ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்களும்!!!

ராதே கிருஷ்ணா 09-08-2015




SRIRANGAM!!!!!
திருப்பாணாழ்வார் தாம் தாழ்குலத்தில் பிறந்தோம் என்பதற்காக
திருவரங்கத்திற்கு உட்செல்ல மனம் கூசி தினந்தோறும்
தென்
திருக்காவேரியின் கரையிலிருந்து திருவரங்கனை நோக்கிப் பக்திப்
பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்.
ஒருநாள் திருவரங்கப்பனுக்கு
ஆராதனை புரியும் லோகசாரங்க முனிவர் என்பர்
தென் காவிரியில்
திருவரங்கநாதனின் திருமஞ்சணத்திற்கு காவிரித் தண்ணீரை முகந்து கொண்டு
செல்ல வந்து கொண்டிருக்கும் போது
தென் காவிரிக் கரைமீது நின்று
கொண்டு திருப்பாணாழ்வார் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார்.
இவரைக்
கண்ட லோகசாரங்க முனிவர் கையை தட்டி ஏ, பாணனே அப்பால் செல்க
என்று கூறினாராம்.
தம்மை மறந்த நிலையில் எம்பெருமானிடம் ஈடுபட்டிருந்த
திருப்பாணரின் செவிகளில் கையொலி சத்தம் கேட்க வில்லை.
தன்
நிலையினின்றும் பிறழாது மனமுருகி பாடிக் கொண்டேயிருந்தார்.
இதைக்கண்ட லோகசாரங்கர் ஒருசிறு கல்லை எடுத்து பாணர் மீது வீசவே
அது அவர் நெற்றியில் பட்டு இரத்தம் பீறிட்டது.
நிலையுணர்ந்த பாணர்
நடுநடுங்கி ஒதுங்கி நின்று லோக சாரங்கருக்கு வழிவிடுத்தார்.
லோகசாரங்கர்
தீர்த்தம் முகர்ந்துகொண்டு திருவரங்கப்பன் முன் வந்து நின்றார்.
என்ன
ஆச்சர்யம் திருவரங்கனின் நெற்றியினின்றும் இரத்தம் வழிந்து கொண்டு தான்
இருந்தது.
செய்வதறியாது திகைத்து அனைவரும் கூடி இந்த ஆச்சர்யத்தை
கண்ணுற்று வகையறியாது நின்றனர்.
மனம் நொந்து மயங்கிய நிலையில்
துயில்கொண்ட லோகசாரங்கர் கனவில் வந்த அரங்கன் பாணரைத்
துன்புறுத்தியது தவறென்றும்,
நும் போன்றே அவரும் தொண்டரன்றோ, நீர்
சென்று உம் தோள் மீது அவரைச் சுமந்து வாரும் என்று பணித்தார்.
மறுநாள் காலையில் லோகசாரங்க முனிவரும்,
மற்றையோர்களும்
தென்திருக்காவேரி செல்ல தம்மை மறந்து எம்பெருமான் மீது மையல்கொண்டு
பாடல்கள் இசைத்துக் கொண்டிருந்த திருப்பாணரை வணங்கி, அவரிடம்
பெருமாளின் திருவுளக்குறிப்பை தெரிவித்து தம்தோள் மீது ஏற்றிக்
கொணர்ந்து திருவரங்கர் முன் விடுத்தனர்.
திருவரங்கநாதனைக் கண்குளிரக்
கண்ட திருப்பாணாழ்வார் அவரது திருமுகம், கண், வாய், செவி, திருவுந்திக்
கமலம்,
ஆகியவற்றின் பேரழகில் மயங்கி அமலனாதிப்பிரான்
எனத்தொடங்கும் 10 பாசுரங்களை வழங்கி திருவரங்கன் திருவடிக்கீழ் புகுந்து
மறைந்தார்.




மகாபாரதப் போர்
பற்றியும் அதில்
அமைக்கப்பட்ட
வியுகங்களும்!!!

40 லட்சம்பேர் பங்குபெற்ற 18
நாட்கள் நடந்த மிகப்
பிரமாண்டமான மகாபாரதப்
போர் பற்றியும் அதில்
அமைக்கப்பட்ட வியுகங்கள்
பற்றியும் தெரிந்து
கொள்ளுங்கள்....
இதை
பிரமாண்டமான திரைப்படமாக
எடுத்தால் எப்படி இருக்கும்
என்பதை கற்பனை செய்து
பாருங்கள்!
.
1.கிராஞ்ச வியுகம் (heron
formation)
2.மகர வியுகம் (crocodile
formation)
3.கூர்ம வியுகம் (tortoise or
turtle formation)
4.திரிஷுல வியுகம் (trident
formation)
5.சக்ர வியுகம் (wheel or discus
formation)
6.கமலா வியுகம் or பத்மா
வியுகம் (lotus formation)
7.கருட வியுகம் (eagle formation)
8.ஊர்மி வியுகம் (ocean
formation)
9.மண்டல வியுகம் (galaxy
formation)
10.வஜ்ர வியுகம் (diamond or
thunderbolt formation)
11.சகட வியுகம் (box or cart
formation)
12.அசுர வியுகம் (demon
formation)
13.தேவ வியுகம்(divine
formation)
14.சூச்சி வியுகம்(needle
formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் (horned
formation)
16.சந்திரகல வியுகம் (crescent
or curved blade formation)
17.மலர் வியுகம் (garland
formation)
18.சர்ப வியுகம் (snake
formation).....
................................மகாபாரதத்தில்,
குருசேத்திரப் போரின் போது
பாண்டவர் தரப்பில் 7
அக்குரோணி படைகளும்,
கௌரவர்கள் தரப்பில் 11
அக்குரோணி படைகளுமாக 18
அக்குரோணி படைகள்
பங்கெடுத்தது. ஒரு
அக்குரோணி என்பது 21870
தேர்களையும், 21870
யானைகளையும், 65610
குதிரைகளையும், 109350 படை
வீரர்களையும் உள்ளடக்கியது
படைப்பிரிவுகளின் கணக்கு
படைப்பிரிவுகள்
பின்வருமாறு
கணக்கிடப்படுகின்றன: ஒரு
தேர், ஒரு யானை, மூன்று
குதிரைகள், ஐந்து
படைவீரர்கள் கொண்ட பிரிவு,
ஒரு பட்டி எனப்படும்.
3 பட்டிகள் கொண்டது 1
சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது 1
குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள் 1
அக்குரோணி
குருசேத்திரப்போர் படை
விபரங்கள்
குருசேத்திரப் போரில்
கௌரவர்களுக்குச் சார்பாக
அத்தினாபுரத்துப் படைகளும்
அவர்களுக்கு ஆதரவான பிற
படைகளுமாகப் 11
அக்குரோணி படைகள்
ஒருபுறத்திலும், பாஞ்சாலம்,
விராடம், போன்ற பல்வேறு
அரசுகளின் படைகளை
உள்ளடக்கிய
பாண்டவர்களுக்குச் சார்பான 7
அக்குரோணி படைகள்
ஒருபுறத்திலுமாகப்
போரிட்டன.
கௌரவர் தரப்புப் படைகள்
துரியோதனன் தரப்பில்
போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1
அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் - 2
அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1
அக்குரோணி
கிருதவர்மன் (கிருட்டிணனின்
நாராயணிப் படைகள்) - 1
அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1
அக்குரோணி
காம்போச அரசன்
சுதக்சினனின் படைகள் - 1
அக்குரோணி
விந்தன், அனுவிந்தன்
என்போரின் அவாந்திப்
படைகள் - 1 அக்குரோணி
ஐந்து கேகய சகோதரர்
படைகள் - 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் - 3
அக்குரோணி
பாண்டவர் தரப்புப் படைகள்
விருஷ்னி வம்சத்துச்
சாத்யகியின் படைகள் - 1
அக்குரோணி
நீலனின் மகிசுமதிப் படைகள் -
1 அக்குரோணி
சேதிசு அரசர்
திருட்டகேதுவின் படைகள் - 1
அக்குரோணி
சராசந்தனின் மகன்
சயத்சேனனின் படைகள் - 1
அக்குரோணி
துருபதனின் படைகள் - 1
அக்குரோணி
மத்சய அரசன் விராடனின்
படைகள் - 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள்
(சோழரும் ,பாண்டியரும்) - 1
அக்குரோணி......
......................தற்போதைய
கணக்குப்படி பாண்டவர்கள்
படையில்7 அக்குரோணி
(15,30,900 படைகளும்)
கௌரவர் படையில்11
அக்குரோணி
(24,05,700 படைகளும்)
இருந்தன
































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக