சனி, 19 டிசம்பர், 2015

வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…

ராதே கிருஷ்ணா 19-12-2015








வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!


#நெஞ்சு_எரிச்சல்_போகணுமா?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
#சதை_குறையணுமா?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
#காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?
எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)
#உடம்பு_வலிக்கிறதா?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
#கால்_பாதங்கள்_வலிக்கிறதா?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
#மூக்கு_அடைப்பா?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
#வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
#ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
#தரையை_துடைக்கும் போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
#திடீரென்று_கடுமையான_தலை_வலியா?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
#சுறுசுறுப்புக்கு_சுக்கு_வெந்நீர்
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.
 






Kiruba HaranFollow
இன்று மார்கழி ஆரம்பம்
சகோதரிகளே
மார்கழி கோலம் மகத்துவம் பற்றி் தெரிந்து கொள்ளுங்களேன்!
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது.
அந்த வரிசையில் மார்கழி மாதம் என்றால் அழகிய கோலம் தான் சிறப்பு.
இந்த மாதத்தில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் விதவிதமான கோலங்கள் அணி வகுத்து பார்க்க அழகாய் காட்சியளிக்கும்.
வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளன.
ஆனால் மார்கழி மாதத்தில் மட்டும்
ஏன் கோலமிட்டு
வீட்டை சிறப்பு செய்கிறார்கள் ,
மற்ற மாதங்களுக்கு இந்த சிறப்பு இல்லாதது ஏன்? என்பது பற்றி பெண்கள் சிலரிடம் கேட்டோம்.
“மார்கழி மாதம் முழுவதும் பீடை நாட்கள் (கெட்ட நாள்) என்பார்கள்.
இந்த மாதத்தில் எந்த சுப காரியங்களும் நடைபெறாது.
ஆதலால்,
இந்த பீடை நாட்கள் நீங்குவதற்க்காக அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு கள் மற்றும் விளக்கேற்றி வழிபடுவார்கள். வீடுகளில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடவேண் டும்.
அதிகாலை நேரங்களில் வீட்டில் விளக்கு எரியவேண்டும்.
வீடு முழுவதும் பிரகாசமாக காட்சியளிக்க வேண்டும்.
அதிகாலை 4 மணிக்கு வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடவேண்டும்.
அதில் சில சம்பிர தாயங்கள் உள்ளன.
வாசலில் ஒரு திசையை நோக்கி தண்ணீர் தெளிக்கும் போது, பாத்திரத்தில் உள்ள நீர் தீர்ந்த பிறகு தான், மறுதிசையில் மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து தெளிக்க வேண்டும்.
குறை நீருடன் மறுதிசையில் தண்ணீர் தெளிக்கக் கூடாது.
இந்த சம்பிரதாயத்தை இன்றும் நாங்கள் கடைபிடிக்கிறோம்” என்றார் ஒரு பெண்மணி.
மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கோலமிட்டிருப்பார்கள்.
கோலம் போட்டு முடித் ததும், அந்த கோலத்தின் நடுவில் சிறிதளவு மாட்டுச்சாணம் வைத்து, அதில் பரங்கிப் பூ வைக்க வேண்டும்.
மார்கழி மாசத்துல , வீட்டு வாசல்ல கோலம் போட்டு, நடுவில்சாணம் வச்சு , அதில, பறங்கி பூவை வைக்கறது
நம்ம வழக்கம்.
அது ஏன்னு தெரியுமா?
மஞ்சள் நிறத்துல பறங்கிப்பூ இருக்கறதால , அதை வைக்குற வீட்ல , மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும்ங்கறது நம்பிக்கை.
பூமலர்ந்து இருக்குறதால அது மாதிரி , வீட்ல இருக்குறவங்க
சந்தோஷமா இருப்பாங்க .
மாட்டுச் சாணம் கிருமி நாசினிங்கறதால , வீட்ல இருக்குறவங்களுக்குஆரோக்கியம் தரும்.
கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” சொல்றாரு.
அப்படீன்னு அத ஏன் நல்ல மாசம் இல்ல பீடை மாசம்னு சொல்றோம்னு கேக்கலாம்.
அது பீடை மாசம் இல்ல…
பீடுடைய மாசம் (அதாவது செல்வம் நிறைந்த மாசம்) என்பது தான் கொஞ்சம் கொஞ்சமாமருவி பீடை மாசம்னு ஆகிடுச்சாம்.
நம்மோட சம்பிரதாயப்படி, ஆடி, புரட்டாசி, மார்கழி மாசங்கள்ல கல்யாணம் வேற பல சுப நிகழ்ச்சிகள் நடத்துறது இல்ல.
காரணம் என்னனா இந்த மாசம் எல்லாம் முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்குனு ஒதுக்கப்படவேண்டிய மாசங்கலாம் .
அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்ததாம் .
மார்கழி மாசங்கறது தேவர்களது ஒரு நாளுல விடியற்காலை பொழுதாம்.
விடியற்காலை அப்படீனாலே மங்களகரமானது.
அதனாலதான் மாசம் முழுசும் இறை வழிபாட்டுக்குனே பெரியோர்கள் ஒதுக்கி வச்சு இருக்காங்கலாம்.
இந்த மாசத்துல, சுபநிகழ்ச்சி நடத்தினா , வழிபாடு பாதிக்கும்கறதால ,இந்த மாசத்துல விசேஷம் எதையும் நடத்த மாட்டாங்களாம் .
மார்கழி மாசத்த , “மார்கசீர்ஷம்” அப்படீன்னு வட மொழியில் சொல்வாங்களாம். “மார்கம்” அப்படீனா வழி, “சீர்ஷம்” அப்படீனா உயர்ந்த. “வழிகளுக்குள் தலைசிறந்தது” அப்படீங்கறது அர்த்தமாம்.
வருஷத்துல மத்த நாட்கள்ல கோவில்களுக்கு போக முடியாதவங்க இந்த மார்கழி மாசத்துல மட்டும் கோவிலுக்கு போனாலே வருஷம் முழுசும் கோவிலுக்கு போன பலன் கிடைக்குமாம்.
மார்கழி மாசத்துல அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் போகனும்னு சொல்றதுக்கு ஒரு
அறிவியல் காரணமும் இருக்கு .
மார்கழி மாதத்தில் அதிகாலைல
சுத்தமான ஓசோன் வாயுவை சுவாசிக்க முடியும் .
இது புத்துணர்ச்சி தரும்.
மார்கழி மாச காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் ரொம்ப நல்லது.
கோலம் போடறதால பாட்டு பாட்றதால மனசு ஒருமை படுத்த முடியும் .
இம்மாதத்தில் அனைவர் வீட்டு வாசலிலும் அழகிய கோலங்களும், தீபங்களும் அணிவகுத்து அழகுற காட்சியளிக்கின்றன.
வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைத்தால் வீட்டுக்கு நல்லது என்கிறார்கள்.
அரிசி மாவால கோலம் போடறதால எறும்பு,குருவி மாதிரி ஜீவராசிகள் அத சாப்பிட்டு வாழும்.
புண்ணியமும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக