ஞாயிறு, 17 ஜூன், 2012

குண்டலினி சக்தி என்பது என்ன?

ராதே கிருஷ்ணா 17-06-2012


குண்டலினி சக்தி என்பது என்ன?





ஜெகத்தின் மூலதார சக்தியை குண்டலினி சக்தி எனக் குறிப்பிடுகின்றார்கள். இந்த மூலதார குண்டலினி சக்தி ஒவ்வொரு மனிதனிடமும் மறைவான நிலையில் அமைந்திருக்கிறது. இந்த குண்டலினி சக்தி உடலில் பொருத்தியிருக்கும் இடத்தை முயற்சியின் அடிப்படையில் கண்டுபிடித்து இயக்கம் பெறச் செய்யும் போது மனிதன் அசாதாரண சாதனைகளைச் செய்ய முடியும் என்பர்.
குண்டலினி சக்தி மனித உடலில் குடி கொண்டிருக்கும் இடம் முதுகெலும்பின் முனையாகும். மூலாதாரம் என்று இதற்குப் பெயர். இந்த சக்தி சாதாரணமாக உறக்க நிலையில் இருக்கும். ஒரு யோகி பிராணாயாமம் போன்ற யோக முயற்சிகளின் மூலம் இந்த சக்தியை எழுப்புவார். இந்தச் சமயத்தில் ஒருமைப்பட்ட மனக்கண்களின் மூலம்தான் வழிபடக்கூடிய தெய்வத்தின் திரு உருவத்தை மிகவும் தெளிவாக தரிசிக்க இயலும். இவ்வாறு எழுப்பப்பட்ட குண்டலினி சக்தி இறுதியில் அனல் கொழுந்து வடிவம் பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக