புதன், 31 மே, 2017

சென்னை சில்க்ஸ்

ராதே கிருஷ்ணா 31-05-2017





ராதே கிருஷ்ணா 31-05-2017














சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது? உரிமையாளர் விளக்கம்

By DIN  |   Published on : 03rd June 2017 12:19 PM  |   அ+அ அ-   |  
chennaisilk
சென்னை: சென்னை தியாகராயநகர் பகுதியில் தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதன் உரிமையாளர் மாணிக்கம் விளக்கம் அளித்துள்ளார்.
தீபாவளிக்குள் புதிய கட்டடம்
சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்ட பின்னர், அங்கு தீபாவளிக்குள் புதிய கட்டடம் கட்டப்படும். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தை ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்து வைத்திருந்தோம். இந்தக் கடையில் சுமார் ஆயிரம் ஊழியர்கள் வரை பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேறு கிளைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்று சென்னை சில்க்ஸ் உரிமையாளர் கே.மாணிக்கம் தெரிவித்தார்.
தரைகீழ் தண்ணீர் தொட்டியினால் சிக்கல்
சென்னை சில்க்ஸ் கட்டட வளாகத்தில் இருந்த, பிரம்மாண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டியினால், அக்கட்டடத்தை இடிக்கும் பணி பல மணிநேர தாமாதத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
தீ விபத்தினால் சிதைந்து நிற்கும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதற்கான ஆயத்தப் பணிகள் வியாழக்கிழமை நண்பகலே தொடங்கப்பட்டன. கட்டடத்தின் பின்பகுதியில் இருந்து இடிக்கும் பணியை தொடங்க திட்டமிட்ட அதிகாரிகள், அங்கு தரைத்தளம் முழுவதும் மணல் பகுதியே என நினைத்திருந்தனர்.
ஆனால், பின்பகுதி முழுவதும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தரைகீழ் தண்ணீர் தொட்டி இருப்பது தெரியவந்தது. இந்த தொட்டியின் மீது கிரேன், பொக்லைன்களை ஏற்றி கட்டடத்தை இடித்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இதையடுத்து, தரைகீழ் தண்ணீர் தொட்டியின் மேற்பகுதியை உடைத்து, அந்த தொட்டியின் பள்ளமான பகுதியை நிரப்பும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இந்தப் பணியின் காரணமாக, கட்டடத்தை இடிக்கும் பணி திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 19 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.
25 அடிக்கு மணல்மேடு: அதேபோல் முதலில், கட்டடத்தை இடிக்கும் ஜாக் கட்டர் கிரேனை நிறுத்துவதற்காக, சுமார் 15 அடி உயரத்தில் கட்டட கழிவுகளை கொண்ட மணல்மேடு உருவாக்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து ஜாக் கட்டர் இயந்திரத்தால் 6- ஆவது தளத்தை இடிக்க முடியாததால், மேலும் 10 அடிக்கு மணல்மேடு உயர்த்தப்பட்டு, நண்பகல் 2.10 மணியளவில் பணி தொடங்கப்பட்டது.
கட்டடம் இடிக்கும் பணிக்காக ஜாக் கட்டர் உள்பட 4 கிரேன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கட்டடத்தை இடிக்கும் பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், ஒரு நேரத்தில் ஒரு இயந்திரம் மட்டுமே பணி செய்ய முடிந்தது. இதில் ஜாக் கட்டர் இயந்திரம் மட்டும் சுமார் 85 அடி உயரம் வரை பணி செய்யும் திறன் கொண்டது. பெற்றிருந்ததது. இந்த இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 20 ஆயிரம் கட்டணமாக வழங்கப்படுகிறது.
75 தொழிநுட்பப் பணியாளர்கள்: கட்டட இடிப்பு பணிக்காக தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் 75 பேர், சென்னை சில்க்ஸ் வளாகத்தில் முகாமிட்டிருந்தனர். பாதுகாப்புக்காக, காவல் இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் சரவணன் ஆகியோர் தலைமையில் 300 போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
ஊழியர்கள்: நூற்றுக்கும் மேற்பட்ட சென்னை சில்க்ஸ் ஊழியர்களும் கட்டட இடிப்பு பணிகளில் உதவி வருகின்றனர்.
பாதுகாப்பு பெட்டகம்: சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் சுமார் 250 கிலோ தங்கநகை, ரூ.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள், செவ்வாய்க்கிழமை வசூலான பணம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்து, கட்டட விபத்து என எத்தகைய சூழ்நிலையையும் தாக்கும் வகையில் இந்த பெட்டகம் வடிவமைக்கப்பட்டதாகும். இதனால் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தின் காரணமாக இப்பெட்டகம் பாதிக்கப்பட்டிருக்காது என கருதப்படுகிறது.
மேலும், கட்டடத்தை முழுமையாக இடித்த பின்பே பாதுகாப்பு பெட்டகத்தை அங்கிருந்து மீட்பது என காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
தூசு நகரான தி.நகர்: சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியதையடுத்து, அங்கிருந்து அதிகப்படியான கட்டட தூசு வெளியேறியது. இந்த தூசு உஸ்மான் சாலை, பிஞ்சால சுப்பிரமணியன் தெரு, மங்கேஷ் தெரு, ரங்கன் தெரு உள்ளிட்ட அந்தப் பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் பிரச்னையும், கண் எரிச்சலும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.
மருத்துவ முகாம்கள்: சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணி நடைபெறும் பிஞ்சால சுப்ரமணியம் தெருவிலும், வடக்கு உஸ்மான் சாலையிலும், மருத்துவ உதவிக்காக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 15 பேர் அடங்கிய இக்குழுவினர், சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவக் குழுக்களிடம் இடிபாடுகளில் இருந்து கிளம்பும் தூசியிலிருந்து காத்துக்கொள்ள முகமூடிகள், காயத்துக்கான தடுப்பூசிகள், கண் எரிச்சல், தோல் அரிப்பு ஏற்படாமல் இருக்க மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.




சென்னை சில்க்ஸ் விதிமீறல் கட்டடம்தான்; ஆனால் முழு காப்பீடு உண்டு?

By DIN  |   Published on : 02nd June 2017 02:15 PM  |   அ+அ அ-   |  


life_insurance_policy

சென்னை: எரிந்து முடிந்து இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் என்னவோ விதிகளைமீறி கட்டப்பட்டதுதான், ஆனால் அதற்கு முழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், தீ விபத்தால் கட்டடத்துக்கோ அல்லது கட்டடத்தில் உள்ள பொருட்களுக்கோ எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இழப்பீடு கோரினாலும், இந்த விதிமீறல் விஷயங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய விஷயங்களாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.
"மாநகராட்சி இந்த கட்டடத்துக்கு வரி வசூலித்து வருகிறது, தண்ணீர் வரி உட்பட அனைத்து வரிகளும் ஒரு சாதாரண கட்டடத்துக்கு வசூலிப்பது போல வசூலிக்கப்பட்டுத்தான் வருகிறது. இப்படி அரசு சார்பில் இந்த கட்டடத்துக்கு சட்ட ரீதியாக அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கும் போது இங்கே விதிமீறல் கட்டடம் என்பது எங்கே வருகிறது? எனவே, இவற்றையும் நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வோம் என்று காப்பீடு நிறுவனம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும் இது குறித்த இறுதி முடிவு காப்பீட்டு ஆய்வாளரிடம்தான் உள்ளது. அவர், முறையாக அனுமதி பெற்ற 4 மாடிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். விதிகளை மீறிக் கட்டப்பட்ட 4 கட்டடங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடவும் வாய்ப்பு உண்டு. சம்பவ இடத்தில், காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் குழு முகாமிட்டுள்ளது. அடுத்தக்கட்ட தகவல்கள் குறித்து அதிகாரிகள் குழு காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் அளித்து வருகிறது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதாவது, அனைத்து ஆவணங்களையும், பொருட்கள் இருந்ததற்கான ஆதாரங்களையும் காப்பீட்டு ஆய்வாளர் ஆய்வு செய்த பிறகே காப்பீட்டுத் தொகை இறுதி செய்யப்படும் என்று பதிலாகக் கிடைக்கப் பெற்றுள்ளது. காப்பீடு தொடர்பான விஷயங்கள் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக, இந்த கட்டடத்தில் விற்பனைக்கு இருந்த பொருட்கள் அனைத்தும் சந்தை மதிப்புக்குத்தான் காப்பீடு செய்யப்பட்டிருக்கும் என்றும், அதனை வாங்கிய விலைக்கு காப்பீடு செய்யப்படாது என்றும், அது பொருட்களை வாங்கிய மதிப்பு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளில் சிக்கிய தங்க, வைர நகைப் பெட்டகம்: அனைத்து தகவல்களும் விரிவாக

By DIN  |   Published on : 02nd June 2017 12:36 PM  |   அ+அ அ-   |  

chennai-silk-6

சென்னை: சென்னை தியாகராய நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளிடையே தங்க, வைர நகைகள் இருக்கும் பாதுகாப்பு பெட்டகம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த விவரம்:
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைத்தளத்தில் நகைக் கடை செயல்பட்டு வந்தது. இந்த நகைக் கடையில் பல நூறு கிலோ தங்க நகைகளும், வைர நகைகளும் இருந்தன. இந்த நகைகள் செவ்வாயக்கிழமை இரவு வியாபாரம் முடிந்ததும், அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்ட பின்னர், இந்த பாதுகாப்பு பெட்டகம் என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியாமலேயே இருக்கிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த பின்னர், அந்த பாதுகாப்பு பெட்டகம் கட்டட இடிபாடுகளிடையே சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கட்டடம் இடிக்கப்பட்ட பின்னரே, பாதுகாப்பு பெட்டகத்தை மீட்க முடியும் என்பதால்,சென்னை சில்க்ஸ் கட்டடத்தை சுற்றி பாதுகாப்புக்கு அதிகளவில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெடிவைத்து தகர்க்காதது ஏன்?
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடம், 3 நாள்களில் முழுமையாக இடிக்கப்படும் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தை அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் அளித்த பேட்டி:
கட்டடத்தில் இருந்த தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது. பொதுமக்கள் இனி அச்சப்பட தேவையில்லை. தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் உறுதியற்ற நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கட்டடத்தை உடனே இடிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டடத்தை முழுமையாக இடிக்க 3 நாள்களாகும். வெடி வைத்து தகர்த்தால் அருகிலேயே உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொதுமக்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்த கட்டடத்தை ராட்சத கிரேன் மூலம் இடிக்க முடிவு செய்துள்ளோம். கட்டடத்தை இடிக்க ஆகும் செலவு, சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும்.
இந்தப் பணி நிறைவடைந்த பின்னர், தியாகராயநகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் கட்டட விதிமீறல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கட்டட விதிமீறல் முறைகேடுகளுக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயக்குமார்.
அங்கு ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டி:
சென்னை சில்க்ஸ் விதிமீறல் கட்டடமா? எப்படி?
சென்னை சில்க்ஸ் நிறுவன நிர்வாகம், 4 தளங்களை கட்டுவதற்கு அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, 8 தளங்களை கட்டியுள்ளது என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்து தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மேலும் கூறியது:
தரை தளம் தொடங்கி நான்கு தளங்களுக்கு மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் விதிகளை மீறி 8 தளங்கள் வரை கட்டியதால் அவற்றை இடிப்பதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
கடந்த 2006 -ஆம் ஆண்டு கட்டடத்தின் 5 முதல் 7 வரை உள்ள தளங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு எதிராக கட்டட உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதால் கட்டட இடிப்பு நிறுத்தப்பட்டது. தியாகராய நகரில் 86 கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, 25 பெரிய வணிக நிறுவன கட்டடங்களுக்கு கடந்த 2011 -ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது. அவ்வாறு சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டடமும் ஒன்று.
சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல கடைகளின் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து நீதிமன்றம் சென்றதால், அனைவருக்கும் பொதுவான தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்த உத்தரவின்படி சீல் அகற்றப்பட்டது.
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் குழு விதிமீறல் கட்டடங்களை வரைமுறைப்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.
அதன் பேரில், தமிழ்நாடு நகரமைப்பு சட்டத்தில் 113சி பிரிவைச் சேர்த்து, 2007 ஜூலை மாதத்துக்கு முன்னர் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களுக்கு சில விதிவிலக்குகளை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரிவு இன்னும் அமலுக்கு வரவில்லை. அதுவரை தியாகராய நகரில் விதிமீறல் கட்டடங்கள் செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் நடவடிக்கை எடுப்பதை நிறுத்தியுள்ளோம்.
இந்தப் பிரிவு அமலுக்கு வந்தாலும் குறிப்பிட்ட விதிமீறல்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.
தியாகராய நகரில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் விதிவிலக்கு அளிக்கக்கூட தகுதியற்றவையே. 113சி சட்டப் பிரிவு அடுத்த 2 மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்றார் அவர்.
சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைப்பு
தியாகராயநகர் துணிக்கடை தீ விபத்து நடந்த இடத்தில் 10 மருத்துவர்களை உள்ளடக்கிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நடமாடும் மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த பகுதியில் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடை தீ விபத்தில் அதிகளவில் புகை வெளியேறி உள்ளது. நகை மற்றும் ஜவுளிக்கடையில் தீ விபத்து நடந்துள்ளதால் வேதிபொருள்கள் மற்றும் நச்சுவாயு சுமார் 5 கி.மீ. வரை பரவி இருக்கும்.
நச்சுவாயுவை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, பெரியவர்களுக்கு, தலைவலி, மயக்கம், கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சளியுடன் ரத்தம் வருதல் போன்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஆஸ்துமா, நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தீ விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே, ஓரிரு நாட்கள் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:
சுகாதாரத் துறை சார்பில் 3 நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஏதேனும் அசெளகரியங்களை உணர்ந்தால் இந்தக் குழுவினரிடம் சிகிச்சை பெறலாம்.
மேலும், நெஞ்சு சிகிச்சை நிபுணர் தலைமையில் 10 மருத்துவர்கள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி சார்பிலும் மருத்துவக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. தேவை இருந்தால் மருத்துவக் குழுவினரின் சேவைகள் மேலும் சில நாள்கள் நீட்டிக்கப்படும் என்றார்.
ஸ்கை லிப்ட்டை இயக்க தில்லியில் இருந்து வந்த பொறியாளர்
'ஸ்கை லிப்ட்' வாகனத்தை, தீயணைப்புத்துறையினர் இயக்க முடியாமல் திணறியதால், அதை இயக்குவதற்கு தில்லியில் இருந்து பொறியாளர் வரவழைக்கப்பட்டார்.
பல மாடி கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைப்பதற்காக தமிழக தீயணைப்புத் துறைக்காக 104 அடி உயர 'ஸ்கை லிப்ட்' வாகனம் கடந்தாண்டு வாங்கப்பட்டது. இதேபோல 54 அடி உயரம் வரை செல்லும் 'ஸ்கை லிப்ட்' வாகனமும் வாங்கப்பட்டது.
இந்த வாகனங்களை இயக்குவதற்காக தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஸ்வீடன் நாட்டுக்குச் சென்று, பிரத்யேக பயிற்சி பெற்று வந்தனர். இந்த வாகனங்கள் முதல் முறையாக சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு பயன்படுத்த அங்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.



சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 10 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரியும் தீ; புகை மூட்டத்தால் திணறும் தி.நகர்

By DIN  |   Published on : 31st May 2017 03:32 PM  |   அ+அ அ-   |  



chennai-silks2a

சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை பற்றிய தீ 10 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து வருகிறது.
பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு கட்டடத்தின் பின்பக்க சுவர் இடிக்கப்பட்டு அதன் வழியாகவும், நான்கு பக்கங்களில் இருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீணை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பல மணி நேரமாக தீ எரிவதால், தியாகராய நகர் பகுதி முழுவதுமே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்வோர் பெருத்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதுகாப்புக் கருதி, சென்னை சில்க்ஸ் கட்டத்துக்கு அருகே உள்ள பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
கட்டடத்துக்குள் புகை மூட்டம் இருப்பதால், கட்டத்துக்குள் செல்ல முடியாததால், சுவர்களையும், கண்ணாடிகளையும் உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இன்று அதிகாலை, சென்னை சில்க்ஸ் துணிக் கடையின் கீழ் தளத்தில் பற்றிய தீ வேகமாக மேல் தளங்களுக்கும் பரவியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. கடைக்குள் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
துணிக் கடை என்பதால், தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கட்டடத்துக்குள் புகை மூட்டம் காணப்படுவதால் தீயணைப்பு வீரர்களும் உள்ளே சென்று தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், கட்டடத்தின் உள் பகுதிகள் இடிந்து விழுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இன்னும் 4 மணி நேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் கட்டடத்துக்கு அருகே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகே உள்ள கடைகளைத் திறக்கவும் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து நேரிட்ட பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
முதற்கட்ட விசாரணையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் அருகில் இருந்த டீசல் கேன் வெடித்து கடை முழுவதும் தீ பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கடை ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். கட்டடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.


சென்னை சில்க்ஸ் விபத்து சொல்லும் பாடம்.. விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ்

By DIN  |   Published on : 31st May 2017 02:58 PM  |   அ+அ அ-   |  





ramadoss1


சென்னை: சென்னை சில்க்ஸ் விபத்து சொல்லும் பாடம் என்னவென்றால், அப்பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்பதுதான் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயை 10 மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை. தீயால் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினர் உயிரைக் கொடுத்து போராட வேண்டியிருந்தது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தின் அருகில் கூட தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. கட்டடத்தின் தரைத்தளத்தில் தான் தீ விபத்து ஏற்பட்டு மற்ற மாடிகளுக்கும் பரவியது. இத்தகைய சூழலில் தரைத்தளத்தின் அருகில் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். அதன்மூலம் கட்டடம் மற்றும் அதிலிருந்த பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பையும் குறைத்திருக்க முடியும்.
ஆனால், ஒருபுறம் மேம்பாலம், மறுபுறம் அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  வழக்கமாக பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டப்படும் போது அதன் மொத்த நிலப்பரப்பில் 10 விழுக்காடு திறந்தவெளிப் பரப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்படும் போது சாலையிலிருந்து குறைந்தபட்சம் 6 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் கட்டடம் கட்டப்பட வேண்டும். அத்துடன், பக்கவாட்டில் தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியாக குறைந்தபட்சம் 20 அடி அகலத்திற்கு பாதைக்காக நிலம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் இந்த விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வளவு விதிமீறல்களுக்குப் பிறகும் சென்னை சில்க்ஸ் கட்டடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்துள்ளது.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில்,  விதிகளை மீறி 8 தளங்கள் கட்டப்பட்டிருந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு  விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன. இவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான்  விபத்துக்களும், சேதங்கள் தடுக்க முடியாதவையாகிவிட்டன.
கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகர் அரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயையும் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதற்குக் காரணமும் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டது தான். சென்னையில்  ஏராளமான கட்டடங்கள் இப்படித் தான் எந்த விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டிருக்கின்றன. தியாகராயர்நகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் வணிக நேரத்தின் போது ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படும். அந்த அளவுக்கு  சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் உள்ள வணிகக் கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் சென்னை வாழத்தகுதியற்ற நகரம் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
சென்னையிலுள்ள விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். மாறாக, அவற்றை இடித்து விட்டு விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும். அப்போது இதுபோன்ற தீ விபத்துக்கள் ஏற்படும் போது சேதத்தையும், உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். எனவே, சென்னை சில்க்ஸ் தீ விபத்தை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை தி.நகரில் அதிகாலையில் பரபரப்பு : ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து


2017-06-01@ 00:41:10

* 15 மணி நேரம் போராடியும் அணைக்க முடியாமல் திணறல்
* எல்லா தளங்களிலும் தீ பரவியதால் கட்டிடத்தில் விரிசல்கள்
* பல கோடி ரூபாய் துணிகள், பொருட்கள் அடியோடு சாம்பல்
* அபாயகரமான பகுதியாக அறிவிப்பு: பொதுமக்கள் செல்ல தடை

சென்னை : சென்னையின் வர்த்தக கேந்திரமான தி.நகரில் உள்ள 7 மாடி கொண்ட சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் ஏற்பட்ட தீயை நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரம் போராடியும் அணைக்க முடியாமல் திணறினர். தீயில் பல கோடி மதிப்புள்ள துணிகள், பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் அபாயகர மான பகுதியாக அறிவிக்கப்பட்டது; பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியாக தி.நகர் உள்ளது. இப்பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான ஜவுளி கடை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. குறிப்பாக தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஏராளமான துணி மற்றும் நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு நாள் வர்த்தகம் பல ஆயிரம் கோடியை தாண்டும். விலை மலிவு மற்றும் பல்வேறு டிசைன்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தி.நகர் பகுதிக்கு வந்து பர்சேஸ் செய்வது வழக்கம். இதனால் இந்த சாலை  எப்போதும் பரபரப்பாகவும், நெரிசலாகவும் காணப்படும்.

இந்நிலையில் வடக்கு உஸ்மான் சாலையில் தனியாருக்கு சொந்தமான ‘சென்னை சில்க்ஸ்’ என்ற பெயரில் 7 மாடி கொண்ட துணிக்கடை இயங்கி வருகிறது.  இந்த கடையின் தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை ெசய்யப்பட்டு வந்தது. மற்ற 5 மாடிகளில் பட்டு, காட்டன் உள்பட பல்வேறு பிராண்டட் துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் 7 வது மாடியில், கடை ஊழியர்கள் தங்கி இருந்தனர். அதிகாலையில் பரபரப்பு: நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடை பூட்டப்பட்ட பிறகு, பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் கடையின் ஜன்னல் வழியாக கரும் புகை திடீரென வெளியேறியது. இதனால், அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் படி தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் நகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து மேலும், கிண்டி, ராஜ்பவன், சைதாப்பேட்டை, எழும்பூர், மைலாப்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  14க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஊழியர்கள் அலறல்: தீப்பிடித்த கட்டிடத்தின் 7வது தளத்தில் ஊழியர்கள் அலறி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே தேனாம்பேட்டையில் இருந்து 54 மீட்டர் உயரம் கொண்ட ஸ்கை லிப்ட் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு ஊழியர்கள் 7வது தளத்தின் அருகே சென்று இரும்பு தகடை வெட்டி எடுத்து ஒருவர் பின் ஒருவராக 14 ஊழியர்களையும் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
கட்டிடம் முழுவதும் அலங்கார செயற்கை கூரை அமைக்கப்பட்டுள்ளதால் எளிதில் தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. இதனால் தி.நகர் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் 30க்கும் மேற்பட்ட மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் தடையின்றி தண்ணீர் வழங்கப்பட்டது.
தீ அணைக்க ரசாயனம்: தீயை அணைக்க வீரர்கள் கடையின் தரை தளம் வழியாக உள்ளே செல்ல முயற்சித்தனர். ஆனால், கடும் புகையால் வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனே ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி கொண்டு 10க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது வெப்பத்தின் காரணமாக கடையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் மற்றும் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் வெடித்து சிதறின. இதனால், மீட்பு பணியை மேற்கொள்ள முடியாமல் வீரர்கள் திரும்பி வந்தனர். கட்டிடம் முழுவதும் ஜன்னல்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் தீயினால் ஏற்பட்ட புகை வெளியேற முடியாமல் தரை தளம் வழியாக வெளியேறியது. இடியும் அச்சம்: மேலும் கட்டிடத்தின் பக்க வாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாகவும் புகை வெளியேறியது. இதனால் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என்று அச்சம் நிலவியது.
உடனே தீயணைப்பு வீரர்கள் புகை வெளியேற்றும் கருவியை கட்டிடத்தின் சுவரை துளையிட்டு அதில் பெரிய பைப் மூலம் புகை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், புகையின் தாக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனம் கலந்த நீரும்  பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போது தீ சிறிதளவு கட்டுக்குள் வந்தது. தெரு முழுவதும் தாக்கிய வெப்பம்: அதே சமயம் கட்டிடத்தில் 3 வது தளத்தில் இருந்து தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. ஒரு கட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் பின் வாங்கினர். தீயின் வெப்பம் காரணமாக அந்தப் பகுதியில் நிற்க முடியாமல் அனைத்து தரப்பினரும் அவதியடைந்தனர். அதைதொடர்ந்து தீயணைப்பு உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே ஆலோசனை நடத்தினர். அதன்படி ஒவ்வொரு தளத்தின் பக்கவாட்டில் துளை போடப்பட்டு புகை வெளிேயற்றப்பட்டது. இதற்காக மேலும் 104 மீட்டர் கொண்ட அதி நவீன ஸ்கை லிப்ட் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மற்ற கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள், குடியிருப்பு வாசிகள் என 500க்கும் மேற்பட்ேடார் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போக்குவரத்து மாற்றம்: தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை வழியாக செல்லும் சாலை அடைக்கப்பட்டு மாற்று வழி மூலம் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்றி விடப்பட்டது. மேலும் விபத்து நடந்த பகுதியை தீயணைப்பு துறையின் கூடுதல் இயக்குனர் சாகுல் அமீது பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். தீயணைப்பு வீர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. பின்னர் 15 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு நேற்று இரவு தீ  ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடையில் இருந்தது முழுவதும் ஜவுளி பொருட்கள் என்பதால் புகை தொடர்ந்து  வந்து கொண்டிருந்தது. இந்த தீ விபத்து குறித்து தி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுவர் இடிந்தது: மேலும் முன் பக்கம் மட்டுமே கண்ணாடியால் ஆன சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஆனால் மற்ற 3 பகுதி சுவர்களும் கான்கிரீட் சுவர்கள். அதில் ஜன்னல் வைக்கப்படவில்லை. இதனால் தீ உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 7வது மாடியில் உணவு கூடம் உள்ளது. அங்கு உணவு சமைப்பதற்காக சிலிண்டர்கள் இருந்தன. அவற்றை தீ விபத்து நடந்தவுடன் அப்புறப்படுத்தி விட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் முன் பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு திடீரென்று முன் பக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

2011ம் ஆண்டே சீல் வைக்கப்பட்ட கட்டிடம்

தி.நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் பாதுகாப்பு விதிகளை மீறி கட்டப்பட்ட 19 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் தற்போது தீ பிடித்த கட்டிடமும் ஒன்று. பின்னர் 71 நாட்களுக்கு பிறகு இந்த கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவலாளியால் தப்பினோம்

உயிர் தப்பித்த ஊழியர்கள் கூறியதாவது: நாங்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தோம். அப்போது காவலாளி எங்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி நாங்கள் அனைவரும் உயிர் பிழைக்க படி வழியாக ஓடி வந்ேதாம். அப்போது கரும் புகையுடன் தீ பரவியது. இதை பார்த்து நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம் என்று நினைத்து அலறி துடித்தோம். அப்போது தீயணைப்பு வீரர்கள் எங்களை ஸ்கை லிப்ட் உதவியுடன் மீட்டனர். காவலாளி சரியான நேரத்தில் எங்களுக்கு தகவல் கொடுத்ததால் இன்று உயிரோடு இருக்கிறோம் என்றனர்.

நாட்டிலேயே உயரமான 104 மீட்டர் ஸ்கை லிப்ட்

போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 மீட்டர் ஸ்கை லிப்ட் முதல் முறையாக இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஸ்கை லிப்ட் உதவியுடன் கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும்  எளிதாக சென்று தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
உஸ்மான்

சாலைக்கு சீல்

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பேரிகாட் அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. அவ்வழியாக செல்ல முற்பட்ட வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

6 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்பாடு

தீ பிடித்த கட்டிடத்தில் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 54 மெட்ரோ வாட்டர் லாரிகளில் இருந்து தண்ணீர் வாங்கப்பட்டுள்ளது. ஒரு லாரியின் கொள்ளளவு 12 ஆயிரம் லிட்டர் அதன்படி 6 லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நள்ளிரவு வரை கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி

தி.நகரில் தீப்பிடித்து எரிந்த கட்டிடத்தில் இருந்து வெளியான கரும் புகை தி.நகர் சுற்றி உள்ள 4 கிலோ மீட்டருக்கு பரவியுள்ளது. இதனால் வாகனத்தை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பாண்டிபஜார், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அேசாக் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் புகை மூட்டம் சூழ்ந்தது.

மருத்துவ குழு

தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து ெசல்லும் வகையில் மூன்று 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் அவசர உதவிக்கு 5 பேர் கொண்ட மருத்துவ குழுவும் இருந்தனர்.

கலெக்டர் உத்தரவால் திடீர் பதற்றம்

தீவிபத்து நடந்த கட்டிடத்தை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள தி.நகர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வர வேண்டாம்.  தீ பிடித்த கட்டிடத்திற்கு அருகே உள்ள மற்ற கடைகள் எதையும் திறக்க வேண்டாம். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைய வேண்டாம்.

வாகனங்களையுயும் சாலையில் நிறுத்தாமல் வேறு பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்துங்கள். தீ விபத்து குறித்து தீ முழுமையாக அணைத்த பிறகு தான் கண்டறிய முடியும் என்றார். பொது மக்களுக்கு கலெக்டர் திடீர் தடை உத்தரவு போட்டதால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அருகே உள்ள சிறு கடை உரிமையாளர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

சிலிண்டர்கள் அகற்றம்

தீ ப்பிடித்த கட்டிடத்தில் இருந்து அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டதால் அதிரடியாக போலீசார் அருகே உள்ள பாஸ்ட் புட் ,சிறு கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்த அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் அகற்றினர்.

250 வீரர்கள்

கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அதிகாலை முதல் சுழற்சி முறையில் உயர் அதிகாரிகள் தலைமையில் 250 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிக்கு சென்னை முழுவதிலும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விதிமுறை மீறி இருந்தால் நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 


தி.நகரில் உள்ள துணிக்கடையில் நடைபெற்ற தீ விபத்து மற்றும் தீயை அணைக்கும் பணிகளை நிதியமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தீ முழுவதும் அணைக்கப்பட்ட பிறகு, பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வார்கள். கட்டிடம் பயன்படுத்துவதற்கு தகுதியாக இல்லையென்றால் கட்டிடம் இடிக்கப்படும்.

அதேபோன்று, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் சட்டத்துக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா, விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படும். விதிமுறை மீறி கட்டியிருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தீயை அணைக்கும் முழு செலவையும் கட்டிடத்தின் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். இந்த தீ விபத்தை தொடர்ந்து தி.நகரில் உள்ள மற்ற கட்டிடங்களிலும் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 மணி நேரம் கதறிய ஊழியர்கள்

மேற்பார்வையாளர்கள் 2 பேர் மூன்றாவது தளத்தில் இருந்த ஜன்னல்களை உடைத்து கடையின் வெளிபுறத்தில் உள்ள பக்கவாட்டு சுவரில் நின்றிருந்தனர். 7 வது தளத்தில் இருந்தவர்களை ஸ்கை லிப்ட் மூலம் மீட்கப்படும் வரை 2 பேரும் கட்டிடத்தின் வெளிபுறத்தில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்தனர். பிறகு, 1 மணி நேரத்திற்கு பிறகு, இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பயங்கர தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 4 தளங்கள் இடிந்து விழுந்தது


2017-06-01@ 03:30:35

சென்னை: பயங்கர தீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 4 தளங்கள் இடிந்து விழுந்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வரும் நிலையில், இன்று அதிகாலை 3.19 மணியளவில் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 7- வது தளத்தின் வலதுபுறம் பயங்கர சத்தத்துடன் முதலில் இடிந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து 6,5, மற்றும் 4-வது தளங்களின் வலதுபகுதி  இடிந்து நொறுங்கின. தளங்கள் இடிந்து நொறுங்கிய போது உள்பகுதி தீ ஜூவாலையாக இருந்தது.  கட்டிடம் இடிந்து விழத்துவங்கியுள்ளதால் அருகிலிருந்த தீயணைப்பு வாகனங்கள் வெளியேற்றப்பட்டன. தீ தொடர்ந்து எரிவதால் அப்பகுதி கடும் புகைமண்டலத்திலிருந்து  மீளவில்லை.

இதுகுறித்து விளக்களமளித்த தீயணைப்பு துறை உயரதிகாரி, தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் பின்னர் தீயை அணைக்கும் பணிகள் துவங்கும் என்றார். தீயணைப்பு பணியில் சுமார் 60 வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.


முன்னதாக சென்னையின் வர்த்தக கேந்திரமான தி.நகரில் உள்ள 7 மாடி கொண்ட சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் ஏற்பட்ட தீயை நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரம் போராடியும் அணைக்க முடியாமல் திணறினர். தீயில் பல கோடி மதிப்புள்ள துணிகள், பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் அபாயகர மான பகுதியாக அறிவிக்கப்பட்டது; பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியாக தி.நகர் உள்ளது. இப்பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான ஜவுளி கடை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. குறிப்பாக தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ஏராளமான துணி மற்றும் நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளன. இந்த பகுதியில் ஒரு நாள் வர்த்தகம் பல ஆயிரம் கோடியை தாண்டும். விலை மலிவு மற்றும் பல்வேறு டிசைன்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தி.நகர் பகுதிக்கு வந்து பர்சேஸ் செய்வது வழக்கம். இதனால் இந்த சாலை  எப்போதும் பரபரப்பாகவும், நெரிசலாகவும் காணப்படும்.

இந்நிலையில் வடக்கு உஸ்மான் சாலையில் தனியாருக்கு சொந்தமான ‘சென்னை சில்க்ஸ்’ என்ற பெயரில் 7 மாடி கொண்ட துணிக்கடை இயங்கி வருகிறது.  இந்த கடையின் தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை ெசய்யப்பட்டு வந்தது. மற்ற 5 மாடிகளில் பட்டு, காட்டன் உள்பட பல்வேறு பிராண்டட் துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் 7 வது மாடியில், கடை ஊழியர்கள் தங்கி இருந்தனர். அதிகாலையில் பரபரப்பு: நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடை பூட்டப்பட்ட பிறகு, பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் கடையின் ஜன்னல் வழியாக கரும் புகை திடீரென வெளியேறியது. இதனால், அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் படி தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் நகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து மேலும், கிண்டி, ராஜ்பவன், சைதாப்பேட்டை, எழும்பூர், மைலாப்பூர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  14க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மேலும் கட்டிடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ஊழியர்கள் அலறல்: தீப்பிடித்த கட்டிடத்தின் 7வது தளத்தில் ஊழியர்கள் அலறி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனே தேனாம்பேட்டையில் இருந்து 54 மீட்டர் உயரம் கொண்ட ஸ்கை லிப்ட் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு ஊழியர்கள் 7வது தளத்தின் அருகே சென்று இரும்பு தகடை வெட்டி எடுத்து ஒருவர் பின் ஒருவராக 14 ஊழியர்களையும் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
கட்டிடம் முழுவதும் அலங்கார செயற்கை கூரை அமைக்கப்பட்டுள்ளதால் எளிதில் தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. இதனால் தி.நகர் முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும் 30க்கும் மேற்பட்ட மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம் தடையின்றி தண்ணீர் வழங்கப்பட்டது.
தீ அணைக்க ரசாயனம்: தீயை அணைக்க வீரர்கள் கடையின் தரை தளம் வழியாக உள்ளே செல்ல முயற்சித்தனர். ஆனால், கடும் புகையால் வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, உடனே ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி கொண்டு 10க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளே சென்றனர்.

அப்போது வெப்பத்தின் காரணமாக கடையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் மற்றும் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் வெடித்து சிதறின. இதனால், மீட்பு பணியை மேற்கொள்ள முடியாமல் வீரர்கள் திரும்பி வந்தனர். கட்டிடம் முழுவதும் ஜன்னல்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் தீயினால் ஏற்பட்ட புகை வெளியேற முடியாமல் தரை தளம் வழியாக வெளியேறியது. இடியும் அச்சம்: மேலும் கட்டிடத்தின் பக்க வாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு அதன் வழியாகவும் புகை வெளியேறியது. இதனால் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என்று அச்சம் நிலவியது.
உடனே தீயணைப்பு வீரர்கள் புகை வெளியேற்றும் கருவியை கட்டிடத்தின் சுவரை துளையிட்டு அதில் பெரிய பைப் மூலம் புகை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், புகையின் தாக்கத்தை கட்டுப்படுத்த ரசாயனம் கலந்த நீரும்  பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போது தீ சிறிதளவு கட்டுக்குள் வந்தது. தெரு முழுவதும் தாக்கிய வெப்பம்: அதே சமயம் கட்டிடத்தில் 3 வது தளத்தில் இருந்து தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. ஒரு கட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் பின் வாங்கினர். தீயின் வெப்பம் காரணமாக அந்தப் பகுதியில் நிற்க முடியாமல் அனைத்து தரப்பினரும் அவதியடைந்தனர். அதைதொடர்ந்து தீயணைப்பு உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திலேயே ஆலோசனை நடத்தினர். அதன்படி ஒவ்வொரு தளத்தின் பக்கவாட்டில் துளை போடப்பட்டு புகை வெளிேயற்றப்பட்டது. இதற்காக மேலும் 104 மீட்டர் கொண்ட அதி நவீன ஸ்கை லிப்ட் வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மற்ற கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள், குடியிருப்பு வாசிகள் என 500க்கும் மேற்பட்ேடார் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தி.நகர் துணை கமிஷனர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போக்குவரத்து மாற்றம்: தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை வழியாக செல்லும் சாலை அடைக்கப்பட்டு மாற்று வழி மூலம் பேருந்துகள் மற்றும் வாகனங்களை மாற்றி விடப்பட்டது. மேலும் விபத்து நடந்த பகுதியை தீயணைப்பு துறையின் கூடுதல் இயக்குனர் சாகுல் அமீது பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். தீயணைப்பு வீர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. பின்னர் 15 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு நேற்று இரவு தீ  ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடையில் இருந்தது முழுவதும் ஜவுளி பொருட்கள் என்பதால் புகை தொடர்ந்து  வந்து கொண்டிருந்தது. இந்த தீ விபத்து குறித்து தி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுவர் இடிந்தது: மேலும் முன் பக்கம் மட்டுமே கண்ணாடியால் ஆன சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஆனால் மற்ற 3 பகுதி சுவர்களும் கான்கிரீட் சுவர்கள். அதில் ஜன்னல் வைக்கப்படவில்லை. இதனால் தீ உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 7வது மாடியில் உணவு கூடம் உள்ளது. அங்கு உணவு சமைப்பதற்காக சிலிண்டர்கள் இருந்தன. அவற்றை தீ விபத்து நடந்தவுடன் அப்புறப்படுத்தி விட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் முன் பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு திடீரென்று முன் பக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை.

2011ம் ஆண்டே சீல் வைக்கப்பட்ட கட்டிடம்

தி.நகர் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் பாதுகாப்பு விதிகளை மீறி கட்டப்பட்ட 19 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் தற்போது தீ பிடித்த கட்டிடமும் ஒன்று. பின்னர் 71 நாட்களுக்கு பிறகு இந்த கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவலாளியால் தப்பினோம்

உயிர் தப்பித்த ஊழியர்கள் கூறியதாவது: நாங்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தோம். அப்போது காவலாளி எங்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி நாங்கள் அனைவரும் உயிர் பிழைக்க படி வழியாக ஓடி வந்ேதாம். அப்போது கரும் புகையுடன் தீ பரவியது. இதை பார்த்து நாங்கள் அனைவரும் இறந்துவிடுவோம் என்று நினைத்து அலறி துடித்தோம். அப்போது தீயணைப்பு வீரர்கள் எங்களை ஸ்கை லிப்ட் உதவியுடன் மீட்டனர். காவலாளி சரியான நேரத்தில் எங்களுக்கு தகவல் கொடுத்ததால் இன்று உயிரோடு இருக்கிறோம் என்றனர்.

நாட்டிலேயே உயரமான 104 மீட்டர் ஸ்கை லிப்ட்

போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 மீட்டர் ஸ்கை லிப்ட் முதல் முறையாக இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த ஸ்கை லிப்ட் உதவியுடன் கட்டிடத்தின் அனைத்து பகுதிகளிலும்  எளிதாக சென்று தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர்.
உஸ்மான்

சாலைக்கு சீல்

தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பேரிகாட் அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. அவ்வழியாக செல்ல முற்பட்ட வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

6 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்பாடு

தீ பிடித்த கட்டிடத்தில் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை 54 மெட்ரோ வாட்டர் லாரிகளில் இருந்து தண்ணீர் வாங்கப்பட்டுள்ளது. ஒரு லாரியின் கொள்ளளவு 12 ஆயிரம் லிட்டர் அதன்படி 6 லட்சம் லிட்டர் நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நள்ளிரவு வரை கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் அவதி

தி.நகரில் தீப்பிடித்து எரிந்த கட்டிடத்தில் இருந்து வெளியான கரும் புகை தி.நகர் சுற்றி உள்ள 4 கிலோ மீட்டருக்கு பரவியுள்ளது. இதனால் வாகனத்தை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பாண்டிபஜார், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அேசாக் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் புகை மூட்டம் சூழ்ந்தது.

மருத்துவ குழு

தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்பு வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து ெசல்லும் வகையில் மூன்று 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் அவசர உதவிக்கு 5 பேர் கொண்ட மருத்துவ குழுவும் இருந்தனர்.

கலெக்டர் உத்தரவால் திடீர் பதற்றம்

தீவிபத்து நடந்த கட்டிடத்தை சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை சில்க்ஸ் அமைந்துள்ள தி.நகர் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வர வேண்டாம்.  தீ பிடித்த கட்டிடத்திற்கு அருகே உள்ள மற்ற கடைகள் எதையும் திறக்க வேண்டாம். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் அச்சம் அடைய வேண்டாம்.

வாகனங்களையுயும் சாலையில் நிறுத்தாமல் வேறு பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்துங்கள். தீ விபத்து குறித்து தீ முழுமையாக அணைத்த பிறகு தான் கண்டறிய முடியும் என்றார். பொது மக்களுக்கு கலெக்டர் திடீர் தடை உத்தரவு போட்டதால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அருகே உள்ள சிறு கடை உரிமையாளர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

சிலிண்டர்கள் அகற்றம்

தீ ப்பிடித்த கட்டிடத்தில் இருந்து அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டதால் அதிரடியாக போலீசார் அருகே உள்ள பாஸ்ட் புட் ,சிறு கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்த அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் அகற்றினர்.

250 வீரர்கள்

கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் அதிகாலை முதல் சுழற்சி முறையில் உயர் அதிகாரிகள் தலைமையில் 250 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிக்கு சென்னை முழுவதிலும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விதிமுறை மீறி இருந்தால் நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 


தி.நகரில் உள்ள துணிக்கடையில் நடைபெற்ற தீ விபத்து மற்றும் தீயை அணைக்கும் பணிகளை நிதியமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள். தீ முழுவதும் அணைக்கப்பட்ட பிறகு, பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்வார்கள். கட்டிடம் பயன்படுத்துவதற்கு தகுதியாக இல்லையென்றால் கட்டிடம் இடிக்கப்படும்.

அதேபோன்று, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் சட்டத்துக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா, விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படும். விதிமுறை மீறி கட்டியிருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தீயை அணைக்கும் முழு செலவையும் கட்டிடத்தின் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும். இந்த தீ விபத்தை தொடர்ந்து தி.நகரில் உள்ள மற்ற கட்டிடங்களிலும் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

1 மணி நேரம் கதறிய ஊழியர்கள்

மேற்பார்வையாளர்கள் 2 பேர் மூன்றாவது தளத்தில் இருந்த ஜன்னல்களை உடைத்து கடையின் வெளிபுறத்தில் உள்ள பக்கவாட்டு சுவரில் நின்றிருந்தனர். 7 வது தளத்தில் இருந்தவர்களை ஸ்கை லிப்ட் மூலம் மீட்கப்படும் வரை 2 பேரும் கட்டிடத்தின் வெளிபுறத்தில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்தனர். பிறகு, 1 மணி நேரத்திற்கு பிறகு, இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
VIDEO : Fire Accident In T.Nagar Chennai Silks | சென்னை சில்க்ஸில் பயங்கர தீ விபத்து

Fire Accident In T.Nagar Chennai Silks | சென்னை சில்க்ஸில் பயங்கர தீ விபத்து
News





























































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக