செவ்வாய், 20 ஜூன், 2017

கர்ணன் பூர்வ ஜென்மம்

ராதே கிருஷ்ணா 20-06-2017



கர்ணன் பூர்வ ஜென்மம்

Srinivasan Nambi
இன்று நாம் வாழும் வாழ்க்கைக்கும் நடக்கும் நல்லது கெட்டதுக்கும் பூர்வஜென்ம வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டா?
உண்டு என்றால் நம்புவீர்களா?
இந்த மகாபாரத கர்ணனின் கதையை கேளுங்கள் புரியும்.
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.
கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான். அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்! மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.
பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.
தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான்.
பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.
எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது.
அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.
இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?
அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர்.
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.
ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.
நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் ஸஹஸ்ர கவசனென்னும் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார்.
இப்படிப் பல வருடங்கள் இருவரும் மாறி மாறி 12வருடம் தவமும் 12வருடம் போரும் புரிந்து விடா முயற்சி செய்து ஸஹஸரகவசத்தில் 999 கவசங்களை ஒவ்வொன்றாக அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.
எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ரகவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.
அந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு குத்தி மைந்தனாக பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!
இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.
கர்ணனை அழிப்பதாக அரஜுன்ன் வாயினால் சபதம் செய்ய வைத்தார்.
12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். அந்த தவத்தின் முலம் மீதி இருந்த ஒரு கவசத்தையும் இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.
கவசம் நீங்கியதால்தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.
அதேபோல் நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் நாம் திகைக்கிறோம்.
நிணைத்து பாருங்கள் நமது இந்த ஜென்ம வாழ்க்கைக்கு காரணம் பூர்வ ஜன்மக் நமது கர்மாக்களே ஆகும்.
கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.
எனவே நல்லதே இந்த பிறவியில் இயன்றவரை செய்து அடுத்த பிறவியில் இதைவிட நல்ல ஜென்மமெடுப்போம் அல்லது பிறவாநிலையை எடுப்போம் . என்ன முயலுவீர்கள்தானே?
நானும் முயன்று வருகிறேன் சங்கடமாகவே உள்ளது நிறையபேர் கேவலமாக பேசுவதும் நிணைப்பதும் ஏன் என் முன்புறம் என்னை புகழ்ந்து எனது பின்புறம் இகழ்வதும் தெரிந்தே நிறைய நபர்களிடம் சிரித்து பழகுகிறேன் முடிந்தவரை அவர்களுக்கு நல்லது செய்ய முயற்ச்சிப்பேன் அல்லது அவர்கள் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்
நீங்களும் முயலுங்கள் இந்த பிறவியை இத்தோடு நிறுத்த முடியும்
ஜெய் ஶ்ரீராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக