சனி, 23 மார்ச், 2013

750 வாரங்களாக தொடர்ந்து நடைபெறும் விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம்!

ராதே கிருஷ்ணா 23-03-2013

750 வாரங்களாக தொடர்ந்து நடைபெறும் விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம்!


முதல் பக்கம் » தகவல்கள்
750 வாரங்களாக தொடர்ந்து நடைபெறும் விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம்!
மார்ச் 23,2013
அ-
+
Temple images
இந்த இயந்திர உலகில் எந்த ஒரு செயலையும் பிரதிபலன் பார்க்காமல் செய்வது கடினம். அதிலும் இறைவழிபாட்டு செயலான ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணத்தை 750 வாரங்களாக சனிக்கிழமை தோறும் மாலை 6 மணியளவில்,  தொடர்ந்து நடத்துவது என்பது ஒரு இமாலய சாதனை ஆகும். அமைதியாக நடந்து கொண்டிருக்கும் இந்த பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலன் பெற விரும்புவர்கள்  தமிழ்நாடு பிராமணர் சங்கம், ஜெய்ஹிந்த்புரம் கிளை, இராமையா 6வது குறுக்குத் தெரு, மதுரை – 625 011. மொபைல் +91 98949 88005  என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாரம் 750வது வாரம் என்பதால் இன்று மாலை 5.15 மணிக்கே பாராயணம் ஆரம்பமாகி விடும்.
விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயண பலன்: இந்த கலியுகத்தில் பிரபஞ்சம் முழுவதும் பரவி எங்கும் நீக்கமற நிறைந்து அருளும் பகவானை துதிக்க பல ஸ்தோத்திரங்களும், பாடல்களும் நம்மிடையே உள்ளன.  அதில் பரம ஞானியான பீஷ்மாச்சாரியார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன்னிலையில் நமக்கு அளித்த ஆயிரம் நாமமே ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம்.  இதற்கு ஆதி சங்கரர் முதன் முதலில்; அம்பிகையின் அருளால் ஸ்ரீ பாஷ்யம் அருளினார். அப்படிப்பட்ட பலவித மகான்கள் முன்னோர்கள் துதித்த மிகப் புண்ணியம் தரக்கூடிய ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ர நாமத்தை இன்றும் இவ்வுலகம் உய்வதற்கும், லோகம் இன்புறுவதற்கும், சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படிப்பட்ட உன்னதமான, பவித்ரமான ஸகஸ்ர நாமத்தை, சொல்லுவதால் வாழ்கையில் சுபிட்ஷம், மகாலெட்சுமியின் அருட்கடாஷம் கிடைக்கும். நோயுற்ற உடல் குணமாகும்.  இன்றும் வேதம் கற்றுக்கொள்ளும் வித்தியார்த்திகள் தினமும் காலையும் மாலையும் சொல்லுவது இச்சுலோகமே.  இச்சுலோகத்தை இல்லத்தில் காலை மற்றும் மாலையில் இரண்டு வேலை பாராயணம் செய்தால் மகாலெட்சுமினுடைய கிருபை பரிபூர்ணமாக கிடைக்கும்.  இப்படிப்பட்ட இச்சுலேகத்தை பார்வதி தேவி தினமும் பாராயணம் செய்வதாக புராணங்கள் சொல்கின்றன.  அத்தேவி ஒருநாள் காலையில் இச்சுலோகம் சொல்ல கிளம்பும் போது ஈசன் படி அளக்க அம்பிகையை அழைக்கிறார்.  அப்பொழுது தேவி நான் பாராயணம் செய்யவேண்டும் என்று கேட்க, அதற்கு ஈசன் மூன்று முறை கூறினால்  விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் கூறிய பலன் கிடைக்க கூடிய  பின்வரும் ஸ்லோகத்தை சொல்கிறார்.
“ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே”
இதைச் சொன்னால் ஸகஸ்ர நாமம் முழுவதும் சொன்ன பலன் கிடைக்கும் என்று ஈசனே நமக்கு அருளியிருக்கிறார்.  இப்படிப்பட்ட பவித்ரமான ஸ்லோகத்தை, நாமும் துதித்து வாழ்கையிலே மேன்மை பெற்று இன்புறுவோம்.














































முதல் பக்கம் » தகவல்கள்
107 வருட பாரம்பரிய மிக்க கேட்டவரம்பாளையம் பஜனை!
மார்ச் 23,2013
அ-
+
Temple images
கேட்டவரம்பாளையம் என்றவுடன் கிராமத்தினரின் பஜனைச் சிறப்புதான் உடனடியாக நினைவுக்கு வரும் என்று காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் அவர்கள் கூறி இருக்கிறார்கள். கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததி பெரும் பெருமை வாயந்தது என்பதையும், இந்தியா முழுவதும் வாழ்கின்ற பல பகுதிகளைச் சார்ந்த மக்கள் அந்தப் பஜனையில் எத்தனைய ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜகத்குரு அவர்களின் மேலேயுள்ள வாகங்கள் குறிப்பாகச் சுட்டுடக் காட்டுகின்றன.  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் வீரளூர்செல்லும் பாதையில் கேட்டவரம்பாளையம் என்ற அழகிய கிராமம் உள்ளது.அங்கு ஆந்தணர்கள் வாழும் அக்கிரகார வீதியில் ஸ்ரீராம பஜனை மந்திரம் இருக்கிறது. 1907 ஆம்ஆண்டில் அந்த பஜவை மந்திரம் ஓர் எளிய அளவில் தொடங்கப் பெற்றது. ஸ்ரீராமர் திருவுருப்படம் ஒரு சிறிய அமைப்பில் எழுந்தருளச் செய்யப் பெற்றது.  . ஸ்ரீராமர் திருவுருப்படம் ஒரு சிறிய அமைப்பில் எழுந்தருளச் செய்யப் பெற்றது. தாம்ஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஸ்ரீஜானகிராம தீக்ஷிதர் அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தினசரி பஜைகளையும் இதர சமயச் சடங்குகளையும் அங்கு செய்து வந்தார்.
அந்த இடத்தை அவரே சுத்தம் செய்து அலங்கரித்து ஸ்ரீராம நாம பஜனைப் பாடல்களைப் பாடுவார் என்று கூறப்படுகி. பெரியவர்கள் ஸ்ரீசெங்கல்ராயர் அவர்களது முயற்சி தற்போது அந்த பஜனை மந்திரத்தில் கம்பீரமாக அமர்ந்து உள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திவுருவப்பாடும் அமைக்கப் பெற்றது . நாளாவட்டத்தில் அங்கு முறையான பஜனை நடைபெறுவதற்கு அந்தக் கிராமத்தின்  சில பெரியவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள்.  அவர்களில் ஒழுக்கை ஸ்ரீராமஸ்வாமி ஐயர் ஒருவர் .
ஆரம்பக் கட்டத்தில் ,ஸ்ரீராமநவமி உற்சவம் அக்கிரகாரவீதியில் உள்ள ஒவ்வொரு இல்லத்தின் நிகழ்ச்சியாக ஒவ்வொரு நாள் நடத்தப்பட்டது. பிறகு கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததி என்று தெளிவாக உருவாக்கப்பட்டது மணியம் வேங்கடரமண அய்யர் ராமஸ்வாமி திக்ஷிதர் ராமநாத ஐயர் ரங்கநாத ஐயர், ராமசேஷ ஐயர், ரங்க ஐயங்கார், சீனு ஐயங்கார் நாராயண ஐயங்கார் சௌந்திரராஜ ஐயங்கார் கே.ஆர் சதாசிவ அய்யர் முதலிய பெருமக்கள் இந்தத் தனித்துவம் வாய்ந்த கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததியை உருவாக்கியவர்கள் இந்தப் பத்ததி இன்று வரை கவனமாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமி உற்சவம் பத்துத் தினங்கள் இங்கு நடைபெறுகின்றன. அந்தப் பத்து நாட்களிலும் அங்கு வருகின்ற பாகவாதர்கள் பக்தர்கள் அனைவருக்கும் அருமையான உணவு வழங்கப்படுவதும் அவர்கள் தங்குவதற்கு உரிய வசதி அன்புடன் அளிக்கப்படுவதும் அந்தக் கிராம மக்களின் சிறப்பு இயல்புகளின் விளைவுகள்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்ரவதி சங்கராசாரிய சுவாமிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீடீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராசாரிய சுவாமிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய மஹா மஹனீயர்கள்  கேட்டவரம்பாளையம் கிராமத்துக்கு எழுத்தருளி அதனை மேலும் புனிதப்படுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீஅச்சுததாசர் ஸ்ரீ அம்முர் சுவாமிகள் ஆகிய அருளாளர்களும் அங்கு விஜயம் செய்திருக்கிறார்கள் ஸ்ரீஅம்மூர் சுவாமிகள்அங்கு ஸ்ரீராமநவமி உற்சாகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடஜன் பங்கு கொண்டவர். கேட்டவரம் பாளையம் கிராமத்துக்கு அருகில் சிறப்புமிக்க பர்வதமலை கம்பீரளமாகக் காட்சி தருகிறது மூலிகைகளக் அடர்ப்த அப்தப் புனித மலையில் பல சித்த பருஷர்களும் ஞானிகளும் இப்போதும் வாழ்கிறார்கள். கேட்டவரம்பாளையம்யத்திற்கு அருகில் சாலமேடு என்ற சிற்றூரில் ஸ்ரீ அலர்மேல் மங்கைத் தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வே÷ஞூகடடேசப் பெருமாள் கோயில் ஓர் அழகிய சிறிய மலை மீது உள்ளது. அது பொதுவாக மலைக்கோயில் என்று அழைக்கப்படுகிறது அங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாள் கேட்ட வரவும் அளிக்கக் கூடியவர் அங்கு சென்று வழிபடுவதற்கு வெகு தொலைவில் இருந்தும் மக்கள் திரளாக வருகிறார்கள்
கேட்டவரம்பாளையம் கிராமத்தில் இரண்டு அமைதியான ஆலயங்கள் உள்ளன. ஒன்று ஸ்ரீகாசி விசுவநாதர் கோயில் ; மற்றொன்று ஸ்ரீ பெருமாள் கோயில். இரண்டும் புனிதம் வாய்ந்தவை; வந்து வழிபடுவோருக்கு அருள் திருபவை திருவண்ணாமலை வேலூர் ஆகிய இரு மாவட்டங்களின்சமயப்பெருமைக்கு ஒளி மிகுந்த ஒரு திலகமாக கேட்டவரம்பாளையம் கிராமமும் கேட்டவரம்பாளையம் பஜனை பத்ததியும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கேட்டவரம்பாளையம் ஸ்ரீராம பஜனை மந்திரத்தின் சார்பில் ஸ்ரீராமநவமி மஹோத்ஸவம் வருகிற 19.4.2013 முதல் 28.4.2013 வரை நடைபெறுகிறது. இதில் 26.4.13 சீதா கல்யாணமும், 27.4.13 ஸ்ரீராமர் பட்டாபிஷேகமும், 28.4.13 ஹனுமத் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.
தொடர்புக்கு:
ஸ்ரீராம பஜனை மந்திரம் டிரஸ்ட்,
கேட்டவரம்பாளையம், லக்ஷிமி சுதரா, 36, 3வது தெரு, அபிராமபுரம், சென்னை-18, போன்- 044 4553 4041







































































முதல் பக்கம் » தகவல்கள்
சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்!
மார்ச் 23,2013
அ-
+
Temple images
திருநெல்வேலி: திருநெல்வேலி, களக்காட்டில் கிபி 11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்டசத்தியவாகீஸ்வரர் -கோமதியம்மன் கோயில் உள்ளது. பிரசித்த பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் மட்டும், மூன்று நாட்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கோயிலின் கட்டட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது. நேற்று இறுதி நாளில் சூரிய ஒளி, சிவன் மீது விழுவதை தரிசிக்க பக்தர்கள் திரண்டனர். முதலில் கொடிமர மண்டபத்திலும் தொடர்ந்து கொலு மண்டபம், மணி மண்டபம் ஆகியவற்றை கடந்து சிவலிங்கத்தின் மீது வெளிச்ச கதிர்கள் விழுந்தன.























முதல் பக்கம் » தகவல்கள்
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழா!
மார்ச் 23,2013
அ-
+
Temple images
பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில், பங்குனி விழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நான்காம் நாளான நேற்று காலை, அம்மன் மகிஷாசூரமர்த்தனி அலங்காரத்துடன் வீதியுலா வந்தார். மாலை 5 மணிக்கு சின்னக்கடை தெருவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் காளி வேடமிட்டு, ஆடியும் வந்தனர். பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இரவில் அம்மன் ரிஷபவாகனத்தில் கோயிலை அடைந்தார். மார்ச் 27ல் காலை அக்னிச்சட்டியும், இரவு 8 மணிக்கு, மின்சார ரதத்தில் அம்மன் சர்வஅலங்காரத்தில் நான்கு ரதவீதிகளில் சுற்றி வருவார். மார்ச் 29 காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்துள்ளனர்.



























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக