வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

நாலாயிரத் திவ்வியபிரபந்தம் ஆழவார்கள்

ராதே கிருஷ்ணா 04-08-2018




நாலாயிரத் திவ்வியபிரபந்தம் ஆழவார்கள் 



Tnpscwinners.com
 <

பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வாரின் குறிப்பு:

  • இவர் பிறந்த ஊர் = காஞ்சிபுரத்தில் திருவெகஃகா
  • இவர் திருமாலின் சங்காகிய பாஞ்சசன்னியத்தின் அவதாரம்
  • இவர் தாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப்பட்டார்.
  • இவர் பாடியது = முதல் திருவந்தாதி
  • இதில் நூறு பாடல்கள் உள்ளன
  • முதன் முதலாக திருமாலின் பத்து அவதாரங்களைப் பாடியவர்
  • இவரின் பாடல்கள் அந்தாதித் தொடைக்கு முன்னோடியாக உள்ளது.

மேற்கோள்:

  • வையம் தகளியா, வார்கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
    சுடராழியான் அடிகட்கே சூட்டினேன் சொன்மாலை
    இடராழி நீங்குகவே என்று
  • சென்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம்
    நின்றாள் மர அடியாம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருமாலை தனியன்

திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

 மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.
 



ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை


872காவலிற் புலனை வைத்துக்
கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம் 
நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த 
முதல்வ.நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய் 
அரங்கமா நகரு ளானே.
1

873பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே. 
ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய் 
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் 
அரங்கமா நகரு ளானே.
2

874வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும் 
நின்றதில் பதினை யாண்டு,
பேதைபா லகன தாகும் 
பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன் 
அரங்கமா நகரு ளானே.
3

875மொய்த்தவல் வினையுள் நின்று
மூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றே 
பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க் 
கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ. 
பிறவியுள் பிணங்கு மாறே.
4

876பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது 
உடலுக்கே கரைந்து நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன் 
தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத முண்ணாத் 
தொழும்பர்சோ றுகக்கு மாறே.
5

877மறம்சுவர் மதிளெ டுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம் 
புரளும்போ தறிய மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற 
அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ் செய்து 
புள்கவ்வக் கிடக்கின் றீரே.
6

878புலையற மாகி நின்ற
புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர் 
காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன் 
சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற 
தேவனே தேவ னாவான்.
7

879வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் 
போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் 
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய் 
அரங்கமா நகரு ளானே.
8

880மற்றுமோர் தெய்வ முண்டே
மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள் 
ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர் 
அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை 
கழலிணை பணிமி னீரே.
9

881நாட்டினான் தெய்வ மெங்கும்
நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான் திருவ ரங்கம் 
உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள். 
கெருடவா கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச் 
செல்வம்பார்த் திருக்கின் றீரே.
10

882ஒருவில்லா லோங்கு முந்நீர்
அனைத்துல கங்க ளுய்ய,
செருவிலே யரக்கர் கோனைச் 
செற்றநம் சேவ கனார்,
மருவிய பெரிய கோயில் 
மதிள்திரு வரங்க மென்னா,
கருவிலே திருவி லாதீர். 
காலத்தைக் கழிக்கின் றீரே.
11

883நமனும்முற் கலனும் பேச
நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும் 
நாமங்க ளுடைய நம்பி,
அவனதூ ரரங்க மென்னாது 
அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,
கவலையுள் படுகின் றாரென் 
றதனுக்கே கவல்கின் றேனே.
12

884எறியுநீர் வெறிகொள் வேலை
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெறிகொள்பூந் துளவ மாலை 
விண்ணவர் கோனை யேத்த,
அறிவிலா மனித ரெல்லாம் 
அரங்கமென் றழைப்ப ராகில்,
பொறியில்வாழ் நரக மெல்லாம் 
புல்லெழுந் தொழியு மன்றே?
13

885வண்டின முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை 
குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை 
அணிதிரு வரங்க மென்னா,
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை 
விலக்கிநாய்க் கிடுமி னீரே.
14

886மெய்யர்க்கே மெய்ய னாகும்
விதியிலா வென்னைப் போல,
பொய்யர்க்கே பொய்ய னாகும் 
புட்கொடி யுடைய கோமான்,
உய்யப்போ முணர்வி னார்கட் 
கொருவனென் றுணர்ந்த பின்னை,
ஐயப்பா டறுத்துத் தோன்றும் 
அழகனூ ரரங்க மன்றே?
15

887சூதனாய்க் கள்வ னாகித்
தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும் 
வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப் 
புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த 
அழகனூ ரரங்க மன்றே?
16

888விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம் 
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த 
அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன் 
கண்ணிணை களிக்கு மாறே.
17

889இனிதிரைத் திவலை மோத
எறியும்தண் பரவை மீதே,
தனிகிடந் தரசு செய்யும் 
தாமரைக் கண்ண னெம்மான்,
கனியிருந் தனைய செவ்வாய்க் 
கண்ணணைக் கண்ட கண்கள்,
பனியரும் புதிரு மாலோ 
எஞ்செய்கேன் பாவி யேனே.
18

890குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித் 
தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை 
அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ 
எஞ்செய்கே னுலகத் தீரே.
19

891பாயுநீ ரரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும் 
மரகத வுருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும் 
துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும் 
அடியரோர்க் ககல லாமே?
20

892பணிவினால் மனம தொன்றிப்
பவளவா யரங்க னார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத் 
தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்,
அணியனார் செம்பொ னாய 
அருவரை யனைய கோயில்,
மணியனார் கிடந்த வாற்றை 
மனத்தினால் நினைக்க லாமே?
21

893பேசிற்றே பேச லல்லால்
பெருமையொன் றுணர லாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால் 
அறியலா வானு மல்லன்,
மாசற்றார் மனத்து ளானை 
வணங்கிநா மிருப்ப தல்லால்,
பேசத்தா னாவ துண்டோ ? 
பேதைநெஞ் சே.நீ சொல்லாய்.
22

894கங்கயிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் 
பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன் 
கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் 
ஏழையே னேழை யேனே.
23

895வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழி லரங்கந் தன்னுள்,
கள்ளனார் கிடந்த வாறும் 
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே. வலியை போலும் 
ஒருவனென் றுணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்துன் 
கள்ளத்தே கழிக்கின் றாயே.
24

896குளித்துமூன் றனலை யோம்பும்
குறிகொளந் தணமை தன்னை,
ஒளித்திட்டே னென்க ணில்லை 
நின்கணும் பத்த னல்லேன்,
களிப்பதென் கொண்டு நம்பீ. 
கடல்வண்ணா. கதறு கின்றேன்,
அளித்தெனக் கருள்செய் கண்டாய் 
அரங்கமா நகரு ளானே.
25

897போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டுன் 
திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு 
கலந்திலே னதுதன் னாலே,
ஏதிலே னரங்கர்க்கு எல்லே. 
எஞ்செய்வான் தோன்றி னேனே.
26

898குரங்குகள் மலையை தூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட் டோ டி,
தரங்கநீ ரடைக்க லுற்ற 
சலமிலா அணிலம் போலேன்,
மரங்கள்போல் வலிய நெஞ்சம் 
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க் காட்செய் யாதே 
அளியத்தே னயர்க்கின் றேனே.
27

899உம்பரா லறிய லாகா
ஒளியுளார் ஆனைக் காகி,
செம்புலா லுண்டு வாழும் 
முதலைமேல் சீறி வந்தார்,
நம்பர மாய துண்டே? 
நாய்களோம் சிறுமை யோரா,
எம்பிராற் காட்செய் யாதே 
எஞ்செய்வான் தோன்றி னேனே.
28

900ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம் 
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ண னே.(என்
கண்ணனே. கதறு கின்றேன்,
ஆருளர்க் களைக் ணம்மா. 
அரங்கமா நகரு ளானே.
29

901மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோ ரிஞ்சொ லில்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித் 
தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே. 
பொன்னிசூழ் திருவ ரங்கா,
எனக்கினிக் கதியென் சொல்லாய் 
என்னையா ளுடைய கோவே.
30

902தவத்துளார் தம்மி லல்லேன்
தனம்படத் தாரி லல்லேன்,
உவர்த்தநீர் போல வென்றன் 
உற்றவர்க் கொன்று மல்லேன்,
துவர்த்தசெவ் வாயி னார்க்கே 
துவக்கறத் துரிச னானேன்,
அவத்தமே பிறவி தந்தாய் 
அரங்கமா நகரு ளானே.
31

903ஆர்த்துவண் டலம்பும் சோலை
அணிதிரு வரங்கந் தன்னுள்,
கார்த்திர ளனைய மேனிக் 
கண்ணனே. உன்னைக் காணும்,
மார்க்கமொ றறிய மாட்டா 
மனிசரில் துரிச னாய,
மூர்க்கனேன் வந்து நின்றேன், 
மூர்க்கனேன் மூர்க்க னேனே.
32

904மெய்யெல்லாம் போக விட்டு
விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட 
போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன் 
அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன் 
பொய்யனேன் பொய்ய னேனே.
33

905உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் 
தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் 
உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான் 
விலவறச் சிரித்திட் டேனே.
34

906தாவியன் றுலக மெல்லாம்
தலைவிளாக் கொண்ட எந்தாய்,
சேவியே னுன்னை யல்லால் 
சிக்கெனச் செங்கண் மாலே,
ஆவியே.அமுதே என்றன் 
ஆருயி ரனைய எந்தாய்,
பாவியே னுன்னை யல்லால் 
பாவியேன் பாவி யேனே.
35

907மழைக்கன்று வரைமு னேந்தும்
மைந்தனே.மதுர வாறே,
உழைக்கன்றே போல நோக்கம் 
உடையவர் வலையுள் பட்டு,
உழைக்கின்றேற் கென்னை நோக்கா 
தொழிவதே,உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி. 
அரங்கமா நகரு ளானே.
36

908தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
ஒளியுளார் தாமே யன்றே 
தந்தையும் தாயு மாவார்,
எளியதோ ரருளு மன்றே 
எந்திறத் தெம்பி ரானார்,
அளியன்நம் பையல் என்னார் 
அம்மவோ கொடிய வாறே.
37

909மேம்பொருள் போக விட்டு
மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
ஆம்பரி சறிந்து கொண்டு 
ஐம்புல னகத்த டக்கி,
காம்புறத் தலைசி ரைத்துன் 
கடைத்தலை யிருந்து,வாழும்
சோம்பரை உகத்தி போலும் 
சூழ்புனல் அரங்கத் தானே.
38

910அடிமையில் குடிமை யில்லா
அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட 
குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய். 
மொய்கழற் கன்பு செய்யும்,
அடியரை யுகத்தி போலும் 
அரங்கமா நகரு ளானே.
39

911திருமறு மார்வ.நின்னைச்
சிந்தையுள் திகழ வைத்து,
மருவிய மனத்த ராகில் 
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெருவரக் கொன்று சுட்டிட் 
டீட்டிய வினைய ரேலும்,
அருவினைப் பயன துய்யார் 
அரங்கமா நகரு ளானே.
40

912வானுளா ரறிய லாகா
வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச் 
சென்னியாய். என்ப ராகில்,
ஊனமா யினகள் செய்யும் 
ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம் 
தருவரேல் புனித மன்றே?
41

913பழுதிலா வொழுக லாற்றுப்
பலசதுப் பேதி மார்கள்,
இழிகுலத் தவர்க ளேலும் 
எம்மடி யார்க ளாகில்,
தொழுமினீர் கொடுமின் கொள்மின். 
என்றுநின் னோடு மொக்க,
வழிபட வருளி னாய்போன்ம் 
மதிள்திரு வரங்கத் தானே.
42

913அமரவோ ரங்க மாறும்
வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய 
சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில் 
நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் 
அரங்கமா நகரு ளானே.
43

915பெண்ணுலாம் சடையி னானும்
பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி 
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து 
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ 
களைகணாக் கருது மாறே.
44

916வளவெழும் தவள மாட
மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற 
கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த் 
தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும் 
எம்பிறார் கினிய வாறே.
45


தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.






தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய  இலக்கியங்கள் - அரங்கமா, ராகில், தன்னுள், போலும், காட்செய், மெல்லாம், மாட்டேன், நின்றேன், சொல்லாய், செய்யும், திருமாலை, கோயில், ரேலும், ளேலும், கண்டாய், கின்றேன், கொண்டுன், எஞ்செய்வான், உள்ளுவா, கொண்டு, லரங்கந், யல்லால், னுன்னை, எந்தாய், தோன்றி, லல்லேன், கண்ணனே, கொன்று, மூர்க்கனேன், பொய்யனேன், பாயும், மூர்த்தி, தன்னால், ஒளியுளார், வாழும், யில்லை, விட்டு, நெஞ்சம், அரங்கனார்க், மாட்டீர், மாந்தர், ஒருவனென், வண்ணம், பூண்டு, வேண்டேன், கற்றினம், மேய்த்த, வைத்துக், செங்கண், மருவிய, மதிள்திரு, னாகும், யென்று, தாமரைக், கிடந்த, அணிதிரு, ளெல்லாம், மென்னா, கழிக்கின், மாநிலத், துயிர்க, பரந்து

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள்என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.
திவ்ய எனும் சொல் "மேலான" என்றும் பிரபந்தம் எனும் சொல் பலவகைபாடல்தொகுப்பினையும் குறிக்கும்.
இந்த நூல் - ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் வைணவர்கள் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இன்றும் தினமும் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு. இது,
முதலாயிரம்-----------947 பாடல்கள்
பெரிய திருமொழி----1134 பாடல்கள்
திருவாய்மொழி------1102 பாடல்கள்
என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

24 பிரபந்தங்கள்[தொகு]

திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும்
  1. திருப்பல்லாண்டு
  2. பெரியாழ்வார் திருமொழி
  3. திருப்பாவை
  4. நாச்சியார் திருமொழி
  5. பெருமாள் திருமொழி
  6. திருச்சந்த விருத்தம்
  7. திருமாலை
  8. திருப்பள்ளி எழுச்சி
  9. அமலனாதிபிரான்
  10. கண்ணிநுண்சிறுத்தாம்பு
  11. பெரிய திருமொழி
  12. திருக்குறுந்தாண்டகம்
  13. திருநெடுந்தாண்டகம்
  14. முதல் திருவந்தாதி
  15. இரண்டாம் திருவந்தாதி
  16. மூன்றாம் திருவந்தாதி
  17. நான்முகன் திருவந்தாதி
  18. திருவிருத்தம்
  19. திருவாசிரியம்
  20. பெரிய திருவந்தாதி
  21. திருஎழுகூற்றிருக்கை
  22. சிறிய திருமடல்
  23. பெரிய திருமடல்
  24. இராமானுச நூற்றந்தாதி

பன்னிரு ஆழ்வார்கள்[தொகு]

  1. பொய்கையாழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசையாழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. மதுரகவியாழ்வார்
  7. குலசேகர ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஆண்டாள்
  10. தொண்டரடிப்பொடியாழ்வார்
  11. திருப்பாணாழ்வார்
  12. திருமங்கையாழ்வார்

பாடுபொருள்[தொகு]

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

பாடல்களின் பட்டியல்[தொகு]

முதலாயிரம்[தொகு]

இயற்றிய ஆழ்வார்தலம்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
பெரியாழ்வார்திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்திருப்பல்லாண்டு1 - 1212
திருமொழி13 - 473461
ஆண்டாள்திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்திருப்பாவை474-50330
நாச்சியார் திருமொழி504-646143
குலசேகர ஆழ்வார்பெருமாள் திருமொழி647 - 751105
திருமழிசையாழ்வார்திருமழிசைதிருச்சந்தவிருத்தம்752 - 871120
தொண்டரடிப்பொடியாழ்வார்திருமாலை[1]872 - 91645
திருப்பள்ளி எழுச்சி917 - 92610
திருப்பாணாழ்வார்உறையூர்அமலனாதிபிரான்[2]927 - 93610
மதுரகவியாழ்வார்கண்ணிநுண்சிறுத்தாம்பு937 - 94711

இரண்டாவதாயிரம்[தொகு]

இயற்றிய ஆழ்வார்தலம்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி948 - 20311084
திருக்குறுந்தாண்டகம்2032 - 205120
திருநெடுந்தாண்டகம்2052 - 208130

மூன்றாவதாயிரம்[தொகு]

இயற்றிய ஆழ்வார்தலம்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
பொய்கையாழ்வார்காஞ்சிபுரம்முதல் திருவந்தாதி2082 -2181100
பூதத்தாழ்வார்மாமல்லபுரம்இரண்டாம் திருவந்தாதி2182 - 2281100
பேயாழ்வார்மயிலாப்பூர்மூன்றாம் திருவந்தாதி2282 - 2381100
திருமழிசை ஆழ்வார்நான்முகன் திருவந்தாதி2382 - 247796
நம்மாழ்வார்ஆழ்வார்திருநகரிதிருவிருத்தம்2478 - 2577100
திருவாசிரியம்2578 - 25847
பெரிய திருவந்தாதி2585 - 267187
திருமங்கை ஆழ்வார்திருஎழுகூற்றிருக்கை26721
சிறிய திருமடல்2673 - 271240
பெரிய திருமடல்2713 - 279078
திருவரங்கத்தமுதனார்இராமானுச நூற்றந்தாதி2791 - 289898

நான்காவதாயிரம்[தொகு]

இயற்றிய ஆழ்வார்நூலின் பெயர்நாலாயிரத்தில்
பாசுரங்களின் தொடர்
எண்ணிக்கை
நம்மாழ்வார்திருவாய்மொழி2899 - 40001102

காண்க[தொகு]

  • நாலாயிர திவ்வியப் பிரபந்தம் [3]

உசாத்துணைகள்[தொகு]

  • முனைவர் ஜெகத்ரட்சகன்: நாலாயிர திவ்யப் பிரபந்தம். ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை.1993



































































































































































    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக