புதன், 15 ஏப்ரல், 2015

பகவான் கிருஷ்ணர்

ராதே கிருஷ்ணா 15-04-2015



ஸ்ரீமத் பாகவதம் ( 9 வது மற்றும் 10 வது காண்டம் )


தசமஸ்கந்தம் - ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமிகள்

க்ருத யுகம்  - 5 அவதாரங்கள் - 1. மத்ஸ்யாவதாரம்

                                                               2. கூர்மாவதாரம்
                                                           
                                                               3. வராஹவதாரம்
                                                     
                                                               4/ ந்ருசிம்ஹவதாரம்
                                                       
                                                               5. வாமனாவதாரம்

த்ரேதா யுகம்  - 2 அவதாரங்கள் - 1. பலராம அவதாரம்

                                                                   2. ராமாவதாரம்

த்வாபர யுகம் - 2 அவதாரங்கள்    1. பலராம அவதாரம்

                                                                    2. கிருஷ்ணா அவதாரம்

கலி யுகம்        - 1 அவதாரம்             1. கல்கி அவதாரம்


புராணங்கள் - 18     சாத்விக புராணங்கள் - 6
                                      ராஜச புராணங்கள்       - 6
                                       தாமச புராணங்கள்     - 6


முதல் ஸ்கந்தம்  :  பரிஷித் - சுகாசாரியார் அவர்களிடம் பாகவதம் சொல்லுமாறு கேட்டது . பரிஷித் இன்னும் ஏழு நாட்களே இருக்கிறது.

இரண்டாம் ஸ்கந்தம் : பெருமாள் விஸ்வரூபம் மற்றும் சிருஷ்டி செய்ய சங்கல்பம் செய்வது.

மூன்றாம் ஸ்கந்தம் : பிரம்மா ஸ்வயம்பு மனுவை படைத்தார்.

                                             ஹிரன்யாக்ஷகன் பூமியை கடலுக்கு அடியில் எடுத்துச் சென்று விட்டான். பகவான் வராஹ அவதாரம் எடுத்து பூமியைக் காத்தான்.

ஜகத் சிருஷ்டி ஆரம்பித்தான். தேவஹூதி , கர்த்தமப் பிரஜாபதி ஸம்வாதம் ,

கபிலர் பிறந்தார். தாயாருடன் ஸம்வாதம்.

நான்காம் ஸ்கந்தம் : ப்ரியம்வ்ரதம் , உத்தானபாதன் பிறந்தனர்.

உத்தான பாதன் மகனாக த்ருவன் பிறந்தான். த்ருவ சரித்ரம் ..

ஐந்தாம் ஸ்கந்தம் : ப்ரியம்வ்ரதம் வழியில் ஆக்ணீதரன் ,நாதி , ஆதி ஜட பரதர் வந்தனர். அவர்களது சரித்ரம்.

த்ருவன் வழியில் வேணன் , அங்கண் , ருது வந்தனர்.


சப்தத்வீபங்கள் , நவ வருஷங்கள் படைக்கப்பட்டன.

ஆறாம் ஸ்கந்தம் : அஜாமிள உபாக்யானம் , இந்திரன் வ்ருத்தாசுரன் வதம்

ஏழாவது ஸ்கந்தம் : ந்ருஸிம்ஹவதாரம்

எட்டாவது ஸ்கந்தம் : கஜேந்திர மோட்சம் , அமிர்த மதன கதை , பலி சக்ரவர்த்தி (வாமனாவதாரம்) விளக்கம்.

ஒன்பதாவது ஸ்கந்தம் : இஷ்வாகு குல சரித்ரம், அம்பரிஷன் கதை , சதரன் கதை , மான் தாதா கதை , தலீபன் கதை மற்றும் அஜமஹாராஜன் கதை . தசரதன் மற்றும் ராமன் கதை.

இறுதியில் யயாதி , யது சரித்ரம் விளக்கி, கிருஷ்ணா சரித்ரம் சொல்ல ஆரம்பித்தார். கிருஷ்ணா சரித்திரத்தை சிறியதாக சொல்லி முடித்தார். பரிஷித் சுகாசாரியாரிடம் கிருஷ்ண சரித்திரத்தை விவாக சொல்லச் சொன்னார்.

சுகர் பரிஷித்திடம் நானோ முனிவர் , எனக்கு பசி தெரியாது, நீயோ மன்னன் அதனால் ஆகாரம் சாப்பிட்டு வரவேண்டும் என்றார். ஆனால் பரிஷித்தோ எனக்கு பசி என்பது இல்லை, கிருஷ்ணர் சரித்திரம் கேட்பதாலே அனனத்தும் மறந்து போகும் என்றார்.

யயாதி மூதாதியர்கள் வரிசையை பார்ப்போம்.

ராமன்                                கிருஷ்ணர்

சூர்ய வம்சம்                   சந்திர வம்சம்

பகலில் பிறந்தான்         இரவில் பிறந்தான்

நவமியில்                          அஷ்டமியில்

அரண்மனையில்             சிறைச்சாலையில்

சித்திரை                               ஆவணியில்


யயாதி பலகாலம் இன்ப உலகில் மூழ்கி திளைத்தான். முதுமை வந்ததும் தன் மூத்த மகனான யதுவை  அழைத்து அவனிடம் அவன் இளமையை தனக்குக் கொடுக்கவேன்டினான். மகன் அதற்க்கு மறுத்து விட்டான். அதனால் யயாதி யதுவிற்கு ராஜ்யம் ஆள பட்டாபிஷேகம் கிடையாது என்று சாபமிட்டார்.
பிறகு தன இளைய மகனான புருவிடம் இளமை தருமாறு வேண்டினான். புருவும் தன் இளமையை தந்தைக்குக் கொடுத்துவிட்டான். பட்டாபிஷேகமும் பெற்றான்.

அதனால் யது வம்சம் கீழே போனது. அதை மேலே தூக்கி விட கிருஷ்ணன் யது குலத்தில் பிறந்தான்.  பூமியை ஹிரன்யாக்ஷகன் கடலுக்கு அடியில் தள்ளியபோது பகவான் வராஹ அவதாரம் எடுத்து பூமியை மேலே கொணர்ந்தான். அதுபோல் இப்போது கிருஷ்ணா அவதாரம் எடுத்து யது குலத்தை மேலே தூக்கிவிட தோன்றினான்.

யயாதி மகனாக சுகுரன் மற்றும் பஜமானன் பிறந்தனர். சுகுரனுக்கு தேவகன் , உக்ரசேனன் என இருவர் பிறந்தனர். தேவகனுக்கு மகளாக தேவகி பிறந்தாள்.               
உக்ரசேனனுக்கு மகனாக கம்சன் பிறந்தார்.


சுகுரன்                                                         உக்ரசேனன்
4 பிள்ளைகள் / 7 பெண்கள்                    9 பிள்ளைகள் / 5 பெண்கள்

  தேவதான்              த்ருதேவ
   உபதேவஸ்ச       சாந்திதேவ

   ஸ்ரீதேவ                  உபதேவ
   தேவ வர்தன       ஸ்ரீ தேவ
                                     தேவ ரக்ஷித
                                      சக தேவ
                                       தேவகி

 சூரசேனன் - மாரீஷாவிற்கு வசுதேவர் பிறந்தார்.
பஜமானன்  மகனாக சூரசேனன் பிறந்தார். அவருக்கு வசுதேவர் பிறந்தார்.
வசுதேவர் பிறந்தபோது யானை முழக்கமிட்டது, அதனால்
சூரசேனனுக்கு யானக துந்துபி என பெயர் பெற்றான்.

வசுதேவருக்கு மகனாக கிருஷ்ணன் பிறந்தான். வசுதேவருடன் திருத தங்கை பிறந்தார். அவருக்கு குந்தி பிறந்தாள் . குந்தி மகனானதால் அர்ஜுனனுக்கு கௌந்தேயன் என பெயர் உண்டு. த்ருத மகளானதால் பார்த்த பெயர்

அர்ஜுனன் சுபத்ர அவர்களுக்கு அபிமன்யு பிறந்தான். அபிமன்யு உத்தரையை மணந்தான். அவர்களுக்கு பரிஷித் பிறந்தான். பரிஷித் கர்பத்தில் இருக்கும்போது அஸ்வத்தாமன் ஒரு இரவில் அனைவரையும் சந்ததி இல்லாமல் இருக்க இரவில் அஸ்த்ர பிரயோகம் செய்தான். கண்ணனிடம் வேண்டியதால் கண்ணன் கர்பத்தில் சென்று காப்பாற்றினான். கர்ப்பம் கட்டையாக வெளிவந்தது. மீண்டும் கண்ணனை வேண்டியதால் கட்டை விரலால் தொட , நான் பிரமச்சாரியாக இருப்பது உண்மையாக இருந்தால், நான் பேசுவது எப்போதும் சத்தியமாக இருந்தால் குழந்தை எழுந்தது.

நமக்கு இப்போது இரண்டு சந்தேகம் வரும். கண்ணன் 16108 மனைவிகள், எப்படி பிரமச்சாரி, சத்தியமே பேசுபவன் என்பது தான்.

பெருமான் வைகுண்டத்திலே தன் தலைமுடி இரண்டு எடுத்து , ஒன்று வெள்ளை, மற்றது கறுப்பு எடுத்து போட்டார். வெள்ளை முடி பலராமனாகவும், கறுப்பு கிருஷ்ணனாகவும் பிறந்தனர்.

ஸ்ருத தேவி சேதி ராஜன் மகள் தனபோஷனுக்கு பிறந்தவர் வசுதேவர்.

வசுதேவரின் மற்ற பத்தினிகள் - கௌரவி  - மகள் சுபத்ரா
                                                                    ரோஹினி - பலராமர்
                                                                    பத்ரா  
                                                                    மதிரா
                                                                    லோகா
                                                                      இள
                                                                      தேவகி
அபிமன்யு - உத்தரைக்கு பிறந்தவர் பரிஷித் .

பத்தாவது ஸ்கந்தம் : பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணர் தான் முன்னமே இரண்டு தடவை வசுதேவர் தேவகிக்கு மகனாக பிறந்திருக்கிறார் என்றும் , இது மூன்றாவது தடவை மகனாக கிருஷ்ணராக அவதரிக்கிறார். முதலில் ப்ரெச்னிகர்பா மற்றும் வாமனதேவராக அவதரித்தார். இது போல் மூன்று தடவை பிறப்பதாக தேவகிக்குக் கூறியதால் அது போன்று பிறந்ததாகக் கூறினார்.

கிருஷ்ணருடன் பிறந்த எட்டு பேர்களின் பெயர்கள்

கீர்த்திமந்தம்

சுஷேணம்

பத்ரசேனம்

ருஜம்

ஸம்வர்தனம்

பத்ரம்

சங்கர்ஷணம்

ஹரிம்

பகவான் கிருஷ்ணர் 

1. கிருஷ்ணனின் வருகை 

2. கர்பத்திலிருந்த கிருஷ்ணனை தேவர்களின் பிரார்த்தனை 

3. கிருஷ்ணன் பிறக்கிறார் 

4. கம்ஸனின் அட்டூழியங்கள் 

5. நந்தர் - வஸுதேவர் சந்திப்பு 

6. பூதனா வதம் 

   சகடாசுரன் வதம் 

7. த்ருனாவர்த்தன் முக்தி 

8.விஸ்வரூபம் தரிசனம் 

   நவநீத சோரன் 

9. அன்னை யசோதை கிருஷ்ணனைக் கயிற்றால் கட்டுதல்

10. நளகூவரன் , மணிக்ரீவன் சாபவிமோசனம்  

11. வத்ஸாஸுர (கன்றுகுட்டி வடிவம்) 
     கபித்ஸாசுரன் (விளாம்பழம்)

12. பகாசுர வதம்  (கொக்கு வடிவம்)

    அகாசுர வதம் (மலைப்பாம்பு வடிவம்)

13. சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல் 

14. கிருஷ்ணரிடம் பிரம்மன் பிரார்த்தனை .  

15. தேனுகாசுர வதம் 

16. காலியனைப் பணியவைத்தல்  (நதியை விஷமாக்கியது)

      அரிஷ்டாசுரன் (காளை மாடு வடிவம்)

17. காட்டுத்தீயை அணைத்தல் 

18. பிரலம்பாசுர வதம் 

19. காட்டுத்தீயை விழுங்குதல் 

20. இலையுதிர் கால வர்ணனை 

21. கோபியர் குழலிசையால் வசீகரிக்கப்படுதல் 

22. கன்னி கோபியர்களின் ஆடைகளைத் திருடுதல் 

23. அந்தணர்களின் மனைவியர் முக்தி 

24. கோவர்த்தன கிரியைப் பூஜித்தல் 

25. விருந்தாவனத்தில் நாசகார மழை 

26. வியத்தகு கிருஷ்ணர் 

28. தேவேந்திரனின் பிரார்த்தனை 

28. வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல்

29. ராஸ நடனம்  அறிமுகம் 

30. கிருஷ்ணர் கோபியரிடமிருந்து மறைந்திருத்தல் 

31. கோபியரின் பாடல்கள் 

32. கிருஷ்ணர் கோபியரிடம் திரும்பி வருகிறார் 

33. ராஸ நடன வர்ணனை 

34. வித்யாதரன் முக்தி மற்றும் சங்காசுரன் வதம் 

35. கோபியரின் விரக தாபம் (குதிரை வடிவம்) 

36. அக்ரூரர் தூது 

37. கேசி , வியோமாசுர வதம் 

38. அக்ரூரர் வ்ருந்தாவனம் வருதல் 

39. அக்ரூரர் விஷ்ணு லோகத்தைக் காணல் 

40. அக்ரூரரின் பிரார்த்தனைகள் 

41. கிருஷ்ணர் மதுராவில் பிரவேசிக்கிறார் 

42. யாக மேடையில் வில்லை முறித்தல் 

43.குவலயாபீட யானையைக் கொல்லல் 

44. கம்சன் வாதம் 

45. ஆசானின் மகனை கிருஷ்ணன் மீட்டல் 

46. உத்தவர் விருந்தாவனம் வருகிறார் 

47. கிருஷ்ணரின் செய்தியைக் கோபியர்கள் பெறுகிறார்கள்.

48. கிருஷ்ணர் தம் பக்தர்களை திருப்தி செய்கிறார் 

49. திருதராஷ்ட்ரரின் கேட்ட நோக்கம் 

50. கிருஷ்ணர் த்வரகைக் கோட்டையை நிறுவுதல் 

51. முசுகுந்தன் முக்தி 

52. ரண சோர கிருஷ்ணர் 

53. கிருஷ்ணர் ருக்மிணியைக் கடத்திச் செல்கிறார் 

54. துவாரகையில் திருமணம் 

55. பிரத்யும்னன் பிறக்கிறான் 

56. சியமந்தக மணியின் கதை 

57. ஸத்ராஜித் , ஸததன்வன் வதம் 

58. ஐந்து ராணியரை கிருஷ்ணர் மணக்கிறார் 

59. பௌமாசுர முக்தி 

60. கிருஷ்ணரும் ருக்மிணியும் உரையாடுகிறார்கள் 

61. கிருஷ்ணரின் வம்சாவளி 

62. உஷா , அநிருத்தன் சந்திப்பு 

63. கிருஷ்ண பானாசுர வதம் 

64. நிருக ராஜனின் கதை 

65. பலராமனின் விருந்தாவன விஜயம் 

66. பௌண்ட்ருகன் , காசி ராஜனின் முக்தி 

67. த்விவிதாவின் முக்தி 

68. சாம்பனின் திருமணம் 

69. கிருஷ்ணரின் மாளிகைகளுக்கு நாரத முனி செல்கிறார் 

70. கிருஷ்ணரின் தினசரி நடவடிக்கைகள் 

71. இந்திரப்ரஸ்த நகரில் ஸ்ரீ கிருஷ்ணர் 

72. ஜராசந்தன் முக்தி 

73. கிருஷ்ணர் அஸ்தினாபுரம் திரும்புகிறார் 

74. சிசுபாலன் முக்தி 

75. ராஜஸூய யாக முடிவில் துரியோதனன் அவமானம் அடைந்ததாக எண்ணியது ஏன்  

76. யது வம்சத்தினருடன் சால்வன் போர் 

77. சால்வன் முக்தி 

78. தந்தவக்த்ர , விதூரத மற்றும் ரோமஹர்ஷன வாதம் 

79. பல்வலன் முக்தியும் , பலராமரின் யாத்திரையும் 

80. கிருஷ்ணர் சுதாமா சந்திப்பு  

81. சுதாமர் கிருஷ்ணரின் ஆசியைப் பெறுகிறார் 

82. கிருஷ்ணரும் பலராமரும் விருந்தாவான வாசிகளைச் சந்தித்தல்  

83. கிருஷ்ணரின் ராணியரை த்ரௌபதி சந்தித்தல் 

84. வசுதேவர் நடத்திய யாகங்கள் 

85. வசுதேவருக்கு ஆன்மிக அறிவுரை 

86. சுபத்ரா பஹரணம் 

87. வேதங்களின் பிரார்த்தனைகள் 

88. சிவபெருமான் விடுவிக்கப்படுகிறார் 

89. கிருஷ்ணரின் அதியற்புத சக்தி 

90. கிருஷ்ண லீலைகளின் சுருக்கம் 


































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக