திங்கள், 22 டிசம்பர், 2014

நம்மாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்தில் 26 ஆம் பாசுரம்,

ராதே கிருஷ்ணா 22-12-2014


Welcome to Himopavanam--திருத்தண்கா
நம்மாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்தில் 26 ஆம் பாசுரம்,

Welcome to Himopavanam--திருத்தண்கா
நம்மாழ்வாரின் ப்ரதம ப்ரபந்தமான திருவிருத்தத்தில் 26 ஆம் பாசுரம்,
நானிலம் வாய்க்கொண்டு நன்னீரறமென்று கோது கொண்ட
வேனிலஞ்செல்வன் சுவைத்துமிழ்பாலை,கடந்த பொன்னே
காநிலந்தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃக்காவுதம்-
பூந்தேனிலம்சோலையப்பாலது, எப்பாலைக்கும் சேமத்ததே, , என
(நானிலம் வாய் கொண்டு ) ஆதித்யனானவன் நால்வகைப்பட்ட நிலத்தை வாயிலே கொண்டு,. (நன்னீரித்யாதி) இதினுடைய ஸத்தையான நீர் அறும்படிமென்று கோதாக்கி அக்கோதை வாயிலே கொண்ட ஆதித்யனானவன் தன்னுஷ்ண கிரணத்தாலே சுவைத்து ஆச்ரயம் பொறாமையுமிழந்து பாலையாயிற்று. (கடந்த)ஸம்ஸாரத்தை கடந்த என்றபடி. (பொன்னே) ஸம்போதனம்.,பொன்போன்ற நிறம் கொண்டவளே.
(கால்நிலமித்யாதி) தேவர்கள் ஹவிஸ்ஸு கொள்ளுமிடத்தில் ஸம்ஸாரவெக்காயமதட்டாமே ஒரு யோஜனைக்கவ்வருகே நின்று பின்னையுமிது பொறுகக்மாட்டாமை அவ்வருகே போய்ச்சர்த்த பண்ணுவார்கள்இப்படியே அங்குற்றைக்கு பரமபதம்,அங்கனிருக்கிற நித்யஸூரிகள் பூமியிலே இழிந்து திருவெஃகாவிலே தங்களுடய அபிமதவிஷயங்கிடக்கையாலே ப்ரதக்ஷிமப்ரணாமாதிகள்
பண்ணாநிற்பார்கள்
(வெஃக்காவுது) – இப்படிப்பட்ட திருவெஃகா .உது என்றால் தூரம் இல்லை அருகிலுமில்லை என பொருள். இதுபோன்ற தலைவிக்கு நகரத்தை காண்பித்த தலைவன் வேறு யாரேனும்உண்டா என்ற கேள்விக்கு இராமாயணத்தில் உள்ள உதாஹரணம் காண்பிக்கிறார், இராமர் சீதைக்கு அயோத்தியை காண்பி்த்தார் என்கிறார், ஏஷா ஸாத்ருச்யதே அயோத்யா .அதோ அயோத்தி தென்படுகிறது பார்த்தாயா என்கிறது காண்க, அப்போது நாயகி அங்கிருந்து பார்த்தபோது ஹிமோபவநம் என்றும் திருத்தண்கா என்றும் தூப்புல் என்றும் கூறப்படும் விளக்கொளி பெருமாள் தீபப்ரகாசர் ஸந்நிதியை காண்பித்து அங்கே தெரிவது என்ன என்று கேட்கிறாள் இதற்கு விடை அளிக்கிறார்.. அபூந்தேனிலம்சோலையப்பாலது-அழகியமலர்கள் தேனை தங்களிடம் தக்கவைத்துள்ள சோலைசூழ்ந்த இடமாகும். எப்பாலைக்கும் சேமத்ததே
.. அனைத்துவிதமான பாலை நிலங்கள் மூலம் உண்டாகவல்ல அனைத்துவிதமான துன்பங்களையும் போக்கி நமக்கு ஏற்ற பாதுகாப்பை அளிக்கவல்ல இடம் அதுவே ஆகும்,
இந்த பாசுரம் சரணாகதி பாசுரம் என சான்றோர்கள் பணிப்பர்.
ஸம்ஸார வெப்பம் தாங்காமல் ஸர்வேச்வரனை அணுகி இன்பத்துடன் இருத்தல் கூறப்பட்டது, திருவெஃகாவை பற்றி குறிப்பிட்டபோதிலும் அதன் அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த இடம் என காண்பிப்பது திருத்தண்கா என்று பலர் உரைப்பர். கலாபேதமில்லாமல் அரும்பதவுரைகள் சிலவற்றில் இவ்வாறே உள்ளது.
திருத்தண்காவில் உள்ள ஸ்ரீவிளக்கொளி பெருமாளை பற்றி ஸ்வாமி தேசிகன் சரணாகதி தீபிகை அருளிச்செய்துள்ளார்.மேலும் அபிநவ தேசிக ஸ்ரீமதுபயவே உத்தமூர் ஸ்வாமி எழுதிய வ்யாக்யானத்தில் திருத்தண்காவில் அவதரிக்க உள்ள ஸ்வாமி தேசிகன், உலகினர் உய்யும் விதமாக ப்ரபத்தி சாஸ்த்ரத்தை விரிவாக எடுத்துரைத்து அனைவரும் ஸர்வேச்வரனை அண்டும்படிச்செய்ய உள்ளார், ஆதலால் நாமும் அங்கு செல்வோம் என்பதாக ஆழ்வார் குறிப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.உயர்ந்த திவ்யதேசம்.
நாம் வைதிகர்களாயினும் காலத்தின் கோலத்தால் விதேசத்தாரின் ஆசாரங்களை, விழாவை கொண்டாடுகிறோம், ஆங்கிலமாதத்திலேயே நாம் ஜீவிக்க சம்பளத்தை பெறுகிறோமல்லவா. தமிழ்மாதத்தில் சம்பளத்தை பெறவில்லையே.டிசம்பர் மாதம் வருடத்தின் கடைசி, மற்றும் விராமகாலம் , இந்த ஸமயத்தில் போகத்தை அனுபவிக்க பாரத தேசத்தில் விசேஷமான இடத்துக்கும் விதேசங்களுக்கும் வரும்படி அநேகவிதமான சலுகைகளுடன் கூடிய விளம்பரத்தை பார்க்கிறோம்.,இந்த க்ரமத்தில் ஆஸ்திகர்கள் சாஸ்த்ரஸம்மதமும் அதிகளவில் சிலவும் இல்லாததான இந்த ஹிமோபவனத்துக்கு --ரிஸார்ட்டுக்கு வந்தால் ஸம்ஸார வெப்பத்தை போக்கலாம்,எம்பெருமான் மற்றும் ஆசார்யன் அமுது செய்த ப்ரசாதம், ஸ்வச்சமாந தீர்தம் யாவும் கிடைக்கும், ஆநந்தமாக திவ்யதேசத்து எம்பெருமானை ஸேவித்து ச்செல்லலாம். தொண்டீர் எல்லீரும் வாரீர். கோவிந்தனை பாடிப்பறை கொண்டு சம்மானம் பெறுவோம்.
...
न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्। श्रीदेशिकप्रियः





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக