Guruji

ஞாயிறு, 11 ஜூன், 2017

நெற்றியில் திருநீறு அணிவது ஏன்?

ராதே கிருஷ்ணா 11-06-2017



Gautham Iyengar
11 hrs
🌻🌻 நெற்றியில் திருநீறு அணிவது ஏன்?
நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூ சுகிறார்கள்.
திருநீற்றின் மகிமை: ஒருநாள் துர்வாச முனிவர் தன் காலை வேளை அனுஷ்டானங்களை முடித்து, ஈஸ்வரனை தியானித்து நெற்றியில் திருநீறு அணிந்து பித்ரு லோகம் புறப்பட்டார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்ட வானவர்கள் மரியாதை நிமித்தம் அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாசர் செல்லும் வழியில் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. இவ்வளவு பெரிய கிணறை நாம் பார்த்ததே இல்லையே என்கிற சிந்தனையுடன் அதனுள் ஒரு கணம் கண்களைச் சுருக்கி எட்டிப் பார்த்து விட்டு, மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அந்தப் பெரிய கிணற்றினுள் நரகத்தின் ஒரு பகுதி இயங்கிக் கொண்டிருந்தது. கடும் தீயும், அமில மழையும், பாம்பு - தேள் போன்ற கடும் விஷ ஜந்துக்களும் அங்கே ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தன. பூ லோகத்தில் பாவம் செய்த பலரும் அங்கே வதைபட்டுக் கொண்டிருந்தார்கள். சொல்லமுடியாத துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று அங்கே ஒரே ஆச்சரியம் நிலவியது. துர்வாச முனிவர் குனிந்து அங்கே பார்த்துவிட்டு நகர்ந்த மறுகணமே அங்கே நிலைமை தலைகீழாக மாறியது. அந்த நரகத்தில் அதிசயம் நடந்தது. பாம்புகளும் தேள்களும் மலர் மாலைகள் ஆயின. அமில மழையானது ஆனந்தம் தரும் நிஜ மழை ஆனது. சுட்டெரிக்கும் தீ, இதமான தென்றலாக அங்குள்ளோரை வருடியது. நரகம் முழுக்க சுகந்த நறுமணம் வீசியது. அங்கே இருந்த பாவ ஆத்மாக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். முகத்தில் பிரகாசம் வீசியது. இந்த நரகத்தைக் காவல் காத்துக் கொண்டிருந்த கிங்கரர்கள் பயந்து ÷ பாய் எமனிடம் ஓடினார்கள். திடீரென்று சொர்க்கமாக மாறிப் போன நரகம் பற்றிச் சொன்னார்கள். அதிர்ந்து போன எமனும் வந்து பார்த்து அதிசயி த்தான். தர்ம சாஸ்திர நெறிகள் ஒருவேளை நமக்குத் தெரியாமல் மாற்றப்பட்டு விட்டனவா? அல்லல் பட வேண்டியவர்கள் ஆனந்தமாகத் திரிகிறார் ளே? என்று பதற்றத்துடன் இந்திரனிடம் ஓடினான். வந்து பார்த்த இந்திரனுக்கும் புரியவில்லை. தேவாதி தேவர்கள் எவருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை. எனவே, எல்லோரும் சேர்ந்து கொண்டு சர்வேஸ்வரனிடம் போனார்கள். சிரித்தார் ஈசன். தன் நெற்றியைக் காட்டி, இந்தத் திருநீற்றை அகார, உகார, மகார (மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல்) விரல்களால் எடுத்து நெற்றி நிறைய திரிபுரண்டரமாகவே (மூன்று கோடுகளாக) அணிய வேண்டும். இதுதான் முறை. அகாரம் என்பது பிரம்மனையும், உகாரம் விஷ்ணுவையும், மகாரம் என்னையும் குறிக்கின்றன. எனவே சாஸ்திர நெறிப்படி திருநீறு அணிந்த தவசீலரான துர்வாசர் பித்ரு லோகக் கிணற்றைக் குனிந்து பார்க்கும்போது அவரது நெற்றியில் இருந்து ஒரு சிறு துளி தி ருநீறு உள்ளே விழுந்து விட்டது. அதனால்தான், சொர்க்கமாக மாறிப் போனது என்றாராம் சர்வேஸ்வரன். பார்த்தீர்களா திருநீற்றின் மகிமையை! ஒரு சிறிதளவு திருநீறு, பாவர்கள் மீது பட்டதால் புண்ணியம் செய்தவர்கள் ஆகிப் போனார்கள்
Image may contain: people standing




இடுகையிட்டது Deiveegam நேரம் 9:04 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2023 (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2020 (12)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  ஜனவரி (8)
  • ►  2019 (51)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (12)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூன் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  ஜனவரி (13)
  • ►  2018 (51)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (12)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  ஜனவரி (12)
  • ▼  2017 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (9)
    • ►  செப்டம்பர் (15)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (4)
    • ▼  ஜூன் (26)
      • மெய்யனா? பொய்யனா?
      • கர்ணன் பூர்வ ஜென்மம்
      • மஹாபாரதத்தின்படி வம்சங்கள் வரலாறு
      • “Navavidha Bhakti”– the 9 forms of devotion to at...
      • 1000 Names of Lord Vishnu
      • மஹாபாரதம்
      • லக்ஷ்மி தேவி
      • ஸ்ரீ ரங்க கோபுர விமானத்தின் சிறப்பு
      • Brahmanandam
      • பார்த்த சாரதி கோவில்.
      • ராமன் - சீதை திருமணம்
      • மஹா பாரதம் - குருஷேத்ரம்
      • சீதாப்பிராட்டி சிறையில்
      • ஸ்ரீ பாஷ்யம்
      • முருகனின் 16 வகை கோலங்கள்
      • ஷஷ்டியப்த_பூர்த்தி
      • நெற்றியில் திருநீறு அணிவது ஏன்?
      • குறிப்புகள்
      • இசைஞானி. இளையராஜா.
      • Lekha Aalok Dave
      • Madhwa Part - 2
      • Madhwa Part - 1
      • ஜனாதிபதி தேர்தல் எப்படி?
      • Mahabharata Family Tree Chart
      • 100 Kautavas
      • திருமாங்கல்யம்- ஓர்வேண்டுகோள்
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2016 (87)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (16)
  • ►  2015 (351)
    • ►  டிசம்பர் (40)
    • ►  நவம்பர் (25)
    • ►  அக்டோபர் (42)
    • ►  செப்டம்பர் (50)
    • ►  ஆகஸ்ட் (29)
    • ►  ஜூலை (30)
    • ►  ஜூன் (30)
    • ►  மே (29)
    • ►  ஏப்ரல் (52)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (8)
  • ►  2014 (367)
    • ►  டிசம்பர் (17)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (29)
    • ►  செப்டம்பர் (31)
    • ►  ஆகஸ்ட் (25)
    • ►  ஜூலை (34)
    • ►  ஜூன் (32)
    • ►  மே (48)
    • ►  ஏப்ரல் (27)
    • ►  மார்ச் (30)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (52)
  • ►  2013 (382)
    • ►  டிசம்பர் (85)
    • ►  நவம்பர் (21)
    • ►  அக்டோபர் (76)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (23)
    • ►  ஜூன் (30)
    • ►  மே (37)
    • ►  ஏப்ரல் (34)
    • ►  மார்ச் (35)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (17)
  • ►  2012 (164)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (10)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (7)
    • ►  ஜூலை (18)
    • ►  ஜூன் (47)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (32)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2011 (207)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (191)

என்னைப் பற்றி

Deiveegam
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.