வியாழன், 19 ஏப்ரல், 2012

யோகாசனம்

ராதே கிருஷ்ணா 20-04-2012

யோகாசனம்
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

1


யோகாசனம் ஒரு அறிமுகம்
temple
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ
குரு வணக்கம்:
குருவழியே ஆதி ஆதி
குருமொழியே ... மேலும்

temple

யோகாசன முறைகள்ஏப்ரல் 07,2011

பயிற்சிகளின் கால அளவு நேரம்
பிரார்த்தனை-  1 நிமிடம்
தயார் நிலை பயிற்சிகள்:
"உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்" 3 ... மேலும்


1

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



யோகாசனம் ஒரு அறிமுகம்!
ஏப்ரல் 05,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ
குரு வணக்கம்:
குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு
சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி
புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி
என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  யோகம் என்றால் இணைவித்தல், அதாவது, பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு, அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின் இன்னொரு அர்த்தமாகும்.
பதஞ்சலி யோக சூத்திரம்
காலங்காலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர் அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.
உலகில் 84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.
யோக சூத்திர அஷ்டாங்கங்கள் சுருக்கமான விளக்கம்
அஷ்டாங்கங்கள் என்றால் 8 பகுதிகள். அவை
1. யமம்; 2. நியமம்; 3. ஆசனம்; 4. பிராணாயாமம்; 5. பிரத்யாகாரம்; 6. தாரணம்; 7. தியானம்; 8. சமாதி
1. யமம்: யமம் என்றால் சுயக்கட்டுப்பாடு என்று பொருள். அக்கட்டுப்பாடுகளில் முக்கியமானவை அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவை.
அ) அஹிம்சை: (அ+ஹிம்சை) துன்பம்/வேதனை ஏற்படுத்தாதிருத்தல் என்று அர்த்தம்.
ஆ) சத்யம் (உண்மை): உண்மை என்பது நாம் அறிந்ததை, அறிந்தவாறு, அப்படியே தெரிவிப்பதுடன், உண்மை நிøலையை உணர்ந்து உண்ணையாக வாழ்வதை குறிக்கும்.
இ) அஸ்தேயம் :  தம்மிடம் இருப்பதை முழுமையாக தனக்காகவும், முடிந்தவரை  பிறருக்காகவும் பயன்படுத்துவது.
ஈ) பிரம்மசரியம் : தனியாகவோ, இல்லறத்தில் இருந்து கொண்டோ பரம்பொருளை அடைய நினைப்பது.
உ) அபரிக்ரஹம் : மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.
சிறு வயதிலிருந்து, படிப்படியாக, உணவை, படிப்பை, செயல்களைக் கூட்டுவது போல, சுயக் கட்டுப்பாடுகளையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மனக்கட்டுப்பாடு வசப்பட்டு, உடல் பாதுகாப்பு எளிதாவதால் தான், யமத்தை அடுத்து நியமம் வருகிறது.
2. நியமம்: நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள். இறைவனை அடைய விரும்புவர்களுக்கு சௌச்சம், சந்தோஷம், தமாஸ், ஸ்வாத்யாயம், ஈசுவரப்ராயதானம் என  5 நெறிமுறைகள் அவசியம்.
அ) சௌச்சம் என்றால் தூய்மை. இதில் எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை மிக அவசியம்.
ஆ) சந்தோஷம் : உள்ளத்தில் மனநிறைவு என்று பொருள். போதுமென்ற மனதே பொன் செய்யும்.
இ) தமாஸ் (தபஸ்) :  ஒரு செயல் (எண்ணம்) நிறைவடையும் வரை தொடர்ந்த முயற்சி என்று பொருள், சொல், செயல், சிந்தனை என்ற மூன்று நிலையிலும் இத்தொடர் முயற்சி இருக்க வேண்டும்.
ஈ) ஸ்வாத்யாவம் : தானே அறிவது; தன்னை அறிவது என்பன முக்கிய அர்த்தங்கள்.
உ) ஈசுவரப்ராயதானம்: எல்லாமே இறைவன் அருளால் தான் நிகழ்கிறது. அணு முதல் அண்டம் வரை, யாவுமே, கடவுள் என்ற ஏதோ ஒரு அளப்பரிய சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம் வளர வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, முதல் படியே, ஈசுவர அர்ப்பணம். ஈசுவரனுக்கு அர்ப்பணிக்கின்ற போக்கு வளர வளர, யோகத்தில் கடைசிப் படியான சமாதி. இறைவனுடன் ஐக்கியமாவது எளிதாகிவிடும்.
3. ஆசனம்: ஆசனம் என்றால் ஒரு நிலை என்று பொருள். அதாவது நம் உடலை, உடல் உறுப்புக்களை, ஒரு குறிப்பிட்ட வகையில், அசைவின்றி நிலைப்பித்த நிலை என்று பொருள். ஆனால் தேகத்தை சமச்சீர் நிலையில் வைத்திட தேகப் பயிற்சியும், அதைவிட நுண்ணிய ஆசனமும் தேவை ஆகும். ஆனால் ஆசனத்திற்கும், தேகப்பயிற்சிக்கும் வித்தியாசம் உள்ளது.
ஆசனம் - தேகப்பயிற்சி - ஒரு ஒப்புமை:
ஆசனம்      
1. ஒரு அசைவற்ற நிலை
2. சக்தியைத் தேக்கிடுவது
3. குறிப்பாக நரம்பு மண்டலத்தைப் பேணுவது
4. உடலுக்கும், மனதுக்கும் பணி ஓய்வு அளிப்பது
5. சுகம். அதாவது, ஆழ்ந்த உடல், மன மகிழ்வுக்கே முக்கியத்துவம்
6. திட உணவுப் பொருளை நம்பியிருப்பதைக் குறைப்பது
7. நோய்வாய்ப்பட்டிருப்போரும் சில ஆசனங்களைச் செய்யலாம்
8. தற்சார்வையும், தன்னுள் ஆழ்வதையும் வளர்ப்பது
9. இறையிடம் இட்டுச் செல்லும் நோக்கினால் உருவானது
10. உடலைக் குளிர்விக்கின்றது
11. உடல் உள் உறுப்புகளைப் பிசைந்து விட்டு இயங்க செய்கின்றது
12. நாடி நரம்புகளையும், தசைகளையும் ஒன்றாக இயக்குகிறது
13. இதயத்திற்கு நல்ல ஓய்வு
14. எவ்வயதினரும் செய்யலாம்
15. சக்தி உருவாகும்
16. மனஅழுத்தம் முற்றிலும் நீங்கும்
தேகப்பயிற்சி
1. அசைவிக்கும் செயல்பாடு
2. சக்தியைப் பயன்படுத்துவது
3.உடல் தசையமைப்பை மேம்படுத்துவது
4.உடலைப் பணிக்கு தயாரக்கிடுவது
5. கடுமையான பணிகளில் வலி,சிரமத்தை தாங்கிட முக்கியத்துவம்
6. மென்மேலும் திடஉணவை நம்பியிருக்கச் செய்கிறது.
7. நோய்வாய்ப்பட்டிருப்பின் செய்திட இயலாது
8. போட்டிமனப்பான்மையையும் அதனால் பிணக்கையும் கூட்டிடலாம்
9.இகவாழ்வில் நலம்பேணும் நோக்கு
10.உடலை உஷ்ணப்படுத்துகின்றது
11.வெளித்தோற்ற உறுப்புக்கு மட்டுமே பயன் தருவது
12.உடலின் புறத்தசைகளை மட்டுமே இயங்கச் செய்கின்றது
13.இதயத்தில் இரத்தஓட்டம் மிகுந்து வேகமாக துடிக்க வைக்கும்
14.முதியோர் செய்யக்கூடாது
15.சக்தி விரயமாகும்
16.மனஅழுத்தம் மிகும்
ஆசனம் பழகலில் நியதிகள் சில: நரம்புகள் பாதிக்கப்பட்ட நோயுடையவர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, நெடு நாட்களாக உடலில் ஏதாவது உறுப்புகளில் புண் மற்றும் தோலில் நோயுள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள், உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பயிற்சி ஆசிரியரின் ஆலோசனையின்றி எந்த ஆசனமும் செய்தல் கூடாது. குறிப்பாக புத்தகங்களை படித்து அதன்படி செய்து பழகுவதும் கூடாது. முதன் முதலாகப் பயிலும்போது, புத்தகங்களை அல்லது பிரசங்கங்களை மட்டும் ஆதாரமாக்கி ஆசனங்களைத் தாமாகச் செய்வதைத் தவிர்க்கவும். துவக்கத்தில் சில நாட்களாவது, அன்றாடம், சிறிது நேரமாயினும், யோகாசனம் கற்பிப்பவரிடம் பயில்வதே நல்லது. பின்னர், ஒவ்வொரு ஆசனம் செய்வதிலும் தேர்ச்சி பெறுவதற்கு வீட்டிலேயே, அவரவர்களே பழகிவிடலாம்.
ஆசனம் பயிலவும், பழகவும் காலை நேரமே உகந்தது. இயன்றவரை, மலஜலம் கழித்து, நீராடிய பின் செய்தல் மேன்மை, இரவுப் - பணி (நைட் - ஷிப்ட்) உடையவர்கள், கண்விழிப்பாலும், பணியாலும் ஒய்ந்து போயிருக்கையில், காலைக்குப் பதிலாக மாலை நேரம் செய்யலாம். எனினும், மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும் மாலை ஆசனம் பழகும் நேரத்துக்கும் 4 மணி நேரமாவது இடைவெளி அவசியம். வயிற்றில் ஜீரணிக்கப்பட வேண்டியது இருக்கையில் ஆசனம் செய்தல் கூடாது. காபி, டீ, திரவம் தானே என்று அவற்றை அருந்திய உடனும் ஆசனம் செய்தல் கூடாது. உண்மையில், திடமான சாப்பாடு, டிபனை விட, காபி, டீ போன்றவற்றையே ஜீரணிக்கப்பட அதிக நேரம் பிடிக்கின்றன.
காற்றோட்டமுள்ள இடம் நல்லது. கை, கால், மற்றும் உடலை நீட்டித் திருப்பி வளைப்பதைத் தடுக்காத தளர்வான உடையே நல்லது. இறுக்கமான உடையைத் தவிர்க்கவும். ஆசனங்களை, சற்று கனமான விரிப்பின் மேல் செய்வது நல்லது. கை, கால் உடம்பின் அசைவு மிக மிக மெதுவாகவே  இருக்க வேண்டும்.  தினமும் எல்லா ஆசனங்களையும் செய்வதை விட, அவசரமின்றி சிலவற்றை செய்வதே நல்லது.தலை, கழுத்துப்பகுதி, மார்பு, வயிறு, முதுகு, கைகால்கள் அனைத்து உடல் பகுதிகளும் உட்படுத்திய ஆசனமோ அல்லது குறிப்பிட்ட தனி உறுப்புகளுக்கோ பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது, எந்த ஒரு உடலுறுப்பும் விறைப்பின்றி, தளர்த்திய நிலையிலும் மென்மையாகவும், நிதானமாகவும், மிக இயல்பாகவும் இருக்கும்படி பழக வேண்டும். பரபரப்பில்லாத மனநிலைக்கு மாறிக்கொள்ள வேண்டும்.
யோக சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதாவில் சாத்வீக உணவு உண்பவர்கள் தான் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இயலும் என கூறுகிறது. சாத்வீக உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், சமைத்த காய்கறி கலவை, இலையுணவு, பால், தயிர், உலர்ந்த பழங்கள், தேன், அரிசி மற்றும் முளை கட்டிய தானிய உணவுகள் அடங்கும். எந்த ஆசனமாயினும், உடலை ஒருநிலைப்படுத்தும் போது, இரண்டு முக்கிய செய்திகளை மறந்திடக் கூடாது.
1. அசைவின்மை:  எவ்வளவு  நொடிகள் அல்லது நிமிடங்கள் உடல் உறுப்புக்கள் அசையாமல் இருக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு ஒரு ஆசனத்தில் இருந்தால் போதும். மிகச் சிரமப்பட்டு அசைவைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம். நாள் செல்லச் செல்ல அசைவு குறைந்து நின்று விடும்.
2. சுகம்: ஒவ்வொரு ஆசனத்திலும் நமக்கு சுகமான உணர்வு ஏற்பட வேண்டும். விழித்த நிலையிலேயே, சுகமான உறக்கத்தின் அனுபவத்தை, பயனை அளிப்பதாக ஆசனம் அமைய வேண்டும். ஆசனம் பழகும் முன் செய்யப்படும்; கபாலபாதி போன்ற மூச்சுப்பயிற்சிகள் வேறு; பிராணாயாமம் என்ற சுவாசக்கட்டுப்பாடு வேறு. நம் எண்ணப்படி, காற்றை இழுத்து, நிறுத்தி வெளியிடும் திறனை அளிக்கின்ற பிராணாயாமத்தை ஆசனங்களில், ஓரளவு தேர்ச்சி பெற்ற பின் பழகிவிடுவதே நல்லது.
பெண்களுக்கான சில செய்திகள் : ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர். இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும்உடைய ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும்.
பிராணயாமம்
பிராண சக்தி : பிராணயாமம் உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை.
பந்தங்கள் : பிராணனைத் தேவைப்படும் போது தேவைப்படும் இடத்தில் வைக்க, அல்லது தடுத்து மாற்றிடங்களுக்குப் பரவச் செய்ய பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முத்திரைகள் : பல முத்திரைகள் ஆசனங்களோடு இணைந்ததாகவே இருக்கின்றன. உடலையும், கை விரல்களையும் குறிப்பிட்ட வகையில் வடிவமைத்துக் கொண்டு இணைப்பது முத்திரையாகும். ஆசனங்கள், பந்தங்கள், முத்திரைகளை முறையே கற்காமல் நேரடியாக பிராணயாமத்திற்குச் செல்வது தவறாகும். உள நோயும், உடல் நோயும் வராதிருக்க மனம் அமைதியுற பிராணசக்தி, ஜீவசக்தி இத்தூல சரீரத்தில் பெருக, தொடர்ந்து ஜபம், தவம் செய்வோம். மன ஆற்றலுக்கு யோகமும் உடலாற்றலுக்கு ஆசனமும் எனப் புதிய இருவினை செய்வோம். இன்புறுவோம்.
அர்த்தமுள்ள யோகம் + ஆசனம்
யோகம்                                 ஆசனம்
உளவியல்                          உடலியல்
அகத்தூய்மை                   புறத்தூய்மை
புலன் கட்டுக்கோப்பு      உடலாற்றல் மேம்பாடு
மனஆற்றல்                       உட்சுரப்பிகள் உயிர்ப்பித்த
நினைவாற்றல்                 செயலாற்றல் துலக்கம்
உணர்வாற்றல்                  வளர்சிதைமாற்ற செயல்பாடு
தியானம்                                           பிராணயாமம்
ஆழ் மனத்தடவியல்                       உயிரியல்
நீள் நினைவு நோற்றல்                  உயிர் பரவல்
அறிவு வடிவு                                      உயிர்க்காற்றின் உலா
ஆத்மா தரிசனம்                               உயிர்க்காற்றின் உலா
ஆன்ம நிவேதனம்                            உலகுயிர் உடலுயிர் ஒற்றுமை
யோகாசனம் பழகுவதற்கு இங்கு சில முக்கிய ஆசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
இது தவிர இன்னும் பல ஆசனங்களையும் கற்றுப் பழகிட முயலவும். முக்கிய ஆசனங்கள் என்பது பொதுவாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் தேக நலன் பராமரிக்க, வேறு சில ஆசனங்கள் மேலும் முக்கியமாக, அவசியமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தத்தமக்கு உகந்ததை தவறாமல் செய்து நன்மை பெறவும். ஆசனங்கள் செய்யும் முன்பும், செய்திடும் போதும் அவசரப்படாது இருப்பது போலவே, செய்த பின்னரும் சில நிமிடங்களாவது அமைதியாக, வேறு பணியில் ஈடுபடாமல், இறைவனை தியானித்திருப்பது நல்லது. குறிப்பாக உடனே குளிப்பதையும், திரவ உணவையும் கூட தவிர்க்கவும்.
நன்றி:
டி.எஸ்.கிருஷ்ணன், ஸ்வார்த்தம் சத்சங்கம் மகரிஷி ஸ்ரீபதஞ்சலி யோக கேந்திரம்
அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை-625 003.
தொடர்புக்கு : +91-452-237 1909, 97895 98380, 90438 46451
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



யோகாசன முறைகள்
ஏப்ரல் 07,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
பயிற்சிகளின் கால அளவு நேரம்
பிரார்த்தனை-  1 நிமிடம்
தயார் நிலை பயிற்சிகள்:
"உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்" 3 நிமிடங்கள்
ஆசனங்கள்:
சூரிய நமஸ்காரம் - 4 நிமிடங்கள்
நின்று செய்யும் ஆசனங்கள்:
தாளாசனம் -  1/2 நிமிடம்
உட்கட்டாசனம் - 1 நிமிடம்
அர்த்த சக்ராசனம் - 1 நிமிடம்
பாத ஹஸ்தாசனம் - 1 நிமிடம்
அர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
திரிகோணாசனம் - 1 நிமிடம்
"பரி வருத்த திரிகோணாசனம் (இரு பக்கமும்)" - நிமிடம்
ஏக பாதாசனம் (இரு பக்கமும்) - 1நிமிடம்
அர்த்த சிராசனம் - 1 நிமிடம்
சக்ராசனம் - 1நிமிடம்
பர்வத ஆசனம் - 1 நிமிடம்
உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்:
வஜ்ராசனம் - 1 நிமிடம்
உஷ்த்ராசனம் - 1/2 நிமிடம்
வஜ்ர முத்ரா - 1 நிமிடம்
சுப்த வஜ்ராசனம் - 1/2 நிமிடம்
பஸ்சி மோத்தாசனம் - 1/2 நிமிடம்
சித்த பத்மாசனம் - 1 நிமிடம்
பர்வதாசனம் (மலை)-  1 நிமிடம்
யோக முத்ரா - 1 நிமிடம்
கோமுகாசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
வக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
அர்த்த மத்ஸ்யெந்திர ஆசனம் - 1 நிமிடம்
ஆகர்ண தனுராசனம் - 1 நிமிடம்
அமர்ந்த ஏகபாத ஆசனம் - 1 நிமிடம்
குதபாத ஆசனம் - 1 நிமிடம்
படுத்து செய்யும் ஆசனங்கள்:
புஜங்காசனம் - 1 நிமிடம்
சலபாசனம் - 1 நிமிடம்
தனுராசனம் - 1 நிமிடம்
உத்தன பாதாசனம் - 1/2 நிமிடம்
சர்வாங்கசனம் - 3 நிமிடங்கள்
மச்சாசனம் - 1 நிமிடம்
பவன முக்தாசனம் - 1 நிமிடம்
விபரீத கரணி - 1/2 நிமிடம்
ஹலாசனம் - 1 நிமிடம்
பத்ம சிங்காசனம் -1 நிமிடம்
கூர்மாசனம் - 1 நிமிடம்
அர்த்த சர்வாங்காசனம் - 1 நிமிடம்
யோக நித்ராசனம் - 1 நிமிடம்
பத்ம சயனாசம் - 1 நிமிடம்
புஜபாத பீடாசனம்- 1 நிமிடம்
உடல் தளர்வு பயிற்சி:
சாந்தியாசனம் - 10 நிமிடங்கள்
பிராணயாமம்
கபாலபதி - 1 நிமிடம்
சுகப் பிராணயாமம் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது சுற்றுகள்-  3 நிமிடங்கள்
நாடி சுத்தி ஒன்பது சுற்றுகள் - 3 நிமிடங்கள்
தியானம் -  10 நிமிடங்கள்
பிரார்த்தனை - 1 நிமிடம்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


முக்கிய ஆசனங்கள்
temple
எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம். சூரிய நமஸ்காரம் என்பது மந்திரமும் ஆசனமும் சேர்ந்த ஒரு அபூர்வ அதிசக்தி அளிக்கும் படைப்பாகும். ... மேலும்

temple

தாளாசனம்ஏப்ரல் 05,2011

மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்
மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான ... மேலும்

temple

உட்கட்டாசனம்ஏப்ரல் 05,2011

மனம் : முழங்கால்கள்
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : பிராண சக்தியினை உயர்த்தும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் ... மேலும்

temple
மனம் : முதுகெலும்பு
மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் ... மேலும்

temple

பத்ம ஹஸ்தாஸனம்ஏப்ரல் 05,2011

மனம் : வயிற்றுப்பகுதி, முதுகு எலும்பு, கால்கள்
மூச்சின் கவனம் : கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது ... மேலும்

temple
மனம் : இடுப்பு பகுதி
மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது ...மேலும்

temple

திரிகோணாசனம்ஏப்ரல் 06,2011

மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம்: குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: ... மேலும்

temple
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான ... மேலும்

temple

ஏக பாதாசனம்ஏப்ரல் 06,2011

மனம் : இரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்கள்
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் ... மேலும்

temple
விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோத்த ... மேலும்

temple

சக்ராசனம்ஏப்ரல் 06,2011

விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை ... மேலும்

temple

பர்வதாசனம்ஏப்ரல் 06,2011

தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண ... மேலும்

temple

வஜ்ராசனம்ஏப்ரல் 06,2011

மனம் : அடிவயிறு, தொடைப்பகுதி
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ... மேலும்

temple

உஷ்டிராசனம்ஏப்ரல் 06,2011

விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் ... மேலும்

temple
மனம் : வயிறுபகுதி, தலைப்பகுதி
மூச்சின் கவனம்: குனியும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்: ... மேலும்


2 3 Next >

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


முக்கிய ஆசனங்கள்
temple
மனம் : தொடைப்பகுதி
மூச்சின் கவனம்: சாயும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு, ... மேலும்

temple
மனம் : முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்
மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான ... மேலும்

temple
இந்த உலகில் என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமது உடல், மன இயக்கங்களில் சக்தியை ஒரு சேர அதிகரிக்க ரிஷிகள் கூறிய யோகாசன பயிற்சி முறைகளை தான் பின்பற்றுகிறோம். அவ்வழியில் ... மேலும்

temple
மனம் : தோள்கள்
மூச்சின் கவனம்: கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான ... மேலும்

temple

யோக முத்ராஏப்ரல் 06,2011

மனம் : முதுகெலும்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி
மூச்சின் கவனம் : குனியும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ... மேலும்

temple

கோமுகாசனம்ஏப்ரல் 06,2011

மனம் : தோள்கள், மார்பு புஜங்கள்
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் ... மேலும்

temple

வக்ராசனம்ஏப்ரல் 06,2011

மனம் : இடுப்பு முதுகெலும்பு
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலின் பக்கவாட்டைச் சுழற்றுவதற்கு சாத்தியமாகிறது. ... மேலும்

temple
விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமரவும். பின்பு வலது காலை உள்பக்கமாக மடித்து, உட்காரும் பாகத்தருகே பாதத்தை வைத்து கொள்ளவும். இடது காலை மேல்புறமாக மடித்து குத்திட்ட நிலையில் ...மேலும்

temple
காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆசனம் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.
செய்முறை : அமர்ந்த நிலையில் கை ... மேலும்

temple
முனிவர்கள் அருளிய ஆயிரக்கணக்கான ஆசன வகைகள் நடைமுறையில் இருந்தும் உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள் மட்டுமே அதிகமாக கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம் ... மேலும்

temple

குதபாத ஆசனம்ஏப்ரல் 06,2011

விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, பின் இரு பாதங்களையும் உள்பக்கமாக ஒட்டியபடி இணைக்கவும். இரு கைகளாலும் சேர்த்து கால்களை உள்பக்கமாக இழுத்து உடலை உயர்த்தி, கட்டை ... மேலும்

temple

புஜங்காசனம்ஏப்ரல் 06,2011

மனம் : முதுகெலும்பு, அடிவயிறு
மூச்சின் கவனம் : உடலை உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, உடலை இறக்கும்போது வெளிமூச்சு.
உடல் ... மேலும்

temple

சலபாசனம்ஏப்ரல் 06,2011

மனம் : முதுகெலும்பு, அடிவயிறு, கால்கள், தொடைகள்
மூச்சின் கவனம் : கால்கள் உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது ... மேலும்

temple

தனுராசனம்ஏப்ரல் 06,2011

மனம் : முதுகெலும்பு அடி வயிறு தொடைப்பகுதி
மூச்சின் கவனம் : கால்களையும் உடலையும் உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, விடும் போது ... மேலும்

temple

உத்தன பாதாசனம்ஏப்ரல் 06,2011

மனம் : அடி வயிறு
மூச்சின் கவனம் : கால்களைத் தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான ... மேலும்



 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



முக்கிய ஆசனங்கள்
temple

சர்வாங்காசனம்ஏப்ரல் 06,2011

மனம் : இருதோள்கள், கழுத்து
மூச்சின் கவனம் : ஆசனங்களின் தாயாக இந்த ஆசனம் திகழ்கிறது. நூறுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைக்கும். அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி. ... மேலும்

temple

மச்சாசனம்ஏப்ரல் 07,2011

மனம் : நுரையீரல்கள், மார்பு
மூச்சின் கவனம் : ஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம்.
உடல் ரீதியான பலன்கள் : ... மேலும்

temple
மனம் : வயிற்றுப்பகுதி
மூச்சின் கவனம் : வயிறு அழுத்தும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பாக மூச்சு, விடுபடும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான ... மேலும்

temple

விபரீத கரணிஏப்ரல் 07,2011

மனம் : இடுப்பு கழுத்து
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
பலன்கள்: சர்வாங்கசனத்தின் அனைத்துப் பலன்களும் இதில் கிட்டும். இரத்த அழுத்தம் உள்ளவர்களும் ... மேலும்

temple

கூர்மாசனம்ஏப்ரல் 07,2011

விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும், அவ்விடைவெளியில் ... மேலும்

temple
விரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து) படுத்து கை, கால்களைத் தளர்ந்த நிலையில் வைக்கவும், பின் கால்களை முட்டிவரை மடக்கி, இடுப்பை உயரத்தூக்கி (மேல்நோக்கி) கைகளால் இடுப்பைத் ... மேலும்

temple

யோக நித்ராசனம்ஏப்ரல் 07,2011

கைகால்களை தளர்த்திய நிலையில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரு கால்களை நீட்டிய நிலையில் மடித்து இரு பாதங்களை பின்னியவாறு தலையணையாக்கி அதன் மேல் தலையை கிடத்தி கழுத்தின் ... மேலும்

temple

பத்மசயனாசனம்ஏப்ரல் 07,2011

விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். இப்படி அமர்ந்த நிலையில் உடலை அப்படியே பக்கவாட்டில் வலதுபுறம் சாய்த்து வலது முட்டிக் கையை தரையில் ஊன்றி கை விரல்களால் தலையின் வலப்புற ... மேலும்

temple
விரிப்பின் மீது மல்லாந்து படுத்து, இரு கால்களை முட்டி வரை குத்துக்காலிட்டு மடக்கவும். தலை, கழுத்து, தோள், பாதங்கள் தரையிலிருக்கும் படி செய்யவும். இடுப்பு, முதுகு, இருதொடைகள் ... மேலும்

temple

சாந்தியாசனம்ஏப்ரல் 07,2011

ஓய்வாசனம் சவாசனம் (முழுமையான தளர்வுப் பயிற்சி)
தூங்கிக் கண்டார் சிவலோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகம் ... மேலும்



 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



சூரிய நமஸ்காரம்
ஏப்ரல் 05,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம். சூரிய நமஸ்காரம் என்பது மந்திரமும் ஆசனமும் சேர்ந்த ஒரு அபூர்வ அதிசக்தி அளிக்கும் படைப்பாகும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன. சூரிய நமஸ்காரம் செய்தபின் இயல்பான மூச்சு வரும் வரை ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மற்ற ஆசனங்கள் செய்ய வேண்டும்.
Share  
Bookmark and Share




























தாளாசனம்
ஏப்ரல் 05,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்
மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் :நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு
ஆன்மீக பலன்கள் : மனம் ஒருமைப்படும்
எச்சரிக்கை : குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது.
Share  
Bookmark and Share



உட்கட்டாசனம்
ஏப்ரல் 05,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : முழங்கால்கள்
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : பிராண சக்தியினை உயர்த்தும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும்.
குணமாகும் நோய்கள் : மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : குண்டலினி சக்தியினை எழுப்பும்.
Share  
Bookmark and Share


அர்த்த சக்ராசனம்
ஏப்ரல் 05,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : முதுகெலும்பு
மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் :உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.
குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குகிறது.
ஆன்மீக பலன்கள் : உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கின்றது.
எச்சரிக்கை : இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதைத் தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக்கொண்டு செய்யலாம். முதுகெலும்பு தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
Share  
Bookmark and Share


பத்ம ஹஸ்தாஸனம்
ஏப்ரல் 05,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : வயிற்றுப்பகுதி, முதுகு எலும்பு, கால்கள்
மூச்சின் கவனம் : கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பைப் பிணைக்கும் தசை நார்கள், தசையைப் பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப்படுகின்றன. முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. உடலின் சுற்றளவைக் குறைக்கிறது. இடுப்பு மற்றும் இடுப்புக்குக் கீழ் உள்ள அதிக சதைப்பகுதியினை மெலிய வைக்கிறது.
குணமாகும் நோய்கள் : ஜீரண சம்பந்தமான இரைப்பை, மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.
ஆன்மீக பலன்கள் : படர் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப்படுகிறது.
எச்சரிக்கை : அதிக இரத்தஅழுத்தம் அல்லது இதயநோய் உள்ளவர்கள், கழுத்துவலி இடுப்புபிடிப்பு உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
Share  
Bookmark and Share



அர்த்தகடி சக்ராசனம்
ஏப்ரல் 05,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : இடுப்பு பகுதி
மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் :முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம் அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன. நுரையீரல்கள் கொள்ளளவு அதிகரித்து இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகின்றது. பாதத்திற்கு நல்லது.
குணமாகும் நோய்கள் :முதுகுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.
ஆன்மீக பலன்கள் : பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கின்றது. ஓய்வான உணர்வு ஏற்படுகின்றது.
Share  
Bookmark and Share



திரிகோணாசனம்
ஏப்ரல் 06,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம்: குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடம்பு முழுவதும் குறிப்பாக முதுகுத்தண்டும் முதுகுத் தசைகளும் நீட்டப்படுகின்றன. மார்பு எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகள், தொடைகள், கெண்டைக் கால்கள், முழங்காலுக்குப் பின்புறம் உள்ள தசைகள் முதலியன நன்கு நீட்டப்பட்டு தளர்த்தப்படுகின்றன. அட்ரினல் சுரப்பிகள் நன்கு தூண்டப்படுகின்றன. கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், கணையம் முதலியவை நன்கு அழுத்தப்படுகின்றன. இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.
குணமாகும் நோய்கள்: பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு நல்லது. மலச்சிக்கலை நீக்கி, பசியினை உண்டு பண்ணுகின்றது. முதுகு, கழுத்து, முழங்கை, இடுப்புப் பகுதி, முழங்கால் முதலியவற்றில் உள்ள வலியினைப் போக்குகிறது. வாயுப்பிடிப்பு, கூன்முதுகு முதலியவற்றிற்கும் பலனளிக்கிறது.
எச்சரிக்கை: கீழ்முதுகுவலி முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாகச் செய்யவும்.
Share  
Bookmark and Share


பரிவ்ருத்த திரிகோணாசனம்
ஏப்ரல் 06,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்
மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையினை அதிகரிக்கின்றது. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்புப் பகுதியினை மெலிதாக்குகிறது. முதுகுத் தண்டு சுழற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன. உடல் இலேசாக, புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது. இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப்படுகிறது.
குணமாகும் நோய்கள் : பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு, மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது. உடம்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்க தன்மை நீங்கி தளர்கிறது.
எச்சரிக்கை : தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


ஏக பாதாசனம்
ஏப்ரல் 06,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : இரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்கள்
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்.
குணமாகும் நோய்கள்: சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும். கூடுதல் தொடை சதை குறையும். கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும். தோள் பட்டை, முதுகு சதைகள் அழகு பெறும். சுவாசப் பணிகள் விலகும். முகம் பொலிவு பெறும்.
ஆன்மீக பலன்கள் : கண்களை மூடிச் செய்ய பழகினால் பிரபஞ்சத்தையே கட்டி ஆளலாம்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

அர்த்த சிராசனம்
ஏப்ரல் 06,2011

அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோத்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும, இடுப்பிலிருந்து கால்களை நேராக தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.
பலன்: மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் ரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான ரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும்.
குறிப்பு: இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் ரத்த அழுத்த கோளாறு உள்சளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


சக்ராசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி தலை, மூக்கு, இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரைவட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும், 15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஓய்வு எடுத்து கொள்ளவும். இதே போல இருமுறை  இந்த ஆசனத்தை பயிலலாம்.
பலன்: உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும்.
Share  
Bookmark and Share



பர்வதாசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும். பின் தலையை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்த பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும். ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலை வலி, கண்நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இதை செய்யக்கூடாது.
பலன் : தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.
தகவல் : டி.எஸ்.கிருஷ்ணன், பதஞ்சலி யோக கேந்திரம்
பழங்காநத்தம், மதுரை.
Share  
Bookmark and Share


வஜ்ராசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : அடிவயிறு, தொடைப்பகுதி
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.
ஆன்மீக பலன்கள்: மனம் உறுதி அடைய இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனத்தில் தியானம், பிராணயாமம் செய்யலாம்.
சிறப்பு: இந்த ஆசனத்தை எல்லா நேரத்திலும் செய்யலாம். சாப்பிட்ட பின்னரும் செய்யக்கூடிய ஆசனம்.
Share  
Bookmark and Share

உஷ்டிராசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும். வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும். 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும். இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம். முழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கழுத்து
மூச்சின் கவனம்: வளையும் போது வெளி மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன.
குணமாகும் நோய்கள்: முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது. தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.
எச்சரிக்கை: இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
Share  
Bookmark and Share
வஜ்ரா முத்ரா (சசாங்கசனம்)
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : வயிறுபகுதி, தலைப்பகுதி
மூச்சின் கவனம்: குனியும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:காலிலுள்ள மூட்டு தசைகளை தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது. சிறுநீரகம் வலிமை அடையும். முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும். தலைப்பகுதியில் இரத்தஓட்டம் மிகும். நினைவாற்றல் கூடும். பிட்யுட்டரி, பீனியல், தைராய்டு பாராதைராய்டு போன்ற சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாளை அதிகரிக்கும். தாது பலவீனத்தை சீராக்கும்.
குணமாகும் நோய்கள் : அதிக இரத்த அழுத்தம், இடுப்பு, வாயுப்பிடிப்பு, இரைப்பை குடல் சம்பந்தமான கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும். வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : குண்டலினி சக்தி மேல் எழும்பும். உடல் குளிர்ந்து மனம் அமைதியடைகிறது.
எச்சரிக்கை : தீவிர முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாக செய்யவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பில் வாயுப்பிடிப்பு, கழுத்துவலி உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
Share  
Bookmark and Share


சுப்த வஜ்ராசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : தொடைப்பகுதி
மூச்சின் கவனம்: சாயும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்:முதுகுத்தண்டு, வயிற்று புற உறுப்புகள், இடுப்புப்பகுதி நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன் முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு கணுக்கால், கீழ்முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும்.
குணமாகும் நோய்கள்: வெகு நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிக நல்லது. வாயுத்தொல்லை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.
ஆன்மீக பலன்கள்: முதுகெலும்பின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் ஆற்றல்கள் செயல்படத் தொடங்குகின்றன. தொடர்ந்த பயிற்சியினால் ஓய்வு ஆழமானதாகின்றது.
எச்சரிக்கை: கழுத்துப் பிடிப்புள்ளவர்கள் இதயக்கோளாறு உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.
Share  
Bookmark and Share


பஸ்சி மோத்தாசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்
மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன் பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உரம் பெறுகின்றது. உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பினை பெறுகின்றது. கல்லீரல், கணையம், குடல் இவற்றின் ஜீரணசக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது. வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணைபுரிகின்றது.
குணமாகும் நோய்கள்: அஜீரணம், மலச்சிக்கல், இடுப்பு, வாயுப் பிடிப்பு, விந்தணு பலவீனம், மூலநோய், ஜீரணக்கோளாறுகள் முதலியவற்றிற்கான சிகிச்சையில் பலனளிக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பை குறைக்கிறது.
ஆன்மீக பலன்கள்: மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியினை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியினை உயர்த்தும்.
எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் கழுத்துப் பிடிப்பு, நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரணக்கோளாறுகளுக்கு வழி வகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும்.
Share  
Bookmark and Share

சித்த பத்மாசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
இந்த உலகில் என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் நமது உடல், மன இயக்கங்களில் சக்தியை ஒரு சேர அதிகரிக்க ரிஷிகள் கூறிய யோகாசன பயிற்சி முறைகளை தான் பின்பற்றுகிறோம். அவ்வழியில் நாமும் யோகம்+ஆசனம் என இருவித பயிற்சிகளை ஒருசேரப் பெறுவோம். நலமுடன் வாழ்வோம்.
யோகாசனம் செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் :
தடித்த அதே சமயம் மிருதுவான துணி விரிப்பில் அமர்ந்து யோகாசனம் செய்வது நலம். மஞ்சள் காமாலை போன்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாத காலத்திற்கு பின்னும், உடலில் எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள் 6 மாத காலத்திற்கு பின்னும் பயிற்சி செய்ய வேண்டும். பெண்களைப் பொறுத்த வரை மாதவிடாய் காலத்திலும், கர்ப்பம் தரித்த காலங்களிலும் பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. முதலில் சித்த பத்மாசனம் பற்றி தெரிந்து கொள்வோம்.
செய்முறை : முதுகை வளைக்காமல், தலை நிமிர்ந்து அமர்ந்து கழுத்தை நேராக வைத்துக் கொள்ளவும். வலது காலை மடித்து இடது தொடைமீதும், இடது காலை மடித்து வலது தொடைமீதும் வைக்கவும். இடது கையின் மேல் வலது கையை திறந்த நிலையில் மேல் நோக்கி வைக்கவும், கண்களை மெதுவாக மூடி அதன் பார்வை மையம் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும். ஒரே சீராக நிமிடத்திற்கு 14 முதல் 16 தடவை மூச்சை இழுத்து விடவும். இந்த பயிற்சியை காலை 6 மற்றும் மாலை 6 மணியளவில் குறைந்தது 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி கொண்டு பயிற்சி செய்வது நலம்.
பலன் : ரத்த ஓட்டம் சீராக அமையும், மன அமைதி கிடைக்கும்.
Share  
Bookmark and Share

பர்வத ஆசனம் (மலை)
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : தோள்கள்
மூச்சின் கவனம்: கைகளை மேலே தூக்கும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, கீழே இறங்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : தோள்கள் வலிமையடையும். புஜங்கள் மெலிந்து சீராக அமையும். இதயம் வலிமையடையும். இடுப்பு பகுதி ஊளைச்சதை கரையும்.
குணமாகும் நோய்கள் : தோள்களில் படியும் தேவையற்ற அதிக கால்சியம் குறையும் அதிக உடல் எடை குறையும்.
ஆன்மீக பலன்கள் : மலை போன்று உறுதியாக மனநிலை அமையும்.
எச்சரிக்கை : கழுத்து தேய்மானம் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.
Share  
Bookmark and Share

யோக முத்ரா
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : முதுகெலும்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி
மூச்சின் கவனம் : குனியும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும். தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகும். ஞாபக சக்தி கூடும். பிட்யுட்டரி, பீனியல் தைராய்டு, பாராதைராய்டு ஆகிய சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம்.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை பிரச்சனைகள் நீங்கும். நீரிழிவு நோய் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : மனம் கட்டுப்படும். குண்டலினி சக்தி மேல் எழும்பும்.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பு வலி உள்ளவர்கள், இதய நோயாளிகள் செய்யக்கூடாது.
Share  
Bookmark and Share

கோமுகாசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : தோள்கள், மார்பு புஜங்கள்
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : மார்பு விரிந்து நுரையீரல்கள், இதயம் வலுவடையும்.
குணமாகும் நோய்கள் : பசியின்மை நீங்கும். எலும்புகள் மற்றும் மூட்டுகள் வலிமை பெறும். மூட்டு வீக்கம் சம்பந்தமான நோய்கள் குணமடையும். தசைப்பிடிப்பு நீங்கும். மூலபந்தம் நடைபெறுவதால் மூல நோயும் குணமாகும்.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை கழுத்து தேய்மானம், முதுகெலும்பு தேய்மானம் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
Share  
Bookmark and Share

வக்ராசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : இடுப்பு முதுகெலும்பு
மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலின் பக்கவாட்டைச் சுழற்றுவதற்கு சாத்தியமாகிறது. முதுகெலும்பு முழுவதும் நீட்டப்பட்டு ஊக்கமடைகிறது. கீழ்முதுகின் வளையும் தன்மை அதிகரிக்கின்றது. முதுகுத் தண்டு நரம்பின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகின்றது. கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள், சிறுநீரகப்பை ஆகியவை நன்கு அழுத்தப்படுகின்றன. பாலணுச் சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. கணைய நீர், அட்ரினலின் ஆகிய சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. தொடைப்பகுதி வலிமை அடையும்.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், அஜீரணம், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறுகள், விரிவடைந்த அல்லது சுருங்கிய கல்லீரல் மண்ணீரல் முதுகின் பின்புறம் ஏற்படும் வலி, இடுப்பு மூட்டுக்களில் வலி, உடல் பருமன், வயிற்றுப் பொருமல் முதலானவற்றிற்கு நல்லது. இடுப்பைச் சுற்றியுள்ள சதையினைக் குறைக்கிறது.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை அகற்றி யோகி மத்ஸ்யெந்திரர் என்ற மஹான் அடைந்த நிலையை அடைய உதவுகின்றது. சூட்சும நாடி திறக்கப்பட்டு குண்டலினி சக்தி மேல் எழும்.
எச்சரிக்கை : குடல்வாயு (ஹெர்னியா நோய்) உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
Share  
Bookmark and Share

அர்த்த மச்சேந்திராசனம்
ஏப்ரல் 06,2011
 
அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பில் கால்களை நீட்டியவாறு அமரவும். பின்பு வலது காலை உள்பக்கமாக மடித்து, உட்காரும் பாகத்தருகே பாதத்தை வைத்து கொள்ளவும். இடது காலை மேல்புறமாக மடித்து குத்திட்ட நிலையில் பாதத்தை வலத்தொடையில் வெளிப்புறம் தரையில் பதிக்கவும். இடது முழங்கால் நெஞ்சை ஒட்டியபடி இருக்குமாறும், வலது கையை  மடித்து நிறுத்தியுள்ள காலின் உள்வழியாக இடது முட்டியை பிடித்தும், இடது கை முதுகைத் தொட்டும் இருக்க வேண்டும்.
ஒட்டு மொத்தமாக இடுப்பு, முதுகு, தோள்பட்டைகள், தலை, கழுத்து, முதலிய உறுப்புகள் இடது புறம் முறுக்கிய படி பார்வையை நேராக செலுத்தியபடி பத்து விநாடிகள் இந்த ஆசனத்தில் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு திருகப்படுவதால் உடற்சக்கரங்கள் தூண்டுதல் அடைகிறது.  விறைத்த முதுகுத்தண்டு நெகிழும் தன்மையாவதால் முகுள நீர் அழுத்தம் சீர் அடைகிறது. உடல் பருமன் குறையும். மன அழுத்தம் சீரடையும். சிறுநீரக கோளாறு நீங்கும். மொத்தத்தில் உடல், மனம் இரண்டையும் செம்மையாக்கும் அரிய வகை ஆசனம்.
Share  
Bookmark and Share

ஆகர்ண தனுராசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
காலை 6 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் இந்த ஆசனம் செய்ய வேண்டும். வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட 3 மணி நேரத்திற்கு மேல் செய்யலாம்.
செய்முறை : அமர்ந்த நிலையில் கை கால்கள் இணைந்த செயல் ஆசனம். இயல்பான மூச்சுடன் நமது முழு சிந்தனையும் காதை நோக்கி இருக்க வேண்டும். இடது கால் நீட்டப்பட்டு, வலது காலை மடித்து, வலது பாத கட்டை விரலை வலது கையால் பிடித்து பாதத்தை வலது காதருகே கொண்டு செல்ல வேண்டும். இப்படி வலம் இடம் மாற்று முறையில், கை மற்றும் கால்களை எதிர்புறம் மாற்றி செய்யப்படுவதாகும்.
பலன் : செவிப்பறை, காது குருத்தெலும்பு சம்பந்தப்பட்ட நோய், காது அடைப்பு, காதில் இரைச்சல், கேட்கும் திறன் குறைவு, காதில் சீழ் வடிதல் ஆகிய காது சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். காது கேட்கும் சக்தி அதிகரிக்கும்.
Share  
Bookmark and Share
அமர்ந்த ஏகபாத ஆசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
முனிவர்கள் அருளிய ஆயிரக்கணக்கான ஆசன வகைகள் நடைமுறையில் இருந்தும் உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள் மட்டுமே அதிகமாக கற்பிக்கப்படுகின்றன. ஆனால் ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம் வெளிப்படுத்தும் மருந்துகளால் குணப்படுத்தமுடியாத நோய்களை நிரந்தரமாக நீக்கும் சஞ்சீவி ஆசனங்களாகும். விரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து, விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சம்மண நிலையிலிருந்து கால்களை பிரிந்து, வலது காலை அமர்ந்த நிலையில் உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இருகைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும். இந்த ஆசனம் செய்யும் போது நமது எண்ணத்தை முதுகு தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும். அடுத்து இடக்கால் நிலையை வலது காலுக்கும், வலது கால் நிலையை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்.
பலன் : இடுப்பு, முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப்பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது. மாலை நேரங்களில் 15 நிமிடம் செய்வது ஏற்றது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம்.
Share  
Bookmark and Share


குதபாத ஆசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, பின் இரு பாதங்களையும் உள்பக்கமாக ஒட்டியபடி இணைக்கவும். இரு கைகளாலும் சேர்த்து கால்களை உள்பக்கமாக இழுத்து உடலை உயர்த்தி, கட்டை விரல் தெரிய கால்களில் மேல் சின் முத்திரையிட்டு வைக்கவும். ஆசனம் செய்யும் போது நமது சிந்தனையை முதுகுத்தண்டின் மீது செலுத்தவும் காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். ஒவ்வொரு தடவையும் 30 விநாடிகள் செய்வது நலம்.
பலன் : ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்கி பெரிதும் பலனளிக்கும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். யானைக்கால் விரைவில் குணமாகும். பெண்கள் மாதத்தில் 5 நாட்களும், கருவுற்ற காலங்களிலும் செய்யக்கூடாது.
Share  
Bookmark and Share


புஜங்காசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : முதுகெலும்பு, அடிவயிறு
மூச்சின் கவனம் : உடலை உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, உடலை இறக்கும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : எடை குறையும். மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாகவும், உறுதியானதாகவும் ஆகிறது. மார்புத்தசைகள் விரிவடைந்து முதுகுதண்டு நரம்புகள்  ஊக்கமடைகின்றன. இளமைத் தன்மை நீடிக்கும்.
குணமாகும் நோய்கள் :அதிகவேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்துவலி, கழுத்துப் பிடிப்பு கூன் முதுகு, நுரையீரல் அலர்ச்சி, ஆஸ்துமா, ஜீரணக் கோளாறுகள், வயிற்றுக் கொழுப்பு போன்றவற்றை சரி செய்கின்றது. ஜீரணசக்தி குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிக்கின்றன. சர்க்கரை நோய் குணமாகும்.
ஆன்மீக பலன்கள் : குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரபடுகின்றது.
எச்சரிக்கை : குடல்வாயு, அதிக இரத்தஅழுத்தம் உள்ளவர்கள் செய்தல் கூடாது.
Share  
Bookmark and Share

சலபாசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : முதுகெலும்பு, அடிவயிறு, கால்கள், தொடைகள்
மூச்சின் கவனம் : கால்கள் உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடல் எடை குறையும். அட்ரினல் சுரப்பி நன்கு வேலை செய்யும். புஜங்காசனத்தின் பலன்களை இது பூர்த்தி செய்கிறது. இடுப்பு, முதுகின் கீழ்ப்பகுதி, இடுப்பெலும்புக்கூடு, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கமடைகின்றன. கணையம் நன்கு செயல்படுகின்றது. கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகங்களில் கல் அடைப்பு ஏற்படாது.
குணமாகும் நோய்கள் : மலச்சிக்கல், வாயுத்தொல்லை, நீரிழிவு, இடுப்பு வாயுப்பிடிப்பு ஆகியவை குணமாகும். கர்ப்பப்பை பிரச்சனைகள் தீரும். விரை வீக்கம் நீங்கும். சுவாச பிரச்சனைகள் நீங்கும்.
ஆன்மீக பலன்கள் : உடல் லேசாக சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது. புலன்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எச்சரிக்கை : இந்த ஆசனத்தை சிறுநீரகக் கோளாறினால் அவதிப்படுவோர், குடல்வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
Share  
Bookmark and Share

தனுராசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : முதுகெலும்பு அடி வயிறு தொடைப்பகுதி
மூச்சின் கவனம் : கால்களையும் உடலையும் உயர்த்தும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, விடும் போது வெளிமூச்சு
உடல் ரீதியான பலன்கள் : உடலை மெலிய வைத்து சுறுசுறுப்பு ஆக்குகிறது. இடுப்பை வளைக்க உதவும் ரெக்டி தசைகள் நன்கு ஆரோக்கியம் அடைகின்றன. வயிற்றுப் பகுதியில் உள்ள அதிகக் கொழுப்பு குறைகின்றது. இரத்தக்குழாய் சுத்தமடையும். முதுகு எலும்பு நன்கு வலுப்பெறும். அட்ரினல் சுரப்பி நன்கு வலுப்பெறும். அடிவயிற்றுக்கு நல்ல அழுத்தம் கிடைத்து மலம் மலக்குடலுக்குத் தள்ளப்படும். இனப் பெருக்க மண்டலம் வலிமை பெறும்.
குணமாகும் நோய்கள் : சுவாசக் கோளாறுகள், முதுகுவலி, மூட்டு சம்பந்தமான நோய்கள், நீரிழிவு, இரைப்பை, குடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு நல்லது. ஜீரண சக்தியினை அதிகப்படுத்துகின்றது. மாதவிடாய்ப் பிரச்சனைகள் தீரும். தூக்க மின்மை விலகும்.
ஆன்மீக பலன்கள் : சோம்பலை நீக்கி உடலை சுறுசுறுப்பாக்குகிறது.
எச்சரிக்கை : குடல் வாயு மற்றும் அதிக இரத்த அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தைச் செய்தல் கூடாது. ஆசன நிலையில் ஆடக்கூடாது. இதய நோயாளிகள் இந்த ஆசனத்தை ச் செய்தல் கூடாது.
Share  
Bookmark and Share

உத்தன பாதாசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : அடி வயிறு
மூச்சின் கவனம் : கால்களைத் தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : தொப்பையினைக் குறைக்கும். தொடைகள் வலிமை பெறும். சுவாசம் சீராகும்.
குணமாகும் நோய்கள் :  ஜீரண உறுப்புகளும், நரம்புகளும் சீராகும்.
Share  
Bookmark and Share

சர்வாங்காசனம்
ஏப்ரல் 06,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : இருதோள்கள், கழுத்து
மூச்சின் கவனம் : ஆசனங்களின் தாயாக இந்த ஆசனம் திகழ்கிறது. நூறுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைக்கும். அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவாரணி. தைராய்டை நல்ல நிலையில் வைத்து உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள உறுப்புகளை நல்லவிதமாகத் தூண்டி பலமடையச் செய்கிறது. மூளை நல்ல இரத்தஓட்டம் பெறுகின்றது. கண் பார்வை கூடும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
குணமாகும் நோய்கள் : வெரிகோஸ்வைன் என்னும் ரத்தக்குழாய் புடைத்துப் போகுதல். தோல் நோய், ஆஸ்துமா, சைனஸ், காதடைப்பு நீங்கும். மூலநோய், குடல்வாயு, தைராய்டு குறைவினால் ஏற்படும் நோய்கள், உள்ளுறுப்புகளில் பலவீனம், அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய்க் கோளாறுகள் முதலியவற்றிற்கு நல்லது. தூக்கமின்மை சரியாகும். அதிக தூக்கம் குறையும். ஆரம்ப கட்ட ஹெர்னியா கர்ப்பப்பை இறக்கம் சரியாகும். வளர்சிதை மாற்றம் கட்டுப்படும்.
ஆன்மீக பலன்கள் : நினைவாற்றல் வளர்கின்றது. மனஒருமைப்பாட்டுக்கும், சமநிலையான மனதிற்கும் நல்லது.
எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், முள்ளெலும்பு நகர்ந்தவர்கள், இதய நோய்கள், கழுத்து பிடிப்பு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. ஆசனத்தில் இருக்கும் போது தலையினை பக்கவாட்டில் திரும்பி பார்க்ககூடாது.
Share  
Bookmark and Share

மச்சாசனம்
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : நுரையீரல்கள், மார்பு
மூச்சின் கவனம் : ஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, மார்பு சுவாசம்.
உடல் ரீதியான பலன்கள் :சர்வாங்காசனத்தைப் பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அதனுடைய எல்லா பலன்களையும் அதிகரிக்கின்றது. மிக நீண்ட நேர மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு அளிக்கிறது.
குணமாகும் நோய்கள் : நீரிழிவு, ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் தைராய்டு, பாரா தைராய்டு முதலியவை சரியாகும்.
ஆன்மீக பலன்கள் : உடலும் மனமும் மிகவும் இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ஓய்வாக ஆகின்றது.
எச்சரிக்கை :அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கழுத்துப் பிடிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடாது. வலப்பக்கமோ இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை தரையில் வைக்கப்பட வேண்டும்.
Share  
Bookmark and Share

பவன முக்தாசனம் (காற்றுக்கு விடுதலை)
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : வயிற்றுப்பகுதி
மூச்சின் கவனம் : வயிறு அழுத்தும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பாக மூச்சு, விடுபடும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : வாயுத்தொல்லை நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும். அபான வாயுத்தொல்லை பெருமளவு நீங்கும். அதிக உடல் எடை தொப்பை குறையும். வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
குணமாகும் நோய்கள் : சர்க்கரை நோய் கட்டுப்படும். மலச்சிக்கல் நீங்கும்.
எச்சரிக்கை : கழுத்துவலி உள்ளவர்கள் முதுகெலும்புப் பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
Share  
Bookmark and Share

விபரீத கரணி
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
மனம் : இடுப்பு கழுத்து
மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு
பலன்கள்: சர்வாங்கசனத்தின் அனைத்துப் பலன்களும் இதில் கிட்டும். இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதை செய்யலாம்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

கூர்மாசனம்
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும், அவ்விடைவெளியில் முகத்தை புதைத்து நெற்றியை தரையில் பதித்தபடி, இரு கைகளை நீட்டி வணங்கியபடி கைகளை தரைமீது பரவச் செய்யவும். இவ்வாறு நிமிர்ந்த நிலையிலிருந்து குனியும் போது மூச்சை உள்ளிழுக்கவும். இந்த நிலையில் 10 வினாடிகள் கழித்து மெதுவாக கூப்பிய கைகளோடு நிமிரவும். நிமிரும் போது மூச்சை வெளிவிட்டபடி அமர்ந்த நிலைக்கு வந்து கைகளை பிரித்து பக்கவாட்டில் கொண்டு வரவும். குனியும் போது முதுகுத்தண்டின் கீழே (நுனிபாகத்தை) யும், நிமிரும் போது புருவ மத்தியிலும் நினைவை செலுத்தவும். இரண்டு முறை இந்த ஆசனத்தை 2 நிமிட இடைவெளி விட்டு செய்யவும்.
பலன்கள் : மன அமைதி கிடைக்கும். இடுப்பு எலும்பு, முதுகுத்தண்டு எலும்பு, கழுத்தெலும்பு சம்பந்தப்பட்ட வலி நீங்கும் ரத்தத்தில் சிகப்பணுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் குறைந்து, குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


யோக நித்ராசனம்
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
கைகால்களை தளர்த்திய நிலையில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரு கால்களை நீட்டிய நிலையில் மடித்து இரு பாதங்களை பின்னியவாறு தலையணையாக்கி அதன் மேல் தலையை கிடத்தி கழுத்தின் பின்புறம் நன்கு பதியும்படி வைக்கவும். இரு தொடைகளின் இடையே உள்ளிருந்து கைகளை வெளியே கொண்டு வரவும். பின் விரல்களை கோர்த்து பின்னிய கைகளின் உள்ளே உட்காரும் பாகத்தை தாங்கிய படி ஆசனம் அமைக்கவும் ஆரம்பத்தில் 3 முதல் 10 நிமிடங்களும், பின் படிப்படியாக கால அளவைக் கூட்டியவாறு விரும்பு காலம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம். கால்களை மூடிய நிலையில் மிக இயல்பாக மூச்சை இழுத்து விடவும். இது ஒரு கிடந்த நிலை தியான ஆசனமாகும். மருந்துகளில் சஞ்சீவி போல, ஆசனங்களில் இது சஞ்சீவி ஆகும். பயிற்சியாளரின் நேரடி கண்காணிப்பின்றி இந்த ஆசனத்தை செய்ய முயற்சி செய்ய கூடாது.
பலன் : உடலில் உள்ள ஒட்டு மொத்த சுரப்பிகளை ஒரு சேர சீராக இயக்கும். அடைபட்ட வியர்வைக் கண்கள் திறக்கப்பட்டு, உடலின் துர்நீர் வெளியேற்றப்படும். ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருந்தால் அவை நீங்கி ரத்தம் சீராக பாயும். மனதை அமைதி அடைய செய்யும். ஆசனங்களில் அரசி என இது புகழப்படுகிறது.
Share  
Bookmark and Share


பத்மசயனாசனம்
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பில் பத்மாசனத்தில் அமரவும். இப்படி அமர்ந்த நிலையில் உடலை அப்படியே பக்கவாட்டில் வலதுபுறம் சாய்த்து வலது முட்டிக் கையை தரையில் ஊன்றி கை விரல்களால் தலையின் வலப்புற கன்னம், காதுகளை தாங்கியபடி கிடக்கவும்.உடல் மேல்நோக்கிய பிறை சந்திரன்போல் அமைவதால் நாற்பதாயிரம் நரம்புகள் வரை தூண்டப்பட்டு  மன அமைதி கிடைக்கும். உடல் உஷ்ணம் தணியும். ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

புஜ பாத பீடாசனம்
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
விரிப்பின் மீது மல்லாந்து படுத்து, இரு கால்களை முட்டி வரை குத்துக்காலிட்டு மடக்கவும். தலை, கழுத்து, தோள், பாதங்கள் தரையிலிருக்கும் படி செய்யவும். இடுப்பு, முதுகு, இருதொடைகள் உயர்த்தி, கைகளால் இடுப்பை தாங்கி கொள்ளவும். காலை வேளையில் இயல்பான மூச்சுடன் இரண்டு தடவை 15 வினாடிகள் செய்யவும்.
பலன் : அதிக உடல் எடை கொண்டவர்களும், தொடர்ந்து வாகனம் ஓட்டுபவர்களும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரிபவர்களும் இதை செய்யலாம். இதனால் ஏற்படும் இடுப்பெலும்பு தேய்மானம். முதுகு தண்டு எலும்பு தேய்மானம், அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தரும். இந்த ஆசனம் செய்து வந்தால் கழுத்துப்பட்டை மற்றும் இடுப்பு பட்டை அணிவதிலிருந்து விடுதலை கிடைக்கும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

சாந்தியாசனம்
ஏப்ரல் 07,2011
  
அ-
+
Stay connected to temple.dinamalar.com
ஓய்வாசனம் சவாசனம் (முழுமையான தளர்வுப் பயிற்சி)
தூங்கிக் கண்டார் சிவலோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகம் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே
-திருமூலர்
சவ என்றால் பிறம். உச்சந்தலையில் உடல் ஒரு சவம் போன்று தோன்றுகிறது. இந்த ஆசனம் செய்வோர் உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் எல்லாத் தூண்டுதல்களுக்கும் ஆட்படாமல் எந்த எதிர்ச் செயலுமின்றி பிணம் போல் ஆக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மனம் : கால் கட்டை விரல்களில் துவங்கி மற்றும் உடல் முழுவதும் பரவி இறுதியில் மூளை (தலை) வரை
மூச்சின் கவனம் : ஆழ்ந்த மூச்சு
உடல் ரீதியான பலன்கள் : ஆசனங்கள் முடித்த பின் கண்டிப்பாக இந்த ஆசனம் செய்ய வேண்டும். 5 முதல் 20 நிமிடம் வரை செய்யலாம். அற்புதமான பலன்களைக் கொடுக்கக்கூடியது. மூளைக்கு நல்ல ஓய்வு. உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கமளிக்கிறது. எல்லாத் தசைகளும் மூட்டுகளும் தளர்த்தப்படுகின்றன. தினமும் இருவேளை செய்யலாம். பிரணாயாமம் செய்வதற்கு உடல் ஏற்றதாகிறது. 30 நிமிடப் பயிற்சி 3 மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்கு சமமாகிறது.
குணமாகும் நோய்கள் : அதிக இரத்த அழுத்தம், மனஇறுக்கத்தால் உண்டாகும் தலைவலி ஆகியவற்றால் ஏற்படும் மனநோய் பிரச்சனைகளுக்கு வெகுவாக பலன் அளிக்கிறது. தூக்கமின்மை, சர்க்கரை நோய், இதயநோய், வலி உபாதைகள், நினைவாற்றல், இயலாமை மற்றும் பலவற்றிற்கு இது அற்புதமருந்து. களைப்போ சோர்வோ இருக்கும் போது இப்பயிற்சியினைச் செய்யலாம். ஒலிநாடாவின் உதவியுடனும் செய்யலாம்.
ஆன்மீக பலன்கள் : மனம் ஆழ்ந்த ஓய்வைப் பெறும். அந்தரங்க யோகப் பயிற்சிக்கு வெகுவாக பயன்படுகின்றது. செய்பவரின் உடல் நலனை அதிகரிக்க செய்கிறது. பஞ்சகோசங்களையும் சுத்திகரிக்கும் ஆசனம் இது. வயது, உடலின் நிலை போன்ற வரம்பின்றி அனைவரும் பயிற்சி மேற்கொள்ளலாம். செய்யும் நேரம் முழுமையும் சுவாசம் மெதுவானதாக, ஆழமானதாக, ஓய்வாக, சீரானதாக ஏககாலத்தில் நிகழ்கிறது. சவாசனம் மல்லாந்து படுத்திருக்கும் நிலைமட்டுமல்லாது வேறு சில நிலையிலும் செய்யலாம். (ஆசிரியரை அணுகவும்)
கிரியாக்கள் 1, 2, 3, 4, 5, 6 என ஆறு வகைப்படும்.
1, கபாலபதி
2. திராடகள்
3. நேத்தி
4. தௌத்தி
5. நௌலி
6. பஸ்தி- என ஆறு வகைப்படும்.
பந்தங்கள்:
1. தொண்டை குழி அடைத்தல்
2. ஆசன வாய் சுருக்கி அடைத்தல்
மூச்சு நிலை - உள்ளிழுத்து கும்பகத்தில் நிறுத்துதல்
தொண்டைக்குழி மற்றும் மூலாதாரத்திற்கு இடையில்
பலன்கள்: உடல் சூடு அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலிமையடையும். தைராய்டு உமிழ்நீர்ச் சுரப்பிகள் நன்கு செயல்படும். மலச்சிக்கல் நீங்கும். அடங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியினை எழுப்பும்.
1. கபாலபதி : மூக்குத் துவாரங்களில் உள்ள தூசிகள் அகன்று ஆஸ்துமா சளி தொல்லை நீங்கும். நுரையீரலில் உள்ள கார்பன்-டை ஆக்சைடு வெளியேறும். மூளையில் உள்ள செல்களைத் தூண்டும்.
எச்சரிக்கை : இதயக்கோளாறு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யக்கூடாது. அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் வரை செய்யக் கூடாது.
2. திராடகம்: கண்களை சுத்தப்படுத்தி பார்வைத் திறனை அதிகரிக்க செய்யும் பயிற்சி
3. நேத்தி: மூக்குப் பாதையினைச் சுத்தப்படுத்தும் பயிற்சி
4. தௌதி: வயிறு வரை உள்ள உணவுப் பாதையினை தூய்மைப்படுத்தும் பயிற்சி
5. நௌலி: அடிவயிறு குடல்களைக் கட்டுப்படுத்துதல்
6. பஸ்தி: ஆசனத் துவாரத்தையும் மலக்குடலையும் நீரால் சுத்தம் செய்யும் முறை.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்







































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக