புதன், 11 ஜூன், 2014

"கோலம் போடுவதால் இருக்கும் நன்மைகள்"

ராதே கிருஷ்ணா 12-06-2014


Ananthanarayanan Ramaswamy added 7 new photos — with Mrt Srinivasan.
"கோலம் போடுவதால் இருக்கும் நன்மைகள்"
Status Update
By Ananthanarayanan Ramaswamy
"கோலம் போடுவதால் இருக்கும் நன்மைகள்"

ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது.

நன்மைகளும் வந்தடையும்.

மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

மார்கழி மாத பனிக்காற்று மருத்துவகுணம் கொண்டது.

ஓசோனின் காற்று உடலில்பட்டால், அதிகாலைவேளை, பிரம்ம முகூர்த்தம் காற்று நன்மை என்பதாலும் கோலம் வரையும் மாதமாக இந்த மார்கழிமாதம் இருக்கிறது.

அத்துடன் மார்கழி மாதத்தில் அநேகமாக சுபநிகழ்ச்சிகள்
செய்யாமல் இருப்பார்கள்.

அதனால் சுபசின்னமான கோலங்களை வீட்டின் வாசலுக்கு முன் பதிக்க வேண்டும்.

அப்படி செய்வதால் அடுத்து வருகிற தை மாதத்தில் அந்த குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்றும் அப்படி சுபநிகழ்ச்சிகள் செய்யும்போது தடையேதும் ஏற்படாமல் இருக்க ஸ்ரீமகாலஷ்மி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

மார்கழி மாதம் என்று மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் கோலம் போடும் போதும், கோலங்களுக்கு மும்மூர்த்திகளின் அருளாசி கிடைக்கச் செய்யும் மகிமையும் இருக்கிறது.

அது எப்படியென்றால், கோலமாவின் நிறம் வெண்மை.

இது பிரம்மாவை அழைக்கிறது.

கோலம் போட்டபிறகு அந்த கோலத்தை சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை அழைக்கிறது.

கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்திற்கு அழகு சேர்ப்பதற்காக பசு சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணிபூவை வைப்பார்கள்.

பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியை குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்தினுள் அழைக்கிறது.

இதனால் இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்கு கிடைக்கிறது.

பசு சாணமும் பூசணிப்பூவும் தினமும் கிடைக்காதபோது,

சாதாரண கோலமாவுக்கு பதிலாக பச்சரிசிமாவில் கோலம் போட்டால் மும்மூர்த்திகளின் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும்.

நம் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்க, நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியதுதான் கோலங்கள்.

கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும்.

ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது

அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.

தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது.

தினமும் அரிசிமாவில் கோலம் போட்டால், நம்மை அறியாமலே பல புண்ணியங்கள் தேடிவரும்.

இப்படி தினமும் கோலங்கள் போட்டு பல நன்மைகளை பெறுவோம்.

..... — with Mrt Srinivasan.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக