிரே  அரசே அருளெனக்கு நந்தாமல்
தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ.
நம்பீ! நீ பிறர் மனத்தில் புக நான் விடமாட்டேன்
1564. மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,
என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,
வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன்,
நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ.
நம்பீ! நீ என் மனத்தில்தான் இருக்கவேண்டும்
1565. எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள்,
கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய்,
இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்
நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ!
நம்பீ! எனக்குத்தான் இப்பேறு கிடைத்தது
1566. ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,
யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த
தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால்,
நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ.
நெடுங்காலம் தேவராக வாழ்வர்
1567. நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை
கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,
சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்
நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே.
அடிவரவு: புள் ஓடா எம்மான் சிறியாய் நீண்டாய் எந்தாதை மன் எப்போதும் ஊனேர் நன்னீர்-சினவில்

மூன்றாந் திருமொழி
3. சினவில்
திருநறையூர்-10
நறையூர் நம்பியைக் கனவில் கண்குளிரக் கண்டு மகிழ்ந்த ஆழ்வார், அப்பெருமானைத் தாம் என்றும் மறக்கமுடியாத நிலையை விளக்கி ஈண்டுப் பாடியுள்ளார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நறையூர் நம்பியைக் கண்டுகளித்தேன்
1568. சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும் மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே.
நறையூர் நம்பியைக் நான் ஆதரிப்பேன்
1569. தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக்
காய்நி னைந்தருள் செய்யு மப்பனை அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட
வாய னை,மக ரக்குழைக் காதனை மைந்த னைமதிள் கோவ லிடைகழி
யாயனை,அம ரர்க்கரி யேற்றையென் அன்ப னையன்றி யாதரி யேனே.
எம்பிரானை நான் எந்த விதத்திலும் மறக்கமுடியாது
1570. வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச்
சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன்,
கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் கோவி னைக்குட மாடிய கூத்தனை,
எந்தை யையெந்தை தந்தைதம் மானை எம்பி ரானையெத் தால்மறக் கேனே?
கண்ணனுக்கே என் மனம் தாழும்
1571. உரங்க ளாலியன் றமன்னர் மாளப் பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,
இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும் எம்பி ரானைவம் பார்புனல் காவிரி,
அரங்க மாளியென் னாளிவிண் ணாளி ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,
சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே!
கண்ணபிரானையே என் மனம் சிந்தை செய்யும்
1572. ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து
தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற,
வேங்கடத்தரி யைப்பரி கீறியை வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட
தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே.
பள்ளிகொண்டானையே நான் பாடுவேன்
1573. எட்ட னைப்பொழு தாகிலு மென்றும் என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,
தட்ட லர்த்தபொன் னைஅலர் கோங்கின் தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்
கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக் காத லால்மறை நான்குமுன் னோதிய
பட்ட னை,பர வைத்துயி லேற்றையென் பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே!
கடல்வண்ணன் நிறத்தையே என் வாய் பேசும்
1574. பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற பாலை யாகி யிங்கே புகுந்து,என்
கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான் கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள்,
விண்ணு ளார்பெரு மானையெம் மானை வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல்
வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல் வண்ண மேயன்றி வாயுரை யாதே!
கண்ணனைக் கண்டு விட்டேன்
1575. இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக் கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும்
துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர் தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்
முனியை வானவ ரால்வணங் கப்படும் முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்
கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட கள்வ னையின்று கண்டுகொண் டேனே.
என் மனம் திருமாலையே போற்றும்
1576. என்செய் கேனடி னேனுரை யீர்இதற் கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன் நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை
மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச் சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை அன்றி யென்மனம் போற்றியென் னாதே.
இவற்றைப் பாடுங்கள்; பாவம் பறந்துவிடும்
1577. தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாள்கலி யன்திரு வாலி
நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன் நல்ல மாமலர் சேவடி, சென்னியில்
சூடி யும்தொழு துமெழுந் தாடியும் தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.
அடிவரவு: சினவில் தாய் வந்த உரங்கள் ஆங்கு எட்டனை பண்ணின் இனி என்செய்கேன் தோடு-கண்

நான்காந் திருமொழி
4.கண்சோர
திருச்சேறை
திருச்சேறையில் கோயில் கொண்டெழுந்தருளியிருப்பவர் சாரநாதப் பெருமாள். இது பஞ்சசார ÷க்ஷத்திரம். சாரநாதப் பெருமாளைத் தொழுது ஏத்துவார்களே மிகச் சிறந்தவர்கள் என்று இங்கே பாடுகிறார் ஆழ்வார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சாரநாதனைத் தொழுவாரே என் தலைவர்
1578. கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் கூந்த லாளை,
மண்சேர முலையுண்ட மாமதலாய் வானவர்தம் கோவே. என்று,
விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு மணிமாட மல்கு, செல்வத் தண்சேறை
யெம்பெருமான் தாள்தொழுவார் காண்மினென் தலைமேலாரே.
சாரநாதனைத் தொழுவாரே என் மனத்தில் உள்ளார்
1579. அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை வரையகலத் தமர்ந்து, மல்லல்
கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம்,
வம்பலரும் தண்சோலை வண்சேறை வானுந்து கோயில் மேய,
எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் என்மனத்தே யிருக்கின் றாரே.
சாரநாதன் அடியார்களே தேவர்களாவர்
1580. மீதோடி வாளெயிறு மின்னிலக முன்விலகு முருவி னாளை
காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த கைத்தலத்தா என்று நின்று,
தாதோடு வண்டலம்பும் தண்சேறை எம்பெருமான் தாளை யேத்தி,
போதோடு புனல்தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின் றாரே.
சாரநாதன் பக்தகளுடன்தான் இருப்பேன்
1581. தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ,
போராளும் சிலையதனால் பொருகணைகள் போக்குவித்தாய் என்று, நாளும்
தாராளும் வரைமார்பன் தண்சேறை எம்பெருமா னும்ப ராளும்,
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகி லேனே.
சாரநாதன் அடியார்களே எனக்கு இனியவர்
1582. வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் வல்லமணர் தமக்கு மல்லேன்,
முந்திசென் றரியுருவா யிரணியனை முரணழித்த முதல்வர்க் கல்லால்,
சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும்
சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக் கும்மே.
சாரநாதன் திருவடிகளே எனக்குத் துணை
1583. பண்டேன மாயுலகை யன்றிடந்த பண்பாளா என்று நின்று,
தொண்டானேன் திருவடியே துணையல்லால் துணையில்லேன் சொல்லு கின்றேன்,
வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை எம்பெருமா னடியார் தம்மை,
கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் கண்ணிணையும் களிக்கு மாறே.
சாரநாதன் அடியார்கட்கே என் அன்பு உரியது
1584. பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா. என்றும்,
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான் திருவடியை சிந்தித் தேற்கு,என்
ஐயறிவும் கொண்டானுக் காளானார்க் காளாமென் அன்பு தானே!
சாரநாதனின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை
1585. உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா, மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் மென்தளிர்போ லடியி னானை,
பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் றன்னை,
கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங் காலே!
சாரநாதன் பக்தர்கட்கே என் உள்ளம் உருகும்
1586. கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால் போதொருகால் கவலை யென்னும்,
வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள் கருநீலம் களைஞர்
தாளால் தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை எம்பெருமான் தாளை,
நாளும் உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர் என்னுள்ள முருகு மாறே!
யாவரும் சாரநாதப் பெருமாளையே தொழுமின்
1587. பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து வயல்நின்ற பெடையோடு, அன்னம்
தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும் தண்சேறை யம்மான் றன்னை,
வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்,
தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும் துணைக்கையால் தொழுது நின்றே.
அடிவரவு: கண் அம்பு மீதோடி தேராளும் வந்தி பண்டு பைவிரி உண்ணாது கள்ளம் பூமாண்-தந்தை
ஐந்தாந் திருமொழி
5. தந்தை காலில்
திருவழுந்தூர்ப் பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். தாயாரின் பெயர் செங்கமலவல்லி. தம் உள்ளத்திலும் கண்ணிலும் எப்பொழுதும் நிற்கும் பெருமாளை ஆழ்வார் ஈண்டுப் பாடியுள்ளார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
எம்பெருமான் ஊர் திருவழுந்தூர்
1588. தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.
பார்த்தசாரதியின் ஊர் திருவழுந்தூர்
1589. பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை யாள,
பாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும்,
நீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள்,
ஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே!
இராவணனைக் கொன்றவன் ஊர் திருவழுந்தூர்
1590. செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,
உம்பர் வாளிக் கிலக்காக உதிர்த்த வுரவோ னூர்போலும்,
கொம்பி லார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்,
அம்ப ராவும் கண்மடவார் ஐம்பா லணையும் அழுந்தூரே.
என் கண்ணிலும் கருத்திலும் நின்றவர் ஊர் இது
1591. வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து,என்
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும்,
அள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே.
எல்லாம் ஆனவர் நின்ற ஊர் இது
1592. பகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய்,
நிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும்,
துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்,
அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்தூரே.
என் உள்ளம் புகுந்தவர் நின்ற ஊர் இது
1593. ஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி,
மாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும்,
நீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ,
ஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.
நான் பக்திக் கண்ணீர் விடச் செய்தவர் ஊர் இது
1594. மாலைப் புகுந்து மலரணைமேல் வைகி யடியேன் மனம்புகுந்து,என்
நீலக் கண்கள் பனிமல்க நின்றார் நின்ற வூர்போலும் வேலைக்
கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,
ஆலைப் புகையால் அழல்கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே.
எனக்குக் கனவில் காட்சி தந்தனர் ஊர் இது
1595. வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,
பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.
என் ஐம்புலன்களையும் கவர்ந்தவர் ஊர் இது
1596. என்னைம் புலனு மெழிலுங்கொண் டிங்கே நெருந லெழுந்தருளி
பொன்னங் கலைகள் மெலிவெய்தப் போன புனித ரூர்போலும்,
மன்னு முதுநீ ரரவிந்த மலர்மேல் வரிவண் டிசைபாட
அன்னம் பெடையோ டுடனாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே!
இப்பாடல்களைப் பாடினால் பாவம் நீங்கும்
1597. நெல்லில் குவளை கண்காட்ட நீரில் குமுதம் வாய்காட்ட,
அல்லிக் கமலம் முகங்காட்டும் கழனி யழுந்தூர் நின்றானை,
வல்லிப் பொதும்பில் குயில்கூவும் மங்கை வேந்தன் பரகாலன்,
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை சொல்லப் பாவம் நில்லாவே.
அடிவரவு: தந்தை பாரித்து செம்பொன் வெள்ளத்துள் பகல் ஏடு மாலை வஞ்சி என் நெல்லில்-சிங்கம்

ஆறாந் திருமொழி
6. சிங்கமதாய்
திருவழுந்தூர்-2
இப்பகுதிப் பாடல்களும் திருவழுந்தூர் ஆமருவியப்பன் விஷயமாகப் பாடப்பட்டனவே.
கலி நிலைத்துறை
நரசிங்கனை நான் கண்ட இடம் திருவழுந்தூர்
1598. சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே.
பரசுராமனை நான் கண்டு திளைத்த இடம் இது
1599. கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,
மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு,
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே
உலகம் படைத்தவனை அடைந்து உய்ந்த இடம் இது
1600. உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
குன்றினால் மழை தடுத்தவனை நான் கண்ட இடம் இது
1601. குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றானை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே.
கண்ணனைக் கண்டுகொண்ட இடம் இது
1602. கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே.
யாவர்க்கும் அரியவனைக் கண்டுகொண்ட இடம் இது
1603. பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே!
அழுந்தூரில் ஆமருவியப்பனைக் கண்டு களித்தேன்
1604. திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை,
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே!
நிலமகள் கணவனை அழுந்தூரில் கண்டு களித்தேன்
1605. நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.
திருமகள் கணவனை நான் கண்டு களித்த இடம் இது
1606. பேரா னைக்குடந்தைப் பெருமானை,இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.
தேவர் உலகை ஆள்வர்
1607. திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே.
அடிவரவு: சிங்கம் கோ உடையானை குன்றால் கஞ்சன் பெரியானை திரு நிலை பேரானை திறல்-திரு

ஏழாந் திருமொழி
7. திருவுக்கும்
திருவழுந்தூர் ஆமருவியப்பனிடம் அடைக்கலம் அடைந்த ஆழ்வார் அகம் நெகிழ்ந்து பாடியுள்ள பகுதி இது.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆமருவியப்பா! நீயே அடைக்கலம்
1608. திருவுக் கும்திரு வாகிய செல்வா தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே உலகுண் டவொரு வா.திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து,
ஒழியா தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
ஆமருவியப்பா! நின்னையே நான் சரணடைந்தேன்
1609. பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய்,என்மனத் தேமன்னி நின்றாய் மால்வண்ணா மழை போலொளி வண்ணா,
சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடு மாலே,
அந்தோ  நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
ஐயா! நின் திருவடிகளே நான் அறிவேன்
1610. நெய்யா ராழியும் சங்கமு மேந்தும் நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்
செய்யா தவுல கத்திடைச் செய்தாய் சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப் போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
ஆதிவராகனே! எனக்கு அடைக்கலம் தர யாருமில்லை
1611. பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்
வரனே,மாதவ னே மது சூதா  மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்
நரனே நாரண னே.திரு நறையூர் நம்பீ எம்பெரு மான்.உம்ப ராளும்
அரனே ஆதிவ ராகமுன் னானாய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
நின் திருவடியன்றி வேறொன்றும் அறியேன்
1612. விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும் பண்பா ளா பர னே பவித் திரனே,
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை கரும மாவது மென்றனக் கறிந்தேன்,
அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
நான்கு யுகங்களாக ஆனவன் ஆமருவியப்பன்
1613. தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச் சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும் தாடாளா தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்
சேயாய், கிரேத திரேத துவாபர கலியு கமிவை நான்குமு னானாய்,
ஆயா நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
ஐம்புல் ஆசைகட்கு அஞ்சினேன்: காப்பாற்று
1614. கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய் கார்வண் ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய் எந்தாய். அந்தர மேழுமு னானாய்,
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப் போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
அழுந்தூர் அம்மானே; என்னை ஆட்கொள்
1615. நெடியா னே கடி ஆர்கலி நம்பீ நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,
கடியார் காளைய ரைவர் புகுந்து காவல் செய்தவக் காவலைப் பிழைத்து
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன் கூறை சோறிவை தந்தெனக் கருளி,
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
அழுந்தூர் அம்மானே! எனக்கு இரக்கம் காட்டு
1616. கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக் கூறை சோறிவை தா என்று குமைத்துப்
போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன் புனிதா  புட்கொடி யாய் நெடு மாலே,
தீவாய் நாகணை யில்துயில் வானே திருமா லே இனிச் செய்வதொன் றறியேன்,
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.
மண்ணும் விண்ணும் ஆள்வர்
1617. அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை தூய மாலை யிவைபத்தும் வல்லார்,
மன்னி மன்னவ ராயுல காண்டு மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே.
அடிவரவு: திரு பந்தார் நெய் பரனே விண்டான் தோயா கறுத்து நெடியானே கோவாய் அன்னம்- செங்கமலம்

எட்டாந் திருமொழி
8. செங்கமலம்
திருவழுந்தூர்-4
திருவழுந்தூர் மேவிய ஆமருவியப்பனே தசாவதாரங்களை எடுத்த திருமால் என்று கூறி உள்ளம் உருகிப் பாடுகிறார் ஆழ்வார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாம்பிணையில் பள்ளிகொண்டவனே ஆமருவியப்பன்
1618. செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
வேதப்பொருளை அருளியவன் ஆமருவியப்பன்
1619. முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம் பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம் அவைமுரலச் செங்கமல மலரை யேறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
கஜேந்திரனுக்கு அருளியவன் இவனே
1620. குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று,
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ என்ன நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்,
மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
வராகாவதாரம் எடுத்தவன் இவனே
1621. சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி,
இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்,
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே
நரசிம்மாவதாரம் எடுத்தவன் இவனே
1622. சினமேவும் அடலரியி னுருவ மாகித் திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு,
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின்,
இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல்,
அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
வாமனாவதாரம் எடுத்தவன் இவனே
1623. வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி,
தானமர வேழுலகு மளந்த வென்றித் தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின்,
தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச் செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்,
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
இராமாவதாரம் எடுத்தவன் இவனே
1624. பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப் பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன்,
அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்,
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க,
அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் இவனே
1625. கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து,
வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின்,
செம்பவள மரகதநன் முத்தம் காட்டத் திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும்,
அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
சக்கரபாணி ஆமருவியப்பன்தான்
1626. ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற,
நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காணமின்,
சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித் திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
இவற்றைப் பாடினால் உலகை ஆளலாம்
1627. பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை,
அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை,
கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன் கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல்,
ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார் ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே.
அடிவரவு: செங்கமலம் முன் குலத்தலைய சிலம்பு சினவானவர் பந்து கும்பம் ஊடேறு பன்றி-கள்ளம்
ஒன்பதாந் திருமொழி
9. கள்ளம்மனம்
திருச்சிறுபுலியூர்
திருச்சிறுபுலியூர்ப் பெருமானின் திருப்பெயர் அருள்மாகடல் தாயார் திருமாமகள் நாச்சியார். அருள்மாகடல் நாயகனைத் தொழுது உய்யுமாறு நமக்கு ஆழ்வார் ஈண்டு அறிவுரை கூறியுள்ளனர்.
சந்தக் கலிவிருத்தம்
யாவரும் அருள்மாகடல் நாயகனைத் தொழுமின்
1628. கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்
வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்
தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்
துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.
யார் சொல்லையும் கேளாமல் சிறுபுலியூர் சேர்க
1629. தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி மருவி,
பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,
திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து,
உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே.
அருள்மாகடலின் அடிகளையே நான் அறிவேன்
1630. பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்.
அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்
சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத் துறையும்,
இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே.
வேறு யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன்
1631. வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,
தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்
தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே.
அருள்மாகடலே! அருள் செய்
1632. நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம்,
எறிநீர்ச் செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே.
இப்பரமனைத் தொழுவார்க்குத் துயரமே வராது
1633. முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,
செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே.
மாயனே! நீ எங்கிருக்கிறாய்?
1634. சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்
மாயா எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,
தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்
தாயோ உன தடியார்மனத் தாயோவறி யேனே.
புலியூர்ச் சலசயனத்தானே! அருள் செய்
1635. மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,
உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்
செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே.
பரமனே! உன் திருவடிகளே எங்கள் கதி
1636. கருமாமுகி லுருவா! கனலுருவா! புனலுருவா,
பெருமால்வரை யுருவா! பிறவுருவா! நினதுருவா,
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
அருமாகட லமுதே! உன தடியேசர ணாமே.
பாவம் பறந்துவிடும்
1637. சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,
பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே.
அடிவரவு: கள்ளம் தெருவில் பறை வான் நந்தா முழுசேயோங்கு மையார் கரு சீரார்-பெரும்புறம்.

பத்தாந் திருமொழி
10. பெரும்புறக்கடலை
திருக்கண்ணமங்கை
திருக்கண்ணமங்கைத் திருமாலுக்குப் பக்தவத்சலப் பிரான், பத்தராவிப் பெருமாள் என்னும் திருநாமங்கள் உள்ளன. தாயார் அபிஷேகவல்லி திருக்கண்ணமங்கைப் பெருமானிடம் ஆழ்வார் தம் மனத்தைப் பறிகொடுத்து ஈண்டுப் பாடியுள்ளார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பத்தராவிப் பெருமாளைக் கண்டுகொண்டேன்
1638. பெரும்பு றக்கட லையட லேற்றினைப் பெண்ணை யாணை,எண்ணில் முனிவர்க்
கருள் தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் பத்த ராவியை நித்திலத் தொத்தினை,
அரும்பி னையல ரையடி யேன்மனத் தாசை யை அமு தம்பொதி யின்சுவைக்
கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
எல்லாப் பொருள்களுமாக இருப்பவன் பக்தவத்சலன்
1639. மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும் மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,
மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,
நென்ன லைப்பக லையிற்றை நாளினை நாளை யாய்வரும் திங்களை யாண்டினை,
கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
நான் தேடிய தெய்வம் பக்தவத்சலனே
1640. எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை வாச வார்குழ லாள்மலை மங்கைதன்
பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப் பான்மை யைப்பனி மாமதி யம்தவழ்
மங்கு லைச்,சுட ரைவட மாமலை உச்சியை,நச்சி நாம்வணங் கப்படும்
கங்குலை,பகலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
எனக்கு உற்றுழி உதவுபவன் பக்தவத்சலன்
1641. பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத் தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,
மாய னைமதிள் கோவலி டைகழி மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் ஈசனை,
இலங் கும்சுடர்ச் சோதியை எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை
காசி னைமணி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
இம்மைக்கும் மறுமைக்கும் மருந்து இவனே
1642. ஏற்றி னையிம யத்துளெம் மீசனை இம்மை யைமறு மைக்கு மருந்தினை,
ஆற்றலை அண்டத் தப்புறத் துய்த்திடும் ஐய னைக்கையி லாழியொன் றேந்திய
கூற்றி னை,குரு மாமணிக் குன்றினைநின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
திருமங்கை மணாளன் திருக்கண்ணமங்கையில் உள்ளான்
1643. துப்ப னைத்துரங் கம்படச் சீறிய தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்
செப்பி னை,திரு மங்கைம ணாளனைத் தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி
ஒப்னை,உல கேழினை யூழியை ஆழி யேந்திய கையனை அந்தணர்
கற்பினை,கழு நீர்மல ரும்வயல் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
மூவரில் முதல்வன் பக்தவத்சலன்
1644. திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத் தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்தனை,விளங் கும்சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்த னை,அரி யைப்பரி கீறிய அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற
கருத்த னை,களி வண்டறை யும்பொழில் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
பக்தர்களின் தலைமேல் இருப்பவன் பக்தவத்சலன்
1645. வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக் கன்று வீசிய ஈசனை, பேய்மகள்
துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத் தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய
நஞ்சி னை,அமு தத்தினை நாதனை நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,
கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
பக்தவத்சலனைக் கண்ணாரக் கண்டேன்
1646. பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை வேள்வி யைவிளக் கினொளி தன்னை,
மண்ணி னைமலை யையலை நீரினை மாலை மாமதி யைமறை யோர்தங்கள்
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
கண்ணபிரானை! நீகூட இப்பாடல்களைச் சுவைக்கலாம்
1647. கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன்என்று காத லால்கலி கன்றியு ரைசெய்த,
வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்
விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர் மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய
கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில் கற்க லாம்கவி யின்பொருள் தானே.
அடிவரவு: பெரும்புறம் மெய் எங்களுக்கு பேய் ஏற்றினை துப்பனை திருத்தனை வெஞ்சினம் பண்ணினை கண்மங்கை- சிலை
****************
எட்டாம் பத்து
முதல் திருமொழி
1. சிலையிலங்கு
திருகண்ணபுரம்-1
இந்த எட்டாம் பத்திலுள்ள எல்லாப் பாடல்களும் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள் விஷயமாகப் பாடப்பட்டனவே. ஈண்டுள்ள தாயாரின் பெயர் கண்ணபுர நாயகி. சவுரிராஜப் பெருமாளிடம் ஆழ்வார் தம் மனத்தைப் பறிகொடுத்தவர்.
பெருமாளைத் தலைவனாகவும், தம்மைத் தலைவியாகவும் பாவனை செய்துகொண்டு பாடுவதில் ஆழ்வாருக்கு விருப்பம் மிக அதிகம். இப்படிப் பாடுவதற்கு நாயக நாயகி பாவம் என்று பெயர்.
தலைமகனிடம் பெரிதும் ஈடுபட்டாள் தலைமகள். அதனால் அவளுடைய செயல்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றுக்குரிய காரணங்களைக் கேட்டறிய அண்டை அயலகத்தார் வந்தனர். அவ்வாறு வந்தவர்கட்குத் தலைமகளின் தாய் கூறுதல் போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தலைவி சுவுரிராஜப் பெருமாளைக் கண்டுவிட்டாளோ?
1648. சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண்சங்கம் என்கின் றாளால்,
மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் கெற்றேகாண் என்கின் றாளால்,
முலையிலங்கு பூம்பயலை முன்போட அன்போடி யிருக்கின் றாளால்,
கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
சவுரிராஜனின் வீரத்தை இவள் வியக்கின்றாள்
1649. செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ கைத்தலத்த தென்கின் றாளால்,
பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி மற்றொருகை என்கின் றாளால்,
ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் என்னப்பா என்கின் றாளால்,
கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
சவுரிராஜனின் தோற்றத்தை வர்ணிக்கின்றாள்
1650. துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் தோன்றுமால் என்கின் றாளால்,
மின்னுமா மணிமகர குண்டலங்கள் வில்வீசும் என்கின் றாளால்,
பொன்னின்மா மணியாரம் அணியாகத் திலங்குமால் என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
சவுரிராஜனை இவள் கண்டாள் என்பது உறுதி
1651. தாராய தண்டுளப வண்டுழுத வரைமார்பன் என்கின் றாளால்,
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் என்னம்மான் என்கின் றாளால்,
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் வாயவனுக் கென்கின் றாளால்,
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
சவுரிராஜனின் அவயவங்களையே வர்ணிக்கின்றாள்
1652. அடித்தலமும் தாமரையே அங்கையும் பங்கயமே என்கின் றாளால்,
முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் துள்ளகலா என்கின் றாளால்,
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் துள்ளிருப்பாள் என்கின் றாளால்,
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
சவுரிராஜன் உருவத்தையே புகழ்கின்றாள்
1653. பேரா யிரமுடைய பேராளன் பேராளன் என்கின் றாளால்,
ஏரார் கனமகர குண்டலத்தன் எண்தோளன் என்கின் றாளால்,
நீரார் மழைமுகிலே நீள்வரையே ஒக்குமால் என்கின் றாளால்,
காரார் வயலமரும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
சவுரிராஜன் அழகில் இவள் மயங்கிவிட்டாள்
1654. செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால்,
அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால்,
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால்,
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
கண்ணபுரத்தம்மானையே இவள் காதலிக்கின்றாள்
1655. கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே வருகின்றான் என்கின் றாளால்,
வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே ஒக்குமால் என்கின் றாளால்,
பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் உய்யோமோ என்கின் றாளால்,
கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
சவுரிராஜனை இவள் பிரியமாட்டாள்
1656. வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் மணநாறும் என்கின் றாளால்,
உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் பிரிகிலேன் என்கின் றாளால்,
பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் யாம் என்றே பயில்கின் றாளால்,
கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
பொன்னுலகில் மன்னராவர்
1657. மாவளரு மென்னோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று,
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் தம்மானைக் கலியன் சொன்ன,
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் இவையைந்து மைந்தும் வல்லார்,
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் மன்னவராய்ப் புகழ்தக் கோரே.
அடிவரவு: சிலை செரு துன்னு தார் அடி பேர் செவ்வரத்த கொற்ற வண்டு மாவளரும்-தெள்ளியீர்.

இரண்டாந் திருமொழி
2. தெள்ளியீர்
திருக்கண்ணபுரம்-2
ஆழ்வாராகிய தலைமகளுக்குச் சவுரிராஜப் பெருமாளாகிய தலைமகன் அருள் செய்யவில்லை. தலைவியின் உடல் மெலிந்தது. அவளது நிறம் மாறியது. அந்நிலை கண்ட தாய் தலைமகனது தன்மையைப் பழித்தும், தலைமகளது இளமைக்கு இரங்கியும் கூறுதல்போல் இப்பகுதியை அமைத்துள்ளனர் ஆழ்வார்.
வெண்தளையால் வந்த தரவு கொச்சகக் கலிப்பா
என் மகளின் கைவளை கழன்று விட்டதே!
1658. தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ,
கைவளை கொள்வது தக்கதே?
என் மகள் நாணத்தைத் துறந்து விட்டாள்
1659. நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,
பாணனார் திண்ண மிருக்க இனியிவள்
நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே.
என் மகள் உருகி மெலிந்து விட்டாளே!
1660. அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,
பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
உருகினாள், உள்மெலிந் தாள்இது வென்கொலோ.
என் மகள் ஊணும் உறக்கமும் ஒழிந்தாள்
1661. உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,
பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான்,
கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்
வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ.
இவள் உடம்பில் பசலை (தேமல்) பரவிவிட்டதே
1662. கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை,
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்,
வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள்,
வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே.
என் மகள் மிகவும் இளமை உடையவள்
1663. வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம்,
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்,
மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்
கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே.
என் மகள் எவ்வளவு ஏங்கிவிட்டாள்!
1664. தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,
இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள்
துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர்
அரங்கமே என்ப திவள்தனக் காசையே.
என் மகளின் நிறம் மாறிவிட்டதே!
1665. தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா
கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்
வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்
கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?
என் மகள் இன்னும் பருவம்கூட அடையவில்லையே!
1666. முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா,
தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன்,
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே?
உலகில் நெடுங்காலம் வாழ்வர்
1667. கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,
பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,
சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,
நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே.
அடிவரவு: தெள்ளியீர் நீணிலா அருவி உண்ணும் கண்ணன் வட தரங்கம் தொண்டு முள் கார்-கரை.

மூன்றாந் திருமொழி
3. கரையெடுத்த
திருக்கண்ணபுரம்-3
திருக்கண்ணபுரத்தல் எழுந்தருளிய சவுரிராஜப் பெருமாளாகிய தலைமகன் பிரிந்து சென்றுவிட்டது போலவும், அதனால் ஆழ்வாராகிய தலைமகள் இரங்கிக் கூறுதல் போலவும் ஈண்டுப் பாசுரங்கள் அமைத்துள்ளன. தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறும் அகப்பொருள் துறையில் பாடல்கள் இங்கே இருக்கின்றன. தலைமகன் பிரிவால் தலைமகளின் உடல் மெலிந்து வளைகள் கழன்று விட்டனவாம்!
தரவு கொச்சகக் கலிப்பா
பெருமானின் பிரிவால் மெலிந்தேன்: வளைகள் கழன்றுவிட்டன
1668. கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,
திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர
வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே.
என் கனமான வளைகளை இழந்துவிட்டேன்
1669. அரிவிரவு முகிற் கணத்தா னகில்புகையால் வரையோடும்
தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,
வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,
கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே.
செங்கண்மாலால் என் வளைகளை இழந்தேன்
1670. துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம்
திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்
பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த
செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே.
கண்ணபிரானால் என் பொன் வளைகள் போய்விட்டன
1671. கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,
திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும்
புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே.
என் வரிவளைகளை இழந்துவிட்டேன்
1672. வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்
தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்
தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,
வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே.
என் ஒளிவளைகளை இழந்தேன்
1673. மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,
அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,
உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
உலகமுண்டானால் என் ஒளிவளைகள் ஒழிந்தன
1674. வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,
எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,
உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
அவன் பிரிவால் என் செறிவளைகள் கழன்றன
1675. கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,
வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா,
செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே.
அரவணையானால் என் வளைகள் அகன்றன
1676. வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,
சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,
பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்
பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே.
இவற்றைப் பாடினால் வினைகள் சேரா
1677. தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்
வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே.
அடிவரவு: கரை அரி துங்கம் கணம் வாய் மடல் வண்டு கொங்கு வாராளும் தேமருவு-விண்

நான்காந் திருமொழி
4. விண்ணவர்தங்கள்
திருக்கண்ணபுரம்-4
வண்டே! திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சவுரிராஜப் பெருமாளின் திருமுடியின்மீதுள்ள திருத்துழாய் மாலையைச் சுற்றிச் சுற்றி வந்து ஊது என்று ஆழ்வார் வண்டினை வேண்டுகிறார். கோல்தும்பி என்று இப்பகுதி குறிப்பிடப்படும். தும்பி என்பது வண்டினங்களுள் ஒரு வகை.
தரவு கொச்சகக் கலிப்பா
வண்டே! நறுந்துழாயை ஊது
1678. விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,
கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ.
சவுரிராஜனின் திருத்துழாளைய ஊது
1679. வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,
காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
வண்டே! நீ மலர்களை ஊதினால் பயனில்லை
1680. விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி,
அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும்,
கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ.
வண்டே! மீனாமை சிங்கமானவன் துழாயை ஊது
1681. நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,
சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
மலர்களை ஊதி என்ன பயன்? துழாயை ஊது
1682. ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,
பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,
காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
காயாமலர் வண்ணனின் துழாயை ஊது
1683. மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
வண்டே! துழாய் மாலையையே ஊது
1684. வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
தார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,
காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
சவுரிராஜனின் முடிமேல் துழாயை ஊது
1685. நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,
சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்
காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ.
கண்ணபிரான் சூடிய நறுந்துழாயை ஊது
1686. நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,
அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,
கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ.
வண்டே! நாங்கள் பாட நீ துழாயை ஊது
1687. வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,
கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,
கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ.
அடிவரவு: விண் வேத விண்ட நீர் ஏரார் மார்வில் வாமனன் நீல நந்தன் வண்டமர்-தந்தை

ஐந்தாந் திருமொழி
5. தந்தை கால்
திருக்கண்ணபுரம்-5
தலைமகனாகிய சவுரிராஜப் பெருமாளின் திருவருள் கிடைக்கப்பெறாத தலைவி இளைத்து ஏங்கிப் புலம்புதல் போல் இப்பாசுரங்கள் அமைத்துள்ளன. அந்திமாலைப் பொழுதில் தனித்திருக்கும் தலைவி தன் ஏக்கத்தைப் புலப்படுத்தும் அகப் பொருள் துறை இப்பகுதி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தனியேனை மாலை மதியம் சுடுகின்றதே!
1688. தந்தை காலில் விலங்கறவந்து தோன்றிய தோன்றல்பின்,தமியேன்றன்
சிந்தை போயிற்றுத் திருவருள் அவனிடைப் பெறுமள விருந்தேனை,
அந்தி காவலனமுதுறு பசுங்கதி ரவைசுட அதனோடும்,
மந்த மாருதம் வனமுலை தடவந்து வலிசெய்வ தொழியாதே.
இருள் பரவிவிட்டதே! யான் என் செய்வேன்?
1689. மாரி மாக்கடல் வளைவணற் கிளையவன் வரைபுரை திருமார்பில்,
தாரி னாசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்றுலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன் றறியேனே.
அஞ்சாதே என்று சொல்ல யாரும் இல்லையே!
1690. ஆயன் மாயமே யன்றிமற் றென்கையில் வளைகளும் இறைநில்லா,
பேயின் ஆருயி ருண்டிடும் பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ,
தூய மாமதிக் கதிர்ச்சுடத் துணையில்லை இணைமுலை வேகின்றதால்,
ஆயன் வேயினுக் கழிகின்ற துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே.
தென்றல் நின்றால் என் உயிர் நிற்கும்
1691. கயங்கொள் புண்தலைக் களிறுந்து வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில்,
மயஙகவெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்
தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்,
இயங்கு மாருதம் விலங்கிலென் ஆவியை எனக்கெனப் பெறலாமே.
தோழி! அந்தி வருகின்றதே! என் செய்வேன்
1692. ஏழு மாமரம் துளைபடச் சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,
தோழி நாமிதற் கென்செய்தும் துணையில்லை சுடர்படு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை அடுவதோர் அந்திவந் தடைகின்றதே.
தூக்கமே வரவில்லை; இரவு நீள்கிறதே!
1693. முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே.
இராப்பொழுது துன்புறுத்துகிறதே!
1694. கலங்க மாக்கடல் கடைந்தடைத் திலங்கையர் கோனது வரையாகம்,
மலங்க வெஞ்சமத் தடுசரம் துரந்தவெம் மடிகளும் வாரானால்,
இலங்கு வெங்கதி ரிளமதி யதனொடும் விடைமணி யடும்,ஆயன்
விலங்கல் வேயின தோசையு மாயினி விளைவதொன் றறியேனே.
தலைவன் வரவில்லை: இதனினும் கொடிய வினை இல்லை
1695. முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி,
மழுவி னால்மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்,
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்கவஞ் சிறைகோலி,
தழுவு நள்ளிருள் தனிமையிற் கடியதோர் கொடுவினை யறியேனே.
பிரிவுத்துயர் என்னைக் கொல்கின்றதே!
1696. கனஞ்செய் மாமதிள் கணபுரத் தவனொடும் கனவினி லவன்தந்த,
மனஞ்செ யின்பம்வந் துள்புக வெள்கியென் வளைநெக இருந்தேனை,
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,
அனந்த லன்றிலின் அரிகுரல் பாவியே னாவியை யடுகின்றதே.
இவற்றைப் படிப்போர் தேவரோடு சேர்வர்
1697. வார்கொள் மென்முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புலம்பிய புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி யொலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே.
அடிவரவு: தந்தை மாரி ஆயன் கயம் ஏழு முரி கலங்க முழுது கனஞ்செய் வார்கொள்-தொண்டீர்

ஆறாந் திருமொழி
6. தொண்டீர்
திருக்கண்ணபுரம்-6
நாம் உய்யத் திருக்கண்ணபுரத்து சவுரிராஜப் பெருமாளைத் தொழுவோம் என்கிறார் ஆழ்வார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருக்கண்ணபுரம் தொழுதால் உய்வுண்டு
1698. தொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச் சிறிதே முனிந்த திருமார்பன்,
வண்டார் கூந்தல் மலர்மங்கை வடிக்கண் மடந்தை மாநோக்கம் கண்டாள்,
கண்டு கொண்டு கந்த கண்ண புரம்நாம் தொழுதுமே.
கருடவாகனனை நாம் தொழுவோம்
1699. பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப் பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
இராவணனை வதைத்தவனை நாம் தொழுவோம்
1700. வல்லி யிடையாள் பொருட்டாக மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
சேதுபந்தனம் செய்தவனைத் தொழுவோம்
1701. மல்லை முந்நீ ரதர்பட வரிவெஞ் சிலைகால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை யடைத்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
மன்மதனின் தந்தையை நாம் தொழுவோம்
1702. ஆமை யாகி அரியாகி அன்ன மாகி அந்தணர்தம்
ஓம மாகி ஊழியாய் உலகு சூழ்ந்த நெடும்புணரி
சேம மதிள்சூழிலங்கைக்கோன் சிரமுங்கரமும் துணித்து முன்
காமற் பயந்தான் கருதுமூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
மனமே! வருந்தாதே: கண்ணபுரம் தொழுவோம்
1703. வருந்தா திருநீ மடநெஞ்சே நம்மேல் வினைகள் வாரா முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து பின்னை மணாள னாகி முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
விபீடணனுக்கு அருளியவனைத் தொழுவோம்
1704. இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு,
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக் கருள்புரிந்தான்,
அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற் கரசை யருளி,முன்
கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
மயங்காதே மனமே! கண்ணபுரம் தொழுவோம்
1705. மாலாய் மனமேயருந்துயரில் வருந்தா திருநீ வலிமிக்க
காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்,
மாலார் விடையும் மதகரியும் மல்லர் உயிரும் மடிவித்து,
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
கண்ணனின் கண்ணபுரம் தொழுவோம்
1706. குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியே ரிடையாள் பொருட்டாக,
வன்றாள் விடையே ழன்றடர்த்த வானோர் பெருமான் மாமாயன்,
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகாற் சகடம் சினமழித்து,
கன்றால் விளங்கா யெறிந்தானூர் கண்ண புரம்நாம் தொழுதுமே.
இவற்றைப் பாடுக: தேவர்களும் வணங்குவர்
1707. கருமா முகில்தோய் நெடுமாடக் கண்ண புரத்தெம் அடிகளை,
திருமா மகளா லருள்மாரி செழுநீ ராலி வளநாடன்,
மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்த னொலிவல்லார்
இருமா நிலத்துக் கரசாகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.
அடிவரவு: தொண்டீர் பொருந்தா வல்லி மல்லை ஆமை வருந்தாது இலை மால் குன்றால் கருமா-வியம்.

ஏழாந் திருமொழி
7. வியமுடை
திருக்கண்ணபுரம்-7
உலக மக்கள் உய்யுமாறு தசாவதாரங்களை எடுத்த திருமாலின் இருப்பிடம் திருக்கண்ணபுரம் என்று கூறி, நம்மை யெல்லாம் சவுரிராஜப் பெருமாளிடம் செலுத்துகிறார் ஆழ்வார்.
கலி விருத்தம்
திருமகள் கணவன் உறைவிடம் கண்ணபுரம்
1708. வியமுடை விடையினம் உடைதர மடமகள்,
குயமிடை தடவரை யகலம துடையவர்,
நயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,
கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே.
கண்ணபிரானின் இடம் கண்ணபுரம்
1709. இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து
துணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,
மணமலி விழவினொ டடியவர் அளவிய,
கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே.
குன்று குடையாக எடுத்தவன் இடம் இது
1710. புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,
மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,
முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,
கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே.
மலர்மகள் மணாளன் மன்னும் இடம் இது
1711. ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய்
போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்மகள்
காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே.
அண்டமெல்லாம் அளந்தவர் உறைவிடம் இது
1712. தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து
விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ
கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே.
இராமபிரான் இருப்பிடம் இது
1713. மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,
தழுவிய உருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்
எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே.
யாவரும் கருதும் இடம் கண்ணபுரம்தான்
1714. பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம்
எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறைசொலு மடியவர்
கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே.
மலர்மகளை மார்பில் கொண்டவன் இடம் இது
1715. படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு
கொடிபுல்கு தடவரை அகலம துடையவர்
முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்
கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே.
மலர்மகள் நிலமகள் மணாளனின் இடம் இது
1716. புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய
நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்
வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை
கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே.
துயரம் நீங்குவர்
1717. மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை
வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய இசையினொடு
ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே.
அடிவரவு: வியம் இணை புயல் ஏதலர் தொண்டர் மழுபரிதி படி புலம் மலிபுகழ்-வானோர்.

எட்டாந் திருமொழி
8. வானோர் அளவும்
திருக்கண்ணபுரம்-8
தசாவதாரம் எடுத்த திருமாலைத் திருக்கண்ணபுரத்தில் நேரில் கண்டு கொண்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிய ஆழ்வார் அகங்கனிந்து பாடியுள்ள பாசுரங்கள் இவை.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மச்சாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1718. வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
கூர்மாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1719. மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
வராகாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1720. பாரார் அளவும் முதுமுந்நீர் பரந்த காலம், வளைமருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த ஆற்ற லம்மானை,
கூரார் ஆரல் இரைகருதிக் குருகு பாயக் கயலிரியும்,
காரார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
நரசிம்மாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1721. உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,
விளைந்த சீற்றம் விண்வெதும்ப வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,
பிளந்து வளைந்த வுகிரானைப் பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,
களஞ்செய் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
வாமனாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1722. தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்,
முழுநீர் வையம் முன்கொண்ட மூவா வுருவி னம்மானை
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
பரசுராமாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1723. வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூவெழுகால்,
படியார் அரசு களைகட்ட பாழி யானை யம்மானை,
குடியா வண்டு கொண்டுண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்,
கடியார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
இராமாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1724. வைய மெல்லா முடன்வணங்க வணங்கா மன்ன னாய்த்தோன்றி,
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடிகொண் டோட வெஞ்சமத்து,
செய்த வெம்போர் நம்பரனைச் செழுந்தண் கானல் மணநாறும்,
கைதை வேலிக் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
பலராமாவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1725. ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்றத் தான்தோன்றி,
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் விண்பாற் செல்ல வெஞ்சமத்து,
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் மில்லிருப்ப,
கற்ற மறையோர் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
கிருஷ்ணவதாரம் எடுத்தவனைக் கண்டேன்
1726. துவரிக் கனிவாய் நிலமங்கை துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்,
இவரித் தரசர் தடுமாற இருள்நாள் பிறந்த அம்மானை,
உவரி யோதம் முத்துந்த ஒருபா லொருபா லொண்செந்நெல்,
கவரி வீசும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
இவற்றைப் பாடுங்கள்: பாவங்கள் பறக்கும்
1727. மீனோ டாமை கேழலரி குறளாய் முன்னு மிராமனாய்த்
தானாய் பின்னு மிராமனாய்த் தாமோ தரனாய்க் கற்கியும்
ஆனான் றன்னை கண்ணபுரத் தடியேன் கலிய னொலிசெய்த
தேனா ரின்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே.
அடிவரவு: வான் மலங்கு பார் உளைந்த தொழு வடிவையம் ஒற்றை துவரி மீன்-கைம்மானம்.

ஒன்பதாந் திருமொழி
9. கைம்மானம்
திருக்கண்ணபுரம்-9
திருக்கண்ணபுரத்து சவுரிராஜப் பெருமாளைத் தாம் அடைந்து உய்ந்த செய்தியைப் புலப்படுத்தி, அவரைத் தவிர வேறு யாரையும் நினையாதிருக்கும்படி ஆழ்வார் தம் மனத்திற்கு உறுதி கூறுகிறார்.
தரவு கொச்சகக் கலிப்பா
கண்ணபுரப் பெருமானை அடைந்து நான் உய்ந்தேன்
1728. கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை,
எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்
அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
பள்ளிகொண்டானை அடைந்து பிழைத்தேன்
1729. தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார்,
வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில்,
திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த
பெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே.
சவுரிராஜனுக்கே நான் உரியவன்
1730. விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,
மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்
றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ?
சர்க்கரைக் கனியாம் கண்ணனை நான் அடைந்தேன்
1731. மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
குடந்தையில் கிடந்தவனே! உன்னை மறவேன்
1732. வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை,
எந்தாய் போயறியாய் இதுவே யமையாதோ
கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே.
மனமே! கண்ணபுரத்தானை மறவாதே
1733. எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு,
அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை,
நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய்,
மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே.
நான் சவுரிராஜனை எப்படி மறப்பேன்?
1734. பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு,
உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை,
முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே.
பிறவா வரம் பெற்றுவிட்டேன்
1735. கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை
வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே.
கண்ணபுரத்தானை எப்பொழுது நேரில் காண்பேன்?
1736. கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ.
உலகம் உய்ய இவற்றைப் பாடி ஆடுங்கள்
1737. செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்
கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை
இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,
வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே.
அடிவரவு: கைம்மானம் தரு விடை மிக்கானை வந்தாய் எஞ்சா பெற்றார் கற்றார் கண்ணார் செரு-வண்டார்.

பத்தாந் திருமொழி
10. வண்டார்
திருக்கண்ணபுரம்-10
திருக்கண்ணபுரத்துப் பெருமானைத் தவிர வேறு யாரையும் தம் மனத்தால் சிந்தித்துப் பார்க்கமுடியாத நிலையை ஆழ்வார் ஈண்டுப் புலப்படுத்துகிறார்.
தரவு கொச்சகக் கலிப்பா
பெருமானே! எனக்கு நீ என்ன செய்யப்போகிறாய்?
1738. வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம்
உண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே
தொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம்
கண்டானே கண்ண புறத்துறை யம்மானே.
கண்ணபுரத்தானே! நீயே என் தெய்வம்
1739. பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்
ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால்
வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்
கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.
அஷ்டாக்ஷரத்தையே நான் கற்றேன்
1740. மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ
டுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை
மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே.
கண்ணனே! உன்னை நான் உகந்தேன்
1741. பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல்
உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான்
மண்ணாளா வாள்நெடுங் கண்ணி மதுமலராள்
கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே.
யாரையும் விரும்பாமல் உன்னையே அடைந்தேன்
1742. பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான்
மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன்
உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய்
கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே.
உன் அடியாரை யமதூதர் நெருங்கமாட்டார்
1743. ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,
பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது
சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ
காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே.
உன் அடியார்க்கு யமதூதர் அஞ்சுவர்
1744. வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல்
துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே.
உன்னை நினைத்தால் என் துன்பங்கள் நீங்கின
1745. மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன்
பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்
காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.
என் நெஞ்சில் நீ இருப்பதை வெளிப்படுத்தினாய்
1746. நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக
மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை
பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே.
விண்ணுலக ஆட்சி கிடைக்கும்
1747. கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை
பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும்
அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே.
அடிவரவு: வண்டார் பெரு மற்று பெண் பெற்றார் ஏத்தி வெள்ளை மாண் நாட்டினாய் கண்டசீர்-வங்கம்
*********
ஒன்பதாம் பத்து
முதல் திருமொழி
1. வங்கமா முந்நீர்
திருக்கண்ணங்குடி
திருக்கண்ணங்குடியில் திருக்கோயில் கொண்டெழுந்தருளியுள்ளவர் சியாமளமேனிப் பெருமாள். லோகநாதன் என்றும் பெயர். தாயார் அரவிந்தவல்லி. கிருஷ்ண ÷க்ஷத்ரங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சியாமள மேனியன் திருக்கண்ணங்குடியில் உள்ளான்
1748. வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளர வினணை மேவி
சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் சாமமா மேனியென் தலைவன்
அங்கமா றைந்து வேள்விநால் வேதம் அருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
கஜேந்திரஜனுக்கு அருளியவன் இடம் இது
1749. கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் கராம்கொளக் கலங்கியுள் நினைந்து
துவளமேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன்
குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தலொண் கழனி
திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
மச்சாவதாரம் எடுத்தவன் இடம் இது
1750. வாதைவந் தடர வானமும் நிலனும் மலைகளும் அலைகடல் குளிப்ப
மீதுகொண் டுகளும் மீனுரு வாகி விரிபுனல் வரியகட் டொளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புதுவிரை மதுமல ரணைந்து சீதவொண்
தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
வராகவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
1751. வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்து உயர்கொடி யொளிவளர் மதியம்,
சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
வாமனாவதாரம் எடுத்தவன் வாழுமிடம் இது
1752. மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னுமே ழுலகும் ஈரடி யாகப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் தலைபுன லிலைக்குடை நீழல்
செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
பரசுராமாவதாரம் எடுத்தவன் இடம் இது
1753. மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் மணிமுடி பொடிபடுத்து உதிரக்
குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் தவிர்ந்தவன், குலைமலி கதலிக்
குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் குளிர்தரு சூதம்மா தவியும்
செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
இராமாவதாரம் எடுத்தவன் இடம் இது
1754. வானுளா ரவரை வலிமையால் நலியும் மலிகடல் இலங்கையார் கோனை
பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் கணமுகில் முரசநின் றதிர
தேனுலா வரிவண் டின்னிசை முரலும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் இடம் இது
1755. அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை அஞ்சிடா தேயிட, அதற்குப்
பெரியமா மேனி யண்டமூ டுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்
வரையின்மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங் குடியுள் நின் றானே.
பார்த்தசாரதி நிற்கும் இடம் இது
1756. பன்னிய பாரம் பார்மகட் கொழியப் பாரத மாபெரும் போரில்
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் மைத்துனர்க் குய்த்தமா மாயன்
துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
இவற்றைப் படித்தால் வறுமையே வராது
1757. கலையுலாவல்குல் காரிகை திறத்துக் கடல்பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற திருக்கண்ணங் குடியுள்நின் றானை
மலைகுலா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்
உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் வல்லவர்க் கில்லைநல் குரவே.
அடிவரவு: வங்கம் கவளம் வாதை வென்றி மன்னவன் மழு வானுளார் அரவு பன்னிய கலை-பொன்.

இரண்டாந் திருமொழி
2. பொன்னிவர் மேனி
திருநாகை
நாகப்பட்டினம் என்பது மருவி நாகை என்று ஆயிற்று. தஞ்சை மாவட்டத்தில் உள்ள இவ்வூரில் பெருமாளின் பெயர் சவுந்தரியராஜன். தாயார் பெயர் சவுந்தரியவல்லி.
தலைமகனின் சவுந்தரியத்தில் மயங்கிய தலைமகள் தன் தோழிக்கு உரைப்பதுபோல், ஆழ்வார் சவுந்தரியராஜனின் திருவுருவ அழகை இங்கே வருணித்துள்ளார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அச்சோ! இவர் எவ்வளவு அழகு!
1758. பொன்னிவர் மேனி மரக தத்தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின் இவர் வாயில்நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர்தோழீ,
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா.
குடந்தையில் கிடக்கும் பெருமாளா இவர்?
1759. தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த
சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி
பாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா.
உலகம் அளந்த உத்தமர் தான் இவர்?
1760. வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம்
தாயின நாயக ராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு,
சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் செவ்விய வாகி மலர்ந்தசோதி
ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா.
சங்கு சக்கரதாரியின் அழகு தான் என்னே!
1761. வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி,
நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் நாகரி கர்பெரி துமிளையர்
செம்பவ ளமிவர் வாயின் வண்ணம் தேவ ரிவர துருவம்சொல்லில்
அம்பவ ளத்திர ளேயு மொப்பர் அச்சோ ஒருவர் அழகியவா.
கடல் வண்ணர் கட்டழகுடையவர்
1762. கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில் மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா.
கம்சனை வதைத்த காளையைக் கண்டேன்
1763. வெஞ்சின வேழம் மருப்பொ சித்த வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை
தஞ்சுடை யாளர்கொல் யான றியேன் தாமரைக் கண்க ளிருந்தவாறு
கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த காளையா ரவர்கண் டார்வணங்கும்
அஞ்சன மாமலை யேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா.
இவரைக் கண்டு என் மனம் பணிகின்றதே!
1764. பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும் பேரரு ளாளர்கொல்? யானறியேன்,
பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணிகெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கய மேனிவானத்து,
அணிகெழு மாமுகி லேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா.
கருட வாகனர் வந்தார்: யாவரும் பாருங்கள்
1765. மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட மாலிருஞ் சோலைம ணாளர்வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்?
மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்
அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் அச்சோவொரு வரழகியவா.
ஆலிலையில் பள்ளி கொண்டவர் இவர் தாமோ?
1766. எண்டிசை யுமெறி நீர்க்க டலும் ஏழுல குமுட னேவிழுங்கி
மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும் மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்
கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்
அண்டத் தமரர் பணிய நின்றார் அச்சோவொருவரழகியவா.
தேவர்களாகி மகிழ்வர்
1767. அன்னமும் கேழலும் மீனு மாய ஆதியை நாகை யழகியாரை
கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க்கலி கன்றி குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார்,
மன்னவ ராயுல காண்டு மீண்டும் வானவ ராய்மகிழ் வெய்துவரே.
அடிவரவு: பொன் தோடு வேய் வம்பு கோழி வெஞ்சின பிணி மஞ்சுயர் எண்டிசை அன்னம்-தன்னை.

மூன்றாந் திருமொழி
3. தன்னை நைவிக்கிலேன்
திருப்புல்லாணி
கோயில் பிராகாரத்தில் ஸ்ரீ இராமபிரான் தர்ப்பையில் சயனக் கோலத்தில் காட்சி தரும் இத்தலம் தர்ப்ப சயனம் என்றும் அழைக்கப்படும். புல்லாணி-தர்ப்ப சயனம். இங்கே எழுந்தருளியுள்ள பெருமான் தெய்வச்சிலையான், கல்யாண ஜகந்நாதன் என்னும் பெயர்களைக் கொண்டவர். தாயாரின் பெயர் கல்யாணவல்லி. திருப்புல்லாணிப் பெருமானைச் சேவித்து, அவனருள் பெறுமாறு, தமது நெஞ்சை அழைக்கின்றார் ஆழ்வார். பிரிவுத்துயரால் வருந்தும் தலைவியின் கூற்றாகப் பாடல்கள் உள்ளன.
கலி நிலைத்துறை
மனமே! புல்லாணிக்கு எழுக
1768. தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு
பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய்
என்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம்,
புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே.
மனமே! கல்யாண ஜகந்நாதனைத் தொழலாம்
1769. உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு
முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,
பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்
பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே.
மனமே! என்னைப் பிரிந்தவனைக் காணலாம் வா
1770. ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு
தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம் போது
நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே.
தோழீ! திருப்புல்லாணி தொழலாம், வா
1771. கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன்
மங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே.
முன்பு அருளிப் பிரிந்தவனைத் தொழலாம், வா
1772. உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு
துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து பின்
தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம்,
புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே.
மனமே! இங்கிருந்து என்ன பயன்? கிளம்பு
1773. எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு
வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம்
கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும்,
புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே.
மனமே? தூங்காமல் இருந்து என்ன பயன்? கிளம்பு
1774. பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய்
இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்?
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை
புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே.
மனமே! அன்பு காட்டிப் பிரிந்தவரிடம் வா
1775. அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,
சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு,
உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே.
தோழீ! புல்லாணி செல்வதே நல்லது, வா
1776. ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின்
ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப்
போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே.
இவற்றைப் பாடினால் வைகுந்தம் கிடைக்கும்

1777. இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல்
கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை
வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே.
அடிவரவு: தன்னை உருகி ஏது கொங்கு உணரில் எள்கி பரவி அலமும் ஓதி இலங்கு-காவார்.

நான்காந் திருமொழி
4. காவார்
திருப்புல்லாணி-2
தலைமகனைப் பிரிந்த தலைமகளிர் பிரிவுத் துன்பத்தால் புலம்புதல் போல் ஆழ்வார் திருப்புல்லாணி கல்யாண ஜகந்நாதனை நினைந்து புலம்பி ஈண்டுப் பாடியுள்ளார்.
தரவு கொச்சகக் கலிப்பா
பிரிவு வாட்டுகிறது: புல்லாணி தொழுதேன்
1778. காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏவாயி னூடியங்கும் எஃகில் கொடிதாலோ
பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே.
பறவைகளே! என் துயரை ஜகந்நாதனிடம் சொல்லுங்கள்
1779. முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்
பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே.
புல்லாணி சென்ற என் மனம் என்ன செய்கின்றதோ?
1780. வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம்
செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள்
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே.
அவனது அருளுக்கு ஏங்கித் தொழுதேன்
1781. பரிய இரணியன் தாகம் அணியுகிரால்
அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு
பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்
அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே.
புல்லாணிப் பெருமான் பேச்சையே கேட்பேன்
1782. வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்,
எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும்,
புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே.
என் உடல் இளைத்தது: எனினும் புல்லாணி தொழுதேன்
1783. சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்
அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்
செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே.
பிரிவுத்துயர் வதைக்கின்றது: எனினும் புல்லாணி தொழுதேன்
1784. கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்
தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ புனையார்
மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே.
நிலவு கூடுகிறது: எனினும் புல்லாணி தொழுதேன்
1785. தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு
பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே.
தூக்கமே இல்லை: எனினும் புல்லாணி தொழுதேன்
1786. வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,
ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே.
மண்ணுலகை ஆண்டு தேவருலகு சேர்வர்
1787. பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை
கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே.
அடிவரவு: காவார் முன்னம் வவ்வி பரிய வில் சுழன்று சுனை தூம்புடை வேதம் பொன்-தவள

ஐந்தாந் திருமொழி
5. தவள இளம்பிறை
திருக்குறுங்குடி-1
திருக்குறுங்குடி எம்பெருமானின் திருநாமம் வைஷ்ணவநம்பி. தாயார் குறுங்குடிவல்லி. வைஷ்ணவ நம்பியின் அருளால்தான் நம்மாழ்வார் திருவவதாரம் செய்தார் என்பர் அறிஞர். ஆழ்வார் தம்மைத் தலைவியாக பாவித்துக்கொண்டு, குறுங்குடிப் பெருமானிடம் தம்மைச் சேர்த்துவிடுமாறு ஈண்டுப் பாடியுள்ளார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
என்னைத் திருக்குறுங்குடியில் சேர்த்துவிடுங்கள்
1788. தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்
துவள என் னெஞ்சகம் சோரவீரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்
இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன
குவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
யார் இகழ்ந்தாலும் என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்
1789. தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே
ஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் உறங்கும்
பேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார்
கோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
விரைவில் என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்
1790. காலையும் மாலையொத் துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்,
போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி
மாலவன் மாமணி வண்ணன்மாயம் மற்று முளவவை வந்திடாமுன்கோல
மயில்பயி லும்புறவில் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
உறக்கமே இல்லை: என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்
1791. கருமணி பூண்டுவெண் ணாகணைந்து காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும்
ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள ஓரிர வுமுறங் காதிருப்பேன்
பெருமணி வானவ ருச்சிவைத்த பேரரு ளாளன் பெருமைபேசி
குருமணி நீர்கொழிக் கும்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
பிரிவுத்துயர் வாட்டுகிறது: என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்
1792. திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற கோல இளம்பிறை யோடுகூடி
பண்டைய வல்லவிவை நமக்குப் பாவியே னாவியை வாட்டஞ்செய்யும்
கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
குறுங்குடிக்கு பெருமானை நான் மறக்கவே மாட்டேன்
1793. எல்லியும் நன்பக லுமிருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
நல்லர் அவர்திறம் நாமறியோம் நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை
வல்லன சொல்லி மகிழ்வரேனும் மாமணி வண்ணரை நாம்மறவோம்
கொல்லை வளரிள முல்லைபுல்கு குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
குறுங்குடிப் பெருமான் அருள் எனக்கு நிச்சயம் உண்டு
1794. செங்க ணெடிய கரியமேனித் தேவ ரொருவரிங் கேபுகுந்து என்
அங்கம் மெலிய வளைகழல ஆதுகொ லோ என்று சொன்னபின்னை
ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ டாடு மதனை யறியமாட்டேன்
கொங்கலர் தண்பணை சூழ்புறவில் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
மன்மதன் துன்புறுத்துமுன் குறுங்குடிக்கு அனுப்புங்கள்
1795. கேவல மன்று கடலினோசை கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என்
ஆவி யளவும் அணைந்துநிற்கும் அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு
ஏவலங் காட்டி இவனொருவன் இப்படி யேபுகுந் தெய்திடாமுன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
இளமை கழியுமுன் என்னைக் குறுங்குடியில் சேருங்கள்
1796. சோத்தென நின்று தொழவிரங்கான் தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்
போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் போயின வூரறி யேன் என்கொங்கை
மூத்திடு கின்றன மற்றவன்றன் மொய்யக லம் அணை யாதுவாளா
கூத்த னிமையவர் கோன்விரும்பும் குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்.
என் மனத்தில் இருப்பவன் குறுங்குடிப் பெருமான்
1797. செற்றவன் தென்னிலங் கைமலங்கத் தேவர்பி ரான்திரு மாமகளைப்
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரரு ளாளன் பெருமைபேசக்
கற்றவன் காமரு சீர்க்கலியன் கண்ணகத் தும்மனத் துமகலாக்
கொற்றவன் முற்றுல காளிநின்ற குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின்
அடிவரவு: தவள தாதவிழ் காலை கருமணி திண்டிமில் எல்லி செங்கண் கேவலம் சோத்தென செற்றவன்-அக்கும்

ஆறாந் திருமொழி
6. அக்கும் புலியின்
திருக்குறுங்குடி-2
தேவதாந்தரத்திற்கும் தம்முடம்பில் இடம் கொடுத்திருக்கும் பண்புடையவன் (எம் பெருமான்) திருக்குறுங்குடி நம்பி. அவன் அப்படி இருக்க நமக்குக் குறை ஏது? பகவத் விஷயத்திற்கு அனுகூலர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களையும் அழைத்துக்கொண்டு திருக்குறுங்குடிப் பெருமானை அனுபவிக்கிறார் ஆழ்வார்.
கலி நிலைத்துறை
சிவனுக்கு இடங்கொடுத்தவர் குறுங்குடி நம்பி
1798. அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர்,
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்
தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே,
பாம்பணையான் ஊர் குறுங்குடி
1799. துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள்,
பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்,
செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும்,
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே.
தொண்டர்காள்! குறுங்குடிக்கு வருக; வாழ்வு பெறுக
1800. வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்,
கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்,
ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி,
கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே.
அரங்கன் பத்துத் தலைகள் துணித்தவன் ஊர் இது
1801. சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன்
உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும்,
இரவும் பகலும் ஈன்தேன் முரல,மன்றெல்லாம்
குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே.
பாண்டவர்க்குத் தேரோட்டியவன் ஊர் இது
1802. கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்
ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும்,
மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான்,
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே.
தொண்டர்கள்! குறுங்குடி தொழுமின்
1803. தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி,
தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள்,
மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் வானில்
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே.
பெண்ணாசை ஒழியக் குறுங்குடி சேர்மின்
1804. வல்லிச் சிறுநுண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற,
அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான்,
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே
பக்தர்காள்! அன்புடன் குறுங்குடி அடையுங்கள்
1805. நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,
ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள்,
தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் கூர்வாய்
நாரை பேடையொ டாடும் குறுங்குடியே.
குறுங்குடி தொழுமின்: வினையும் துயரும் கெடும்
1806. நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,
சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,
என்றும் மிரவும் பகலும் வஜீவண் டிசைபாட,
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே.
பாடல்களைப் பாடுக: பாவம் நில்லா
1807. சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்,
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்,
கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே.
அடிவரவு: அக்கும் துங்கார் வாழ சிரமுன் கவ்வை தீநீர் வல்லி நாரார் நின்ற சிலையால்-தந்தை.

ஏழாந் திருமொழி
7. தந்தைதாய்
திருவல்லவாழ்
கோலப்பிரான் என்னும் திருநாமம் கொண்ட பெருமான் எழுந்தருளியுள்ள திருவல்லவாழ் என்னும் ஊர் மலைநாட்டுத் திருப்பதி. திருமங்கையாழ்வார் மலைநாட்டுத் திருப்பதிகளுள் மூன்றை மட்டும் மங்களாசாஸனம் செய்துள்ளார். அவற்றுள் ஒன்று இந்தத் திவ்ய தேசம். இவ்வூருக்கு அருகில் வாழ்பவர்கள் இவ்வூரைத் திருவல்லா என்பார்கள். திருவல்லவாழ் என்ற பெயரை வாயால் சொல்லவேண்டும் என்று மனம் நினைப்பதே சிறந்தது என்கிறார் ஆழ்வார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மனமே! திருவல்லவாழைச் சொல்ல நினை
1808. தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ பழியெனக் கருதி னாயேல்
அந்தமா யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆய னாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே!
பெண்ணாசை நீங்கத் திருவல்லவாழ் நினை
1809. மின்னுமா வல்லியும் வஞ்சியும் வென்றநுண் ணிடைநுடங்கும்,
அன்னமென் னடையினார் கலவியை அருவருத் தஞ்சி னாயேல்,
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் காகிமுன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
திருவல்லவாழ் என்று அஞ்சாமல் சொல்
1810. பூணுலா மென்முலைப் பாவைமார் பொய்யினை மெய்யி தென்று,
பேணுவார் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்
நீணிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண்ணி ரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
உய்யவேண்டுமா? வல்லவாழ் நினை
1811. பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் பணைமுலை அணைதும் நாம் என்று,
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ பிழைத்துய்யக் கருதி னாயேல்,
விண்ணுளார் விண்ணின்மீ தியன்ற வேங்கடத்துளார் வளங்கொள்
முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
வல்லவாழ் என்று சொல்லும் திட்பம் வேண்டும்
1812. மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ துயரெனக் கருதி னாயேல்
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் வைத்தவள் நாளை யுண்ட
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
பிறவித்துயர் நீங்க வல்லவாழ் நினை
1813. உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்புதோல் குரம்பை யுள்புக்கு
அருவிநோய் செய்துநின் றைவர்தாம் வாழ்வதற் கஞ்சி னாயேல்
திருவினார் வேதநான் கைந்துதீ வேள்வியோ டங்க மாறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
வல்லவாழ் என்று சொல்லும் உறுதி கொள்க
1814. நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல்வா னாகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
யாக்கை நிலையாது: வல்லவாழ் நினை
1815. மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக் கையை அரணமன் றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
எந்த நூலும் வேண்டாம்: வல்லவாழ் நினை
1816. வெள்ளியார் பிண்டியார் போதியார் என்றிவர் ஓது கின்ற
கள்ளநூல் தன்னையும் கருமமன் றென்றுய்யக் கருதி னாயேல்,
தெள்ளியார் கைதொழும் தேவனார் மாமுநீர் அமுது தந்த,
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.
உலகை ஆண்டு இன்புறுவர்
1817. மறைவலார் குறைவிலார் உறையுமூர் வல்லவாழடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ் கோலநீள் ஆலி நாடன்
கறையுலா வேல்வல்ல கலியன்வாய் ஒலியிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம் காவல்பூண் டின்பநன் கெய்து வாரே.
அடிவரவு: தந்தை மின் பூண் பண் மஞ்சுதோய் உருநோய் மஞ்சுசேர் வெள்ளியார் மறை- முந்துற

எட்டாந் திருமொழி
8. முந்துற
திருமாலிருசோலை-1
எம்பெருமான் தமிழ் நாட்டில் இரண்டு மலைகளில் மிகவும் ஆசையுடன் வாழ்கிறான். ஒன்று வடவேங்கடம்: மற்றொன்று திருமாலிருஞ்சோலை மலை.
மட நெஞ்சே! மாதரார் கண் வலையில் சிக்கித் தடுமாறு வதை விட்டொழித்துத் திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா என்று ஆழ்வார் அழைத்துத் திருமாலிருஞ்சோலையை அனுபவிக்கிறார் ஈண்டு எழுந்தருளியுள்ள பெருமான் அழகர்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மனமே! மாலிருஞ்சோலையை வணங்குவோம்
1818. முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை விடுதடு மாறல்
அந்தர மேழும் அலைகட லேழும் ஆயவெம் மடிகள்தம் கோயில்,
சந்தொடு மணியும் அணிமயில் தழையும் தழுவிவந் தருவிகள் நிரந்து,
வந்திழி சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
பாம்பணைப் பள்ளிகொண்டவன் கோயில் இது
1819. இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர்முடிக் கடவுள்தம் கோயில்
விண்டலர் தூளி வேய்வளர் புறவில் விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
திரிவிக்கிரமன் கோயில் இதுதான்
1820. பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் பெருநிலம் அருளின்முன் அருளி
அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்தவெம் மடிகள்தம் கோயில்
கணிவளர் வேங்கை நெடுநில மதனில் குறவர்தம் கவணிடைத் துரந்த
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
தாடகையை வதைத்தவர் இடம் மாலிருஞ்சோலை
1821. சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் சுடுசரம் அடுசிலைத் துரந்து
நீர்மையி லாத தாடகை மாள நினைந்தவர் மனம்கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்
வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
இராவணனை வதைத்தவர் கோயில் இது
1822. வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய மணிமுடி ஒருபதும் புரள
அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட அமர்ச்செய்த அடிகள்தம் கோயில்
பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் பிரசம்வந் திழிதர பெருந்தேன்
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
கண்ணன் தங்கும் மாலிருஞ்சோலையை வணங்குவோம்
1823. விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக் கிளங்கன்று விசிறி,
குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த கூத்தவெம் மடிகள்தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறென்று முனிந்து
மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
மூட மனமே! மாலிருஞ்சோலையை வணங்கலாம்
1824. தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி யுதிர தானுகந்
தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,
வானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் நிறைந்து,
மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
அரவணையானின் மாலிருஞ்சோலையை வணங்கு
1825. புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் பொருகடல் அரவணைத் துயின்று,
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனிமுகில் வண்ணர்தம் கோயில்,
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள்வழிக் களிவண்டு பருக,
மதமிகு சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
மூட மனமே! மாலிருஞ்சோலைக்கு வந்து வணங்கு
1826. புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு,
எந்தைபெம் மானார் இமையவர் தலைவர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும்,
மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
இவற்றைப் பாடுவோர் உலகை ஆள்வர்
1827. வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை மாமணி வண்ணரை வணங்கும்,
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் சூழ்வயல் ஆலிநன் னாடன்
கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் கலியன்வா யொலிசெய்த பனுவல்,
கொண்டிவை பாடும் தவமுடை யார்கள் ஆள்வரிக் குரைகட லுலகே.
அடிவரவு: முந்துற இண்டை பிணி சூர்மை வணங்கலில் விடம் தேனுங்கன் புதம் புந்தி வண்மடர்-மூவரில்

ஒன்பதாந் திருமொழி
9. மூவரில்
திருமாலிருஞ்சோலை-2
திருமாலிருஞ்சோலை அழகரின் வடிவழகிலே நெஞ்சைப் பறி கொடுத்த ஆழ்வார் ஈண்டு உருகிப் பாடியுள்ளார். அழகரைத் தலைமகனாகவும், தம்மைத் தலைமகளாகவும் பாவித்துக் கொள்கிறார். தலைமகனைத் தலைமகள் கண்டு மகிழ்வாளோ என்று தலைவியின் தாய் கூறதல்போல் பாடல்கள் அமைந்துள்ளன.
கட்டளைக் கலித்துறை
அழகரை என் மகள் கூடுவாளோ!
1828. மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து,
பூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த,
தேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற,
கோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ.
அழகரின் திருவடிகளை என்மகள் காண்பாளோ?
1829. புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்
முனைவனை, மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை,
சினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான்
கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே.
ஆலிலைத் துயின்றானை என்மகள் அணுகுவாளோ?
1830. உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,
கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,
திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.
நரசிங்கனை என் மகள் நணுகுவாளோ?
1831. சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,
பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,
திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே.
திரிவிக்கிரமனை என் மகளால் வணங்க முடியுமோ?
1832. தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து,
வானமும்மண் ணகமும் அளந்த திஜீவிக் கிரமன்,
தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,
வானவர் கோனையின்று வணங்கித்தொழ வல்லள் கொலோ.
திருமாலிருஞ்சோலைக் கேசவனை என் மகள் காண்பாளோ!
1833. நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,
வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான்,
தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ.
கண்ணனை வணங்கும் திறம் என் மகளுக்கு உண்டோ!
1834. புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,
கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,
தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ.
கண்ணனை என் மகளால் தொழ முடியுமோ!
1835. பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று,
காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே.
என் மகள் நாரணனை நணுகுவாளோ!
1836. வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை,
புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை,
சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற,
நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே.
இவற்றைப் படிப்பார்க்குப் பாவங்கள் இல்லை
1837. தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,
ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று,
மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன
பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே.
அடிவரவு: மூவரில் புனை உண்டு சிங்கம் தானவன் நேசம் புள் பார்த்தன் வலம்புரி தேடற்கு-எங்கள்.

பத்தாந் திருமொழி
10. எங்கள்
பாண்டிய நாட்டிற்குத் திலகமாய் விளங்குவது திருக்கோட்டியூர். இதற்குக் கோஷ்டீபுரம் என்றும் பெயர். மூவுலகையும் துன்புறுத்திய இரணியனை அழிப்பதற்குத் தேவர்கள் இவ்வூரில் ஆலோசனை நடத்தினார்களாம். அசுரர்கள் உள்ளே புகமுடியாத இடம் இது. ஆழ்வானின் குமாரர் பட்டர் பலநாட்கள் இங்கு எழுந்தருளியிருந்தார். எம் பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியிடம் சரம சுலோகார்த்தம் பெற்று வெளியிட்ட இடம் இதுதான் . இத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் சவும்ய நாராயணன். தாயார் திருமாமகள் நாச்சியார்.
ஆசிரியத்துறை
தேவர்கட்கு நாயகன் திருக்கோட்டியூரான்
1838. எங்க ளெம்மிறை யெம்பிரா னிமை யோர்க்கு நாயகன்,
ஏத் தடியவர் தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,
பொங்குதண் ணருவி புதம்செய்யப் பொன்களே சிதறு மிலங்கொளி,
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே.
திருமாமகட்கு இனியவன் திருக்கோட்டியூரான்
1839. எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள்
செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,
மௌவல் மாலைவண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்துமாருதம்
தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.
உலகம் உண்டவனே திருக்கோட்டியூரான்
1840. வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்கிறை,
எமக்கு ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான்,
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றைச் சந்தன முந்தி வந்தசை,
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே.
சிவனுக்குத் தன் உடம்பில் பங்கு தந்தவன்
1841. ஏறுமேறி இலங்குமொண் மழுப்பற்றும் ஈசற் கிசைந்து, உடம்பிலோர்
கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான்,
நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி இன்னிள வண்டு,நன்னறுந்
தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே.
கடல் வண்ணன் இங்குதான் உள்ளான்
1842. வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் விண்ணவர் கோன்ம துமலர்த்
தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான்,
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி மாக மீதுயர்ந் தேறி,வானுயர்
திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே.
தேவர்கள் வந்து வணங்கும் இடம் இது
1843. காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,
நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென,
தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே.
கண்ணன் வாழும் இடம் இதுதான்
1844. கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் கழிவென்று, மாமழை
நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை மணமும் அளைந்து,
இளந் தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே.
என் மனத்தில் புகுந்தவன் திருக்கோட்டியூரான்
1845. பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து,அடியேனை யாளுகந்து
ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான்,
தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே.
பக்தர்கள் தொழும் பிரான் இவன்
1846. கோவை யின்தமிழ் பாடு வார்குடம் ஆடு வார்தட மாமலர்மிசை,
மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர்,
மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்,
தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே.
தேவ பதவி கிடைக்கும்
1847. ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணிபொழில்
சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை,
நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை இன்தமி ழால்நி னைந்த,இந்
நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே,
அடிவரவு: எங்கள் எவ்வம் வெள்ளி ஏறு வங்கம் காவலன் கன்று பூங்குருந்து கோவை ஆலும்-ஒரு
*********
பத்தாம் பத்து
முதல் திருமொழி
1. ஒருநற் சுற்றம்
பல திருப்பதிகள்
முன் ஒருகால் இவ்வாழ்வாருக்குப் பரமபதம் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அப்போது பகவான் இவ்வுலகில் உள்ள சில திவ்வியதேசங்களைக் காட்டி அவற்றை அனுபவிக்கும்படி ஆழ்வாரின் எண்ணத்தைத் திருப்பினான். அதன் பிறகு பல திருப்பதிகளுக்கு எழுந்தருளி ஆழ்வார் மங்களாசாஸனம் செய்து முடித்தார்.
இப்போது மீண்டும் அவருக்குப் பரமபதம் ஆசை ஏற்பட்டு விட்டது. புக்ககத்திற்குச் செல்லும் பெண் பழக்கமுள்ள தோழியரிடம் போய் வருகிறேன் என்று கூறச் செல்வதுபோல் ஆழ்வாரும் மிக அவசரமாகப் பல எம்பெருமான்களிடம் சொல்லிச் செல்வது போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.
கலி விருத்தம்
திருநீர்மலையும் திருக்கண்ணமங்கையும்
1848. ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்
வருநல் தொல்கதி யாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்
கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே.
திருவேங்கடமும் திருத்தண்காவும்
1849. பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே.
திருவாலியும் திருநாங்கூரும்
1850. வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் மாலை
ஆலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே.
திருப்பேர் நகரும் திருவெள்ளறையும்
1851. துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே.
திருநறையூரும் திருமெய்யமும்
1852. சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்
நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்
உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்
விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே.
திருச்சேறையும் திருக்குடந்தையும்
1853. வானை ஆரமு தம்தந்த வள்ளலை
தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய்
ஆனை வாட்டி யருளும் அமரர்த்தம்
கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே.
தேரழுந்தூரும் திருவெஃகாவும்
1854. கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய்
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே.
திருமாலிருஞ்சோலையும் திருவிண்ணகரும்
1855. பத்த ராவியைப் பான்மதி யை,அணித்
தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்
முத்தி னைமணி யைமணி மாணிக்க
வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே.
திருக்கோட்டியூரும் திருநாவாயும்
1856. கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே.
இவற்றைப் பாடுவோர்க்குத் துன்பமில்லை
1857. பெற்றம் ஆளியை பேரில் மணாளனை
கற்ற நூல்கலி கன்றி யுரைசெய்த
சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே.
அடிவரவு: ஒரு பொன் வேலை துளக்கம் சுடலை வானை கூந்தல் கம்பம் பெற்றம்-இரக்கம்.

இரண்டாந் திருமொழி
2. இரக்கமின்றி
சக்கரவர்த்தி திருமகன் விஷயம்
பொங்கத்தம் பொங்கோ
(தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்து)
பகவானின் அடியார்கள் அவனது வெற்றியைப் பாடுவது சிறப்பு: பகவானைத் தமக்கு எதிரியாக நினைப்பவர்கள் அவனது வெற்றியைப் பாடுவது பெருஞ் சிறப்பு. போர்க் களத்தில் தோல்வியுற்ற அரக்கர்கள் இராமபிரானின் வெற்றியைப் பாடி அபயம் வேண்டுதல்போல் அமைந்தது இப்பகுதி)
தோற்ற ராக்ஷஸர் பாசுரத்தாலே ராம விஜயத்தைப் பேசி அனுபவிக்கிறார்-என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இராமபிரானே! அடைக்கலம் அருள்
1858. இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர்
பரக்க யாமின் றுரைத்தென் இரவணன் பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம்
குரக்கு நாயகர் காள்இளங் கோவே கோல வல்வி லிராம பிரானே
அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ.
அத்தனே! எம்மைக் கொல்லாதே, அபயம்
1859. பத்து நீள்முடி யுமவற் றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான் செய்வ தொன்றறி யாவடி யோங்கள்
ஒத்த தோளிரண் டுமொரு முடியும் ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம்
அத்த எம்பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சி னேம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
தாசரதீ! அஞ்சினோம், அடைக்கலம் தா
1860. தண்ட காரணி யம்புகுந் தன்று தைய லைத்தக விலியெங் கோமான்
கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர் குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே
பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப் பேசு கின்றதென்? தாசர தீ,உன்
அண்ட வணர் உகப்பதே செய்தாய் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
சீதையை அழைத்துச் செல்: எம்மைக் காப்பாற்று
1861. எஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன் றன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே
நஞ்சு தானரக் கர்குடிக் கென்று நங்கை யையவன் தம்பியே சொன்னான்
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார்பொழில் மாமயி லன்ன
அஞ்சி லோதியைக் கொண்டு நடமின் அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
சீதையைச் சிறைப்படுத்தியது குற்றம்தான்
1862. செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து
வம்பு லாம்கடி காவில் சிறையா வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்
கும்ப னோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி
அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
சீதையை முன்பே அனுப்பியிருக்க வேண்டும்
1863. ஓத மாகட லைக்கடந் தேறி உயர்க்கொள் மாக்கடி காவை யிறுத்து
காதல் மக்களும் சுற்றமுங் கொன்று கடியி லங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே
ஆதர் நின்று படுகின்ற தந்தோ அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
இராவணன் மூடன் என்பது உண்மைதான்
1864. தாழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று தகைந்த தேகண்டு வஞ்சிநுண் மருங்குல்
மாழை மான்மட நோக்கியை விட்டு வாழ்கி லாமதி யில்மனத் தானை
ஏழை யையிலங் கைக்கிறை தன்னை எங்க ளையொழி யக்கொலை யவனை
சூழ மாநினை மாமணி வண்ணா சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
மண்டோதரி இருக்கச் சீதையை விரும்பினானே!
1865. மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப
தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து தஞ்ச மேசில தாபத ரென்று
புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த
அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற் கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
இராமனே! சுக்கிரீவனே! எம்மைக் கொல்லாதீர்
1866. புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின்
சரங்க ளேகொடி தாயடு கின்ற சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம்
இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா
குரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல் கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
பொங்கத்தம் பொங்கோ பாடுக: தேவராவீர்
1867. அங்கவ் வானவர்க் காகுலம் தீர அணியி லங்கை அழித்தவன் றன்னை
பொங்கு மாவல வன்கலி கன்றி புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்
எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர். இம்மை யேயிட ரில்லை, இறந்தால்
தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின் சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ.
அடிவரவு: இரக்கம் பத்து தண்டக எஞ்சல் செம்பொன் ஓதம் தாழம் மனம் புரங்கள் அங்கு-ஏத்துகின்றோம்.
மூன்றாந் திருமொழி
3. ஏத்துகின்றோம்
குழமணி தூரம்
(போரில் தோல்வியடைந்த அரக்கர் அடைக்கலம் வேண்டி ஆடும் கூத்து)
போரில் தோற்றவர்கள் தங்கள் தோல்விக்கு ஈடாக ஆடும் ஒரு வகைக் கூத்து குழமணி எனப் பெயர் கொண்டதாகும். இது தலைகீழாக ஆடப்படும் கூத்து. அவ்வகையில் கூத்தாடுகின்ற அரக்கர்கள் கூறும் பாசுரங்களாக அமைந்தது இப்பதிகம்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இராமபிரானே! எம்மைக் காத்தருள்க
1868. ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ. சுக்கி ரீவா உம்மைத் தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே
கூத்தர் போல ஆடு கின்றோம் குழமணி தூரமே.
அனுமா! சுக்கிரீவா! அங்கதா! அருள்வீர்
1869. எம்பி ரானே என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே
அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான்
நம்பி அனுமா சுக்கி ரீவ அங்கத னே நளனே
கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே.
வானரர்களே! வாழ்த்துகின்றோம்
1870. ஞால மாளு முங்கள் கோமான் எங்கள் இரவணற்குக்
கால னாகி வந்த வாகண் டஞ்சிக் கருமுகில்போல்
நீலன் வாழ்கசு டேணன் வாழ்க அங்கதன் வாழ்கவென்று
கோல மாக ஆடு கின்றோம் குழமணி தூரமே.
இலக்குவனைப் புகழ்ந்து பாடுகின்றோம்
1871. மணங்கள் நாறும் வார்குழ லார்கள் மாதர்க ளாதரத்தை
புணர்ந்த சிந்தைப் புன்மை யாளன் பொன்ற வரிசிலையால்
கணங்க ளுண்ண வாளி யாண்ட காவல னுக்கிளையோன்
குணங்கள் பாடி யாடு கின்றோம் குழமணி தூரமே.
இராமனைச் சேர்ந்தோரைப் பாடுகின்றோம்
1872. வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்காக
இன்று தம்மி னெங்கள் வாணாள் எம்பெரு மான்தமர்காள்
நின்று காணீர் கண்க ளார நீரெமைக் கொல்லாதே
குன்று போல ஆடு கின்றோம் குழமணி தூரமே.
சுக்கிரீவனே! எம்மைக் கொல்ல வேண்டா
1873. கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து,இலங்கை
அல்லல் செய்தா னுங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்ல கில்லா தஞ்சி னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,
கொல்ல வேண்டா ஆடு கின்றோம் குழமணி தூரமே.
அரக்கர்களே! அனுமனை வாழ்த்தி ஆடுங்கள்
1874. மாற்ற மாவ தித்த னையே வம்மின் அரக்கருளீர்
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே
ஆற்றல் சான்ற தொல்பி றப்பில் அனுமனை வாழ்கவென்று
கூற்ற மன்னார் காண ஆடீர் குழமணி தூரமே.
அரக்கர்களே! இராமன் காண ஆடுங்கள்
1875. கவள யானை பாய்புர வித்தே ரோட ரக்கரெல்லாம்
துவள, வென்ற வென்றி யாளன் றன்தமர் கொல்லாமே
தவள மாடம் நீட யோத்தி காவலன் றன்சிறுவன்
குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே.
நாங்கள் களைப்புற்றோம்; எம்மைக் கொல்லாதீர்
1876. ஏடொத் தேந்தும் நீளி லைவேல் எங்கள் இரவணனார்
ஓடிப் போனார், நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்
சூடிப் போந்தோம் உங்கள் கோம னாணை தொடரேன்மின்
கூடி கூடி யாடு கின்றோம் குழமணி தூரமே.
இப்பாசுரங்களைப் பாடி நின்று ஆடுமின்
1877. வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து
அன்றரக்கர் குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை
கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே.
அடிவரவு: ஏத்து எம்பிரான் ஞாலம் மணம் வென்றி கல்லின் மாற்றம் கவளம் ஏடு வென்ற-சந்தம்.

நான்காந் திருமொழி
4. சந்த மலர்க்குழல்
கண்ணன் விஷயம்
பகைமையின் எல்லையில் நின்ற அரக்கர் வாயினால் இராமனின் வெற்றிச் செயல்களை அனுபவித்த ஆழ்வார், பிரேமத்தில் எல்லையில் நிற்கும் அன்பர்களின் பாசுரங்களால் கண்ணனை அனுபவிக்கிறார்.
யசோதை நிலையில் இருந்துகொண்டு, பெரியாழ்வாரைப் போல் இவரும் குழந்தைக் கண்ணனை அம்மம். உண்ண அழைக்கிறார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணனே! தாய்ப்பால் உண்ண வருக
1878. சந்த மலர்க்குழல் தாழத் தானுகந் தோடித் தனியே
வந்து,என் முலைத்தடந் தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து,
நந்தன் பெறப்பெற்ற நம்பீ. நானுகந் துண்ணும் அமுதே,
எந்தை பெருமனே உண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே,
விளையாட்டுகள் போதும்; தாய்ப்பால் பருக வா
1879. வங்க மறிகடல் வண்ணா.மாமுகி லேயொக்கும் நம்பீ
செங்க ணெடிய திருவே செங்கம லம்புரை வாயா,
கொங்கை சுரந்திட வுன்னைக் கூவியும் காணாதி ருந்தேன்
எங்கிருந் தாயர்க ளோடும் என்விளை யாடுகின் றாயே.
தாய்ப்பால் சுரக்கின்றது: பருகுதற்கு வா
1880. திருவில் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைக ளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,
உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,
மருவிக் குடங்கா லிருந்து வாய்முலை யுண்ணநீ வாராய்.
பிறைச் சந்திரனை வாங்கித் தருவேன்: ஓடிவா
1881. மக்கள் பெறுதவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் முதல்வா மதக்களி றன்னாய்
செக்கர் இளம்பிறை தன்னை வாங்கிநின் கையில் தருவன்
ஒக்கலை மேலிருந் தம்மம் உகந்தினி துண்ணநீ வாராய்.
தாய்ப்பால் சுரப்பது நிற்கவில்லை; ஓடிவா
1882. மைத்த கருங்குஞ்சி மைந்தா மாமரு தூடு நடந்தாய்,
வித்தக னேவிரை யாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,
இத்தனை போதன்றி யென்றன் கொங்கை சுரந்திருக்க கில்லா,
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகளந் தாய் அம்மம் உண்ணாய்.
பாசாங்கு செய்யாதே; தாய்ப்பால் பருகிட வா
1883. பிள்ளைய்கள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தி லுடையை காணவே தீமைகள் செய்தி
உள்ள முருகியென் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடு கின்ற
பள்ளிக் குறிப்புச்செய் யாதே பாலமு துண்ணநீ வாராய்.
பூதகியைக் கொன்றவனே! தாய்ப்பால் பருகு
1884. தன்மக னாகவன் பேய்ச்சி தான்முலை யுண்ணக் கொடுக்க
வன்மக னாயவள் ஆவி வாங்கி முலையுண்ட நம்பி
நன்மகள் ஆய்மக ளோடு நானில மங்கை மணாளா
என்மக னே அம்ம முண்ணாய் என்னம்மம் சேமமுண் ணாயே.
அந்தி நேரத்தில் அலையாதே; தாய்ப்பால் பருகு
1885. உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்
நொந்திட மோதவுங் கில்லேன்நுங்கள்தம் ஆநிரை யெல்லாம்
வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
அந்தியம் போதங்கு நில்லேல்ஆழியங் கையனே வாராய்.
கண்ணா! காலம் தாழ்த்துவது ஏன்? ஓடி வா
1886. பெற்றத் தலைவனெங் கோமான் பேரரு ளாளன் மதலாய்,
சுற்றக் குழாத்திளங் கோவே தோன்றிய தொல்புக ழாளா,
கற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே
எற்றுக்கென் அம்மமுண் ணாதே எம்பெரு மானிருந் தாயே.
இவற்றைப் பாடித் துதித்து விண்ணவராகுக
1887. இம்மை யிடர்க்கெட வேண்டி ஏந்தெழில் தோள்கலி கன்றி
செம்மைப் பனுவல்நூல் கொண்டு செங்க ணெடியவன் றன்னை
அம்மமுண் என்றுரைக் கின்ற பாட லிவையைந்து மைந்தும்
மெய்ம்மை மனத்துவைத் தேத்த வினவ ராகலு மாமே கலித்தாழிசை.
அடிவரவு: சந்தம் வங்கம் திருவில் மக்கள் மைத்த பிள்ளை தன்மகன் உந்தம் பெற்றம் இம்மை- பூங்கோதை.

ஐந்தாந் திருமொழி
5. பூங்கோதை
சப்பாணிப் பருவம்
இரு கைகளையும் சேர்த்துத் தட்டுதல் சப்பாணி எனப்படும் இங்ஙனம் கை கொட்டி விளையாடுவது குழந்தையின் விளையாட்டு.
இவ்வாறு விளையாடுமாறு யசோதை நிலையில் இருந்து கொண்டு இவ்வாழ்வார் கண்ணனை வேண்டுகிறார்.
கலித்தாழிசை
கண்ணபிரானே! சப்பாணி கொட்டுக
1888. பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண,
ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும்
ஓங்கோத வண்ணனே! சப்பாணிஒளிமணி வண்ணனே சப்பாணி.
அழகனே! சப்பாணி கொட்டியருள்
1889. தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்
டேயெம் பிராக்கள்! இருநிலத் தெங்கள்தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த வாயவனே!
கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே! கொட்டாய் சப்பாணி.
தாமோதரா! சப்பாணி கொட்டு
1890. தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்
தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த
தாமோ தரா! கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே! சப்பாணி.
கார்நிறக்கண்ணா! சப்பாணி கொட்டு
1891. பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து
உற்றா ரொருவரு மின்றி யுலகினில்,
மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட
கற்றாயனே!கொட்டாய் சப்பாணி கார்வண்ணனே!கொட்டாய் சப்பாணி.
அப்பம் கிடைக்கும்; சப்பாணி கொட்டு
1892. சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர,
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றியோ ராயிரம் சப்பாணி தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி.
நந்தன் மகனே! சப்பாணி கொட்டு
1893. கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு
நானவல் அப்பம் தருவன் கருவிளைப்
பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,
கோவலனே! கொட்டாய் சப்பாணி குடமாடீ! கொட்டாய் சப்பாணி.
வெண்ணெய் அள்ளிய கையால் சப்பாணி கொட்டு
1894. புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,
துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை,
அள்ளிய கையா லடியேன் முலைநெருடும்
பிள்ளைப்பிரான்! கொட்டாய் சப்பாணி பேய்முலை யுண்டானே! சப்பாணி.
பேய்ச்சி பாலுண்டவனே! சப்பாணி கொட்டு
1895. யாயும் பிறரும் அறியாத யாமத்து,
மாய வலவைப்பெண் வந்து முலைதர,
பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட,
வாயவனே! கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே!கொட்டாய் சப்பாணி.
சகடம் உதைத்தவனே! சப்பாணி கொட்டு
1896. கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை
தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை,
மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட,
வள்ளலே! கொட்டாய் சப்பாணி மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி.
என் மனத்தில் தங்குபவனே! சப்பாணி கொட்டு
1897. காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்,
பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட
சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த்
தாராளா, கொட்டாய் சப்பாணி தடமார்வா கொட்டாய் சப்பாணி.
அடிவரவு: பூங்கோதை தாயர் தாம்மோர் பெற்றார் சோத்தென கேவலம் புள் யாயும் கள்ள காரார்-எங்கானும்.

ஆறாந் திருமொழி
6. எங்கானும்
மாயன் வெண்ணெயுண்ட மாட்சிமை
கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் தயிர், நெய், பால் முதலியவற்றைக் களவு செய்து வாரி உண்டான்; இடைச்சியர் கையில் சிக்குண்டு, தாம்பினால் கட்டப்பட்டு ஏங்கி இருந்தான். கண்ணனின் உண்மையான மேன்மையை உணர்ந்தவர்கள்; மேன்மை தங்கிய இவன் இவ்வளவு எளிமையில் இருக்கிறானே என்று வியந்தனர். ஆழ்வார் இந்நிகழ்ச்சியைத் தாமும் சொல்லி உகக்கிறார் இத்திருமொழியில்.ஒவ்வொரு பாசுரத்திலும் அவர் பகவானின் எளிமையையும் மேன்மையையும் கலந்து அனுபவிக்கிறார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நர நாரணனா கட்டுண்டிருந்தவன்!
1898. எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? நரநா ரணனா யுலகத் தறநூல்
சிங்கா மைவிரித் தவனெம் பெருமான் அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும்,
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது,
அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
உலகம் உண்டவனா கட்டுண்டிருந்தவன்!
1899. குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்
நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,
நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் மலையே ழுலகே ழொழியா மைநம்பி,
அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே,
இரணியனைப் பிளந்தவனா கட்டுண்டிருந்தவன்!
1900. உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள் உலப்பில் வலியால் அவர்பால், வயிரம்
விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ அவர்நா ளொழித்த பெருமான் முனநாள்,
வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால்,
அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
வாமனனா கட்டுண்டிருந்தவன்!
1901. தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான் சரணாய் முரணா யவனை உகிரால்
பிளந்திட் டமரர்க் கருள்செய் துகந்த பெருமான் திருமால் விரிநீ ருலகை,
வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய்
அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
திரிவிக்கிரமனா கட்டுண்டிருந்தவன்!
1902. நீண்டான் குறளாய் நெடுவா னளவும் அடியார் படுமாழ் துயராய வெல்லாம்,
தீண்டா மைநினைந் திமையோ ரளவும் செலவைத் தபிரான் அதுவன் றியும்முன்,
வேண்டா மைநமன் றமரென் தமரை வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ்
ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
பரசுராமனா கட்டுண்டிருந்தவன்!
1903. பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல பெருமான் திருமா லதுவன் றியும்முன்,
தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன் சினத்தோள் அவையா யிரமும் மழுவால்
அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
ஸ்ரீராமனா கட்டுண்டிருந்தவன்!
1904. படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள் பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத் தெளியா அரக்கர் திறலபோய் அவிய,
மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை
அடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
இராவணனை வதைத்தவனா கட்டுண்டிருந்தவன்!
1905. நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ டுடனாய வில்லென்ன வல்லே யதனை,
இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட டிளங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர்,
செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன் செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய,
அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
ஏழு மராமரங்களை எய்தவனா கட்டுண்டிருந்தவன்!
1906. சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத் தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா
திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய் இருகூறு செய்த பெருமான் முனநாள்
வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு,
அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.
இடர் எய்தார்; இன்பம் எய்துவர்
1907. நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய்,
அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல்,
நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன் கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி இமையோர்க்கு மப்பால் செலவெய் துவாரே.
அடிவரவு: எங்கானும் குன்று உளைந்து தளர்ந்திட்டு நீண்டான் பழி படை நெறி சுரி நின்றார்-மானம்.

ஏழாந் திருமொழி
7. மானமுடைத்து
ஆய்ச்சியர் கண்ணனைக்குறித்து முறையிடல்
ஆயர் பெண்கள், கண்ணன் செய்யும் தீம்புகளை யசோதையிடம் பலவாறு சொல்லி முறையிடுவதாகவும், யசோதை பதில் கூறுவதாகவும் அமைந்துள்ளன ஈண்டுள்ள பாடல்கள்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஆய்ச்சியர்களே! நான் என் செய்வேன்?
1908. மான முடைத்துங்க ளாயர் குலமத னால்பிறர் மக்கள் தம்மை
ஊன முடையன செய்யப் பெறாயென் றிரப்ப னுரப்ப கில்லேன்
நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நானென் செய்கேன்?
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் தயிர்கடை கின்றான் போலும்.
வெண்ணெயும் பாலும் கண்ணன் உண்டுவிட்டானே!
1909. காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப் போகின்றேன் கண்டே போனேன்,
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் மற்றுவந் தாரு மில்லை,
மேலை யகத்துநங் காய் வந்து காண்மின்கள் வெண்ணெ யேயன்று, இருந்த
பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் என்செய்கேன் என்செய் கேனோ.
வெண்ணெயை விழுங்கி உறங்குகின்றானே!
1910. தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள் உறி மேலைத் தடாநி றைந்த,
வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு,
கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள் கையெல் லாம்நெய்,வயிறு
பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும் பேதையேன் என்செய் கேனோ.
ஆய்ச்சியர்களால் வாழவே முடியாதோ?
1911. மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற வளைவண்ண நன்மா மேனி,
தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது அவனி வைசெய் தறியான் பொய்ந்நம்பி
புள்ளுவன் கள்வம் பொதியறை போகின்ற வாதவழ்ந் திட்டு,
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை என்செய்கேன் என்செய் கேனோ.
கண்ணன் தீம்புகள் வளர்கின்றனவே!
1912. தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் தோழிமா ராரு மில்லை,
சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை யாடு மிடம்கு றுகி,
பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும்,
நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய் என்செய்கேன் என்செய் கேனோ.
என் மகளிடம் கண்ணன் வம்பு செய்தானே!
1913. மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை,
அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே அல்லிற் றான்வந்த பின்னை,
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் கமலச் செவ்வாய்வெ ளுப்ப,
என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய் என்செய்கேன் என்செய் கேனோ.
இந்திரனுக்குப் படைத்தவற்றை இவன் உண்டானே!
1914. ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் றாயர் விழவெ டுப்ப,
பாசனம் நல்லன பண்டிக ளால்புகப் பெய்த அதனை யெல்லாம்,
போயிருந் தங்கொரு பூத வடிவுகொண் டுன்மக னின்று நங்காய்,
மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி வளைத்துண் டிருந்தான் போலும்.
கண்ணனை அதட்ட அஞ்சுவேன்
1915. தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர் ஓர்க்குடன் துற்றிடு மென்று,
ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற் கெள்கி யிவனை நங்காய்
சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என் றிரப்பன் உரப்ப கில்லேன்,
பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப் பேசுவ தஞ்சு வேனே.
சகடம் உதைத்தவனை அதட்ட அஞ்சுவேன்
1916. ஈடும் வலியும் உடையவிந் நம்பி பிறந்த ஏழு திங்களில்,
ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன்,
சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடி யால்,மலை போல
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவ தஞ்சு வேனே.
நம்பீ! நான் என்ன செய்வேன்?
1917. அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யைப்,
பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற பாகந் தான்வை யார்களே,
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் என்கை வலத்தாது மில்லை,
நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ என்செய்கே னென்செய் கேனோ.
கண்ணபிரானே! இப்படியும் தீமை செய்யலாமோ?
1918. அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ ஆயர் மடமக் களைப்,
பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் பின்னே சென்றொளித் திருந்து,
அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர வேரி டையா ரிரப்ப,
மங்கைநல் லீர்வந்து கொண்மின் என்றுமரம் ஏறி யிருந்தாய் போலும்.
நாகத்தோடு பிணங்கினாயே! அச்சமே இல்லையா?
1919. அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக் காண்மை யும்சே வகமும்,
உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக் குரைத்திலன் தானின் றுபோய்,
பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு பாய்ந்து புக்கு,ஆ யிரவாய்
நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.
இளமையில் இவ்வளவு துணிச்சலா?
1920. தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி யேநின்று தாம்செய் வாரோ?
எம்பெரு மான் உன்னைப் பெற்ற வயிறுடை யேனினி யானென் செய்கேன்?
அம்பர மேழும் அதிரும் இடிகுரல் அங்கனற் செங்க ணுடை
வம்பவிழ் கானத்து மால்விடை யோடு பிணங்கிநீ வந்தாய் போலும்.
இவற்றைப் பாடினோர்க்குத் துன்பமே இல்லை
1921. அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் தஞ்ச அருவரை போல,
மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய மைந்தனை மாக டல்சூழு,
கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க்கலி கன்றி
இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் கேது மிடரில் லையே.
அடிவரவு: மானம் காலை தெள்ளிய மை தந்தை மண் ஆயிரம் தோய்த்த ஈடும் அஞ்சுவன் அங்ஙனம் அச்சம் தம்பரம் அன்ன-காதில்

எட்டாந் திருமொழி
8. காதில் கடிப்பு
கண்ணன் செயல்களால் சினம் கொண்ட ஆய்ச்சி ஒருத்தி ஊடல் கொண்டு பேசுதல்போல் ஈண்டுப் பாசுரங்கள் அமைந்துள்ளன.
கலி விருத்தம்
இப்பக்கம் எதற்காக நின்றீர்!
1922. காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து,
தாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து,
போது மறுத்துப் புறமேவந் துநின்றீர்,
ஏதுக்கிது என்னிது என்னிது என்னோ
கதவின் புறமே வந்து நின்றீர்! நீ யார்?
1923. துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி,
சுவரார் கதவின் புறமேவந்து நின்றீர்,
இவரா ரிதுவென் னிதுவென் னிதுவென்னோ.
என் வீட்டில் புகுந்தீர்! இதன் கருத்து யாது?
1924. கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர்,
உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர்,
மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர்,
இருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ.
இரவில் இல்லம் புகுந்த காரணம் என்ன?
1925. நாமம் பலவு முடைநா ரணநம்பீ,
தாமத் துளவம் மிகநா றிடுகின்றீர்,
காம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர்,
ஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ.
புன்சிரிப்புடன் நின்றீர்! ஏன்?
1926. சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து,
மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து,
முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர்,
எற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ.
வில்லுடன் வந்தீர்! இஃது என்ன செயல்?
1927. ஆனா யரும்ஆ னிரையுமங் கொழியக்,
கூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப்,
போனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர்,
ஏனோர்கள் முன்னென் னிதுவென் னிதுவென்னோ.
சொன்னபடி வருவதில்லை. காரணம் என்ன?
1928. மல்லே பொருத திரள்தோல் மணவாளீர்,
அல்லே யறிந்தோம்சும் மனத்தின் கருத்தை,
சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர்
எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ.
தேவியர் பலர் இருக்க, இப்படி வந்தீரே!
1929. புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,
இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,
தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர்,
எக்கே இதுவென் னிதுவென் னிதுவென்னோ.
திருமகளும் மண்மகளும் காத்திருக்கின்றனரே!
1930. ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்
கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,
தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,
ஏடி இதுவென் னிதுவென் னிதுவென்னோ.
இவற்றைப் பாடினால் துக்கமே இல்லை
1931. அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி
எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை,
சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே.
அடிவரவு: காதில் துவர் கருள நாமம் சுற்றும் ஆனாயர் மல்லே புக்கு ஆடி அல்லி-புள்ளுரு.

ஒன்பதாந் திருமொழி
9. புள்ளுருவாகி
நற்றாய் கண்ணனை வேண்டல் பழமொழியால் பணிந்துரைத்த பாட்டு
தன் மகள்(பரகால நாயகி) பகவான்மீது கொண்டுள்ள அளவற்ற காதலையும், அதற்கேற்பப் பகவான் வந்து தன் மகளோடு கலக்காமல் வாளா இருப்பதையும் தாய் அறிந்தாள்.
எம்பெருமானே! இம்மகளை இவ்வாறு (துன்புறுமாறு) விடலாமா? இவ்வாறு இருப்பது உன் பெருமைக்குத் தகுமா? என்பதை ஒவ்வொரு பழமொழியைக் கொண்ட ஒவ்வொரு பாசுரத்தினால் பகவானிடம் அந்தத் தாய் கூறுதல்போல் அமைந்துள்ளது இப்பகுதி.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பிள்ளைகையில் கிண்ணம் போல் பேசுகிறாய்!
1932. புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த பூதனை மாள, இலங்கை
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்க மதனை நினைந்தோ,
கள்ளவிழ் கோதை காதலு மெங்கள் காரிகை மாதர் கருத்தும்,
பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப் பேசுவ தெந்தை பிரானே.
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா இவள்!
1933. மன்றில் மலிந்து கூத்துவந் தாடி மால்விடை யேழும டர்த்து, ஆயர்
அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மைகொ லோவறி யேன் நான்,
நின்ற பிரானே நீள்கடல் வண்ணா. நீயிவள் தன்னை நின் கோயில்,
முன்றி லெழுந்த முருங்கையில் தேனா முன்கை வளைகவர்ந் தாயே.
கையிலுள்ள கரும்புக் கட்டி போன்றவளா இவள்!
1934. ஆர்மலி யாழி சங்கொடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்துக்,
கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம் கடந்தநின் கடுந்திறல் தானோ,
நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை,
ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவளெனக் கருதுகின் றாயே.
தொண்டர் கைத் தண்டாக இவளை நினைத்தாயா?
1935. மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே.
பெருவழி நாவற்கனியினும் எளியவளா இவள்?
1936. செருவழி யாத மன்னர்கள் மாளத் தேர்வலங் கொண்டவர் செல்லும்,
அருவழி வானம் அதர்படக் கண்ட ஆண்மைகொ லோவறி யேன்நான்,
திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை சீர்மையை நினைந்திலை யந்தோ,
பெருவழி நாவற் கனியினு மெளியள் இவளெனப் பேசுகின் றாயே.
எருக்கு இலைக்காகக் கோடரி வீசுவது போல் உள்ளது
1937. அரக்கிய ராகம் புல்லென வில்லால் அணிமதி ளிலங்கையர் கோனை,
செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற சேவக மோசெய்த தின்று
முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம் கொண்டுமுன் னேநின்று போகாய்,
எருக்கிலைக் காக எறிமழு வோச்சல் என்செய்வ தெந்தை பிரானே.
கோழி முட்டை உடைக்கக் குறுந்தடி வீசுவதுபோல
1938. ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச அலைகடல் உலகம்முன் ஆண்ட,
பாழியந் தோளோ ராயிரம் வீழப் படைமழுப் பற்றிய வலியோ?
மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய் குறுந்தடி நெடுங்கடல் வண்ணா.
கவுள் கொண்ட நீர் போல் இவளை நினைக்கிறாயே!
1939. பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற வள்ளுகி ரால்பிளந்து, அன்று
பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த பெருமைகொ லோசெய்த தின்று,
பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில்,
கருங்கடல் வண்ணா கவுள்கொண்ட நீராம் இவளெனக் கருதுகின் றாயே.
அந்தணன் தோட்டம் போல்பவளா இவள்
1940. நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் நின்றநின் நீர்மையை நினைந்தோ?
சீர்க்கெழு கோதை யென்னல திலளென் றன்னதோர் தேற்றன்மை தானோ?
பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய பாவையைப் பாவம்செய் தேனுக்கு,
ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட மாகநின் மனத்துவைத் தாயே.
பக்தியும் திருவும் வளரும்
1941. வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி மெய்ம்மைநின் றெம்பெரு மானை,
வாட்டிறல் தானை மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்,
தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் பழமொழி யால்பணிந் துரைத்த,
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் சித்தமும் திருவோடு மிகுமே வெண்டுறை.
அடிவரவு: புள்ளுரு மன்றில் ஆர் மல்கிய செரு அரக்கியர் ஆழி பொருந்தலன் நீர் வேட்டத்தை-திருத்தாய்

பத்தாந் திருமொழி
10. திருத்தாய்
பறவைகளை நோக்கி மாயனே அழை எனல்
பகவானை அடையவேண்டும் என்று பேரார்வம் கொண்ட பரகால நாயகி, காக்கை, கிளி, குயில் முதலியவற்றை விளித்து, பகவான் என்னிடம் வந்து சேருமாறு கூவி அழையுங்கள் என்று வேண்டிக் கொள்ளுதல் போல் இப்பகுதி அமைந்துள்ளது.
வெண்டுறை
செம்போத்தே! மாதவன் வருமாறு திருத்தாய்
1942. திருத்தாய் செம்போத்தே,
திருமாமகள் தன்கணவன்,
மருத்தார்தொல்புகழ் மாதவ
னைவரத் திருத்தாய் செம்போத்தே.
காகமே! உத்தமன் வரக் கரை
1943. கரையாய் காக்கைப்பிள்ளாய்,
கருமாமுகில் போல்நிறத்தன்,
உரையார் தொல்புக ழுத்தம னைவரக்,
கரையாய் காக்கைப்பிள்ளாய்.
குயிலே! மணிவண்ணன் வரக்கூவு
1944. கூவாய் பூங்குயிலே,
குளிர்மாரி தடுத்துகந்த,
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்,
கூவாய் பூங்குயிலே.
பல்லிக்குட்டி! மாதவன் வர ஒலி செய்
1945. கொட்டாய் பல்லிக்குட்டி,
குடமாடி யுலகளந்த,
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்,
கொட்டாய் பல்லிக்குட்டி.
கிளியே! வேங்கடவன் வரப் பேசு
1946. சொல்லாய் பைங்கிளியே,
சுடராழி வலனுயர்த்த,
மல்லார் தோள்வட வேங்கட வன்வர,
சொல்லாய் பைங்கிளியே.
கோழி! ஆழிவண்ணன் வரக் கூவிடு
1947. கோழி கூவென்னுமால்,
தோழி நானென்செய்கேன்,
ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று
கோழி கூவென்னுமால்.
மன்மதன் துன்புறுத்துவானே! என் செய்வேன்
1948. காமற் கென்கடவேன்,
கருமாமுகில் வண்ணற்கல்லால்,
பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக்,
காமற் கென்கடவேன்.
குடந்தைத் திருமால் இங்கே வருவானோ?
1949. இங்கே போதுங்கொலோ,
இனவேல்நெடுங் கண்களிப்ப,
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால்,
இங்கே போதுங்கொலோ.
சக்கரமும் சாரங்கமும் உடைய இவர் யார்?
1950. இன்னா ரென்றறியேன்,
அன்னே. ஆழியொடும்,
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,
இன்னா ரென்றறியேன்.
தொண்டீர்! இவற்றைப் பாடுங்கள்
1951. தொண்டீர். பாடுமினோ,
சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன்,
ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள்,
தொண்டீர். பாடுமினோ.
அடிவரவு: திருத்தாய் கரை கூவாய் கொட்டாய் சொல்லாய் கோழி காமற்கு இங்கே இன்னார் தொண்டீர்-குன்றம்.
************
பதினோறாம் பத்து
முதல் திருமொழி
1. குன்றமொன்றெடுத்து
தலைவியிரங்கல்
ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு பாடும் இப்பகுதியில், தென்றல் முதலானவற்றால் தமக்கு ஏற்பட்டிருக்கும் பிரிவு நோயை வெளிப்படுத்துகிறார்; இராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்து உலகை வாழ்வித்த பெருமான் தமக்குத் துன்பம் தருவதைச் சுட்டிக் காட்டிப் பாடுகிறார்.
கலி விருத்தம்
தென்றல் வந்து தீ வீசுகின்றதே!
1952. குன்ற மொன்றெடுத் தேந்தி,
மாமழை அன்று காத்தவம் மான்,
அ ரக்கரை வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன்.
வாடைக் காற்று என்னை வாட்டுகிறதே!
1953. காரும் வார்பனிக் கடலும் அன்னவன்,
தாரு மார்வமும் கண்ட தண்டமோ,
சோரு மாமுகில் துளியி னூடுவந்து ஈர
வாடைதான் ஈரு மென்னையே.
நிலவு சீறுகிறதே! என் செய்வேன் ?
1954. சங்கு மாமையும் தளரு மேனிமேல்,
திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,
கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே.
சந்திரன் வெங்கதிர் வீசுகிறதே! ஏன்?
1955. அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று,
அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,
கொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ,
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே.
கடல் ஒலி என்னை வருத்துகிறதே!
1956. அங்கொ ராளரி யாய்,அவுணனைப்
பங்க மாவிரு கூறு செய்தவன்,
மங்குல் மாமதி வாங்க வேகொலோ
பொங்கு மாகடல் புலம்பு கின்றதே.
அன்றிலின் குரல் துன்புறுத்துகிறதே!
1957. சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,
அன்றி லின்குரல் அடரு மென்னையே.
மன்மதன் என்மீது அம்பு எய்கின்றானே!
1958. பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,
வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,
ஆவி யேயிலக் காக எய்வதே.
என் உயிரைக் காத்துக்கொள்வது அரிது
1959. மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,
மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக,
கோல வாடையும் கொண்டு வந்தது,
ஓர் ஆலி வந்ததால் அரிது காவலே.
திருத்துழாய் வாசவைதான் என்னைக் காக்கும்
1960. கொண்டை யொண்கணும் துயிலும்,
என்நிறம் பண்டு பண்டுபோ லொக்கும்,
மிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,
வண்டு கொண்டுவந் தூது மாகிலே.
இவற்றைப் பாடுவோர்க்குத் துன்பம் இல்லை
1961. அன்று பாரதத் தைவர் தூதனாய்,
சென்ற மாயனைச் செங்கண் மாலினை,
மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி
கன்றி,சொல்வல்லார்க் கல்ல லில்லையே.
அடிவரவு: குன்றம் கார் சங்கு அங்கொராய்க்குலந்து அங்கொராளரி சென்று பூவை மாலினம் கொண்டை அன்று-குன்றமெடுத்து.

இரண்டாந் திருமொழி
2. குன்றமெடுத்து
தலைவி வருந்தல்
ஆழ்வார் தம்மைத் தலைமகளாக அமைத்துக்கொண்டு, பகவானாகிய நாயகனது பிரிவால் வருந்துதல்போல் வருத்தத்தைப் புலப்படுத்தும் பகுதி இது.
கலி நிலைத்துறை
அன்றிலைத் துரத்தவார் யார்?
1962. குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை யாரொடும்
மன்றில் குரவை யிணைந்த மாலென்னை மால்செய்தான்,
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்கிடந் தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவ ரார்கொலோ.
ஆயனின் குழல் என்னை எதிர்த்து வருகின்றதே!
1963. பூங்கு ருந்தொசித்து ஆனை காய்ந்தரி மாச்செகுத்து,
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டுவன் பேய்முலை
வாங்கி யுண்ட,அவ் வாயன் நிற்கஇவ் வாயன்வாய்,
ஏங்கு வேய்ங்குழல் என்னோ டாடும் இளமையே.
தென்றல் என்னைத் துன்புறுத்துகிறதே!
1964. மல்லோடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன்,
அல்லி மலர்த்தண் டுழாய்நி னைந்திருந் தேனையே,
எல்லி யின்மா ருதம்வந் தடுமது வன்றியும்,
கொல்லைவல் லேற்றின் மணியும் கோயின்மை செய்யுமே.
வாடைக்காற்று வருகிறதே! என் செய்வேன்?
1965. பொருந்து மாமர மேழு செய்த புனிதனார்
திருந்து சேவடி யென்ம னத்து நினைதொறும்,
கருந்தண் மாகடல் மங்கு லார்க்கும் அதுவன்றியும்,
வருந்த வாடை வருமி தற்கினி யென்செய்கேன்.
என் வருத்தம் தீர்ப்பது கண்ணன் கையில்தான் உள்ளது
1966. அன்னை முனிவதும் அன்றி லின் குர லீர்வதும்,
மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும்,
பொன்னங் கலையல்கு லன்ன மென்னடைப் பூங்குழல்,
பின்னை மணாளர் திறத்த வாயின பின்னையே.
இரவு நீட்டிக்கின்றதே! என் செய்வேன்
1967. ஆழியும் சங்கு முடைய நங்கள் அடிகள்தாம்,
பாழிமை யான கனவில் நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழிய வையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக் கூரிரு ளாயிற்றே.
மன்மதன் நெருப்பை வீசுகின்றானே!
1968. காமன் றனக்கு முரையல் லேன்கடல் வண்ணனார்,
மாமண வாள ரெனக்குத் தானும் மகன்சொல்லில்,
யாமங்கள் தோறெரி வீசு மென்னிளங் கொங்கைகள்,
மாமணி வண்ணர் திறத்த வாய்வளர் கின்றவே.
சூரியன் உதிக்காமல் எங்கே சென்று விட்டது?
1969. மன்சுறு மாலிருஞ் சோலை நின்ற மணாளனார்,
நெஞ்சம் நிறைகொண்டு போயி னார்நினை கின்றிலர்,
வெஞ்சுடர் போய்விடி யாமல் எவ்விடம் புக்கதோ,
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கினி நல்லதே.
மலர் தூவித் தொழுதால் கண்ணனைக் காணலாமோ!
1970. காமன் கணைக்கோ ரிலக்க மாய்நலத் தில்மிகு,
பூமரு கோலநம் பெண்மை சிந்தித்தி ராதுபோய்
தூமலர் நீர்கொடு தோழி நாம்தொழு தேத்தினால்
கார்முகில் வண்ணரைக் கண்க ளால்காண லாங்கொலோ.
வினைகள் நில்லா
1971. வென்றி விடையுட னேழ டர்த்த அடிகளை,
மன்றில் மலிபுகழ் மங்கை மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதுமு ரைப்பவர் தங்கள்மேல்
என்றும் நில்லாவினை யொன்றும் சொல்லி லுலகிலே.
அடிவரவு: குன்றமெடுத்து பூங்குருந்து மல்லொடு பொருந்து அன்னை ஆழி காமன்றனக்கு மஞ்சுறு காமன்கணைக்கு வென்றி-மன்னிலங்கு

மூன்றாந் திருமொழி
3. மன்னிலங்கு
இதுவும் அது
இதுவும் ஆழ்வார் நாயகி நிலையில் இருந்துகொண்டு பாடும் பகுதியாகும். தம்முடைய விடையும் பதற்றமும் எம் பெருமானைப் பற்றியனவாகவே இருத்தலை நினைத்து மன நிறைவு அடைகிறார் ஆழ்வார். ஈண்டுப் பாசுரங்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.
தரவு கொச்சகக் கலிப்பா
எம்பெருமானை ஆசைப்பட்டு எழில் இழந்தேன்!
1972. மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப்
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்
தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்
என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே.
நெடுமாலைப் பாடுவதால் ஒளி பெற்றேன்
1973. இருந்தானெ னுள்ளத் திறைவன்,கறைசேர்
பருந்தாள் களிற்றுக் கருள்செய்த,
செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட
வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே.
என் உள்ளத்தில் திருமால் புகுந்துவிட்டார்
1974. அன்னே! இவரை யறிவன், மறைநான்கும்
முன்னே யுரைத்த முனிவ ஜீவர்வந்து
பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து
என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே.
வெண்ணெயுண்டவரை யாம் அறிவோம்
1975. அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு,
வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி,
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு உறியார்
நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே?
கண்ணன் அருள் கிடைப்பது திண்ணம்
1976. தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு,
தம்மையே யொக்க அருள்செய்வ ராதலால்,
தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி,
தம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே.
கண்ணனைக் கருத்தில் இருத்தி அடியார் இன்புற்றனர்
1977. வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம்
உய்த்தா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும்
எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி,
கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே.
இவை என்ன மாயங்கள்?
1978. கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்
என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய,
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.
எம்பெருமானைப் பாடிநின்றாடுவோம்
1979. பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று
ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து
சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம்
கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே.
கண்ணனைப் பூசித்தால் வினைகள் நீங்கும்
1980. நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும்,
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே.
இவை பாடக் கேட்டோர்க்குத் துயரில்லை
1981. பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்
பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,
கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க
லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே.
அடிவரவு: மன்னிலங்கு இருந்தான் அன்னே அறியோமே தம்மையே வைத்தார் கண்ணன் பாடோமே நன்னெஞ்சே பெற்றாரார்-நிலையிடம்

நான்காந் திருமொழி
4. நிலையிடம்
பக்தா! அடியார்களுக்கும் எனக்கும் திருப்தி ஏற்படுவதற்காகப் பல அவதாரங்களை மேற்கொண்டு இருக்கிறேனே! என்று பகவான் சொல்ல, அவருடைய பத்து அவதாரங்களையும் எடுத்துக் கூறித் தம்முடைய ஆற்றாமையை ஒருவாறு அடக்கக் கொள்கிறார் ஆழ்வார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மீனாகிய பெருமானை மறவாது அறைஞ்சுக
1982. நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர் வளநாடு மூட இமையோர்
தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை என்ன அரணாவ னென்னு மருளால்
அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவா திறைஞ்சென் மனனே.
ஆமையான திருமால் நமக்கு அரண்
1983. செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன்மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே.
வராகமாகிய பெருமானே நம்மை யாளும் அரசு
1984. தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் உம்ப ருலகேழி னோடு முடனே,
மாதிர மண்சு மந்து வடகுன்று நின்ற மலையாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட லத்தி னொருபா லொடுங்க வளர்சேர்,
ஆதிமுன் ஏன மாகி அரணாய மூர்த்தி அதுனம்மை யாளு மரசே.
நரசிம்மாவதாரம் எடுத்தவன் கருணை என்னே!
1985. தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்க ளவிழ,
வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன தாகம் மதியாது சென்றொ ருகிரால்
பிளவெழ விட்ட குட்ட மதுவைய மூடு பெருநீரில் மும்மை பெரிதே.
குறளாகி நிமிர்ந்தவனின் திருவடி நம்மை ஆளும்
1986. வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர
செந்தொழில் வேத நாவின் முனியாகி வைய முடிமூன் றிரந்து பெறினும்,
மந்திர மீது போகி மதிநின்றி றைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர்,
அந்தர மேழி னூடு செலவுய்த்த பாதம் அதுநம்மை யாளு மரசே.
பரசுராமனானவர் நம்மை ஆள்வார்
1987. இருநில மன்னர் தம்மை யிருநாலும் எட்டு மொருநாலு மொன்று முடனே,
செருநுத லூடு போகி யவராவி மங்க மழுவாளில் வென்ற திறலோன்,
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,
பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே.
இராமபிரானே நமக்கு அரண்
1988. இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம் என்ன இனமாய மான்பின் எழில்சேர்
அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப தற்கொ ருருவாய மானை யாமையா,
கொலைமலி யெய்து வித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்,
சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமால் நமக்கொ ரரணே.
அன்னமாகி அறநூல் உரைத்தவனே காப்பான்
1989. முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி யுண்ண முதலோடு வீடு மறியாது,
என்னிது வந்த தென்ன இமையோர் திகைப்ப எழில்வேத மின்றி மறைய,
பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும் நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ,
அன்னம தாயி ருந்தங் கறநூல் உரைத்த அதுநம்மை யாளு மரசே.
கண்ணன் கழலிணை தொழுக
1990. துணைநிலை மற்றெ மக்கொ ருளதென் றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய
உணமுலை முங்கொடுத்த வுரவோள தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி,
பணமுலை யாயர் மாத ருரலோடு கட்ட அதனோடு மோடி அடல்சேர்,
இணைமரு திற்று வீழ நடைகற்ற தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே.
இவற்றைப் பாடுக: தேவருலகை ஆளலாம்
1991. கொலைகெழு செம்மு கத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்
கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்,
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே.
அடிவரவு: நிலையிடம் செரு தீதறு தளை வெந்திறல் இருநிலம் இலைமலி முன் துணை கொலை-மானமரும்

ஐந்தாந் திருமொழி
5. மானமரும்
திருச்சாழல்
முன் இரண்டு அடிகளால் ஒருத்தி பகவானின் சவுலப்ய குணத்தைச் சொல்லி ஏசிப் பேசுகிறாள்
பின் இரண்டடிகளால் மற்றொருத்தி பகவானின் பரந்துவத்தைக் கூறி அநுபவிக்கிறாள். இவ்வாறு அமைந்தது இப்பகுதி இதை உரையாடல் பாசுரம் என்னலாம்.
சாழல் என்னுஞ் சொல் மகளிர் விளையாட்டு என்று பொருள்படும் அச்சொல்லுக்கு தோழி என்றும் பொருள் உண்டு.
எம்பெருமானின் எளிமையையும் சிறப்பையும் இரு பெண்கள் வினா விடைகளாகக் கூறல்
தரவு கொச்சகக் கலிப்பா
காடுறைந்த திருவடிகளே தேவர்கள் தலையில் சூடும் மலர்
1992. மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ
கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே.
நந்தகோபன் மகனே நான்முகன் தந்தை
1993. தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ,
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே.
தயிருண்ட வயிறே உலகங்களையும் உண்டது
1994. ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே.
கண்ணன் வயிற்றுக்கு எதுவும் போதாது
1995. அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,
எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே.
கயிற்றால் கட்டுண்டவனே தேவர்கட்கும் அரியவன்
1996. வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே.
மரக்கால் கூத்தாடுபவன் எப்பொழுதும் அரியவன்
1997. கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப,
மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ,
மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும்,
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே.
பாண்டவ தூதனே உலகத்தை உண்டு உமிழ்ந்தவன்
1998. கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,
ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே.
தேர் உளர்ந்தவனே மன்னர் தலைமேலும் இருப்பவன்
1999. பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,
தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே.
மூவடி மண் வேண்டியவனே மிக மேம்பட்டவன்
2000. கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்
விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே.
ஆழ்வாரின் உள்ளத்தே உள்ளவன் வாமனன்
2001. கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான்,
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ,
வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி
உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே.
அடிவரவு: மானமரும் தந்தை ஆழ்கடல் அறியாதார் வண்ணம் கன்ற கோதை பார் கண்டார் கள்ளத்தால்- மைந்நின்ற.

ஆறாந் திருமொழி
6. மைந்நின்ற
உலகினரை நோக்கி மாயனை வணங்கீர், எனல்
இக்காலமக்கள் கடவுளார் பலரை வணங்குவதில் மோகம் கொண்டிருப்பதை ஆழ்வார் கண்டார். பகவானின் உயர்வையும், மற்ற தேவதைகளின் குறைகளையும் எடுத்துக் கூறி, எம்பெருமானையே அடிபணிந்து நற்பேறு பெறுங்கள் என்று உபதேசிக்கிறார்.
இவ்வுலகைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித்த பான்மையைச் சுட்டிக் காட்டி உபதேசித்துள்ளார் ஆழ்வார்.
கலி நிலைத்துறை
எம்பெருமான் செய்த நன்றியை மறவாதீர்
2002. மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி வானவரும் யாமுமெல்லாம்,
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்ததோரீர்,
எந்நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்?
செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள் அண்டனையே ஏத்தீர்களே.
பிரளயத்திலிருந்து நம்மைக் காத்தவர் அவர்
2003. நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் மீதோடி நிமிர்ந்தகாலம்,
மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட மகப்படுத்த காலத்து,
அன்று எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டுமிழ்ந்த எச்சில்தேவர்,
அல்லாதார் தாமுளரே? அவனருளே உலகாவ தறியீர்களே?
உலகுண்டவன் குணங்களைத் துதியுங்கள்
2004. நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய் நான்முகனும் நீண்டநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்,
வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கொற்றப்போ ராழியான் குணம்பரவாச் சிறுதொண்டர் கொடியவாறே.
நம்மை உய்யக் கொண்ட தலைவன் கண்ணனே
2005. பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் நெடுங்கடலே யானகாலம்,
இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி
முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில் வைத்தும்மை உய்யக்கொண்ட
கனிகளவத் திருவுருவத் தொருவனையே கழல்தொழுமா கல்லீர்களே.
பகவானின் ஸஹஸ்ர நாமங்களைச் சொல்லுங்கள்
2006. பாராரும் காணாமே பரவைமா நெடுங்கடலே யானகாலம்,
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடுங்காலம் கிடந்தது,
உள்ளத் தோராத வுணர்விலீர். உணருதிரேல்உலகளந்த வும்பர்கோமான்,
பேராளன் பேரான பேர்களா யிரங்களுமே பேசீர்களே.
தாயிருக்க மரக்கட்டையை நீராட்டுவதா?
2007. பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன் வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்,
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம் கொண்டாடும் தொண்டீர்,
பெற்ற தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவற்றீரே.
கண்ணனை எண்ணாத மனிதரை மதியாதே
2008. மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல்சூடி, அவனையுள்ளத்
தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்லா மினியவாறே.
பிரளயத்திலிருந்து காத்தவனையே கருதுக
2009. மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து பரந்தேறி யண்டத்தப்பால்,
புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் ஏழினையும் ஊழில்வாங்கி,
அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட,
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர்தாமே.
பிரளயத்திலிருந்து நம்மைக் காத்தவன் மணிவண்ணன்
2010. அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் திரைததும்ப ஆவவென்று,
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் தானருளி, உலகமேழும்
உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்தும்மை யுய்யக்கொண்ட,
கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை நகர்ப்பாடி யாடீர்களே.
திருமகளின் அருள் பெறுவர்
2011. தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்,
யாவரையு மொழியாமே யெம்பெருமான் உண்டுமிழ்ந்த தறிந்துசொன்ன,
காவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி ஒலிமாலை கற்று வல்லார்,
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே.
அடிவரவு: மைந்நின்ற நில்லாத நெற்றி பனி பார் பேய் மண் அண்டம் தேவரையும்-நீணாகம்

ஏழாந் திருமொழி
7. நீணாகம்
கண்ணனைக் காணாக் கண் முதலியன பயனில எனல்
செவி வாய் முதலிய உறுப்புகளையெல்லாம் கொடுத்தவன் எம்பெருமான். பகவானின் செயல்களை அநுபவிக்காதவர்களின் உறுப்புகள், உறுப்புகளே அல்ல என்கிறார் ஆழ்வார்.
தரவு கொச்சகக் கலிப்பா
எம்பெருமானைக் காணாதார் கண் கண்ணல்ல
2012. நீள்ணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப்
பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை,
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை,
காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே.
வாமனன் பெருமை கேளாச் செவிகள் செவிகளல்ல
2013. நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்,
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,
தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை,
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.
பகவான் பெருமை பேசாதார் பேச்சு பேச்சல்ல
2014. தூயானைத் தூய மறையானை, தென்னாலி
மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட
வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,
பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே.
ஆர்வத்தால் பாடாதார் பாட்டு பாட்டல்ல
2015. கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,
ஓடா அடலரியை உம்பரார் கோமனை,
தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்
பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே.
கார்வண்ணனைத் தொழாத கை கையல்ல
2016. மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.
கண்ணனை எண்ணாத உள்ளம் உள்ளமல்ல
2017. கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்,
முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால்,
புள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,
உள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே.
தொண்டு செய்ய நினையாத நெஞ்சு நெஞ்சல்ல
2018. கனையார் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று,
நினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே.
கண்ணனைக் கருதாதார் விவேகம் இல்லாதவர்
2019. வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட
சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்
தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே.
கண்ணனுக்கு அடிமைப்படாதவர் மானிடர் அல்லர்
2020. தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,
தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்,
ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார்,
மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே.
பாவம் நீங்கப் பரமனடி சூடுங்கள்
2021. மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்
கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,
கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,
ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே.
அடிவரவு: நீணாகம் நீள்வான் தூயான் கூடா மையார் கள்ளார் கனை வெறி தேன் மெய்-மாற்றம்

சாற்றுப்பாட்டுகள்
எட்டாந் திருமொழி
8. மாற்றமுள
நம்பியை நோக்கி, உய்யும் வகையருள் எனல்
(உவமை வாயிலால் உரைத்தல்)
பிறவித் துன்பம் மிகவும் கொடிது. பரமனின் திருவடிகளில் சரணம் புகுந்தே இத்துன்பத்தை நீக்கிக்கொள்ள வேண்டும். உன்னை அனுபவிப்பதற்குத் தடையாக உள்ள இந்தத் தேக சம்பந்தத்தை நீக்கி அருளவேண்டும் என்று பகவானை முன்னிலைப்படுத்தி, அவனுடை திருவடிகளில் விழுந்து வேண்டுகிறார் ஆழ்வார்.
கலி விருத்தம்
ஆற்றாங்கரை மரம் போல் அஞ்சுகிறேன்
2022. மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம்,
ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்,
நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ.
புயலில் சிக்கிய படகோட்டுவோர் போல
2023. சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி,
காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல,
ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா.
ஒரே வீட்டில் பாம்போடு பழகுவது போல
2024. தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா.
இருதலைக் கொள்ளி எறும்பு போல
2025. உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
திரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி,
இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல்,
உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா.
வெள்ளத்தில் சிக்கிய நரிக்கூட்டம் போல
2026. கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்,
தள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி,
வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே,
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா.
இடையன் (அரைகுறையாக) வெட்டிய மரம் போல்
2027. படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா,
இடையன் எறிந்த மரமேயொத் திராமே,
அடைய அருளா யெனக்குன்ற னருளே.
வேம்பின் புழு வேம்பையே விரும்புதல் போல்
2028. வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன்
நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன்,
தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப்
பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ.
எனக்கு உய்யும் வகை கூறுக
2029. அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,
மணியே மணிமா ணிக்கமே மதுசூதா,
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதி.
கண்ணனே! அடியேனுக்கு அருள்வாய்
2030. நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும் எந்தாய்
தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய்,
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா,
அந்தோ அடியேற் கருளாயுன் னருளே.
இவற்றைப் பாடுக: வினைகள் சாரா
2031. குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை,
மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல்,
என்றும் வினையாயின சாரகில் லாவே.
அடிவரவு: மாற்றம் சீற்றம் தூங்கார் உருவார் கொள்ள படை வேம்பின் அணியார் நந்தா குன்றம்-நிதியினை
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
***************
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குறுந்தாண்டகம்
தாண்டகம் என்பது (தமிழில்) ஒரு பிரபந்த வகை. இது குறுந்தாண்டகம்; அறுசீர் கொண்ட அளிவொத்த நான்கு அடிகளால் ஆகியது. இதில் ஒவ்வோர் அடிதோறும் மெய்யெழுத்துகள் உட்படப் பதினைந்து எழுத்துகளுக்குக் குறையாமலும், இருபத்தாறு எழுத்துகளுக்கு மேற்படாமலும் இருக்கும். நாலுகவிப் பெருமாள் எனப்படும் இவ்வாழ்வாரின் கவித்திறனையே இப்பிரபந்தம் வெளிப்படுத்துகிறது.
இவ்வாழ்வார் எனக்கு உய்யும் வகை பணியாய் என்றார்; கதறினார் இவரது பக்தி பரமபக்தியாக முதிர்ந்திடவேண்டும் என்று பகவான் முகம் காட்டாமல் இருந்தான். ஆழ்வார் வேட்கை மீதூர்ந்து அவனை நெஞ்சால் நினைத்தும், வாயினால் பேசியும், தலையால் வணங்கியும் அவனருள் பெற முயல்கின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
மாலைக் கண்டு கொண்டேன்; இனி விடுகிலேன்
2032. நிதியினைப் பவளத் தூணை நெறிமையால் நினைய வல்லார்,
கதியினைக் கஞ்சன் மாளக் கண்டுமுன் ஆண்ட மாளும்,
மதியினை மாலை வாழ்த்தி வணங்கியென் மனத்து வந்த,
விதியினைக் கண்டு கொண்ட தொண்டனேன் விடுகி லேனே!
உன் விருப்பம் போல் அவன் குணங்களைக் கூறு
2033. காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதி ளிலங்கை செற்ற
ஏற்றினை, இமயம் மேய எழில்மணித் திரளை, இன்ப
ஆற்றினை அமுதந் தன்னை அவுணனா ருயிரை யுண்ட
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் கூறுநீ கூறு மாறே.
மாலிருஞ்சோலை மைந்தனை வணங்கினேன்
2034. பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.
வராகனைக் கனவில் கண்டு விழுங்கினேன்
2035. கேட்கயா னுற்ற துண்டு கேழலா யுலகங்க் கொண்ட,
பூக்கெழு வண்ண நாரைப் போதரக் கனவில் கண்டு,
வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால்,
வேட்கைமீ தூர வாங்கி விழுங்கினேற் கினிய லாறே!
கரும்புச் சாறு போல் அவனைப் பருகினேன்
2036. இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.
அரியை முற்ற முடியப் புகழ்வது எளிதன்று
2037. மூவரில் முதல்வ நாய ஒருவனை யுலகங் கொண்ட,
கோவினைக் குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் பைம்பொன்னை யமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே?
அரங்கனை நினைவார் தலைமீது தங்குவார்
2038. இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற,
மெய்ம்மையை விரிந் த சோலை வியந்திரு வரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை,
தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே.
பகவானை நினையாதார் நிலை பரிதாபமானது
2039. வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசம் ஈன்ற,
தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார்,
மானிடப் பிறவி யந்தோ மதிக்கிலர் கொள்க, தந்தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் குறுதியே வேண்டி னாரே.
தேவதேவரே! எங்கட்கு நீரே துணை
2040. உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையி னெரிநின் றுண்ணும்
கொள்ளிமே லெறும்பு போலக் குழையுமா லென்ற னுள்ளம்,
தெள்ளியீர் தேவர்க் கெல்லாம் தேவரா யுலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை யல்லால் எழுமையும் துணையி லோமே.
அத்தா! உன் அடிமை ஒன்றுதான் நான் அறிவேன்
2041. சித்தமும் செவ்வை நில்லா தெஞ் சய்கேன் தீவி னையேன்,
பத்திமைக் கன்பு டையேன் ஆவதே பணியா யந்தாய்,
முத்தொளி மரத கம்மே முழங்கொளி முகில்வண் ணா,என்
அத்த நின் னடிமை யல்லால் யாதுமொன் றறிகி லேனே.
உன்னைத்தான் நான் தோத்திரம் செய்வேன்
2042. தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறு
கண்டு, தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய்,
அண்டமா யெண்டி சைக்கும் ஆதியாய் நீதி யான,
பண்டமாம் பரம சோதி நின்னையே பரவு வேனே.
அஞ்சாதே என்று காட்சி தந்தார்
2043. ஆவியயை யரங்க மாலை அழுக்குரம் பெச்சில் வாயால்,
தூய்மையில் தொண்ட னேன்நான் சொல்லினேன் தொல்லை நாமம்,
பாவியேன் பிழத்த வாறென் றஞ்சினேற் கஞ்ச லென்று
காவிபோல் வண்ணர் வந்தென் கண்ணுளே தோன்றினாரே.
அரங்கனைக் கண்டேன்: பாவங்கள் அகன்றன
2044. இரும்பனன் றுண்ட நீரும் போதரும் கொள்க, என்றன்
அரும்பி ணி பாவ மெல்லாம் அகன்றன என்னை விட்டு,
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணிணை களிக்கு மாறே.
அந்தோ! வீண் பொழுது போக்கினேனே!
2045. காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும்
பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்,
தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை,
பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே.
அன்பினால் ஞான நீர் கொண்டு நீராட்டுவேன்
2046. முன்பொலா இராவ ணன்றன் முதுமதி ளிலங்கை வேவித்து,
அன்பினா லனுமன் வந்தாங் கடியிணை பணிய நின்றார்க்கு,
என்பெலா முருகி யுக்கிட் டென்னுடை நெஞ்ச மென்னும்,
அன்பினால் ஞான நீர்கொண் டாட்டுவ னடிய னேனே.
எம்பிரானுக்குப் பாமாலை சூட்டுவேன்
2047. மாயமான் மாயச் செற்று மருதிற நடந்து, வையம்
தாயமா பரவை பொங்கத் தடவரை திரித்து, வானோர்க்
கீயுமால் எம்பி ரானார்க் கென்னுடைச் சொற்க ளென்னும்,
தூயமா மாலை கொண்டு சூட்டுவன் தொண்ட னேனே!
எம்பிரான் பெருமையையே பேசுவேன்
2048. பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி,
ஏசினார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம்,
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு,
ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே.
பகவானையே சிந்தனை செய்: மெய்ம்மை காணலாம்
2049. இளைப்பினை யியக்கம் நீக்கி யிருந்துமுன் னிமையைக் கூட்டி,
அளப்பிலைம் புலன டக்கி அன்பவர் கண்ணே வைத்து,
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே
விளக்கினை விதியில் காண்பார் மெய்ம்மையே காண்கிற் பாரே!
திருக்கோயில் சேர்க: உய்யலாம்
2050. பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர்மனை திரிதந் துண்ணும்,
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவனூர், உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை என்று
மண்டினார், உய்யல் அல்லால் மற்றையார்க் குய்ய லாமே?
இவற்றைப் பாடுக: விசும்பை ஆளலாம்
2051. வானவர் தங்கள் கோனும் மலர்மிசை அயனும், நாளும்
தேமலர் தூவி ஏத்தும் சேவடிச் செங்கண் மாலை,
மானவேல் கலியன் சொன்ன வண்டமிழ் மாலை நாலைந்தும்,
ஊனம தின்றி வல்லார் ஒளிவிசும் பாள்வ ர் தாமே.
அடிவரவு: நிதியினை காற்று பாயிரும் கேட்க இரும்பு மூவரில் இம்மை வான் உள்ளம் சித்தம் தொண்டு ஆவி இரும்பு காவி முன் மாய பேசி இளைப்பு பிண்டி வானவர்-மின்
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
**********
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம்
இது நெடுந்தாண்டகம். எண்சீர் கொண்டது. இப்பிரபந்தத்தில் முப்பது பாசுரங்கள் உள்ளன. முதல் பத்தப் பாட்டுகள் எம்பெருமான் எல்லாம் தாமேயான தன்மையில் அமைந்தவை. இரண்டாம் பத்துப் பாட்டுகள் திருத்தாயார் வார்த்தையாக அமைந்தவை. மூன்றாம் பத்துப் பாட்டுகள் தோழியோடு பேசும் தலைமகள் வார்த்தையாக அமைந்தவை.
ஆழ்வாருக்கு எதிரில் எம்பெருமான் வந்து முகம் காட்டினான். ஆழ்வார் தம் மகிழ்ச்சியை இதில் கூறுகிறார்.
எந்தையின் திருவடிகள் என் தலைமேலுள்ளன
2052. மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.
எம் அடிகளின் உருவம் மேகத்தின் உருவம்
2053. பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே.
உண்மையான உருவம் யாருக்குத் தெரியும்
2054. திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே?
மூடமனமே! அரியை மறவாதே
2055. இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.
எம்பிரான் மலரடியையே வணங்கினேன்
2056. ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.
மனமே! திருக்கோவலூர் தொழலாம், வா
2057. அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
திருக்கோவலூரை யாவருமே தொழுகின்றனர்
2058. வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
அடியார் மனம்தான் அரியின் கோயில்
2059. நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே.
எம்பிரானே! நீ எங்கே இருக்கிறாய் ?
2060. வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய். பேராய்,
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா,
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே.
எல்லாமாக எம்பிரான் உள்ளான்
2061. பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான்,
என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே.
திருவரங்கம் எங்கே என்கிறாள் என்மகள்
2062. பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே?
அரங்கனை எண்ணி அயர்க்கின்றாள் என் மகள்
2063. நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே.
அரியின் செயல்களையே புகழ்கின்றாள் என் மகள்
2064. கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,
அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,
சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.
திருமால் புகழ் கேட்கவே என் மகள் விரும்புகிறாள்
2065. முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே.
திருமால் புகழையே பாடுகிறாள் என் மகள்
2066. கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.
திருமால் செயல் கூறிக் கண்ணீர் விடுகிறாளே!
2067. கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்பு தன் கனியே என்றும்,
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும்,
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்,
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.
எல்லாத் தலங்களையும் பாடுகிறாள் என் மகள்
2068. பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.
திருநீர்மலை செல்ல விரும்புகிறாள் என் மகள்
2069. கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே?
குடந்தை நகரும் பாடுகிறாள் என் மகள்
2070. முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.
பெருந்தவம் செய்தவள் என் மகள்
2071. தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?
தோழீ! நாம் ஏன் கண்ணனைக் கண்டு அஞ்சினோம்?
2072. மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.
தோழீ! எம்பிரான் கோயில் திருவாலியாமே!
2073. நைவளமொன் றாராயா நம்மை நோக்கா நாணினார் போலிறையே நயங்கள் பின்னும்,
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால்
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும்,
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்கு இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே.
கண்ணனைக் கனவில் கண்டால் விடமாட்டேன்
2074. உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே,
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக்
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது,
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் என்றாலு மிதுநமக்கோர் புலவி தானே?
தோழீ! எம்பிரான் ஊர் திருவரங்கமாமே!
2075. இருகையில்சங் கிவைநில்லா எல்லே பாவம் இலங்கொலிநீர் பெரும்பௌவம் மண்டி யுண்ட,
பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ணம் பெருந்தவத்தர் அருந்தவத்து முனிவர் சூழ
ஒருகையில்சங் கொருகைமற் றாழி யேந்தி உலகுண்ட பெருவாய ரிங்கே வந்து,என்
பொருகயல்கண் ணீரரும்பப் புலவி தந்து புனலரங்க மூரென்று போயி நாரே.
தோழீ! என்னைக் கவர்ந்தவர் ஊர் திருவரங்கம்
2076. மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.
வண்டே! என் நிலையைக் கண்ணனுக்குக் கூறு
2077. தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே.
நாராய்! என் காதலைக் கண்ணனுக்குக் கூறு
2078. செங்கால மடநாரா யின்றெ சென்று திருக்கண்ணபுரம்புக்கென்செங்கண்மாலுக்கு
என்காதலென்துணைவர்க்குரைத்தியாகில் இதுவொப்பதெமக்கின்பமில்லை நாளும்
பைங்கானமீதெல்லாமுனதேயாகப் பழனமீன்கவர்ந்துண்ணத்தருவன் தந்தால்
இங்கேவந்தினிதிருந்துன்பெடையும்நீயும் இருநிலத்திலினிதென்பமெய்தலாமே.
தோழீ! கண்ணனைத் தழுவி மனம் உருகுவேன்
2079. தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,
மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,
என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.
கண்ணனையே நாயேன் நினைக்கின்றேன்
2080. அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.
இவற்றைப் பாடுக; பழவினையை அகற்ற முடியும்
2081. மின்னுமா மழைதவழும் மேக வண்ணா விண்ணவர்தம் பெருமானே அருளாய், என்று,
அன்னமாய் முனிவரோ டமர ரேத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் றன்னை,
மன்னுமா மணிமாட வேந்தன் மானவேல் பரகாலன் கலியன் சொன்ன பன்னியநூல்
தமிழ்மாலை வல்லார் தொல்லைப் பழவி னையை முதலரிய வல்லர் தாமே.
அடிவரவு: மின் பார் திருவடிவில் இந்திரன் ஒண்மிதி அலம் வற்பு நீரகம் வங்கம் பொன் பட்டு நெஞ்சு கல்லெடுத்து முளை கல்லுயர்ந்த கன்று பொங்கு கார் முற்றாரா தேராளும் மை நைவளம் உள்ளூரும் இருகை மின் தேமருவு செங்கால தென்னிலங்கை அன்றாயர் மின்னுமா-வையம்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
இரண்டாமாயிரம் ஸம்பூர்ணம்.

  3  2 Google +0 


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்










































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக