வெள்ளி, 25 செப்டம்பர், 2015

கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........

ராதே கிருஷ்ணா 25-09-2015








கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........
1.கோவிலில் தூங்க கூடாது ..
2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...
3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
6.குளிக்காமல் கோவில் போககூடாது ...
7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ...
10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
11.படிகளில் உட்கார கூடாது .
12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .
13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .
14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .
15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
கோவில் நூலில் இருந்து ......
 — with Padma SwaminathanRamanujam TPoova Raghavan IyengarMangudi SitaramanBala Subramaniyan,Aanandh PadmanabanBala SubramaniamUma Sundar and Kumar Sa.






































அனுமன் பிறந்த கதை தெரியுமா?


ராதே கிருஷ்ணா 25-09-2015









அனுமன் பிறந்த கதை தெரியுமா?

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள். எனவே, ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார். புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள்.

ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ, என சாபமிட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன், என்ற வரம் அளித்தார். அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு அஞ்ஜனை என்ற பெயர். கேஸரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் மை பூசிய பேரழகி.

ஒருநாள், அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள், அணைப்பது யார் என தெரியாமல் ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது, என கதறினாள். அப்போது வாயுபகவான் காட்சியளித்து பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை. மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய், என சொல்லி மறைந்தார். அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.

அனுமன் பெயர்க்காரணம்: ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை ஹனு என்பர். எனவே அவர் ஹனுமான் ஆனார். தமிழில் அனுமன் என்கிறோம்.







































அனுமன் பிறந்த கதை தெரியுமா?


ராதே கிருஷ்ணா 25-09-2015









அனுமன் பிறந்த கதை தெரியுமா?

ராமாவதாரம் நிகழ இருந்த வேளையில், அவருக்கு சேவை செய்ய பறவைகள், விலங்கினங்களெல்லாம் முன் வந்தன. பரமேஸ்ரவரனுக்கும் அந்த அவதாரத்துக்கு சேவை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. தன் விருப்பத்தை அவர் தேவியிடம் தெரிவித்தார். வானரப்பிள்ளை ஒன்றைப் பெற்றுத்தர கேட்டார். தனக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருக்க வானரப்பிள்ளை தேவையில்லை என அவள் மறுத்துவிட்டாள். எனவே, ருத்ராம்சமான தன் சக்தி உலகத்தில் எத்தனையோ குழந்தை இல்லாத தாய்மார்களில் ஒருத்திக்கு கிடைக்கட்டுமே என நினைத்தார் பரமேஸ்வரன். தன் சக்தியை எடுத்துச்செல்லும் படி வாயு பகவானுக்கு உத்தரவிட்டார். புஞ்ஜிகஸ்தலை என்ற தேவலோக அப்சரஸ் பூலோகம் வந்தாள். ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷியின் உருவத்தை கேலி செய்தாள்.

ஏ பெண்ணே! உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடிய நீ, குரங்காய் போ, என சாபமிட்டார். புஞ்ஜிகஸ்தலையின் முகம் வானர முகமாகி விட்டது. அவள் அழுது புலம்பினாள். சாப விமோசனம் கேட்டாள். அவளது கண்ணீர் கண்டு கலங்கிய ரிஷி, பெண்ணே! நீ நினைத்த நேரத்தில் நினைத்த உருவம் எடுக்கும் சக்தியைத் தருகிறேன், என்ற வரம் அளித்தார். அந்தப்பெண் ஒரு பிறவியில், கேஸரி என்ற வானரனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்தப் பிறவியில் அவளுக்கு அஞ்ஜனை என்ற பெயர். கேஸரி என்றால் சிங்கம். அஞ்ஜனை என்றால் மை பூசிய பேரழகி.

ஒருநாள், அப்சரஸாக உருமாறி ஒரு மலைச்சிகரத்தில் உலவிக் கொண்டிருந்தாள். அப்போது தான் வாயு பகவான் அவளைப் பார்த்தான். அவளது அழகில் மயங்கி தழுவிக்கொண்டார். தன்னை அணைப்பதை உணர்ந்த அவள், அணைப்பது யார் என தெரியாமல் ஒரு பெண்ணிடம் இப்படியா தவறாக நடப்பது, என கதறினாள். அப்போது வாயுபகவான் காட்சியளித்து பெண்ணே! தவறான நோக்கத்துடன் உன்னை நான் தழுவவில்லை. மனதால் மட்டுமே ஸ்பரிசித்தேன். ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் முன் அவர்கள் தேவர்களுக்கு சொந்தமாகிறார்கள் என்பதை நீ அறிந்திருக்கத்தானே செய்கிறாய். நானும் ஒரு தேவன் என்பதால், உன் கற்புக்கேதும் களங்கம் ஏற்படவில்லை. நீ உலகம் புகழும் ஒரு புத்திரனைப் பெறுவாய், என சொல்லி மறைந்தார். அஞ்ஜனை கர்ப்பமானாள். மார்கழி மூல நட்சத்திரத்தில் அழகான ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள். வாயுமைந்தன் பூமிக்கு வந்தவுடனேயே வானில் பறந்தான். அழகில் சிறந்த அவனுக்கு மாருதி என்று பெயர் சூட்டினாள் அஞ்ஜனை.

அனுமன் பெயர்க்காரணம்: ஒருமுறை குழந்தை அனுமன் வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை ஹனு என்பர். எனவே அவர் ஹனுமான் ஆனார். தமிழில் அனுமன் என்கிறோம்.







































வியாழன், 24 செப்டம்பர், 2015

111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்

ராதே கிருஷ்ணா 25-09-2015









111 பழங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில்

111 பழங்களின் பெயர்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. சில பழங்களுக்கு அதன் தமிழ்ப் பெயர் தெரியாதபடியால் ஆங்கிலப் பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஈச்சம்பழம், இலந்தைப்பழம், பாலைப்பழம் போன்ற பல பழங்களிற்கு அவற்றிற்கு ஈடான ஆங்கிலப் பெயர்கள் தெரியாதபடியால் இணைக்கப்படவில்லை. தெரிஞ்சா சொல்லுங்க‌ப்பா..

#A
Ambarella ------ அம்பிரலங்காய்
Apple ------ அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
Apricot ------ சருக்கரை பாதாமி
Annona ------ சீத்தாப்பழம்
Annona muricata ------ முற்சீத்தாப்பழம்
Avocado ------ வெண்ணைப்பழம்

#B

Banana ------ வாழைப்பழம்
Batoko Plum ------ 'லொவிப்'பழம்
Bell Fruit ------ பஞ்சலிப்பழம், சம்பு
Bilberry ------ அவுரிநெல்லி
Bitter Watermelon ------ கெச்சி
Blackberry ------ நாகப்பழம்
Black currant ------ கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
Blueberry ------ அவுரிநெல்லி
Breadfruit ------ சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா
Butter fruit ------ ஆனைக்கொய்யா

#C

Cantaloupe ------ மஞ்சள் முலாம்பழம்
Cashew Fruit ------ முந்திரிப்பழம்
Carambola ------ விளிம்பிப்பழம், தமரத்தங்காய்
Cherry ------ சேலா(ப்பழம்)
Cherimoya ------ சீத்தாப்பழம்
Chickoo ------ சீமையிலுப்பை
Citron ------ கடாரநாரத்தை
Citrus Aurantifolia ------ நாரத்தை
Citrus Aurantium ------ கிச்சலிப்பழம்
Citrus medica ------ கடரநாரத்தை
Citrus sinensis ------ சாத்துக்கொடி
Citrus reticulata ------ கமலாப்பழம்
Clementine ------ நாரந்தை
Cocoa fruit ------ கோக்கோ பழம்
Coccinea cordifolia ------ கொவ்வைப்பழம்
Cranberry ------ குருதிநெல்லி
Cucumus trigonus ------ கெச்சி
Cucumber ------ வெள்ளரிப்பழம்
Custard apple, sugar apple(Annona Squanosa), SWEET SOP ------ அன்னமுன்னா பழம்

#D

Damson ------ ஒரு வித நாவல் நிறப்பழம்
Date fruit ------ பேரீச்சம் பழம்
Devilfig ------ பேயத்தி
Dragon fruit ------ தறுகண்பழம், அகிப்பழம், விருத்திரப்பழம் (தறுகண், அகி, விருத்திரம் - dragon)
Duku ------ 'டுக்கு'
Durian ------ முள்நாரிப்பழம்,

#E

Eugenia Rubicunda ------ சிறுநாவல், சிறு நாவற்பழம்
Emblica ------ நெல்லி

#F

Feijoi / Pinealle guava ------ புளிக்கொய்யா
Fig ------ அத்திப்பழம்

G

Gooseberry ------ நெல்லிக்காய்
Grape ------ கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
Guava ------ கொய்யாப்பழம்

#H

Hanepoot ------ அரபுக் கொடிமுந்திரி
Harfarowrie ------ அரைநெல்லி
Honeydew melon ------ தேன் முழாம்பழம்
Huckle berry ------ (ஒரு வித) நெல்லி

#I.......

#J

Jack fruit ------ பலாப்பழம்
jambu fruit ------ நாவல்பழம்
Jamun fruit ------ நாகப்பழம்
Jumbu fruit ------ சம்புப் பழம்

#K
Kiwi fruit ------ பசலிப்பழம்
Kumquat ------ (பாலைப்பழம் போன்ற ஒரு பழம்)
Kundang ------ மஞ்சல் நிற சிறிய பழம்

#L
Lychee ------ 'லைச்சி'
Lansium ------ அத்திப்பழம்
Lemon ------ வர்க்கப்பழம், எலுமிச்சை
Lime ------ தேசிக்காய்
Loganberry ------ 'லோகன் பெறி'
Longan ------ கடுகுடாப் பழம், முதளிப்பழம்
Louvi fruit ------ 'லொவிப்பழம்'

#M
Mandarin ------ 'மண்டரின்' நாரந்தை
Mango ------ மாம்பழம்
Mangosteen ------ 'மெங்கூஸ்' பழம்
Melon ------ வெள்ளரிப்பழம், முழாம்பழம், இன்னீர்ப் பழம்
Mulberry ------ முசுக்கட்டைப் பழம்
Muscat Grape ------ அரபுக் கொடிமுந்திரி
Morus macroura ------ மசுக்குட்டிப்பழம்

#N..........

#O
Orange (bitter) ------ நாரந்தை , தோடைப்பழம், நரந்தம்பழம்
Orange (sweet) ------ சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை
Orange (Loose Jacket) ------ கமலாப்பழம்

#P
Pair ------ பேரிக்காய்
Papaya ------ பப்பாளிப் பழம்
Passionfruit ------ கொடித்தோடைப்பழம்
Peach ------ குழிப்பேரி
Persimmon ------ சீமைப் பனிச்சை
Phyllanthus Distichus ------ அரைநெல்லி
Plum ------ 'ஆல்பக்கோடா'
Pomelo ------ பம்பரமாசு
Prune ------ உலர்த்தியப் பழம்
Palm fruit ------ பனம் பழம்
Passion fruit ------ கொடித்தோடை
Pear ------ பேரி
Pine apple ------ 'அன்னாசி'ப் பழம்
Pomegranate ------ மாதுளம் பழம், மாதுளை
Pulasan ------ (ஒரு வகை)'றம்புட்டான்'

#Q

#Quince ------ சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்

#R
Raisin ------ உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
Rasberry ------ புற்றுப்பழம்
Red banana ------ செவ்வாழைப்பழம்
Red currant ------ செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
Rambutan ------ 'றம்புட்டான்'

#S
Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை
Star fruit ------ விளிம்பிப்பழம்
Satsuma ------ நாரத்தை
Sour sop/ Guanabana ------ சீத்தாப்பழம்
Strawberry ------ செம்புற்றுப்பழம்
Syzygium ------ சம்புப்பழம், சம்புநாவல்

#T
Tamarillo ------ குறுந்தக்காளி
Tangerine ------ தேனரந்தம்பழம், தேன் நாரந்தை
Tamarind ------ புளியம்பழம்
Tomato ------ தக்காளிப்பழம்

#U
Ugli Fruit ------ முரட்டுத் தோடை, உக்குளிப்பழம் (உக்குளி - ugly)

#V.............

#W
Watermelon ------ வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தருபூசணி
Wood Apple ------ விளாம்பழம்
Wax jambu ------ நீர்குமளிப்பழம்
--------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்
http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/

www.facebook.com/puradsifm
.......................................................
www.puradsifm.com
www.isaiyaruvi.com
www.puradsifm.com/news
 — with Jeba CamalielArun KumarNifty IshaqFawaz Hafiz IrshadiMom's LoveheartMohamed Farhan Abdul FareedSakoor Mohamed and Senthil Kumar Lakshmanan.


























































பரமாச்சாரியார்

ராதே கிருஷ்ணா 25-09-2015



பரமாச்சாரியார்




   






"விடுங்கோ மாமா!"

("அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" )

.
[ஜாதகமும்,ரேகையும்]

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்

திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை. வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது....காணோம். "ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?" என்று போய்ப் பார்த்தால், முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!.

இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.அந்த சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து, குழந்தைகள் மடத்துக்கு வந்தார்கள்.பத்திரமாக இருக்கிறார்கள். சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச் சொன்னார். நாலு
நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச் சொன்னார்!" என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும்புரியவில்லை. "எதற்காக அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக் குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்?" என்பது புதிராக இருந்தது.

உண்மை இதுதான். ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது.பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையே?

அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம் என்ற இடத்துக்குப் போய்விட்டார். இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்கு சிநேகிதனையும் அழைத்துக் கொண்டு அங்கே போய்விட்டான்.

ஆச்சார்யரோ, "முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?" என்று கேட்டார். "இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே கிளம்பி வந்துட்டேன்" என்கிறான் குழந்தை.

இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம். ஏனெனில், இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!

எல்லா தகப்பனாரையும் போல் தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயசில் இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்?

"இது என்ன தேறுமா...தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?"
என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன்
கிருஷ்ணஸ்வாமியின் அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார். அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்க நெருங்கிய நண்பர்.

"வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார்.அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை.சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையேபடாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!" என்று பெசினார்.

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!.

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்கஆவல்கொண்டஜோசியர்,அங்கிருந்த
சுவாமிநாதனிடம் ,"போய் கால் அலம்பிண்டு வா" என்று கட்டளையிட்டார். அலம்பிக்கொண்டு வந்தவனை,நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்....துடைத்தார். சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படியே கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

"விடுங்கோ மாமா!" என்ற சிறுவனின் குரலோ,
"என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு...விடு" என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.

"அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" என்று நினைத்தார் போலும்.

காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப் புலப்பட்டன.

முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த வெங்கட்ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்!

விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்துவிட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்!.












































அபய பிரதான சாரம்

ராதே கிருஷ்ணா 24-09-2015


அபய பிரதான சாரம்






ஏவல் பயன்    -  தொண்டு புரிவது  புருஷார்த்தம்

இறக்கமிதற்க்கு  ஆறு  -    உபாயம்  பெருமாள் கிருபை

எழிலுடையார் இணையடிகீழ்   இருப்போம்  நாம்

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

விபீஷண ஸரணாகதி ராம ஸ்லோகங்கள்

ராதே கிருஷ்ணா 23-09-2015



விபீஷண ஸரணாகதி ராம ஸ்லோகங்கள் 


ஸர்வ லோக ஸரண்யாய ராகவாய மஹாத்மநே 
நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம் 


मित्र भावेन सम्प्राप्तम् त्यजेयम् कथंचन |
दोषो यदि अपि तस्य स्यात् सताम् एतद् अगर्हितम् ||-१८-


மித்ர பாவேன ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன:
தோஷோ யத்யபிதஸ்யஸ்யாத் ஸதா மேததகர்ஹிதம் 

விஸாஸாம் தானவான் ரக்ஷான் பிரதிவ்யான் சைவ ராக்ஷஸாம் 
அங்குல்ய க்ரேண தாம்யம்யான் இச்சான் ஹரி கணேஷ்வர:

ஸக்ருதேவ பிரபந்நாய தாஸ்மீகி ச யாசதோ 
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாம்யே தத்வ்ரதம் மம