புதன், 11 ஜூன், 2014

சித்த மருத்துவம்

ராதே கிருஷ்ணா 12-06-2014


சித்த மருத்துவம்





From the album: Mobile Uploads
By Gopinath Shivam
சித்த மருத்துவம்

* சாதம் வடித்த
கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன்
நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால்
இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச்
சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால்
தாய்ப்பால் சுரக்கும்.

*
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய்
எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும்
ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம்
குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில்
வைத்து அதனுடன்
தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து,
மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர்
குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள்,
சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும்
சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில்
பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல்
குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில்
அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள்
வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச்
செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக
சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில்
அதே அளவு விட்டு இதில்
வெண்தாமரை மலர்களைப் போட்டுக்
காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில்
வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள்
வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண்
நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில்
குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல்
குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய்
சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல்
பருமன் குறையலாம்.
* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும்
கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண்
குணமாகும்.
* கேரட் சாறும் சிறிது தேனும்
கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள்
வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த
நோய்கள் தீரும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ்,
வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க
வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர்
சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய்
கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல்
தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக்
குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக்
கரகரப்பு போகும்.
சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி,
உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப்
செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும்
சேர்த்து அரைத்து இதனுடன் தேன்
கலந்து காலை மாலை உணவுக்கு முன்
சாப்பிட்டால் டான்சில் கரையும்.













































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக